ஆனால் சிலர் இராஜராஜசோழன் அவர்களுடைய ஆட்சி செய்த ஆண்டுகளையும், அவர் அரியணையில் அமர்ந்த ஆண்டுகளை கொண்டு, அவர் ஆட்சி வந்த தேதியை வைத்து தவறாக புரிந்து கொண்டு பதிவிடுகிறார்கள்.
இராஜராஜசோழன் அவர்களுடைய பிறந்தநாள் என்பது தான் சதய விழா மற்றும் பெருமங்கல விழா என்னும் பிறந்தநாள் விழா. பொற்கால ஆட்சியை வழங்க அவர் அரியணையில் பட்டாபிஷேகம் செய்து மன்னராக நியமதித்த நாள் தான் இன்றைய நாள்.
இராஜராஜசோழன் பிறந்த ஆண்டு கிபி 947 முதல் அவர் இறந்த ஆண்டு கிபி 1014. இன்றுவரை உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு, வயது 1078 ஆண்டு இருக்கும். சதய விழா என்பது பிறந்தநாளை குறிக்கும் என்பதால் தான் நான் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன்.
பிறந்த ஆண்டு 947 - இன்றுவரை உயிருடன் இருந்தால் 2025 = அவருடைய வயது 1077.
ஆனால் சிலர் தவறாக கணக்கிடும் ஆண்டுகளையும் கூறுகிறேன்.
இராஜராஜசோழன் அவர்கள் ஆட்சி செய்த ஆண்டும், அரியணையில் அமர்ந்த ஆண்டும் கிபி 985 அவர் இறந்த ஆண்டு கிபி.1014.
985-1014 = 1040 ஆம் பிறந்தநாள் என்று சதயவிழாவை தவறாக சித்தரித்து நாட்களை மாற்றுகின்றனர். ஆனால் சரியா???இதை தான் தவறாக கணக்கிட்டு தவறாகவே பதிவிடுகிறார்கள்.
இந்த ஆதாரம் கொண்டு அவர்களுடைய அறியாமைகளை நான் போக்குவேன்.
மாமன்னர் இராஜராஜசோழனின் மகன் மன்னர் இராஜேந்திரசோழன் பிறந்த ஆண்டு கிபி.971.
இராஜராஜசோழனுக்கு திருமணம் நடந்த ஆண்டு கிபி.970.
இராஜேந்திரசோழன் பிறந்த ஆண்டு கிபி 971.
இராஜராஜசோழனுக்கு திருமண நடக்கும் பொழுது, அவருடைய வயது 24.
தவறாக பதிவிடுவோர்களை கேளுங்கள்.
தந்தை பிறப்பதற்கு முன்பே மகன் பிறந்து இருப்பாரா , மற்றும் இராஜராஜசோழன் இறப்பு நிகழ்ந்த பொழுது அவருடைய வயது 67.
உங்களுக்கு புரிகிறதா தோழரே......
அவரின் பிறப்பு நாளை சதயவிழா - 1078.
அவரின் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்த ஆண்டு 985.அந்த ஆண்டு வைத்து கணித்தால் இன்றுவரை 1040.
வரலாற்றை திருத்தி எழுதக்கூடியவை அல்ல .நடந்த நிகழ்வை சரியான சான்றுகளை வைத்தே கூற முடியும்.
- ஐய்யனார்(தென்புலத்தோன்).
