Pages

Thursday, 31 May 2018

*ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் விபூதி பற்றி அரிய தகவல்கள்..*


*ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் விபூதி பற்றி அரிய தகவல்கள்..*

நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும், உயர்ந்த தத்துவம் என்னவென்றால், ‘நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்’ என்பதாகும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு, இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக்கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது.

சூரிய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து, நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும். அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது. இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருநீறு மருத்துவ குணமுடையது. ஆதலால் திருநீறை நீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீரும் என்பது இன்று வரையில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறையாக உள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு ஏற்பட்ட வயிற்று நோய்க்கு, அவரது தமக்கையார் வயிற்றில் திருநீறு பூசி, குணம் பெறச் செய்த வரலாற்றை பெரிய புராணத்தில் காணலாம். திருநீற்றின் பெருமையானது புராண காலம் முதலாக, இன்று வரையிலும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.

திருநீறு அணிய இரு முறைகள்
*********************************

திருநீறு தரிப்பதற்கு பொதுவாக இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது ‘உத்தூளனம்’ எனப்படும் இடைவெளி இல்லாது நெற்றி மற்றும் பிற இடங்களில் பூசும் முறையாகும். இரண்டாவதாக ‘திரிபுண்டரம்’ எனும் முறையில், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக பூசும் முறையாகும். ‘விபூதியை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும்போது, கொடுப்பவரது குணநலன்கள் வாங்குபவரை பாதிக்கும். எனவே நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டும் திருநீறை பெற வேண்டும்’ என்று தமது ‘அகத்தியர் பரிபூரணம்’ என்ற நூலில் அகத்திய மகரிஷி குறிப்பிடு கிறார்.

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் வெப்பத்தின் காரணமாக முதலில் அது கறுப்பாக மாறும். பிறகு படிப்படியாக நெருப்பால் எரிக்கப்பட்டு சுத்த வெளுப்பாக மாறிவிடும். அது அப்பொருளின் முடிவான நிலையாகும். பஸ்பமாக நீற்று வெளுத்துப் போவதற்கு முன்னர் அது கரியாக மாறும். ‘கார்பன்’ எனப்படும் கரியாகிய வைரம்தான் இவ்வுலகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருக்கிறது. கரியாக உள்ள பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு என்று போற்றப்படுகிறது. 

வீட்டில் திருநீறு தயாரிக்கும் முறை
*************************************

பசுவானது மகாலட்சுமியின் வாசஸ்தலமாக விளங்குகிறது. பசுவின் சாணத்தை அக்னியில் இட்டு பஸ்பமாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது. இந்த உடலை சுத்தப்படுத்தி, அதற்குள் உள்ள ஆத்மாவை பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றது திருநீறு. மகா பஸ்பமாக கருதப்படும் பரமாத்மாவும், விபூதி எனப்படும் திருநீறு பஸ்மமும் முற்றும் முடிந்த நிலையில் ஒன்றாக கருதப்படுவதால், விபூதி அணிந்து இறைக்காட்சியையும் பெறுவது சாத்தியமே என்று அருளாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பல்வேறு முறைகளில் திருநீறு தயாரிக்கப்பட்டாலும், வீடுகளில் நாமே தயாரிக்கும் முறை பற்றி இங்கே காணலாம். காராம்பசுவின் சாணம் பூமியில் விழுவதற்கு முன்னர் பிடித்து, (அவ்வாறு இயலாவிடில், துணியை தரையில் விரித்து வைத்தும் பிடித்துக்கொள்ளலாம்) அதன் கோமியத்தை விட்டு கலக்கி, சிறு உருண்டைகளாக மாற்றி காய வைத்து, தூசிகள் இல்லாது எடுத்து வைத்து கொள்ளவேண்டும். அந்த உருண்டைகளை ‘திரிபுர ஸம்ஹார காலமான’ கார்த்திகை மாத பவுர்ணமியில் வரும் கிருத்திகை நட்சத்திரமான ‘கார்த்திகை தீபம்’ நாளில், நெருப்பில் இடவேண்டும். பாதுகாப்பான இடத்தில் அது நன்றாக எரிந்து தானாகவே ஆறும் வரையில் சில காலம் விடவேண்டும்.

மார்கழி மாதம் முழுவதும் பனி பொழிந்து, அந்த சாம்பலானது நிறம் மாறும் வரையில் விட்டுவிட்டு, தை மாதத்தில் அந்த சாம்பலை கிளறி விடவேண்டும். அதன் பின்னர், மாசி மாதத்தில் வரக்கூடிய ‘மகா சிவராத்திரி’ அன்று காலையில், அந்தச் சாம்பலை எடுத்து, ஒரு பானையின் வாயில் சுத்தமான, மெல்லிய துணியை கட்டி, சாம்பலை துணியின் மேல் போட்டு, கைகளால் தேய்க்க வேண்டும்.

அதன்மூலம், மென்மையான துகள்கள் திருநீறாக பானைக்குள் சேரும். அதை எடுத்து சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம் செய்வித்த பின்னர் வீட்டுக்கு எடுத்து வந்து, அதை உபயோகப் படுத்துவது தான் மேன்மையான முறையாகும். இந்த முறையை தவிர சாந்திக பஸ்மம், காமத பஸ்மம், பவுஷ்டிக பஸ்மம் ஆகிய சாஸ்திர ரீதியாக தயாரிக்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. (மேற்கண்ட முறையில் திருநீறு தயாரிக்க இயலாவிட்டால், சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கும் பல கோசாலைகள் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்)

அணியும் முறைகள்
*********************

உள்ளங்கையானது பிரம்மா மற்றும் விஷ்ணு பாகமாக கருதப்படுவதால், திருநீறை உள்ளங்கையில்தான் பெற வேண்டும். ஆண்கள் ‘திரிபுண்டரம்’ எனப்படும் நீரால் கலக்கி மூன்று கிடைக்கோடுகளாகவும், ‘உத்தூளனம்’ எனப்படும் வெறும் விபூதியாகவும் அணிய வேண்டும் என்பதும், பெண்கள் தண்ணீர் விடாமல் அணியவேண்டும் என்பதும் சாஸ்திரம்.

மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆள்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக் வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிரவிரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களையும் குறிக்கிறது. மூன்று கோடுகள் இடுவது வேதங்களை குறிப்பது மட்டுமல்லாமல், மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

திருநீறு அணியும் ஆண்கள் தண்ணீரில் அதைக் குழைத்து, ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, மூன்று கோடுகளாக நெற்றி, கழுத்து, மார்பு, தோள்கள், தொப்புளுக்கு மேல்புறம், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலா, முழங்கால்கள் ஆகிய பகுதிகளில் அணிய வேண்டும். காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் விபூதி பூசுவது அவசியம்.

திருச்செந்தூர் திருநீறு
*************************

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், முருகன் சன்னிதியில் விபூதி மற்றும் சந்தன பிரசாதமானது பக்தர்களுக்கு பன்னீர் இலையில் வைத்து தரப் படுகிறது. முருகனுக்கு பன்னிரு கரங்கள் இருப்பது போல பன்னீர் மரத்தின் இலைகளிலும் பன்னிரண்டு நரம்புகள் இருக்கும். முருகனை வணங்கும் பக்தர்களுக்கு, அவன் தனது பன்னிரு திருக்கரங்களால் விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம்.

அத்தகைய பிரசாதமானது ‘பன்னீர் செல்வம்’ என்றே பக்தர்களால் வழங்கப்படுகிறது. ஆதிசங்கரர் அந்த இலையில் தரப்பட்ட விபூதியை உட்கொண்டு தமது உடல் நோயை நீக்கிக்கொண்டு ‘ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம்’ பாடியதாக கூறப்படுகிறது. இந்த விபூதி இலை பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக இருப்பதால், திருச்செந்தூர் செல்பவர்கள் இதைத் தவறாது பெற்று செல்வது வழக்கம்.

தேவாரம், திருவாசகம், திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளை, அனைவராலும் முழுமையாக பாட இயலாது. அதன் சாராம்சத்தை சுருக்கி மந்திரம் மூலம் இறைவனை வணங்க அருளாளர்கள் செய்த உபாயமே ஐந்தெழுத்து சிவமந்திரமான ‘நமசிவாய’ என்பதாகும். திருநீறு அணியும் சமயங்களில் அதை மனதால் நினைத்து அணிவது திருமுறைகளை பாடிய பலனைத் தர வல்லது...

*70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்*

*70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்*


*சைவம்*

*1. சமயம் என்றால் என்ன?*
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

*2. சைவம் என்றால் என்ன?*
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

*3. சைவ சமயம் எப்போது தோன்றியது?*
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

*4. யார் சைவர்?*
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

*5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?*
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

*6. சமயக் குரவர்கள் யாவர்?*
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

*7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

*8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

*9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

*10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?*
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

*11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?*
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

*12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?*
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

*13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?*
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

*14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.*
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

*15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக*
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

*16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.*
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

*17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?*
18,497 பாடல்கள்.

*18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?*
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100=மொத்தம் 1,03,000 795

*19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

*20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

*21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?*
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

*22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?*
அறுபத்து மூவர்.

*23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?*
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

*24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?*
பரஞ்சோதி முனிகள்

*25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?*
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

*26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?*
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

*27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?*
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

*28. சித்தாந்த அட்டகம் - விளக்குக*
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

*29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?*
வாகீச முனிவர்

*30. வேதங்கள் - குறிப்பு தருக.*
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

*31. ஆகமங்கள் - குறிப்பு தருக.*
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

*32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?*
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

*33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.*
முடிந்த முடிபு.

*34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?*
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"

*35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?*
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

*36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.*
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

*37. அளவை - குறிப்பு தருக.*
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

*38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?*
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

*39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?*
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

*40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?*
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

*41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?*
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

*42. மும்மூர்த்திகள் யாவர்?*
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள

*43. இறைவனின் எண்குணங்கள் யாவை?*
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

*44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?*
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?*
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

*46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.*
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

*47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?*
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

*48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?*
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

*49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?*
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

*50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?*
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

*51. வினை என்றால் என்ன?*
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

*52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?*
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?*
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

*54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?*
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

*55. மாயை - குறிப்பு தருக.*
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

*56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?*
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

*57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?*
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

*58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?*
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

*59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?*
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

*60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக*
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

*61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.*
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

*62. தீக்கை என்றால் என்ன?*
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

*63. இருவினை ஒப்பு என்றால் என்ன?*
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

*64. மலபரிபாகம் என்றால் என்ன?*
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

*65. சத்திநிபாதம் என்றால் என்ன?*
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

*66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?*
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

*67. முத்தி என்றால் என்ன?*
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

*68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?*
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

*69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.*
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

*70. தசகாரியம் என்றால் என்ன?*
ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்

*திருச்சிற்றம்பலம்*

*மகா சிவராத்திரியில் மட்டும் பல நிறம் மாறும் லிங்கம் நம்ம தமிழ் நாட்டுல இருக்கு!*....


*மகா சிவராத்திரியில் மட்டும் பல நிறம் மாறும் லிங்கம் நம்ம தமிழ் நாட்டுல இருக்கு!*....

ஓர் கண்ணோட்டம்....

அன்புடன் *NTN ஜோதிட நிலையம் SPBS சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*....
***********************************************
லிங்க உருவம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டது. உருவமற்றது, அருவமானது, லிங்கத்தின் அமைப்பைப் பற்றியதான சர்ச்சைகளும் பல ஆண்டு காலமாக உள்ளது.இருப்பினும்… எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கும் லிங்கத்திலிருந்துதான் உருவ பூஜைகள் தொடங்கியிருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

லிங்க பூஜைகள் இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றவை. அதிலும் இந்த இடத்தில் இருக்கும் லிங்கம் கூடுதல் விசேஷமானது. ஏன் தெரியுமா? அங்கிருக்கும் கோவிலில் இருக்கும் லிங்கம் சிவராத்திரி அன்று மற்றும் பல நிறங்களில் தோன்றும். அந்த கோவில் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் பார்க்கலாம்.

சொர்ணகடேஸ்வரர் கோவில் :
----------------------------------------------------
சொர்ண கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ள ஊர் நெய்வணை. விழுப்புரத்திலிர்ந்து 53 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவிலை அடையலாம். திருக்கோவிலூரிலிருந்து 20 கி.மி. தூரத்தில் இருக்கின்றது. பண்ருட்டியிலிருந்து 60 கி.மி. தொலைவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல நகரத்திலிருந்து பல்வேறு பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோவில் அமைப்பு :
---------------------------------
இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நந்தி மண்டபமும் காணப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், நாவுக்கரசரர், மாணிக்க வாசகரர் போன்ரவர்களுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

சைவத் திருமறைகளில் தேவாரப் பாடல்கள் இயற்றிய திருஞான சம்பந்தர் இந்த கோவிலை வந்தடைவதற்கு முன் இருட்டிவிட்டதால் திக்கு தெரியாமல் இருந்தவரை சிவன் பார்வதியின் மூலமாக இக்கோவிலுக்கு வழிக்காட்டினார்.

அதநால் மகிழ்ச்சியடைந்த சம்பந்தர் ஆடிப்பாடி நன்றி கூறும் சிலை அவர் சன்னிதியில் இருக்கின்றது.

நிறம் மாறும் லிங்கம் :
--------------------------------------
மகாசிவராத்தியின் போது மட்டும் அதிகாலையில் சூரிய ஒளிக் கற்றைகள் லிங்கத்தின்மீது படர்கிறதாம். அப்போது லிங்கம் நீலம், வெள்ளை, சிவப்பு பச்சை என பல நிறங்களில் மாறி பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கிறது.

பெயர்க் காரணம் :
--------------------------------
ஒரு சமயம் இக்கோவில் உள்ள இடத்தில் இருந்த பெரிய ஏரி ஒன்று உடைந்து ஊருக்குள் வெள்ளம் வந்திருக்கிறது. அதனால் அங்கிருந்த மக்கள் கோவிலுக்குள் சென்று வணங்கினர். அதனால் சிவன் இளைஞனாக மாறி ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் ஒரு நெல் மூட்டையை பெற்று ஏரியின் வெள்ளத்தை அடைத்தாராம். இதனால் நெல் அணை என்ற பெயர் உருமாறி நெய்வணை எனறு பெயர் பெற்றதாம்.

நடை திறக்கும் நேரம் :
----‌‌-----------------------------------
இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகிறது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று !

#ௐ_நமசிவாய....!
நன்றி.....

சி.வி. ராமன் அவர்களை பற்றிய அறிய தகவல்


சமீபத்தில் நான் படித்த அபாரமான பதிவு  !!!!!


தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன்

திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்
சந்திர சேகர வெங்கட் ராமன்.
சி.வி ராமன்.

இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது

பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது

ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்

அதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகின்றது அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன‌

இந்த முடிவு பவுதீக உலகை புரட்டிபோட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கபட்டது, 1930ல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கபட்டது.

அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது

சாதாரண சாதனை அல்ல அது.

இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.

அதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் (இம்சை அரசனில் வடிவேலு கேட்பார் அல்லவா?) இத்தாலி , அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின‌

தன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது.

