Pages

Sunday, 31 December 2017

கிரகங்கள்... அதனைப் பற்றிய விபரங்கள்...

* புவியின் வளிமண்டலம் ஒட்டிக் கொண்டிருக்க காரணம் புவிஈர்ப்புவிசை.

* வானில் அடிக்கடி இடம் பெயரும் கோள் பூமி.

* சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு2,38,860 மைல்கள்.

* பூமிக்கு சொந்தமான இயற்கை விண்வெளிக்கோள் நிலவு.

* பூமி சூரியனிடமிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.

* பூமி திடமான கோள் ஆகும். பூமியைச் சுற்றி காற்று மண்டலம் உள்ளது, அதில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான உயிர்காற்று(ஆக்ஸிஜன்) உள்ளது.

* சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் புதன்.

* சந்திரனின் வாயு மண்டலம் இல்லை.

* வால் நட்சத்திரத்தின் மறுப்பெயர் எல்னோ.

* பூமியின் ஒரே துணைக்கோள் சந்திரன்.

* நிலவின் விட்டம் 3475 கி.மீ.

* நிலவில் மனிதன் இறங்கிய நாள் ஜூலை 21, 1969.

* நிலவிலிருந்து எடுத்த பாறையின் அளவு 4.25மில்லியன் ஆண்டு.

* நிலவின் பிரகாசமான பகுதி அரிஸ்ட்டார்கஸ்.

* நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.

* சந்திரனில் நிலநடுக்கம் ஏற்படும்.

* ஒவ்வொரு தீர்க்க ரேகையும், புவியில் ஒரு இடத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 4 நிமிடங்கள்.

* சூரியக்குடும்பத்தை கண்டறிந்தவர் கோபர் நிக்ஸ்.

* சூரியக் குடும்பத்தின் தலைவன் சூரியன். இது ஒரு விண்மீன்.

* சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.

* மிகவும் வெப்பமான கிரகம் வீனஸ்.

* கிரகங்கள் என்றால் சூரியனை சுற்றும் ஆகாய பொருட்கள்.

* 9 கிரகங்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்,வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன், ப்ளுட்டோ)

* ராட்சஷ கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்,நெப்ட்யூன்.

* சூரியனின் நான்காவது கிரகம் செவ்வாய்.

* சிவப்பு நிறமுடைய கோள் செவ்வாய்.

* செவ்வாய் சூரியனிடமிருந்து 22.79 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.

* செவ்வாய் 2 துணைகோள்களைப் பெற்றிருக்கிறது

* சூடான கிரகம் புதன்.

* கோள்களே இல்லாத கிரகம் புதன்.

* சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதால் 88நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது.

* சூரியனிடமிருந்து 5.79 கோடி கி. மீ. தொலைவில் புதன் உள்ளது.

* புதன் மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது.

* புதனுக்கு துணைக் கோள்கள் இல்லை.

* வியாழனில் 16 கோள்கள் உள்ளன.

* சூரியமண்டலத்தில் மிகப்பெரிய கிரகம் வியாழன்.

* வியாழன் ஒரு வாயுக் கோள் ஆகும். இது சூரியனை11ஆண்டுகள் 10 மாதங்களில் சுற்றி வருகிறது.

* சூரியனிடமிருந்து 77.83 கோடி கி.மீ. தொலைவில் வியாழன் உள்ளது.

* வியாழன் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழலும். இக்கோளுக்கு வாயுக்களால் ஆன வளையங்கள் உண்டு.

* வியாழனுக்கு 63 துணைக் கோள்கள் உள்ளன.

* ஹாண்ட் பிளான்ட் என்பது வெள்ளி.

* வட்டமான பாதை கொண்ட கிரகம் வெள்ளி.

* எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கும் கோள் வெள்ளி.

* சூரியனைச் சுற்றிவரும் இரண்டாவது கோள் வெள்ளி ஆகும்.

* வெள்ளி வானில் விடியற்காலையில் தெரியும். இக்கோள் சூரியனை 225 நாள்களில் சுற்றி வருகிறது.

* வெள்ளி சூரியனிடமிருந்து 10.82 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.

* வெள்ளி கிழக்கில் இருந்து மேற்காக தன்னைத்தானே சுற்றுகிறது. இதற்கும் துணைக் கோள்கள் இல்லை

* இரண்டாவது பெரிய கிரகம் சனி.

* சனிக் கோளுக்கு 60 துணைக் கோள்கள் உள்ளன.

* நெப்டியூனில் ஒரு நாளைக்கு 16 மணி நேரங்கள்.

* சூரியமண்டத்தில் மிகச் சிறிய கிரகம் புளுட்டோ.

* சூரிய மண்டலத்தில் கடைசி கிரகம் புளுட்டோ.

* சூரியனிடமிருந்து வெகு தொலைவில் உள்ள கோள் புளூட்டோ.

* பெரிய பாதை கொண்ட கிரகம் புளுட்டோ.

* குறுங்கோள்கள்:

புளூட்டோ. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயெ என்பவை 2006 ஆம் ஆண்டிலிருந்து குறுங்கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அளவில் மிகச் சிறியவை. இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன.செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே ப இலட்சக்கணக்கான குறுங்கோள்கள் (ஆஸ்டிராயிட் பட்டைகள்) உள்ளன. சிறுசிறு கற்கள், பெரும்பாறைகள் முதல் 300-400 கி. மீ விட்டம் உடைய பெரும் வான்பொருள்கள் ஆகியவையே இந்தக் குறுங்கோள்கள் ஆகும். இந்திய வானவியல் அறிஞர் வைணுபாப்பு, அணுசக்தி த் துறையின் தந்தை சாராபாய், கணித மேதை இராமானுஜம் ஆகியோரின் பெயரிலும் குறுங்கோள்கள் உள்ளன.

Saturday, 30 December 2017

எழுதியது யாருனு தெரியலை... *படித்ததில் பிடித்தது*

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் (my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

*தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

தோற்றுப்போனால்
வெற்றி கிடைக்குமா?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்றுப்போனால் வெற்றி கிடைக்கும்.

_அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்!_

உலகத் தமிழர்கள் உரிமை

.உலகத் தமிழர்கள் உரிமைகள் பெற்றிட உலகத் தமிழரை ஒன்றிணைத்து போராடுவோம்.

2.தமிழரை அழிக்கும் குடியை ஒழிப்போம். தமிழர் அணைவருக்கும் குடிநீர் அளிப்போம்.

3.லஞ்ச லாவண்ய கையுட்டை எதிர்ப்போம் ஊழல் ஊதாரித்தன விணாக்களை தடுப்போம். p>

4.இயற்கை வளங்கள் அனைத்தையும் காப்போம்.

5.ஏற்பில்லா வளர்ச்சியை என்றுமே எதிர்போம்.

6.அறவழி மேன்முறை போற்றிப் போராடுவோம்.

7.மாண்புடன் மக்கள்ளாட்சி மலர்ந்திட செயல்படுவோம்.

8.திராவிட ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.

9.தமிழர் உரிமை சிதைவை மீட்டெடுப்போம்.

10.சாதி மத சார்பு இனிமையுடன் இந்திய அரசியல் சட்டத்தை பின்ற்றுவோம். 

Ø மாற்று அரசியலுக்கு வாக்களிப்போம். மானத் தமிழினத்திற்கு வாழ்வளிப்போம்.

Ø ஆண்ட பரம்பரை அடிமை ஆகவிடமாட்டோம். வீரத்தமிழினம் விழ்ந்து போகவிடமாட்டோம்

Ø எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே

Ø பணமாகவும்,இனமாகவும் கரம்கொடுங்கள்

Ø தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம்

Ø தமிழ் மீளவும்,ஆளவும் இணைவீர்

*✍TNPSC பொது அறிவு - வேதியியல் - அமிலங்கள் பற்றிய வினா விடைகள் !!* 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

1. அமிலங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ................... அணுக்களைக் கொண்டவை. - *ஹைட்ரஜன்*

2. ஆசிட் என்ற ஆங்கிலச்சொல் ................... என்ற இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது? - *அசிடஸ்*

3. ஆசிட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு .................. என்பது பொருள். - *புளிப்புச்சுவை*

4. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை ................ நிறமாக மாற்றுகின்றன? - *சிவப்பு*

5. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும்போது நிறமற்றதாகவும், மெத்தில் ஆரஞ்சு சேர்க்கும்போது ..................... நிறமாகவும் உள்ளன. - *இளஞ்சிவப்பு*

6. தக்காளியில் உள்ள அமிலம் என்ன? - *ஆக்ஸாலிக் அமிலம்*

7. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்களை ............... என்கிறோம். - *கரிம அமிலங்கள்*

8. பாறைகள் மற்றும் கனிமப் பொருள்களில் இருந்து பெறப்படும் அமிலங்களை ................... என்கிறோம். - *கனிம அமிலங்கள்*

9. காரத்துவம் என்பது ஒரு மூலக்கூறு அமிலத்தில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ....................... அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். - *ஹைட்ரஜன்*

10. அசிட்டிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும் ................ ஹைட்ரஜனை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும். - *ஒரே ஒரு*

11. கனிம அமிலங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - *நைட்hpக் அமிலம், கந்தக அமிலம்*

12. பெரும்பாலான ................. அமிலங்கள் இயற்கையாகவே உணவுப் பொருள்களில் உள்ளன. - *கரிம*

13. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் என்ன? - *மாலிக் அமிலம்*

14. திராட்சை பழத்தில் உள்ள அமிலம் என்ன? - *டார்டாரிக் அமிலம்*

உலக மொழி தமிழின் பெருமை

உலகின் முதல் மொழி தமிழ்!
மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.

Sunday, 24 December 2017

பகவத் கீதையின் மகிமை

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .....  ....             

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

        (இது மதம் சார்ந்த பதிவு அல்ல)

தமிழ் கலைநயம்

கல்லும் முள்ளும் கவிதைகள்
Download https://userupload.net/8r6n8nadevs9 
 தமிழிலக்கியம்
Download https://userupload.net/gzjjmr41621k 
தமிழன்பன் படைப்பு
Download https://userupload.net/h8xatgwn1gji 
 தமிழில் நவீனத்துவம்
Download https://userupload.net/nkoxu0u89rmk 
வரலாற்றில் தமிழர்
Download https://userupload.net/b5g116df64sn 
வானம்பாடி கவிதை

ஓமுவாமுவா என்றால் !!!!

@இரு படங்கள்

ஓமுவாமுவா

ஓமுவாமுவா (Oumuamua)
(மக்களே! இது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு ல்ல 😃😃)

நீளமான குழாய்போன்ற வடிவத்தில் கிட்டத்தட்ட மனிதர்கள் புகைக்கும் சுருட்டுப்போல (Cigar), விண்வெளியில் இனம் தெரியாத பொருட்கள் மிகைவேகத்துடன் நகர்ந்து சென்றதாகப் பல வதந்திகள் கடந்த காலங்களில் உலா வந்ததுண்டு. ஒரு தடவை, விண்வெளியில் அமைந்திருக்கும், விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கூட அப்படியானதொன்று கடந்து சென்றதை அவதானித்ததாகச் செய்தியுண்டு. ஆனால், அறிவியல் எப்போதும் தகுந்த ஆதாரம் இல்லாமல், நிரூபிக்க முடியாத எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இந்த வகையான ஏலியன் விண்கப்பல்கள் விசயத்தில் எப்போதும் பெரும்பாலான விஞ்ஞானிகள் இல்லையென்ற பக்கத்திலேயே இருந்து கொள்ளப் பார்ப்பார்கள். பிரபல அறிவியலாளரும், எனக்கு ரொம்பவும் பிடித்தவருமான, நீல் டி கிராஸ் டைசன்' (Neil de Grass Tyson) கூட வெளிக்கிரக ஜீவராசிகளின் வருகையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், எப்போதும் பூமி தாண்டி வெளியே உயிரினங்கள் வாழ்கின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் சாதாரணமானவர் கிடையாது. இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கணித/இயற்பியல்/வானியல் விஞ்ஞானிகளில் மிகச்சிறந்த மேதையாகக் கருதப்படும் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான் அவர். ஏலியன்கள் பற்றிப் பலவிதமான கருத்துகளை அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதை மறுப்பதற்கு யாராலும் முடிவதில்லை. ஸ்டீஃபன் ஹாக்கிங்கும், மார்க் சுக்கெர்பேர்க்கும், உலக மகாக் கோடீஸ்வரர்களில் ஒருவருமாக, மூவர் ஒன்று சேர்ந்து 'அல்ஃபா செண்டாரி C' நட்சத்திரத்தில் இருக்கும் பூமி போன்ற கோளில் ஏலியனைத் தேட, மிகச்சிறிய நானோ விண்கலங்களைத் தயாரித்து அனுப்பும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இங்கு முக்கியமானது. வேற்றுக்கிரக உயிரின வசிப்பில் அவ்வளவு திடமான நம்பிக்கை ஹாக்கிங்கிற்கு உண்டு. "ஏலியன்களைத் தேடுவதாக நினைத்து, நம் பூமியை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள். அது மனித குலத்துக்கே பெரும் ஆபத்தாக முடியும்" என்று எச்சரிக்கைக் குரலில் ஹாக்கிங் அடிக்கடி சொல்வதும் உண்டு. இதே ஹாக்கிங்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பிரமிக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று புரிந்து கொள்ள, கடந்த ஒக்டோபர் 19ம் திகதி நடைபெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.   

2017ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதியன்று, சூரியனுக்குச் சற்றுத் தொலைவில், மிக நீண்ட பொருளொன்று விரைந்து கடந்து செல்வதை 'Pan Starrs' தொலைநோக்கிக் கருவிகள் கண்டுபிடித்தன. Pan Starrs தொலைநோக்கிகள், விண்வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் விண்கற்களைக் (அஸ்ட்ரோய்ட்) கண்டறிவதற்காகவே பயன்படுபவை. விரைவாகக் கடந்து சென்ற அந்த மர்மப் பொருளை, ஒரு விண்கல்லென்றே நினைத்தார்கள்.
ஆனால், விண்கற்களுக்கான எந்தத் தன்மையும் அதனிடம் காணப்படவில்லை என்பது பேராச்சரியம். வழமையான விண்கற்களின் செயற்பாடுகளில் எதையும் அது கொண்டிருக்காமல், புதுவிதமாக நகர்வுடன் பயணித்தது. முதலில் அதன் வடிவமே விண்கல்லொன்றின் வடிவத்தில் இருக்கவில்லை. நானூறு மீட்டர்களுக்கும் அதிகமான நீளமும், நாற்பது மீட்டர்களுக்கு அதிகமான அகலத்துடனும் அது காணப்பட்டது. இதுவரை விண்கற்கள் வட்ட வடிவமாகவோ, நீள்வட்ட வடிவமாகவோ, மிஞ்சிப் போனால் உருளைகிழங்கு வடிவிலோதான் இருந்திருக்கின்றன. ஆனால், இப்படியான நீண்ட குழாய் வடிவத்தில் முதன்முறையாக ஒன்று தெரிந்திருக்கிறது. அத்துடன், ஒரு விண்கல் விண்வெளியில் பயணிக்கும்போது, அதன் பின்னால் உறைந்த பனியின் உருகிய தூசுப் படலங்கள் பின்தொடர்வது வழக்கம். ஆனால், இதில் எந்தத் தூசுகளுமில்லாமல், தூய்மையான பொருளாக காணப்பட்டது. விண்கற்கள் எப்போதும் சாம்பல், கறுப்பு போன்ற குறிப்பிட்ட நிறங்களையே கொண்டிருப்பவை. இதுவோ, அவையெல்லாவற்றுக்கும் மாறாகச் சிவப்பு நிறத்தில் இருந்தது பேராச்சரியம். அதைவிட, விண்கற்களுக்கும் இதற்கும் இருந்த பெரும் வித்தியாசம், அதனுடைய வேகம். சாதாரண விண்கற்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான வேகத்துடன் அது நகர்ந்திருக்கிறது. அந்த வேகமானது சூரிய ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிச் செல்லக் கூடிய, விலகல் வேகத்துக்கும் (Escape Velocity) அதிகமான வேகத்துடன் இருந்ததுதான் இப்போது அதிகளவில் இதுபற்றிப் பேசுவதற்கு காரணமாக இருக்கிறது. 

