Pages

Wednesday, 28 November 2018

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்நூல். 


*எட்டுத்தொகை நூல்கள்*
(வேறு பெயர்கள்)
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை

*நற்றிணை*
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்

*குறுந்தொகை*
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.

*ஐங்குறுநூறு*
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை

*பரிபாடல்*
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.

*கலித்தொகை*
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்

*அகநானூறு*
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு

*புறநானூறு*
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.

*பத்துப்பாட்டு நூல்கள்*:

*திருமுருகாற்றுப்படை*
1.முருகு
2.புலவராற்றுப்படை.

*பொருநராற்றுப்படை **
           இல்லை

*சிறுபாணாற்றுப்படை*
1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்

*பெரும்பாணாற்றுப்படை*
1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.

*மலைபடுகடாம்*
1.கூத்தராற்றுப்படை.

*குறிஞ்சிப்பாட்டு*
1.பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு

*முல்லைப்பாட்டு*
1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.

*பட்டினப்பாலை*
1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு

*நெடுநல்வாடை*
1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).

*மதுரைக்காஞ்சி*
1.மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.

*பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்*
*வேறு பெயர்கள்*

*நாலடியார்*
1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.

*நான்மணிக்கடிகை*
1.துண்டு
2.கட்டுவடம்.

*களவழி நாற்பது*
1.பரணி நூலின் தோற்றுவாய்

*திருக்குறள்"*
1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் 10.பயன்(நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்

*பழமொழி நானூறு*
1.பழமொழி
2.உலக வசனம்.

*முதுமொழ்க்காஞ்சி*
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.

*கைந்நிலை*
*ஐந்திணை அறுபது*

*ஐம்பெருங்காப்பியங்கள் வேறுபெயர்*

*சிலப்பதிகாரம்*
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.

*மணிமேகலை*
1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.

*சீவகசிந்தாமணி*
1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச்bg 6.செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
7.இயற்கை தவம்
8.முதல் விருத்தப்பா காப்பியம்
9.சிந்தாமணி
10.தமிழ் இலக்கிய நந்தாமணி

*குண்டலகேசி*
1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 15 November 2018

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

📒 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் - பகுதி III
📒 அடிப்படை உரிமைகள் விதி 12 - 35
📒 விதி க்கு வேறுபெயர்  ஆங்கிலத்தில் - Art
📒 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது - அமெரிக்கா
📒 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை - சொத்துரிமை
📒 சொத்துரிமை பற்றி கூறும் விதி - 31
📒 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது - 44 ச.தி. (1978)
📒 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி - 300A
📒தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் - 6
1. சமத்துவ உரிமை (விதி 14 - 18)
🔺விதி 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
🔺விதி 15 - சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை
🔺விதி 16 - அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
🔺விதி 17 - தீண்டாமை ஒழிப்பு
🔺விதி 18 - பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)
2. சுதந்திர உரிமை (விதி 19  - 22)
🔺விதி 19 - உரிமைகள்
* பேச்சுரிமை
* சங்கம் அமைக்கும் உரிமை
* இந்தியவில் எங்கும் செல்ல உரிமை
* இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை
* எந்த தொழிலையும் செய்யும் உரிமை
* ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை
🔺விதி 20 - குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
🔺விதி 21 - தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை
🔺விதி 22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 - 24)
🔺விதி 23 - சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை
🔺விதி 24 - குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது
4. மத உரிமை (விதி 25 - 28)
🔺விதி 25 - 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு
5. கல்வி கலாச்சார உரிமை (விதி 29 - 30)
🔺விதி 29 - சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை
🔺விதி 30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை - விதி 32
🔺விதி 32 - இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்
இந்த விதி கூறும் பேராணைகன் - 5
1.ஹேப்பிஸ்கார்பஸ் - ஆட்கொனர் நீதிபேராணை
2. மான்டமஸ் - செயலுறுத்தல் நீதிபேராணை
3. ப்ரோஹிபிசன் - தடையுறுத்தும் நீதிபேராணை
4. கோவாரண்ட் - நெறிமுறையுறுத்தல் நீதிபேராணை
5. செர்சியோரைய - தகுதி முறை வினவும் நீதிபேராணை.

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 13 November 2018

கந்த சஷ்டி கவசம் அறிவியல் விளக்கம்

கந்த சஷ்டி கவசம் அறிவியல் விளக்கம் 


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் நம் தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

Sunday, 4 November 2018

உங்கள் கண்களை கவரும் 10 கற்கள் மற்றும் கனிமங்கள் - பாகம் 1.

உங்கள் கண்களை கவரும் 10 கற்கள் மற்றும் கனிமங்கள்.

