யாளியின் வரலாறு !!!
அந்த காலத்தில் அதாவது கி.முவிற்கு முன்பே தமிழகத்தில் கட்டப்பட்டு இருக்கும் !!சில கோவில்களுக்கு செல்லும் போது அந்த கோவில்களின் தூண்களில் சில வித்தியாசமான உயிரினங்களின் வடிவங்கள் .
அதாவது சிங்கம் மற்றும் யானைகள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் இவ்விரண்டுமே சிங்கமோ அல்லது யானைகளோ இல்லை .
அவைகள் யாழிகள் எனப்படும் அந்த காலத்தில் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் ஆகும்.
யாளி...
உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன விலங்கு..!!
இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!!
இந்த விஷயத்தில் விண்ஞானம்
" வீண் ஞானம் தான் "
இது தமிழரின் அடையாளமாகும் .
இதை ஆய்வு செய்து அழிக்க முயற்சிக்கிறார்கள்.
இதை உணர்ந்த நம் முன்னோர்கள் ,
பல ஆதாரங்களை நம் தமிழ் மண்ணில் புதையுண்ட கல்வெட்டுகளிலும் ,
கோவில் சிற்பங்களிலும் உருவாக்கி இருக்கிறார்கள்.
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்.?
யாழிகள் இப்பொழுது உள்ள தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும்.
ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும்.
அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
ஆனால் இது கற்பனை அல்ல !!!!!
இலெமூரிய என்னும் குமரிக்கண்டத்தில் பிறப்பிடமாக கொண்டவைகள் யாளி !!!!!
சிங்கத்தின் தலை கொண்டதை
“சிம்ம யாழி” என்றும்,
காளையின் தலை கொண்டதை
“மகர யாழி” என்றும்,
யானையின் தலை கொண்டதை
“யானை யாழி” என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் !!!!!
ராட்சத உடல் அமைப்புடன் “டைனோசர்” அதாவது தமிழில் இதை தொன்மா என்று கூறுவார்கள்.
தொன்மா என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம்,
பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.
அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இலெமுரியா என்னும் குமரிக்கண்டத்தின் பகுதியில் வாழ்ந்த ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
ஒரு யாழியின் ஆற்றல் ஆயிரம் தொன்மாவிற்கு சமமாகும் !!!
அதாவது ஆங்கிலத்தில் கூறும் டைனோசர் மிருகத்தை காட்டிலும் உடல் அமைப்பும் , ஆற்றலும் அதிக பயங்கரமானதாகும்.
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருப்பது போல் சிற்பத்தில் இருப்பது கடவுள்கள் யாளி மீது பயணம் செய்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.
உண்மையில் இது போர்க்குணம் கொண்டவை. தமிழர்கள் அதை கடவுளின் வாகனமாகவும் , கடவுளின் விலங்குகளாகவும் போற்றி வணங்குகிறார்கள்.
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால்,
இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை “யாழி வரிசை” என்றே அழைக்கிறோம்.
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ,
ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது.
உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் பார்க்க முடிகிறது.
மேலும், தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் லட்சத்திற்கும் மேல் சிலைகள் உள்ளன.
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை.
நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும்,
இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?
யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல, எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல, தமிழரின் புராதன விலங்கு யாழி.
அவை போற்றப்பட வேண்டும்.
ஆனால் யாழி கற்பனை அல்ல !!!!!
கடவுளின் பாதுகாப்பு மிருகம் ஆகும்.
வேதங்களில் யார் என்ற புராதான விலங்குகளை பற்றி குறிப்பீடுகள் உள்ளது.
கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம்
யாழி மிருகத்துடன் பூமிக்கு வருவது பற்றி பல ஆதாரம் உள்ளது.
1. சிம்ம யாளியாகவும்
2. மகர யாளியாகவும்
3. குதிரை யாளிகவும்
4. யானை யாளிகவும் வர இருப்பது உண்மை ஆகும்.
இது பற்றி பல புராணங்களில் முன்னோர்கள் எழுதிக்கிறார்கள்.
யாளியின் ஆற்றல் !!!!
யாளி ஆயிரம் தொன்மாவிற்கு சமமானது.
அதாவது டைனோசர் போன்ற பல மடங்கு ஆற்றல் கொண்டது.
யாளியின் உடல் அமைப்பு எந்த ஒரு ஆயுதமும் உட்புற முடியாத அளவிற்கு கடினமானது.
ஆனால் யாளிகள் தனக்குதானே மோதி கொள்ளும் பொழுது கூட அவையின் உடல் சதையின் கூறுகள் பிளந்து மறுபடியும் இறுகி கொள்ளும்.
வாய் வழியாக 🔥 நெருப்புகளை கக்கும் !!!!
ஒளி விட வேகமாக செல்லும்.
வாய் வழியாக 🔥 நெருப்புகளை கக்கும் !!!!
ஒளி விட வேகமாக செல்லும்.
யாளி விலங்கு கடவுளுக்கு விலங்களாக மாற காரணம் !!!!
கடவுளின் புனிதமான அமிர்தம் என்னும்
" தெய்வபானம் ".
பாற்கடலில் தேவர்களும் , அரக்கர்களும் அமிர்த்தை கடையும் அதாவது தறிக்கும் பொழுது வரும் அமிர்தங்களை எவரும் கைப்பற்ற கூடாது என்பதற்காக இதை பாதுகாப்பு விலங்குகளாக உருவாக்க காரணமாகும்.
குமரிக்கண்டத்தின் பிறப்பிடமாக கொண்ட இந்த யாளி அதிகமாக பூமியில் இருக்காது.
இது கடவுளின் விலங்காக மாறியது முதல் இது மூன்று யோகங்களிலும் சுற்றிதிரியும்
மனிதர்கள் இதை காண்பதே அரிதாகும்.
சிலர் மற்றும் பார்த்து இருக்கிறார்கள்.
சில மாமுனிவர்கள் அதிகமான கடும் தவம் புரிந்து யாளியை பெற்று இருக்கிறார்கள்.
அவர்களின் பாதுகாப்புக்காக இதை வரமாக பெற்று இருக்கிறார்கள்.
மேலும் நம் அருகில் இருந்தும் நாம் இந்த யாளிகளை உணர்வதும் இல்லை !!!!கண்டுகொள்வதில்லை
ஆனால், இங்கு வரும் வெளிநாட்டினரோ இதன் உருவ அமைப்பையும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் தோற்றத்தையும் கண்டு மிரண்டுதான் போகிறார்கள்.
உலகில் அதிகமான வருமானம் மிக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் அவென்ஜர்ஸ் திரைப்படங்களை உருவாக்கிய திரு. ஸ்டான் லீ என்பவர் இந்த யாளி பற்றி பல ஆதார தேடுதலை மேற்கொண்டு இருக்கிறார்.
டிஸ்கவரி சேனலில் மற்றும் ஹிஸ்டரி சேனலில் திரு. ஸ்டான் லீ அவர்கள் ஆதசிய சக்தி கொண்ட சூப்பர் மனிதர்கள் அதாவது ஆங்கிலத்தில் super humans என்ற தொடர் மூலம் மனிதர்களை தேடிய பொழுது தான் யாளியின் வரலாற்று கண்டாராம்.
யாளியின் ஆற்றல் ஒரு சதவீதம் !!!!
ஒரு மனிதருக்கு கிடைத்தால் அவனின் ஆற்றலில் வெளிப்படுத்தப்பட்ட திரைப்படம் தான் வால்வரின்.
அதாவது அந்த திரைப்படத்தில் கதாநாயகனின் உடல் பிளந்து மறுபடியும் இறுகி கொள்ளும் இதை ஆற்றலை யாளியின் உடல் அமைப்பு வைத்து உருவாக்கினார்.
யாளிகளில் சூரல் யாளி என்ற ஒரு வகைகள் உண்டு !!!!
அதை பெயரை பயன்படுத்தியே வால்வரின் என்ற பெயரை Wolverine பெயர் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
Wolverton என்ற புகழ்மிக்க ஒரு இடம் லண்டனில் இருக்கிறது.
இதும் சூரல் யாளியை மையப்படுத்திய உருவாக்கியது.
வால்வரின் என்பது ஒரு தமிழ் சொல்லாகும்.
இதில் என்னுடைய பெயருடன் இணைத்து கொண்டேன்.
அது ஒரு நாவலில் வரும் கதாநாயகனின் பெயர் என்று உலக மக்களுக்கு தெரியும்.
ஆனால் தமிழரின் குமரி கண்டத்தில் வாழ்ந்த அரிய வகையான பிராணி என்று யாருக்கும் தெரியாது.
ஏன் தமிழர்களுக்கு பாதி பேருக்கு தெரியாது .
வால்வரின் என்ற பெயர்
ஒரு மிருகத்தின் பெயர் ஆகும்.
நம்முடைய தமிழ் தேசத்தில் வாழ்ந்த இந்த உயிரினத்தின் வரலாறு கிரேக்க மற்றும் எகிப்திய புராண கதைகளில் இன்றும் நம்பப்படுகிறது.
ஏன் தமிழர்களுக்கு பாதி பேருக்கு தெரியாது .
வால்வரின் என்ற பெயர்
ஒரு மிருகத்தின் பெயர் ஆகும்.
நம்முடைய தமிழ் தேசத்தில் வாழ்ந்த இந்த உயிரினத்தின் வரலாறு கிரேக்க மற்றும் எகிப்திய புராண கதைகளில் இன்றும் நம்பப்படுகிறது.
அழிக்க முடியாத உயிரினம் ஆகும். ஆங்கிலத்தில் வால்வரின் என்ற பெயர் மாற்றம் பெற்றது.
உண்மையில்
ஆதி காலத்தில்
நம்முடைய இதிகாசத்தில் வாழ்ந்த
யாளி எனப்படும் கடவுளின் வாகனம் இது.
தமிழர்களில் அதிகமான நபர்களுக்கு யாளி பற்றி தெரியும்.
யாளி எனப்படும் உயிரினங்களில் யானை யாளி , மகரம் யாளி , சிங்கம் யாளி என மூன்று விதமான யாளிகள் இருக்கும்.
டைனோசர் காலத்திற்கு முன்பே வாழ்ந்த கடவுளின் விலங்கு இது.
இதை தான் சீன நாடு மக்கள் டிராகன் என்று வர்ணிக்கிறார்கள்.
உண்மையில் இந்த விலங்கு வாழ்ந்த தடயங்களும் , சுவடிகளும் நம்முடைய நாட்டில் கோயிலில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
எனக்கு யாளி என்றால் மிகவும் பிடிக்கவும்.
அதை தான் வால்வரின் என்கிற பெயரை இணைத்து !!!
என்னுடைய பெயர் ஐய்யனார் வால்வரின் என்று புனைப்பெயராக ஏற்று கொண்டேன்.
அய்யனார் (வால்வரின்).
இரண்டு பெயரில் உள்ள
உண்மையான பொருள் கடவுளும் , கடவுளின் மிருகமும் என்ற அர்த்தம் கொண்டதாகும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment