Pages

Monday, 16 March 2020

கொரோனா வைரஸ் பற்றி சித்தர்கள் எழுதிய பாடல்..

கிமு 400ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி சித்தர் போகர் எழுதிய பாடல்..




"சரவணனடி வாழ் அரவும்
விடப்பற் கொண்டு நெளியும்
வெட்டியதை புசிப்பவர் தம்
உடலில் சுவாசம் திணறும்
ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்
உடற் மண்டலம் சிதைந்து
உயிர் போகுமே பறந்து.

பொருள்: முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.. உடலில் ரோகம் பிடிக்கும் உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடைந்து துர் மரணம் நிகழும்.


திருமூலர்


" *பொல்லாப் புலாலை*
 நுகரும் புலையரை
எல்லாருங் காண
இயமன்றன் தூதுவர்
 "செல்"லாகப் பற்றியத்
தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி
மறித்துவைப் பாரே"

அன்றே திருமூலர் பெருமான் சொன்ன வார்த்தை: "உண்ணத் தகுதியற்ற, தீமைதரும் புலால் உணவை உண்ணுகின்ற மக்களை உலக நாடுகளே காணும் வண்ணம், எமதூதர்களால் கிருமிகள் தாக்கப்பட்டு, துன்பம் தரும் நரகமாகிய மருத்துவமனையில் மல்லாக்கப் படுக்கவைத்து இறக்கச் செய்வார்”  இத்தகைய நோய்க் கிருமியை ‘செல்' என்ற சொல்லால் குறிக்கிறார்.

புலால் மறுத்தல் (திருமந்திரம் - முதல் தந்திரம்):

‘பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்

செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்

மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே’!!

பிற உயிர்களின் பரிதாபக் கதறலில் இருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கிறார் திருமூலர்.

'தன் பொருட்டு பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றிப் புலால் உட்கொள்வோரை - நரகத்தில் யம தூதுவர்கள் சிறிதும் இரக்கம் காட்டாது நெருப்பில் புரட்டி எடுப்பர்' என்று ஐயம் திரிபற அறம் உணர்த்துகிறார் திருமூலர்.



No comments:

Post a Comment