Pages

Wednesday, 16 June 2021

மனிதப் பரிணாமத்திற்கான அவசியமும் , விளக்கமும்.

 இந்த பேரண்டம் (Universe) தோன்றுவதற்கான அவசியம் என்ன?

இந்த பேரண்டத்தின் ஒரு துகளாக சூரியன் தோன்றுவதற்கான அவசியம் என்ன?

அந்த துகளினும் சிறு துகள்களாக நமது பூமி மற்றும் பிற கோள்கள், நிலா ஆகியவை தோன்றுவதற்கான அவசியம் என்ன?

பேரண்டத்தின் ஒரு சிறு துகளான பூமியில், கண்ணுக்குப் புலப்படாத ஒரு செல் உயிரி முதல் பிரம்மாண்டமான நீலத்திமிங்கிலம் வரை பல்வேறு உயிர்கள் தோன்றுவதற்கான அவசியம் என்ன?

வெறும் கல்லும், மண்ணும், கடல் நீரும் சூழ்ந்த கோளமாக மட்டுமே இந்த பூமி இருந்து இருக்கலாமே? ஏன் உயிர்கள் தோன்றின?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்து விட்டால், மனிதப் பரிணாமத்திற்கான அவசியம் என்ன என்பது உங்களுக்கு விளங்கி விடும்.

ஆனால், இந்த பேரண்டத்தின் முன் மனிதர்கள் எனப்படும் அற்பப் பிறவிகளான நமக்கு இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துக் கொள்ள நமது ஒட்டு மொத்த மனிதகுலத்தின் ஆயுளும் போதப் போவது இல்லை.

சரி, இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன்.

உயிர்கள் வாழ்வதற்கான மிகச் சரியான, துல்லியமான சூழல் பூமியில் மட்டுமே நிலவியதால் தான் பூமியில் உயிர்கள் தோன்றி உயிர்க்கோளம் ஆகியது. இந்த விதமான, துல்லியமான சூழல் மற்றக் கோள்களில் இல்லாததால், அந்தக் கோள்களில் எல்லாம் உயிர்கள் தோன்றி வாழ்வதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

சரி, அது என்ன துல்லியமான சூழல் என்று பார்த்து விடுவோம். பூமி சூரியனில் இருந்து மிக நெருக்கத்திலோ அல்லது வெகுத்தொலைவிலோ இல்லை. மிகவும் சரியான தொலைவில் உள்ளது. இதனால் பூமியில் அதிக வெப்பமோ, அதிகக் குளிர்ச்சியோ இல்லை. இதனால், உயிர்கள் வாழ்வதற்கான சரியான தட்பவெப்பம் நிலவுகிறது. 12 மணி நேரம் பகலும், 12 மணி நேரம் இரவும் என ஒரு நாள் சரியான விகிதத்தில் உள்ளது. அதிக நேரம் ஒளியும் இல்லை, அதிக நேரம் இருளும் இல்லை.

குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவநிலைகளும் மிகச் சரியான விகிதத்தில் உள்ளது. எனவே ஆண்டு முழுவதும் குளிர் மட்டுமே நிலவுவதோ, மழை மட்டுமே பொழிவதோ, சூரியவெப்பம் மட்டுமே வாட்டுவதோ இல்லை. இப்படிப்பட்ட கலவையான சூழல் உயிர்கள் தோன்றுவதற்கும், உயிர்கள் வாழ்வதற்கும் மட்டும் உதவவில்லை. உயிர்களின் பரிணாம வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.

உயிர்கள் தோன்றிய உடன் அவை ஒரே இடத்தில் நிலை கொள்ளவில்லை. உணவுத் தேடி அவை, இடம் விட்டு இடம் செல்ல நேர்ந்தது. காற்று, மழை, புயல், கோடை வெப்பம், கடும் பனி போன்ற இயற்கை இடர்களை சமாளிக்க வெவ்வேறு வாழிடங்களைத் தேடி ஓட நேர்ந்தது. இப்படி ஏற்பட்ட வெவ்வேறு சூழ்நிலைகளின் தாக்கத்தால் அந்த உயிரிகளின் மரபணுக்களில் மாற்றம் நிகழ்ந்தன. அந்த மரபணு மாற்றங்கள் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டன.

இப்படி வெவ்வேறு வாழிடங்களில், வெவ்வேறு கால நிலைகளில், வெவ்வேறு பருவ நிலைகளில், வெவ்வேறு இயற்கை சூழலில் வாழ்வதற்காக உயிரிகள் சில கூடுதல் திறன்களை பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்றன.

எனவே எந்த ஒரு உயிரிக்கும் மனிதன் உட்பட, இந்த உலகில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சி அவசியம்.

காலம் காலமாய் மரங்களையே வாழ்விடமாகக் கொண்ட நம் மூதாதைய குரங்கினங்களுக்குத் தொடர்ந்து மரங்களில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவை மரங்களை விட்டுக் கீழிறங்கி குகைகளுக்குள் தஞ்சம் அடைந்து இருக்கலாம். அப்படி குகைகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்ததால் மரத்தில் வாழ்வதற்குரிய சில பண்புகளை இழந்து, சில புதிய பண்புகளைப் பெற்று மனிதனாகப் பரிணாம வளர்ச்சியடைந்து இருக்கலாம். இப்படி குரங்கிலிருந்து தோன்றிய மனித இனத்திற்கு, மீண்டும் மரத்திலேறி வாழ வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் தரையிலேயே வாழத் துவங்கியதால் அதற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள பரிணாம வளர்ச்சி அவசியமானது. புரிந்ததா?

பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள கீழே உள்ள எனது பதிலைப் பார்க்கவும்!

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான். ஏன் ஏனைய மிருகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை?

விளக்குவதற்கு கடினமான கேள்வி. எளிமையாக விளக்க முயல்கிறேன்.

பரிணாம வளர்ச்சியைப் (Evolution) பற்றி புரிந்துக் கொள்வதற்கு முன் உயிர்கள் எப்படித் தோன்றின என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். உயிர்கள் எப்படித் தோன்றின என்றுப் புரிந்துக் கொள்வதற்கு முன் இந்த பூமி எப்படித் தோன்றியது எனத் தெரிந்துக் கொள்ள வேண்டும். எனவே பூமியின் தோற்றத்தில் இருந்து துவங்குகிறேன்.

இந்த அண்டம் (Universe) செயல்படத் துவங்கிய உடன், வெற்று வெளியில் (Space) மிதந்து கொண்டிருந்த பல அணுத்துகள்கள் (Atomic particles) ஒன்றிணைந்து பிரம்மாண்ட உருவம் கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதால் பெருவெடிப்பு (Big bang theory) நிகழ்ந்தது. அந்த பெருவெடிப்பில் வெடித்துச் சிதறிய ஒரு துண்டுத் தீக்கோளம் தான் சூரியன். சூரியன் ஒரு தீக்கோளமாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள பல வாயுக்கள். பெருவெடிப்பின் போது பல அணுத்துகள்கள் ஒன்றிணைந்தது தான், அந்த வாயுக்கள் உருவாகக் காரணம்.

பெருவெடிப்பின் காரணமாக ஒரு விசைத் (Force) தோன்றியது. அந்த விசை சூரியனை ஒரு அச்சில் (Axis) நிறுத்தி சுழலச் செய்தது. இப்படியாக சூரியன் பல நூறு கோடி ஆண்டுகளாக சுழன்று கொண்டேயிருந்தது. அந்த சுழற்சியின் காரணமாக சூரியனில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அந்த வெடிப்பில் பலத் துண்டுக் கோளங்கள் சிதறியது. அந்தத் துண்டுக் கோளங்களை சூரியன் தனது விசையின் மூலம் ஒரு அச்சில் நிறுத்தி தன்னைத் தானே சுழல செய்தும், தன்னையும் சுற்றி வரச் செய்தது. அந்தத் துண்டுக் கோளங்கள் தான் நம் சூரியக் குடும்பத்தின் கோள்கள் மற்றும் நிலா.

இப்படி சூரியனிலிருந்து வெடித்து சிதறியத் துண்டுக் கோளமான நமது பூமியும் ஆரம்பத்தில் சூரியன் போலவே கனன்றுக் கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக அதன் வெளிப்புறப்பகுதி குளிரத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட குளிர்ச்சியின் காரணமாக நமது பூமியை சுற்றி இருந்த வாயுக்கள் குளிரத் துவங்கி மழையாகப் பொழியத் துவங்கியது. இந்த மழை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பொழிந்துத் தள்ளியது. இந்த மழை நமது பூமியின் மேற்பரப்பில் இருந்த பள்ளங்களை நிரப்பத் துவங்கியது. அது தான் கடல். ஆம், உயிர் தோன்றுவதற்கான மூலமான நீர் வந்து விட்டது. இனி தான் சுவாரசியமே!

நம் பூமியின் மேற்பரப்பில் இருந்த கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய அணுக்கள் நீருடன் வேதிவினை (Chemical reaction) புரிந்து ஒரு செல் உயிரிகள் தோன்றியிருக்கலாம். பின்னர் அவை காலப்போக்கில் பல செல் உயிரியாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம். அந்த பல செல் உயிரிகள் நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, ஊர்வன, பறப்பன, தாவரங்கள் எனப் பல உயிரிகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம். இந்தப் பரிணாம வளர்ச்சி பல கோடி ஆண்டுகளாக நடைபெற்றிருக்கலாம்.

சரி, இந்த பரிணாம வளர்ச்சி இப்படித்தான் நடந்திருக்கலாம் என்பதற்கு நம் முன் இருக்கும் சில சான்றுகளைப் பார்க்கலாம். விலாங்கு மீன், கடல் பாம்புகள், முதலைகள் போன்ற நீர் வாழிகள் எதோ ஒரு இயற்கை சீற்றத்தினால் நீரைவிட்டு நிலத்திற்கு வந்து இன்றைய ஊர்வன இனமாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம்.

அடுத்ததாக இருக்கும் இன்னொரு சான்று வெளவால்கள். வௌவால்கள் பறவைகளுக்கும், பாலூட்டிகளுக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினமாக இருக்கலாம். ஏனெனில் பறக்கும் திறனுடைய ஒரே பாலூட்டி வௌவால்கள் மட்டும் தான். நாம் அறிந்தேயிராத ஏதோ ஒரு பறவையினம் தான் இன்றைக்கு நாம் பார்க்கும் வௌவாலாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வு என்பதால் இதற்கான சான்றுகள் நம்மிடம் இல்லை. இருக்கும் சான்றுகளை வைத்து புரிந்து கொள்ள வேண்டியது தான்.

அடுத்தது வாத்தலகி எனப்படும் பிளாடிபஸ் (Platypus), பரிணாம வளர்ச்சிக்கு நம் முன் இருக்கும் இன்னொரு சான்று. இந்த விலங்கிற்கு வாத்தைப் போன்ற அலகு இருப்பதால் அதற்கு வாத்தலகி என்று நம் தமிழ் ஆர்வலர்கள் பெயரிட்டு விட்டனர் போல. எப்படி இருந்தாலும் அது அதற்கு பொருத்தமான பெயர் தான். இது நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய விலங்கு. ஆனால் இது பெரும்பாலும் நீரில் தான் இருக்கும். கரையில் வளை தோண்டி அதனுள் கூடு கட்டி வாழும் ஒரு விசித்திரப் பிறவி. வளையிலிருந்து நீருக்கு செல்லும் வகையில் வளையின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கும். எனவே வளை விட்டால் நீர், நீரிலிருந்து வளை என்று மட்டுமே இதன் வாழ்க்கை இருக்கும். எப்போதும் கரையிலிருக்கும் வளையைத் தாண்டி இது நிலத்திற்கு செல்வதேயில்லை.

இதன் இந்த வாழ்க்கை முறையே, இந்த விலங்கு ஆரம்பத்தில், நிலத்தில் வாழ்ந்து பின்னர் ஏதோ ஒரு இயற்கைப் பேரிடர் காரணத்தால் நீரிலியே வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டு, பரிணாம வளர்ச்சியடைந்து, நீரில் வாழ்வதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கலாம்.

இதன் உடலில் வாத்தை போன்ற ரோமங்கள் உள்ளன. இந்த ரோமங்கள் அதன் உடலில் நீர் புகாமல் காத்து உதவுகின்றன, வாத்துகளுக்கு அதன் ரோமங்கள் உதவுவது போல். இந்த விலங்கின் மிக முக்கியமான அம்சம் எதுவெனில் இது முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு விலங்குகளில் ஒன்றாகும். அந்த மற்றொரு விலங்கு எக்னிடா (Echnida) எனப்படும், முள்ளம்பன்றி போல் தனது முதுகில் முட்களை உடைய ஒரு வகை எறும்புத்தின்னி ஆகும்.

சரி நாம் வாத்தலகியின் பக்கம் வருவோம். வாத்தலகிகளுக்கு வாத்தைப் போலவே அலகுகள் உள்ளன. வாத்தைப் போலவே கரையோரங்களில் கூடு கட்டி முட்டையிடுகின்றன. வாத்தைப் போலவே பெரும்பாலான நேரத்தை நீரிலியே கழிக்கின்றன. வாத்தைப் போலவே நீந்துவதற்கு வசதியாக அதன் பாதங்களில் சவ்வுகள் உள்ளன. எனவே வாத்துகளே வாத்தலகிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து கூடுதலாக பால் சுரப்பிகளைப் பெற்று பாலூட்டியாக மாறி இருக்கலாம்.

வெறுமனே மரபணு மாற்றம் மட்டுமே பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதில்லை. புறக் காரணிகளான சுற்றுச் சூழலும் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி பரிணாம வளர்ச்சிக்குத் துணை புரியலாம். இதற்கான சான்றுகளை விளக்குகிறேன்.

சாதாரணமான காடுகளில் வசிக்கும் கரடிகள் ஏதோவொரு இயற்கைப் பேரிடர் காரணமாக பனி சூழ் கண்டமான தென் துருவத்தில் வாழ நேர்ந்து போலார் கரடிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து இருக்கலாம். பனிப் பிரதேசங்களில் வாழும் பனிமான் (Reindeer), முன்னொரு காலத்தில் வாழ்ந்த மம்மூத் (Mammoth) எனப்படும் பனியானை போன்ற விலங்குகள் தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சியின் மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கலாம்.

இந்த விளக்கங்களின் மூலம் உங்களுக்கு பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் இப்போது உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்.

எந்த ஒரு புதிய உயிரினம் தோன்றுவதற்கும் அதனுடைய மூதாதைய (Ancestor) உயிரினத்தில் ஏற்படும் மரபணு மாற்றத்தின் காரணமாக நிகழும் பரிணாம வளர்ச்சியே காரணமாகும். அந்த வகையில் மனிதனின் மூதாதைய உயிரினம் என்று குரங்கை சொல்வதற்குக் காரணம், அதன் உருவ அமைப்பும், மரபணு தொகுப்பும் மனித இனத்துடன் ஒத்துப் போவது தான் காரணம். சிம்பன்சி குரங்குகளின் மரபணு தொகுப்பும் மனிதனின் மரபணு தொகுப்பும் 99% ஒத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடித்து அறிவித்துள்ளனர். சிம்பன்சி குரங்குகள் மற்றும் மனிதர்களின் மரபணு தொகுப்புக்கிடையே காணப்படும் அந்த 1 சதவீத வித்தியாசத்தில் தான் அவை குரங்குகளாகவும், நாம் மனிதர்களாகவும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறோம். உலகில் வேறு எந்த உயிரினத்தோடும் மனிதர்களின் மரபணு தொகுப்பும், உடல் உருவ அமைப்பும், குரங்குகளின் மரபணு தொகுப்பும், உடல் உருவ அமைப்பும் ஒத்துப் போகும் அளவிற்கு இல்லை. எனவே தான் குரங்குகள் நம் மூதாதையர், நாம் குரங்கில் இருந்து தோன்றியுள்ளோம். வேறு எந்த உயிரினத்தில் இருந்தும் தோன்றவில்லை. சந்தேகம் தீர்ந்ததா?

பின்குறிப்பு: யாரும் அண்டம் எப்படித் தோன்றியது? அணுக்கள் எப்படித் தோன்றியது? போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம். அதற்கான பதில் மனித குலத்தில் இல்லை. அதற்கு விடை காண முயற்சித்தால் மொத்த மனித குலத்தின் ஆயுளும் பத்தாது. அது நம் மனிதனின் கற்பனா சக்திக்கும், சிந்தனா சக்திக்கும் அப்பாற்பட்டவை. அதற்கு கடவுள் என்று பெயர் சூட்டிக் கொள்வது உங்கள் விருப்பம்.

இவ்வளவு பொறுமையாகவும், முழுமையாகவும் படித்ததற்கு எனது மனமார்ந்த நன்றி!

அந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ரூபன் துரை ராஜ் மிக்க நன்றி !!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment