Pages

Wednesday, 31 January 2018

இந்தியாவின் வரலாற்றை வைகை நதிக்கரையிலிருந்தும் எழுத வேண்டும்

இந்தியாவின் வரலாற்றை வைகை நதிக்கரையிலிருந்தும் எழுத வேண்டும்

சு.வெங்கடேசன் பேச்சு !!!! 


மதுரை, ஜன.28 -

இந்தியாவின் வரலாற்றை கங்கை நதிக்கரையில் இருந்து மட்டுமல்ல, வைகை நதிக்கரையி லிருந்தும் எழுத வேண்டும் என்று தமுஎகச மாநிலபொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது:தமிழர் உரிமை மாநாட்டை தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் நடத்தி நிறைவு செய்யத்தான் தீர்மானித்திருந்தோம். எதிரிகள் மடப்பள்ளிகளில் இருந்து இப்படி சோடாப்பாட்டிலோடு வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு தற்பொழுது வழங்கியுள்ள பத்ம விருதுகள் சாதனையாளர்களுக்கா? அல்லது காவிக்கும்பலுக்கு காவடி தூக்கியவர்களுக்கா? என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் வேதங்களின் பூமி மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது தமிழ் என்ற இரண்டு ஆய்வுகளுக்காகவே நாகசாமி என்ற தொல்லியல் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அண்ணா சட்டமன்றத்தில் முன்மொழிந்தபோது, ஆங்கிலத்தை மட்டுமே நம்பினால் தமிழைக் காப்பாற்ற முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற திருத்தத்தை நமது தலைவர் சங்கரய்யா கொண்டுவந்தார். அந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தகைய வரலாற்று மனிதன் இந்த மேடையில் முழங்கினார். இத்தகையபெரும் வரலாற்றின் தொடர்ச்சி நாங்கள்.ஆய்வைத் திட்டமிட்டு மூடுவதன் மூலம் கீழடியில் கிடைக்கும் புதிய ஆதாரங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் ஆய்வு தொடர்கிறது. கீழடியில் கிடைக்கும் பொருட்களை இங்கேயே ஆவணப்படுத்தும் விதமாக தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்று தமிழக அரசும் நிலம் ஒதுக்கிவிட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையோ இந்த நிலத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற பதில் அறிவிப்பைக்கூட வெளியிட மறுக்கிறது. இந்திய வரலாற்றை கங்கைக் கரையில் இருந்து மட்டும்தான் எழுதுவீர்களா? உண்மையின் வரலாற்றை வைகைக்கரையில் இருந்துதான் எழுதவேண்டும். தமிழனின் நாகரிகத்தை மீண்டும் தோண்டி எடுப்போம். எழுத்துக்களின் தாயகமாக தமிழகம் இருந்துள்ளது. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் கல்வெட்டுக்களில் 65 ஆயிரம் தமிழகத்தில் கிடைத்துள்ளது. இதில் 32 இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள 98 கல்வெட்டுக்களில் மிகவும் பழமையான பிராமி எழுத்துக்கள் உள்ளன. அதில் 24 இடம் வைகை நதிக்கரையில் உள்ளது. தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்தூண் ஒன்று உள்ளது. அதில் அந்துவன் என எழுதப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு மதுரையில் வீசிய புயல் மழையால் தேனூரில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, வேர்களுக்கு நடுவில் இருந்த மண்சட்டியை சிறுவர்கள் உருட்டி விளையாடியபோது அது உடைந்துவிட்டது. அதற்குள் நிறையத் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

அதில், ஏழு தங்கக்கட்டிகளை மட்டும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்தது. அத்தனை கட்டிகளிலும் 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்தது. அதில், கோதை என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 2,100 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வச்சிலைகள் எதுவும் தங்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கம் வைத்துதமிழ் வளர்த்த மதுரையில் தங்கம் வைத்தும் பெருமை சேர்த்தது.நதிக்கரை வரலாறு முழுவதும் வற்றாத ஜீவநதிக்கரையில் இருந்துதான் உருவானது. வைகை நதியில் 4, 5 மாதத்திற்கு மேல் நீர்வரத்துஇருக்காது. இந்த நதிக்கரையின் கீழடியில்தான் இவ்வளவு தொன்மையான நகரம் உருவாகி யுள்ளது. அப்படியென்றால் தமிழன் நீர்மேலாண்மை யில் எந்த அளவிற்கு சிறந்து விளங்கினான் என்பது தெளிவாகிறது. இங்கு கிடைத்துள்ள 5,800-க்கும் அதிகமான தொல்பொருட்களில் எந்தவிதமான சாதி, மத அடையாளங்களும் இல்லை. எனவேதான், நாங்கள் இந்த ஆய்வைத் தொடர நினைக்கிறோம். அவர்கள் முடக்க நினைக்கிறார்கள். திருக்குறளைப் படிக்கமாட்டோம் என்று மூத்த சங்கராச்சாரியார் சும்மா சொல்லவில்லை. அறம், பொருள், இன்பத்தோடு குறள் முடிந்துவிடுகிறது. அதற்கு அடுத்தபடியாக வீடு என்ற மோட்சநிலையை திருக்குறள் வகுக்கவில்லை என்பதாலேயே அவர்களால் வெறுக்கப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ்த்தாய் வணக்கம் என்று எழுதவில்லை. ‘வாழ்த்து’ என்று தான் எழுதினார். எந்த மொழியும்கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல. மனித னாலேயே உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு எழுதினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்ற வாசகத்தைக் கூட அவர்தான் நமக்குத் தந்தார். தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் ‘தமிழ்நாடு’ என இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு மத்திய ஆட்சியின் பிடியில் இந்த அரசு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் சமஸ்கிருத கலப்பு வந்துவிட்டது. சமஸ்கிருதக் கலப்பு இல்லாமல் தனித்து இயங்கும் மொழியாக நமது தமிழ்மொழி திகழ்கிறது. பிராக்கிருதமும், பாலியும் நமது பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ளது என்றால் சாதாரண மக்களும் மொழியைப் பயன்படுத்திஇருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தமிழன் வடமொழியையும் அறிந்து வைத்திருந்தான் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே சான்று இருக்கிறது. இந்தி மொழிக்கு 9-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதுவும் வேறு எங்கும் கிடைக்கவில்லை. மகாபலி புரத்தில் தமிழன்தான் அதையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.வரலாறு முழுக்கப் போராடி வந்த நமது அடையாளத்தை இழக்கமாட்டோம். இடது சாரிகள், பகுத்தறிவாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.
  

ரோஜா மலரின் வாசனைக்கு முக்கிய காரணம் என்ன ???




ரோஸ் ஆக்ஸைடு (cis-rose oxide) எனும் கரிம சேர்மமே, ரோஜா மலரின் வாசனைக்கு முக்கிய காரணம். மிகமிக குறைந்த அளவே, ரோஸ் ஆக்ஸைடு சேர்மம் காற்றில் வெளியிடப்பட்டாலும், நம்முடைய மூக்கினால் அதனை நன்கு உணர முடியும்.
இங்கு மிக குறைந்த அளவு என்பது, 5 ppb (parts per billion) ஆகும்.
பீட்டா டாமசீனோன் (beta-damascenone) எனும் வேதிபொருளும், ரோஜாவின் நறுமணத்திற்கு காரணம். 0.009 ppb அளவுள்ள பீட்டா டாமசீனோணையும் நம்மால் நுகர முடியும்.
மற்றுமொரு முக்கிய பகுதிபொருளாக, பீட்டா அயனோன் (beta-ionone) வேதிச்சேர்மம் விளங்குகிறது.  இவை தவிர, ஜெரானியோல் (geraniol), நேரோல் (nerol), சிட்ரோநெல்லோல் (citronellol), ஃபர்னிசோல் (farnesol), மற்றும் லினாலூல் (linalool) உள்ளிட்ட சேர்மங்களும் ரோஜாவின் நறுமணத்திற்கு காரணமாக இருக்கின்றன.

      அறிவியலின் தேடல் தொடரும் !!!
   
               " வலியே வலிமை "
               " துணிவே துணை "

                               -ஐய்யனார் (வால்வரின்)

சூப்பர் நிலா சந்திர கிரகணம் பற்றி வள்ளுவர் கூறியது !!!

சூப்பர் நிலா சந்திர கிரகணம் பற்றி வள்ளுவர்.....

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.



விளக்கம் 1:

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.


விளக்கம் 2:

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.


English Couplet 1146:

I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon..

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது, இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.

நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.

இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.

மூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்

ஜான் கால்ஸ்வொர்த்தி மறைந்த தினம் - சனவரி 31

உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜான் கால்ஸ்வொர்த்தி மறைந்த தினம் - சனவரி 31:


இங்கிலாந்து நாட்டில் பார்க்ஃபீல்ட் டில் கிங்ஸ்டன் ஹில் என்ற இடத்தில் பிறந்தார் (1867). தந்தை ஒரு வழக்கறிஞர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஹாரோ பள்ளியில் பயின்றார். ஆக்ஸ்போர்ட் நியூ காலேஜில் சட்டம் பயின்றார்.

இலக்கியத்தின் மீதான ஆர்வத்தில் சார்லஸ் டிக்கன்ஸ், கஸ்டேவ் ஃபிளாபெர்ட், ஹெர்மன் மெல் வெல்லி, லியோ டால்ஸ்டாய், எமிலி ஜோலா உள்ளிட்ட பலரது படைப்புகளை வாசித்தார். சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி னார்.

28-வது வயதில் பொழுதுபோக்காக எழுதத் தொடங்கினார். 1897-ல் ‘ஃபிரம் தி ஃபோர் வின்ட்ஸ்’ என்ற தலைப்பில் முதல் சிறுகதைத் தொகுப்பை ஜான் சின்ஜான் என்ற புனைபெயரில் வெளியிட்டார். அடுத்த ஆண்டே ‘ஜோஸலின்’ என்ற நாவலை வெளியிட்டார்.

1904-ல் ‘ஐலான்ட் பாரிசீஸ்’ என்ற நாவல் இவரது சொந்தப் பெயரிலேயே வெளிவந்தது. 1906-ல் வெளிவந்த மிகப் பெரிய நாவலான ‘ஃபோர்சைட் சாகா’ இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. இதன் தொடர்களாக ‘ஏ மாடர்ன் காமடி’ மற்றும் ‘என்ட் ஆஃப் தி சாப்டர்’ நாவல்களை எழுதினார்.

இவரது ‘மென் ஆஃப் பிராபர்ட்டி’ நாவல், தான் பிறந்த உயர் நடுத் தர வர்க்கத்தைச் சாடி எழுதப்பட்டது. இவரது நாடகங்கள் அரசியல் விழிப்புணர்வு, வறுமை, நலிவுற்ற பிரிவினர், சட்டம், நீதியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், பெண்களுக்கு வாக்குரிமை, சிறை அமைப் பின் மோசமான நிலவரம் ஆகியவற்றைக் குறித்து இருந்தன.

அதே ஆண்டு வெளியான ‘சில்வர் பாக்ஸ்’ நாவலும் வரவேற்பைப் பெற்றது. இவரது மிகவும் புகழ்பெற்ற ‘ஜஸ்டிஸ்’ நாடகம் சிறை அமைப்பிலும் தனிமைச் சிறைத் தண்டனை முறையிலும் சீர்திருத்தங்கள் ஏற்பட வழிவகுத்தது. முதலாம் உலகப் போரில் காயம்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவினார்.

தன் நாட்டுக்கு ஆதரவாகப் பல பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘ஷெல்ஃப்’ மற்றும் ‘அனதர் ஷெல்ஃப்’ என வெளியிடப்பட்டன. ‘கன்ட்ரி ஹவுஸ்’, ‘பாட்ரிஷியன்’, ‘ஃப்ரீலான்ட்ஸ்’ மற்றும் சிறுகதைத் தொகுப்பான ‘ஃபை டேல்ஸ்’, ‘எஸ்கேப்’, ‘தி ஒயிட் மங்கி’, ‘தி சில்வர் ஸ்பூன்’, ‘தி ஸ்வான் சாங்’, ‘மெய்ட் இன் வெயிட்டிங்’ உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

போர் குறித்து இவரது கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி மாப்’ நாடகமாக அரங்கேறியது. 1920-ல் இவர் எழுதிய ‘தி ஸ்கின் கேம்’ நாடகத்தைத் தழுவி 1931-ல் ஆல்ஃபிரெட் ஹிட் காக் திரைப்படம் தயாரித்தார். இவரது பல படைப்புகள் திரைப்படங் களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டன.

எழுத்தாளர்களுக்கான ‘பென்’ என்ற சர்வதேச அமைப்பை 1921-ல் நிறுவினார். ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ கவுரவம் பெற்றார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரப் பட்டங்கள் வழங்கின. 1932-ல் நோபல் பரிசு பெற்றார்.

20 நாவல்கள், 27 நாடகங்கள், மூன்று கவிதைத் தொகுப்புகள், 173 சிறுகதைகள், 5 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் 700 கடிதங்கள் எழுதியுள்ளார். இறுதிவரை ஆங்கில இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜான் கால்ஸ்வொர்த்தி 1933-ம் ஆண்டு 66-வது வயதில் மறைந்தார்.

Tuesday, 30 January 2018

எலுமிச்சை என்னும் தேவக்கனி. !!!!!

எலுமிச்சை  என்னும்  தேவக்கனி !!!! 


🎾எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது. 

🎾எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
 இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன் 
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை. 

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

 🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
      இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், 
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன. 

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது. 

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால், 
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும். 

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள், 
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம். 

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும். 

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.


🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.



பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஆவணங்களாக உருவாக்கிய PDF files.
தமிழில் !!!

https://drive.google.com/file/d/1d-jNrZ1C13e5PH2JT3SQTKTPkZiAU7dd/view?usp=drivesdk


Monday, 29 January 2018

தமிழ் இலக்கியம் PDF Files !!!

தமிழ் இலக்கியம் !!!


பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய சேவையின் இணைப்பு :



திருவள்ளுவரின் திருக்குறள் என்னும் தெய்வநூல்.pdf






தொல்காப்பியம் .pdf






அகநானூறு .pdf

https://drive.google.com/file/d/1lwQMQwbUBWTBw6H3fekotqSTAL89UxAd/view?usp=drivesdk




புறநானூறு .pdf






கலித்தொகை .pdf






நற்றிணை .pdf

https://drive.google.com/file/d/1_vvAm_y6lCkYpVz5Vo2F8Kbdq4ZSJoET/view?usp=drivesdk



ஐங்குறுநூறு .pdf






பதிற்றுப்பத்து .pdf






பரிபாடல் .pdf





குறுந்தொகை .pdf





அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி - கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்  .pdf





உலக நாதரின் உலக நீதி.pdf






சிவகாமி சபதம் PDF Files !!!

சிவகாமி சபதம் !!!

பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய சேவையின் இணைப்பு : 

சிவகாமி சபதம் 1.pdfpdf





சிவகாமி சபதம் 2.pdf





சிவகாமி சபதம் 3.pdf






சிவகாமி சபதம் 4.pdf




சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் PDF Flies !!!

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் PDF Flies !!!

பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய சேவையின் இணைப்பு :

கண்ணன் பாட்டு.pdf




குயில் பாட்டு.pdf




பாஞ்சாலி சபதம்.pdf




மேலும் இயற்றிய பாடல்கள் :


பாரதியார் பாடல் 1.pdf





பாரதியார் பாடல் 2.pdf





பாரதியார் பாடல் 3.pdf




ஔவையார் இயற்றிய நூல்கள் !!! PDF Files

ஔவையார் இயற்றிய நூல்கள் !!!

பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய
வசதி !!!
இந்த இணைப்பில் செல்க:

ஆத்திசூடி.pdf



கொன்றை வேந்தன்.pdf




நல்வழி.pdf




மூதுரை.pdfhttps://drive.google.com/file/d/1eJJc5ACG0zgFsXNF8qo5ZWcEJzzCuAGE/view?usp=drivesdk




தமிழ் அகராதி தமிழில் அறிய. !!!! PDF Files

தமிழ் அகராதி தமிழில் அறிய. !!!!

எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய ஆவண வடிவமைப்பு (PDF) 
Portable Document Format (PDF)

Click to link Download 
Options : 

ஆங்கிலத்தின் ஆட்சி மொழி தமிழே. PDF 


சமஸ்கிருத என்னும் வடசொல் தமிழ் .PDF



சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி .PDF 



தமிழன் தமிழ் அகராதி .PDF

 https://drive.google.com/file/d/1610U9NJd3mcjf2bCDSRTYxR2VEkaQUVl/view?usp=drivesdk



தமிழன் பழமொழிகள்.PDF



தமிழ் பறவை பெயர்.PDFPDF



Sunday, 28 January 2018

தமிழன் தொன்மை பாகம் 1

தமிழன் தொன்மைகள்.



பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.
முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.
ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ;
நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.
என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.
ஆப்பிரிக்கப் பழங்குடிகள் :
எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.

தென் அமெரிக்கத் தமிழர் :
அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது.சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர்.நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர்.60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.
எனவே 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது 1,00,00,000
ஒரு கோடி ஆண்டுகள் என்று கணிக்கலாம்.வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை;கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி' யின் அற்புதங்கள்.
உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பததூண்டுகிறது" -
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.
"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.
"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.
"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.


"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.
இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி
என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.
களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).
தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்
"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.
தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.
பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice
காரணப் பெயராகிய புதிய சொற்கள்
தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்
திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.
* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.
S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)
* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா
* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்
* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.
* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.
ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்

இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.
"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.
கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.
"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?
(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!
(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.
ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை
ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.
சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...
"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".