இயற்கை ஒரு வரப்பிரசாதமாகும் இயற்கை நமக்கு பல அதிசயங்களை அளித்திருக்கிறது. அவை ஒன்றுதான் தற்போது நீங்கள் காணப்போகும் கற்கள். இந்த அரிய வகை கற்கள் மற்றும் கனிமங்கள் மாற பல ஆயிரம் வருடங்கள் தேவைப்படுகின்றது. நீங்கள் காணப்போகும் இந்த கற்கள் மிகவும் வண்ணமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கக் கூடியது. அப்பேர்பட்ட 10 அழகிய கற்கள்.

சன்செட் தீ ஓபல்:



அமிலஸ் ஜியோட்:



ரோஸ் குவார்ட்ஸ் ஜியோட் : 



பர்மிஸ் டூர்மலைன்:



மின்னல் ரிட்ஜ் பிளாக் ஓபல் : 



ஃப்ளுரைட்:



மலாச்சியிலுள்ள கிறைசோகோலா:



ரோடோக்ரோஸிட்:



டைட்டானியம் குவார்ட்ஸ்:



அசுராய்ட்: 




        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



தஞ்சைப் பெரிய கோவிலை கட்ட முக்கிய பங்கு வகித்தவர்ளின் பெயர் என்ன ?

தஞ்சைப் பெரிய கோவிலை கட்ட முக்கிய பங்கு வகித்தவர்கள்.





தஞ்சை பெரிய கோயில் ஆனது ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கின்றது கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.

கலை வடிவிலும் சரி ஆன்மீக வடிவிலும் சரி, இந்த கோவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது, உலகத்தின் முக்கியம் பாரம்பரிய சின்னமாக முக்கிய UNESCOவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலானது ராஜராஜ சோழன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது .

இந்த கோவிலை கட்ட ராஜராஜசோழன் உடன் முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்பதைப் பற்றியே இந்த செய்தி !!!

· இந்த கோவிலை கட்ட முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்றால் முதலாம் ஆனவன் ராஜராஜ சோழன்.

· வேத சோழ குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.

· மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன்.

· இளைத்த சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்.

· இக்கோவிலுக்கு கணக்கற்ற நகைகளையும், செப்புத் திருமேனிகளையும் கொடையாக அளித்த சகோதரி ராஜராஜனின் தங்கை குந்தவை ஆவாள்.

· திருச்சுற்று மாளிகையில் கட்டிய ராஜராஜ சோழனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் எனக் கூறப்படும் மும்முடி சோழ பிரம்மராயன்.

· பெரிய கோவிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் பொய்கை நாடு கிழவன்.

· ஆதித்ய சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.

· ராஜகுரு ஈசான சிவ பண்டிதர்.

· கோவிலின் குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவண பிடாரன்.

· கற்களில் எழுத்து வெட்டி வைத்த சாத்தான்குடி வெள்ளாளன் இறைவி பாருலுடையன்.

இவர்கள் அனைவருக்கும் பெரியகோவிலின் வாய்ப்பிலும் வளர்ப்பிலும் மிகுந்த பங்குண்டு.

தமிழால் இணைவோம் !!!          அறிவால் உயர்வோம் !!!                   தமிழ் வாழ்க !!!     அறிவியலின் தேடல் தொடரும்.                வலியே  " வலிமை "         - அய்யனார் (வால்வரின்)..

சீன குழந்தையின் மழலை திருக்குறள்.


உலகில் தோன்றிய முதல் மனித இனம்
" குமரின் " என்னும் தமிழன்.
இன்று உள்ள மூக்கடலையும் சூழ்ந்த தமிழ்நாடு !!!!
அன்றேய இரண்டே கடலாக இருந்த சொர்க்க பூமி
" குமரிக்கண்டம் ".
இதில் உருவான ஒட்டுமொத்த உலகமே இன்று பல உண்மைகளை புதைக்கிறது.
நம் தந்தையான இலெமுரியன் என்னும்  குமரியன் மகளே இந்தியா !!!!
தந்தையை அழிக்க எண்ணுகிறாள் என்பது வருத்தமாக இருக்கிறது.
ஆனால் உலகம் அவர்களின் தந்தையை காக்க முயற்சிக்கிறது.
தமிழின் மரபு இன்றுவரை பல நாட்டில் பரவி உள்ளது.
உதாரணமாக இந்த சீனா நாட்டில் நமது பெருமையை காணுங்கள்.
சீன குழந்தையின் மழலை திருக்குறள்.
இரண்டே அடியில் உலகை அடக்கியவன்
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல்  மாமன்னன் திரு.வள்ளுவன்.
கடவுளின் மொழியே தமிழ்.
       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
          தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..