Pages

Sunday, 31 January 2021

கணினி விசைப்பலகை ஏன் வரிசையாக இல்லை என்பதன் விளக்கம்.


  • கணினி விசைப்பலகை எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் கலைந்துள்ளன !!! 
  • கணினியின் கீ-போர்டு ல் உள்ள எழுத்துகள் Alphabetic வரிசையில் இல்லாமல் கலைந்து இருப்பதற்கான காரணம் உள்ளது.
  • கணினி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் கீ போர்டானது abcd எனும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே அமைந்திருந்தன.
  • அப்படி இருந்ததால் அதில் தட்டச்சு செய்ய சற்று சிரமமாக இருந்ததை உணர்ந்தனர்.
  • அதனால் அவற்றை மாற்ற முடிவு செய்தனர்.
  • பலமுறை முயற்சி செய்த பின் இந்த வடிவத்தை உருவாக்கினர்.
  • அது சரி இந்த வடிவத்தை ஏன் உருவாக்கினார்கள்? என்ற கேட்டால், இதற்கு ஒரு காரணம் உண்டு.
  • பொதுவாக நீங்கள் கீ போர்டின் இடப்பக்க மேல் மூலையில் காணும்போது உள்ள எழுத்து Q.
  • அதைப் போன்றே கீழ்ப்பக்க இடமூலையில் உள்ள எழுத்து Z.
  • இவ்வாறு ஒவ்வொரு எழுத்தும் பயன்படுத்தப்படும் முறைகளை வைத்து அதனை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
  • Q மற்றும் Z எழுத்துகளை நாம் ஆங்கிலத்தில் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவோம்.
  • ஆனால் ASDFGHJKL முதலிய எழுத்துக்களை அதிகமாக பயன்படுத்துவோம்.
  • அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துக்களான ASDFGHJKL முதலியவற்றை ஒரே வரிசையில் கொண்டு வந்தனர்.
  • நடுவரிசை எழுத்துகள்தான் பெரும்பாலான வார்த்தைகளில் இடம் பெற்றிருக்கும்.
  • மட்டுமன்றி அதில் அடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொத்தானுக்கு மேல் உள்ள மற்றும் கீழ் உள்ள எழுத்துகள் ஒன்றோடோன்று வார்த்தைகளில் பெரும்பாலும் இணைந்து வரக்கூடியதாக இருக்கும்.
  • இப்போது நீங்கள் ஒரு கீபோர்டை பார்த்தால் அதில் ஒவ்வொரு எழுத்துகளுக்கு அருகில் உள்ள எழுத்துகள் தான் பெரும்பாலும் அவற்றின் அருகில் வரும்.
  • உதாரணமாக, A க்கு அருகில் S உள்ளதென்றால் பெரும்பாலும் A எழுத்திற்கு அடுத்த எழுத்தாக S வரும் என்பதை வைத்து அதை உருவாக்கியுள்ளனர்.
  • இவ்வாறு ஆங்கிலத்தில் பொதுவாக எந்தெந்த எழுத்துகள் அதிகமாக இணைந்து வரும், எந்தெந்த எழுத்துகள் குறைவாக வரும் முதலியவற்றை ஆராய்ந்து இவ்வகையை உருவாக்கியுள்ளனர்.
  • இவ்வாறு வார்த்தைகளின் அடிப்படையில் எழுத்துகளை வைத்துள்ளமையால்தான் அவை கலைந்து உள்ளன.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!

                 தமிழால் இணைவோம் !!!
                   அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                       வலியே  " வலிமை "
                 - அய்யனார் (வால்வரின்)..


Friday, 29 January 2021

மேஜிக் ரைஸ் (Magic Rice) பற்றிய தகவல்கள் .

இது என்னவோ இயற்கையின் மாயம்…தெலுங்கானாவில் விவசாயி ஒருவர் மேஜிக் அரிசியை விளைவித்து நல்ல அறுவடையை பார்த்துள்ளார். இந்த அரிசியின் குணாதிசயம் என்னவெனில் இதை சாதமாக அடுப்பில் வைத்து தயார் செய்ய தேவையில்லை. சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதும் சாதம் ரெடியாகிவிடுமாம்.