"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.
தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.
தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.
தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?
இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.
தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.


கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.
தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள் :
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.
2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.
3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.
4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.
5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?
6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.
7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.
8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.
9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.
10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.
11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.
12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.
13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.
14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.
15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.
16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. (Edited)
17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.
18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா ?
தொகுப்பு ஆய்வாளர்  திரு.சாத்தூர் சேகரன் அவர்களுக்கு மிக்க நன்றி ..

                     !!!!! நன்றி !!!!!
               " வலியே வலிமை "
               " துணிவே  துணை "
                              - ஐய்யனார் (வால்வரின்).

உண்மையில் தமிழன் தொன்மை 1,00,00,000 ஆண்டுகள் முந்தையது !!!!

 உண்மையில்   தமிழன் தமிழ் தொன்மை  1,00,00,000  ஆண்டுகள்  முந்தையது !!!!


இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஏன் என்றால் சுவடிகள் ,கல்வெட்டுகள் ,ஓலைச்சுவடிகள் இன்றை காலத்தை காட்டிலும் அதிகப்படியான ஆதராம் அழிந்து போய் விட்டது. இருப்பினும் இன்றைய காலத்தை வைத்து தமிழின் வயதை  கணக்கிட முடியாது அல்லவா !!!!!


மனிதன் பிறப்பிற்கு முன்பே தமிழ் பிறந்து இருக்கும் என்று இன்றைய வெளிநாட்டு அறிஞர்களும் , ஆய்வாளர்கள் கூறிகிறார்கள்.
இதை அன்றைய காலத்து புலவர்கள் ஆகிய திருவள்ளுவர் காலத்திலும் இந்த கேள்விகள் எழுப்பியதாம். ஆனால் இதற்கான பதிலை , இவருக்கு முந்தைய காலகட்டத்தில் அகத்தியர் மாமுனிவரிடம்  சாமானிய மனிதர்கள் தமிழ் எப்படி உலகிற்கு வந்தது என்று கேட்டுக்கிறார்கள். 
அதற்கு அவர் கூறிய ஒரு பதில் தமிழ் கடவுளின் மொழி என்றும் , 
மனிதர்கள் பிறப்பிற்கு முன்னே தமிழ் பிறந்து இருக்கிறது  என்று கூறுகிறார்.

 அனைவருக்கும் தெரிந்த உண்மை .
நம் வருங்கால சங்கதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டியவை.

" தமிழ் "  இந்த மூன்று எழுத்து  உண்மை யவரும் அறிய இயலாது .
பல ஓலைச்சுவடி தகவல்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.  

த -  என்பது சிவபெருமானின்
                 *சிவலோகம்*
மி - என்பது விஷ்ணுபெருமானின்             
                  *வைகுண்டம்*
ழ் -  என்பது பிரம்மனின்
                   *பிரம்மலோகம்*

இந்த மூன்று லோகத்திலும் உருவான ஒரு உலகம் தான் தமிழ்.
தமிழ் அறியாதவர்கள் !!!!
எண்ணுவார்கள் தமிழ் உள்ளங்கையில் அடங்கும் தேநீர் என்று !!!!
இந்த மூடர்களுக்கு தெரியாது " தமிழ் "
கடல் நீர் போல் என்று !!!!!!
நாம் அறிவோம்.
தமிழ் மொழி என்பது வேறும் 
மொழி அல்ல !!!!!
தமிழ் மொழி என்பது உயிர்.


   மேலும் இதுபோல தகவல்களுடன் சந்திக்கிறேன்.
            தமிழால் இணைவோம் !!!
            அறிவால் உயர்வோம் !!!
                     தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும் 
                 !!!!!   நன்றி !!!!!
                   " வலியே வலிமை "
                  " துணிவே துணை "
                                  -அய்யனார் (வால்வரின்)
            

கணினியில் தமிழ் இருந்து ஆங்கிலம் கொண்ட அகராதி மென்பொருள்

கணினியில் தமிழ் இருந்து ஆங்கிலம் கொண்ட அகராதி மென்பொருள்
இணைப்பு :
If you want to download dictionary software to your PC, you can
Click Link Download Options
download ILDC's free Tamil to English dictionary.
இந்த இணைப்பு கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய உதவும்.
அப்படி பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் !!!
நீங்கள் UC Browser
என்ற உலாவில் வாயிலாக பயன்படுத்த இயலும்.

தமிழ் நாட்டின் பழைய பெயர் என்ன ??? எப்படி வந்தது தமிழ்நாடு?

  தமிழ் நாட்டின் பழைய பெயர் என்ன ???  எப்படி வந்தது தமிழ்நாடு?


சங்கரலிங்கனார் 
விருதுநகரில் உள்ள மணிமண்டபம்.


நம்முடைய மாநிலத்தின் பெயர் என்ன?
அட, இது ஒரு கேள்வியா, 'தமிழ்நாடு'.
எளிமையான பதில்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் பெயரில் 'நாடு' என்ற சொல் இருக்கிறதே, இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்தப் பெயர், நமக்கு அத்தனை எளிதில் கிடைத்ததல்ல. பல அறிஞர்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் கைகோத்துப் போராடி, 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள்.
அதற்கு முன்னால், நம் மாநிலம் 'மெட்ராஸ்/மதராஸ் மாகாணம்' என்றுதான் அழைக்கப்பட்டது. இது ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர். தென்னிந்தியாவில் அவர்கள் நிர்வகித்த பகுதிகளை இவ்வாறு அழைத்தார்கள், மதராஸ் நகரத்தைத் தலைமையாகக் கொண்ட பகுதி என்பதால், இப்படிப் பெயர் சூட்டப்பட்டது. இதேபோல் பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், மேற்கு மாகாணம் போன்ற பல மாகாணங்களை அவர்கள் ஆண்டுவந்தார்கள்.
சுதந்திரத்துக்குப் பிறகும், 'மெட்ராஸ்' என்கிற பெயர் தொடர்ந்தது. அதில் ஒரே ஒரு சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், Madras Presidency என்பது, Madras State என்று ஆனது.
மெட்ராஸ் மாநிலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுகிறவர்களும் இருநதனர். பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் மாநிலத்தில், தமிழ் பேசுவோர்தான் அதிகமிருந்தார்கள்.
இந்நிலையில், இந்த மாநிலத்தின் பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. 'தமிழரசுக் கட்சி' உள்ளிட்ட பல அமைப்புகள் இதனை முன்வைத்துப் போராடின.
அரசாங்கம் இந்தப் போராட்டத்தை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. 'பழைய பெயரைத் தொடர்வதில் பல வசதிகள் இருக்கின்றன' என்றும், 'தமிழ்நாடு என்ற பெயர், சமீபத்தில் உருவாக்கப்பட்டது, அதற்கு ஒரு கலாசாரப் பின்னணி இல்லை' என்றும் சொல்லிவந்தனர்.
இதனை அறிஞர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழ்நாடு என்ற பெயர் பன்னெடுங்காலமாக நமது இலக்கியங்களில் பயின்று வந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தப் பெயர்தான் நமது மாநிலத்துக்குப் பொருத்தமானது என்றார்கள். பாரதியாரின்
'நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'
என்ற பாடலையும், வேறுசில பாடல்களையும் அவர்கள் சான்றாகக் குறிப்பிட்டனர்.
1956ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் என்ற காந்தியவாதி, 'நமது மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என மாற்றவேண்டும்' என்பது உள்ளிட்ட
12 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்குப் பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆனால் அப்போதும், அரசாங்கத்திலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல நாட்கள், பல வாரங்கள் தொடர்ந்தது. அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
எழுபத்தைந்து நாள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு, 1956 அக்டோபர் 13ம் தேதி, சங்கரலிங்கனார் உயிர்துறந்தார். தன்னுடைய கனவான, 'தமிழ்நாடு' எனும் பெயர் மாற்றத்தை அவர் காணவே இல்லை.
அதேசமயம், அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே 'தமிழ்நாடு' எனும் பெயருக்கு ஆதரவு பெருகியது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை ஒலித்தது. பெயர்மாற்றம் ஏன் தேவை என்பது பற்றிய விவாதங்கள் பரவலாக நடைபெற்றன.
எனினும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. 1967ம் ஆண்டுதான், மெட்ராஸ் மாநிலத்தின் பெயரைத் 'தமிழ்நாடு' என்று மாற்றுவதற்கான முயற்சிகள் சூடுபிடித்தன.
இதையடுத்து, 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, நமது மாநிலத்தின் பெயர் 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டது. அப்போதைய முதல்வரான சி. என். அண்ணாதுரை, சங்கரலிங்கனாரைக் குறிப்பிட்டுப் புகழ்ந்தார். அவரது தியாகத்தை எல்லாரும் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.
இப்படிச் சுமார் பதினைந்தாண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகுதான், 'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்குக் கிடைத்தது. இந்திய அளவிலும், உலக அரங்கிலும் நமது தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது.

அறிவியலின் தேடல் தொடரும் !!!!
               " வலியே வலிமை "
               " துணிவே துணை "
                          - ஐய்யனார் (வால்வரின்)

Saturday, 27 January 2018

தெய்வ மொழி தூய தமிழ் சொற்கள் நான்காவது பாகம் !!

தூய தமிழ் சொற்கள் !!!

தடங்காட்டி - GPS
விரலி - Thumbdrive
முடக்கலை - Offline
இயங்கலை - Online
ஆலலை - Broadband

Backup காப்புநகல் .
Bad sector கெட்ட துண்டம்
Bandwidth அலைக்கற்றை .
Bar printer பட்டை அச்சுப்பொறி .
Bar-code scanner பட்டைக் குறிமுறை வருடி .
Baseband அடிக்கற்றை .
Bebug வழுச்சேர்ப்பு .
Bebugging பிழைவிதைத்தல் .
Benchmark திறன்மதிப்பீடு .
Binary device இரும நிலைக் கருவி .
Binary digit இரும இலக்கம்.
Binary language இரும மொழி .
Binary number இரும எண் கணிப்பு.
Binary operation இருமச்செயற்பாடு .
Binary operator இருமச் செயற்குறி .
Binary system இரும எண்முறை .
Bio informatics உயிரித் தகவலியல் .
Blank character வெற்றுரு .
Block diagram கட்ட வரைபடம் .
Blog வலைப்பதிவு .
Blue ray disk நீலக்கதிர் வட்டு.
Bluetooth ஊடலை .
Bold தடிப்பு .
Bookmark பக்கக்குறி .
Boot தொடக்கு .
Border கரை.
Branching statement கிளைபிரி கூற்று .
Brennen எரிக்க.
Bridge இணைவி .
Broadband அகல்கற்றை .
Broadband ஆலலை .
Broadcast அலைபரப்பு .
Brouter இணைத்திசைவி .
Browser உலாவி .
Browsing மேலோடல் .
Buffer memmory இடையக நினைவகம் .
Bug வழு .
Bullet பொட்டு .
Bulleted list பொட்டிட்ட பட்டியல் கணிப்பு.
Bulletin board அறிக்கைப் பலகை.
Bus பாட்டை .
Button(key) பொத்தான் .
Byte எண்பிட்டு, எண்ணுண்மி.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!!
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இறந்தவர்களை உயிர்பிக்க முடியுமா??? Can the dead be able to survive ???

வாஷிங்டன்: மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையின்பேரில், இறந்துபோனவர்கள் சடலத்தை பதப்படுத்தி வைக்கும் கடும்குளிர் (cryogenics) டெக்னாலஜி மீது உலகில் பலரின் கவனமும் பதியத்தொடங்கியுள்ளது. இதுவரை உலகில் சுமார் 350 பேரின் இறந்த உடல்கள் இவ்வாறான தொழில்நுட்பத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோனிக்ஸ் என்ற இன்ஸ்ட்டிடியூட் இந்த வகை பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. 10 வருடம் போதும் கிரையனிக்ஸ் அமைப்பின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி இதுபற்றி கூறுகையில், அடுத்த 10 வருடங்களுக்குள் விஞ்ஞானிகள் நாங்கள் பதப்படுத்தி வைத்துள்ள உடல்களுக்கு உயிர் கொடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறார். 49 வயதாகும், கோவல்ஸ்கி டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "சிபிஆர் தொழில்நுட்பம் பற்றி 100 வருடங்கள் முன்பு யாரும் நம்பியிருக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று அது நடைமுறையில் உள்ளது. அதேபோலத்தான், 100 வருடங்களுக்குள் கண்டிப்பாக, உடல்களுக்கு மீண்டும் முழுமையாக உயிர் கொடுக்கும் அறிவியல் வரும்" என்கிறார் ஆணித்தரமாக. மக்கள் ஆர்வம் இவரது கிரையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில், சுமார் 2,000 பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடலை பத்திரப்படுத்தி வைக்குமாறு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர் என்பது வியப்பூட்டுகிறது. இந்த அமைப்பில் ஏற்கனவே 160 உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருந்து கண்டுபிடித்தால் பிழைப்பார்கள் கோவல்ஸ்கி கூறுகையில், எந்த உடல் முதலில் உயிர்பெறும் என்பது, இதற்கு தேவையான அறிவியல் மருந்து எந்த அளவு வேகமாக கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதன் அடிப்படையில் அமையும். குறிப்பாக ஸ்டெம் செல்ஸ் டெக்னாலஜி எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ அந்த வேகத்தில் மீண்டும் உடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும் என்றார். கிரையோஜெனிக்ஸ் என்றால் என்ன? கிரையோஜெனிக்ஸ் டெக்னாலஜி செயல்படுவது இப்படித்தான்: ஒரு மனிதனின் இதயத் துடிப்பு நின்று அவன் இறந்துவிட்டதாக அறிவித்த 2 நிமிடங்களுக்குள், கடுங்குளிர் தொழில்நுட்பம் எனப்பதும் கிரையோஜெனிக்ஸ் டெக்னாலஜி வல்லுநர்கள் தங்களது வேலையை ஆரம்பிப்பார்கள். அந்த சடலத்தின் உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு கெமிக்கல் உடலில் ஏற்றப்படும். கடும்குளிர் டெக்னாலஜி செல்கள் சேதமடையாமல் இருக்க உடலுக்குள் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும். இதன்பிறகு சடலம் மைனஸ் 130 டிகிரி குளிரில் வைக்கப்படும். இதன்பிறகு, நைட்ரஜன் அடைக்கப்பட்ட கன்டெய்னரில் சடலம் மைனஸ் 196 டிகிரி செல்சியசில் வைக்கப்படும். இதன்பிறகு அறிவியலாளர்கள் செல்களை புதுப்பிக்கும் டெக்னாலஜியை கண்டுபிடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இதுதான் கிரையோஜெனிக்ஸ் டெக்னாலஜி செயல்படும் விதமாகும். விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? இந்த நடைமுறையில் சடலங்களுக்கு மீண்டும் உயிர் கிடைக்குமா என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால் அவர்களிடமிருந்து இல்லை என்ற பதில் சத்தமாக வருகிறது. கிட்னி, இதயம் போன்றவற்றை என்னதான் பதப்படுத்தினாலும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது எனந்பது அவர்கள் வாதம். மூளையும் சேதமடையும் என்கிறார்கள் நிபுணர்கள். செம பிசினஸ் இவ்வாறு கடுங்குளிரில் உடலை பதப்படுத்த கிரையோனிக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் 35,000 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. போட்டி நிறுவனம் அல்கோர் 2,00000 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. க்ரியோரஸ் ப்ரசிஜர் என்ற அமைப்பு, 37,600 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. கருத்து மோதல் உடலை பதப்படுத்தும் அமைப்புகள், மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்து இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க நூற்றாண்டுகளும் ஆகலாம், பத்தாண்டிலும் நடக்கலாம் என கூறுகின்றன. மருத்துவ நிபுணர்களோ, செல் ஒருமுறை சேதமடைந்துவிட்டால் மீண்டும் அதை புதுப்பிக்க முடியாது என்கிறார்கள். உடந்தை முட்டையை மீண்டும் முந்தைய நிலைக்கே மாற்றுவதை போன்று அது இயலாத விஷயம் என்று உதாரணம் கூறுகிறார்கள் நிபுணர்கள்.
இன்னும் பத்தே வருஷம்தான்.. இறந்தவர்களை உயிரோடு எழுப்பலாம்! உலகை உற்று நோக்க வைக்கும் தொழில்நுட்பம்.

என்னை பொருத்தவரை இது முடியுமா ?
என்றால் எனக்கு தெரியாது தான்.
ஆனால் முடிந்தாலும் இயற்கைக்கு மாறாக நடைப்பெறுவதால் இது அதிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பிறகு என் இந்த பதிவுகளை அறிவிக்கிறீர்கள் !!!!
என்றால் இது போல் கூட தொழில்நுட்பம் வருமா , அல்லது வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற அறிவியல் அறிவிப்பின் விழிப்புணர்வுகளை உருவாக்க தான்.

அறிவியலின் தேடல் தொடரும்.

               " வலியே வலிமை "
                           -ஐய்யனார் (வால்வரின்)

English version !!!
PDF file click link to open !!!
https://drive.google.com/file/d/1U4ktDr92278ZPxq3JHF76cciYKAx00I5/view?usp=drivesdk

Friday, 26 January 2018

தொப்புளில் எண்ணை விடுவதால் உண்டாகும் நன்மைகள் !!!

தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.

காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

குறிப்பு :
அனைவரும் பயனடையக்கூடும்.....