ஜனநாயக முறைப்படி "நோட்டா" என்பது மிக முக்கியமான தேவையான ஓன்று.
கட்சிகள் அவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு நிறுத்தி இருக்கின்ற வேட்பாளர்கள் ஒருவரும் சரியில்லை, அவர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதை நாம் வெளிப்படுத்தும் உரிமை நமக்கு இருக்கின்றது.
இதன் காரணமாக.., இவனும் சரியில்லை அவனும் சரியில்லை , இருப்பதில் ஒருத்தனை தேர்ந்தெடுப்போம் என்ற அவலம் நீங்கும். கட்சிகளும் சரியான நபரை நிப்பாட்டும். இதுவே சிறந்த ஜனநாயகம் .
அப்படிப்பட்ட முக்கியமான நோட்டாவை நமது நாட்டில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
நோட்டா என்பது நமது தமிழகத்தை பொறுத்தவரை..., எது கூடுதல் வாக்கு வாங்குகிறது " பாஜக வா , நோட்டாவா" என்ற அடிப்படையிலேயே நோட்டா பார்க்கப்படுகின்றது.
நோட்டாவை சரியாக பயன்படுத்தும் முறை :
ஒரு தொகுதியில் நிற்கும் வேற்பாளர்கள் அனைவரையும் விட, நோட்டா அதிகமான ஒட்டு வாங்கினால் அந்த தொகுதியில் நிற்கும் அனைத்து வேற்பாளர்களும் தகுதி நீக்கம் (ஆயுற்கால தகுதி நீக்கம் அல்லது குறைந்தபட்சம் இரண்டு தேர்தல்களுக்காவது தகுதி நீக்கம்) செய்யப்பட்டு , புதிதாக வேற்பாளர்கள் நிறுத்தப்பட்டு மறுதேர்தல் அந்த தொகுதிக்கு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தால் மட்டுமே நோட்டா என்பது சரியான ஒன்றாக இருக்கும்.
அப்படியில்லை என்றால் நோட்டாவுக்கு போடுவதும் , செல்லாத வாக்கும் ஒன்றுதான்.
நோட்டாவை மேற்கண்டவாறு செயல்படுத்தினால் மட்டுமே , தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேற்பாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க வேண்டுமே என்ற பயம் இருக்கும் . இல்லை என்றால் அடுத்த தேர்தலில்கூட நிற்க முடியாமல் போய்விடுமே என்ற பயத்தில் நல்லது செய்ய முற்படுவார்கள் .
இதுவே சிறந்த ஜனநாயகம்.
ஆனால் சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நமது அரசியல்வாதிகள் தங்களுக்கு பாதகமாக உள்ள ஒன்றை துணிந்து செயல்படுத்த விரும்புவார்களா என்ன ..?
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.சேகு அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment