Pages

Friday, 28 September 2018

அற்புதமான விசில் மொழி.


இந்த அற்புதமான காணொளி காணுங்கள்.
அதிகபடியான கருத்துகளையும் , ரகசியங்களை வெளிபடுத்தும் அற்புதமான விசில் மொழி.
இன்று சில நாடுகளில் இதை குழந்தைகளுக்கு கற்று தருகிறார்கள்.
         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 21 September 2018

ஒரு சின்ன நூலகத்தையே உங்களுக்கு வழங்குகிறேன் !!!!

435 நூல்கள் PDF என்னும் கோப்புகளின் வடிவத்தில் உள்ளது. 

இனி உங்கள் கைகளில் !!!

கீழே உள்ள இணைப்பின் மூலம் சென்றால் ஒவ்வொரு கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் இருக்கிறது. மொத்தம் 435 நூல்கள் தமிழன் தொன்மை நிறைந்த 
நூல்களே !!! 
தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும்.


https://drive.google.com/file/d/1ORPP2JJX7Z1-IB67Zezf3WSfLhJhXlCL/view?usp=drivesdk

    தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

காவியமும் , ஓவியமும் கட்டுரை !!!!

காவியமும் , ஓவியமும் கட்டுரை !!!!
கி.வா.ஜகந்நாதன் அவர்களின் படைப்பு உடைய கோப்பு கீழே உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://sendanywhe.re/7A80WZAJ

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

பல்லவர்கள் காலத்து ஓவியங்கள் !!! பாண்டியர் காலத்து ஓவியங்கள் !!!! பழைய காலத்தின் பொக்கிஷம் !!!

பல்லவர்கள் காலத்து ஓவியங்கள் !!! பாண்டியர் காலத்து ஓவியங்கள் !!!!
பழைய காலத்தின் பொக்கிஷம் !!!
கீழே உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் வசதி இணைப்பு இருக்கிறது.
http://sendanywhe.re/5E0BRWLL

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 20 September 2018

தண்ணீருக்கு உயிர் உள்ளது !!!!! அதற்கும் உணர்வுகள் இருக்கிறது !!!

தண்ணீருக்கு உயிர் உள்ளது !!!!!  அதற்கும் உணர்வுகள் இருக்கிறது !!!


சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, நுண்ணோக்கிகளில் நீர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. வழங்கப்பட்ட முடிவுகள் ஆச்சரியமானவை.
இது ஒரு நம்பகமான கதை அல்லது கதை அல்ல.
ஆனால் உண்மை !!!
காரணம் இது இயற்கை !!!!
பொய்களையும் , செயற்கைகளை எதிர்க்க கூடிய சக்தி தான் இயற்கை !!!!!

தண்ணீர் நம் வார்த்தைகளில் வெளிப்படும் ஒவ்வொரு குரல் ஒலிகளை புரிந்து கொள்கிறது.
அதன் உடைய அமைப்பு அதாவது மூலக்கூறு மாற்றம் காண கூடும் !!!
தண்ணீர் நம்முடைய வார்த்தைகளின் சக்தியை உணர்கிறது.
ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர் மசரு எமோடோ இதை நம்புகிறார். அவருடைய நம்பிக்கைக்கு ஆதாரமுண்டு.

பிரார்த்தனை இல்லாமல் தூய தண்ணீர்.
மூலக்கூறு அமைப்பு சீர்குலைந்துள்ளது.
வேண்டுதல் செய்த பிறகு நீர் மூலக்கூறு.
இது நன்கு அற்புதமான கட்டமைக்கப்பட்ட அமைப்பாக உருவாகிறது.

மெல்லிசை ஒலிக்கு 
பிறகு நீர் மூலக்கூறு.
 கனமாகவும் , உற்சாகவும்
 வெளிப்படுவது  தெரிகிறது.

 சீர்கேடு உள்ள மூலக்கூறு கட்டமைப்பு.
நீர் மூலக்கூறு, பாரம்பரிய ஒலி உபயோகத்திற்கு முன் தோன்றியது.
 நன்றாக கட்டமைக்கப்பட்ட தெரிகிறது.

ஒரு நிமிடம் காத்திருங்கள். நாம் தண்ணீரை உண்டாக்கவில்லை !!!!
ஆனால் நம் உடலில் 72% நீர் உள்ளது.
உங்கள் வார்த்தைகள் உங்கள் சொந்த உடலில் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் அற்புதமான காணொளி !!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 16 September 2018

பொது அறிவு களஞ்சியம்

பொது அறிவு களஞ்சியம்


1. தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.

2. ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

3. துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

4. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

5. ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது.

மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

6. சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

7. ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும்.
அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

8. குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

9. சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை).

பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

10. சுக பிரசவம் அல்லாமல் !!!
தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் .
அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

11. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

12. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

13. நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

14. தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

15. காட்டுக்கு ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் .
ஆனால் அதன ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான்.
 வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.

16. மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

17.  “ லங்கா வீரன் சுத்ரா  ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

18. தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

19. இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

20. காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

21. குளிர் காலத்தில் குயில் கூவாது.

22. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

23. லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

24. கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

25. கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

26. யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து,  அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

27. கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.

28. மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

29. 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

30. ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

31. வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

32. ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

33. தமிழ் நாட்டின் தலைவர் திரு.பெரியார் பொது கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார்.
அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

34. ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

35. தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே , குங் ஃபூ வீரர் ஆனார் – புருஸ்லீ.

36. சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

37. விமானத்தில் இருக்கும்
கருப்பு பெட்டி !!!! ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

38. சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

39. யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

Sunday, 9 September 2018

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் !!!

வெறும்  வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத  உணவுப் பொருட்கள் !!!


1 . சோடா 

இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

2 . தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

3 . மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

4 . ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது.  அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

5 . காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

6 . காபி

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

7 . டீ

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

8 . தயிர் 

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

9 . வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

10 . சர்க்கரைவள்ளிக் கிழங்கு 

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி விடும்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 8 September 2018

மகாபாரதம் மர்மங்கள் !!! கிருஷ்ணருக்கு அர்ஜுனனை விட சகுனியை அதிகம் பிடிக்க காரணம்.

கிருஷ்ணருக்கு அர்ஜுனனை விட சகுனியை அதிகம் பிடிக்க காரணம் !!!


மகாபாரத போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சகுனி. காந்தாரியின் சகோதரனான சகுனி தன் சகோதரிக்கும், தன் குடும்பத்திற்கும் குரு வம்சத்தால் ஏற்பட்ட அவமானத்திற்கும், கொடுமைகளுக்கும் குரு வம்சத்தை அழிக்க எண்ணினார். அதற்காகவே கௌரவர்களுக்கு சிறுவயது முதலே மனதில் தீய எண்ணங்களை வளர்த்து வந்தார். இறுதியில் குருஷேத்திர போரை ஏற்படுத்தி தன் இலட்சியத்தில் வெற்றியும் கண்டார்.

சகுனியை துரியோதனன் மற்றும் கௌரவர்கள் தவிர வேறு யாரும் விரும்பமாட்டார்கள் என்று நாம் அறிவோம். ஆனால் அது உண்மையில்லை. ஏனெனில் கௌரவர்களை விட சகுனி மீது மனதிற்குள் அதிகம் நேசம் வைத்திருந்த ஒருவர் இருந்தார். அவர் வேறுயாருமல்ல நமது வாசுதேவ கிருஷ்ணர்தான். இது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் இருந்த நட்பு மிகவும் இரகசியமானது. கிருஷ்ணர் ஏன் சகுனி மீது அன்பு பாராட்டினார் என்பதை இங்கு பார்க்கலாம்.

துரியோதனன் பற்றி மகாபாரதம் படித்த அனைவருமே நன்கு அறிவோம். மகாபாரத போருக்கு காரணமாக பலர் இருந்தாலும் அதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது துருயோதனனுக்குள் இருந்த கர்வமும், இராஜ்ஜிய ஆசையும்தான். கௌரவரர்களில் மூத்தவரான துரியோதனன் அதர்மியாக இருந்தாலும் மகாவீரன். பலத்தில் பீமனுக்கு இணையானவன், கதாயுதப்போரில் பீமனை விட ஒருபடி மேலே சிறந்தவன் என்று கூட சொல்லலாம். அதற்கு காரணம் துரியோதனனின் குருவாக இருந்த பலராமர்தான். இந்த பலராமர் வேறு யாருமல்ல, பகவான் கிருஷ்ணரின் சகோதரன்தான்.

கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமர்தான் துவாரகையின் மன்னனாக இருந்தார். கிருஷ்ணர் எப்படி திருமாலின் அவதாரமாக பிறந்தாரோ, அதேபோல பலராமர் ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்தார். திருமால் அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுத்த போதெல்லாம் ஆதிசேஷனும் அவருடன் சேர்ந்தே அவதாரம் எடுத்தார். திருமாலின் இராம அவதாரத்தில் இலட்சுமணனாக அவதரித்தது ஆதிசேஷன்தான். பலராமர்தான் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கதாயுத குருவாக இருந்தார். ஆனால் தன் சிறப்பான ஆற்றல் மூலம் அவரின் விருப்ப சீடனாக மாறினான் துரியோதனன்.

தனக்கு விருப்பமான சீடனை தன் சகோதரிக்கு மணம் முடிக்க விரும்பினார் பலராமர். ஆனால் நாராயணனின் முடிவு வேறு மாதிரி அல்லவா இருந்தது. அவர் தான் தங்கையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனை செய்தும் காட்டினார். இதனால் அவமானமடைந்த துரியோதனன் பலராமருடன் கோபித்து கொண்டு சென்றுவிட்டான்.

பாண்டவர்களின் வனவாசம் முடிந்து அவர்கள் தாங்கள் இழந்த இராஜ்ஜியத்தை மீட்க பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தார்கள். ஆனால் சகுனியின் தந்திரமும், துரியோதனின் கர்வமும் இணைந்து பேச்சுவார்த்தை முயற்சிகளை தோல்வியடைய செய்தார்கள். கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைதான். இறுதியில் போர் என முடிவெடுத்த பின் இருபுறமும் படைகளை திரட்ட தொடங்கினர்.

பாண்டவர்கள், கௌரவர்கள் இருவரும் தங்கள் சேனையை பலப்படுத்தும் பொருட்டு தங்கள் நட்பு இராஜ்ஜியங்களிடம் உதவி கேட்க முடிவிசெய்தார்கள். அதன்படி மிகப்பெரிய நாராயணி சேனையை கொண்ட துவாரகையிடம் உதவி கேட்க இருதரப்பினரும் முடிவு செய்தனர். ஆனால் துரியோதனன் மீண்டும் பலராமரிடம் சென்று உதவி கேட்க தயங்கியபோது சகுனி நாம் நாராயணி சேனையை பெறாவிட்டால் அர்ஜுனன் கிருஷ்ணன் மூலமாக எளிதில் படையை பெற்றுவிடுவான் எனக்கூறி அவன் துரியோதனன் மனதை மாற்றினான்.


பல ஆண்டுகளுக்கு பிறகு பலராமரை சந்திக்க செல்வதால் அவரின் மனதை கவரும்படி எதாவது பரிசு கொண்ட செல்ல வேண்டுமென்று விரும்பினான் துரியோதனன். எனவே பல இடங்களில் தேடி எவருக்கும் கிடைக்காத ஒரு மாயக்கண்ணாடியை வரவழைத்தான். அந்த கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால் அந்த கண்ணாடியை பார்த்தால் அதில் நமது முகம் தெரியாது நமக்கு மிகவும் பிடித்த நபர் யாரோ அவர்களின் முகமே தெரியும். அந்த அற்புத மாயக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு தன் குருவான பலராமரை சந்திக்க கிளம்பினான் துரியோதனன்.

துவாரகைக்கு வந்த துரியோதனனையும், சகுனியையும் மனமார வரவேற்றார் பலராமர். ஆனால் அவரின் மனதிற்குள் துரியோதனன் சூதாட்ட மண்டபத்தில் செய்த செயல்களுக்குகாக அவனுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. எனவே அவனை விளையாட்டாக கதை போருக்கு அழைத்தார். துரியோதனனும் அதற்கு ஒப்புக்கொள்ள இருவருக்குள்ளும் யுத்தம் தொடங்கியது. பலராமர் தன் கோபம் தீர துரியோதனனை சண்டையில் துவம்சம் செய்தார். இறுதியாக அவனுக்கு தண்டனை வழங்கிய மனநிறைவோடு அவனை விடுவித்தார்.

சண்டை முடிந்தவுடன் தன் குருவுக்கு தான் கொண்டு வந்திருந்த மாயக்கண்ணாடியை பரிசளித்தான் துரியோதனன். அதன் சிறப்பை அறிந்த பலராமர் மிகவும் மகிழ்ச்சியடைந்து துரியோதனனுக்கு நன்றி கூறினார். அதன் பின் அனைவரும் அந்த கண்ணாடியில் அவரின் முகங்களை பார்த்தனர். அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த நபர்களின் முகமே தெரிந்தது. இறுதியாக கிருஷ்ணர் கண்ணாடியில் முகம் பார்த்தார். அனைவரும் அர்ஜுனனின் முகம்தான் தெரிய போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்க கண்ணாடியில் தெரிந்ததோ சகுனியின் முகம். அதன் காரணம் யாருக்குமே புரியவில்லை, அனைவரும் கண்ணாடியில்தான் பிரச்சினை என்று கூறினார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் மௌனமாய் புன்னகைத்தார். ஏனெனில் அந்த கண்ணாடி காட்டியது உண்மைதான் என்று பகவான் கிருஷ்ணர் மட்டுமே அறிவார்.

இதற்கு காரணம் நாம் எப்பொழுதும் யாரை அதிகம் விரும்புவோம்? நம்முடைய இலட்சியம் நிறைவேற உதவி செய்பவர்களைத்தானே. கிருஷ்ணருடைய அவதாரத்தின் நோக்கமே பூமியில் மக்கள் தொகையை குறைத்து அதர்மத்தை அழிப்பதுதான். அதற்கு உதவி செய்தது யார் என்று பார்த்தால் சகுனிதானே. அப்படி பார்த்தால் அர்ஜுனன் தானே கண்ணாடியில் தெரிந்திருக்க வேண்டும் என உங்கள் மனதிற்குள் கேள்வி எழலாம். ஆனால் அர்ஜுனன் கிருஷ்ணருடைய கருவியாக மட்டுமே இருந்தானே தவிர காரணமாய் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் குருஷேத்திர போருக்கு காரணமாக இருந்து தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற தனக்கே தெரியாமல் பல உதவிகள் செய்த சகுனியின் மீது கிருஷ்ணர் அன்பு பாராட்டியதில் தவறில்லையே.

Friday, 7 September 2018

உடலின் மொழி புரிந்து கொள்வோம்.

உடலின் மொழி புரிந்து கொள்வோம்.


1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்


       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.
உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.


       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 2 September 2018

Perpetual mechine ( நிரந்தர இயந்திரம் ) பற்றி அறிவோம்.

Perpetual_mechine !!!
பற்றி தெரியுமா ????
பெட்ரோல் இல்லாமல் இருசக்கர வண்டி உருவாக்க ஒரு இயந்திர வியூகம்.
 இந்த இயந்திரம் இயங்குவது
ஏன் சாத்தியம் இல்லை !!!!!



"Perpetual மெஷின் "
என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு எளிமையாக ஒன்றை சொல்கிறேன்.

 உங்களிடம் ஒரு இரு சக்கர வண்டி உள்ளது .
அதற்கு பெட்ரோல் போடாமல் நீங்கள் அந்த இரு சக்கர வண்டியை
 தொடர்ச்சியாகக் ஓட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்று சொன்னால் அது முடியுமா ?

" அதன்படி சாத்தியம் இரு சக்கர வண்டி
இயங்குவதற்கு அதற்கு ஆற்றலைக் கொடுக்க வேண்டும்.
அல்லவா அதற்கு பெட்ரோல் போட்டாக வேண்டுமே " என்று நீங்கள் கேட்பீர்கள்.

சரி இப்பொழுது இதை கவனியுங்கள் !!!
உங்கள் இரு சக்கர வண்டியின் மின்விளக்கு எரிய வைக்க மின்கலம் உள்ளது.

 என்றும் அந்த மின்கலம் !!!!
நீங்கள் இரு சக்கர வண்டி
 ஓட்டும்போது சார்ஜ் ஆகிறது 
என்றும் நீங்கள் அறிவீர்கள் .

 ( நீண்ட  நாள் ஒட்டாமல் வைத்தால் பேட்டரி !!!
இறங்கி போவதை பார்த்து
இருக்கலாம். )

உங்களிடம் நான் இப்போது இப்படி சொல்கிறேன் ..
பெட்ரோலில் ஓடும் இரு சக்கரவண்டி
 பதிலாக !!!!
 ஒரு பேட்டரி ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளுங்கள் .
அந்த ஸ்கூட்டருக்கு ஆரம்பத்தில் மட்டும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து கொடுத்து விடுகிறேன்.
அதன் பின் அதை ஓட்டி ஓட்டி சார்ஜ் செய்து அந்த சார்ஜ்லேயே ஓட்டி கொள்ளுங்கள்..

சார்ஜ் இறங்கினால் மீண்டும் ஓட்டி சார்ஜ் ஏற்றி கொள்ளுங்கள்..
என்று சொன்னால் அந்த பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்யாமல் உங்களால் தொடர்ச்சியாக பைக்கை ஓட்ட முடியுமா?

 அதாவது அந்த ஸ்கூட்டர் இயங்குவதற்கான பேட்டரி ஆற்றலை தானே !!!
உண்டாக்கி கொள்ள வேண்டும்..

இப்படி ஏதாவது ஒரு இயந்திரம் தனக்குள் உண்டாகும் ஆற்றலை வைத்து தானே இயங்கி கொள்ள முடியும் என்றால்...
அதன் பெயர் தான்
"Perpetual  mechine "

அப்படி தன்னைத் தானே இயக்கி கொண்டது போக !!!
ஒரே ஒரு மில்லி வோல்ட் அளவு ஆற்றலை வெளியே கொடுக்க முடியும் ,
என்றாலும் !!!
அந்த கருவியைக் கொண்டு உலகத்தையே மாற்ற முடியும்.

சரி ஏன் இப்படி ஒரு கருவி சாத்தியமில்லையா?

இதை யாரும் பரிசோதித்துப் பார்த்தது இல்லையா?

பாஸ்கரா (Bhāskara, 600 – 680)
கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவில் உள்ள தமிழகத்தின் வானியலாளர் ஆவார்.
(12ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் பாஸ்கராவுடன் முரண்படாதிருக்க இவர் முதலாம் பாஸ்கரா என அழைக்கப்படுகிறார்). முதன் முதலில் இடமதிப்பில் எண்களைக் குறிப்பிட்டது பாஸ்கரா ஆவார்.
முதன் முதலில் சுழியத்தைக் குறிக்க சிறிய வட்டம்  வரைந்து இப்போது நாம் பயன்படுத்தும் இந்திய-அராபிக் எண்  முறையை தொடங்கி வைத்தவர்.

 பாஸ்காரா என்று ஒரு கணித மேதை ஒரு ஓவியத்தை வரைந்து காட்டினார்.. அது ஒரு சக்கர அமைப்பு.
பார்க்க சாதாரண சைக்கிள் சக்கரம் போல தான் !!!!

 ஆனால் !!!
 நேரான கம்பிகளுக்கு பதிலாக வளைந்த பட்டைகள் ..
பிறகு அதில் வெளியே வராமல் இருக்கும் படி ஊற்ற பட்ட பாதரசம்.
இந்த அமைப்பை வரைந்து காட்டிவிட்டு,

 "இதில் ஒரு பக்கத்தில் இருந்து பாதரசம் எடை அதிகமாகி சக்கரம் சுற்றும்
பிறகு !!!
அடுத்த பட்டையில் உள்ள பாதரசம் இறங்கும் .

இப்படி ஒவ்வொரு சுழற்சிக்கும்  !!எப்பவுமே இது ஒரு பக்கம் எடை கூட்டி கொண்டே  இருக்கும் என்பதால் இந்த சக்கரம் தொடர்ந்து சுற்றும் "என்றார் .

டிசைனை பார்த்த போது !!!!
சுற்றும் போல தான் இருந்தது .
ஆனால் அதை செய்து பார்த்த போது ஒருபக்கம் மட்டும் எடை
அதிகரிப்பதால் !!!!

அந்த கருவியின் ஈர்ப்பு மைய புள்ளி !!!சற்று விலகி சக்கரம் சுற்றுவது நின்று விட்டது.

அவரைத் தொடர்ந்து அந்த டிசைனில் கொஞ்சம் மாற்றம் செய்தால் !!!
 இது நிச்சயம் வேலை செய்யும் என்று நம்பிய சிலர் .

அதில் பாதரசத்திற்கு பதிலாக இரும்பு குண்டை சேர்த்து பார்த்தார்கள் !!!

அப்போதும் அது வேளை செய்யவில்லை.
பிறகு சின்ன பெண்டுலம் மாதிரி ஒரு கம்பியில் முனையில் இரும்பு பந்து ஒட்ட வைத்து பார்த்தார்கள்.
 அப்போதும் அது வேலை செய்ய வில்லை.
 அதன் பின் அவர்கள் சக்கரத்தை பிரித்து தங்கள் குழந்தைக்கு விளையாட கொடுத்துவிட்டு வேறு வேலை பார்க்க போய் விட்டார்கள்.

பிறகு 17 ஆம் நூற்றாண்டில் ராபர்ட் பாயல் என்பவர் ஆஹா அப்படி ஒரு கருவியை கண்டு பிடித்து விட்டேன் என்றார்.

அவர் இந்த சக்கரத்தை எல்லாம் பயன்படுத்தவில்லை மாறாக எளிமையாக ஒரு கிண்ணத்தில் நீரை ஊற்றினார்.
அதன் அடிப்பகுதியில் ஒரு குழாய் இணைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழாய் நீண்ட வால் போல வளைந்து மீண்டும் அந்தக் கிண்ணத்தில் வந்து ஊற்றுவது போல அமைத்திருந்தார்.
அந்த குழாய் கேபிளரி ஆக்ஸன் மூலம் அதாவது மரங்கள் நீரை சவூடு கடத்தல் செய்து மேல் ஏற்றுவது போல ஏற்றும் ஒரு விசேஷ பொருளால் செய்யப்பட்ட குழாய்..
எனவே அந்த கிண்ணத்தில் நீரை ஊற்றி வைத்துவிட்டால் !!!
அந்தக் கிண்ணம் தொடர்ச்சியாக தனக்குத்தானே நீரை ஊற்றி கொண்டே இருக்கும்.

நடைமுறையில் இதை செய்து பார்த்த போது புவி ஈர்ப்பை மீறி குழாயில் நீரை ஏற்றும் !!!!
அதே கேபிளரி ஆக்ஷன் குழாயின் நீரை கிண்ணம் வரை கொண்டு போய் ஊற்றாமல் இழுத்து பிடித்து கொள்கிறது என்பதை கண்டார்கள்.

எனவே robert boyel களைப்படைந்து  தொண்டை வற்றி போய் அந்த கிண்ணத்தின் நீரை எடுத்து குடித்து விட்டு மூடி வைத்து விட்டார்.

அதன்பின் வேறு ஒருவர் வேறு ஒரு டிசைன்.....

இம்முறை குழந்தைகள் பார்க்கில் சறுக்கி விளையாடும் சரிவு அமைப்பு மாதிரியான !!!
ஒரு குட்டி அமைப்பு அதன் மேல் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த காந்தம் வைக்கப்பட்டிருக்கும்.
இப்போது சரிவின் கீழ்ப்பகுதியில் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அது காந்தத்தால் கவரப்படுவது சரிவில் மேல் நோக்கி ஏறும் .
ஆனால் அது மேலே போய் சேரும் இடத்தில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள்.
அந்த ஓட்டையின் வழியாக கீழே செல்லும் அந்த குண்டு மீண்டும் தான் இருந்த பழைய இடத்திற்கு வந்து நிற்கும்.
 மீண்டும் மேல் நோக்கி இழுக்கப்படும்..
இப்படி இது தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும்.

யோசனை நன்றாகத்தான் இருந்தது ஆனால் நடைமுறையில் செய்து பார்த்தபோது !!!
அந்த மேலே இருக்கும் சக்தி வாய்ந்த காந்தம் அந்த இரும்பு குண்டை ஓட்டையில் விழ விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு விளையாட்டு காட்டியது.

அதன் பிறகு எண்ணற்ற ஆய்வாளர்கள் எண்ணற்ற டிசைன் எண்ணற்ற சோதனைகள்....
 எல்லாக் கருவிகளும் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் இயங்கி விட்டு பிறகு தேமே என்று நின்று கொண்டது.

பார்க்க மிக எளிமையாக இருக்கும் இந்த கருவிகளை ஏன் இயக்க முடியவில்லை ??
அதற்கு காரணம் அதை இயக்க நாம் இயற்கையின் இரண்டு வெப்ப இயக்க வியல் விதிகளை (Thermodinamics law ) மீற வேண்டும்.

(தெர்மோடைனமிக்ஸ் இல் 0,1,2,3,4 என்று நான்கு விதிகள் உள்ளன வேறு சந்தர்ப்பத்தில் விரிவாக தெர்மோடைனமிக்ஸ் பற்றி எழுதுகிறேன் )

அதில் முதல் விதி சொல்வது
என்னவென்றால் !!!
" ஒரு துளி அளவு ஆற்றலை கூட ...
 ஒரே ஒரு தூசை தூக்கும் அளவு ஆற்றலை கூட நம்மால் இந்த பிரபஞ்சத்தில் புதிதாக உண்டாக்க முடியாது..
நாம் ஒருவகை ஆற்றலை மற்றொருவகை ஆற்றலாக மாற்றலாம்.. இங்க இருந்து எடுத்து அங்கே கொடுக்கலாம் அவ்வளவுதான்.
அதனால்தான் நாம் முன்பு பார்த்த அந்த மெஷின்கள் புதிதாக ஆற்றல் எதையும் உற்பத்தி செய்ய முடிவது இல்லை.

ஒருவேளை விஞ்ஞானிகள் அப்படியே ஒரு ஆற்றலை உற்பத்தி செய்யும் கருவியை உண்டு பண்ணி விட்டாலும் கூட...
அது வேலை செய்யாது.
அதை வேலை செய்யவிடாமல் தடுக்க இரண்டாம் விதி முட்டுக்கட்டை போட்டு நிற்கும்.
இரண்டாம் விதிப்படி ஒரு கருவியால் வேலை செய்யப்பட்டால் அதாவது அந்த கருவியில் இயங்கும் பகுதிகள் நகரும் பகுதிகள் அல்லது உரசும் பகுதிகள் ஏதேனும் இருந்தால்....
அது ஆற்றலை சிதர்வடைய  செய்து ஆற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது.

எனவே ஒரு Perpetual மெஷின் ஒரு போதும் வேலை செய்ய போவது இல்ல.

சிலருக்கு ஒரு கேள்வி எழலாம் !!!
 ஒரு அணு என்பது எப்போதும் இயக்கத்தில் தானே இருக்கிறது அப்போ அதை Perpetual மெஷின் என்று சொல்லலாமா ??

இல்லை Perpetual  motion என்பது வேறு Perpetual மெஷின் என்பது வேறு.

சரி எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் ஒரு கருவி எங்கேயும் இல்லையா ?
நீங்கள் " drinking bird " எனும் விளையாட்டு கருவியை பார்த்திருக்கலாம்.
அந்த குருவி தொடர்ந்து குனிந்து , நிமிர்ந்து குனித்து நிமிர்ந்து தனக்கு முன்னால் வைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்கும்.

அது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால்...
அதற்குள் "methaline cloride " அடைக்க பட்டு இருக்கும் அந்த திரவத்தின் கொதி நிலை 39.6 டிகிரி செல்சியஸ்..
அதாவது நீங்கள் உங்கள் கையால் தொட்டாலே அது ஆவியாக ஆகும்.

எனவே அறை வெப்ப நிலையால் சூடாகி அது வைக்கப்பட்டிருக்கும் குழாய்க்குள் அழுத்த மாறுபாட்டை ஏற்படுத்தி அந்த திரவத்தை மேல் நோக்கி செலுத்துகிறது.

இதனால் எடை அதிகமாகி பறவையின் தலை முன்னோக்கி சாய்கிறது. இப்பொழுது அதன் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் நீரில்  தலை நனைவதால் மீண்டும் குளிர்விக்க பட்டு கீழே இறங்குகிறது...
இப்படி முடிவில்லாமல் அந்த பறவை ஆடி கொண்டே இருக்கிறது.

இந்த பறவை பார்க்க தெர்மோடைனமிக்ஸ் விதிகளை மீறுவதை போல தெரியலாம்..
ஒரு Perpetual  மெஷின் போல தெரியலாம் ஆனால் உண்மையில் இது ஒரு "heat Machine" அதாவது ஒரு இடத்தில் இருந்து வெப்பத்தை எடுத்துக்கொண்டு அதன் ஆற்றலை பயன்படுத்தி வேலை செய்யும் ஒரு கருவி.

அறை வெப்பநிலையில் நாம் கொடுக்கும் வெப்பம் தான் இதன் மேல் செயல் படும் வெளி ஆற்றல்.

ஒரு நிஜமான  Perpetual  machine என்பது..
வெளியில் இருந்து வெப்பம்,காற்று, சாதா காந்த விசை,மின்காந்த விசை என்று எதனாலும் பாதிக்க படாத இடத்தில் வைக்க பட வேண்டும் அதை யாரும் தொடவோ ஆட்டிவிடவோ கூடாது அப்படி வைத்தாலும் அது இயங்க வேண்டும்.

ஒரு பேச்சுக்கு அப்படி ஒரு கருவியை நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தால் அது கொஞ்சமே கொஞ்சம் ஒரே ஒரு துளி அளவு ஆற்றலைக் கொடுக்க முடியும் என்றாலும் கூட நாளையே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் உங்கள் வீட்டைச் சூழ்ந்து இருக்கும். ஒரே நாளில்  நீங்கள்  உலக புகழ் அடைந்து விடுவீர்கள்.



வீட்டில் சும்மா இருக்கும்போது வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்கள்.


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..