Pages

Friday, 20 December 2019

மனிதனின் எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்குமா ???

இயற்கையுடன் இயைந்து

மனிதனின் எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்குமா ?

நீங்கள் சாபம் விடுவது அல்லது 'கண் வைப்பது 'என்ற விஷயங்களை அவ்வபோது கேள்வி பட்டு இருப்பீர்கள் அல்லவா அவைகள் எல்லாம் வேறு ஒன்றும் இல்லை நமது தீவிர எண்ணம் மூலமாக பிறரை பாதிப்பது தான். ஒருவர் "வயிறு எரிஞ்சி சொல்றன் நீ நாசமாயிடுவ" எனும் போது அவர் எண்ணங்களின் தீவிரதை நாம் புரிந்து கொள்ளலாம். தீவிர எண்ணத்துடன் சொல்லப்பட்ட சாப வார்த்தைகள் எண்ணங்களின் சக்தியால் பலிக்கிறது... பாதிக்கிறது என்கிறார்கள்.
மிக தீவிர எண்ணத்துடன் ஒருவனை பொறாமையாக பார்க்கும் போது அந்த தீவிர தீய எண்ணம் அவனுக்கு ஏதேனும் கேடு விளைவிக்கிறது.

பெரியவர்கள் ஆசிர்வதிக்கும் பழக்கம் இருக்கிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அது வேறு ஒன்னும் அல்ல மேலே பார்த்ததுக்கு நேர் எதிரான செயல் அது. அதாவது நமது நல்ல எண்ணங்களை பிறர் மேல் செலுத்துவது.. 'மனம் குளிர்ந்து சொல்ரேன் நல்லா இருப்பா ' எனும் போது உண்டாகும் ஒரு நேர்மறை சக்தி அந்த சம்பந்த பட்டவர்களை அரண் போல காக்கிறது.

இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞான விளக்கம் தேடினால் கிடைபது கடினம் தான். சரி இப்போது விஞ்ஞான  ரீதியான ஒன்றை பற்றி பார்க்கலாம்.
சில விலங்குகளிடம் உள்ள அசாத்திய திறமை இருக்கிறதே...சொல்ல போனால் இதை விஞ்ஞானத்தை கடந்தது என்றும் கூட சொல்லலாம்.

நீங்கள் புறா வளர்த்து இருக்கிறீர்களா ?புறாக்கள் பொதுவாக ஊரின் வரைபடத்தை நினைவில் வைத்து கொள்ளுவதில் கில்லாடிகள். அதாவது புறாவை நாம் திறந்து விடும் போது அவை பறந்து முழு நகரத்தை நினைவில் வைத்து கொள்கின்றன. எனவே தான் எங்காவது தூரமாக கொண்டு போய் விட்டால் மீண்டும் சரியாக நம்ம வீட்டை தேடி அதனால் வர முடிகிறது.
சரி இது எவ்ளோ தூரம் வரை இப்படி சாதிக்கிறது என்பதை அறிய அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தி அதை தூர கொண்ட போய் விட்டு சில ஆய்வாளர்கள் சோதித்து பார்த்தார்கள். ஆய்வு முடிவு மிக அதிசயமாக இருந்தது. சென்னையில் வளர்க்க பட்ட ஒரு புறாவை கொண்டு போய் டெல்லியில் விட்டால் கூட அது தன் வீட்டை தேடி வந்து விடுகிறது.
இது எப்படி சாத்தியம் ? டெல்லி வரையா பறந்து சென்று ரூட்டை அது மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும்?
நிச்சயம் இல்லை . அதன் உடலில் இயர்கையாக பூமியின் எந்த பகுதியும் தாம்  இருக்கிறோம் என்பதை உணரும் ஒரு GPS சிஸ்டம் இருக்கிறது.

நாம் சம்மருக்கு ஊட்டி கொடைக்கானல் செல்வது போல சீதோஷன மாறுத்தலை தாக்கு பிடிக்க ஒரு துருவத்தில் இருந்து அடுத்த துருவத்திற்கு செல்லும் பறவைகள் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவைகள் கிட்ட தட்ட 20000 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்புகின்றன.

இளம் சிங்கங்கள் கூட்டமாக வேட்டை ஆடும் போது கவனித்து பாருங்கள்.
"மைக் ஒன் நீ அங்க நில்லு... மைக் டூ நீ பின்னாடி நில்லு ... மைக் த்ரி நீ சைட் ல நில்லு . நான் அட்டாக் பண்ணும் போது நீங்க ரெண்டு பேர் சைட்ல வந்து அட்டாக் பண்ணுங்க மீறி தப்பினால் மைக்  ஒன் நீ அடிச்சிட்டு..." என்று திட்டமிட்டு பேசி கொண்டதை போல மிக நேர்த்தியாக அவைகள்  தனக்கான இடம் என்ன வேலை என்ன என்பதை சட்டென்று முடிவு செய்து செயல் படுவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

எறும்புகளின் கூட்டத்தை உற்று பாருங்கள் அந்த மொத்த கூட்டமும் ஒரு ஒற்றை உயிரினத்தை போல செயல் படும். அவைகளுக்கு மொத்தமாக ஒரு கூட்டு மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் 100 எறும்பு இருக்கும் ஒரு கூட்டத்தை நினைத்து பாருங்கள் ஒவொன்றும் ஒரு திசையில் போக பார்க்க  அவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமா ?

ஆக அறிவியல் ரீதியாக கவனித்து பார்த்தால் இவைகள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு ஒன்றி இருக்கின்றன.
அப்படி ஒன்றி இருபவர்களுக்கு தான் இயற்கை தனது ரகசியங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது.
ஒரு பூகம்பம் வர போவதை 7 மாதத்திற்கு முன்பே பாம்புகளால் உணர முடியும் என்கிறார்கள். அதுவும் இங்க இருக்கிற பாம்புக்கு மலேசியா வில் வரும் பூகம்பம்..இது எப்படி இருக்கு?
புதிய ஊரில் ஒரு 5 கிலோ மீட்டர் கொண்டு போய் விட்டால் கூட மனிதன் குழம்பி போவான்.. பறவைகள் கிட்ட தட்ட 20000 கி. மி சரியாக பறப்பது எப்படி ? ஒரு சாதாரண தேனீ பல கிலோ மீட்டர் தூரம் பறந்து உணவு தேடி கொண்டு சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. அதற்க்கு இருக்கும் சின்ன கண்ணை வைத்து கொண்டு வழியை பார்த்து சின்ன மூளையை வைத்து கொண்டு இவ்ளோ தூரம் சரியாக பறப்பது எப்படி ?

ஒரு யானை தனது வாழ்நாள் முழுதும் பார்க்கும் எந்த நிகழ்ச்சியையும் மறப்பது இல்லை என்கிறார்கள். அதன் மூளை என்ன தான் சிறந்த மூளை என்றாலும் மனிதன் மூளை அளவு வளர்ச்சி கொண்டது அல்ல . ஆனால் மனிதனுக்கு அந்த நினைவு திறன் சாத்தியம் இல்லையே எப்படி ?
ஒரு பாம்பு தனது நாக்கை நீட்டினால் போதும் தனக்கு பின்னால் பறக்கும் ஒரு பட்டாம் பூச்சி எவ்ளோ தூரத்தில் இருக்கிறது அதன் பரிமாணம் என்ன சைஸ் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். (பாம்புகள் அடிகடி நாக்கை நீட்டுவது மோப்பம் பிடிக்க தான். நாக்கின் மூலம் தான் அவை மோப்பம் பிடிக்கின்றன )

விலங்குகள் பல வகை ஆற்றலில் நம்மை விட மேம்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அவைகள் உயிர்வாழ அந்த திறமைகளை தான் சார்ந்து இருக்கின்றன. அவைகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன எனவே அவைகள் அழியாமல் அவைகளுக்குள் தொடர்கிறது. மனிதன் தனது உடல் உள்வாங்கும் உடல் உணர்வுகளையும் ...மூளை உள்வாங்கும் உள்ளுணர்வுகளையும் பயன்படுத்துவதை மிக குறைத்து விட்டு தர்க்க ரீதியான அறிவை மட்டுமே பயன் படுத்த தொடங்கியதன் விளைவு இயற்கை வழங்கும் பல கொடைகளை அவன் இழந்து விட்டான்.
இயற்கையுடன் இணைத்து செல்ல முடிந்தால் சில ஆச்சர்யமான அளவில் இயற்கையுடன் சேர்ந்து மனிதனால் பயணிக்க முடியும்.

ஒரு காட்டுக்குள் ஆய்வு செய்ய போன ஆய்வாளர் அவர். ஒரு முறை ஒரு அருவியை படம் பிடித்து கொண்டிருந்த போது ஒரு தள்ளாடும் முதியவரை கண்டார். அந்த முதியவர் அந்த அருவியின் உச்சியில் சென்று தண்ணீருடன் சேர்ந்து குதித்ததை பார்த்து அதிர்ந்தார்.
பதறி போய் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டாரே என ஓடி போய் பார்த்தார். அந்த முதியவர் சிரித்த படி அருவியில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஆய்வாளருக்கு ஆச்சர்யம் தாங்க முடிய வில்லை. மிரட்டும் மரண அருவியில் விழுந்து சிரித்து கொண்டு வரும் இந்த முதியவர் ஒரு மனிதன் தானா என்றே சந்தேகம் வந்து விட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட போது..' நான் தண்ணீரை எதிர்ப்பது இல்லை அவ்ளோ தான் 'என்றாராம். நீருடன் 100 சதம் ஒன்றி போய் விழ முடிந்தால் அருவியின் ஆழம் மனிதனை பாதிப்பது இல்லை என்று ஆய்வாளர் கண்டார்.
இந்த சம்பவம் நாம் நம்புவதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும்  கடினமான ஒன்று. ஆனால் அடுத்து சொல்ல போவதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

ஒரு வண்டியில் 4 பேர் செல்கிறார்கள் அதில் ஒருவர் பயங்கர குடியில் உள்ளார் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த வண்டியின் அச்சு
முறிந்து விட்டது எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது அந்த வண்டி குடை சாய்கிறது  என்று வைத்து கொள்ளுங்கள்.
என்ன நடக்கும் தெரியுமா ? வண்டி விழ போவதை முன்னாடியே அறிந்து விழும் போது முடிந்தளவு தப்பிக்க முயன்றவர்களுக்கு பலத்த அடி படும் ஆனால் என்ன நடக்கிறது என்று கான்ஷியஸே இல்லாத அந்த குடிகாரருக்கு மிக குறைவான அளவே அடி படும் .
காரணம் புவி ஈர்ப்பை எதிர்க்காமல் அப்படியே முழுக்க முழுக்க அதனுடன் அவர் ஒன்றி போவது தான் காரணம். சாதாரணமாகவே குடிகாரர்கள் பல முறை கீழே விழுவதை நாம் பார்க்கலாம். அவர்களுக்கு அதிகம் அடி படுவது இல்லை. ஆனால் சாதாரணமாக நிற்கும் மனிதன் கீழே விழுந்தால் அடி படுகிறது. (இதை படித்து விட்டு யாராவது குடித்தால் இயற்கையுடன் ஒத்து போகலாம் என்று தவறாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி...இயற்கையை முழுமையாக உள்வாங்க விழிபுணர்வு மிக அவசியம் போதை மனிதனுக்கு அது சாத்தியம் இல்லை )

இதை வேறு ஒரு இடத்தில மிக அழகாக பார்க்கலாம். அதாவது குழந்தைகள் இடத்தில் .குழந்தைகள் ஒரு நாளைக்கு பல முறை கீழே விழுகிறார்கள் நம்மை விட நிச்சயம் குழந்தைகள் எலும்பு பலவீனமானது தான். பார்க்க போனால் அவைகளுக்கு பல முறை எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடப்பது இல்லை. காரணம் அவை விழும் போது புவி ஈர்ப்பை எதிர்க்காமல் ஏற்று கொள்கின்றன. அதனுடன் முழுமையாக ஒன்றிணைத்து செல்கின்றன.

குறிப்பாக காட்டில் வாழ்பவர்கள் காட்டு வாசிகள் நம்மை விட இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். அவர்கள் இனத்தில் இதய நோய்.. ஹார்ட் அட்டாக் புற்று நோய் போன்றவைகள் இல்லை. மிக இயல்பானவர்களாக அவர்கள் இருகிறார்கள் ஆனால் மிக விசித்திரமானவர்களாக இருகிறார்கள்.
இன்றளவும் ஒரு ஆதிவாசி இனத்தில் நடந்து கொண்டிருக்கும் மர்ம விசிதிரம் ஒன்று சொல்கிறேன். அந்த காட்டில் வாழ்பவர்கள் பக்கத்து கிராமத்தில் இருப்பவர்களிடம் எப்படி தகவல் தொடர்பு கொள்கிறார்கள்  என்பதை ஆராய்ந்த ஆய்வாளர்கள் தங்கள் அதிர்ச்சியை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் தகவல் தொடர்புக்கு அங்கே உள்ள ஒரு வகை மரத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறார்கள். யாருக்காவது ஏதாவது தகவல் சொல்ல வேண்டும் என்றால் அந்த மரத்திடம் சென்று சொல்வார்கள் அவ்ளோ தான் சம்பந்த பட்டவர் அவர் ஊரில் இன்னோரு மரத்திடம் அந்த தகவலை பெற்று கொள்வார். இது எத்தனையோ ஆண்டுகளாக நடந்து வரும் விடை தெரியா மர்மம். ஆனால் நமக்கு தான் இது மர்மம் அவர்களுக்கு அல்ல. ஒரு தொலை பேசியை பார்த்து அவர்கள் வியக்கலாம் ஆனால் நாம் வியப்பது இல்லை அது போல அந்த மரம் மர்மம் பார்த்து நாம் வியகிறோம் அவர்கள் வியப்பது இல்லை அவர்களுக்கு அது பல வருடமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொலை தொடர்பு சாதனம் அவ்ளோ தான்.
இவைகள் எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது ? இந்த விசித்திரங்களுக்கு எல்லாம் ஒரே காரணம் இயற்கையுடன் ஒன்றி போதல் தான்.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

உயிரினங்களின் செல்கள் பற்றிய ஆய்வுகள்

செல்லுக்குள் செல்வோமா








( உடல் செல்களின் உள்ளே ஒரு பார்வை)

ஆச்சர்யத்தை அள்ளி தரும் உலகின் பல விஷயங்களில் இந்த உடலும் ஒன்று. உற்று பார்த்தால் உடலில் இருக்கும் பல கட்டமைப்புகள் பிரமிப்பை உண்டு பண்ணும்.
உதாரணமாக ஒரு மனிதனின் உடலில் உள்ள மொத்த DNA வை எடுத்து அந்த நூலை நேராக நீட்டி வரிசையாக வைத்தால் அது பூமியில் இருந்து சூரியன்  சென்று மீண்டும் பூமி வந்தால் எவ்வளவு தூரம் இருக்குமோ..அந்த ... தூரம்... (இருங்க அவசர படாதீங்க.. )அந்த தூரம்.. அதை விட கிட்ட தட்ட ஒரு 300 மடங்கு அதிகம் தூரம் இருக்குமாம்...( அல்லது கிட்ட தட்ட மொத்த சூரிய குடும்ப தொலைவை போல இரு மடங்கு என்று சொல்லலாம்..'எம்மாடி..' )
DNA வில் நாம் மெமரியை பதிய முடியும் எனில் ஒரே ஒரு கிராம் DNA வில் நாம் உலகின் மொத்த டேட்டா வை சேகரித்து வைக்க முடியும். இப்படி நிறைய ஆச்சர்யங்களை சொல்லி கொண்டே போகலாம்.

"செல் " படம் வரைந்து பாகம் குறித்த பள்ளி நினைவு நம் அனைவருக்கும் இருக்கும். இன்று மீண்டும் ஒரு முறை செல் என்பதை பற்றி அதில் உள்ள உறுப்புகள் பற்றி...அது செயல் படும் விதம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம் வாருங்கள்..

🎯   🎯  🎯

முதலில் செல் என்பது என்ன ? ஒரு கட்டிடம் செங்களால் ஆனது என்பதை போல ஒரு உயிருள்ள உடல் எனும் கட்டுமானம் செல் எனும் செங்கல் அடுக்குகளால் ஆனது.
உலகத்தில் உள்ள தாவரம் விலங்கு மனிதன் பூச்சி எல்லாமே இப்படி தான். ஆனால் எல்லா செல்களும் ஒன்றை போலவே இருக்குமா என்றால் இல்லை. தாவர செல்கள் கொஞ்சம் மாறு பட்டவை. உதாரணமாக தாவர செல்களில் cell wall  என்று ஒரு மேலடுக்கு பாதுகாப்பு இருக்கும். (தாவர உடல் கடினமாக இருக்க காரணம் இது தான் ) அது எந்த விலங்கு  செல்களிலும்  இல்லை.  சூரிய ஆற்றலை நேராக இழுத்து சக்தியாக மாற்றும் சிறப்பு அமைப்பு தாவர செல்லில் உண்டு அதுவும் விலங்கு செல்லில் இல்லை.

 இப்படி வேற்றுமை இருக்கும் அதே நேரத்தில் உலகில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொருந்தும் படி சில ஒற்றுமைகள் இருக்கின்றன.  உதாரணமாக அனைத்து செல்லிலும் cell membrane இருக்கும் (செல்களை தன்னை சுற்றி உள்ள சுற்றுசூழலில் இருந்து பிரித்து வைக்கும் கவசம் ) அடுத்ததாக sytoplasm என்ற ஒரு ஜெல் அமைப்பு இருக்கும் (செல் பூரா நிரம்பி இருப்பது இது தான். செல்களின் பாகங்கள் இதில் தான் மிதந்து கொண்டு இருக்கும் )
அப்புறம் ஜெனடிக் மெடிரியல் இருக்கும் (உதாரணம் DNA இவைகள் தான் அந்த சம்பந்த பட்ட உயிரியின்  மரபு பற்றிய தகவல்களை தாங்கி இருக்கும் )

சரி இப்போதைக்கு விலங்கு செல்கள் பற்றி மட்டும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

      🧬 🧬   விலங்கு செல்லில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று சிக்கலான அமைப்பு நிறைந்த மேம்பட்ட செல்கள். அதாவது நாய் பூனை எலி பூச்சி யானை மனிதன் என்று அனைத்திலும் இருக்கும் செல்கள். (தாவர செல்கள் கூட இந்த வகையில் தான் சேரும் ) இவற்றிற்கு பெயர்" Eukaryotic cell "  .
இந்த வகை செல்கள் பல  உள் உறுப்புகளை... செல் உறுப்புகளை கொண்டு இருக்கும் இந்த உறுப்புகளை  "organells " என்று அழைக்கிறோம்.மனித உடலில் எப்படி organs இருக்கிறதோ அப்படி செல்லின் உடல் பாகங்கள் தான் ' organells '. இதை தவிர இந்த வகை செல்கள் ஒரு உட்கருவை கொண்டு இருக்கும் (nucleus ).  மற்றும் மேலும் சில சிறப்பு பாகங்களை கொண்டு இருக்கும்.

இராண்டாவது வகை செல்கள் prokaryotic cells என்று அழைக்க படுகின்றன. (இரண்டு வகை செல்களில் மூத்தது இது தான்.. இதில் இருந்து தான் யூகிரியாடிக் செல்கள் பிற்காலத்தில் பரிணாமம் அடைந்தது.. )
இவைகள் முந்திய வகை அளவு சிக்கல் இல்லாதவை. நியூக்ளியஸ் எனும் உட்கருவோ அல்லது membran போர்வையால் போர்த்த பட்ட உள்ளுறுப்புகளோ இல்லாதவை . (ஆனால் இவற்றிலும் கூட மரபணு சங்கதிகள் மட்டும் இருக்கும் ) இவைகள் எப்போதும் ஒரு செல் உயிரியாக இருக்கும் (உதாரணம் வைரஸ் ) அல்லது unicellular organisms என்று சொல்ல கூடிய ஒற்றை செல்கள் சில இணைந்து உண்டான உயிரியாக  இருக்கும் (உதாரணம் பாக்டிரியா )

சரி நாம் இப்போது Eukaryotic cell கள் பற்றி பார்க்கலாம்..
(இந்த யூகேரியொட்டிக் செல்கள் 4 வகையாக பிரிக்கிறார்கள்.. Animalia, plantae, fungi, protista பெயர்களை வைத்தே அவைகள் பிரிக்கப்பட்ட காரணம் புரிந்திருக்கும் )

இதில் இப்போது நாம் பொதுவாக விலங்கு செல்களில்  உள்ள பாகங்கள் (organells ) மற்றும் அவைகள் செயல்படும் விதம் பற்றி மட்டும் பார்க்க போகிறோம்.

உடம்பில் உள்ள பல கோடி கோடி செல்களில் ஒவ்வொரு 'செல்'லும் ஒரு தனி தொழிற்சாலை எனலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு செல்லிலும் விஷயங்கள் நடக்கின்றன.
🎈ஒரு பெரிய நிறுவனத்தில்  இருப்பது போல ஒரு செல்லிலும் கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கிறது.
🎈ஒரு தொழிற்சாலையில் இருப்பதுபோல 'செல்'லிலும் ஒரு ஆற்றல் மூலம் (power sorce ) இருக்கிறது.
🎈ஒரு அரசு நிர்வாகதில் இருப்பது போல ஓவ்வொரு செல்லிலும் குப்பை அகற்றும் கேந்திரம் இருக்கிறது.
🎈ஒரு தர கட்டுப்பாடு ....வேண்டியதை மட்டும் உள்ளே விடும் ஒரு டோல் கேட் அமைப்பு  எல்லாம் ஒரு செல்லில் இருக்கிறது.

அந்தந்த தனித்தனி வேலையை செய்வதற்கு செல்லில் தனித் தனி சிறப்பு உறுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான உறுப்புகளை பற்றி அவைகள் என்ன செய்கின்றன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். (இதற்கு மேல் நீங்கள் 'செல்'லின் படத்தை பார்த்து கொண்டு மேற்கொண்டு படிப்பது உதவியாக இருக்கும்.)

பொதுவாக கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய செல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யலாம் :
அதாவது ஒரு செல்லை எடுத்துக்கொண்டு அதை ஒரு அறை அளவிற்கு பெரிதாக்கினால் பார்க்க எப்படி இருக்கும் ?

ஒரு அறை அளவிற்கு பெரிதாக மிதக்கும் ஒரு ஜெல் பந்து ஒன்றை கற்பனை செய்யுங்கள். அந்த பந்தை முழுமையாக ஒரு மெல்லிய ஊடுருவும் தன்மை கொண்ட போர்வை  போத்தி இருப்பது போல கற்பனை செய்யுங்கள் அந்தப் போர்வை தான் ''செல் மெம்பரைன்". அல்லது "பிளாஸ்மா மெம்பரைன் " செல் முழுக்க பரவி இருக்கும் ஜெல் நீர் அதுதான் "சைட்டோ பிலாசம். "
அந்த ஜெல் போன்ற பந்திற்குள் உற்று பார்க்கிறீர்கள் அங்கே ஒரு கால் பந்து அளவு ஒரு அடர்த்தியான பந்து கண்ணுக்கு தெரிகிறது. அது தான் உட்கரு..நியூக்ளியஸ்.. அந்த கால் பந்துக்குள்.. x வடிவத்தில் சில பொருட்கள் மிதக்கின்றன அவைகள் தான் குரோமோசோம் பொட்டலங்கள்.( அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தால் உள்ளே டி.என்.ஏ இருக்கும் , அப்புறம் அந்த DNA குள் உற்று பார்த்தால் அங்கே ஜீன்கள் இருக்கும்.)

இது தவிர அந்த கால் பந்திற்குள் இன்னும் ஒரு கிரிக்கெட் பந்து அளவு சிறிய அடர்த்தியான பந்து ஒன்று தெரிகிறது.. அதுக்கு பெயர் நியூக்ளியோலஸ். (இங்கே தான் ரிபோசோம் உற்பத்தி நடக்கிறது. அந்த ரிபோசோமின் வேலை புரோட்டீன் உண்டு பண்ணுவது.. ஒவ்வொரு செல்லுக்கும் அந்தப் புரோட்டின் இன்றியமையாதது.)

இதை தவிர அந்த ஜெல் பந்து முழுக்க பல வகை பொருட்கள் மிதக்கின்றன. மைட்டோகாண்ட்ரியா... கோல்ஜி பாடி.. லைசோசம்.. சைட்டோஸ்க்கெலட்டன்.. rough endoplasmic reticulum ,(சுருக்கமாக R.E.R என்பார்கள் ) smooth endoplasmic reticulum (S.E.R),vacuole , cytosol ,centriole. .. etc.. etc. அந்த  ஒவொண்ணும் ஒவொரு வேலை...

செல்கள் பல வேலைகளை செய்கின்றன. அவற்றை சுருக்கி பார்த்தால் முக்கியமாக 3 வேலைகளை அவைகள் செய்வது தெரிய வரும். அது...
1. உணவு எடுத்து கொள்ளுதல்
2. கழிவு வெளியேற்றுதல் .
3. மறு சுழற்சி.

அப்படியே இந்த 3 செயலுக்கு உதவும் முக்கிய 3 பாகங்கள் என்ன என்று பார்த்தோமே என்றால்...

1. Plasma membrane (செல் உடலை மூடி இருக்கும் போர்வை..)
2.  Nucleos (உட்கரு )
3.cytoplasm (செல் பூரா நிரம்பி உள்ள ஜெல் போன்ற திரவம் )

சரி இவற்றையும் மற்ற பாகங்களையும் ஒவொன்றாக பார்க்கலாம்...முதலில் செல் எங்கும் பரவி இருக்கும் அந்த திரவதையே எடுத்து கொள்வோம்.

☢️ #Cytoplasm☢️  :

இது செல் எங்கும் நிரம்பி இருக்கும் திரவம்.
சைட்டோபிளாசதின் வேலை செல் முழுக்க பொருட்களை இட பெயர்ச்சி செய்தல். அப்புறம் கார்போஹைட்ரேட் புரோட்டீன் மாதிரி பொருட்களை கரைத்து வைத்து இருத்தல்..
இது மட்டும் இல்லாமல் செல்லிற்கு உடல் வடிவத்தை இவைகள் தான் கொடுக்கின்றன. சைட்டோ பிலாசம் இல்லை எனில் செல் காற்று இறங்கிய பலூன் போல ஆகி விடும்.

☢️ #Plasma_membrane ☢️ :

பிளாஸ்மா மெம்பரைன் அல்லது செல் மேம்பரைன் இது முன்பே சொன்னது போல செல்லை போர்த்தி உள்ள ஒரு போர்வை ஆகும். இது எதனால் செய்ய பட்டது என்று உற்று கவனித்தீர்களேயானால்.. lipids மற்றும் proteins களால் ஆன இரட்டை அடுக்கு போர்வை இவைகள் என்பது தெரியும்.

இவைகள் எப்படி இருக்கும் என்றால்... வரிசையாக இரட்டை அடுக்கு செங்கல் அடுக்கி வைத்து ஒரு சின்ன சுவர் செய்ததை போல கற்பனை பண்ணுங்கள் அந்த இரட்டை அடுக்கு செங்கல் lipds எனும் பொருளால் ஆனது. இப்போ அந்த சின்ன சுவரில் ஒரு இடத்தில் ஒரு குட்டி கேட் ஐ கற்பனை பண்ணுங்கள் இந்த கேட் புரோட்டினால் ஆனது. கிட்டத்தட்ட இப்படி ஒரு அமைப்பினால் செய்யப்பட்ட போர்வை தான் 'செல்'லை மூடி உள்ளது. இதில் ஆக்சிஜன் மற்றும் நீர் போன்ற சிறிய மாலிகியூல்ஸ் அந்த லிபிட்ஸ் படலத்தை ஊடுருவி செல்லுக்குள் நுழைகின்றன. அதே சமயம் குளுக்கோஸ் மாதிரி பெரிய மூலக்கூறுகள் அந்த புரோட்டீன் கேட் ஐ உபயோகித்து உள்ளே நுழைகின்றன.

