Pages

Saturday, 25 May 2024

தமிழநாட்டில் உள்ள ஊர் பெயர்களின் தமிழ் பெயர்கள்.

 



பல்லாவரம் அல்ல;


பல்லவபுரம்.


தாராசுரம் அல்ல;


ராராசுரம்.


ஈரோடு அல்ல;


ஈரோடை.


ஒகனேக்கல் அல்ல;


புகைக்கல்.


தர்மபுரி அல்ல;


தகடூர்.


பழனி அல்ல;


பொதினி.


கும்பகோணம் அல்ல;


குடந்தை.


தரங்கம்பாடி அல்ல;


அலைகள்பாடி.


காவிரிபூம்பட்டினம் அல்ல;


காவிரிபுகும்பட்டினம்.


பூம்புகார் அல்ல;


புகும்புகார்.


ஸ்ரீரங்கம் அல்ல;


அரங்கம்.


திருவையாறு அல்ல;


ஐயாறு.


சீர்காழி அல்ல;


சீகாழி.


வேதாரண்யம் அல்ல;


திருமறைக்காடு.


கல்பாக்கம் அல்ல;


கயல்பாக்கம்.


சேலம் அல்ல;


சேரளம்.


எடப்பாடி அல்ல;


இடையர்பாடி.


திருத்தணி அல்ல;


திருத்தணிகை.


திருவண்ணாமலை அல்ல;


அண்ணாந்துமலை.


கடலூர் அல்ல


கூடலூர்.


காஞ்சிபுரம் அல்ல;


கஞ்சிவரம்.


மதுரை அல்ல;


மருதத்துறை.


மானாமதுரை அல்ல;


வானவன் மருதத்துறை.


காளையார் கோவில் அல்ல;


கானப்பேரெயில்.


சிவகங்கை அல்ல;


செவ்வேங்கை.


திருவாரூர் அல்ல;


ஆரூர்.


பொள்ளாச்சி அல்ல;


பொழில் ஆட்சி.


திண்டிவனம் போல்


அது தில்லைவனம்.


கான்சாபுரம் அல்ல;


கான்சாகிபு புரம்.


(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)


வத்ராயிருப்பு அல்ல;


வற்றாத ஆறு இருப்பு.


தனுஸ்கோடி அல்ல;


வில்முனை.


இராமேஸ்வரம் அல்ல;


சேதுக்கரை.


இராமநாதபுரம் அல்ல;


முகவை.


செங்கல்பட்டு அல்ல;


செங்கழுநீர்பட்டு.


சேர்மாதேவி அல்ல;


சேரன்மகாதேவி.


விருத்தாசலம் அல்ல;


முதுகுன்றம்.


வேளாங்கண்ணி அல்ல;


வேலற்கன்னி.


சைதாப்பேட்டை அல்ல;


சையது பேட்டை.


தேனாம்பேட்டை அல்ல;


தெய்வநாயகம் பேட்டை.


கொசப்பேட்டை அல்ல;


குயவர்பேட்டை.


குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை


ஆனால் அது தோல் பேட்டை தான்.


புரசைவாக்கம் அல்ல;


புரசைப்பாக்கம்.


பெரம்பூர் அல்ல;


பிரம்பூர்.


சேத்துப்பட்டு அல்ல;


சேற்றுப்பேடு.


அரும்பாக்கம் அல்ல;


அருகன்பாக்கம்.


சிந்தாதரிப்பேட்டை அல்ல;


சின்னத்தறிப்பேட்டை.


உடுமலைபேட்டை அல்ல;


ஊடுமலைப்பேட்டை.




Friday, 19 November 2021

கஜினி முகமது படை மற்றும் இராஜராஜசோழன் படை இதில் எது வலிமையானது ???

 பதில் : இராஜராஜசோழனின் படையே....


அருண்மொழிவர்மன் என்கின்ற இயற்பெயரைத் தாங்கிய பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் (கி.பி 947 — கி.பி 1014)


கஜினி முகமது (கி.பி 971 – கி.பி 1030)


பொதுவாக பேரரசு விரிவாக்க நோக்கத்தில் படையெடுப்பவர்கள் எதிரிகளின் கோட்டைகள் மற்றும் ராணுவ நிலைகளையும் தான் தாக்குவார்கள்.

ஆனால் கஜினி முகம்மது பிற நாட்டு வளங்களை கொள்ளையடித்தே தனது நாட்டை வளப்படுத்துவதே நோக்கம் என்பதால்,பெரும்பாலும் செல்வவளம் மிக்க பகுதிகளையே தாக்கினான். (பஞ்சாபை தனது அரசுடன் இணைத்துக் கொண்டது உள்ளிட்ட ஒரு சில அரிதான விதிவிலக்குகள்)செளராஷ்டிரம், கன்னோசி, மதுரா, தானேஸ்வர் ஆகிய பகுதிகளையும் வெற்றிபெற்று கொள்ளையடித்துச் சென்றான்.

இந்த நோக்கத்தில்தான் கி.பி 1025 இல் சோமநாதர் சிவன் கோயிலின் மீது தாக்குதல் நடத்துகிறான். எதிர்த்து நின்ற ஆயிரக்கணக்கானோர் கொஞ்சமும் கருணையின்றி கஜினியின் படைகளால் கொன்று குவிக்கப்பட்டு கோயில் சூறையாடப்பட்டது.

பேரரசர் ராஜராஜ சோழனின் போர்கள்

விசயாலய சோழன் பின்வந்த சோழர்களின் சோழப் பேரரசை உலகமே வியக்கும் வண்ணம் அமைத்து நிலைபெறச் செய்தார் பேரரசன் இராசராசன்.

  1. ராஜராஜன்
  2. காந்தலூர் கொண்டான்
  3. அழகிய சோழன்
  4. மும்முடிச்சோழன்
  5. ராஜ சர்வக்ஞன்
  6. சோழநாராயணன்
  7. அபயகுலசேகரன்
  8. அரித்துர்க்கலங்கன்
  9. அருள் மொழி
  10. ரணமுக பீமன்
  11. ரவி வம்ச சிகாமணி,
  12. ராஜ பாண்டியன்
  13. ராஜ கேசரிவர்மன்
  14. சோழேந்திர சிம்மன்,
  15. ராஜ மார்த்தாண்டன்
  16. ராஜேந்திர சிம்மன்
  17. ராஜ விநோதன்
  18. உத்தம சோழன்
  19. உத்துக துங்கன்
  20. உய்யக் கொண்டான்,
  21. உலகளந்தான்
  22. கேரளாந்தகன்,
  23. சண்ட பராக்கிரமன்
  24. சத்ருபுஜங்கன்
  25. சிங்கனாந்தகன்
  26. சிவபாத சேகரன்
  27. சோழகுல சுந்தரன்
  28. சோழ மார்த்தாண்டன்
  29. திருமுறை கண்ட சோழன்
  30. சன நாதன்
  31. ஜெயகொண்ட சோழன்
  32. தெலிங்க குலகாலன்
  33. நித்ய விநோதன்
  34. பண்டித சோழன்
  35. பாண்டிய குலாசனி
  36. பெரிய பெருமாள்
  37. மூர்த்தி விக்கிரமா பரணன்
  38. சத்திரிய சிகாமணி
  39. கீர்த்தி பராக்கிரமன்

ஆகிய பட்டப் பெயர்களை தாங்கிய பேரரசர் மாவீரன் ராஜராஜ சோழன் தனது பேரரசின் விரிவாக்கத்தின் பொருட்டு பிற நாடுகளை வெற்றி பெறும் நோக்குடன் நிலையான படையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எட்டாண்டு கால ஏற்பாட்டுக்கு பின்னர்,திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர் சாலை என்னுமிடத்தில் போர் புரிந்து வெற்றி பெற்றார்.

சேரர்கள் பாண்டியர்களை வென்ற பின்னர் இலங்கை மீது படை எடுத்தார். ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தலைநகரான அனுராதபுரம் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து இலங்கையின் வடக்குப் பகுதியும் வீழ்ந்தது. அப்பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டது.

மேலைச் சாளுக்கியருக்கு எதிராக தனது மகன் ராசேந்திர சோழன் தலைமையில் வலிமையான படையை அனுப்பினார் இராசராசன். மேலைச் சாளுக்கியர் படை சிதறி ஓடிய பின் அவர்களுடைய தளபதி கேசவன் கைது செய்யப்பட்டார். சத்தியாசிரயனின்(மேலைச்சாளுக்கிய மன்னர்) மற்றொரு போர் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

இப்போரின் விளைவாக துங்கபத்திரை ஆறு சோழப் பேரரசுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் இடையேயான எல்லையானது.

இராசராசன் படையெடுப்பு தென்னிந்தியா தாண்டி மாலத்தீவுகள் என்று அழைக்கப்பட்ட மாலைத் தீவுகளை வென்றன. முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகள் இராசராசனால் கைப்பற்றப்பட்டன. இப்படையெடுப்புக்கு பெரிதும் காரணமாக இருந்தது இராசராசனின் வலிமைமிக்க கடற்படையகும்.

  • இதுவரை அமைந்த தமிழ் பேரரசுகளிலேயே தமிழ் தேசிய இனத்தின் மணிமகுடமாக அமைந்த சோழப் பேரரசு ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் உலகெங்கும் தனது புலிக் கொடியை பறக்க விட்டது.
  • தனது தந்தை இராஜராஜ சோழனின் வழிகாட்டுதலின்படி ராஜேந்திர சோழன் (கஜினி முகமதுவை போல்)படை எடுத்த நாடுகளை கொள்ளையடித்து நிர்மூலமாக்கி பேரரசுடன் இணைத்துக் கொண்டிருக்கவில்லை.
  • ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் (கஜினி முகம்மது சோமநாதர் சிவன் கோயிலை தாக்கிய அதே ஆண்டில்) ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனேசியப் பகுதி) வென்றான்.
  • கடாரத்து (தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி) ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவரப்பட்டன. கொள்ளை அடிக்கவில்லை அவனுக்கு பணிந்த மன்னர்கள் அளித்த பரிசுகள் தான்.
  • மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன் சோழப் பேரரசுடன் இணைத்து ஆட்சி செய்யவில்லை.
  • மாற்றாக பொருளாதார வளர்ச்சி நோக்கத்தில் வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளின் கடல் பகுதிகள் வழியே சோழப் பேரரசின் வணிகர்கள் பயணம் செய்யும்பொழுது அந்தந்த நாடுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு அந்த மன்னர்களும் பணிந்தனர்.
  • இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.
  • சோழர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ சமயத்தைப் பரப்பியதாக எந்தக் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.

கஜினி முகமதுவின் படைகளோடு ஒப்பிடுகையில் ராஜராஜ சோழனின் படை பிரிவு குறைந்தபட்சம் எட்டு மடங்காவது வலிமையானது.

  • சோழர்களின் படை ஏறக்குறைய 15 லட்சம் வீரர்களையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானை படையினரையும் குதிரைப் படைகள் மற்றும் காலாட் படையினரையும் கொண்டிருந்தன.
  • இவை இல்லாமல் காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப் படைகள் இருந்தது. ஒவ்வொரு பிரிவும் 1000-2000 வீரர்களையும் 500-1000 குதிரைகளையும் கொண்டிருக்கும்.இவர்கள் பின்புல பாதுகாப்பு அரணாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் செயல் புரிந்தனர்.
  • மருத்துவர் அணி - 200-300 மருத்துவர்கள் மருந்துப்பொருட்களை வண்டிகளில் இழுக்கும் குதிரைகளுடன் காணப்படுவர். போர்க்களங்களில் காயமடைந்த சோழப்பேரரசின் ராணுவ வீரர்களுக்கு உதவிபுரியும்.இதுபோன்ற படைப்பிரிவு உலகின் வேறு எந்த அரசிலும் இடம்பெற்றிருந்ததா என்று தெரியவில்லை.

கஜினியின் படைகள் இந்த அளவுக்கு வலிமை பெற்று விளங்கவில்லை.

ஒவ்வொரு முறை சிந்து நதியைக் கடந்து வருவதற்கு பெரும் பாடுபட்ட கஜினிமுகமது கங்கை நதியை கடக்க ஆயிரக்கணக்கான யானைகளை நதியில் இறக்கி அவற்றின் மீது லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை நடக்க வைத்துச் சென்ற சோழப்பேரரசின் வியூகத்தை கேட்டு நடுங்கிப் போயிருப்பார்.

கஜினி முகமதுவின் வட இந்திய போர் வெற்றிகளை ராஜராஜசோழன் அறிந்தாலும் அவரது போருக்கான தேவை பட்டியலில் கஜினிமுகமதுவின் பகுதிகள் எதுவும் இல்லை.

பேரரசின் புகழ் பரப்புதல் வணிகம் மற்றும் பண்பாட்டு நோக்கங்களுக்காக செம்மைப்படுத்தப்பட்ட சோழர்களின் அத்துமீறல் இல்லாத (படையெடுத்த நாடுகள் மீது)ராணுவத்தை ஒப்பிட்டால் முகமது கஜினியின் படை பாகுபலி படத்தில் வரும் காளகேயர் படைகளை போல காட்டுமிராண்டித்தனமான வன்மத்துடன் படையெடுத்த நாடுகளை சூறையாடிய நாசகாரப் படைகள்.

இவ்வளவையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட முகமது கஜினி, கடின முயற்சி எடுத்து கங்கைக் கரையைத் தாண்டி வந்து சோழர்களிடம் மிதி வாங்கி சிக்கி சின்னாபின்னமாகி சிதறி ஓடி தனது கனவுகளை சிதைத்துக் கொள்ள விருப்பம் இல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றிருப்பார்.

ராஜராஜ சோழனின் (மற்றும் ராஜேந்திர சோழன்)இலக்கில் தன்னுடைய பெயர் இல்லை என்பதே கஜினிமுகமதுவுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருந்திருக்கும்.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.குமரேசன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



Tuesday, 2 November 2021

யார் இந்த இயேசு ?

 ஏராளமான கானானிய மதங்கள் உருவான கானான் தேசத்தில் பெத்லஹேமில் பிறந்து உலகின் அதிக மக்கட் தொகையை கொண்ட முதன்மையான மதமாகியுள்ளது கிறிஸ்தவம் .மக்களை தேடி தேடி பரப்பிய முதல் மதம் கிறிஸ்தவம் தான்.

உண்மையில் இயேசு எப்போதும் மதம் பரப்பியது இல்லை அவர் யூத போதனைகளை செய்தார் , ஜோகோவா கடவுளின் புகழ் பாடிக் கொண்டிருந்தார் . கிறிஸ்தவ மதத்தை அவர் தோற்றுவிக்கவும் இல்லை பரப்பவும் இல்லை. இயேசு இறக்கும் வரையில் அவர் யூதமதத்தினையே பின்பற்றினார் இன்றைய கிறிஸ்தவர்களின் எந்த வழிபாட்டு முறையும் அவர் போதித்தது அல்ல.அப்போது இஸ்ரேலில் யூத மதம் தவிர வேறு எந்த மதமும் இல்லை. இயேசு யூதராக ஞானஸ்தானம் செய்து மதத்தில் இணைத்துக் கொண்டார். இவரது சகோதர் ஜோசப் தான் இவருக்கு யூதராக ஞானஸ்தானம் செய்து வைத்தார். நீண்டகாலமாக இயேசுவிற்கு ஞானஸ்தானம் தள்ளிக் கொண்டே போனது. ஜோர்டன் நதிக்கரையில் நீராடி புனித சடங்குகளை இயேசு செய்து அருட்செய்தி சொல்ல ஆரம்பித்தார் . இயேசு தன் வாழ் நாள் முழுவதும் யூதர்களின் கடவுளான ஜோகாவா வை தான் வழிபட்டார். கிறிஸ்தவர்கள் இயேசு வழிபட்ட ஜோகாவாவை ஏன் வழிபடுவதில்லை.ல்

தன்னைக் கடவுளாகவோ தூதுவராகவோ இயேசு அறிவித்ததில்லை. அவர் யூத மதத்தின் நற்செய்திகளை கூறினார். ஜோகாவாவின் புகழை பரப்பிக் கொண்டிருந்தார். அப்போதைய இஸ்ரேல் ரோமானியர்களின் அடிமையாய் இருந்தது. அவர்கள் டெம்பிள் மவுண்ட்டில் யூதர்களின் இரண்டாவது கோவிலையும் தகர்த்து அங்கு ரோமானிய மத வீனஸ் கோவிலை கட்டினர். மீண்டும் அங்கு யூதக் கோவில் கட்ட யூதர்கள் முனைந்தனர். இயேசுவை பின்பற்றும் யூதர்கள் அவரை மெசியா என நம்பினர். அதாவது யூத மத நூல் தோராவின்ப்படி உலகை மீட்க மெசியா வருவார். அவர் தான் இயேசு என்று அவரை பின்பற்றுபவர்கள் நம்பினர். அவரே மீண்டும் பிறந்து மொத்த மக்களையும் நல்வழிப்படுத்துவார் என்று பைபிளும் குரானும் கூறுகிறது. அதே வேளையில் குரான் இயேசு இறைதூதர் தான் கடவுளின் மகனல்ல என்கிறது அவர் மீண்டும் பிறந்து இஸ்லாமை பரப்பி மக்களிடம் சேர்ப்பார் . யூதர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்கவில்லை. இதனால் தான் யூதர்களை மொத்தமாக இஸ்ரேலிலிருந்து விரட்டியடித்தனர். ஹிட்லரும் படுகொலை செய்தார். அவர்களும் இறைதூதர் ஒருவர் உலகை யூத மயமாக்குவார் என்று காத்திக்கொண்டிருக்கின்றனர். அவர் இஸ்ரேலில் தான் பிறப்பார். அதற்காக தான் மீண்டும் இஸ்ரேலில் யூதர்கள் குடிபுகுந்துள்ளனர். இந்த இறைத்தூதர் வருகை ஹிந்து மதத்தின் கல்கி அவதாரத்தினை தழுவி தான் பல மதங்களில் வைத்துள்ளனர்.

இயேசு இறந்தபின் அவரை பின்பற்றும் யூதர்கள் ஜோகோவா வழிபாட்டை விட்டுவிட்டு இயேசுவை வழிபடத் தொடங்கினர். தனி வழிபாட்டு முறைகளை அமைத்து ஊர் ஊராக சென்று மதம் பரப்பினார்கள்.அன்பு செலுத்தி மதம் பரப்புதல் , அடிமைப் படுத்தி மதம் பரப்புதல் , வாள்முனையில் மதமாற்றுதல் , பொருள் கொடுத்து உதவி செய்து மதம் பரப்புதல் , பயமுறுத்தி மதம்மாற்றுதல் என முறையிலும் மதம் மாற்றியுள்ளனர். இயேசு எப்போதும் மதம் பரப்புங்கள் என்று கூறியதே இல்லை. பைபிளை தங்கள் இஷ்டம் போல் பாதிரியார்கள் மாற்றி அமைத்துக் கொண்டே இருந்தனர் பைபிளின் முழு அடிப்படை யூதர்களின் தோராவிலிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது .

கிறிஸ்தவர்கள் எப்போதும் தங்கள் மதத்தினை பரப்பும் சிந்தனையிலே உள்ளார்கள். தற்போது ஐரோப்பிய , அமேரிக்க கிறிஸ்தவர்கள் பெரிதும் மாறியுள்ளனர். ஹிந்துக்களை போல் மத சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இந்திய கிறிஸ்தவர் அவ்வாறு இருப்பதில்லை .

மூட நம்பிக்கைகள் அதிகம் இருக்கிறது கிறிஸ்தவர்களிடம் பூமி உருண்டை என்று சொன்னதிற்கு கொன்றவர்கள் ஆயிற்றே. மதம் பரப்ப முதலில் பணம் செலவழிக்கின்றனர். அதுவே அவர்கள் கிறிஸ்தவராக மதம் மாறிய பின் இறைவனுக்கு காணிக்கை , பங்கு தொகை கொடு என மத போதகர்கள் கறந்து விடுகின்றனர். இந்தியாவில் மதபோதகர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதித்துள்ளனர் . அதே வேளையில் மாற்று மதத்தினரிடம் சிறிது கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள். கிறிஸ்தவ பள்ளிகளில் ஹிந்து மாணவர்கள் போட்டு வைப்பதற்கும் , பூ வைப்பதற்கும் ,கயிறு கட்டியதற்கும் கொலை வெறி தாக்குதல் நடத்துவார்கள்.

கிறிஸ்தவ பள்ளிகளில் தீபாவளிக்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் கட்டாய பரீட்சை இருக்கும். முதல் நாள் மிகவும் தாமதப்படுத்தி தான் மாணவர்களை வெளியேற்றுவார்கள். தீபாவளியை கொண்டாடமல் அவர்கள் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம். கோவில் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை கட்டாயம் என்றாலும் வேண்டுமென்றே பள்ளி நடத்துவார்கள். அன்று விடுமுறை எடுக்கவும் விட மாட்டார்கள். மதம் மாறினால் நன்றாக படிக்கலாம். கஷ்டப்படும் குடும்பத்து மாணவர்களிடம் மதம் மாறினால் கஷ்டங்கள் போய் விடும் என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். அவ்வாறு மாறுபவர்களுக்கு பள்ளியில் நிறைய சலுகைகள் தருவார்கள். அதை பார்த்து மற்ற மாணவர்களுக்கும் ஆர்வம் வரும்.

தமிழ் போர்வையில் வீரமா முனிவர் என்ற பாதிரியார் மதம் பரப்பினார். அன்பு போர்வையில் அன்னை தெரசா மதம் பரப்பினார். எப்படியும் கடைசியில் தெரசா மதம் மாற்றி விடுவார். மதம் மாற்றாமலே சேவை செய்திருக்கலாம். மாற்று மதத்தினர் மீது வெறுப்பை உமிழும் மதப்போதகர்கள் அதிகம். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை காபி அடித்து மதத்தில் புகுத்துவார்கள்.

நாட்டின் அதிசயமான கோவில்களும் மசூதிகள் இருந்தாலும் வேடிக்கை பார்க்க கூட உள்ளே செல்ல மாட்டார்கள். அந்தளவு மூளைச்சலவை செய்ய்பட்டிருப்பார்கள். இவர்கள் என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இயல்பாகவும் மதசகிப்புதன்மையோடும் இருப்பார்கள் என்று தெரியவில்லை.




இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ராஜமருதவேல் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



Monday, 25 October 2021

கிரிக்கட் விளையாட்டி பயன்படுத்தப்படும் சொற்களுக்கு தமிழ் மொழி இணையான சொற்கள்.

கிரிக்கெட் - மண்டிலாட்டம்.


மண்டிலாட்டம் எனப்பெயர் வரக்காரணம் என்ன?

கிரிக்கெட்டுக்கு வட்டமான ஆடரங்கு அமைந்திருக்கும். வட்டம் என்பது மண்டிலம். எனவே மண்டில அரங்கில் நடைபெறும் ஆட்டம் மண்டிலாட்டம் ஆகும். இது மட்டுமின்றி தமிழில் கிரிக்கட்டுக்குப்பதிலாக துடுப்பாட்டம், மட்டைப்பந்து என்று வேறுபெயர்களும் உண்டு

1.Cricket - மட்டைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிரிக்கெட், துடுப்புப்பந்தாட்டம்.

2.All rounder - பல்திறனர்.

3.wicket - திட்டி , முக்குச்சி.

4.wide - பரந்த .

5.Pitch - எறிகள பந்தின் கீல் அதிர்வு. வீசுகளம்

6.bails - பிணை.

7.shot - எறிவு.

8.boundary - வரம்பு , எல்லை.

9.obstructing the field - துடுப்பாட்ட பந்து தடுப்பர்.

10.hit the ball twice. - இரட்டையடி.

11.fielder - தடுநர்.

12.Runout - ஓட்ட இலக்குத் தோல்வி.

13. Runs - ஓட்டம்.

14.batting - துடுப்பாட்டத்தில் பந்தை அடிப்பது.

15. Pull shot - இழுவையடி.

16.overarm - புறச்சுமைதாங்கி.

17.over - முடிவு , அறுவம் , வீச்சலகு

18.century - நூறு சதம்.

19.bowler - பந்து வீச்சாளர்.

20.keeper - முந்தாகி , பேணுநர்.

21.Out - ஆட்டமிழப்பு

22. Middle Stump - நடுக்குச்சி

23.Out Swinger - வெளிநாட்ட வீச்சு

24. Inswinger -  உள்நாட்ட வீச்சு

25.Maiden Over - வெற்றலகு

26.Wicket Maiden - வீழ்வெற்றலகு

27.Leg Side - கால்புறம்

28.Off Side - எதிர்ப்புறம்

29.Wicket Keeper -  முக்குச்சிக்காரன்

30.One Step Forward - முன்கால்வைப்பு

31.Square Cut -  செந்திருப்பு

32.Bowler - பந்தாள்

33.Batsman -  மட்டையாள்

34.Bouncer - எகிறன்

35.Hook Shot - கொக்கியடி

36.Sweep Shot - துடுப்பு வலிப்படி

37.Straight Drive - நேர்செலுத்தடி

38.Yorker - நேர்க்கூர் எறி

39.Leg Spin - வெளிவிலகுச் சுழல்

40.Off Spin - உள்விலகுச் சுழல்

41.Sixer - ஆறடி

42.Four - நான்கடி

43.Century - நூற்றீடு

44.Half Century -  அரை நூற்றீடு

45.Commentry - நிகழ்சொற்றி

46. Commentator - நிகழ்சொற்றியர்

47. Appeal - முறையீடு

48. Run Rate - ஓட்ட ஈட்டுகை

49.Asking Rate - வேட்பீட்டுகை

50.Attacking Shot -  தாக்கடி

51.Attacking Field -  இறுக்கக் களம்

52.Back Foot - பின்கால்

53.Duck Out - சுழிப்பலி

54.Doosra - பிறழ்சுழல்


இந்த பதிவுகளை உருவாக்கவும் ,  சந்திக்க துண்டுகளாக இருந்த மதிப்பிற்குரிய தோழர் திரு.கவின் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


என் மதிப்பிற்குரிய தோழர் .தேவரத்தினம் அவர்களின் உதவியால் மேலும் உள்ள சொற்களையும் இணைக்கிறேன்.

CRICKET = மடலாட்டம்

CRICKET – (BAIL) = புள்.

CRICKET - (BALL) = பந்து

CRICKET – (BAT) = மடல்

CRICKET – (BATSMAN OUT) = வீட்சி.

CRICKET – (BATSMAN) = முன்னவர்.

CRICKET – (BATTING) = மடற்பிடிகை.

CRICKET – (BOUNCER) = எகிறு வீச்சு.

CRICKET – (BOUNDARY) = நான்மை / எல்லைக்கோடு.

CRICKET - (BOWLER) = வீசுநர்.

CRICKET – (BOWLING) = வீசுகை.

CRICKET – (BYE RUN) = அடியாப் புள்ளி.

CRICKET – (BYE RUNNER) = மாற்றோடி.

CRICKET – (CAPTAIN) = குரிசில்.

CRICKET – (COVER) = மடக்கு.

CRICKET - (CREASE) = ஆடு களம் (குறு.31.4)

CRICKET – (DEEP FINE LEG) = சேய்மைச் செந்தாள்.

CRICKET – (EXTRA COVER) = மிகை மடக்கு.

CRICKET – (FAST BOWLING) = கதி வீச்சு.

CRICKET – (FIELDER / FIELDSMAN) = புலவர் (புலம்= Place, Location)

CRICKET – (FIFTY – FIFTY MATCH) = ஐம்பது அறுகால் போட்டி.

CRICKET – (FINE LEG) = செந்தாள்.

CRICKET – (FIRST SLIP) = முதல் வழுவாய்.

CRICKET – (FULL LENGTH BALL) = நெடுங்கள வீச்சு.

CRICKET – (FULL TOSS) = நேர் வீச்சு.

CRICKET – (GROUND) = ஆடுதிடல்.

CRICKET – (GULLY) = ஓடை.

CRICKET – (HURT – RETIRED) = காய ஓய்வு.

CRICKET - (INNINGS) = ஆட்டை (வே.சொ.76)

CRICKET – (L.B.W) = தறிமுன் கால்.

CRICKET – (L.B.W. OUT) = தறிகால் வீட்சி.

CRICKET – (LEG BYE (BALL) = காற் புள்ளி.

CRICKET – (LEG PAD) = காற்காப்பு.

CRICKET – (LEG SIDE) = காற்றிசை / கால் திசை.

CRICKET – (LEG STUMP) = காற்றறி / கால் தறி.

CRICKET – (LONG-OFF) = கடைப் புன்புலம்.

CRICKET – (LONG-ON) = கடை நன்புலம்.

CRICKET – (MATCH) = மடற்போட்டி.

CRICKET – (MATCH) = ஈடாட்டம் (ப.258.த.நா.விளை) (க.த.அக).

CRICKET – (MEDIUM PACE) = நடை வீச்சு.

CRICKET – (MIDDLE STUMP) = நடுத்தறி.

CRICKET – (MID-OFF) = இடைப் புன்புலம்.

CRICKET – (MID-ON) = இடை நன்புலம்.

CRICKET - (NO BALL) = பிழை வீச்சு.

CRICKET – (OFF SIDE) = புன்புலம்.

CRICKET – (OFF STUMP) = கடைத்தறி.

CRICKET – (ON SIDE) = நன்புலம்.

CRICKET - (ONE DAY MATCH) = ஒருநாள் போட்டி.

CRICKET – (OVER) = அறுகால்.

CRICKET – (PLAYER) = ஆடகர் (வே.சொ.76).

CRICKET – (POINT) = பக்கல்.

CRICKET – (POPPING CREASE) = இயங்கு களம்.

CRICKET – (RUN OUT) = குறை வீட்சி.

CRICKET – (RUN) (BOUNDARY) = நான்மை/ நாற்புள்ளி.

CRICKET – (RUN) = புள்ளி.

CRICKET – (SECOND SLIP) = இரண்டாம் வழுவாய்.

CRICKET – (SHORT BALL) = குறு வீச்சு.

CRICKET – (SHORT LEG) = குறுந்தாள்.

CRICKET – (SHORT PITCHED BALL) = குறுங்கள வீச்சு.

CRICKET – (SIXER) = அறுமை.

CRICKET – (SLIP) = வழுவாய்.

CRICKET – (SLOW BALL) = மந்த வீச்சு.

CRICKET – (SPIN BALL) = சுழல் வீச்சு.

CRICKET – (STUMP) = தறி.

CRICKET – (TEST CRICKET) = ஐநாள் போட்டி.

CRICKET – (TEST) = மடலாட்டம்.

CRICKET – (THIRD MAN) = படர்க்கை.

CRICKET – (THIRD SLIP) = மூன்றாம் வழுவாய்.

CRICKET – (TOSS) = சுண்டல்.

CRICKET – (TWENTY – TWENTY MATCH) = இருபது அறுகால் போட்டி.

CRICKET – (UMPIRE) = நடுவர்.

CRICKET - (WICKET DOWN) = ஆடகர் வீட்சி.

CRICKET – (WICKET KEEPER) = பின்னவர்.

CRICKET – (WICKET) = தறி.

CRICKET – (WIDE BALL) = அகல் வீச்சு.

CRICKET – (YORKER ) = காற்புல வீச்சு.

CRICKET - 3rd Man = படர்க்கை.


மேலும் இதில் விடுப்பட்ட சொற்கள் யாருக்காவது தெரியுமாயின் தெரிவிக்கவும்.


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..




Saturday, 16 October 2021

திருவேங்கட முருகனின் மறைக்கப்பட்ட சரித்திரம்.

 திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும்

வழக்கம் உண்டா ?

*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார் ?

*எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது ?

*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும்
இல்லாமல் இருக்கிறது ?

*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா ?

*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா ?
(படத்தில் பார்க்க)

*கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்துமே தமிழ்க்
கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ ?

*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து
மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா ?

*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன்
பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும்
கூர்ந்து நோக்கியிருக்கிறீரா ?

*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இருக்காதே ?

*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா ?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன்
என்று பாடவில்லை); இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
‘வேங்கடத்து நெடியோனைப்’ பாடுகிறார்.அருணகிரிநாதர் முருகன்
என்று அடையாளம் கண்டு ‘வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!’ என்று பாடுகிறார்.

சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம்கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுசர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரசமுத்திரையோடு பூட்டு போட்டாராம்.மறுநாள்
காலை திறந்து பார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்;
சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தல மாக்கிவிட்டார்களாம்.
ஆம்சுடர்டாமில் இருந்து ரோசா மலர்கள், சுபெயினில் இருந்து குங்குமப்பூ,நேபாளத்திலிருந்து கசுதூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860 கோடி வருமானம்
ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் வடுக வந்தேறிகளான தமிழின வரலாற்று விரோதிகளான
திராவிட தெலுங்கருக்குத்தான்.திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளசுதி) போனது. நல்லவேலை ம.பொ.சி படைவீடான
திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;திருப்பதியைச் சுற்றியிருக்கும்
தமிழ் ஊர்களாவன,
சந்திரகிரி (தமிழர் – 60 %), சித்தூர்
(தமிழர்- 65%), குப்பம்(தமிழர்-60 %),
நகரி(தமிழர்-55%), புங்கனூர்
(தமிழர்-50%), சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %), நெல்லூர்
(தமிழர்-55 %), கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) …
1300களில் வடுக வந்தேறிகளான, தமிழின வரலாற்று பகைவர்களான
நாய்க்கராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார்
நுழையவில்லை. காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று சிங்களவனைவிட மோசமான தமிழின வரலாற்று பகைவர்களான தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது.கோவிலைக் கட்டியவன் உன் பாட்டன், ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை ‘சருகண்டி’ என்று பிடித்துத் தள்ளுவான். பாலாசி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது. வடயிந்தியன் பாலாசி என்ற பெயரை வைப்பான். தமிழன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு
திரிகிறான்.

இருநூறாயிரதிறக்கும் மேற்ப்பட்ட (2லக்சம்) தமிழனைக் கொன்றுதள்ளிய ராசபக்ச மாமியார் வீட்டுக்கு வருவதுபோல திருப்பதி வந்துபோவான் காரணம் என்னவென்று யாரேனும்
சிந்தித்ததுண்டா ?


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர்களுக்கு மிக்க நன்றி !!!


திருவேங்கடம்

திருவேங்கடம் = திரு + வேல் + இடம்

திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்.

குறிஞ்சி

குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

அருணகிரிநாதர்

எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்.

திருவேங்கட முருகனை தமிழன் மீட்பது அவனின் முதற்கடமை ஆகும்.


    தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



Sunday, 12 September 2021

கூகிள் குரோம் சிறந்த பயன்பாடுகள்

கூகிள் குரோம் சிறந்த பயன்பாடுகள் : 

Trick 1: (Hide ads)

உங்களுக்கு google ல் கட்டுரை படிக்கும் போது இடை இடையே வரும் ads வெறுப்பாக இருக்குமா ?

அப்படியேன்றால் இந்த trick உங்களுக்கு தான். இடை இடையே ads வராமல் இருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் chrome ஐ திறந்து, menu button ஐ அழுத்தி Settings -> sites ettings -> javascript க்கு சென்று Allowed javascript என்ற option ஐ disable செய்து, நீங்கள் படிக்க விரும்பிய கட்டுரை பக்கத்துக்கு சென்று அந்த பக்கத்தை refresh செய்யுங்கள். இப்பொழுது இடை இடையே இருந்த ads காணாமல் போகியிருக்கும். இப்பொழுது நீங்கள் அந்த கட்டுரையை எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக படியுங்கள் 😀.


( குறிப்பு : Java Script தான் ஒரு website க்கு நரம்புமண்டலம் மாதிரி அதனால் நீங்கள் படிக்க வேண்டிய கட்டுரையை படித்து முடித்துவிட்டு அங்கே சென்று திரும்வும் allowed க்கு மாற்றிவிடுங்கள். )

Trick 2: (Bookmarks)

நீங்கள் chrome ல் search செய்து நிறைய கட்ரைகளை படிப்பீர்கள் அதில் நீங்கள் விரும்பிய கட்ரையை bookmark செய்து வைப்பீர்கள் அல்லவா ? பொதுவாக அது mobile bookmark folder ல் சேமிக்கப்படும். ஒரே folder ல் நீங்கள் நிறைய கட்டுரைகளை bookmark செய்து வைத்தால் அது எப்படி இருக்கும் என்று தெரியுமா ஒரு நூலகத்தில் புத்தகங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தலைப்பாக பிரித்து அடுக்கி வைத்து இருப்பார்கள் ஆனால் ஒரு சோம்பேறி நூலக பராமரிப்பாளர் புத்தகங்கள் அனைத்தையும் முறைப்படி தலைப்புக்கு ஏற்றவாறு அடுக்கி வைக்காமல் மொத்தமாக எல்லா புத்தகங்களையும் அடுக்கி வைத்துள்ளார் இப்போழுது நீங்கள் அங்கே சென்று உங்களுக்கு வேண்டிய புத்தகத்தை தேடி எடுத்து படிப்பதற்க்குள் விடிந்துவிடும் அதே போல நீங்கள் உங்கள் கட்டுரையை தலைப்புக்கு ஏற்றவாறு bookmark செய்து வைக்கவில்லை என்றால் உங்களுக்கு தேவையான கட்டுரையை திரும்ப படிக்க வேண்டும் என்றால் அதனை தேடி படிப்பதற்க்குள் விடிந்துவிடும். இதற்கு chrome நல்ல தீர்வை உங்களுக்கு கொடுத்துள்ளது , நீங்கள் bookmark செய்ய menu button ஐ அழுத்தி மேலே உள்ள star button ஐ அழுத்துங்கள், அதை அழுத்திய உடனே கீழே ஒரு popup தோன்றும் அதில் Bookmarked to Mobile bookmarks என்று இருக்கும் அதற்கு பக்கத்தில் Edit என்ற button ஐ click செய்யுங்கள் .அது இன்னொரு பக்கத்திற்க்கு எடுத்து செல்லும் அந்த பக்கத்தில் folder என்ற தலைப்புடன் mobile bookmarks என்று இருக்கும் அதை click செய்தால் அது இன்னொரு பக்கத்திற்கு எடுத்து செல்லும் அங்கே New folder என்று இருக்கும் அதை click செய்து உங்களுக்கு வேண்டிய தலைப்பை type செய்து மேலே வலதுபுறத்தில் உள்ள tick button ஐ click செய்து back button ஐ அழுத்தினால் போதும் அது தானாக நீங்கள் கொடுத்த தலைப்பில் ஒரு folder ஐ உருவாக்கி அதில் அந்த கட்டுரை சேமிக்கப்படும். இப்பொழுது நீங்கள் உங்கள் bookmarks க்கு சென்று பார்த்தால் புதிதாக ஒரு folder உருவாகியிருப்பதை பார்ப்பீர்கள். இப்படி நிறைய தலைப்புகளில் folder களை உருவாக்கி உங்கள் கட்டுரகளை தலைப்புக்கு ஏற்றவாறு வகைப்படுத்தி சேமித்து வைக்கலாம். நீங்கள் திரும்ப வந்து உங்களுக்கு தேவையான கட்டுரைகளை எடுத்து படிக்க சுலபமாக இருக்கும். நீங்கள் பல மணி நேரம் தேட வேண்டிய அவசியம் இருக்காது. இதை படித்த உடன் ரொம்ப கடினமாக இருக்குமோ என்று நினைப்பீர்கள் ஆனால் chrome க்கு சென்று இதை செய்து பாருங்கள் 10sec ல் முடித்துவிடலாம்.


