Pages

Tuesday, 31 July 2018

தியானம் என்றால் என்ன ??

தியானம் என்றால் என்ன ??


தியானம் என்றால் என்ன இது பலருக்கும் இருக்கும் கேள்வி
தியானத்தைப் பற்றி நான் படித்ததை அறிந்த விஷயங்களை சிலதை பகிர்ந்து கொள்கின்றேன்.

தியானம் என்பது ஒரு செயலல்ல அதை நீங்கள் பழக முடியாது அதை நீங்கள் "செய்ய " முடியாது அது ஒரு தன்மை அந்தத் தன்மையில் நீங்கள் இருக்கலாம்.
தியான தன்மையோடு நீங்கள் நடக்கலாம் சாப்பிடலாம் குளிக்கலாம் உங்கள் வாழ்வின் அன்றாட வேலைகள் அனைத்தையும் தியான நிலையில் இருந்து செய்ய முடியும்.

பலரும் நினைப்பது போல தியானம் என்பது எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து மட்டுமே செய்யக் கூடியது அல்ல ஒருவன் தியான தன்மையோடு போர் புரிய கூட முடியும்.

முதலில் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல (அது consentretion)
தியானம் என்பது
 மனதை பயன்படுத்தாமல் இருப்பது (meditation )

மனதை ஒரு நிலைப்படுத்துதல் என்பதும் சிந்தனை என்பதும் நீங்கள் செய்யும் மற்ற செயல்களை போல ஒரு செயல்தான் ஆனால் தியானம் என்பது எந்த செயலும் செய்யாத ஒரு அமைதி நிலை.
சுற்றி வரும் சக்கரத்தின் சுற்றாத மைய அச்சு போல.. உங்களுக்குள் இருக்கும் இயக்கத்தை நீங்கள் இயங்காமல் கவனிப்பது.

மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது மனதை பலமாக்கும் ஒரு செயல்.
அது வாழ்வில் வெற்றி பெற  உதவும்.
ஆனால் தியானம் உங்கள் மனதை பல படுத்தாது அது உங்கள் மனதை கடந்து செல்ல உதவும்.
மனதை ஒருநிலைப்படுத்துதல் மனமற்ற நிலையில் இருத்தல் இரண்டுமே முக்கியமானதுதான் அதில் மனமற்ற நிலையில் இருத்தல் கொஞ்சம் கடினமானது.
 காலம் காலமாக மனதை பயன்படுத்தி மட்டுமே அனைத்து செயலையும் நாம் செய்து பழகி விட்டோம மனதை பயன்படுத்தாமல் இருப்பது என்பது அப்படி ஒரு செயலை செய்வது என்பது நமது பழக்கத்தில் இல்லாத ஒன்று.
ஆனால் நமக்கே தெரியாமல் வாழ்வில் நாம் பலமுறை அந்த தியான தன்மையிலிருந்து இருக்கின்றோம் மனமற்ற நிலையில் சில வினாடிகள் நாம் பலமுறை இருந்து இருக்கின்றோம்
அது எப்போ ??

சாலையில் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் ஒரு வாகனம் உங்களை மோதுவது போல வந்து தற் செயலாக நீங்கள் தப்புகிறீர்கள்....
அந்த சில வினாடிகளில் உங்கள் மனம் வேலை செய்வதில்லை உடனடியாக செயலாற்றி நகர்ந்து தப்பினீர்கள் அல்லவா அது சிந்தனையால்  விளைந்த செயல் அல்ல.
அங்கே உங்கள்  மனம் செயல்படுவதற்கு நேரமே இல்லை
திடீரென்று அங்கே நீங்கள் விழிப்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
 இவ்வளவு நேரம் உள்ளுக்குள் மன ஓட்டதொடு நடந்து வந்த நீங்கள்
மனமற்ற நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.
அப்போது உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தும் உங்கள் கண்ணுக்கு திடீரென்று தெரிகிறது சுற்றியிருக்கும் ஒலிகள் உங்கள் காதுகளுக்கு கேட்கிறது.

நண்பர்களுடன் சேர்ந்து மிக அதிகமாக சிரிக்கும் போது கவனித்து இருக்கிறீர்களா திடீரென்று சில வினாடிகள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.
தொடர்ச்சியான சிரிப்புக்குப் பின்னால் அமைதி எங்கிருந்து வருகிறது.
காரணம் தொடர்ச்சியான சிரிப்பு உங்கள் மனதை கொஞ்ச நேரத்துக்கு நிறுத்தி வைக்கிறது அந்த சில வினாடி உங்கள் மனதில் எண்ணங்கள் எதுவும் இருப்பதில்லை.
உங்களுக்கே தெரியாமல் தியான தன்மையில் அப்போது இருக்கிறீர்கள்.

மலை ஏறும் சாகச வீரர்கள்... கால்களைக் கட்டிக்கொண்டு தலைகீழாக குதிப்பவர்கள்... இவர்கள் ஏன் அந்த சாகசத்தை விரும்புகிறார்கள் தெரியுமா காரணம் அந்த கணத்தில் அவர்கள் மனம் நின்றுபோய் தியானம் தன்மையில் இருக்கிறார்கள் தியானம் கொடுக்கும் பரவசம்தான் அவர்களை சாகசம் செய்ய தூண்டுகிறது.
அந்த நேரத்தில் அவர்கள் உணரும் பரவசத்தைக் கொடுத்தது தியானம்தான் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆம் மனமற்ற நிலை என்பது ஒரு பரவச நிலை தான்.

இன்னொரு ஆச்சரியமான விஷயத்தை சொல்கிறேன்.
மகிழ்ச்சியை விடவும் துக்கம் சோகம் தியானத்திற்கு மிகவும் நெருக்கமானது.  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனதில் மேலோட்டமாக மட்டுமே வாழ்கிறீர்கள்.
துக்கத்தின் போது உங்கள் மனதிற்கு உள்ளே கடந்து செல்கிறீர்கள்.
எவ்வளவுக்கெவ்வளவு துக்கம் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நீங்கள் ஆழமாக உள்ளே செல்கிறீர்கள்.
அப்போது நீங்கள் அனைத்தையும் விழிப்போடு கவனிக்கிறீர்கள்.
எப்போதாவது துக்கமாக இருந்தால் அந்த கணத்தை கண்மூடி அனுபவிக்க தவறாதீர்கள்.
உங்களுக்கு உள்ளே இறங்க மிகச் சிறப்பான தருணம் அதுதான்.

தியானம் என்பது எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பது நம்மைவிட விலங்குகளும் பறவைகளும் அதிகமான தியான தன்மையோடு இருக்கின்றன.
ஆனால் அவைகளுக்கும் நமக்கும் உள்ள ஒரு வித்தியாசம் அவைகளால் அந்த தன்மையில் இருப்பதை உணர முடியாது மனிதனால் அது முடியும்.
ஒரு விலங்கு எப்பொழுதும் தன்னை சுற்றியுள்ள விஷயத்தை மட்டுமே கவனமாக உள்ளது அவைகளுக்கு கடந்த காலமும் எதிர்காலமும் இல்லை எப்போதுமே நிகழ்காலத்திலேயே அவைகள் வாழ்கின்றனர்.

ஒரு இருட்டான சாலையில் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் அந்த  இருட்டுக்குள் ஒரு கொலைகாரன் கத்தியோடு எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் மேல் பாய்வதற்கு தயாராக இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக நடப்பீர்கள் என்ன விதமான நிலையில் இருப்பீர்கள் ?
அப்படி ஒரு நிலையில் அந்த அளவு விழிப்பில் சாதாரணமாக நடந்து செல்வதுதான் தியான நிலையில் நடப்பது.

ஜப்பானின் சாமுராய் வீரர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அங்கே கத்திச்சண்டை களையும் தற்காப்பு கலையும் உண்டு பண்ணது.
துறவிகள் என்பது ஆச்சரியமான விஷயம்...
மனதை நிறுத்தி தியானம் செய்ய விரும்பிய துறவிகளுக்கு கத்தி எதற்கு ??

தியானம் பழக வந்த மாணவர்களுக்கு அவர்கள் கத்தி சண்டையை பழகி கொடுத்தார்கள்.
அவர்களுக்குள் கத்தியைக் கொடுத்து சண்டை அடிக்க விட்டார்கள்.  உங்கள் உடலுக்குள் எப்போது வேண்டுமானாலும் கத்தியை இரக்க தயாராக ஒருவன் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் போது உங்களால் மனதை பயன்படுத்த முடியாது அங்கே உங்கள் சிந்தனைக்கு வேலை எதுவும் இல்லை நீங்கள் சிந்திக்கும் நேரம் அவன் கத்தியை உங்கள் உடலில் இரக்க கூடும்..
மிகுந்த விழிபுடன் வாள் பிடித்து நிற்கும் போது.. அந்த விழிப்பை கவனிக்க கற்று கொடுத்தார்கள் குருமார்கள்.

சரி இந்த தியானத்தை எப்படி பழகுவது?
முன்பே சொன்னது போல அது ஒரு செயலல்ல பழகுவதற்கு.
அது ஒரு தன்மை. அது ஒரு நிலை. அது ஒரு நுணுக்கம்.. நீச்சலை போல..
அதை அறிந்து கொண்டால் அதில் நீங்கள் இருக்கலாம்.
அதை நீங்கள் தொடங்க வேண்டியது உங்கள் எண்ணத்தை கவனிப்பதின் மூலமாக.

சரி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உங்களுக்குள் கவனித்து தயாராக இருங்கள்.
உங்களுக்கு உள்ளே வரும் எண்ணங்களை மூன்றாவது மனிதனை போல தள்ளி நின்று கவனித்த பழகுங்கள்.

ஒரு பிஸியாக இருக்கும் சாலையில் சென்று நில்லுங்கள் அங்கே செல்லும் வாகனங்களை தள்ளி நின்று கவனியுங்கள்.
இப்போது தனியாக அறைக்குள் செல்லுங்கள். கண்ணை மூடி உங்கள் மனதிற்குள் கவனியுங்கள் அங்கேயும் சிந்தனைகள்தான் வாகனங்களை போல என்று கற்பனை செய்யுங்கள் அந்த வாகனத்தை தள்ளி நின்று கவனித்ததை போல எண்ணங்களை தள்ளி நின்று கவனியுங்கள்.
எந்த  சிந்தனை வந்தாலும் அதில் நீங்கள் கலந்து விடக்கூடாது தள்ளி நின்று மட்டுமே கவனிக்க வேண்டும் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கவனிப்பது மட்டும்தான்.
இதை செய்ய செய்ய உனக்குள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனம் படிப்படியாக வேகம் குறைவதை காண முடியும்.

நீங்கள் உங்கள் சிந்தனையை கவனித்தால் சில விஷயத்தை புரிந்து கொள்ள முடியும்.
எண்ணங்கள் என்பது ரயில்வே போல ஒரு தொடர்ச்சியான ஓட்டமல்ல.
அவைகள் சாலையில் செல்லும் காரை போல குட்டி வாகனங்களை போல..
ஒன்று அதற்குப் பின்னால் ஒன்று அதற்குப் பின்னால் ஒன்று என்று தொடர்கிறது.
ஒரு குறிப்பிட்ட சிந்தனை எப்பொழுதும் முடிகிறது அடுத்த சிந்தனை எப்போது தொடங்குகிறது என்று அந்த புள்ளியை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால் சிந்தனை ஏற்படுவது நின்று விடுவதை கவனிக்கலாம்.

இப்போது மீண்டும் சாலைக்கு செல்லுங்கள் இப்போது நீங்கள் கவனிக்க வேண்டியது வாகனங்களை அல்ல அந்த வாகனத்திற்குள் இடையிலான இடைவெளியை.
இதற்கு முன் நீங்கள் ஒரு வாகனத்தை கவனித்தீர்கள். ஒரு வாகனம் அதைத் தொடர்ந்து அடுத்த வாகனம் இப்படி.
ஆனால் இப்போது நீங்கள் அந்த இடைவெளியை கவனியுங்கள் ஒரு இடைவெளி அதைத்தொடர்ந்து வாகனம் அதைத் தொடர்ந்து மீண்டும் இடைவெளி.
உண்மையில் சாலையில் இருப்பது இடைவெளி மட்டும் தான் வாகனங்கள் குறுக்கே வந்து செல்பவை.

அப்படியே நமது மனதிற்குள் உற்று கவனித்தால் அதன் இயல்பும் வெற்று வெளி தான்.
சிந்தனை என்பது குறுக்கே வந்து செல்லும் வாகனங்களை போன்றது தான்.
ஆனால் தொடர்ச்சியான சிந்தனையால் மனம் நிரம்பி இருப்பதால் மனதின் இயல்பு சிந்தனை என்பதைப் போல நமக்குத் தெரிகிறது.
உண்மையில் மனம் என்பது ஒன்று இல்லை. இருப்பது சிந்தனைகளின் தொடர்ச்சி தான் பல சிந்தனைகளின் தொடர் ஓட்டம் காரணமாக அங்கே தொடர்ச்சியாக எதோ இருப்பதை போல தெரிகிறது.
வேகமாக சுற்றும் காற்றாடி பார்க்க ஒரு வட்டு போல தெரிவதை போல்.

தியானம் என்பது வேறொன்றுமல்ல விழிப்பு நிலை தான்.
நீங்கள் எத்தனை சதம் விழிப்போடு இருக்கிறீர்களோ... அத்தனை சதம் மனம் குறைந்து காணப்படுவீர்கள்.
நீங்கள் பத்து சதம் விழிப்போடு இருந்தால் 90 சதம் மனம் இருக்கிறது. நீங்கள் 90 சதம்  விழிப்போடு இருந்தால் 10 சதம் மனம் இருக்கிறது .
100 சதம் விழிப்போடு இருக்க முடிந்தால் அங்கே மனம் இருப்பதில்லை அதுவே தியான நிலை.

நீங்கள் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அது சாதாரணமான வேலையாக இருக்கலாம் நீங்கள் சாப்பிடுவது குளிப்பது நடப்பது இப்படி இவை எல்லாவற்றையும் முழு கவனத்தோடு ஈடுபாட்டோடு அந்த செயலை செய்தால் அந்த செயல் தான் தியானம்.

தியானம் ஏன் செய்ய வேண்டும் ?

தியானம் தான் உங்களுக்கு உள்ளே இருக்கும் உண்மை நிலையை வெளிக்காட்டுகிறது.
 உங்களது உண்மையான சுயத்திலிருந்து நீங்கள் எவ்வளவுதூரம் வெளிவந்த இருக்கிறீர்கள் என்பதை தியானத்தின் மூலம் தான் புரிந்து கொள்ள முடியும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்களையே நீங்கள் உணர்வதுதான் ....

"தியானம்"


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!



         தமிழால் இணைவோம் !!!
           அறிவால் உயர்வோம் !!!
                    தமிழ் வாழ்க !!!
    அறிவியலின் தேடல் தொடரும்.
              " வலியே வலிமை "
        -ய்யனார் (வால்வரின்)..

Saturday, 28 July 2018

பெண்களின் காதல் ஆண்களின் காதலை விட அழகு....





பெண்களின் காதல்
ஆண்களின் காதலை விட
அழகு....

அவன் கைகோர்த்து நடக்க
மடி சாய்ந்து உறங்க
தோள் சாய்ந்து அமர
மனம் திறந்து பேச
இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்
அவன் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து
அவனை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகு

ஒரு வார்த்தை பேச மாட்டாளா
என்று ஏங்கிய அவனுக்கு பிறகு அவனை
பேசி பேசியே கொல்லும் போது
பெண்களின் காதல் அழகு

தங்கம் வைரம் அம்மு செல்லம்
என்று குழந்தையென கொஞ்ச சொல்லி
கெஞ்சும் போதும் பின்னர் அவனை செல்லமாய்
குழந்தையாய் கொஞ்சும் போது
பெண்களின் காதல் அழகு...

தலை வலியென சிறிய பொய்
சொன்னாலும் நம்பி
கண்ணீர் சிந்தி அவனை
காதல் மழையில் நனைய வைக்கும் போது
பெண்களின் காதல் அழகு...


ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்து விட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு அவனை
தவிக்க விடும் போது
பெண்களின் காதல் அழகு...

யாரேனும் அவனை தவறாக பேசும் போது
அங்கே பேசாமல் இருந்து விட்டு
பின்னர் அவனை திட்டி தீர்க்கும் போது
பெண்களின் காதல் அழகு.....

யார் கூடவும் பகிர்ந்து கொள்ள முடியாத
விசயங்களை அவனோடு மட்டும் பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகு....

அவன் முதல் முறை காதலை சொல்லும் போது
முறைத்து பார்த்து விட்டு
பின்னர் அவனை காதல் கண்கள் கொண்டு
தாக்கும் போது பெண்களின் காதல் அழகு....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எறியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எறியும் போதும் பெண்களின் காதல் அழகு
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது பெண்கள் தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில்
ஆண்களின் காதல் தோல்வியை
காட்டி கொடுக்கும் தாடியும் பீடியும்

ஆனால் பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்....

காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை
பெண்களின் காதலை
ஒரு போதும் ஒப்பிட முடியாது
ஆண்களின் காதலோடு......

             " வலியே வலிமை "
                       -அய்யனார் (வால்வரின்)

செல்வம் குறைவதின் அறிகுறிகள்...!!

செல்வம் குறைவதின் அறிகுறிகள்...!!

1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
7. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது.
8. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
10. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
11. உணவு பொருள்கள் வீணடிப்பது.
12. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
13. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
14. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
15. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது.
16. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
17. வாசலில் செருப்பு துடைப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது...

இவற்றை தவிர்த்தாலே நமது வீட்டில் செல்வம் பெருகி மகாலட்சுமி வாசம் செய்வாள்... 

மகாபாரதம் மர்மம் !!!!! அர்ஜுனன் தன் மகன் கையாலேயே கொல்லப்பட்ட கதை

அர்ஜுனன் தன் மகன் கையாலேயே கொல்லப்பட்ட கதை !!!


மகாபாரத போரில் பாண்டவர்கள் பெற்றது இராஜ்ஜியமாய் இருந்தாலும், இழந்தது ஏராளம், ஐந்து புதல்வர்கள், அன்பு மகன் அபிமன்யு, மூத்த சகோதரன் கர்ணன், பிதாமகர் பீஷ்மர் என பாண்டவர்களின் இழப்புகள் நீண்டுகொண்டே செல்லும். இதில் கர்ணன் இறந்த பிறகுதான் அவர் தங்களின் அண்ணன் என்பதை அறிந்து வருந்தினர். தன் ஆருயிர் நண்பன் கர்ணன் தன் எதிரிகளுடைய சகோதரன் என்பதை அறிந்து துரியோதனன் அதிர்ச்சி அடைந்தாலும் தன் நண்பனின் மரணத்தை நினைத்து அழுது துடித்தான்.




மகாபாரதத்தில் கர்ணனின் இழப்பு பாண்டவர்கள், கௌரவரக்ள் இருவரையுமே நிலைகுலைய செய்தது. கர்ணனின் இறப்பிற்கு பின் அவருடைய மனைவி மற்றும் மகன்கள் என்ன ஆனார்கள் என்பது பலரும் அறியாத ஒன்று. கர்ணனுக்கு மொத்தம் பத்து புதல்வர்கள் இருந்தார்கள் ஆனால் அதில் ஒருவரை தவிர மீதி அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த அந்த ஒரு புதல்வன் அர்ஜுனனால் வளர்க்கப்பட்டு இறுதியில் அர்ஜுனனின் மற்றொரு மகன் கையாலேயே கொல்லப்பட்டார்.



கர்ணன்

பாண்டவர்களுக்கு மூத்தவராய் இருந்தும் இறுதிவரை தன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமலேயே உயிரைவிட்டார் கர்ணன். பீஷ்மர் இருக்கும் வரை போர்க்களம் புகமாட்டேன் என சபதம் புரிந்த கர்ணன் பீஷ்மரின் மறைவுக்கு பின் களம் புகுந்து தன் வீரத்தால் பாண்டவ சேனைகளை துவம்சம் செய்தார். பாண்டவர்களில் அர்ஜுனனை தவிர ஏனைய பாண்டவர்களை எளிதில் வென்றாலும் தன் தாய் குந்திக்கு கொடுத்த வாக்கின் காரணமாய் அவர்கள் யாரையும் வதைக்காமல் விட்டுவிட்டார்.



கர்ணனின் மரணம்

போரின் பதினேழாம் நாள் அர்ஜுனனும், கர்ணனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரிட்டனர். இருப்பினும் பரசுராமரின் சாபம், சல்லியனின் துரோகம், கிருஷ்ணரின் சாதுரியம், அர்ஜுனனின் அஸ்திரம் என அனைத்தும் சேர்ந்து மாவீரன் கர்ணனை மண்ணில் சாய்த்தது. தாங்கள் சாய்த்தது தங்களுடைய சகோதரனை என அறிந்த பாண்டவர்கள் தங்களின் புரிந்தது மாபெரும் பாவம் என்பதை அறிந்தனர். கர்ணனின் பிறப்பு இரகசியத்தை முன்னரே கூறாத தங்கள் தாய் குந்தியின் மீது கோபம் கொண்டனர், இனி பெண் இனத்தால் இரகசியத்தை பாதுகாக்க முடியாமல் போகட்டும் என சாபம் அளித்தார் தர்மன்.




கர்ணனின் குடும்பம்

கர்ணன் விருஷாலி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். பின்னர் துரியோதனனின் வேண்டுகோளுக்கிணங்க சுப்ரியா என்னும் பெண்ணை திருமணம் முடித்தார். சுப்ரியா துரியோதனன் மனைவி பானுமதியின் நெருங்கிய தோழி ஆவார். கர்ணனுக்கு விருஷாலி மூலம் பத்து மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர்கள் முறையே விரிஷேசன், சுதாமா, விரிஷகேது, சித்ரசேனா, சத்யசேனா, சுசேனா, சத்ருஞ்சய, திவிபாதா, பனசேனா மற்றும் பிரசேனா. குருசேத்திர போரில் விரிஷகேதுவை தவிர மீதி அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டர்கள்.




போருக்குப்பின்

போருக்கு பின் விரிஷகேது தன் சிறிய தந்தைகளான பாண்டவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கினான். கர்ணனை தன் கையால் கொன்றதால் என்னவோ அர்ஜுனன் விரிஷகேது மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான். சொல்லப்போனால் அபிமன்யுவின் இடத்தை விரிஷகேது நிரப்பினான். அர்ஜுனனே தன் தமையனின் மகனுக்கு ஆசானாய் இருந்து வில்வித்தையை கற்றுக்கொடுத்தான். விரிஷகேதுவும் தன் தந்தை கர்ணனை போலவே வில்வித்தையில் சிறந்து விளங்கினான். மேலும் கிருஷ்ணர் விரிஷகேது மீது அதிக அன்பு பாராட்டினார்.




போரில் விரிஷகேது

அர்ஜுனனுடன் சேர்ந்து விரிஷகேது பல போர்களில் பங்கு கொண்டு தன் வீரத்தை சிறப்பாய் வெளிப்படுத்தினான். மேலும் போரில் வெற்றிக்கொண்டு யவனத்தின் இளவரசியை விரிஷகேதுவிற்கு மணம் முடித்தான். பல நாடுகளை வெற்றிகொண்ட அர்ஜுனனும் விரிஷகேதுவும் இறுதியில் நாகா உலகத்திற்கு சென்றனர்.




அர்ஜுனன் மற்றும் விரிஷகேது மரணம்

அர்ஜுனனும், விரிஷகேதுவும் நாக உலகத்தை சென்று போர் புரிய விரும்பினர். அங்கு இரவான் என்ற வீரன் இவர்களை போருக்கு அழைத்தான். தன் எதிரே இருப்பது தன் மகன் என்பதை அறியாத அர்ஜுனன் அவனின் சவாலை ஏற்றுக்கொண்டு விரிஷகேதுவு இணைந்து போர்புரிய தொடங்கினான். போரில் இரவானின் கையே ஓங்கியது. வில்லாற்றலில் அவன் அர்ஜுனனையும் மிஞ்சியவனாக இருந்தான். ஏனெனில் அவன் அர்ஜுனன் மற்றும் நாக உலக இளவரசி உலூபி க்கு பிறந்தவனாயிற்றே. போரின் இறுதியில் அர்ஜுனனும், விரிஷகேதுவும் இரவானால் கொல்லப்பட்டனர்.




அர்ஜுனனின் மறுபிறப்பு

தன் மகன் புரிந்த செயல் கண்டு அதிர்ச்சியடைந்த உலூபி தன் சக்தி மூலம் அதிசய நாகமணியை கொண்டுவந்தார். ஆனால் அதனை வைத்து ஒருவரைத்தான் உயிருடன் கொண்டு வரமுடியும் என்பதால் கிருஷ்ணருடைய ஆலோசனை பேரில் அர்ஜுனனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார். விரிஷகேது வீரமரணம் அடைந்து வீரசொர்க்கம் சென்றடைந்தான். தன் மரணத்திற்கு பிறகு விரிஷகேதுவிற்கு முடிசூட்ட நினைத்திருந்தார் யுதிஷ்டிரன் ஆனால் காலம் அர்ஜுனனுடைய மகன் கையாலேயே கர்ணனுடைய மகனின் உயிரை பறித்துவிட்டது.


    தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 19 July 2018

விமான கருப்புப் பெட்டி பற்றி அறியாதவை !!!

விமான கருப்புப் பெட்டி (Black box/flight recorder):-

✈✈✈✈✈✈✈✈✈




✈விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும்.

விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும்.

நிறம்:-

இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது "செம்மஞ்சள் நிறத்தில்" காணப்படும்.

அமைவிடம்:-

விமானத்தின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும்.

கருப்புப் பெட்டியில் இரு பகுதிகள்:-

✈ விமானியறை குரல் பதிவி:-

இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.

✈விமான தரவு பதிவி:-

விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும்.

கருப்புப்பெட்டியின் சிறப்புகள்:-

டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இது புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 0 C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது.

விமானம் விபத்துக்குள்ளானால் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சைகைகள் வரும்.

இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டது.

தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.


கறுப்புப் பெட்டியின் தன்மை:-

✈செம்மஞ்சள் நிறத்தில் (orange) காணப்படும்.

✈தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.

✈உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.

✈கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.

✈ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது.

✈எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.

✈வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.

கறுப்புப் பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள்:-

✈கறுப்புப் பெட்டியின் ஒரு பகுதியான விமானியறை குரல் பதிவி(Cockpit Voice Rocorder), விமான ஒட்டியின் அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும்.

✈கறுப்புப் பெட்டியின் மற்றைய பகுதியான விமான தரவு பதிவி (Flight Data Recorder), விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல் முதலிய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும்.

மாற்றம் தேவை:-

✈நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
✈✈✈✈✈✈✈✈✈

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 14 July 2018

தமிழ் மக்கள் இயற்கையின் பெரும்சக்தி.


தமிழ் மக்கள் இயற்கையின் பெரும்சக்தி.
உலகில் முதல் முறையாக நாட்டின் பிரதமரான ஒரு தமிழர்
இந்த இணைப்பில் செல்க !!!!
https://drive.google.com/file/d/1NOb24WzwS7EMOlbHvAboI6d677n3kuOY/view?usp=drivesdk

Sunday, 8 July 2018

இஸ்லாமிய மெக்காவில் உள்ள 5000-ஆண்டுகளாக நீா் வற்றாத ஜம் ஜம் என்ற அதிசய கிணறு !!!!

இஸ்லாமிய மெக்காவில் உள்ள
5000-ஆண்டுகளாக நீா் வற்றாத ஜம் ஜம் என்ற அதிசய கிணறு !!!!


ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை அதிர்ச்சியில் விஞ்ஞானிகள். 5 ஆயிரம் வருடம் பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மக்காவிற்கு உலகின் பலதேசங்களில் இருந்து புனித பயணம் வரும் முஸ்லிம்கள் இந்த கிணற்றுநீரை ஒரு நபர் குறைந்தது 20 லிட்டராவது தனது நாட்டிற்கு எடுத்து கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.


‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம். சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பிய மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினர். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவீன ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது.

ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு சுமார் 8000 லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்தக் கிணற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது.


நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’ கிணற்றிலிருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தபோதும் இதன் அளவு குறைவதில்லை.

சுவையும் மாறியதில்லை. ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குறைந்த ஆழம் உள்ள இந்தக்கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ளது, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும். எந்த ஊற்றாக இருந்தாலும் சில, பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.


ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும். ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை. எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.

ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது.

கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளைஅழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது,

 இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை, நிருபிக்கப்படாத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.


ஆனால் தினசரி 20லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

குறிப்பு: மற்ற தண்ணீர் பிடித்து வைத்தால் சில நாள்களில் கிருமிகள் தென்படும். ஆனால் அல்லாஹ்வின் அற்புதத்தால் கிடைத்த ஜம்ஜம் தண்ணீர் எத்தனை வருடம் பிடித்து வைத்தாலூம் கெடுவதில்லை இதுவும் ஓர் அதிசயம்தான்..

ஜம்ஜம் நீர் பற்றிய அதிசய தகவல்...!

ஆழம் : 30 மீட்டர் வீதி 11.08. ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர். பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள். ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்...!

சோடியம் – 133.00ml, கால்சியம் – 096.00ml, மேக்கனிசியம் – 038.80ml, புளோரைட் -000-77ml, பொட்டாசியம் – 043.03ml, நைட்ரேட் – 124.08ml, டைகார்ப்நெட் – 124.00ml, சல்ஃபேட் – 124.00ml .

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

தரையிலிருந்து 500 அடிக்கு மேலே கட்டமைக்கபட்ட விசித்திரமான நீச்சல் குளம்



@காணொளி

தரையிலிருந்து
500 அடிக்கு மேலே
கட்டமைக்கபட்ட
விசித்திரமான
நீச்சல் குளம்

       தமிழால் இணைவோம் !!!
          அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Saturday, 7 July 2018

பாகிஸ்தானின் *பசுமை தங்கம்* (GREEN GOLD) திட்டம்!


@காணொளி !!!!


பாகிஸ்தானின்
*பசுமை தங்கம்*
(GREEN GOLD) திட்டம்!!!

பில்லியனுக்கும்
அதிகமான மரங்களை
வளர்த்து
இயற்கை சீற்றங்களை
தவிர்க்க உதவும் திட்டம்!...


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 6 July 2018

கட்டிட வல்லுனர்களின் கலை நுணுக்கம் !!! எளிதில் உருவாகும் வீட்டின் சுவர் !!!


@ காணொளி !!!!!

அற்புதமான கலை நுணுக்கம்.
கட்டிட கலை
வல்லுனர் உருவாக்கிய
வீட்டில் உள்ள சுவர்களை எளிதில் உருவாக்கும்
விஞ்ஞான தொழில்நுட்பம்  !!!!!

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

படித்து முடித்த செய்தித்தாள்களையே உரமாகவும் , விதையாகவும் , மலர வைக்கும் விஞ்ஞான தொழில்நுட்பம்



@காணொளி 


ஜப்பானியர்களின்
அற்புத
தயாரிப்பு
படித்து முடித்த
செய்தி தாள்களையே
உரமாகவும் ,
விதையாகவும் ,
மலர வைக்கும் விஞ்ஞான தொழில்நுட்பம் !!!!

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

அறிவியல் புதிர் அறிவோம் 12


சூடு தண்ணீர் ஆற்றிய அனுபவம் அனைவருக்கும் உண்டு..
சில நேரம் பச்சை தண்ணீரை கைகுவளை அதாவது ( தம்ளர் )  ஊற்றி இருப்பீர்கள் ஆனால் ஊற்றும் ஒலியை நுணுக்கமாக என்றாவது கவனித்தது உண்டா ??

சூடு தண்ணீர் ஊற்றும் சத்தமும் குளிர்ந்த நீர் ஊற்றும் சப்தமும் ஒன்று அல்ல.

இரண்டிற்கும் அடர்த்தி வேறாக இருப்பதால் அவைகளின் ஊற்றும் ஒலியில் வித்யாசம் உள்ளது.
சூடு நீர் கொஞ்சம் "லோ பிச்"
என்று ஒலிக்கும்.


இந்த பதிவுகளை வழங்கிய எனது அன்பு தோழர் திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 3 July 2018

விண்வெளியில் இருந்து பூமி மீது விழும் விண்கற்களை திசை திருப்பவும் , நொறுக்கவும் ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு !!!

விண்வெளியில் இருந்து பூமி மீது விழும்  விண்கற்களை திசை திருப்பவும் , நொறுக்கவும் ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஆனால் இப்போது, ​​அணு தொழில்நுட்பம் ஒரே வழியாக உள்ளது. 


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இரு நாடுகளிடையே நியுக்ளியர் ஆயுதம் கொண்டு போர் வந்தால் இந்த உலகம் சந்திக்கும் விளைவுகள் விளக்கும் காணொளி !!!

இரு நாடுகளிடையே நியுக்ளியர் ஆயுதம் கொண்டு போர் வந்தால் இந்த உலகம் சந்திக்கும் விளைவுகள் விளக்கும் காணொளி !!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Monday, 2 July 2018

இனி மொபைல் கீழே விழுந்தால் பதற வேண்டாம்... வருகிறது மொபைலுக்கு ``ஏர்பேக்"!


இதுவரை காண அற்புதமான தொழில்நுட்ப கருவியாக இந்த ஏர்பேக் இருக்கும்.

இனி மொபைல் கீழே விழுந்தால் பதற வேண்டாம்... வருகிறது மொபைலுக்கு ``ஏர்பேக்"!
கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

        தமிழால் இணைவோம் !!!

         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 1 July 2018

இனி நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் இருந்த இடத்தில் இருந்தே பதிலை பெறும் கருவியை கூகிள் அறிமுகபடுத்தியுள்ளது.


@ காணொளி !!!! 
இனி நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் இருந்த இடத்தில் இருந்தே பதிலை பெறும் கருவியை கூகிள் அறிமுகபடுத்தியுள்ளது. இந்த டெக்னாலஜி தற்போழுது உலக சந்தையில்...


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

நாம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் நேரில் பேசுவது போன்ற பிம்பத்தை தோற்வைக்கும் டெக்னாலஜி



@ காணொளி !!!

இனி நாம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் நேரில் பேசுவது போன்ற பிம்பத்தை தோற்வைக்கும் டெக்னாலஜி விரைவில் உலக சந்தையில்...

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

அறிவியல் புதிர் அறிவோம் 11 . காமா கதிர்களும் ரேடியோ அலைகளும் சுவரை ஊடுருவும் போது ஏன் சாதாரண ஒளிகளால் ஊடுருவ முடிவது இல்லை.

காமா கதிர்களும் ரேடியோ அலைகளும் சுவரை ஊடுருவும் போது ஏன் சாதாரண ஒளிகளால் ஊடுருவ முடிவது இல்லை.



ஒரு சின்ன எடுத்துக்காட்டு ஒரு மழை பெய்கிறது அதில் ஒரு கொசு ஒரு சிறுவன் இருவரும் மழையை கடக்க முயற்சி செய்கிறார்கள் இப்போது என்ன ஆகும் ? அந்த சிறுவன் மழையை எளிதாக கடந்து செல்ல முடியும் காரணம் அவன் அளவில் பெரியவன் என்பதால் மழையால் பாதிக்க பட மாட்டான்.
ஆனால் கொசு கிட்ட தட்ட மழை துளி வடிவில் இருப்பதால் அதில் அடி பட்டு விழுந்து விடும்.
இதே போல ஒரு வேளை அந்த கொசு ஒரு அணு அளவில் இருந்தால் ?
அப்போது அந்த மழை துளி இடைவெளியில் அதனால் எளிதாக கடந்து செல்ல முடியும் அல்லவா ?

அப்படி தான்.. ஒரு சுவரில் உள்ள அணு அமைப்பிற்கு கிட்ட தட்ட சமமான அளவில் அலை நீளத்தை கொண்டுள்ள ஒளியின் அலைகள் சுவரால் தடுத்து நிறுத்த படுகின்றன.
ஆனால் காமா அலைகள் சுவரின் அணு அமைப்பை விட மிகசிரியவை எனவே எளிதில் கடந்து செல்கின்றன.
அதே போல ரேடியோ அலைகள் சுவரின் அணு அமைப்பை விட மிக பெரியவை எனவே அவற்றால் தடுத்து நிறுத்த முடியாமல் அவற்றை கடந்து செல்ல அனுமதிக்கினறன.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

விண்வெளி ஆடை இல்லாமல் ஆகாயத்தில் இருந்தால் என்ன நிகழும் !!!!


விண்வெளி ஆடை இல்லாமல் ஆகாயத்தில் இருந்தால் என்ன நிகழும் !!!!



விண்வெளி உடை இல்லாமல் விண்வெளி வீரர்கள் விண்வெளி சென்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?
அல்லது விண்வெளி சென்ற பின் அங்கே விண்வெளி உடை இல்லாமல் கழட்ட பட்டு ஒருவனை (ஒரு பேச்சுக்கு..) அந்தரத்தில் விட பட்டால்??

பாவம் ஆக்சிஜன் இல்லாமல் கஷ்ட பட்டு  துடி துடித்து இறந்து போவான். என்கிறீர்களா?
 நீங்கள் சொல்வது உன்மை தான் என்ற போதிலும் ஏற்படும் விளைவு இன்னும் வேறு விதமாக மிக பயங்கரமானது.

ஒரு "Space suit  " விண்வெளி உடை என்பது உலகின் மிக விலை  உயர்ந்த உடை ஆகும். அதன் விலை கிட்ட தட்ட 5 கோடி ரூபாய். அதன் எடை கிட்ட தட்ட 100 கிலோ அல்லது 200 கிலோ.
அந்த எடையை ஒருவன் அணிந்து கொண்டு பூமியில் அசைய கூட முடியாது ஆனால் நிலா போன்ற நம்மை விட ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும் இடத்திலோ அல்லது ஈர்ப்பு விசையை சுத்தமாக இல்லாத விண்வெளி போன்ற இடத்திலோ இந்த எடை அவனை எளிதாக இயங்க வைக்க இன்றி அமையாதது.
மேலும் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கும் தொட்டியும் இணைக்க பட்டிருப்பது அந்த உடையுடன் தான் என்பதால் அந்த உடை இல்லாமல் அவனால் சுவாசிக்க முடியாது.

சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை என்பது சிறிய பாதிப்பு தான். காரணம் அந்த உடை இல்லாமல் விட பட்டால் வேறு பல பாதிப்புகள் ஏற்படும் அதுவும் வினாடி நேரத்தில். அது என்ன என்ன என்பதை இப்போது பாப்போம்.

குறிப்பாக பரிசோதனைகாக உடையை துறக்க போகும் அந்த நபர் தண்ணீரில் குதிக்கும் முன் மூச்சை நன்கு இழுத்து பிடித்து கொள்வதை போல இழுத்து பிடித்து கொண்டு இருப்பானேயானால் அபாயம் இருமடங்கு வீரியத்தோடு அவனை தாக்கும்.
காரணம் விண்வெளியில் விட படும் மனிதன் உடலில் உள்ள காற்று துளிகளை விண்வெளியில் உள்ள வெற்றிடம் இழுக்க பார்க்கும் என்பதால் அவன் உடல் நாலா பக்கமும் இழுக்க படும் ரப்பர் பந்து போல இழுக்க படுவான்.

அதனால் நுரையீரலில் ஏற்கனவே அவன் காற்றை நிரப்பி வைத்திருந்தால்
அது அவன் உடலில் இருந்து உறிஞ்சி இழுக்க படும் அதே சமயம் உடலில் ரத்தத்தில் கலந்துள்ள ஆக்சிஜனும் இழுக்க படுவதால் ஒரு ஊத படும் பலூனை போல மனித உடல் வீங்க தொடங்கும்.
நமது தோல் ஒரு இழுவை திறன் கொண்ட ரப்பர் போன்றது தான் என்பதால் வெடித்து சிதறும் அபாய இன்றி நன்கு ஊதி விரியும்.

எதிரி கையில் சிக்கினால் buffer fish என்ற மீன் வகை காற்றை உள்ளே இழுத்து பந்து போல ஊதி கொள்வதை
பார்த்து இருப்பீர்கள் . கிட்ட தட்ட அப்படி தான் அந்த மனிதன் ஊதி போவான்.

அடுத்ததாக கண்ணுக்கு தெரியும் படி ஏதாவது ஈரப்பதம் அல்லது நீர் பகுதி எது இருந்தாலும் அது ஆவி ஆக தொடங்கும் . என்பதால். கண் மற்றும் நாக்கு வாய் போன்ற ஈர பதமுள்ள உடல் பாகங்கள் கொதிக்க தொடங்கும்.

இந்நேரத்துக்கு  நுரையீரலில் காற்று இல்லாததால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடை செய்ய பட்டு விடும் என்பதால் வெறும் 15 வினாடிகளில் நாம் மயங்கி விட்டு இருப்போம்.

அப்புறம் உடலில் எங்கேயும் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 90 வினாடியில் நாம் மரணத்தை தழுவி இருப்போம்.
அதன் பின் விண்வெளி என்பது ஒரு மிக குளிர் பிரதேசம் என்பதால் பிரிட்ஜ் இல் வைக்க பட்ட கறி துண்டுகளை போல கெட்டியாக நாம் உறைந்து போய் விடுவோம்.

அதன் பின் உடலுக்குள் இருக்கும் பாக்டிரியா அந்த உடலை சிதைக்க தொடங்கும் . ஆனால் அதனாலும் முழுதாக சிதைக்க முடியாது என்பதால் அரை குறையாக சிதைந்த ..குளிரில் கொடூரமாக  விறைத்து போன...அந்த உடல் அப்படியே மிதந்து கொண்டு போக தொடங்கும்.

போகிற வழியில் ஏதேனும் நட்சத்திரம் எதிர் பட்டால் அதில் விழுந்து எரிந்து போகும்.
அப்படி எதுவும் எதிர் பட வில்லை என்றால் அந்த உடல் அப்படியே பல லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு எந்த மாறுதலும் இல்லாமல் ஊர்வலம் போய் கொண்டே இருக்கும்.

எதிர் காலத்தில் வேறு கிரகம் போகிறவனோ அல்லது எங்கவாவது பயணம் போய் கொண்டுருக்கும் ஏலியனோ இந்த' பாடி 'யை கண்டெடுத்தால் தான் உண்டு.

கற்பனைக்கு எட்டாத பல ஆபத்துகளை கொண்டது தான் விண்வெளி என்பதால் தான் , அங்கே சென்று வருபவர்களை நாம் வீரர்கள் என்று அழைக்கின்றோம்.


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..