சூரிய ஈர்ப்புவிசைப் பரப்புக்குள் இலட்சக்கணக்கான விண்கற்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே பல்லாயிரக் கணக்கான அஸ்ட்ரோய்ட்கள் ஒரு வட்டவடிவப் பட்டிபோன்று (Belt) காணப்படுகின்றன. இது தவிர்த்து நெப்டியூனுக்கு அப்பாலும் ஒரு மிகப்பெரிய அஸ்ட்ரோய்ட் பட்டி காணபப்டுகிறது. இந்த விண்கற்களையெல்லாம் விஞ்ஞானிகள் தினம் தினம் அவதானித்துக் கொண்டே வருகின்றனர். ஒரு தொலைநோக்கியால் அனைத்தையும் அவதானிக்க முடியாது என்பதால், பல தொலைநோக்கிகள், பல நாடுகளிலிருந்து பகுதி பகுதியாகப் பிரித்து, அவை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. காரணம், இவற்றில் ஏதாவது ஒன்றாவது பூமியுடன் மோதினால், பூமிக்கே ஆபத்து வரக்கூடும் என்பதால்தான். சூரிய விண்வெளிக்குள் இருக்கும் ஒவ்வொரு விண்கல்லும் அடையாளப்படுத்தப்பட்ட்டிருக்கிறது. அவையெல்லாம் பதிவுகளாகவும் இருக்கின்றன. அப்படி அவதானிக்கப்படும் இலட்சக்கணக்கான விண்கற்களில் ஒன்றாக, மேற்படி சொன்ன மர்ம விண்கல் இருக்கவில்லை. சூரியக் குடும்பத்தினுள்ளே முதன்முதலாக வருகை தந்த ஒன்றாகவே இதைப் பார்க்கின்றனர். அதனால், இந்த விண்கல்லிற்கு  ‘ஓமுவாமுவா’ (Oumuamua) என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஹவாய் மொழியில் இதற்கு, ‘தூரத்திலிருந்து தூதுவர்’ என்று அர்த்தமாகும். இந்தத் தூதுவர் யார் என்பதே இப்போது கேள்விக் குறியாகியிருக்கிறது.

இது சூரியக் குடும்பம் தாண்டி வேறு ஒரு நட்சத்திரத்திலிருந்து தற்செயலாக நுழைந்துவிட்ட விண்கல்தான் என்றும், இதுவும் சூரியக் குடும்பத்தில் உள்ளதுதான். ஆனால், வெகுவெகு தொலைவில் இருக்கிறது. ஒருமுறை சூரியனை அது சுற்றிவர இருபதாயிரத்துக்கு அதிக வருடங்கள் தேவை. அதன் சுற்றுவட்டப் பாதை அவ்வளவு பெரியது. அதனால்தான் நாம் அதை இதற்கு முன்னர் அவதானிக்க முடியவில்லை என்றும் சில விஞ்ஞானிகளால் காரணம் சொல்லப்படுகிறது. ஆனாலும், இவற்றிலெல்லாம் சமாதானமடையவில்லைப் பலர்.

இப்போது  அந்த ஓமுவாமுவா விண்கல் அல்ல, அது ஒரு ஏலியனின் விண்கப்பல்தான் என்ற குரல் ஸ்டீஃபன் ஹாக்கிங் இடமிருந்து எழுந்திருக்கிறது. விண்வெளிப் பிரயாணத்தினால் உடல்பகுதிகள் காயமடைந்த நிலையில் காணப்படும் ஒரு விண்கப்பலேதான் அதுவென்று அடித்துச் சொல்கிறார் அவர். அவர் இப்படிச் சொல்லிவிட்ட  'ஓமுவாமுவாவுக்கு ஒரு புதுப் பரிமாணம் கிடைத்திருப்பது நிஜம்.👍
அறிவியலின் தேடல் தொடரும்.
      "வலியே வலிமை"
-ஐய்யனார் (வால்வரின்).