Trick 3: (Dark mode)

நான் dark mode காதலன் என்றே சொல்லலாம். நான் உபயோகப்படுத்தும் apps ல் முக்கால்வாசி dark mode ஆக தான் இருக்கும் (உதாரணத்துக்கு சில apps ஐ குறிப்பிடுகிறேன் Instagram, Youtube, Whatsapp, Quora, Chrome, Play store, Newshunt).Chrome ல் dark mode ஐ enable செய்ய menu button ஐ click செய்து settings -> theme -> dark என்று தேர்ந்தெடுங்கள்.

(குறிப்பு : இது chrome ன் முகப்பு பக்கத்தை மட்டுமே dark ஆக்கும் மற்ற பக்கங்கள் அனைத்தும் எப்போதும் போலதான் இருக்கும்.)

Trick 4: (Progressive Web App (PWA) )

உங்களுக்கு ஒரு website ரொம்ப பிடித்துள்ளது அந்த website app ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து play store ல் தேடுகிறீர்கள் ஆனால் அது app ஆக இல்லை இப்போது நீங்கள் கவலையாக இருப்பீர்கள். அந்த கவலையைப் போக்க chrome உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது. நீங்கள் விரும்பிய website ஐ app ஆக மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது முதலில் நீங்கள் app ஆக மாற்ற விரும்பும் website க்கு சென்று menu button ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் அதில் Add to HomeScreen என்பதை அழுத்துங்கள். ஒரு popup தோன்றும் அதில் உங்களுக்கு பிடித்த பெயரை type செய்து Add button ஐ அழுத்தி விட்டு உங்கள் mobile home screen க்கு சென்று பாருங்கள்.அந்த website ன் icon மற்றும் நீங்கள் கொடுத்த பெயருடன் உருவாகியிருக்கும்.


(குறிப்பு : இது app மாதிரி ஆகும். இது நீங்கள் விரும்பிய website க்கு எளிதாக செல்ல உதவும் அவ்வளவு தான். )

Trick 5: (Languages)

Google ல் 90%(தோராயமாக) கட்டுரைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். நீங்கள் அந்த கட்டுரைகளை தமிழில் படிக்க விரும்பினால் அதற்க்கும் Google Chrome நல்ல தீர்வை கொடுத்துள்ளது. அதற்கு நீங்கள் menu button ஐ கிளிக் செய்து settings -> languages க்கு சென்று Add language ஐ அழுத்தி அதில் தமிழை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் offer to translate pages in other languages ஐ enable செய்து பின்னர் Tamil க்கு வலது புறத்தில் உள்ள 3 dot ஐ அழுத்தி அதில் offer to translate ஐ அழுத்தவும். இப்போது நீங்கள் படிக்க வேண்டிய கட்டுரைக்கு சென்று அதை refresh செய்யுங்கள் அந்த பக்கதின் கீழே ஒரு popup தோன்றி தானாக தமிழில் அந்த கட்டுரையை translate செய்வதை பார்க்கலாம்.


Monday, 9 August 2021

தமிழ்த்தாய் வாழ்த்திலுள்ள "திராவிட" என்னும் சொல்லை மாற்ற இயலுமா? என்னெனில், அது போலியென நிறுவப்பட்டுவிட்டது. அவ்வாறாயின் அதற்கு மாற்று சொல் என்னவாய் அமைக்கலாம்? பொருளும் சந்தமும் கெடாமல் கூறவும்.

 தமிழ்த்தாய் வாழ்த்திலுள்ள "திராவிட" என்னும் சொல்லை மாற்ற இயலுமா? என்னெனில், அது போலியென நிறுவப்பட்டுவிட்டது. அவ்வாறாயின் அதற்கு மாற்று சொல் என்னவாய் அமைக்கலாம்? பொருளும் சந்தமும் கெடாமல் கூறவும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

சுந்தரனார் இயற்றிய புகழ்பெற்ற மனோன்மணியம் என்னும் நாடக நூலில் "தமிழணங்கு வணக்கம்" இந்த தலைப்பில் இடம் பெற்ற பாடலான

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

என்ற மேற்கூறிய பாடலில் இடையில் இருந்த வரிகளான

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.”

என்ற இந்த வரிகளை நீக்கி தான் தமிழ்தாய் வாழ்த்தை அப்போதைய தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள கன்னடமும், களித்தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் என்று கூறப்படும் மொழிகள் அனைத்துமே திமுக கூறும் திராவிட மொழி பேசும் மாநில மொழிகள். தமிழ் பேசும் நிலப்பரப்பில் தமிழை வாழ்த்தி பாடும் போது எப்படி மற்ற மொழிகளை சேர்க்க முடியாதோ அதே போன்று மற்ற மாநிலங்களை குறிக்கும் திராவிட என்ற வார்த்தையையும் நீக்குவது தான் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். ஆனால் இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டவர் திராவிட என்ற பெயரிலேயே அரசியல் கட்சி வைத்திருந்ததால், திராவிட என்ற வார்த்தையை நீக்காமல் தந்திரமாக தமிழர்களை ஏமாற்றி உள்ளார்.

"மாற்றுச்சொல்லாக "தமிழர் நல்திருநாடும்" என்று மாற்றலாம் ".