பின்னாளில் மாநில பிரிவினை வரும்பொழுது அவர் மைசூர் வாசியானார். அதனால் அவர் பிறப்பால் கன்னடன் என சொல்லிவிட முடியாது, பிறந்ததும் கற்றதும் தமிழகத்தில்தான்

இன்று சர் சிவி ராமனின் பிறந்த நாள், உலகெல்லாம் கொண்டாடபட்ட ராமன் ஒரு தமிழர். தமிழர் அறிவின் உச்சம்

ஆனால் இத்ததமிழகத்தில் பேச்சு கலைஞர் அண்ணா, சினிமாகாரன் ராமசந்திரன் இன்னும் சில இம்சைகள் போல அடையாளபடுத்தபட்டாரா? என்றால் இல்லை

ஏன்? ஏனென்றால் அவர் பிராமணர்

தமிழ்நாட்டில் பிறந்த அறிவு சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கபட்டார்

என்னதான் திராவிடம், பகுத்தறிவு இம்சைகள் பேசினாலும், அதில் சில சாதித்தோம் என சொல்லிகொண்டாலும் ஒரு விஷயம் உண்மை, உறுத்தும் உண்மை

அறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் கொண்டாட மறுக்கபட்டோம் அல்லது மறக்கடிக்கபட்டோம்

அவர்கள் பிராமணராயிருந்தால் இன்னும் கூடுதல்

வெறும் குப்பைகளையும், பிதற்றல்காரர்களையும் பெரும் பிம்பமாக உருவாக்க தொடங்கினோம், விளைவு பெரும் விபரீதம் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன‌

அதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்

ராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தை கண்டுபிடித்து நோபல் வாங்கினார்?

விஷயம் ஒன்றுமல்ல , சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம்

விஞ்ஞானம் வந்து சூரிய ஓளியில் 7 வண்ணங்கள் உண்டு என சொல்வதற்கு பல்லாயிரகணக்கான ஆண்டுக்கு முன்பே இந்துக்கள் எப்படி 7 குதிரைகள் என சொன்னார்கள் என்ற வியப்பு அவருக்கு வந்தது.

7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார், அது என்ன கண்ணன் நீலநிறம் என்பது அவரை சிந்திக்க வைத்தது.

அதிலே ஆராய்ச்சியினை செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையினை கண்டறிந்தார்

ஆம் நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது

வானமும், கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்கு புரிந்தது

இந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா? என்பது விளங்கிற்று

இந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞஞான விளக்கத்தை கொடுத்தார் ராமன், உலகம் அவரை கொண்டாடியது

இப்படி இன்னும் எத்தனை விஞ்ஞான தத்துவம் இந்துமதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது, அதற்கு இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்

பகுத்தறிவு அது இது என சொல்லி தமிழகத்தில் அந்த தமிழனின் புகழ் மறைக்கபட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது

இன்றும் அது ராமன் விளைவு என்றே கொண்டாடபடுகின்றது

வெள்ளையன் அப்படிபட்ட தமிழர்களை சாதி பாராது ஊக்குவித்தான் ராமன் உலகினை புரட்டிபோடும் முடிவினை சொன்னார்

தமிழக திராவிட கட்சிகள் சினிமாவினை வளர்த்தன, பின் அவனின் நிற ஆராய்ச்சி எப்படி இருக்கும்?

"ஊதா கலரு ரிப்பன்" என்ற அளவில்தான் இருக்கும்

இந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த அந்த மேதைக்கு நினைவிடம் இருக்குமா? அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா? கல்லூரி உண்டா? இல்லை விருதுதான் உண்டா? என்றால் இல்லை

 யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை

பின் எப்படி உருப்படும் தமிழகம்? நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர் எப்படி வருவார்கள்?

பகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மத புறக்கணிப்பு என சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.

7 குதிரைகள் பூட்டிய சூரிய தேரும், கண்ணனின் நீல நிறமும் வெறும் கட்டுகதை அல்ல, அவை எல்லாம் பெரும் விஞ்ஞான தத்துவம் என உலகிற்கு நிரூபித்தவர் பிறந்த நாள் இது

இந்துமதத்தில் இன்னும் ஏராளமான விஞ்ஞான தத்துவம் உறங்கிகொண்டிருக்கின்றது, மூட நம்பிக்கை எனும் பெயரில் அவைகளை புறக்கணிக்க கூடாது என உலகிற்கு செவிட்டில் அறைந்து சொன்ன இந்தியன் பிறந்த நாள் இது.

இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் , ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும் என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இது.

இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.

முருகனின் 125 தமிழ் பெயர்கள்


முருகனின் 125 தமிழ் பெயர்கள்


தமிழ்க்கடவுள் முருகனுக்கு அழகிய பெயர்கள் பல உண்டு. அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

முருகன் பெயர்கள்

1.சக்திபாலன், 2.சரவணன், 3.சுப்ரமண்யன், 4.குருபரன், 5.கார்த்திகேயன், 6.சுவாமிநாதன், 7.தண்டபானி, 8.குக அமுதன், 9.பாலசுப்ரமணியம், 10.நிமலன், 11.உதயகுமாரன், 12.பரமகுரு, 13.உமைபாலன், 14.தமிழ்செல்வன், 15.சுதாகரன்

16.சத்குணசீலன், 17.சந்திரமுகன், 18.அமரேசன், 19.மயூரவாஹனன், 20.செந்தில்குமார், 21.தணிகைவேலன், 22.குகானந்தன், 23.பழனிநாதன், 24.தேவசேனாபதி, 25.தீஷிதன், 26.கிருபாகரன், 27.பூபாலன், 28.சண்முகம், 29.உத்தமசீலன், 30.குருசாமி

31.திருஆறுமுகம், 32.ஜெயபாலன், 33.சந்திரகாந்தன், 34.பிரபாகரன், 35.சௌந்தரீகன், 36.வேல்முருகன், 37.பரமபரன், 38.வேலய்யா, 39.தனபாலன், 40.படையப்பன், 41.கருணாகரன், 42.சேனாபதி, 43.குகன், 44.சித்தன், 45.சைலொளிபவன்

46.கருணாலயன் 47.திரிபுரபவன், 48.பேரழகன், 49.கந்தவேல், 50.விசாகனன், 51.சிவகுமார், 52.ரத்னதீபன், 53.லோகநாதன், 54.தீனரீசன், 55.சண்முகலிங்கம், 56.குமரகுரு, 57.முத்துக்குமரன், 58.அழகப்பன், 59.தமிழ்வேல், 60.மருதமலை,

61.சுசிகரன், 61.கிரிராஜன், 62.குமரன், 63.தயாகரன், 64.ஞானவேல், 65.சிவகார்த்திக், 66.குஞ்சரிமணாளன், 67.முருகவேல், 68.குணாதரன், 69.அமுதன், 70.செங்கதிர்செல்வன், 71.பவன்கந்தன், 72.திருமுகம், 73.கதிர்காமன், 74.வெற்றிவேல், 75.ஸ்கந்தகுரு

76.பாலமுருகன், 77.மனோதீதன், 78.சிஷிவாகனன், 79.இந்திரமருகன், 80.செவ்வேல், 81.மயில்வீரா, 82.குருநாதன், 83.பழனிச்சாமி, 84.திருச்செந்தில், 85.சங்கர்குமார், 86.சூரவேல், 87.குருமூர்த்தி, 88.சுகிர்தன், 89.பவன், 90.கந்தசாமி

91.ஆறுமுகவேலன், 92.வைரவேல், 93.அன்பழகன், 94.முத்தப்பன், 95.சரவணபவன், 96.செல்வவேல், 97.கிரிசலன், 98.குலிசாயுதன், 99.அழகன்,100. தண்ணீர்மலயன், 101.ராஜவேல், 102.மயில்பிரீதன், 103.நாதரூபன், 104.மாலவன்மருகன், 105. ஜெயகுமார்

