Pages

Saturday, 29 February 2020

பாம்பு ( சர்ப்பம்). பால் குடிக்குமா?

பாம்பு பால் குடிக்குமா?




பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 21 February 2020

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை ???

 மனித உடலில்  உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை ???

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.

பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.

குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.

சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்...


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 20 February 2020

சிவார்ப்பணம் !!! சிவனின்றி அணுவும் அசையாது !!!

சிவார்ப்பணம்
சிவனின்றி அணுவும் அசையாது
*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .*.! – *எப்படி சாத்தியம்.*

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.1அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

2தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

3இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*.

*இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.*

4மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

5பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

6திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

7உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.

8ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

9படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.

10இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.

11இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

12அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

13சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

14சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

அதிகம் பகிருங்கள் சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகறியட்டும்.

         *நமசிவய*
*திருச்சிற்றம்பலம்.


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 18 February 2020

சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களுடைய தமிழ் மரபும் , புதிரும்

' " சனதன தர்மத்தின் " (இந்து ) -
போர் வாள் !!!!!
' மராட்டிய பேரரசர்
தெய்வதிரு.சத்திரபதி
சிவாஜி மகாராஜ் !!!!

உலகில் தோன்றிய
முதல் மனித
இனம் .
தமிழன் என்பது
உலகமே அறியும்.
ஆனால் தமிழன்
உதிரம் உலகையே
ஆளும் என்றும்
இன்றைய தமிழன்
அறிந்து இருக்க
வாய்ப்பு இல்லை !!!!

"தமிழன் " |
' என்பது மதமோ,
- இனமோ ,
பேதமோ,சாதியோ,
இல்லை !!!! |
தமிழன் என்பது
உலகில் தோன்றிய
முதல் மனித
இனத்தின்
" மரபு"
* தமிழ் மரபு*

உலகில் வீரத்தை
விதைத்தவன்
தமிழன் !!!!
ஏறும்
போரும் , எங்கள்
குல தொழில் !!!!!
தமிழ் மரபு
வாழ்க !!!!!

மாமன்னர் இராஜராஜசோழன் , இராஜந்திரசோழன் ஆகிய சோழ ராஜ்ஜியத்திற்கு   பிறகு வந்த இஸ்லாமிய படையெடுப்ப காலங்களில் !!!
தற்போதைய இந்திய தேசத்தை கடந்து தமிழ் தேசத்தை கைப்பற்றினார்கள்.
அப்பொழுது தஞ்சை பெரிய கோவில் பூஜை என்னும் கடவுள் வழிபாடுகளை முற்றிலும் தடுத்து நிறுத்தி வைத்தனர். கோவில் வழிபாடுகள் இல்லாமல் பல ஆண்டுகள் கடந்தது. கோவிலை மக்களை வழிபட கூடாது என்பதற்காக இஸ்லாமிய ஆட்சியில் இவ்வாறு செய்தனர்.
அப்பொழுது இன்றைய மாராட்டியம் என்னும் அன்றைய தமிழ்வாழ்  வம்சாளிகள் இருந்த மராத்தா என்னும் மாநகரத்தில் இருந்த பேரரசர்
சத்திரபதி சிவாஜி மகாராஜ் அவர்கள் சனதன தர்மத்தை காக்க இந்து சமய இயக்கத்தை உருவாக்கிய பல நகரங்களில் இருந்த இஸ்லாமிய அரசர்களை வென்று மீண்டும் இந்து சமயத்தை உருவாக்கினார்.
வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தை  தோற்கடித்தார்.

அதன் பின்பு இராஜராஜசோழனின் தஞ்சை பெரியக்கோவிலை கண்டு வியந்தார்.
மொகலாய ஆட்சியில் மூடப்பட்ட இந்த ஆலயத்தை மீண்டும் திறக்க உத்திரவிட்டார்.
அப்பொழுது நடந்த " திரு குடமுழக்கு " என்னும் கும்பாபிஷேகம் இன்றுவரை அவருடைய சிறப்பில் ஒன்றாக இருக்கிறது.
மாமன்னர் இராஜராஜசோழன் விருப்பப்படியே பல இடங்களில் சிவலாயங்களை கட்ட உத்திரவிட்டார்.
அவர் வாழ்நாளில் இந்த தமிழ் தேசத்திற்கு வந்த நிகழ்வுகளையும் , இங்கு உள்ள மாமன்னர் இராஜராஜசோழன் , இராஜேந்திர சோழனின் சிறப்பை பலருக்கு சிறப்பு உரையாக்கினார். 
இது கதை அல்ல !!!! இன்றுவரை தமிழ் தேசம் மட்டும் அல்ல !!!!!  மராட்டிய மக்களுடைய பேசுப்படும் மாபெரும் வரலாற்று பொக்கிஷம் !!!! 


இந்த காணொளியை கண்டு மகிழுங்கள் !!!!!!!!





        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 9 February 2020

சேலத்தில் கிடைத்த நிலவு மண்


சேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்!!*
🌎🌎🌹🌎🌎

நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவால் அனுப்பப்பட இருந்த சந்திராயன் 2 விண்கலம் கடைசி நேர தொழில்நுட்ப குளறுபடியினால் நிறுத்தி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த விண்கலத்தில் நிலவின் தரைப்பகுதியை ஆராய ரோவர் ஒன்று இருக்கிறது. இதனை உருவாக்கிய போது நிலவின் மண் மாதிரிக்கு பதிலாக சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி என்னும் கிராமத்தில் இருந்து மண் எடுக்கப்பட்டு அதன்மீது ரோவர் செயல்படும் விதத்தை கணக்கிட்டிருக்கின்றனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்.
*ஏன் சித்தம்பூண்டி மண்?*
மொத்தமாக 5000 மீட்டர் தான் இந்த ரோவரால் பயணிக்க முடியும் என்றாலும், நிலவின் தரைப்பகுதி பூமியைப்போல் இருக்காது. நிலவு ஆராய்ச்சியில் பல நாடுகள் களத்தில் இருக்கின்றன. குறிப்பாக அங்குள்ள மண்ணின் அமைப்பு ரோவரின் இயக்கத்தை எப்படி பாதிக்கும் என்பதை எந்தவொரு விண்வெளி ஆராய்ச்சி மையமும் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கவேண்டும். நாசாவிடம் நிலவின் மண் மாதிரி இருக்கின்றது. அவர்களுடைய நிலவு ஆராய்ச்சி அந்த மண்ணில் தான் நடக்கிறது. அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றால் ஒரு கிலோ 150 டாலர்கள் ஆகிறது. இஸ்ரோவின் தேவையோ 60-70 டன். இத்திட்டம் பெரும் செலவுகளை உள்ளடக்கியதால் அமெரிக்க இறக்குமதி திட்டத்தை இஸ்ரோ கைவிட்டது.
சேலத்தில் இருந்து 65 கி.மீ தொலைவில் சேலம்-திருச்செங்கோடு நெடுஞ்சாலை பகுதியில் இருக்கிறது சித்தம்பூண்டி மற்றும் குன்னாமலை கிராமங்கள். இங்குள்ள மண் நிலவு மண் போன்ற இயற்பியல் பண்புகளை பெற்றிருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதற்குக்காரணம் இங்குள்ள மண்ணில் இருக்கும் Anorthosite பாறைகளால் இந்த மண் உருவாக்கப்பட்டிருப்பதே ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டே சித்தம்பூண்டி மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் சுமார் 400 – 500 மீட்டர் வரை துளையிட்டு ஆராய்ச்சிக்கான மண் எடுக்கப்பட்டிருக்கிறது.
25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில், National Institute of Technology in Trichy, Periyar University in salem மற்றும் Indian Institute of science (bengaluru) ஆகிய பல்கலைக்கழத்தின் வல்லுநர்கள் இணைந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றி உள்ளனர். இஸ்ரோ தலைமையிலான குழு மூலம் Anorthosite பாறை மற்றும் மண்ணை தேவையான மைக்ரோ அளவிற்கு மாற்றப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..