Pages

Wednesday, 20 May 2020

இராமன் வணங்கிய இராவணன்

போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்...

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!

பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.

 பொறுமையைவிட மேலான தவமுமில்லை
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை...

Saturday, 16 May 2020

குமரிக்கண்டம் உலக கண்டங்களின் தாயகம். குமரிக்கண்டத்தின் ஆதாரம் 2

இறுதியாக என்னுடைய தேடுதலில் கிடைக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷம்.
என்னை ஏளனம் செய்தவர்களுக்கு !!!!!
எங்களுடைய வரலாறு உங்களுடைய அறியாமைகளை விரட்டியடிக்க !!!!!
குமரிக்கண்ட ஆதாரம்.
மதிப்பிற்குரிய தோழரும் , பிரபல வானொலி தொகுப்பாளருமான திரு.தீபன் அவர்களுடைய அற்புத படைப்பு இது.

குமரிக்கண்டத்தின் அற்புதமும் , மர்மமும் !!!!!!

                        காணொளியின் பாகம் 1




காணொளியின் பாகம் 2 




காணொளியின் பாகம் 3



Friday, 8 May 2020

சிவம் மற்றும் நந்தியும். நந்தி என்பவர் யார் ?

சிவம் மற்றும் நந்தியும். நந்தி என்பவர் யார் ?


வேண்டுதல், பிராத்தனை, வழிபாடு என்பது ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தாலும் இப்படித் தான் பிரார்த்திக்க வேண்டும் என்று ஒரு முறை உண்டு. அந்த வகையில் சிவ வழிபாடு பற்றிப் பார்போம்.
முதலில் கொடி மரத்தை வணங்கி, பின் பலி பிடத்தை வணக்க வேண்டும். பலி பிடம் என்பது நந்தி தேவருக்கு பின் உள்ளது. இது அந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி யாரோ அவரின் பாத கமலங்களை குறிக்கும் விதமாக தாமரை வடிவில் இருக்கும்.
இந்த பலி பீடம் பாசத்தை உணர்த்துகிறது. அதாவது மனித வாழ்வில் இயல்பான காம, குரோத, லோப, மோக, மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறதி செய்து கொள்ள வேண்டும்.
நமது ஆணவம், அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும். கோவிலின் எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலியவர்களுக்கு தலைமை பீடமாக இருப்பது பலி பிடமாகும்.
கொடி மரத்திற்கு அடுத்து பலி பிடத்தை வணங்கி நந்தி தேவரிடம் வருகிறோம்.
யார் இந்த நந்தி? இவரைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.
உத்தமமான முனிவர் கிலாதர் அவர் பத்தினி சித்ரவதி அம்மையார். இந்த முனி தம்பதியரின் தவப் பயனால் ஈசன் ஸ்ரீ சைலம் போக என்று அன்புக் கட்டளை இட்டார்.
தம்பதியர் இருவரும். பரம்பொருளின் உத்தரவுப் படி ஸ்ரீ சைலம் வந்தார்கள். புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். கடும் தவம் புரிதார்கள்.
கருணை கடலான சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிரகாசமான மகன் பிறந்தான். அன்னை சிதிரவதி அம்மையார் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி தாலாட்டி வளர்த்தார். சகல கலைகளையும் தந்தை கிலாதர முனிவர் கற்பித்தார்.
வளர்ந்து வாலிபத்தை தொட்டார் நந்தி. எல்லா தாயாருக்கும் உள்ள கவலை சித்ரவதிக்கும் வந்தது. பருவத்தே திருமணம் செய்ய ஆசைப் பட்டாள். ஆனால் நந்தி பகவானோ தவக் கோலம் பூண்டார்.
பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த தாய் தந்தையரை வணங்கி...’என்னை ஆசிர்வதியுங்கள் நான் பரம் பொருளை காண கடும் தவம் செய்யப் போகிறேன்’ என்றார் ரிஷி குமாரன் நந்தி.
காலம் போடும் கணக்கை புரிந்து கொண்ட முனி தம்பதிகள் ஆசிர்வதித்தார்கள். ‘எல்லா வளமும் பெற்று மங்கலம் பெருகுக’ என்று வாழ்த்தினார்கள்.
விடை பெற்ற நந்தி அக்கினியில் பல ஆண்டுகள் நின்று கொண்டே தவம் செய்தார். மெய் வருத்த செய்த தவத்தின் பயனாக பரமேஸ்வரன் நேரில் வந்தார்.
‘மகனே!… எனது ஆணை எங்கும் நிறைந்தது. அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும். அதனால் அதிகார நந்தி என்று சொல்லபடுவாய்’ என்று ஆசிகள் கூறினார்.
நந்தி தேவன் அதிகார நந்தி என்று பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார். அந்த தவத்தின் பயனாக மீண்டும் வரங்கள் தந்தார் ஈசன்.
‘அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன். சிவ ஞானத்தை உலகிற்கு போதிக்கும் ஆசிரியனாகவும். அத்துடன் நீ எனக்கு வாகனமாகவும், கைலையில் காவல் தெய்வமாகவும் நீயே இருப்பாய். அதனால் என்னை போலவே நீயும் நித்தியனாக இருப்பாய்’ என்று வரமளித்தார்.
நந்தி சைவர்களுக்கு குரு. நந்தி என்றாலே எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இவரின் அனுமதி பெறாமல் சிவ தரிசனம் செய்வது தவறு அப்படி வணக்கினால் சிவனருள் கிட்டாது.
பொதுவாக சிவ ஆலையத்தில் நந்தி தேவர் எப்பொதும் சிவனை துதித்து வணங்கிய படியே இருப்பதால், சிவனுக்கும் நந்திக்கும் இடையே செல்வதை தவிர்க்க வேண்டும். நந்தி தேவர் வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வதே பிரதானமாக இருக்கிறது.
திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திருக்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே, அண்டத்தின் மீது நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடினார் ஈசன்.
இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் சிவபெருமானுக்குள் ஒடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது. பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும் சிவனையும் துதிப்பது 1000 அசுவமேத யாகத்தை செய்த பலனை கொண்டு வந்து கொடுக்கும்.
கல்வி, செல்வ வளம் பெற்று, கடன் தொல்லை, வறுமை, மனக்கவலை நீங்கி குறிப்பாக மரணபயம் அற்று வாழ பிரதோஷ வழிபாடு சிறப்பு.
நந்தி தேவர் மந்திரம்
‘ஓம் தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமைகி
தன்னோ நந்திப் பிரசோதயாத்’
நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்று சிவ தரிசனம் செய்த பிறகு சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
சண்டிகேசுவரர் யார்?
இவர் ஒரு சிவனடியார் சிவ சன்னதியில் சிறு இடைவெளி விட்டு இடது புறத்தில் சிறிய ஆலயம் அமைக்க பட்டிருக்கும். இவருக்கு என தனியாக மாலையோ நெய்வேதியமோ கிடையாது.
மூலஸ்தானத்தில் சார்த்திய மாலையும், மிதமுள்ள நெய்வேத்தியமும் தான் இவருக்கு உரியது.
எப்போதுமே தவ நிலையில் இருந்து சிவ பெருமையை நெஞ்சுருக பிரார்தித்துக் கொண்டிருப்பார். இவரை வணக்கும் போது சிவனருள் பரி பூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று இவரிடம் கேட்க வேண்டும்.
பின் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி கொடி மரத்திருக்கு முன்னாள் நமஸ்காரம் செய்தால் சிவதரிசனம் நிறைவு பெறுகிறது.

            தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                          தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "
                - அய்யனார் (வால்வரின்).