106.செந்தில்வேல், 107.தங்கவேல், 108.முத்துவேல், 109.பழனிவேல், 110.கதிர்வேல், 111.ராஜசுப்ரமணியம், 112.மயூரகந்தன், 113.சுகதீபன், 114.குமரேசன், 115.சுப்பய்யா, 116.கார்த்திக், 117.சக்திதரன், 118. முத்துக் குமரன், 119.வேலவன், 120.கதிர் வேலன், 121. விசாகன், 122. கந்தன், 123. விசாகன், 124. குமாரன், 125.அக்னி பூ

முருகு என்றால் அழகு என்று பொருள். மாறாத இளமையோடும், பலர் வியக்கும் அழகோடும், பேரின்ப நறுமணத்தோடும், அழியா தெய்வத்தன்மையோடும் விளங்கும் முருகனுக்கு பார்போற்றும் பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உள்ளன. உதாரணத்திற்கு,

விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்கினியில் தோன்றியதால் அக்னி பூ
கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் கங்காதரன்.
சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்

இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முருகன் பெயர்கள் பல வற்றை பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வது வழக்கம். முருகன் பெயர்கள் என்றாலே அது அழகிய தமிழில் தான் இருக்கும். அப்படி பட்ட முருகன் பெயர்கள் பலவற்றை நாம் உச்சரிக்க உச்சரிக்க நம்முள் ஒரு இனம் புரியாத இன்பம் பிறக்கும்.

முருகன் பெயர்கள் பலதை பல்வேறு நாட்டை சார்ந்த பலரும் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளில் முருகன் பெயர்கள் பிரபலம். தமிழ் கடவுள் முருகன் சிவ மைந்தன் என்பதால் சிவ பக்தர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு முருகன் பெயர்கள் சூட்டி மகிழ்வதுண்டு. நமக்கு தெரிந்த முருகன் பெயர்கள் சில, இன்னும் தெரியாத பல முருகன் பெயர்கள் உள்ளன. அதை எல்லாம் சீராக தொகுக்க முயற்சிப்போம். முருகன் பெயர்கள் பலவற்றை இனி வரும் காலங்களிலும் நம் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வோம்.

மனிதர்களுக்கு மட்டும் அல்ல பல முன்னணி நிறுவனங்களுக்கும் முருகன் பெயர்கள் சூட்டப்படுவதுண்டு. சரவணா ஸ்டோர்ஸ், சரவண பவன் இப்படி முருகன் பெயர்கள் கொண்ட நிறுவனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முருகன் பெயர்கள் உள்ள இடத்தில் அவரின் அருள் இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. கலை துறையிலும் கூட முருகன் பெயர்கள் கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளன. அதே போல பல கல்வி நிறுவனங்களும் கூட முருகன் பெயர்கள் கொண்டு இயங்குகின்றன. இப்படி முருகன் பெயர்கள் பலதும் நாம் திரும்பும் திசை எல்லாம் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றன. இனி வரும் காலங்களிலும் நாம் முருகன் பெயர்கள் பலதை உலகெங்கும் ஒலித்திட வை செய்வோம்.

"Gravity tunnel " எனும் கற்பனை கோட்பாடு என்ன சொல்கிறது தெரியுமா ?


"Gravity tunnel " எனும் கற்பனை கோட்பாடு என்ன சொல்கிறது தெரியுமா ?

ஒரு கற்பனைக்கு பூமியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கத்திற்கு ஒரு ஓட்டை போட்டால். அதில் ஒருவர் குதிதால் பூமியின் மையத்தை அடைய மிக சரியாக 42 நிமிடங்கள் 12 நொடிகள் ஆகும்.
பூமியின் எந்த ஓரத்தில் இருந்து எப்படி குறுக்காக இதை செய்து பார்த்தாலும் 42 நிமிடங்கள் தான் ஆகும்.
அது ஏன் சரியாக அப்படி நடக்க வேண்டும் என்று விளக்கமாக அறிய இந்த லிங்க் இல் சென்று பார்க்கவும்.

How long would it take to fall through the center of the Earth? http://www.physicscentral.com/explore/poster-earth.cfm

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Monday, 28 May 2018

கிச்சுகிச்சு மூட்டினால் நம் உடலில் ஏற்படும் அதிசய நிகழ்வு


கிச்சுகிச்சு மூட்டினால் நம் உடலில் ஏற்படும் அதிசய நிகழ்வு 


நம்மை யாராவது அடித்தால் வலிக்கும் . அதே போல் நம்மை நாமே அடித்து கொண்டால் கூட வலிக்க தான் செய்யும்.
இதே போல நமக்கு யாராவது
கிச்சுகிச்சு மூட்டினால் நமது உடல் பயங்கரமாக எதிர்வினை ஆற்றும்...
ஆனால் அதே நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டினால் மட்டும் இது ஏன் நடப்பது இல்லை ?

இதற்க்கு காரணம் கிச்சுகிச்சு போது நமது உடல் ஆபத்திற்கான எதிர்வினை ஆற்றுவது தான்.
தனது உடலை யாரோ என்னவோ செய்கிறார்கள் என்று அது தற்காப்புக்கு தயார் ஆகிறது.
இதனால் தான் நமக்கு நாமே செய்தால் அந்த எதிர்வினை நடப்பது இல்லை.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 27 May 2018

பனிக்கட்டியின் ஏன் வெண்மை நிறத்தில் உள்ளது ????



பனிக்கட்டியின் ஏன் வெண்மை நிறத்தில் உள்ளது ????


ஐஸ் கட்டி பார்த்து இருப்பீர்கள் .
தூய வெள்ளை நிறத்தில் இருக்கிறது அல்லவா.
நீரை எப்போதாவது உறைய வைக்கும் முன் கொதிக்க வைத்து பின் உறைய வைத்து பார்த்தால் பனிக்கட்டி சுத்த கண்ணாடி போல தெளிவாக நிறமற்று இருபதை பார்க்கலாம்.

வழக்கமான நீரில் வெண்மையாக தெரிய காரணம் அதில் கலந்து உள்ள ஆக்சிஜன் மற்றும் மேலும் சில கலவைகள் தான்.


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 26 May 2018

இனவெறி விட மோசமானது இது !!!! தீவிரவாதத்தை விட கொடூரமானது இது !!!!



இனவெறி விட மோசமானது இது !!!!

தீவிரவாதத்தை விட கொடூரமானது இது !!!!


தயவுசெய்து இந்த காணொளியை காணுங்கள்.

நம்முடைய அரசாங்கமே !!!!
தம்மை எதிர்ப்பது அழிவுகளின்  முன்னேற்றமே !!!!

ஒற்றுமை அற்ற இந்த மனித மிருகங்களுக்கு மரணமே மிகப்பெரிய பரிசு தான்.
ரௌத்திரம் கொண்ட நாம் !!!
மனமார்ந்த எண்ணத்துடன் இந்த மனித மிருங்களை அழிப்பதே நன்று !!!

தமிழ் மண்ணிற்கு இன்று உயிரூட்ட வேண்டும் !!!  இந்த கொடூர மனிதர்களை உரமாக்குவது தவறு அல்ல !!!
கொன்று குவித்திடு !!! வென்று களித்திடு !!!!.

தயவுசெய்து பொருத்தது போதும் பொங்கி எழுல வேண்டிய தருணம் இது.

இன்றைய காக்கி சட்டை அரசியல்வாதிகளின் செல்ல பிராணி !!!!
காக்கி சட்டை உடையவர்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம் என்பதை உணராத அறியாமையாளர் இவர்கள்.

குற்றம் செய்பவனே தைரியமாக செய்யும் பொழுது !!!
குற்றத்தை எதிர்த்து கேட்பதற்கு ஏன் நாம் அஞ்ச வேண்டும்.


நம்முடைய தமிழ் மகன்
தெய்வ திரு. திருவள்ளுவர் கூறிய
 குறள் !!!
வெருவந்த செய்தொழுகும்                       
                                             வெங்கோலாயின்
ஒருவந்தம் ஒல்லைக்கெடும் .
               குறள்563.

விளக்கம்:

குடிமக்கள் அஞ்சும்படியாகச்செயல் செய்யும்
கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

இந்தியா என்பது எங்களுடைய குமரிகண்டம் என்னும்  இலெமுரியரியன்
மகள் தான்.
ஆனால் தந்தையை கொல்ல முயற்சிக்கும் உலக நாட்டுகளில் முதல் இடத்தில் இருக்கிறாள்
இந்த இந்தியா !!!!!

எங்களை அழிக்க என் குடும்பத்தாரே பயன்படுத்துகிறாள் இந்தியா !!!

உலகில் தோன்றிய முதல்
 மனித இனம் !!!     " தமிழன் ".
இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறான்.

போராடி வெல்வோம் அல்லது போரிட்டு வெல்வோம்.
நாம் அடுத்த தலைமுறைக்கு இந்த பிரச்சனையின் வலிகளை உணராமல் இருக்க நாம் போராடி வெற்றி கொள்வோம்.

முயற்சியில் பிறப்பது புரட்சி ஆனாலும் ,
எழுச்சியினால் !!! எதிரிகளின் வீழ்ச்சி காண்போம்.

நம்முடைய உரிமைகளை பறித்தவர்களிடம் கூறுவோம் !!!
தனி உரிமைகளை உருவாக்க தனி நாடாக தனித்து இருக்கும் தமிழ்நாடு என்றும் தனி நாடு தான் என்று !!!!!

ஓங்கும் கை ஒடுங்க !!!
அடிக்கும் கை அடங்க !!!!
விழித்து கொள் தமிழா !!! 
பத்து கோடி தமிழர்களின் இதய துடிப்பில் இருந்து நான் வால்வரின்.

         தமிழால் இணைவோம் !!!
         ரௌத்திரம் பழகுவோம் !!!
              தமிழ் வளர்க !!!!!
              தமிழன் வாழ்க !!!
             வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 25 May 2018

சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.

சிவார்ப்பணம்
சிவனின்றி அணுவும் அசையாது
*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .*.! – *எப்படி சாத்தியம்.*

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*.

*இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.*

மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

அதிகம் பகிருங்கள் சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகறியட்டும்.

         *நமசிவய*
*திருச்சிற்றம்பலம்*

விண்வெளி உடையின் சிறப்பு அம்சம்.

விண் உடை (அ)விண்வெளி உடை (space suit). 


சிறப்பு அம்சம்:-

வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான
விண்வெளியில்
மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடையாகும்.

மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும் விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் வீரரின் உடலுக்குத் தேவைப்படும் காற்று, நீர், வெப்பம் ஆகியன கிடைக்கும் விதத்திலும், வேர்வை, சிறுநீர், கரியமில வாயு ஆகியவற்றை அகற்றும் விதத்தில் விண் உடை வடிவமைக்கப்படுகிறது.

வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டதாக இருக்கும்.

இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும்
ஆக்சிஜன் தொட்டி இருக்கும்.

வின் உடையானது ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் அவரது உடல் அமைப்புக்கு ஏற்ப பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும்.

ஒவ்வொருவருக்கும் மூன்று உடைகள்:-
1)பயிற்சிக்கு ஒன்று, 2)விண்வெளிப் பயணத்தின்போது ஒன்று,
3)மாற்று உடை ஒன்று ஆகும்.

விண் உடைகளின் எடை புவியைப் பொறுத்தவரை மிகக் கூடுதலாக இருக்கும், ஆனால் இவை ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுதும்போது எடை தெரியாது.

விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை மூன்று கோடிவரை ஆகும்.

விண்வெளி உடை மாற்றங்கள்:-

 துவக்கக்கால கால விண் உடைகள் விமானிகள் உடையின் இறுக்கமான வடிவைக் கொண்டிருந்தன.

 சோவியத் உருசியாவின் விண்வெளி வீரரான அலெக்ஸி லியநோவ், 1965 இல் வாஸ்கோட் 2 விண்கலத்தில் சென்று விண்வெளியில் முதலில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர்.
இவரின் முதல் விண் நடையின்போது, இவர் அணிந்திருந்த விண் உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால் விண் உடை ஊதிப் பெருக்க ஆரம்பித்து சிக்கலை உண்டாக்கியது, இதன் காரணமாக லியநோவ் நகர இயலாமல் திணறிப்போனார் காரணம் விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே இதற்குக் காரணமாக ஆனது.
இந்தப் படிப்பினையின் காரணமாக அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண் உடைகள் அழுத்தச் சமநிலையைப் பாதுகாக்கும்வகையில் அந்த உடைகள் விரிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டன, மேலும் காற்றை மறுசுழற்சி செய்யும் அமைப்பும், உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்றுகொண்டே இருக்கும் அமைப்புகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.


         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 24 May 2018

உலகில் நாம் அறியப்படாத காளான் வகைகள்.

உலகில் நாம் அறியப்படாத காளான் வகைகள்.



         தமிழால் இணைவோம் !!!
           அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

உலகத்தின் 9வது அதிசயம் !!!!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் காராகோரம் சாலை உலகத்தின் 9வது அதிசயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

        தமிழால் இணைவோம் !!!
          அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Monday, 21 May 2018

வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்!

வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்!!!



இரண்டு நாள்களாக எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் சரி, சமூக வலைதளங்களைத் திறந்தாலும் சரி மக்களை அச்சுறுத்தும் ஒரே விஷயம், கேரளாவை அச்சுறுத்தியுள்ள நிபா வைரஸ் தான்.


நிபா வைரஸ், 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள ஒரு கிராமத்தில், மக்கள் தொடர்ச்சியாக காய்ச்சலினால் உயிரிழந்து வந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனைசெய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆரம்பம்குறித்து ஆராய்ந்துபார்த்தபோது, பன்றிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது தெரியவந்தது. பன்றிகளை எப்படி இந்த வைரஸ் தாக்கியது என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது வௌவால்.

ஆம், பழந்தின்னி வௌவால்களின் சிறுநீரகம், உமிழ்நீர், முகம் போன்ற இடங்களில்தான் இந்த வைரஸ் உருவாகிறது. இந்த வௌவால்கள் கடித்த பழங்களை விலங்குகள் உண்ணும்போதும், அவற்றின் சிறுநீர் மற்றும் உமிழ்நீர் விலங்குகள்மீது படுவதன் மூலமும் இது தொற்றிக்கொள்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட வீட்டு விலங்குகளுடன் மனிதர்கள் பழகும்போது, அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பன்றி தவிர, வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய், குதிரை ஆகியவை மூலமும் இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வௌவால்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழக்கூடியவை. அதன்படி, உயரமான பனை மரங்களில் கள்ளுக்காகக் கட்டப்படும் பானைகளில் வௌவால்களின் உமிழ்நீர் மற்றும் சிறுநீர் பட்டு, அந்தக் கள்ளை மனிதர்கள் குடிக்கும் போது விரைவில் பரவிவிடும்.

லேசான காய்ச்சலுடன் நிபா வைரஸ் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, தொடர் தலைவலி, உடல் சோர்வு, மனச் சோர்வு ஆகியவற்றைக் கடந்து, கோமா நிலையை அடைகிறது. கோமாவிலிருந்து மீண்டெழுந்தவர்களின் கதை பல உண்டு. ஆனால், இந்த வைரஸ் தாக்கி கோமாவுக்குச் சென்றவர்கள், இறுதியில் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். இதற்கு இன்னும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே தற்போது மருந்துகள் உள்ளன.  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதே சிறந்த மருந்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சற்று தூரத்திலேயே இருக்க வேண்டும், அவர்கள் உண்ட உணவின் மீதியை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் இருமல், சளி போன்றவை நம் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணிகளைப்  பிறர் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது. இதுவரை இந்த வைரஸ் தாக்கியவர்களில் 75 சதவிகிதத்தினர் இறந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.


         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..
                  

விண்வெளி வீரர் விண்வெளி சென்று சில நாள் கழித்து வரும் போது உயரம் கூட காரணம்.



ஒரு விண்வெளி வீரர்
விண்வெளி சென்று சில நாள் கழித்து வரும் போது 2 இன்ச் வரை உயரம் கூடி இருப்பார்.

இதற்க்கு காரணம் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் தண்டுவடத்தின் cartilage discs கொஞ்சம் விரிவடைவது தான்.


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                 தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இயற்கை தான் நம்முடைய முதல் ஆசான். நல்ல பாடத்தை கற்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கை தான் நம்முடைய முதல் ஆசான்.

மனிதன் இயற்கை பார்த்து கற்க வேண்டியது அதிகம்.

இந்த கீழே புகைப்படத்தை கவனியுங்கள் !!!!!




1.முன்னால் செல்லும் 3 ஓநாய்கள் கூட்டத்தின் மிக வயதானவை வழிகாட்டலுக்காக.

2.அடுத்ததாக இருக்கும் 5 ஓநாய்கள் கூட்டத்தின் மிக வலிமையான போராளிகள்.

3.தனது குழு முழுக்க முன் செல்லவிட்டு கடைசியாக வருவதே கூட்டத்தின் தலைவன்.🐺

தலைமை பண்பு,நிர்வாகம் என்பதை நாம் கற்று கொண்டது இயற்கையிடம்.

 
       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

அதிசய கணிதம் !!!!! புதிர்களின் புதிர் இது !!!

கீழே உள்ள காணொளியை காணுங்கள்.



           தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
   அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இதுவரை நாம் காணாத புயல் !!!!!

இந்த காணொளியை காணுங்கள்.
இப்படி கூட ஒரு சூறாவளி !!!!


           தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                       தமிழ் வாழ்க !!!
       அறிவியலின் தேடல் தொடரும்.
                 வலியே  " வலிமை "
             - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 20 May 2018

முட்டைகள் என்ன வடிவில் இருக்கும் ?



முட்டைகள் என்ன வடிவில் இருக்கும் ? இதென்ன கேள்வி முட்டை முட்டை வடிவில் தான். ஆனால் பல பறவைகளின் முட்டைகள் ஓரளவு கோள வடிவிலும் இருப்பது உண்டு. பல முட்டைகள் கூர்மையாக வளர்ந்து இருப்பதையும் பார்க்கிறோம்.
எந்த மாதிரி பறவைகள் எந்த மாதிரி முட்டையிடும் அதை ஏதாவது வகை படுத்த முடியுமா வரையறுக்க முடியுமா?

இது பலநாளாக ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்த கேள்வி.

இதற்க்கு முன் அவர்களுக்கு கிடைத்த விடை கால்சியம் குறைவான பறவைகளுக்கு முட்டை உருண்டை வடிவில் இருக்கும் என்பது. ஆனால் அந்த பதில் போதிய அளவில் திருப்தி இல்லை .

இப்போது ஆய்வாளர்கள் அதற்கான சரியான வரையறை கண்டு கொண்டதாக சொல்கிறார்கள். கிட்ட தட்ட 50000 முட்டைகளை சோதித்து 1400 இனங்களை சரிபார்த்து இந்த உண்மையை அவர்கள் கண்டு கொண்டதாக சொல்கிறார்கள். தற்போது அவர்கள் கொடுத்துள்ள வரையறை....


"அதிக உயரம் பறக்கும் பறவை களின் முட்டைகள் கூராக இருக்கும் குறைவான உயரம் பறக்கும் பறவைகள் முட்டை குறைந்த கூர்மை கொண்டிருக்கும் சுத்தமாக பறக்காத பறவைகள் முட்டை கிட்ட தட்ட கோள வடிவில் இருக்கும்.


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

          தமிழால் இணைவோம் !!!
          அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
      அறிவியலின் தேடல் தொடரும்.
              வலியே  " வலிமை "
         - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 19 May 2018

ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக உறக்கம் தேவையாம் !!!! அறிவியல் விஞ்ஞான ஆய்வு !!!


ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக உறக்கம் தேவையாம் !!!!


அறிவியல் விஞ்ஞான ஆய்வுகளின்  காணொளி காணுங்கள் !!!


இந்த பதிவுகளை அனுப்பிய தோழர் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

          தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
               தமிழ் வாழ்க !!!
  அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
           - அய்யனார் (வால்வரின்)..

Friday, 18 May 2018

இயற்பியலில் உராய்வு விசைப் பற்றிப் படிக்கும் போது சறுக்கு கோணம் (angle of repose) என்ற பாடம் வரும்.

இயற்பியலில் உராய்வு விசைப் பற்றிப் படிக்கும் போது சறுக்கு கோணம் (angle of repose) என்ற பாடம் வரும். 





சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருள் கிடைத்தள பரப்புடன் சாய்தளம் ஏற்படுத்தும் எக்கோணத்தில் நகரத் தொடங்குகிறதோ அக்கோணமே சறுக்கு கோணம் எனப்படும் என்று தான் பாடபுத்தகங்களில் இருக்கும். இந்த வரையறையை நீங்கள் படிக்கும் போது சறுக்கு கோணம் என்றால் என்ன என்பதை உங்கள் மனதில் காட்சிப் படுத்த முடிகிறதா?

பெரும்பாலும் இல்லை என்ற பதில் வரும் எனறே நினைக்கிறேன்.

மணலை ஒரு இடத்தில் குவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கோணத்திற்கு பின்னர் மணல் சரியத்தொடங்கும். மணல் சரியத்தொடங்கும் அதிகபட்ச கோணத்தை தான் சறுக்கு கோணம் என்று அழைக்கிறோம். தானியங்களை மிகப்பெரிய குவியங்களாக குவிக்கும் போது சரிவுக்கோணத்தை கணக்கில் எடுத்துக் கொள்வர்.
இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
வீட்டு கூரைகளை  சரியான சறுக்கு கோணத்தில் அமைத்தால்  மழைநீர் மற்றும் பனி விரைவாக வளிந்தோடும். எந்த கோணத்தில் எளிதாக வளிந்தோடுகிறதோ அந்த கோணம் தான் சறுக்கு கோணம்.
இப்போது சறுக்கு கோணம் என்றால் என்ன என்றும் அதை எதற்காக படிக்கிறோம் என்றும் உங்களுக்கு புரிந்திருக்கும்.
குழந்தைகள் விளையாடும் சறுக்கு பலகையின் சாய்வு சறுக்கு கோணத்தை விட அதிகமாக இருந்தால் குழந்தைகள் வேகமாக சறுக்கி வருவார்கள்.
எறும்புகளை உணவாக உட்கொள்ளும் குழிநரி அல்லது குள்ளாம்பூச்சி  (antlion) எனப்படும் ஒரு வகையான பூச்சி இனம்  மணற்பரப்பில் சிறு சிறு குழிகளை ஏற்படுத்தியிருக்கும். அந்த குழியின் சாய் கோணம்  சறுக்கு கோணத்துக்கு சமமாக அமைக்கப்பட்டிருப்பதால் எறும்பு போன்ற பூச்சிகள் அந்த குழிகளுக்கு அருகில் சென்றால் குழிக்குள் சறுக்கி விழுந்து விடும். காத்திருக்கும் குள்ளாம் பூச்சி இனம் அதனை கொன்று சாப்பிட்டு விடும். " குள்ளம் பூச்சி " கூட சறுக்கு  கோணத்தின் பயனை தெரிந்து வைத்திருக்கிறது.

பூச்சியால் கூட புரிந்து கொள்ள முடிந்த சறுக்கு கோணம் மனிதர்களுக்கு புரியாதா?


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
        அறிவால் உயர்வோம் !!!
                தமிழ் வாழ்க !!!
    அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

நிஜமான கால பயணி இவரே !!!!!!

நிஜமான கால பயணி இவரே !!!!!!



ஒளி வேகத்தில் கால பயணம் நிகழும் என்று ஐன்ஸ்டைன் சொல்லி இருப்பது நமக்கு தெரியும்.
ஒளிக்கு நெருக்கமான வேகத்தில் எவ்வளவு நெருங்குகிறோம் என்பதை பொறுத்து அந்த பயணம் நாம் அளக்க முடிய கூடிய விதமாக இருக்கும்.

நமது வேகத்துக்கு ஏற்ப நாம் அனைவருமே நேரத்தில் பயணம் செய்பவர்கள் தான் . ஆனால் அவைகள் அளக்க முடியாத அளவு மிக மிக மிக குறைவான அளவு.
ஆனால் நாம் அளக்கும் படி அப்படி நிஜமாக டைம் டிராவல் செய்த ஒரே மனிதன் sergei krikaleve எனும் ருஷ்ய விண்வெளி வீரர் தான் காரணம் அவர் கிட்ட  தட்ட 29 ஆயிரம் கிலோமீட்டர் எனும் அசுர வேகத்தில் 803 நாட்கள் விண்வெளியில் சுற்றியவர்.

(இதன் படி சார்பியல் கணக்கு படி அவர் பயணித்த கால பயண தொலைவு எவ்வளவு தெரியுமா வெறும் 21 மில்லி செகண்ட் எதிர்காலத்தில் பயணம் செய்து இருக்கிறார் அவர்.)

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
         - அய்யனார் (வால்வரின்)..
         

பூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி?

பூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி?

*நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம்.*

நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்? என்ற கேள்விக்கு ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது.

இதை, "சஞ்சித கர்மா என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது. இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது.

மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும். இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர்.

இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, "ஆகாமி கர்மா என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும்.

சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க முடிவதில்லை. நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது.

அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது. இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம்.

அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக் செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும். பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம்.

இதை எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது.

மனம் கலங்காதிருக்க இதை சற்று வாசித்து பாருங்கள்

மனம் கலங்காதிருக்க...


❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம்கலங்கவில்லை..

❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக இருந்த போதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில்தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்க வில்லை

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்க வில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*
ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்

*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடை பிடித்தால்,வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடந்தாலும்,எதை இழந்தாலும், *ஆத்மதிருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்.


திசைகளை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தால் என்ன நிகழும் !!!!!

திசைகளை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தால் என்ன நிகழும் !!!!!


பூமியில் நீங்கள் வடக்கு நோக்கி சென்று கொண்டே இருந்தால் தெற்கை  நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள்.

ஆனால்..
பூமியில் நீங்கள் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருந்தால்...
ஒரு போதும் மேற்கை அடைய மாடீர்கள்.

கிழக்கை சூரிய உதயத்தை வைத்தும் வட, தெற்கை துருவங்களை வைத்தும் நிர்ணயிப்பதால் வரும் குழப்பம்...

திசைகளில் அர்த்தம் இல்லாத பூமியில் இரண்டு இடங்கள் உள்ளன. வட துருவத்தில், அனைத்து திசைகளிலும் தெற்கே, தெற்கு துருவத்தில், அனைத்து திசைகளிலும் வடக்கே செல்கிறது.

தன்னைத்தானே சுற்றும் பூமியின் சுழற்சியே காரணம் !!!!!

                  தமிழால் இணைவோம் !!!
                  அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                     வலியே  " வலிமை "
            - அய்யனார் (வால்வரின்)..

திருநெல்வேலியை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்:

திருநெல்வேலியை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்:


சிவா திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்

 இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

 2. சபை சிவாலயங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* சித்ர சபை - திருக்குற்றாலம்

* தாமிர சபை- திருநெல்வேலி

3. முப்பீட தலங்கள்

* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்

* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்

* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

4. பஞ்ச ஆசன தலங்கள்

* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்

* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்

* நான்குநேரி - திருநாகேஷ்வரர்
 திருக்கோயில்

* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்

* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)

* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்

* தாருகாபுரம் - நீர் தலம்

* தென்மலை- காற்று தலம்

* தேவதானம் - ஆகாய தலம்

 5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்

* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்

* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்

* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்

* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்

* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்

* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்

 7. நவ சமுத்திர தலங்கள்

* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

8. பஞ்ச பீட தலங்கள்

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)

* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

 10. வாலி வழிபட்டத் தலங்கள்

* திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
* பாபநாசம் - சூரியன்
* சேரன்மகாதேவி - சந்திரன்
* கோடகநல்லூர் - செவ்வாய்
* குன்னத்தூர் - இராகு
* முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

11. வேறு சில ஆலயங்கள்

* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.

* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.


Wednesday, 16 May 2018

உண்மையில் இந்தியா நாட்டின் பெயரில் அர்த்தம் என்ன ????

ஆங்கில மொழியில் American, Japan, Bhutan, Srilanka, Bangladesh, Nepal மற்றும் Pakistan நாடுகளின் பெயர்கள் அவ்வாறே உச்சரிக்கிறோம்..!.

ஆனால்  *Bharath* (பாரதம்) மட்டும் *India* என்று ஏன் உச்சரிக்கின்றன..?..

உங்களுக்கத் தெரியுமா..

*India* வின் விரிவாக்கம் என்னவென்று..?...

ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரிப்படி India என்பதன் பொருள்..

*I-INDEPENDENT*
*N-Nation*
*D-Declared*
*I-IN*
*A-AUGUST*
*(India)*

99% இந்தியர்களுக்கும் இது தெரியாது...!..

        தமிழால் இணைவோம் !!!
        அறிவால் உயர்வோம் !!!
                தமிழ் வாழ்க !!!
  அறிவியலின் தேடல் தொடரும்.
             வலியே  " வலிமை "
     - அய்யனார் (வால்வரின்)..
            

நமக்கு தெரியாத அறிவியலின் உண்மைகள்.

* மனித உடலில் மிக வேகமாக நம்மால் அசைக்க கூடிய தசை எது தெரியுமா. ??

கண்ணின் மேல் உள்ள இமையின் தசை பகுதிதான் அது..
ஒரு வினாடிக்கு 5 முறை இமையின் தசைகள் அசைய கூடியது

* ஆக்டோபஸ் ...

ஒரே  சமயத்தில்

56,000  முட்டைகளை  இடக்கூடியது...


தனது  முட்டைகளை
மற்ற  கடல்வாழ்  உயிரினங்களிடமிருந்து  பாதுகாக்க  அதிகபட்சமாக
6  மாதங்கள்  வரை  உணவு  உண்ணாமல்
இருக்கும்...


* வேற்றுகிரக வாசிகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்று எழும் பலவிதமான குழப்பங்களுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே தீர்வை கூறியுள்ளனர்.
ஒரு சரியான ஆதாரம் கிடைக்காத பொழுதிலும், நம் பிரபஞ்சத்திற்கு இணை பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்கிற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய 'பிரபஞ்சம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பரிணாமம்'(Evolution and Assembly of Galaxies and their Environments) என்ற ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
இந்த ஆராய்ச்சியில், அவர்கள் கண்டறிந்த மிக முக்கியமான விஷயம் 'இருண்ட ஆற்றல்' (dark energy). இதுபோன்ற இருண்ட ஆற்றல் ( புவி ஈர்ப்பின் எதிர்ப்பதம்) மூலம், பல பிரபஞ்சங்கள் உருவாக முடியும் என்றும் அந்த புதிய பிரபஞ்சத்தில் உயிவாழ்வதற்கு தகுதியான சூழல் உருவாகியிருக்கலாம்.

அதனால், அங்கே மக்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த பதிவுகளை வழங்கிய
திரு.பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!

தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
 தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
 வலியே  " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..

மரணத்தை தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?

மரணத்தை தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன?


“உங்க வயசு என்ன சார்?”..


“எனக்குப் போனவாரத்தோட 500 

முடிஞ்சி 501 நடக்குது!!”


இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர் என்பதே உண்மை. மனிதனை நீண்ட நாள்கள் வாழ வைக்கும் அந்த ‘ரகசியத்தைப்’ பற்றிய தேடல் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ் (Dr. Anatoli Brouchkov) என்பவர் அந்த ரகசியத்தின் விடை 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியாவில் இருப்பதாக நினைத்தார். அப்படி நினைத்தவர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?.. ஆம், தனது உடலில் அந்த 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியவை செலுத்திக்கொண்டார்.

சாகாவரம் பெற்ற பாக்டீரியா:

பேசில்லஸ் எஃப் (Bacillus F) என்று பெயரிடப்பட்ட இந்தப் பழங்காலத்து பாக்டீரியா 2009-ம் ஆண்டு விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ்-ஆல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சைபீரியாவின் நிரந்தரமான உறைந்த பனிக்கட்டிகள் காணப்படும் யாகூட்ஸ்க் (Yakutsk) பிரதேசத்தின் அடியாழத்தில் இந்தப் பாக்டீரியாவை அவர் கண்டறிந்தார். 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்று கணக்கிடப்பட்ட இந்த பாக்டீரியாவில் அவர் பார்த்த ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அவை அப்போதும் உயிருடன் காணப்பட்டதேயாகும்.



இந்த வகை பாக்டீரியா நீண்ட நாள்கள் உயிருடன் வாழ்வது மட்டுமல்லாமல் அதைச் சுற்றி இருந்த அனைத்து உயிரிகளின் வாழ்நாள்களை நீட்டிப்பதிலும் முக்கிய பங்காற்றியது பின்பு கண்டறியப்பட்டது.

எலிகள், பழ ஈக்கள் (fruit flies) மற்றும் சில தாவர வகைகளின் மீது அந்தப் பாக்டீரியாவினைச் செலுத்தி நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகள் நம்பத்தகுந்த முடிவுகளைத் தந்தது. அதிலிருந்து இதைப்பற்றிய கவனம் அதிகரிக்கத்தொடங்கியது. இந்த ஆரம்பகட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட விக்டர் செர்னியாவ்ஸ்கி (Dr.Viktor Chernyavsky) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் (epidemiologist), அந்த பாக்டீரியாவை ‘உயிரின் அமுதம்’ (elixir of life) என்று அழைத்தார்.

அந்த ஆய்வுகளின்போது, எலிகள் நீண்ட நாள்கள் வாழ்ந்ததையும், அவற்றின் வயதான காலத்திலும் இனப்பெருக்கம் செய்யும் திறனுடனும் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதேபோல இந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்ட தாவரங்கள் மிக வேகமாக வளருவதும், வேகமாக பனியில் உறைந்து போவதைத் தடுக்கும் வகையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக யகூட்யா பிரதேசத்தில் வாழும் மக்கள் மற்ற பகுதியில் வாழும் மக்களைவிட அதிகநாள்கள் வாழ்வதற்கு இந்தப் பாக்டீரியா அவர்களின் குடிநீருடன் கலந்து காணப்படுவதே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.

மில்லியன் டாலர் கேள்வி:




இந்த பேசில்லஸ் எஃப் (Bacillus F) பாக்டீரியாவானது நீண்ட நாள்கள் வாழும் தகவமைப்பைக் கொண்டது என்று தெளிவாகப் புரிந்துகொண்டாலும் அவற்றின் உடலமைப்பில் துல்லியமாக எந்த அம்சம் இதற்குக் காரணமாக உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதுவரை டாக்டர் ப்ரௌகோவ் மற்றும் அவரது குழுவினர் அந்த பாக்டீரியாவின் டி.என்.ஏ வரிசையை (DNA Sequence) மட்டுமே கண்டறிந்துள்ளனர், ஆனால், அவற்றுள் இந்த அதிசயத்தை நிகழ்த்தும் ஜீன்கள் (genes) எவை என்பது இன்னும் கண்டறியப்படாத மில்லியன் டாலர் கேள்வி. 

இதைப் பற்றி டாக்டர் ப்ரௌகோவ் கூறுகையில், “கேன்சரை உருவாக்கும் ஜீன்களை துல்லியமாகக் கண்டறிவது எவ்வளவு சிக்கலான காரியமோ அதேபோலத்தான் இந்தப் பாக்டீரியாவின் அந்தக் குறிப்பிட்ட சூட்சும ஜீன்களைக் கண்டறிவதும்”, என்கிறார்.

இந்தப் பாக்டீரிவை மனிதர்களில் முறையாக சோதித்துப் பார்த்தது கிடையாது, மற்றும் இது மனிதர்களில் எந்த வகையில் செயல்படும் என்பதும் யாருக்கும் தெரியாது. அந்தச் சமயத்தில்தான் டாக்டர் ப்ரௌகோவ்வின் மனதில் ஒரு விபரீத யோசனை தோன்றியது. அதுதான் அந்த பாக்டீரியாவை தனக்குள் செலுத்திப் பார்க்கும் யோசனை.

வாழ்வா..? சாவா..?


அதன்படியே அவர் தனது உடலில் அந்த பாக்டீரியாவை செலுத்திக்கொண்டு மனிதனில் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்தார்.

முடிவு..?


அவர் என்றைக்கு இறக்கிறாரோ அன்று தானே முடிவு கிடைக்கும்.!

ஆனால், 2015-இல் அந்தப் பாக்டீரியாவை உடலில் செலுத்தியதிலிருந்து இன்றுவரை அவர் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்டதன் பின்பு இரண்டு வருடங்களில் முன்பிருந்ததைவிட நன்றாக இருப்பதாக சொல்லும் அவர், தனக்கு காய்ச்சல், சளி மற்றும் இன்னபிற உபாதைகள் வரவே இல்லை என்றும் கூறுகிறார். மேலும் அவரின் மருத்துவ அறிக்கைகளும் அவர் முன்பிருந்ததைவிட நல்ல ஆற்றலோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த முடிவுகள் எதார்த்தமாகக்கூட கிடைத்திருக்கலாம் என்றும் இதை உறுதி செய்வதற்கு நீண்ட ஆய்வானது தேவை, என்றும் மற்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எது எப்படியோ நீண்ட நாள்கள் மனிதனை நோயின்றி இளமையுடன் வாழவைப்பது சாத்தியம் என்பது நிரூபிக்கப்படுமானால் அது உண்மையாகவே அறிவியலின் அளப்பரிய கண்டுபிடிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.


           தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                     தமிழ் வாழ்க !!!
      அறிவியலின் தேடல் தொடரும்.
                  வலியே  " வலிமை "
         - அய்யனார் (வால்வரின்)..