இதுவும் மலைப்பகுதியில் விளையும் ஒருவகை நெல்தான் இது போகா சவுல் அரிசி எனும் அஸ்ஸாம் மாநில காடுகளில் கிடைக்கக் கூடியதாகும். இந்த அரிசியை அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆண்ட 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் வம்சத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த அரிசிக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. இந்த அரிசியை தெலுங்கானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ளார்.

இந்த நெல்லை தெலுங்கானாவில் தனது நிலத்தில் 0.05 ஏக்கரில் சிறிய அளவில் பயிரிட்டார் ஸ்ரீகாந்த். சுமார் 145 நாட்கள் இதன் அறுவடை காலம் ஆகும். இந்த சிறிய இடத்தில் பயிரிட்டதன் மூலம் 5 மூட்டை விளைச்சலை இது கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். இது போன்ற சிறப்பான நெல் வகையை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகளாக முயற்சித்ததாக கூறுகிறார் ஸ்ரீகாந்த்.



திருவள்ளுவரின் மதம் என்ன ?


திருவள்ளுவர் ஆண்டு (திருவள்ளுவர் பிறந்த வருடம்) கி.மு.2ஆம் என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானித்துள்ளனர். மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், இவர் கி.மு.2 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என நம்பப்பட்டு, தமிழ் மக்கள் வள்ளூவர் பிறந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு தி.மு., தி.பி. (திருவள்ளுவருக்கு முன், பின்) என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

ஆதலால் அவர் வாழ்ந்த காலத்தில் கிருஸ்துவ மற்றும் இஸ்லாம் மதங்கள் பிறக்கவே இல்லை. ஆதலால், அப்போது இருந்தது ஹிந்து மதம் இல்லை. அது சனாதன தர்மம் - இந்த உலகில் எல்லோராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்வியல் முறை.

பிறகு உண்டான இஸ்லாம் மதத்தினர் தன் படையெடுப்பின் போது, நாம் சிந்து நதிக்கு இப்புறம் இருப்பதால், (அவர்கள் அந்த நதியை ஹிந்து என்று அழைத்தனர், அதனாலேயே அராபியர்கள் நமக்கு “ஹிந்துக்கள்” என்று பெயரிட்டனர்.

திராவிடர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ் நாட்டில் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் வள்ளுவர் ஒரு அரைப் பார்ப்பனர் என்று எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. முற்காலத்தில் ஹிந்துக்கள் எல்லோரும் பூணுல் அணிந்திருந்தனர்.

திராவிடர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தப் பூணூல் தெரியக்கூடாது என்பதற்காக, அதே வாக்கில் ஒரு மேல் துண்டு போட்டுச் சுற்றிக் காட்டப்பட்டுள்ளது.

நிற்க.

திருவள்ளுவர் பல இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகிறார்.

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவரோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறார்.

சனாதன தர்மத்தில்தான் 'தெய்வம்' என்ற சொல் இருக்கிறது. இந்த சொல் 6 குறள்களில் இருக்கிறது. திருவள்ளுவர் ஹிந்து சமயத்தவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

குறள் 43:

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள்: 50

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் 55.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
குறள் 619:

ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள் 702.

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள் 1023.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

[[ ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி

( குறள் எண் : 25 )

சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான் ]]

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரையினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்)-1258

வள்ளுவர், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான், அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலியன இந்துமத விஷயங்கள்.

இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.

பிரம்மா — (உலகு இயற்றியான் 1062) —.

சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர் (580)

நஞ்சுண்டவர் - சிவபெருமான்.

இன்னொரு குறளில் (377) ‘வகுத்தான்’ என்று பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். வகுத்தான் என்பதை தலைவிதியை எழுதிய தெய்வம் என்று உரைகாரர்கள் காட்டுவர்.



திருவள்ளுவரின் மதம் இந்துவோ அல்லது சனாதன தர்மமும் இரண்டுமே இல்லை !!!


திருவள்ளூர் காலகட்டத்தில் மதம் , சாதி , போன்ற பேதம் இல்லை !!! திருவள்ளுவர் சைவர் சமயத்தை சேர்ந்தவர் என்பது உண்மை.


Tuesday, 26 January 2021

இரத்தம் பற்றி முழு தகவல்கள்.

 "இரத்தம்" - முழு விளக்க கட்டுரை..!!



(இப்பதிவை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் ஒருநாள் பயன்படும்)   


*இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?*


ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.


*ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*


ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.


*ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?*


எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.


*ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?*


ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.


*ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?*


ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.


*ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?*


உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்து விடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.


*பிளாஸ்மா என்றால் என்ன?*


ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.


*ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?*


ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.


*ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?*


உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.


*உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?*


ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் – மோட்டார் சைக்கிளின் சராச வேகத்தை விட அதிகம்.


*மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?*


மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.


*உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?*


எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.


*ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?*


நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம் தான்.


*24-மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெயுமா?*


24-மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.


*மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லா விட்டால் விளைவு என்ன?*


மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம் தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்து விடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.


*ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?*


ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள் தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.


*ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?*


ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O‘ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால் தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.


*ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிக்கப்படுகிறது?*


ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.


*ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?*


வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.


*யார் ரத்த தானம் செய்யக்கூடாது?*


உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.


*மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?*


இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகி விடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.


*தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?*


புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.


*ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?*


நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவு தான்.


*ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?*


ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும்.அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.


          தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Saturday, 23 January 2021

பெண்கள் முக்கியத்துவதில் , மனைவி !! ஆண்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.

 பெண்ணிற்கு நம் முன்னோர்கள் தந்த முக்கியத்துவம் :




1)திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது.


2)மனைவி இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது.


3)மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது.


4)மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது.


5)மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது.


6)மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்.


7) மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை  பூஜை செய்ய அருகதை அற்றவன்.


8)மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்.


9)மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுனப் பிழை என பொருள்.

( இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது)


10)மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது.


11)மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது.


12)மனைவி இன்றி ஒற்றை நபராக பசுவை வணங்கக்கூடாது.


13)மனைவி இன்றி ஒற்றை நபராய் புண்ணிய தீர்த்தம் ஆடுதல் கூடாது.


14)மனைவி இன்றி பெரியோர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அதாவது முழு பலன் இல்லை என்பதாகும்.


15)மனைவி இல்லாதவன் கோயில் விழாக்களில் காப்பு கட்டிக்கொள்ள தகுதி கிடையாது.


இப்படி பல பல நியதிகள் உள்ளது. இவை இல்லற வாழ்வியல் அல்லது அந்நிலை சூழலில்  உள்ளவர்களுக்கே.


மனைவி என்ற

 பெண் உடன் இல்லையெனில்,

 ஒரு ஆண் வெறும் ஜடமே.

சாஸ்திர  சிறிதும் கிடையாது.




Friday, 22 January 2021

மனைவி என்ற சொல்லுக்கும் , கணவன் என்ற சொல்லுக்கும் தூய தமிழ் சொற்கள்.

 


இச்சொற்கள் யாவும் மென்மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இவற்றின் அதிகாரங்கள் கண்டறியப்பட்டு அடுக்கமைவு செய்யப்ட வேண்டியவை. அவ்வாறு செய்தன் மூலம் தமிழில் மேலும் பல சொற்கள் உருவாகும். அதற்கு இலக்கியம் நன்கறிந்தவர் வேண்டும். 

மனைவி


  1. கண்ணாட்டி
  2. கற்பாள்
  3. காந்தை
  4. வீட்டுக்காரி
  5. கிருகம்
  6. கிழத்தி
  7. குடும்பினி
  8. பெருமாட்டி
  9. பாரியாள்
  10. பொருளாள்
  11. இல்லத்தரசி
  12. மனையுறுமகள்
  13. வதிகை
  14. வாழ்க்கை
  15. வேட்டாள்
  16. உவ்வி
  17. சீமாட்டி
  18. சூரியை
  19. தம்மேய்
  20. தலைமகள்
  21. தாட்டி
  22. தாரம்
  23. மனைவி
  24. நாச்சி
  25. பரவை
  26. பெண்டு
  27. இல்லாள்
  28. மணவாளி
  29. பத்தினி
  30. கோமகள்
  31. தலைவி
  32. அன்பி
  33. இயமானி
  34. தலைமகள்
  35. ஆட்டி
  36. அகமுடையாள்
  37. ஆம்படையாள்
  38. நாயகி
  39. பெண்டாட்டி
  40. மணவாட்டி
  41. ஊழ்த்துணை
  42. வதி
  43. விருத்தனை
  44. இல்
  45. காந்தை
  46. பாரியை
  47. மகடூஉ
  48. மனைக்கிழத்தி
  49. குலி
  50. வல்லவி
  51. வீட்டாள்
  52. ஆயந்தி
  53. ஊடை
  54. பாரி
  55. மணாட்டி
  56. வேட்கைத்துணைவி
  57. களத்திரம்
  58. களம்
  59. குடி
  60. தடை
  61. குறுமகள்
  62. தாரை
  63. அறத்துணைவி
  64. தற்பம்
  65. மனையுறைமகள்
  66. பொருணள்
  67. தாரம்.                                                                                 
  68. மனைத்தக்காள் இல் வாழ்க்கைகேற்ற சிறந்த மனைவி.                                                             
  69. நாரி -கணவனை வசப்படுத்துபவள்.                    
  70. வனிதை - கணவனை அடைபவள்.                        
  71. துணைவி - wife as a help mate.                                   
  72. இணைவி - companion.                                                  
  73. கடவி .


கணவன்.


  1. கொழுநன்
  2. இல்லாளன்
  3. அகமுடையான்
  4. ஆம்படையான்
  5. வீட்டுக்காரர்
  6. காந்தன்
  7. ஆத்துக்காரர்
  8. என்னவன்
  9. மனையான்
  10. மணாளன்
  11. மணவாளன்
  12. உற்றான்
  13. கொண்டவன்
  14. கொண்டகன்
  15. தலைவன்
  16. நாயகன்
  17. அல்நுகன்
  18. ஆம்பான்
  19. இயமான்
  20. இல்லான்
  21. இல்லவன்
  22. கிழவன்
  23. உரியவன்
  24. உடனிகழ்வான்
  25. தலைமகன்
  26. தம்போன்
  27. குடும்பி
  28. தாட்டான்
  29. மகிணன்
  30. பத்தன்
  31. கண்ணாளன்
  32. அன்பன்
  33. கேளவன்
  34. கோமகன்தவன்
  35. மன்
  36. நாச்சியன்
  37. மைந்தன்
  38. விழைந்தோன்
  39. வேட்டான்
  40. கூந்தற்கிழவர்
  41. ஆள்
  42. ஆளன்
  43. வரன்
  44. கண்டன்
  45. வல்லவன்
  46. கண்வாளர்
  47. தற்கொண்டான்
  48. ஆர்வலன்
  49. அகவாளன்
  50. ஆளான்
  51. இல்லாளான்
  52. இல்லாளி
  53. இறை
  54. ஐ அதாவது திரு என்பதாகும்.
  55. பாதி
  56. கூந்தற்கிழவன்
  57. இற்கிழவன்
  58. வேட்கைத்துணைவன்
  59. உயிர்க்கிழவன்
  60. கேள்வன்.                                                                          
  61. தபுதாரன் - மனைவியை இழந்தோன்.                 
  62. துணைவன்husband as a help mate.                        
  63. இணைவன் companion.                                             
  64. ஈராட்டி- இரண்டு பெண்டாட்டிக்காரன்.   

            தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
             - அய்யனார் (வால்வரின்)..


முன்னோர்களின் கணிப்பில் மழை ஒரு அமிர்தம் தான்

 🌝 தவளை கத்தினால் மழை.

🌝 அந்தி ஈசல் பூத்தால் 

அடை மழைக்கு அச்சாராம். 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 

🌝 தை மழை நெய் மழை.

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.

🌝 வெள்ளமே ஆனாலும் 

பள்ளத்தே பயிர் செய். 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.

🌝 களர் கெட பிரண்டையைப் புதை.

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 

கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.

🌝 நன்னிலம் கொழுஞ்சி 

நடுநிலம் கரந்தை 

கடை நிலம் எருக்கு.

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 

பருவம் பார்த்து பயிர் செய்.

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

🌝 மழையடி புஞ்சை

மதகடி நஞ்சை.

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.

🌝 உழவில்லாத நிலமும் 

மிளகில்லாத கறியும் வழ வழ. 

🌝 அகல உழவதை விட 

ஆழ உழுவது மேல் .

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 

நஞ்சைக்கு ஏழு உழவு.

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.

🌝 ஆடு பயிர் காட்டும் 

ஆவாரை கதிர் கட்டும்.

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 

நிலத்தில் மடிய வேண்டும்.

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.

🌝 தேங்கி கெட்டது நிலம் 

தேங்காமல் கெட்டது குளம்.

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.

🌝 சொத்தைப் போல் 

விதையை பேண வேண்டும்.

🌝 விதை பாதி வேலை பாதி.

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.

🌝 கோப்பு தப்பினால் 

குப்பையும் பயிராகாது.

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 

🌝 கலக்க விதைத்தால்

களஞ்சியம் நிறையும்.

அடர விதைத்தால் போர் உயரும்.


வாழ்க வையகம்! 

வாழ்க வளமுடன்! 

எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு

கடைசி மரமும் விஷம் ஏறிக்

கடைசி மீனும் பிடி பட

அப்போதுதான் உறைக்கும்.

இனி பணத்தைச் சாப்பிட 

முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்

சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.

இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்...❣️




Thursday, 21 January 2021

என் அறிவுகளும் , என் கனவுகளும்



சாமானிய மனிதர்களை வியக்க செய்யவதற்கும்  , சிந்திக்க செய்யவதற்கும் அறிவு முதன்மையாக உள்ளது.

இந்த அறிவுகளை பகிர்ந்து அழிவிலா எதிர்காலத்தை உருவாக்க எண்ணுகிறேன்.

இந்த உலகம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தெரிவதில்லை.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் , எதோ ஒரு வகையில் !!!  தாம் யாரு என்பதை உணர்த்தி கொண்ட இருக்கிறது இந்த உலகம்.

இங்கு அனைவரும் ஒரே மரபணுக்கள் கொண்டாலும் , அனைவருக்கும் ஒவ்வொரு திறமைகளும் , சிந்தனைகளும் கொண்டு உள்ளார்கள் என்பது உலகம் வரையறுகளில் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆக அனைவரும் தங்களுடைய வாழ்வியலில் எதோ ஒரு வினாவிற்கோ , விடைக்கோ தகுதியானவர்கள் என்பது மிகுந்ததிறன் ஆற்றலை கொண்டுள்ள  நமது அறிவுகள் உணர்த்திகிறது.

தகவல்களை உருவாக்க என்னிடம் ஒரே வழி. 

உலகில் அதிகப்படியான வினாக்கள் தான் பல விடைகளை வெளிக்கொண்டு வருகிறது.

அனைவரும் அவரவருக்கு தெரிந்த அனைத்து தகவல்களை அறிவோம் , அறிவிப்போம்.

உங்களுக்கு என்ன தெரியுமோ  எதை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*வருங்காலத்திற்கு சிறந்த கோட்பாடு*

* அறிவை வளர்க்கவும் , 

* அறிவை பரப்பவும் ,

* அதை தக்க வைக்கவும் !!! 

எல்லாரும் சேர்ந்து உலகில் உள்ள சோதனைகளை , சாதனைகளாக மாற்றுவோம். 

யாம் அறிந்த  தகவல்களை அனைவரும் அறிய வேண்டும். கற்போம் கற்பிப்போம். "

ஒவ்வொரு மூளையாக செயல்படும் பொழுது நம்முடைய ஆற்றலை விட  , நாம் அனைவரும் ஒரேமூளையாக  செயல்படும் பொழுது தான் ஆற்றல் பலமடங்கு சிந்தனைகளை வெளிக்கொண்டு வருகிறது.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

              " வலியே வலிமை "

       -அய்யனார் (வால்வரின்).

என் கனவு.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் கேள்விகள்,

காவியம், புராணம், வரலாறு, அறிவியல் தொடர்பான அனைத்து காணொளிகள் கொண்ட தகவல்கள் மட்டும்.

மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் அரசாங்கம்,

மக்களுக்கு எதிரான சட்டம்,

ஊழல், பசி, வறுமை, பயங்கரவாதம், எல்லாவற்றையும் அழிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.

உலகின் அறியாமை தவிர்க்கப்பட வேண்டும்.

 நாம் அறிந்த அறிவியல் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

 எமக்கும் , மற்றார்க்கும் கற்றுக் கொடுங்கள். வரலாற்றைப் பதிவு செய்யாத எந்தவொரு உயிரினமும் தன்னைத்தானே நிற்க முடியாது.






Monday, 18 January 2021

தமிழர்களின் மொத்த படைகள்


  • கரணப்பல்படை - பல்வகையான படைகளையும் குறிக்குஞ்சொல்.

முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு

  1. அகப் படை - Internal Defensive Force
  2. மறப் படை - Expeditionary Force

- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.


கோட்டைப் போரின் போது பொருதும் படைகள்

  1. உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை.
  2. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை.

என்று அழைக்கபட்டன.


இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:

  1. பயிற்சிப் படை = போர்ப் பயிற்சி கற்ற சேனை.
  2. பயிற்சியிலாப் படை = பயிற்சி பெறாத-உணர்ச்சியுள்ள மைந்தர் கூட்டம்.

இவை மேலும் தாங்கிய ஆய்தங்கள் & கவசத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:

  1. வன்படை - கனமான படை - Heavy army
  2. மென்படை - இலகுவான படை - Light army

அடுத்து கருவிகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:

  1. கருவிபெறு படை = அரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனை.
  2. தற்கருவிப் படை = தத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு பொருதும் சேனை.
  3. ஊர்திப் படை = காவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.
  4. தன்னூர்திப் படை = தத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.

பின்னர் எல்லாப்படையும் நால்வகையாக ஒட்டுமொத்தமாகப் பிரித்தனர். இவற்றினை நாற்படைகள் என்று கூறூவார்கள்.

  • காலாட் படை / ஆட்படை
  • தேர்ப்படை / சக்கரப்படை/ சகடப்படை
  • குதிரைப்படை / புரவிப்படை/ மாப்படை/ பரித்தானை
  • யானைப்படை/ கடகப்படை

இவை தவிர, கடற்படையும் இருந்தது இது கடலில் நடைபெறும் சண்டைகளில் ஈடுபடுவதற்காக வைத்திருந்த படையாகும்.


அடுத்து நகர்திறன் அடிப்படையில் இவ்வாறு பிரிக்கப்படும்:

  • தானே செல்வது - காலாட்படை/தானை
    • தானாகச் செல்லும் படையாகிய காலாட்படையினை தானை என்றனர் பண்டைத்தமிழர். இதை தற்காலத்தில் சேனைக்கு ஒத்த சொல்லாக சிலர் கருதுகின்றனர், அது தவறு. சேனை என்பது மொத்தமானது.
    • தேரும் குதிரை மூலம் இயங்குவதால் அதுவும் குதிரையினுள் அடங்கிவிடும்.
    • ஆதாரம்:

'தானை, யானை, குதிரை

நோனார் உட்கும் மூவகைந் நிலையும்

→ (தொல்.பொருள்.புறத். 14:1,2)'

  • பிறவாற் செல்வது - குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

அதன் பின்னர் அவற்றினுள் கீழ்கண்ட சேனைகள் பிரிவுகளாக இருக்கும்:

  1. தடுபடை - மாற்றுப்படை
  2. நிலைப்படை- standing army - எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் படை.
  3. பாசிப்படை - திடீரென்று தாக்கும் சேனை
  4. கூளியர் - கூளிப்படையினரரான இவர்கள் படைகளுக்கெல்லாம் முன்னர் சென்று படை செல்லுவதற்கேற்ற வழியை அமைத்து தந்திருக்கின்றனர்.
  5. செருப்படை - சிறந்த வீரர்களைக் கொண்ட படை
  6. பதிபடை/ ஒளிபடை- மறைந்து தாக்கும் படை
  7. கைக்கொளவர் படை/ கைக்கோளப்படை/முனையெதிர் மோகர் - அரசனை சூழ்ந்து பாதுகாப்பேற்கும் பொறுப்பினைப் பெற்ற படை.
  8. வேளைக்காரர் படை - தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள்
  9. நடப்பு படை - உணவு உடை போன்றவற்றினைக் கவனிக்கும் படை.
  10. தளப்படை காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப்படை. இவர்கள் பின்புல பாதுகாப்பு பிரிவாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் பாவிக்கப்படுவர்.
  11. ஊசிப்படை - தாக்குதல் படை
  12. கோட்டைக்கட்டு - கோட்டையினைப் பாதுகாக்கும் படையணி.
  13. மெய்க்காவலர் படை - மெய்பாதுகாவலர் படை
  14. வேவுப்படை/ ஐந்தாம்படை - எதிரியின் இடத்திற்குச் சென்று செய்தி திரட்டும் படை
  15. வேற்படை /குத்துப்படை - வேல் கொண்டு போரிடும் படை
  16. விற்படை/விற்றானை - வில் கொண்டு போரிடும் படை
  17. வாட்படை /வெட்டுப்படை - வாள் கொண்டு போரிடும் படை.
  18. மற்படை - ஆய்தம் இன்றி போரிடுவோர்.
  19. உரிமைப்படை - மானியம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்து அரசனுக்காகப் போரிடும் சேனை.
  20. அமையப்படை - குறுங்காலத்தில் திரட்டப்படும் படை
  21. தனிப்படை - தலைவனை இன்றித் தாமாகவே இயங்கும் சேனை.
  22. குழுப்படை - மன்னன் அமைத்த தலைவனையுடைய சேனை.
  23. குடிப்படை - கோட்டைக் கதவை எதிரி தாண்டிவிட்டன் என்றால் மக்களும் கம்புதூக்கத்கான் வேண்டும்!
  24. தாணையம் - கோட்டைக்குள் குழுமியிருக்கும் சேனை.
  25. பங்களப்படை - newly enlisted army useless as chaff
  26. கள்ளர் படை- போர் தொடங்குவதற்கு முன்னரே பகைவரின் ஆநிரைகளை கவர்ந்து வருவதற்காக அமைக்கப்பட்ட படை.
  27. அங்கபடை - மெய்க்காவல் படை [இச்சொல் பொற்பனைக் கோட்டையில் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் கல்வெட்டில் இருந்து கிடைக்கப்பெற்றது... எனவே தமிழ்ச்சொல் என்று நினைக்கின்றேன்.]
  28. நிழற்படை/நிழல் - "அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர்" என்பதாகப் முனைவர் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
  29. கரைப்படை - கரையினைப் பாதுகாக்கும் படை
  30. சாவேறு - பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படை மீது ஊடறுத்துச் செல்ல முயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே நோன்பாகக்கொண்ட வீரர்
  31. துறுபடை - நெருக்கமாக ஓரிடத்தில் நிற்கும் படை
  32. புதுப்படை - புதிதாக அமைந்த படை
  33. உடைப்படை - Breaching army - எதிரியின் அரண்களை(தற்காலத்தில்)/ நிரையினை(பண்டைக் காலத்தில்) உடைத்து முன்னேறுவது/உட்செல்லுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படை.

  • வென்படை - வென்ற படை
  • வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை

இது தவிர அறுவகைச் சேனைகள் என்றும் இருந்தது. அவையாவன,

    • கூலிப்படை கூலிக்கு அமர்த்தும் சேனை.
    • நாட்டுப்படை - நாட்டுப்புறத்துள்ள மக்களாலியன்ற படை
    • காட்டுப்படை/ கானப் படை காடுவாழ் மக்களினின்று திரட்டப்பெற்ற படை
    • மூலபலம்/ மூலப்படை/ தொல்படைநீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் படை.
    • துணைப்படை நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை.
    • பகைப்படை - பகைவர் படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை.

இனி படையுறுப்புகள் பற்றிப் பார்ப்போம்:

  1. ஆக்கம், தூசி, நெற்றி (Vanguard) - முன்னணியாகச் செல்லும் படை
  2. தார்/ நிரை - கொடிப்படை
  3. கூழை ( Rearguard) - பின்னணியாகச் செல்லும் படை
  4. கடைக்கூழை, கோடி - கூழையினும் கடைநிலைப் படை
  5. கை, சிறகு ( Wing/ flank) - பக்கவாடு அல்லது நடுவில் செல்லும் படைகள்.
  6. பேரணி (main body or center of an army) - படையின் நடுப்பகுதி
  7. அணி - Columns

இனி படைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்று பார்ப்போம்:

  • அணி → ஒட்டு → ஊகம் → உண்டை

அடுத்து தமிழரின் பண்டைய கப்பற்படையில்(navyஇருந்த படைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்று கொஞ்சம் பார்ப்போம். இவை அரசரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவை ஆகும்.

  1. கண்ணி - இது ஒரு சிறப்பு நோக்கம், தந்திரோபாய கைக்கூட்டம்(battle array) ஆகியவற்றிற்குப் பயன்படும். ஒரு கண்ணியானது எதிரிக் கப்பல்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு எத்தும்(lure), அங்கு பெரிய கடற்படைசார் குழுக்கள் (வழக்கமாக, ஒரு தளம்) பதிக்காக(ambush) காத்திருந்து அவற்றை தாக்கும். ஒரு தடந்தகை/கேந்திர(strategic) களமிறக்கத்தின்(deployment) போது, முக்கிய பிரிவுடன்(fleet) சமரில் ஈடுபடுவதற்கு முன்பு கைக்கூட்டமானது பல முறை எத்தும் வகையில் பயன்படுத்தப்படும். (5 கப்பல்கள்)
  2. சலதளம்/ தளம் - 5 முதன் போர்க்கலங்கள், 3 துணைக் கலங்கள், 2 படையேற்பாட்டுக்(logistics) கலங்கள், 1 அல்லது 2 தனியார் படைக்கப்பல்கள் கொண்ட சிறிய தன்னிறைவு மிக்க நிரந்தர கைக்கூட்டம்(array) தளம் ஆகும். இது வேவு, சுற்றுக்காவல் அல்லது இடைமறிப்பிற்குப் பயன்பட்ட கைக்கூட்டமாகும். பொதுவாக, 2- 3 தளம் வட்டக்கூறில்(sector) இயங்குவதால், இவற்றால் ஒரு பரந்த பகுதியைத் தேட முடிகிறது. ஆனாலும் ஒன்றுக்கொன்று விரைந்து வலுவூட்டும் அளவுக்கு நெருக்கமாகத் தான் இருக்கும்.
  3. மண்டலம் - பல பணிகளுக்காக 48 கப்பல்கள் கொண்டது. இதுவொரு அரை நிரந்தர கைக்கூட்டமாகும். பெரும்பாலும் ஊராண்மை களமிறக்கத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உயர் கடல்களில் இடுக்கி தடூகம்(pincer maneuver) செய்யும் போது தனிப்பட்ட சமர் அலகுகளாக(unit) பயன்படுத்தப்படுகிறது.
  4. கணம் - பல பணிகளுக்காக 100-150 கப்பல்கள் கொண்டது. ஒரு கனம் 2/3 மண்டலங்களைக் கொண்டது. பிரிவைவிடக் கொஞ்சம் சிறியது. இதற்குள்ளே சமர், வேவு, படையேற்பாடு(logistics), வழங்கல் என்று அனைத்துக்குமான கலங்கள் உள்ளடங்கியிருக்கும்
  5. அணி - குறைந்தது 3 கனங்களைக் கொண்டது. பொதுவாக 300-500 கப்பல்கள் கொண்டது. இதுவொரு சிறப்பு ஊராண்மைக் குழுவாகும். இது அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விதப்பான படைத்துறை campaign(இதற்கு நிகரான சொல்லில்லை) மட்டுமே எழுப்பப்படுகிறது..
  6. பிரிவு - இவை தற்கால போர்க்கப்பல்களின் கடற்பிரிவு(naval fleet) போன்று செயற்பட்டன. சோழர்களிடம் 2 - 4 வரையிலான பிரிவுகள் இருந்தது

இவை தவிர ஏனைய வேலைகளை கவனிக்க கீழ்க்கண்ட படைகள் கடற்படையில் இருந்தன:

  • கடற்படையின் துணை படை - சிறிய ஆனால் வல்லமைமிக்க படைகள் பல்வேறு வணிகக் கழகங்களினால் பராமரிக்கப்பட்டன. இக்கழகங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையான காலங்களில் கூலிப்படையாகவும் வலிமையூட்டவும் பயன்படுத்தப்பட்டன.
  • சுங்கு - சுங்கப் படை(customs force)
  • கரைப்பிரிவு - கடலோர பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
  • ஈரூடகப்படை - கடலிலும் தரையிலும் பொருதும் படை.
  • தனியார் படை/ கூலி கடற்படை - உலகளாவிய வணிகத்தின் போட்டிக்களப் பெருக்கத்தினால் ஆழ்கடலில் சிரமங்களில் சிக்கிய வணிக கப்பல்களைக் காப்பாற்றல், வலுப்படுத்தல் உதவி ஆகியவற்றை உரிய காலத்தில் செய்வதில் அரசு சிரமங்களை எதிர்நோக்கியது. இனால் தனியார் கடற்படைகளை உருவாக்க வேண்டியதாயிற்று.
  • காவல் படை - நடுக்கடலில் போக்குவரத்திற்குக் காவல் இருந்து படை
  • முத்துக்குளிப்போர் பிரிவு: இப்பிரிவானது கடலுக்கு அடியில் சென்று எதிரியின் கப்பல்களின் சுக்கான்களை நீருக்கு அடியில் இருந்து சேதப்படுத்தி / அழித்து விடும் வலிமை வாய்ந்தது

இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.நன்னிசோழன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!


              தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..