பிளாஸ்மா மெம்பரைன் தன்னிடம் வரும் எல்லாம் பொருட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை இந்த படலம் ஒரு semi - permable படலம் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்கள், மூலக்கூறுகள் , அயணிகள் தான் செல்லுக்குள் செல்ல  அனுமதிக்க படுகின்றன.

அடுத்ததாக முக்கியமான ஒரு பாகத்தை பற்றி பார்க்கலாம்..

☢️ #உட்கரு (nucleos ) : ☢️

செல்லுக்குள் அடர்த்தியாக ஒரு உட்கரு காண படும் இவைகள் தான் ஒரு செல்லின் கட்டுப்பாட்டு மையம். (இவைகள் சரியாக செல்லின் மையத்தில் இருக்கும் என்று பலர் நினைப்பது உண்மை இல்லை இவைகள் செல்லில் ஓரம் சாரம் எங்கே வேணா மிதந்து கொண்டு இருக்கும் )  இந்த கட்டுப்பாட்டு மையத்தில் தான் செல்லின் மரபணு பொருட்களான DNA இருக்கும்.  (ஒரு செல் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாம் தீர்மானிப்பது இந்த டி.என்.ஏ கள்தான் )

☢️ #Nucleolus ☢️ :

உட்கருவிற்குள் இருக்கும் இன்னோரு பொருள்  இந்த நியூகளியோலஸ். (அந்த கிரிக்கெட் பந்து..) இங்கே தான் ribosomes கள் உண்டாக்க படுகின்றன. இந்த ரிபோசோம் களின் வேலை முன்பே சொன்னது போல புரதத்தை அதாவது புரோட்டினை உண்டு பண்ணுவது. (இந்த புரோட்டினை உண்டு பண்ணுவதற்கான தகவலும் முன்பு பார்த்த DNA கிட்ட தான் இருக்கு...)

☢️ #Endoplasmic_Reticulum (ER) ☢️

ஒரு பந்தை.. நிறைய சுருக்கங்கள் நிறைந்த ஒரு துணி பையால் சுற்றியது போல.. நியூக்ளியசை சுற்றி ஒரு மடிப்பு வாய்ந்த பெட்சீட் போர்த்தியது போன்று இருக்கும் ஒரு அமைப்பு தான் எண்டோபிளாஸ்மிக் ரெடிகுலம்.. (E .R )  இந்த சுருக்கங்கள் உண்மையில் ஒரு மடிப்பு நிறைந்த பொருட்களை கடத்தும் குகை வழி. ER இன் வேலை புரோட்டினை உண்டு பண்ணும் ரைபோசோமை  செல்லில் இட பெயர்ச்சி பண்ண வைப்பது. இதை rough ER என்று அழைக்கிறார்கள். காரணம் செல்லில் இன்னோரு இடத்தில் இன்னோரு ER உள்ளது அது Smooth ER இவைகள் ரிபோசோம்களை கொண்டிருப்பது இல்லை. இவைகளின் வேலை fat .. கொழுப்பை உண்டு பண்ணுவது. மற்றும் விஷ முறிவு..

☢️ #Ribosomes ☢️

மேலே சொன்ன ரைபோசம்கள் எப்படி புரதத்தை உண்டுபண்ணுகிறது என்று உற்றுப் பார்த்தால்...
அவைகள் அமினோ அமிலங்களை இணைத்து ஒரு சங்கிலித் தொடரை உருவாக்குகின்றன. இந்த அமினோ அமிலங்களின் சங்கிலித்தொடரை தான் நாம் ப்ரோடீன் அல்லது புரதம் என்கிறோம்.
(இந்த செயல்முறையை ட்ரான்ஸ்லேஷன் என்கிறார்கள். )

☢️ #Golgi_body ☢️

கோலஜி பாடியை. கோலஜி காம்ப்ளெக்ஸ் அல்லது கோலஜி அப்ரெட்ஸ் என்று வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். ஆனால் அதை கண்டுபிடித்தவரின் பெயரான கோல்ஜி மட்டும் மாற வில்லை. இது செல்லில் இருக்கும் இன்னோரு சுருட்டி வைக்க பட்ட பெட்சீட் அமைப்பு..

இவற்றின் வேலை என்ன தெரியுமா.. ரைபோசோம்கள் உண்டு பண்ணும் புரதம் இருக்கிறதே அது கச்சா எண்ணெய் மாதிரி பயன் படுத்த கடினமான அமைப்பில் இருக்கும் அந்த புரதத்தை வெட்டி ஒட்டி சீர் செய்து அடுக்கி வைத்து சரியாக மூட்டை கட்டி பயன் படுத்தும் வகையில் தயார் செய்து வைப்பது தான் கோல்ஜி பாடியின் வேலை. புரதத்தை சரியாக அடுக்கி வைப்பது மட்டும் இன்றி அவற்றுடன் லிபிட்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டை இணைத்து வைக்கிறது.
புரதம் கோலஜி பாடிக்கு Vesicle எனும் பார்சல் வடிவில் தான் வந்து சேர்கிறது.. அதை பயன்படுத்த கூடிய சீராக மாற்ற பட்ட புரதமாக மாற்றிய பின்  அதே vesicle பார்சலில் வைத்து தான் கோலஜி அனுப்பி வைக்கிறது. அந்த vesicle அப்படியே மிதந்து போய் செல் மெம்பரைன் உடன் இணைந்து கரைந்து புரோட்டினை வெளியிடுகிறது. இதன் மூலம் எங்கே தேவையோ அந்த தேவை இருக்கும் இடத்திற்கு புரதம் கொண்டு செல்ல படுகிறது.

இப்போ அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது செல்லில் ஒரு மிக முக்கியமான பாகத்தை

☢️ #Mitochondria ☢️

ஒரு செல்லின் பவர் ஹவுஸ் என்று அழைக்க படுவது..இந்த மைட்டோகாண்ட்ரியா தான்.. இங்கு தான் செல்லுக்கு தேவையான ஆற்றல் உற்பத்தி நடக்கிறது.  cellular respiration தான் இதன் முக்கிய வேலை. அதாவது உணவில் இருந்து பிரித்து ஆற்றலை வழங்குவது.
மைட்டோகாண்ட்ரியாவின் வேலை ATP யை உற்பத்தி செய்வது.(.. Adenosine triphosphate ) இந்த ATP என்பது  செல்களுக்கு ஆற்றலை தரும் ஒரு ராசாயணம் . இது தவிர இதன் வேலை என்று பார்த்தால் செல் பிரிதல் மற்றும் செல் இறப்பில் கூட பங்கேற்கின்றன .

இவைகள் நாம் உண்ணும் உணவில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிஜன் உதவியுடன் செல் பயன்படுத்த கூடிய ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த நிகழ்விற்கு பெயர் oxidative phosphorylation.
ATP என்பது ஆற்றல் வைத்து இருக்கும் பொட்டலம் எனலாம் அவைகள் தேவை படும் போது ஆற்றலை வெளியிட்டு உதவும்.

ஒரு செல் அழிவு மற்றும் புது செல் உற்பத்தி  என்பது செல் சுழற்சியில் மிக முக்கியமான ஒரு தொடர்ந்து நடக்கும் செயல் .இந்த செல் அழிவிற்கு பெயர் apoptosis . ( வெவ்வேறு செல்களில் வெவ்வேறு வாழ்நாளை கொண்டிருக்கின்றன ) அதில் எந்த செல் அழிய வேண்டும் என்று தீர்மானிப்பதும் மைட்டோகாண்ட்ரியா கள் தான். மேலும் செல் அழிவில் சில என்சைம்களை கொடுத்து அழிக்க  உதவுவதும் இவைகள் தான்.

ஓவல் வடிவில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறேன் அது ஒரு தியரி அதன் பெயர் " endosymbiyosis theory "

இதன் படி மைட்டோகாண்ட்ரியா என்பது நமது உடலுக்கு சொந்தமானதே இல்லை.. அது நமது உடலில் தங்க வந்த ஒரு பண்டைய பாக்டிரியா... கால போக்கில் அது நமது உடலின் செல்லின் ஓரு அங்கமாக மாறி விட்டது என்கிறார்கள்.
இந்த தியரிக்கு வலு சேர்க்கும் வகையில் மைட்டோகாண்ட்ரியாவின் உடலமைப்பு அமைந்து உள்ளது.

மைட்டோகாண்ட்ரியா தனக்கென தனி ரிபோசோம் கொண்டுள்ளது அதை வைத்து தனியாக புரதம் தயாரிக்கிறது. இவைகள் outer membrane ..மற்றும் innner membrane தனியாக இரண்டு அடுக்கு மெம்பரைன் கொண்டுள்ளன.  அதை விட ஆச்சர்யம் மைட்டோகாண்ட்ரியா தனக்கென தனி DNA களை வைத்துள்ளது..
மேலும் மறுசுழற்சி.. மற்றும் பிரதி எடுத்தல் வேலைகளை செய்கிறது . மற்ற பாகங்கள் தன்னை பிரதி எடுக்க DNA வின் உத்தரவை கேட்க வேண்டி உள்ளது. ஆனால் மைட்டோகாண்ட்ரியா தனது சொந்த DNA தகவல் உதவி உடன் பிரதி எடுத்து கொள்கிறது. இது நியூக்ளியஸ்  எனும் கட்டுப்பாடு மையத்தை  நம்பி இருப்பது இல்லை. (இதனால் இதற்கு செல்ப் ரெப்ரிகேட்டிங் ஆர்கணரி என்று பெயர் ) அதாவது செல்லுக்குள் வாழும் ஒரு குட்டி செல் போல இது செயல்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியா இரண்டு அடுக்கு மெம்பரைன் களை கொண்டு உள்ளது அந்த இரண்டு அடுக்குகளுக்கும் நடுவே கொஞ்சம் இடைவெளி உள்ளது அந்த இடத்திற்கு பெயர் Intermembrane space
இதில் உள் மெம்பரைன் மடிப்புகள் நிறைந்ததாக உள்ளது இதை cristae என்று அழைக்கிறார்கள். அந்த உள் மடிப்பை தாண்டி நடுவில் இருக்கும் இடைவெளியில் இருப்பதை matrix என்கிறார்கள். இங்கே தான் மைட்டோகாண்ட்ரியாவின் தனி பட்ட DNA உள்ளது .மேலும் பல வகை என்சைம்கள் நிறைந்த இடம் இது. அவைகள் ATP உருவாக்கத்திற்கு முக்கிய தேவைனாவை.

மைட்டோகாண்ட்ரியா உடலில் உள்ள அனைத்து செல்களிலும் ஒரே அளவு இருக்காது.. தேவைக்கு ஏற்றார் போல இருக்கும். உதாரணமாக ஈரல் செல்கள் கொஞ்சம் அதிகம் ஆற்றல் தேவையை கொண்டு இருப்பதால் அவற்றில் மைட்டோகாண்ட்ரியாகள் 2000 திற்கும் அதிக அளவில் இருக்கும்.(. ரத்த செல்களில் இவைகள் சுத்தமாக இல்லை ) அதுவே இதய செல்களில் உள்ள சைடோபிலாசத்தில் பார்த்தால் 40 சதம் நிரம்பி இருப்பது இவைகள் தான். (அங்கு தேவை அதிகம் ) விந்தணுவில் வால் இயக்கத்திற்கு ஆற்றலை அளிக்க அங்கேயும் இவைகள் அமைந்து இருக்கின்றன.

மைட்டோகாண்ட்ரியாகள் கால்சியத்தை உறிஞ்சி வைத்து கொண்டு தேவை படும் போது பயன்படுத்துகின்றன.
மேலும் மைட்டோகாண்ட்ரியாகள் செல்லுக்கு வெப்பத்தை கூட உண்டு பண்ணி தருகின்றன.

சரி அடுத்த பாகத்திற்கு போகலாம்..

☢️ #Lysosome ☢️

நம்ம வயிற்றில் எப்படி இரைப்பை என்ற ஜீரண உறுப்பு உள்ளதோ அப்படி செல்லுக்குள் இருக்கும் ஒரு இரைப்பை என்று இதை சொல்லலாம். தனக்குள் வரும் எதையும் உடைத்து அரைத்து துண்டாக்கி விடும். உள்ளே ஒரு ஆள் அறவை இயந்திரத்துடம் காத்திருக்கும் ஒரு இடமாக லைசோசோமை கற்பனை பண்ணலாம்.

உள்ளே ஜீரணத்திற்கான சில சிறப்பு என்சைம் களை இவைகள் கொண்டு இருக்கின்றன. உனவை ஜீரணம் செய்வது ஆனாலும் சரி அல்லது இறந்த செல்களை  அரைத்து துண்டாகுவதானாலும் சரி இங்கு தான் நடக்கிறது. அவ்வளவு ஏன் பாக்டிரியா மாதிரி எதிரி யாராவது ஊடுருவி விட்டால் அதையும் துண்டாகி செயல் இழக்க செய்கிறது லைசோசம்கள்.

இந்த என்சைம்களும் ரிபோசோம் இல் உண்டானவை தான். அவைகள் முன்பு பார்த்தது போல vesicle பார்சலில் கோலஜி பாடி க்கு சென்று அங்கு இறுதி வேலைகள் செய்ய பட்டு லைசோசம்களாக மாறி சைட்டோ பிலாசத்தில் மிதக்கின்றன. தேவை படும் போது செயலாற்றுகின்றன.
இவைகள் single-membrane organelles கள் ஆகும்.

எதையும் கரைக்கும் அந்த என்சைம்கள் ஏன்.. எப்படி இதன் ஒற்றை அடுக்கு மெம்பரனை கரைத்து இந்த உறுப்பையே காரைத்து ஜீரணிக்காமல் இருக்கின்றன. எப்படி இவைகள் பிழைகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியமான ஒரு விஷயம். (நம்ம வயிற்றில் சுரக்கும் ஆசிட் வயிற்றை கரைப்பது இல்லை அல்லவா அப்படி தான்.. )

☢️ #DNA ☢️

உலகில் உள்ள அனைத்து வகையான மூலக்கூறுகளில் மிகவும் புகழ் வாழ்ந்த ஒரு மூலகூறு என்றால் அது  deoxyribonucleic acid என்று சொல்ல கூடிய  DNA தான்.
இந்த குரோமோசோம்.. என்றால் என்ன DNA என்றால் என்ன அப்புறம் ஜீன்கள் என்று எதை சொல்கிறோம் என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும்.. இவைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

செல் நியூக்ளியஸில் DNA கள் இருக்கின்றன என்று பார்த்தோம். செல்லில் உட்காருவில் உற்று பார்த்தால் அங்கே  x வடிவ பொட்டலங்கள் பொட்டலம் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம். இந்த x வடிவ பொட்டலங்களின் பெயர் தான் குரோமோசோம். மனித உடலில் 23 ஜோடியாக மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. சரி அந்தப் பொட்டலதில் என்ன இருக்கிறது என்று அதைப் பிரித்துப் பார்த்தால். உள்ளே அவைகள் குறோமேட்டின் என்கிற வலை பின்னலை வைத்து எதையோ பின்னி வைத்து இருப்பதை பார்க்கலாம். அந்த வலை பின்னலை பிரித்து உள்ளே பார்த்தால் உள்ளே அவைகள் histones என்கிற புரோட்டினால் ஆன நூலை வைத்து எதையோ சுற்றி இருப்பதை பார்க்கலாம். அந்த நூலை உரித்து எடுத்தால் உள்ளே ...அதோ சுருள் ஏணி வடிவில் பத்திரமாக இருக்கும் அந்த பொருள் தான் "DNA " . ஒவொரு குரோமோசோம்களும் தலா ஒரு DNA வை கொண்டு இருக்கும்.
ஏன் இதற்கு இத்தனை பார்சல் பாதுகாப்பு ?

உங்கள் வீட்டில் உள்ளங்கை அளவு ஒரு நூல் கண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நூலை முழுசாக பிரித்துப் போட்டுக் கொண்டே வந்தால் அந்த வீடு முழுவதும் நூல் நிரம்பிவிடும் அல்லவா. அதுவே சரியாக சுருட்டி வைக்கப்பட்டால் வீட்டில் உள்ளங்கை அளவு இடத்தை மட்டும் அது பிடித்துக்கொள்கிறது அல்லவா ? அப்படி ஒரே ஒரு செல்லில் இருக்கும் ஒரே ஒரு DNA வின் நீளம் மட்டும் கிட்ட தட்ட 3 அடி இருக்கும். மனித உடலில் மொத்தம் பல பில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து நீட்டி விட்டால் முன்பு சொன்னது போல சூரியனின் தொலைவு போல 300 மடங்கு நீளும். இதை சிறப்பாக சுருட்டி வைக்க தான் அந்த super coil அமைப்பு.

இதில் ஜீன்கள் என்பது என்ன ? அந்த DNA குள் அடங்கி இருக்கும் சில சிறப்பு தகவல் அமைப்பு தான் ஜீன்கள்.
DNA தகவல்கள் அபாரமானவை படித்து பார்த்தால்..அவற்றில் புரதம் உண்டாகுவதற்கான சமையல் குறிப்பும் உண்டு. அதே சமயம்..ஒரு மனிதனின் மொத்த தகவல் அவன் கண் என்ன நிறம் தோல் என்ன நிறம் அவன் என்ன உயரம் என்பது தொடங்கி அவனது மொத்த  ஜாதகமும் அதில் உள்ளது.( அவன் ஜாதகம் மட்டுமல்ல அவன் கடந்து வந்த மொத்த பரம்பரையின் ஜாதகமும் கூட அதில் அடங்கி உள்ளது)
ஒரு குழந்தைக்கு இந்த டிஎன்ஏ தகவல் பாதி அம்மாவிடமிருந்து பாதி அப்பாவிடம் இருந்தும் கிடைக்கிறது.

DNA வில் முறுக்கிய  இரண்டு இழைகளை காணலாம். அப்புறம் அவற்றிற்கு இடையில் சிறு கோடுகள் தொடர்பு கொண்டு இருப்பதை காணலாம்.
அந்த இழைகள்.. nucleotides களால் ஆனவை. அதாவது....

ஒரு phosphate மூல கூறு மற்றும்

ஒரு சர்க்கரை மூலக்கூறு. (இதன் பெயர் deoxyribose இவைகள் 5 carbons கள் அடங்கிய அமைப்பு. )

இதை தவிர ஒரு nitrogen-containing region உள்ளது அது தான் அந்த ஏணிக்கு நடுவில் உள்ள கோடுகள்.
இந்த nitrogen contenting region 4 வகைகள் கொண்டது.. அந்த 4 வகை தான் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வரும்... அவைகள்..
adenine (A)
cytosine (C)
guanine (G) மற்றும்
thymine (T)
 இந்த நான்கு எழுத்தை கொண்டு மாற்றி மாற்றி எழுத பட்ட தகவல் தான் நமது genetic code,  மொத்த ஜாதகம் .
அந்த இரட்டை சூழல் ஏணி அமைப்பில் இடையில் ஒன்றோடு ஒன்று இந்த நான்கும் தொடர்பில் இருக்கின்றன. அவற்றை உற்று பார்த்தால்... A எப்போதும் T உடன் இணைவதை பார்க்கலாம்.G எப்போதும் C உடன் இணைவதை பார்க்கலாம். (அந்த நீளமான ஏணி  sugar மற்றும் phosphate groups.களால் செய்ய பட்டது.)

46 குரோமோசோம் சொன்னோமே.. அது 46 கு பதில் 48 இருந்தால் என்ன ஆகும் ? அப்படி என்றால் நாம் மனிதனல்ல மங்கி. குரங்குகள் 48 க்ரோமோசோம் களை கொண்டிருக்கின்றன.
நமது குரோமோசோமில் நீண்டது முதல் குரோமோசோம் ஆகும். இதில் 8000 ஜீன்கள் உள்ளன. இருப்பதில் சிறியது 21 ஆவது குரோமோசோம் ஆகும் இதில் 3000 ஜீன்கள் உள்ளன.  எப்படியும் மொத்த 46 குரோமோசோம்களில் மனிதன் மொத்தம் 20000 இல் இருந்து 30000 வரை ஜீன்களை கொண்டு இருக்கிறான்.

இந்த ஜீன்களில் தான் அந்த மனிதன் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் ஒளிந்திருக்கிறது. உதாரணமாக அவன் உடலில் சர்க்கரையை கட்டு படுத்தும் இன்சுலின் எனும் பொருள் சுரக்க வேண்டுமா அந்த தகவலுக்கு என்று குறிப்பிட்ட ஜீன் டேட்டா இருக்கும்.  இப்படி நாம் கண்டு பிடித்த தகவல் DNA வில் வெறும் 3 சதம் தான் என்கிறார்கள். மீதமுள்ள 97 சததில் ஒளிந்து இருப்பது என்னவென்று இன்னமும் நமக்கு தெரியாது

இதில் RNA என்று ஒன்றை கேள்வி பட்டு இருப்போம் அது என்ன..? இது DNA வின் காபி தான். என்ன வித்தியாசம் என்றால். இதில் இரட்டை இழைக்கு பதில் ஒற்றை இழை தான் இருக்கும். மேலும் இதில் thymine இருக்காது அதற்கு பதில் uracile என்ற ஒன்று இருக்கும். இவைகள் messenger RNA (m RNA ) ஆகும். இவைகள்
 translated RNA (t RNA ) மூலம் அமினோ அமிலங்களாக டிரான்ஸ்லெட்  பண்ண படுகிறது mRNA கள் three-letter sections களால் படிக்க படுகிறது அதன் பெயர் codons. ஒவொரு  codon code களும்..குறிப்பிட்ட அமினோ அமிலங்களுக்கானது. (மொத்தம் கிட்ட தட்ட 20 வகை அமினோ அமிலங்கள் உள்ளன )

   ♠️   ♠️   ♠️   ♠️   ♠️   ♠️  ♠️   ♠️   ♠️

சரி மேலே நாம் பார்த்தது மட்டும்தான் செல்லின் பாகங்களா என்றால் இல்லை. இன்னும் Centrosome.. Peroxisome..
Villi..என்று நுணுக்கமான பல பாகங்களை செல்கள் கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமான சிலதை மட்டும் தான் நாம் மேலே பார்த்தது.
மனித உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒரே மாதிரி இருக்காது அவைகள் தேவைக்கு தகுந்தாற்போல கொஞ்சம் மாற்றங்களுடன் காணப்படும். உதாரணமாக விந்து அணுவில் அவைகள் நீந்தி செல்ல வால் அமைப்பு இருக்கும். இந்த வாலுக்கு பெயர் "flagella ". ( இது சில பாக்டீரியாக்களிலும் இருக்கிறது.. அவைகள் நீந்தி நகர உதவுகிறது.)

இதே போல சுவாச மண்டலத்தில் எடுத்துக்கொண்டால் நுரையீரலில் முடி போன்று இருக்கும் அலை போல ஆடி கொண்டு இருக்கும்  ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் cillia . நாம் தூசுகளை சுவாசிக்க நேர்ந்தால். அவற்றை பிடித்து கொண்டு இரும்பும் போது தும்பும் போது வெளியேற்ற இவை உதவுகின்றன.

இப்படி உடலில் பல உறுப்புகள் பல வகைகளில் செல்களை கொண்டு இருக்கின்றன. ரத்தத்தின் செல்களும் தசையின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தசைகளின் செல்களும் தோலின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தோலின் செல்களும் நரம்புகளின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மொத்தம் 200 வகை இப்படி மாறுபட்ட செல்கள் மனித உடலில் இருக்கின்றன. இவைகள் அளவுகளில் கூட மாறுபட்டு இருக்கின்றன. உதாரணமாக உடலில் உள்ள மிக பெரிய அனு பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டையின் செல் ஆகும். என்ன ஆச்சர்யம் என்றால் இருப்பதிலேயே சிறிய செல் ஆணின் விந்து அனு செல்கள் ஆகும்.. (ஆக செல் உலக இயற்கை படி.. இருப்பதிலேயே சிறிய ஆள் ஒருவன் இருப்பதிலேயே பெரிய இடத்து  ஆளை காதலித்து கரம் பிடிக்கும் செயலுக்கு பெயர் தான் குழந்தை உருவாக்கம். )

கடைசியாக  சில சுவாரஸ்யமான செல்  தகவல்களை சொல்லி முடிக்கிறேன்.

🥗 மனித உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து அழிந்து கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன. ஒரு வளர்ந்த மனிதன் உடலில் ஒரே ஒரு நிமிடத்தில் கிட்ட தட்ட 9.6 கோடி செல்கள் இறந்து கொண்டு இருக்கின்றன. அதே ஒரு நிமிட நேரத்தில் 9.6 கோடி செல்கள் இரண்டாக பிரிந்து புதிய செல்கள் உண்டாகி கொண்டு இருகின்றன.

🥗 வெவ்வேறு செல்கள் வெவ்வேறு ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ரத்த வெள்ளை அணுக்கள் செல்கள் 13 நாள் உயிர் வாழ்கின்றன. நமது மேல் தோலில் உள்ள செல்கள் குறைந்தது ஒரு மாதம் உயிர் வாழ்கிறது. ரத்த செல்கள் குறைந்தது இரண்டு மாதங்கள் உயிர்வாழ்கின்றன. லிவரில் உள்ள செல்கள் 18 மாதங்கள் வாழ்கின்றன.

🥗 மனித உடலில் எத்தனை மனித செல்கள் உள்ளதோ அதை விடவும் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியா மாதிரியான மனித செல்களில் அல்லாத வேறு செல்களை மனித உடல் கொண்டிருக்கிறது.
அப்படி இருந்தும் மொத்த எடையில் வெறும் 3 சதம் தான் பாக்டிரியா மாஸ் . இது எப்படி ?? இதற்கு காரணம்..பாக்டிரியா செல்கள்  (prokaryotic cell ) மனித செல்களை ஒப்பிடும் போது மிக சிறியவை.

🥗 மனிதன் பல கோடி செல்களை கொண்டு இருந்தாலும் அவனும் உருவாகும் தருணத்தில் ஒற்றை அணுவாக இருந்து தான் உண்டாகி... பல்கி பெருகி கருவாகி பல கோடி செல்கள் கொண்ட குழந்தை ஆகிறான்.

🥗  உடலில் உள்ள மிக பெரிய செல் பென்னின் கருமுட்டை என்று பார்த்தோம். வெறும் கண்ணால் பார்க்க முடிய கூடிய ஒரே செல்லும் அது தான். (ஒரு தலை முடியின் நுனி யை பார்ப்பது போல இருக்கும் ).

    ♠️   ♠️    ♠️   ♠️   ♠️   ♠️  ♠️   ♠️   ♠️

கட்டுரையில் நாம் பார்த்தது விலங்கு செல்களை பற்றி மட்டும் தான்.  இதே போல தாவர செல்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளது வேறு சந்தர்ப்பத்தில் வேறு கட்டுரையில் அதை பற்றி பார்க்கலாம்.

இயற்கையின் படைப்பில் பல ஆச்சரியங்களில் ஒன்று இந்த செல்கள்.
செல்களைப் பற்றி நாம் அறிந்தது குறைவுதான் இன்னும் மறைந்திருக்கும் உண்மைகள் எவ்வளவோ....


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


               தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
                - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 19 December 2019

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்.

*"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?*


ஆக்சிசன் என்னும் ஆங்கில சொல்லுக்கு தூய தமிழ் பெயர்    "உயிர்வளி "

*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்...?*

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை'னு கேக்கறீங்களா...?

காரணம் இருக்கு... அதை கடைசியா சொல்றேன்... இப்ப பதில் சொல்லுங்க... 

"இதென்ன கேள்வி...? எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்...!" என்கிறீர்களா...?

ஓகே... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்...?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை... என்ன... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது... பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை...' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்...

இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது...
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும்ம்'ன்னு இருட்டா கருப்பா ஆயிடும்.  மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம், குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க, இன்னும் விடியலை போல'னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும்... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான். (சும்மாவே நம்மூர்ல அரசியல் வாதிங்க கட்டுற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது)

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும். எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன். அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு...? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்... நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல... சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O 3) தான் வடிகட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கபடாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்துவிடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும்...!  (ஹலோ நான் சொல்றது கேக்குதா...? ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கபடுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம்.. ஓடும் கார்.. பைக்.. எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக் கொள்ளும்...!

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி... ஐந்தே ஐந்து நொடி...  பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது தானே...?
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்...? 

அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி செய்ய முடியாத ஆக்சிஜனை ஒரு மரத்தால் உற்பத்தி செய்ய முடியும்...!

எனவே

*"மரம் வளர்ப்போம்...! ஆக்சிஜன் பெருக்குவோம்...!"*


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு.பாலாஜி  அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

                     தமிழால் இணைவோம் !!!
                     அறிவால் உயர்வோம் !!!
                               தமிழ் வாழ்க !!!
              அறிவியலின் தேடல் தொடரும்.
                           வலியே  " வலிமை "
                  - அய்யனார் (வால்வரின்)..

Friday, 13 December 2019

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன் ஒரு தமிழர் !!!!


உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன் நாட்டில் உள்ளவர் .. 

டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகம் என்பது தமிழர்கள் 

அறிய வேண்டியவை !!!





உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன், 

தனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட போது, இந்த உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

1793 ஆம் ஆண்டு முதல், நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூர் பகுதியில் வசித்து உள்ளார்கள். 

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் எனது மூதாதையர் திருமணம் செய்துள்ளார். 

எனவே, ஒவ்வொரு முறை, நான் தமிழர்களை சந்திக்கும் போதெல்லாம், 

இவர்கள் எனது உறவினர்களாக இருக்கக்கூடும் என்று பெருமிதம் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரிய தொழிலதிபர்
விர்ஜின் குழுமம்
பிரிட்டனை சேர்ந்த, 69 வயதாகும் ரிச்சர்ட் பிரான்சன், புகழ்பெற்ற விர்ஜின் என்ற தொழில் குழுமத்தின் தலைவராகும். ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

திட்டம் 
முதலீடு
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து, 
ஹைப்பர் லூப் தொழில்முதலீடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வருகை தந்துள்ளார்.
 அப்போதுதான் இந்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


பாரம்பரியம் 

தமிழக பாரம்பரியம் !!!!

தமிழகத்தின் பூர்வீகம் என்பது மிகவும் பழமையானது. 

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த போதிதர்மர் மற்றும் சீனா நாட்டுக்கு இடையேயான உறவு அனைவரும் அறிந்ததே. 

போதிதர்மரை புத்தமதத்தின் குருக்களில் ஒருவராக சீனர்கள் கருதுகிறார்கள்.



தமிழர்கள் 
மூத்த குடி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, என்ற புகழ்பெற்ற தமிழ் மரபு,

 பல்வேறு நாடுகளிலும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி உள்ளது என்பது இது போன்ற டிஎன்ஏ டெஸ்ட்களின் மூலமும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.



இன்றுவரை உலக மக்களின் தாயகம் குமரிக்கண்டம் என்னும் இலெமூரியா கண்டம் தான்.

தமிழர் அவர்களுடைய வம்சாவளிகளை பல இடங்களில் உருவாக்கி உள்ளார்கள்.

உலகில் தோன்றிய முதல் மனித இனம் .

" குமரின் " என்னும் தமிழன்.

இன்று உள்ள மூக்கடலையும் சூழ்ந்த தமிழ் தேசம்!!!!

அன்றேய இரண்டே கடலாக இருந்த சொர்க்க பூமி
" குமரிக்கண்டம் ". 

இதில் உருவான ஒட்டுமொத்த உலகமே இன்று பல உண்மைகளை புதைக்கிறது. 

நம் தந்தையான இலெமுரியன் என்னும்  குமரியன் மகளே இந்தியா !!!!

தந்தையை அழிக்க எண்ணுகிறாள் என்பது வருத்தமாக இருக்கிறது. 

ஆனால் உலகம் அவர்களின் தந்தையை காக்க முயற்சிக்கிறது.

தமிழின் மரபு இன்றுவரை பல நாட்டில் பரவி உள்ளது.


தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, 

இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.

நமது முன்னோர்களும் , மூதாதையர்களும்  ஆண்ட இந்த உலகை.

பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த இந்திய மக்கள் .

உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.

உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!


உலக சரித்திரத்தின் வரலாற்று புத்தகத்தில் தமிழன் தனது பக்கத்தினை கேட்டுப் பெறவில்லை. 
அவனது சாதனைக்கு  வரமாக கொடுக்கப்பட்டது.

தமிழன் வரலாறு.

                   தமிழால் இணைவோம் !!!
                   அறிவால் உயர்வோம் !!!
                             தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                        வலியே  " வலிமை "
                 - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 8 December 2019

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் !!!


*ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.
 ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே ஒவ்வாமை அதாவது அலர்ஜி.
ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.
அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.*

*இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய அலுவலகத்தில் ஒரு மன்றம் . கலந்து கொள்ளப் போனார்.
அந்த மன்றத்தில் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய  மேசை நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.*

*'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மன்றத்தில்  கலந்துகொள்ள போகிறோம்' என்று பயந்தார்.*

*ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.*

*மன்றம் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.*

*அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.*

*இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"*

*இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.*

*#இதுதான்_நமது_மனம்..*

*#இந்த_மனதால்_நோய்களை_உருவாக்கவும் முடியும்.. #குணப்படுத்தவும் முடியும்..*

*இந்த மனதால்*

 *#பிரச்னையை_உருவாக்கவும் முடியும்.. அதற்கு #தீர்வையும் தர முடியும்.*

*எனவே,*

 *#நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*


         
                தமிழால் இணைவோம் !!!
                 அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
               - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 26 November 2019

வைரம் உறுதியானதா அல்லது கடினமானதா ????

வைரத்தை சுத்தியால் உடைக்க முடியுமா ?

ஒரு சுத்தியை வைத்து வைரத்தை உடைக்க முடியுமா ?







இந்த கேள்வியை  கேட்டால் உங்களில் பலபேர் " அதற்கு வாய்ப்பில்லை காரணம் உலகிலேயே மிக உறுதியான ஒரு பொருள் வைரம் " என்று பதில் சொல்லலாம் ஆனால் உண்மை அது அல்ல சுத்தியை வைத்து வைரத்தை உடைத்து பார்த்தீர்களேயானால் வைரம் உடைந்து போகும்.

அப்போ உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் என்று சொல்லப்படுவது உண்மை இல்லையா ? உண்மை எனில் வைரம் உடைந்தது ஏன் ?

காரணம் உலகிலேயே மிகவும் கடினமான பொருள் வைரம். ஆனால உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் அல்ல இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது.
(Diamonds are the "hardest " mineral but not "toughest" )

என்ன வித்தியாசம் இவையிரண்டுக்கும் ?

Friedrich Mohs ஒரு  mineralogist. இவர் பொருட்களுக்கு இடையிலான கடினத்தன்மையை அளக்க ஒரு அளவீடு கண்டு பிடித்தார் அந்த அளவீடின் பெயர் "mohs ". பொருட்கள் ஒன்றில் ஒன்று கீறலை ஏற்படுத்தும் தன்மையை வைத்து இந்த கடின தன்மை கான அளவீட்டை இவர் கண்டுபிடித்தார்.

உதாரணமாக" talc " யை எடுத்து கொண்டார். இருப்பதிலேயே மென்மையான பொருள். மற்ற எந்த பொருளை கொண்டும் talc ஐ சுரண்ட.. கீற முடியும். எனவே இதற்கு mohs அளவு 1 என்று கொடுத்தார். அடுத்ததாக gypsum எடுத்தார் . இது talc ஐ விட கடினமானது எனவே இதில் talc ஐ வைத்து கீற முடியாது சுரண்ட முடியாது ஆனால் மற்ற பொருட்களை விட இது மென்மையானது எனவே talc தவிர மற்ற பொருளை வைத்து சுரண்ட முடியும். எனவே இதற்கு நம்பர் 2 கொடுத்தார். அதாவது ஒரு பொருள் எந்த mohs எண்ணிக்கை அளவு கொண்டுள்ளதோ அதே பொருளை அல்லது அதற்கு கீழ் உள்ள பொருளை கீற முடியும் அதற்கு மேல் உள்ள பொருளை அல்ல .

இப்படி அவர் கொடுத்த வரிசை இதான்
talc, gypsum,calcite, fluorite, apatite, feldspar, quartz, topaz, corundum, மற்றும் 10 ஆவதாக diamond.

இருப்பதிலேயே உயர்ந்த அளவு 10 அந்த பத்தாவது இடத்தில் இருப்பது வைரம். அந்த அளவும் கூட மற்ற பொருட்களுடன் ஒப்பிட முடியாத அளவு மிக மிக அதிக உயரத்தில் இருக்கும் ஒன்று.

அதாவது ஒரு உதாரணத்திற்கு பள்ளி வகுப்பில் 10 மாணவர்கள் வெவேறு உயரத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை உயர அடிப்படையில் வரிசையாக நிற்க வைக்கிறார் ஆசிரியர். இதில் முதல் இடத்தில் இருபவனை விட இரண்டாம் இடத்தில் இருப்பவன் கிட்ட தட்ட அரை அடி உயரம் இருக்கிறான். அப்புறம் 3 ஆவது ஆள் இரண்டாம் ஆளை விட கிட்ட தட்ட முக்கால் அடி உயரம் அப்புறம் 4 ஆவது ஆள் அடுத்த ஆள் அடுத்த ஆள் எல்லாமே கிட்ட தட்ட தனது முன்னால் உள்ளவனை விட  1 அடி உயர வித்யாயசத்தில் மாறி மாறி வருகிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள் . ஆனால் அந்த 10 ஆவது ஆள் மட்டும் 9 ஆவது ஆளைவிட திடீரென 100 அடி 200 அடி உயரமாக பிரமாண்டமாக நிற்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் எப்படி இருக்கும் .mohs அளவில் வைரம் மற்ற பொருட்களை விட அந்த அளவில் கடின தன்மையில் உயர்ந்து நிற்கிறது. (Mohs Graphs படத்தை பாருங்கள் புரியும் )தனக்கு முந்திய இடத்தில் இருக்கும் ரூபியை விட 140 மடங்கு அதிக உறுதி கொண்டது வைரம். எனவே கடினத்தன்மையில் மற்ற எந்த பொருளும் வைரத்திற்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது.

இதற்கு அர்த்தம் என்னவென்றால் உலகத்தில் இருக்கும் என்ற பொருளை வைத்தும் வைரத்தின் மேல் நாம் கீறளை ஏற்படுத்த முடியாது. ஆனால் வைரத்தை கொண்டு எந்த பொருளையும் கீற முடியும். ஒரு கிரைண்டிங்  மெஷின் சான கல்லில் வைரத்தை வைத்து அழுத்தி பிடித்தால் சான கல் முழுதும் தேய்ந்து அழிந்து விடும் ஆனால் வைரத்தின் மேல் சிறு கீறளை கூட அதனால் உண்டாக்க முடியாது அவ்வளவு கடினமானது வைரம்.

ஆனால்......

வைரம் உடைக்க முடியாத உறுதியானது அல்ல. என்ன காரணத்தினால் வைரம் மிகவும் கடினமானதாக இருக்கிறதோ அதே காரணத்தால் தான் வைரம் உடைந்தும் போகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா .?
முதலில் வைரம் இவ்வளவு கடினமாக இருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அவைகளுக்குள் இருக்கும் அனு பிணைப்பு மிகவும் குறுகிய இடத்தில் நெருக்கமாக இருப்பது தான்.. ஒரு சின்ன அறையில் 100 பேரை போட்டு அடைத்த மாதிரி அணுக்கள் அடைத்து கொண்டு இருக்கும். அங்கே அணுக்கள் நகர இடம் ஏதும் இல்லை. ஒரு ஸ்டீல் பொருளில் அடி விழும் போது அதில் உள்ள அணுக்கள் நகர்ந்து கொடுத்து உடையாமல் கொஞ்சம் வளைந்து கொடுத்து தப்பிக்கும். ஆனால் வைரத்தின் அணுக்கட்டமைப்பு வளைந்து கொடுக்க இடம் கொடுக்காததனால் உடைந்து போகிறது.

அதேசமயம் வைரத்தை கண்ட மேனிக்கு நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடைத்து விடவும் முடியாது. சரியான கோணத்தில் வைத்து அடித்தால் மட்டுமே வைரம் உடையும். அது என்ன சரியான கோணம் ?

உதாரணமாக ஒரு கரும்பை எடுத்துகொள்ளுங்கள் அதை குறுக்கு வாட்டத்தில் அரிவாளை கொண்டு பிளந்தால் என்ன ஆகும் ? இரண்டாக பிளந்து விடும். ஆனால் கரும்பை நடுவில் வெட்டினால் என்ன ஆகும் கரும்பு இரண்டு துண்டாக வெட்டப்படும் ஆனால் பிளக்க படாது.
இதே போல வைரமும் ஒரு மரதுண்டு போல உள்ளே வரிகளை கொண்டது நேர் வாட்டத்தில் வைத்து அடித்தால் வைரத்தை பிளந்து விட முடியும் (cleaving direction ).
ஆனால் படுக்க வாட்டில் வைரத்தை வைத்து அடித்தால் அதை உடைக்க முடியாது.

அதாவது வேறு வழியில் சொல்ல வேண்டுமென்றால் வைரத்தை பிளக்க முடியும் ஆனால் உடைக்க அல்ல.

எனவே திரைப்படத்தில் யாராவது வைரம் உடைந்து விட்டது எனவே இது போலி என்று காட்டினால் அதை நம்பி உங்கள் வைரத்தை உடைத்து பார்க்காதீர்கள்.

இந்த பதிவுகளை வழங்கிய
புகழ்மிக்க அறிவியல் ஆய்வாளர் 
என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

          தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



Friday, 1 November 2019

தமிழ்நாடு உருவான வரலாறு !!!

1956 நவம்பர் 1ம் தேதி (தமிழ்நாடு  உருவான தினம்)

உலகில் தமிழ் தேசம் ( நாடு)
புனித தன்மை உடையது என்பது
உலகமே அறிந்து ஒன்று.
கடவுளின் படைப்பில் இயற்கையும் ,
இயற்கையின் படைப்பில்
தமிழ் தேசமும் என்றும் சிறப்புடையதாகும்.
நாம் அறியாதவைகள் பல ,
அதில் நாம் அறிந்தவைகள் சில !!!!!



பூமி தாய்க்கு மகனாக பிறந்த குமரியனின் இந்த குமரிக்கண்டம்.
இயற்கையில் பாதி அழிந்தாலும் ,
அதே இயற்கை எங்களுடைய மரபுகளை வாழ வைக்க உதவுகிறது. 
உலகை ஆண்ட எம் இனம்.
 சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்  ஒன்றாக்கி இந்த  திராவிட தேசத்தை தமிழ்தேசமாகவே அழைத்தார்கள்.
அதாவது தமிழகம் என்று.
காலப்போக்கில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.  ஒருமைப்பட்ட தமிழ்தேசம் ஆங்கிலப்பிடியில்
 " மெட்ராஸ் பட்டினமாக உருவாகியது.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன.
 திராவிடம் பிளவு கண்டது.
தமிழ் தேசத்தை ,
 ஆங்கில ஆட்சி !!!!
மெட்ராஸ் பட்டணம் என்று  பெயர் மாற்றம் செய்தார்கள்.
இந்திய தேசம் சுதந்திரம் கண்ட பிறகு ,
திரு. கண்டன் சங்கரலிங்கனார் என்ற போராளி மீண்டும் தமிழ் தேசத்திற்கு
" தமிழ் நாடு " என்று மாற்றம் செய்ய போராடினார்.
பிறகு  திரு.கண்டன் சங்கரலிங்கனார் போராட்டத்திற்கு கிடைக்கப்பட்ட வெற்றியாக  நவம்பர் 1ம் தேதி தமிழகம் மீண்டும்  தமிழ்நாடாக உருவானது.
தமிழர்கள் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் .
தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.
நமது முன்னோர்களும் , மூதாதையர்களும்  ஆண்ட இந்த உலகை.
பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த உலக மக்கள் .
உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.
உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!
ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் இந்த நாள்.
தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை விழாவாக இந்நாளை கொண்டாட வேண்டும்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடுவது போல இதனை வெகு சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும்.
உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தினத்தை அறிய செய்வோம்.

இரண்டே அடியில் உலகை அடக்கியவன்
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல்  மாமன்னன் திரு.வள்ளுவன். 
குறள் !!!

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
குறள் 731
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம் !!!!!

நம்முடைய உரிமைகளை பறித்தவர்களிடம் கூறுவோம் !!!
தனி உரிமைகளை உருவாக்க தனி நாடாக தனித்து இருக்கும் தமிழ்நாடு என்றும் தனி நாடு தான்.


           எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.

                  தமிழ் அறிந்தாரிடம் !!!

      தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.                               " வலியே  " வலிமை "
            - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 20 October 2019

தமிழ் எழுத்துக்களின் வரலாறு


தமிழ் எழுத்துக்களின் வரலாறு 

👉👉தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247.

உயிர் எழுத்துக்கள் 12

மெய் எழுத்துக்கள் 18

உயிர் மெய் எழுத்துக்கள் 216

ஆய்த எழுத்து 1

🌹உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.

☘மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது.

🔥உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும்.

👉ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க.

👉நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது
சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது

🔥சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது.

☀முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார்.

👉ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

👳அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார்.

👉இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம்.

🌞மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. 

அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

🌞மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், 
இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.


🌹இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216.

🌹சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது
ஆக 216×100=21600

👉நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும்

☘தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை.

👳தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க.

⭐அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்.

(இது தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது ஆனால் அதுவும் இப்போது வழக்கொழிந்து விட்டது).

🌻அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.

🔥 மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார் என ஆராய்க

👉தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர் .

அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது அது என்ன என கருத்தில் கொண்டு ஆராய்க.

🌹குறிப்பிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை செயல் இழக்க செய்தனர் அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.

😴தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால் உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க.

👉👉திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க.

🌻திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

🌻திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி

🌻திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங

👉👉இதையும் கருத்தில் கொள்க

🌞இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு உயிர் எழுத்து உ + அ = (குவா)

👉இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.

🌹தமிழை அதிகமாக பேசி சக்தி பெற முடியும்

தமிழ் பிரமி + தமிழி + தமிழ் வட்டெழுத்து

இந்த கோப்புகளை காண்க .

https://drive.google.com/file/d/18Sq66yeyqLm81N1LvK6_HUhMK-AQUJEP/view?usp=drivesdk

 அனைவருக்கும் தெரிந்த உண்மை .

நம் வருங்கால சங்கதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டியவை.

" தமிழ் "  இந்த மூன்று எழுத்து  உண்மை யவரும் அறிய இயலாது .

பல தகவல்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. 

த - சிவலோகம்.

த -    சிதம்பர நடராசர் சிலையில் உள்ள அவரின் கால் நிற்பதை நன்கு கவனிக்கவும்.

இடது கால் தூக்கியவாறே நிற்பார் அது
" த "  வடிவும் உடையது.

மி - வைகுண்டம்.

மி -    விஷ்ணு பகவானின் கையில் இருக்கும் சங்கு வடிவத்தை நன்கு கவனிக்கவும்.

அது " மி "  வடிவத்தை உடையது.

ழ் - பிரம்மலோகம்.

ழ் -    பிரம்மனின் அரியணை என்னும்  தாமரை இதழின் காம்பு வடிவத்தை பெற்று உள்ளது.

இந்த மூன்று லோகத்திலும் உருவான ஒரு உலகம் தமிழ்.

தமிழ் அறியாதவர்கள் !!!!
எண்ணுவார்கள் தமிழ் உள்ளங்கையில் அடங்கும் தேநீர் என்று !!!!

இந்த மூடர்களுக்கு தெரியாது " தமிழ் "
கடல் நீர் போல் என்று !!!!!! 

நாம் அறிவோம்.
தமிழ் மொழி என்பது வேறும் மொழி அல்ல !!!!!
தமிழ் மொழி என்பது உயிர்.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 18 October 2019

உலகமே சைவம் ( Shaivism ) தான். ஆதாரம் 1




*சுவிட்சர்லாந்து அணு ஆராய்ச்சி நிலையத்தில் நடராஜ சிலை எதற்காக?*🤔
உலகின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான CERN நிறுவனத்தின் முன்பு 6 அடி உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
CERN - ஸ்விட்சர்லாந்த் நாட்டில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். 27கிமீ பரப்பளவில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது . அணுத்துகள்களை ஒன்றையொன்று மோதவிட்டு ஆராய்ச்சி நடத்தப்படுகிறது .

கடவுள் துகள்களை (GODS PARTICLES) பற்றின ஆராய்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி பல்வேறுவிதமான இயற்பியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் இங்கே நடைபெறுகின்றன
கிறிசவர்கள் அதிகம் வாழும் ஒரு நாட்டில் ஏன் இந்து மத கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா? அதற்கான காரணத்தையும் அவர்களே கூறி உள்ளார்கள்.
"காலத்தால் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கான பதில் இந்த சிலையில் அமைந்துள்ளது என்று " குறிப்பிட்டுள்ளார்கள்
அதாவது அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறார் நடராஜர் .

அவருடைய வலது கையிலிருந்து இடதுகால் வரை உள்ள அமைப்பு Milky way என்று அழைக்கப்பட கூடிய பால்வழி மண்டலத்தை குறிக்கிறது . நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடத்தில் சூரிய குடும்பமான சோலார் சிஸ்டம் அமைந்துள்ளது .அவரின் இடுப்பை சுற்றி நிற்காமல் ஓடிகொண்டிருக்கும் பாம்பு நேரத்தை குறிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அவரை சுற்றியுள்ள நெருப்பு வட்டம் பிரபஞ்சத்தை குறிக்கிறது
அருவமாகவும், உருவமாகவும் ஆகாயமாகவும் காட்சி தர கூடிய ஒரே கடவுள் நடராஜர் தான். சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் " *cosmic dance*" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


*அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது.*
அதனாலேயே "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்று திருமூலர் கூறியுள்ளார்.
1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்ற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாக பிரபலமாகியது.
அதில்,. ”எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது”
”பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை.

அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது.
கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் காப்ரா.

சிதம்பர நடராஜர் கோவிலுக்கு மேலே பறக்கும் செயற்கை கோள்கள் செயலிலந்துவிடுமாம் காரணம் புவியீர்ப்பு மையத்தின் செண்டர் பாயிண்டில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளதாம்.

அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள ஐந்து சிவஸ்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாம் எந்தவிதமான அறிவியல் ஆய்வுகளுமற்ற காலகட்டத்தில் எப்படி இது சாத்தியமானது என்பது
இன்று வரை புரியாத புதிராக உள்ளது
ஒட்மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார் என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

”பரமகுருவாய், அணுவில் அசைவாய்” என்று அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை நினைத்துப் பாருங்கள்.
*பைபிளில் வரும் ஆதாம் - ஏவாள் முதற்கொண்டு குறிப்பிடும் பரம்பரையாக வரும் வாரிசுகளின் வயது அடிப்படையில் பூமி தோன்றி 6000 வருடங்கள் ஆகிறது என்று 1780 களில் பிரகடனம் செய்த நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று பாலைவனத்தில் பிறந்த கிறிசவ மதம் எங்கே,*
*வளம் பொருந்திய பாரதத்தில் பிறந்த அண்டத்தையே அளந்த ஹிந்துமதம் எங்கே பயணப்படுகிறது என்று பாருங்கள்.*
*Be Indian, Buy Indian. Ban foolish Religious Imports!.*

இந்த பதிவுகளை வழங்கிய
உலக தமிழ் ஆராய்ச்சி சங்கத்திற்கு மிக்க நன்றி !!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 4 October 2019

பரிமாண வளர்ச்சி



இது ஒரு இலை அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா .... !!
இயற்கையின் படைப்பைப் பாருங்கள் ...
விலங்கியல் மற்றும் தாவரவியல் இரண்டும் உயிரியலாக ஒன்றிணைந்து உருவாகி உள்ளது.
பரிமாண வளர்ச்சிக்கு  நிகராக என்றும் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி ஈடு இணையாகாது.
                 தமிழால் இணைவோம் !!!
                  அறிவால் உயர்வோம் !!!
                          தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "
              - அய்யனார் (வால்வரின்)..

Monday, 30 September 2019

அருள்மொழிவர்மன் என்னும் இராஜராஜசோழனின் சோழபுராணம்

சோழபுராணம்.

இராஜராஜசோழன் 



இயற்பெயர் - கோப்பரகேசரிவர்மன்
(அருள்மொழிவர்மன்)
பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் .
கி.பி. 943 .

சிறப்புப் பெயர்கள் - 42 
  1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன் 
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்
டன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)
மனைவியர் - 15 மனைவிமக்கள்.

இராசராச சோழனுக்கு இராசேந்திரன், எறிவலி கங்கைகொண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்காமாதேவியார், இரண்டாம் குந்தவை என்னும் மூன்று பென்மக்களும் இருந்தனர். எறிவலி கங்கைகொண்ட சோழன் இராசேந்திர சோழனின் தம்பியாவான். ( 30 கல்வெட்டுகள் ).

இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
(இராசராசன் கி.பி.985 ஜுன் 25ம் நாள் அரசு கட்டில் ஏறினான்)
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
(இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்)
முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்
ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்
முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014

இராசராச சோழன்.
 
சோழர்களின்புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன்முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.


இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான்.சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகாலஉத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன்நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய
வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.






அவரின் பரணி பாடல்.

சீர்மிகு சுந்தரச் சோழரின் செல்வ!
செந்திரு மடந்தை வானவன் தேவி
எழில்மான் பயந்த புலியின் ஏறே!
கரிகால் வளவன் பின்வரு காவல!
ஐப்பசித் திங்கள் சதய நாள் பிறந்தோய்!
அக்கன் குந்தவை அன்பினில் வளர்ந்தோய்!
அருமொழி என்னும் இயற்பெயர் கொண்டோய்!
இராசர் தம்ராசன் எனும்பெயர் ஏற்றோய்!
காந்தளூர் சாலை கலமறுத் துகந்தோய்!
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்
திந்திறல் வென்றி தண்டார் கொண்ட
ராஜகே சரிக் கோவே உந்தன்
வாளொளி படரா நாடும் உளதோ?

வேட்புலம் முதலாய் வென்றியாற் கொண்ட
காடும் நாடும் கல்லும் தெற்றியும்
திணைத் திளியளவே ஆயினும் தவிரா
தூர்தொறும் ஊர்தொறும் ஊன்றியே அளந்து
விளைநிலமிது; விளையா நிலமிது@
இறைதரு நிலமிது; இறைஇலி இதுவென
வளமையின் வகையால் தரம்தரம் பிரித்து
வளநா டுடனே பல்புரம் அமைத்து
பழம்பெயர் தவிர்த்து தன்பெயர் நிறீஇ
மண்டலம் கூற்றம் வளநா டூரென
மண்ணுவ கறியா ஆண்புடன் வகுத்து
வரியி லிடுவோர், வகைபல செய்வோர்
கணக்கர், ஓலை, கண்காண் புரிவோர்
பண்டா ரத்தின் பொத்தக முடையோர்,
பட்டோ வையிடு பூட்சிப் பாட்டம்,
திணைக்க ளத்துடனே, திருவாய்க் கேழ்வி,
நடுவு இருக்கை, நல்லறம் பகர்வோர்,
பெருத்தரம், சிறுகரம், வேளைக் காரர்,
அதிகார கரெனப் பாங்குட நமர்த்தி
ஊர்தொறும் குடவோ லைமுறை நிறுவிய
உலகளந்த சோழ! உன்சீர் இந்த
உலகெலாம் பரவி புலவர்தம் நாவில்
இன்றும் உளதெனில் பிறிதும் உண்டோ
புகழ்தனைப் பெறவே!

தென்னா டுடைய தேவினை நாளும்
தேந்தமிழ் இசையால் பாடிய மூவர்
தேவரங்கள் காணா தொழிய
திருநா ரையூர் நம்பியின் துணையால்
தில்லைப் பதியில் பொல்லாப் பிள்ளை
திருக்கர நீட்ட அறைதனை தெரிந்து
மன்றுள் ஆடும் தௌ¤ தேனுக்கும்
மன்னி அருளும் மலர்க் கொடிதனக்கும்
பதிகம் பாடிய மூவர் தமக்கும்
அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து
திருந்திய கதவம் திறனுடன் திறந்து
மறைந்த பாக்களை புற்றினில் கண்டு
மறையோர் புகழ இமையோர் வியக்க
இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த
திருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ!
நின்பெயர்
தமிழ் உளவரியும் திகழ்ந்திடும் அன்றோ!

தஞ்சைமா நகர்தனிலே தரணியெலாம் போற்றவே
தக்கின மாமேருவெனப் பெருங்கோயில் படைத்தனையே
பெருங்கோயில் அதுதனையும் கருங்கல்லால் எடுத்தனயே
கல்எல்லாம் அரும்பணியால் கலைப் பொருளாய் மாற்றினையே!
கலைமிளிர கண்வியக்கும் சிலைவடிவாய் நிறுத்தினையே
சிலைகளையே செகம்புகழ செம்பாலும் வடித்தனையே
கண்கவரும் ஓவியமும் வெண்சுதையில் விளைத்தனையே
எண்ணிலா அணிகலன்கள் எண்ணியே அளித்தனையே
பண்செய்த பயிர்நிலங்கள் நெல்அளக்க விடுத்தனையே
நொந்தாமல் விளக்கெரிய நற்பசுக்கள் கொடுத்தனையே
பதிகங்கள் பாடிடவும் பரதங்கள் ஆடிடவும்
பரிகலன்கள் எடுத்திடவும் பல்கணக்கு எழுதிடவும்
மெய்காத்து நின்றிடவும் பல்லோரை அமர்த்தினையே
உயிர்அனைய தமக்கையுடன் உயர்காதல் தேவியரும்
உந்தானைத் தலைவருடன் உவந்தளித்தோர் கொடைகளையே
கல்லிலே வெட்டிவைத்துப் புதுச்சரிதம் படைத்தோய்நீ!
பரதவள நாடுமே பார்த்திப் புரவலன்நீ!
சொற்கோயில் எடுப்போரும் புனைந்தறியா புகழ்கோயில்
கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ!
புதியரில் புதியன் நீ! பழையரில் பழையன் நீ!
பண்பன் நீ! அன்பன் நீ! பக்தன் நீ! சித்தன் நீ!
சிவனடி மறவாச் செம்மால்! சிவபாதசேகர!
முத்தமிழ் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ!
இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்
ஆயிரம் ஆயிரம் அயீரம் ஆண்டே!

தஞ்சை தந்த இராஜ ராஜ!
தரணியில் நிலைப்பாய்!
ஆயிரம் ஆயிரம் ஆயிர மாண்டே!







சோழமண்டலம்.

தொன்மைக் காலத்திலிருந்தே சோழநாடு என்றிருந்த பெயர் இராசராசன் காலத்தில்தான் முதன் முதலில் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டது. சோழமண்டலம் எனும் பெயர் கி.பி. 1009 முதல் அழைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. 

குடும்பம்.
இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்கள் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள். இராஜராஜனின்  மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள்.

1. உலக மகாதேவி 
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி 
9. வானவன் மகாதேவி 
10. வில்லவன் மகாதேவி
11. வீரநாராயனி. 
12. தில்லை அழகியார்
13. காடரம் தொங்கியார்
14. இங்கோன் பிச்சியார்
15. தைலாமாதேவி

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்.
1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு

இராஜராஜன் காலத்திய கோயில்கள்.( புதிதாக கட்டப்பட்டயைகளும், புதுப்பிக்கப்பட்டவைகளும்)
பெரிய கோயில். (இராஜராஜேஸ்வரம்) தஞ்சாவூர்
லோகமகா தேவீஸ்வரம் திருவையாறு
ஷேத்திரபாலர் கோயில். திருவலஞ்சுழி
உத்திரபடீஸ்வரர் கோயில். அழாத்திரிபுத்தூர்
திருராமநாததீஸ்வரம் கோயில். திருச்செங்காட்டங்குடி
அமிர்தகடேஸ்வரர் கோயில். திருக்கடையூர்
கதரேரணஸ்வாமி கோயில். திருக்காரவாசல்
பாரிஜாதவனேஸ்வரர் கோயில். திருக்கலூர்
திருமலைக்கடம்பூர் கோயில். நார்த்தமலை
திருநெடுங்கல்ஸ்நாதசுவாமி கோயில். திருநெடுங்கலம்
சாம்வேதீஸ்வரர் கோயில். திருமங்கலம்
குந்தன்குழி மகாதேவர் கோயில். மதகடிப்பட்டு
பூமீஸ்வரர் கோயில். மரக்காணம்
கயிலாயத்துப் பரமேஸ்வரன் கோயில். உலகாபுரம்
அரிஞ்சகை விண்ணகர் கோயில். உலகாபுரம்
சுந்தரசோழப் பெரும்பள்ளி கோயில். உலகாபுரம்
மகாசாஸ்தா கோயில். அகரம்
திருவாலந்துரைஉடைய பரமசிவன் கோயில். ஏமப்பேரூர்
பிரம்மபுரீஸ்வரர் கோயில். பிரம்மதேசம்
ராஜராஜ விண்ணகரம். எண்ணாயிரம்
திருஇராமேஸ்வரம் கோயில். ஈசாலம்
ரவுகுல மாணிக்கேஸ்வரர் கோயில் தாதாபுரம்

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு.
இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்
1. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
2. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
3. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
4. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
5. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
6. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
7. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்.

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ஸ்ராகாரிய ஆராய்ச்சி

சோழர்கால கப்பல்கள்.
கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்


சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்.
பழவேற்காடு.
சென்னப்பட்டினம்
மாமல்லை.
சதுரங்க்கப்பட்டினம்
வசவ சமுத்திரம்
மரக்கானம்
கடலூர்
பரங்கிப்பேட்டை
காவேரிப்பூம்பட்டினம்
தரங்கம்பாடி
நாகப்பட்டினம்
முத்துப்பேட்டை
தொண்டி
தேவிப்பட்டினம்
அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
இராமேசுவரம்
பெரிய பட்டினம்
குலசேகரப்பட்டினம்
தூத்துக்குடி
கொற்கை
காயல்பட்டினம்
குமரி.

சோழர் கால ஏரிகள்.
செம்பியன் மாட்தேவிப் பேரேரி - கண்டராதித்தம்
மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
பொன்னேரி - ஜெயங்கொண்டம்
வீரநாராயண பேரேரி- வீராணம்
திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)
வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்
கவீர ஏரி (கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை

பொன்னேரி. ஜெயங்கொண்டம்.
கங்கை கொண்ட சோழபுரம் - ஜெயங்கொண்டம் சாலையில்,கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து 2கி.மீ தொலைவில் மேற்கே அமைந்துள்ளது பொன்னேரி. இது கங்கை வரை சென்று வெற்றி பெற்றதன் அடையாளமாக முதலாம் இராஜெந்திர சோழனால் அமைக்கப்பட்ட ஏரியாகும். இதில் தான் கொண்டு வந்த கங்கை நீரையும் ஊற்றி கங்கை நதி போல் என்றும் நீர் வற்றாது இருக்கவேண்டும் என்ற நோக்கில் இராஜராஜன் இவ்வேரியை நிர்மாணித்துள்ளான் ( திருவாலங்காடு செப்பேடு குறிப்பிட்டுள்ளது) இங்குந்டத்தப்பட்ட அகழாய்வில் மதகின் மேல்பகுதியில் செங்கற்கட்டிடமும், கரைப்பூச்சும்,செங்கற்களுக்கிடையில் சுண்ணாம்புக் கரைப் பூச்சும் காணப்பட்டுள்ளன.



சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்.
மேச ஞாயிறு - சித்திரை மாதம்
ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்
மிதுன ஞாயிறு - ஆனி மாதம்
கடக ஞாயிறு - ஆடி மாதம்
சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்
கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்
துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்
விருச்சிக ஞாயிறு - கார்த்திகை
தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்
மகர ஞாயிறு - தை மாதம்
கும்ப ஞாயிறு - மாசி மாதம்
மீன ஞாயிறு- பங்குனி மாதம்

சோழர் கால இலக்கண நூல்கள்.
தண்டியலங்காரம்
நன்னூல்
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பெருங்கலம்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்
சோழர் கால நிகண்டு
பிங்கலந்தை

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்.
1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி

இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்.
01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி 

இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்.
01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்) 

இராஜராஜ சோழன் காலத்து புலவர்கள்

1. கருவூர்த் தேவர்
2. கண்டராதித்த சோழர்
3. திருமாளிகைத் தேவர்
4. சேந்தனார்
5. பூந்துருத்தி ந்ம்பிகாடர் நம்பி
6. வேணாட்டடிகள்
7. திருவாலிய முதனார்
8. ப்ருசோத்தம நம்பி
9. சேதிராயர்
10. நெற்குன்றவாணர்
11. நம்பிகாளி.


இராஜராஜன் காலத்து வாரியங்கள்
கிராம சபைகள் நிர்வாக வசதிக்கு ஏற்ப, பல வாரியங்களை கொண்டன. அவ் வாரியங்களின் பணிகள் ஊர்களின் தன்மைக்கு ஏற்ப அமைந்திருந்தன.சில ஊர்களில் சம்வுத்சர வாரியம் என்ற் ஒன்றே கிராமத்தின் அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தது.பொதுவாக வாரியங்கள் ஊர்மக்களின் நலத்தையும் அறநிலையங்களியும் பாதுகாத்து வந்ததோடு மட்டுமின்றி ஏரி,கிண்று,ஊருணி, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளையும் செப்பனிட்டுப் பாதுகாத்து வந்தன. அரசுக்குஸ் சேரவேண்டிய வரிகளையும் மக்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்தி வந்தன.கல்வெட்டுகளின் மூலமாக கீழ்க்காணும் வாரியங்கள் இருந்தமையாகத் தெரியவருகின்றது.

1. நில வாரியம்
2. நீர் வாரியம்
3. ஏரி வாரியம்
4. தோட்டவாரியம்
5.பொன் வாரியம்
6. பஞ்ச வாரியம்
7. கழனி வாரியம்
8. களைக்கு வாரியம்
9.களிங்கு வாரியம்
10. தடிவழி வாரியம்
11. குடும்ப வாரியம்
12. சம்வுத்சர வாரியம்

வரிவிதிப்பு முறை
சோழப் பேரரசன் இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் அரசின் வருமானத்தைப் பெருக்கிட வரிவிதிப்பு முறையை வகுத்துக் கையாண்டு ஆட்சிபுரிந்தான். 
1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றியவரி (ஊர்க்கழஞ்சு),
2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட வேண்டியவரி (குமர கச்சாணம்)
3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன் பாட்டம்)
4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்)
5. குளத்து நீரைப் பயன்படுத்துவோருக்கான பாசனவரி (தசபந்தம்)
6. பொன் நாணயம் அரசன் அச்சடிப்பதற்கான வரி (மாடைக்கூலி)
7. நாணயத்தின் பொன்மாற்று அளவை ஆய்வதற்கான வரி (வண்ணக்கக் கூலி)
8. பொருள்களை விற்பனை செய்வதற்கான வரி (முத்தாவணம்)
9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய வரி (திங்கள் மேரை)
10. நிலத்துக்கான வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என வேலிக்காசு அல்லது வேலிப் பயறு)
11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான வரி (நாடாட்சி)
12. கிராம நிருவாகச் செலவுக்கான வரி (ஊராட்சி)
13. நன்செய் நிலத்திற்கான நீர்ப்பாசனவரி (வட்டி நாழி)
14. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி)
15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),
16. துணி துவைக்கும் கல்லுக்கான வரி (வண்ணாரப்பாறை)
17. மண்பாண்டம் செய்வதற்கான வரி (குசக்காணம்)
18. தண்ணீர்வரி (நீர்க்கூலி)
19. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை)
20. தரகர்கள் தரவேண்டிய வரி (தரகுபாட்டம்)
21. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார் பாட்டம்)
22. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி)
23. பசு, எருதுகளுக்கான வரி (நல்லா அல்லது நல்லெருது)
24. நாட்டின் காவலுக்கான வரி (நாடுகாவல்)
25. ஊடு பயிர் சா-குபடி செய்தால் வரி (ஊடுபோக்கு)
26. ஆவணப் பதிவுக்கான வரி (விற்பிடி)
27. வீட்டு மனைக்கான வரி (வாலக்காணம்)
28. சுங்கவரி (உல்கு)
29. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி)
30. நீதிமன்றவரி (மன்றுபாடு)
31. அரசனுக்குச் சேரவேண்டிய தனிவரி (மாவிறை)
32. கோயிலில் வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி)
33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி)


என்று பட்டியல் நீளும்வகையில் வரிபோட்டவர் இந்த மாமன்னர் என்று கே.கே. பிள்ளை எழுதுகிறார். (படிக்க: தமிழக வரலாறு  மக்களும் பண்பாடும்). அரசனால் விதிக்கப்பட்ட வரிகளும் கட்டணங்களும் 400 க்கும் மேற்பட்டவை எனக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

உலகளந்தான் கோல்.
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்.
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.

ராஜ ராஜ சோழன் பற்றிய முழுவிபரம் யாரும் பதிவுசெய்யவில்லை அல்லது கிடைக்கவில்லை. ஆனால் அவரும் மேட்டுக்குடி மக்களுக்கே ஆதரவு தந்தார், அவ்ர்கள் ஆலேசையில் தான் அவன் அசசாங்கம் நடந்தது. ஆனால் யாவரும் தன் தாயின் நினைவாய், தந்தையின் நினைவாய் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் அணையா தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்ரோர் ஆணை பிறப்பித்தான் ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான்.

சந்திரசூரியர் உள்ளவரை அந்த அணையா விலக்கு ஒளிவிடவேண்டுமென்றால்.அதற்காக 96 ஆடுகலைக் கோயிலுக்கு கொடையாக கொடுத்துவிட வேண்டும். அந்த ஆடுகலை இசாவா மூவாப் பேராடு' என்கிரது கல்வெட்டு. அந்த ஆடுகள் ஏழை ஒருவனிடத்தில் தரப்பட்டு அவன் அதி பாராமரித்து அந்த என்னைக்கு ஆகும் செலவை கட்ட வேண்டும்.

தீபம் எரிந்து கொண்டே இருக்கும், ஏழைக்கு வாழ்வு கிடைக்கும்,மண்டலத்தில் பால்வழம் பெருகும்.இதுவும் ஒரு பொருளாதர வழிமுரைதானே.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத் தில்லறத்தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும் வேளாளரே.

பதினெண் குடிமக்கள் 
வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான்,கைக்கோளன், பூக்காரன், கிணையன், பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாளரும், உழவனுக்குப் பக்கத்துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர்".

இராஜராஜன் தந்த தஞ்சைப் பெருங்கோவில்.
பெரிய கோயில் என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இதன் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.

இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.

கோயிலைக் கட்டும் எண்ணம் வந்த விதம்
காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை “”கச்சிப்பேட்டுப் பெரியதளி” என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சிப் பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத் தில், தஞ்சாவூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப் பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பட அடித்தளமாக அமைந்தது.

கிபி 1004'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம்.பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.

இ‌து ம‌ன்ன‌ன் க‌ட்டிய ‌கோயி‌ல் எ‌ன்றாலு‌ம் ம‌க்களு‌க்கானதாக இரு‌ந்த‌து. ம‌க்க‌ள் ‌போ‌ர்‌க்கால‌ங்களி‌ல் அ‌டை‌க்கல‌ம் ‌தேடுகிற இடமாகவு‌ம், ம‌க்களி‌ன் கு‌றை தீ‌ர்‌க்கிற இடமாகவு‌ம், ம‌க்க‌ள் விழா எடு‌க்கு‌ம் இடமாகவு‌ம், ம‌க்க‌ள் க‌ல்வி க‌ற்கு‌ம் இடமாகவு‌ம் திக‌ழ்‌ந்திரு‌க்கிற‌து. கி‌ட்ட‌த்த‌ட்ட இ‌ன்‌றைய ம‌க்கள‌வையாக ‌பெரிய ‌கோயி‌ல் திக‌ழ்‌ந்த‌து.இ‌க் ‌கோயி‌ல் ம‌க்களி‌ன் புகலிடமாக இரு‌ந்த‌து ம‌ட்டும‌ல்ல, ம‌ன்ன‌ன் ராஜராஜ‌ன் ‌பொறி‌த்த ஒரு க‌ல்‌வெ‌ட்டு ‌சொ‌ல்லு‌ம் ‌செ‌ய்தி பிரமி‌ப்பான‌து. "இ‌ந்த‌க் ‌கோயி‌லை ம‌க்க‌ள் பா‌துகாக்க ‌வே‌ண்டு‌ம். என‌க்கு‌ப் பி‌ன்னா‌ல் இ‌ந்த‌க் ‌கோயி‌லை‌க் காப்பவ‌ர்களி‌ன் காலி‌ல் நான் இ‌ப்‌போ‌தே விழு‌ந்‌து ‌தொழுகி‌றே‌ன்' எ‌ன்று எழுதி ‌வை‌த்திரு‌க்கிறா‌ன். ஆக, ம‌க்களு‌க்காக அ‌ர்‌ப்பணி‌த்த ‌கோயி‌ல் இ‌து எ‌ன்று ‌சொ‌ல்லலாம். 





பிரம்மாண்ட நந்தி.
தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லார் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.

கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும். 

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு  எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை  நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது.

பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை.

மழைநீர்சேகரிப்புத் திட்டம்.
மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமாகி ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.

தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.



கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.

லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.
உலகின் பெரிய லிங்கம்
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது. நாம் தரிசனத்துக்கு செல்லும் போது, நம் பார்வையில் படுவது லிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தினமும் காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.சிவலிங்கத்தைச் சுற்றி வர கருவறையைச் சுற்றி இடமும் உள்ளது.  அதில்  சோழர்கால ஓவியங்கள்  வரையப் பட்டுள்ளன. தஞ்சாவூர் பெரிய கோயில் மூலவரை பிரகதீஸ்வரர் என்றும், அம்பாளை பெரியநாயகி என்றும் அழைப்பர். இங்குள்ள வாராகியை வழிபட்டால் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.

மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.

இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

பெரிய நந்தி.
இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.


மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது.

பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. இச் சிலைகளை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும்.

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள். 
1. இராசராசசோழன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )
3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்
5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் - இரண்டாம் நிலை கட்டிட 
    கலைஞன் )
6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு
7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்
8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்
9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )
10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார் 
    ( கோயில் நிர்வாக அதிகாரி)
11. பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

உலகின் முதல் பொற்கோபுரம்.

தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன்மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.  216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததைஒட்டக்கூத்தர்  தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படி ராஜராஜன் பொன்மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தை குலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.  பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது.

கேரளாந்தகன் வாயில் கோபுரம்.
பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் “”கேரளாந்தகன் வாயில் கோபுரம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டை உள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

ராட்சத மதில்சுவர்.
கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில் ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமன்  குடியான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச் சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார்.

பாரம்பரியச் சின்னமானது எப்படி?
கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.
1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன்
ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.
2. ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)
3. கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.
4. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
5. ராஜராஜசோழன், தானே கோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்த வகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.
6. கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7. தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.

இராசராச சோழனின் வயது அறிய உதவும் தகவல்கள்.
சுந்தர சோழனின் (ஆட்சிக் காலம் 957 முதல் 973 வரை) 2ம் மகன் இராசராச சோழன்.

இராசராச சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் கி.பி. 935 ஆண்டிலும் சகோதரி குந்தவை நாச்சியார் கி.பி.937 ஆண்டிலும் பிறந்தனர். இதன் மூலம் இராசராச சோழன் கி.பி. 937ம் ஆண்டுக்குப் பின் தான் பிறந்திருக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது. ஆகவே இராசராச சோழனின் பிறந்த ஆண்டு 938 முதல் 946 வரையிலான காலமாக இருக்க வேண்டும். (973-938 = 35வயது) 
(973-946 =27வயது) 

ஆதித்த கரிகாலன் இளவரசு பட்டம் பெற்ற ஆண்டு கி.பி.966ம் ஆண்டு. (31வது வயதில்) 969 ம் ஆண்டு தன் 34 ம் வயதில் இறந்தான்.

இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் கி.பி.973ல் மரனம் அடைந்தான்.

இராசராசன் பிறந்த நட்சத்திரம் சதயம். ஐப்பசி திங்கள். (October - November)

சுந்தர சோழன் இறந்த பின் 12 வருடங்கள் கழித்து 985 ல் இராசராசன் ஆட்சி ஏற்றான் (973 + 12 = 985) இராசராசன் கி.பி.985 ஜுன் 25ம் நாள் அரசு கட்டில் ஏறினான்

அருள்மொழிவர்மன் என்ற பெயரை அரசு ஏற்ற 3வது ஆண்டில் (988) இராசராசன் என மாற்றிக்கொண்டான். (985 + 3 = 988)

இராசராசன் இலங்கையை கைப்பற்றிய ஆண்டு கி.பி 993

இராசராசன் அரியனை ஏறி 25 வருடங்கள் கழித்து 275ம் நாள் பெரிய கோவில் கட்டிமுடிக்கப்பட்டது. (985 +25 = 1010 மற்றும் 275 நாட்கள்)

பெரிய கோவில் 1003ல் துவங்கி 6 ஆண்டுகளில் கட்டி முடிவுற்றதாகவும் தகவல் உண்டு.

இராசராசன் இறந்த வருடம் கி.பி.1014. 
இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது.

இராசராச சோழனின் மகன் இராஜேந்திரசோழன் தனது 25ம் வயதில் இளவரசு பட்டம் பெற்றான்.

இராஜேந்திர சோழன் ஆட்சிப்பொருப்பை கி.பி. 1012 முதல் தந்தையுடன் பகிர்ந்து கொண்டான்.

இராஜேந்திர சோழன் கி.பி 1044ல் இறந்தான்

மேற் காட்டிய குறிப்புகள் மூலம் இராசராசன் பிறந்த வருடம் கி.பி 938 முதல் 950 வரை இருக்கலாம்

உத்தம சோழன் 973 முதல் 985 வரை 
தந்தை (சுந்தர சோழன்) இறந்ததும் ஆட்சி ஏற்றிருந்தால் இராசராச சோழனின் வயது (950) 23 தான் இருந்திருக்கும். சக்கரவர்தியாக ஆட்சி ஏற்க குறைந்தது 30 வயதாவது இருந்திருக்க வேண்டும். ஆகவே இராசராச சோழனின் பிறந்த ஆண்டு 938 முதல் 943 வரையிலான காலமாக இருக்க வேண்டும். (973-950 = 23) (973-938 = 35) (973-943 =30)


இராசராச சோழன் கி.பி. 938ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 76 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 47 ஆட்சி ஆண்டுகள் 29. 47+29= 76)

இராசராச சோழன் கி.பி. 939ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 75 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 46 ஆட்சி ஆண்டுகள் 29. 46+29= 75)

இராசராச சோழன் கி.பி. 940ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 74 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 45 ஆட்சி ஆண்டுகள் 29. 45+29= 74)

இராசராச சோழன் கி.பி. 941ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 73 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 44 ஆட்சி ஆண்டுகள் 29. 44+29= 73)

இராசராச சோழன் கி.பி. 942ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 72 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 43 ஆட்சி ஆண்டுகள் 29. 43+29= 72)

இராசராச சோழன் கி.பி. 943ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 71 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 42 ஆட்சி ஆண்டுகள் 29. 42+29= 71)

இராசராச சோழன் கி.பி. 944ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 70 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 41 ஆட்சி ஆண்டுகள் 29. 41+29= 70)

இராசராச சோழன் கி.பி. 945ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 69 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 40 ஆட்சி ஆண்டுகள் 29. 40+29= 69)

இராசராச சோழன் கி.பி. 946ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 68 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 39 ஆட்சி ஆண்டுகள் 29. 39+29= 68)

இராசராச சோழன் கி.பி. 947ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 67 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 38 ஆட்சி ஆண்டுகள் 29. 38+29= 67) தந்தை சுந்தரசோழன் இறந்தபோது இராசராச சோழனுக்கு (973-947 = 26) வயது 26 ஆக இருந்திருக்கும்

பள்ளிப் படைக் கோயில். 
“தமிழக வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் பெருமையாக கருதப்படுபவர் மாமன்னன் இராஜராஜசோழன். கி.பி.985ல் முடிசூடி 1014-வரை பொற்கால ஆட்சி புரிந்த மாமன்னன் இராஜராஜசோழன் தனது வெற்றிகளாலும், இன்றும் உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் சிவன் கோவிலை கட்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளான்.

இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார் முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!  

ராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம். குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு கூடிய ஒரு நினைவகம் கட்ட வேண்டும. 

இப்பெரு மன்னனின் சமாதி, குடந்தை அருகே பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் கிராமத்தில் புதைந்திருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டி முடித்ததும், “சிவபாத சேகரன்” என்ற பட்டத்தையும் பெற்றான். ஆகவே, சிவபாத சேகரன் அதாவது இராஜராஜன் இறுதி காலத்தில் அமரரான இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு “சிவபாத சேகர மங்கலம்” என்ற பெயர் இருந்திருக்கிறது.

மாமன்னன் இராஜராஜ சோழனின் உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் இங்குள்ள “பால்குளத்தி அம்மன்” கோயிலின் முன்புறம் உள்ள கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டில் சிவபாத சேகர மங்கலத்தில் (இன்றைய உடையாளூர்) சிவபாத சேகர தேவர் (இராஜராஜ சோழர்) திருமாளிகை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இதைத்தவிர, 1927-28ல், அரசாங்கம் வெளியிட்ட கல்வெட்டு ஆய்வறிக்கையில் (Annual Report of Epigraphy 1927-28) இந்த இடத்தை “சமாதி கோவில்” அல்லது “பள்ளிப்படை” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உடையாளூர் செல்வ காளியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள வாழைத் தோப்பில் தான் சிறப்பு பெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி புதைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமாதியின் மேல்புறமுள்ள பெரிய லிங்கமும் இந்த இடத்தில் புதைந்துள்ளது. . இதே இடத்தில் மாமன்னன் இராஜராஜ
சோழன் மணிமண்டபத்தையும் அமைத்து, அவரின் புகழ் உலகறியச் செய்ய வேண்டும்.


இந்த தகவல்களை எமக்கு அளித்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு   அறிஞர்களின் புகழ்பெற்ற தொகுப்பு இது.
பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் , 
இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் குறிப்பிட்டு உள்ளது.






         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!!
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..