Pages

Saturday, 30 June 2018

விமானம் எப்படி வடிவமைத்து உருவாக்குகிறார்கள் என்ற கானொளி.

விமானம் எப்படி வடிவமைத்து உருவாக்குகிறார்கள் என்ற கானொளி.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 29 June 2018

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன ??


ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன ???

ஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகளையும் வகைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற, மறுபிறவியற்ற நிலை.

விகற்ப சமாதி: மனதில் நன்மை தீமை ஆகிய இருமை நிலையுடன் கூடிய சமாதி. இந்த சமாதியில் மறுபிறவிக்கு வாய்ப்பு உண்டு.

சஞ்சீவனி சமாதி: உடலுக்கு மண்ணிலும் மனதுக்கு விண்ணிலும் சஞ்சீவித் தன்மையை அளிக்கும் நிலை. மறுபிறப்பற்ற நிலை.

காயகல்ப சமாதி: சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துப் பேண உதவும் சமாதி நிலை. மறுபிறப்புக்கு வாய்ப்பு உண்டு. சாதகன் நினைத்தால் மீண்டும் பழைய உடலுக்குள் பிரவேசிக்க இயலும்.

ஒளி சமாதி: நெடிய யோகப் பயிற்சியின் வழியாக சாதகன் பரு உடலை ஒளி உடலாக உருமாற்றிக் கொள்ளும் நிலை.

மேலும் மகாசமாதி, விதர்க்க சமாதி, விசார சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி ஆகிய வேறு வகைகளும் உண்டு.

பதினெட்டு சித்தர்களில் தன்னை ஒடுக்கி முதலில் ஜீவசமாதி நிலை அடைந்தவர் சித்தர் திருமூலரே. ஜீவசமாதிகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்தும், அவற்றின் விதிமுறைகள் குறித்தும் திருமூலரின் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது. 'சமாதிக் கிரியை' என்ற தலைப்பில் விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 28 June 2018

முடிவுக்கு வந்தது பெர்முடா முக்கோணத்தின் மர்மம்!


முடிவுக்கு வந்தது பெர்முடா முக்கோணத்தின் மர்மம்!


உலகில் விலகாத, விடைக் கிடைக்காத மர்மங்களும், மர்ம முடிச்சுகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழும் மர்மம் தான் பெர்முடா முக்கோணம்.

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.

 மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம்.

இதுவரை அந்தப் பகுதியில் காணாமல் போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப்பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது

22 - 55 மைல் அகலம்!

பெர்முடா பகுதியில் அறுங்கோண வடிவில் அமையும் மேகங்கள் ஏறத்தாழ 20 -55 மைல் தூர அகலத்தில் அமைகின்றன. இவை பெர்முடா முக்கோணத்தின் மேற்கு பகுதியில் தான் பெரும்பாலும் அமைகிறது. இவ்விடம் தான் மிகவும் அபாயமானது என மக்கள் கருதி வந்தனர். இங்கு சில மேகங்கள் நேர் கோடு வடிவில் அமைகின்றன. இது அசாதாரணமானது ஆகும்.

45 அடி அலைகள்...

மணிக்கு 170 மைல் வேகத்தில் 45 அடி உயரத்தில் அலைகள் அடித்தால் எப்படி இருக்கும். அப்படி தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் அலைகள், புயல் மற்றும் மேகத்தின் தாக்கத்தினால் உருவாகின்றன.

ஆராய்ச்சியாளர்கள். ஒரு புதிய தியரியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி, அந்தப் பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்ததாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன. இவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்றிருக்கிறார்

முடிவு!

இந்த காரணங்களினால் தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் பல மர்மமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 27 June 2018

கடவுளின் அற்புதத்தை விளக்கும் காணொளி !!!

கடவுளின் படைப்பில் !!!!
ஒரு வினோதமான நிகழ்வு.
அதாவது ஒரு மரம் வளர்வதும் , அதில் கிளைகள் உருவாகி  இலைகள் உருவாக்குவது அனைத்தும் கடவுளின் படைப்பில் அபூர்வம். இது தான் இயற்கை.
ஆனால் ஒரு மரத்தில் உள்ள கிளையில் இருக்கின்ற இலை காய்ந்து மக்கி உரம் ஆகுவதும் , இல்லை மறுபடியும் உயிரூட்டுவதும் இறைவனிடமே உள்ளது.
இந்த காணொளி நன்கு கவனியுங்கள்.
இதில் உள்ள ஒரு மரத்தில் கிளையில் இருந்து விழந்த இலைகள் மறுபடியும் உயிரூட்ட பட்டுள்ளதை சற்று கவனியுங்கள்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 20 June 2018

இறைவனின் படைப்பில் அனைத்தும் அற்புதம் தான். ஒவ்வொரு நபர்களும் காண வேண்டிய காணொளி !!!!

இறைவனின் படைப்பில் அனைத்தும் அற்புதம் தான்.
ஒவ்வொரு நபர்களும் காண வேண்டிய காணொளி !!!!
குழந்தைகள் உருவாகும் இயற்கை அதிசயம்.



       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இறைவனிடம் தன்னுடைய சந்தோஷத்தையும் , துக்கத்தையும் பகிர்ந்து வணங்கும் அற்புதமான நாய்க்குட்டி !!!!


இறை வழிபாடு முக்கியம் என்பது உணர்த்தும் ஐந்து அறிவு உடைய ஜீவனுக்கு தெரிந்த ஒன்று  !!!!
இன்று அதிகமாக ஆறு அறிவு உடையவர்களுக்கு தெரியவில்லை என்பது துயரம் தான்.


உலகத்தில் தோன்றிய உயிரிகளிலேயே அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரி இந்த "ming ". மிங் ஒரு சிப்பி



☸Ming the clam ☸

"Ming " எனும் ஒரு சிப்பி யை பற்றி தெரியுமா ?.
உலகத்தில் தோன்றிய உயிரிகளிலேயே அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரி இந்த "ming ".
மிங் ஒரு சிப்பி.

அத்வைதா என்ற ஒரு ஆமை தான் நாம் அறிந்த வரையில் 255 ஆண்டுகள் வாழ்ந்த மிக மூத்த உயிரினம்.
ஆனால் இந்த மிங் உயிரோடு இருந்தது 507 ஆண்டுகள்.

Iceland கடல் பகுதியில் இருந்து தான் மிங் பிடித்து வர பட்டது.
மரங்களில் வளையங்களை கணக்கிடுவதன் மூலம் வயதை காண முடிவதை போல இந்த சிப்பி உடலிலும் வளையங்கள் கொண்டு வயதை கணக்கிடும் முறைகள் உண்டு.

Ming 507 ஆண்டுகள் வாழ்ந்தும் இயற்கையாக அது சாக வில்லை.
அதன் மேல் பாகத்தை ஆராய்ந்து அதன் ஆயுள் நிச்சயம் 103 ஆண்டுகளுக்கு மேல் என்று அறிந்து ஆச்சர்ய பட்ட விஞ்ஞானிகள் அதன் நிஜமான வயதை கண்டறிய அதை உடைத்து சாகடித்தார்கள்.
அதன் பின் தான் தான் கற்பனை செய்ததை விட பல மடங்கு அதிக வயதை கொண்டது மிங் என கண்டார்கள் .

தனது 507 வது வயதில் உலகின் மிக அதிக நாள் வாழ்ந்த உயிரினம் எனும் ரெகார்ட் பிரேக் பெருமையோடு விஞ்ஞானிகளால் கொல்ல பட்டது "ming "

இன்று காட்சி பொருளாக பத்திரமாக உள்ளது ming

மேலும் தகவலுக்கு "ming the clam " என்று தேடி பாருங்கள்

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்).

Tuesday, 19 June 2018

டார்க் வெப் என்பது என்ன?:


டார்க் வெப் என்பது என்ன?:

கள்ளச் சந்தை போலவே இணையத்தின் கறுப்பு பக்கமே டார்க் வெப் என்றழைக்கப்படுகிறது. டார்க் வெப் மூலம் போதைப் பொருட்கள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் விற்கப்படுகின்றன. இணையத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் விதித்துள்ள சட்டதிட்டங்களுக்கு இந்த டார்க்வெப் கட்டுப்பாடுவதில்லை. கண்டு கொள்வதில்லை.

டார்க் வெப் மற்றும் டீப் வெப் (Depp Web):

டீப் வெப் என்பது இணையதள தேடுபொறிக்குள் (Search engine) சிக்காமல் செயல்படும் இணையதளங்கள் கொண்ட பகுதி. இதுபோன்ற இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட இணையதளத்தின் சரியான முகவரி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். டீப் வெப் என்ற பெருவெளியின் ஒரு சிறுதுளியே இந்த டார்க் வெப். டார்க் வெப்பை சிலர் டார்க் நெட் என்றும் அழைப்பதுண்டு. டார்க் நெட் மற்றும் டார்க் வெப் போன்றவை பெரும்பாலும் சட்டவிரோத பணபரிமாற்றங்களுக்காகவே பயன்படுத்தப்படும். சரியான முகவரி இருந்தால் டீப் வெப்பில் நீங்கள் பிரவுஸிங் செய்ய முடியும். ஆனால், டார்க் வெப் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

எப்படி வேலை செய்கிறது இந்த டார்க் வெப்:

பிரவுஸரில் உள்ள பிரைவேட் விண்டோ அல்லது இன்காக்னிடோ டேப் மூலம் இணையத்தில் உலவுவது போன்றது இந்த டார்க் வெப். அவ்வாறு பிரவுஸ் செய்யும் போது பிரவுஸிங் ஹிஸ்ட்ரி மற்றும் கேச்சே மெமரி போன்றவை பிரவுசரில் பதிவாகது. அதேபோலவே டார்க் வெப்பில் நுழைய டார் (Tor) போன்ற சில பிரத்யேக சாஃப்ட்வேர்கள் உங்களுக்கு அவசியம். அதேபோல, டார்க் வெப்பின் யுஎஸ்பியைக் (USP) கண்டறிய முடியாது. யுஎஸ்பி என்பது குறிப்பிட்ட இணையதளத்தின் உரிமையாளர்கள் குறித்த தகவலைக் கொண்டிருக்கும். மேலும், டீப் வெப்பில் இயங்கும் இணையதளங்கள் எங்கிருந்து செயல்படுகின்றன என்ற தகவலும் மறைக்கப்பட்டிருக்கும்.

டார்க் வெப்பில் எப்படி நடக்கிறது பணபரிவர்த்தனை?:

டார்க் வெப்பில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் நடப்பதாகச் சொல்லுகிறார்கள் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். இந்த பணபரிமாற்றம் அனைத்துமே விர்ச்சுவல் கரன்சிகள் வழியாகவே நடக்கிறது. பிட்காயின் எனப்படும் விர்ச்சுவல் கரன்சியே பிரதானமாக புழக்கத்தில் இருக்கிறது. சமீபத்தில் உலக அளவில் கனிணிகளைத் தாக்கிய வான்ன க்ரை ரான்சம்வேரை உருவாக்கியவர்களும், 300 முதல் 600 அமெரிக்க டாலர்களை பிட்காயினாக வழங்க நிபந்தனை விதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பாதுகாப்பானதா டார்க் வெப்?:

இணைய வெளியில் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில், டார்க் வெப்பில் தகவல் திருட்டு இன்னும் அதிகம். வங்கி கணக்கு விபரங்கள், கடவுச் சொற்கள் போன்றவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. டார்க் வெப்பை அணுகாமல் இருப்பதே கனிணிக்கும், உங்கள் தகவல்களுக்கும் பாதுகாப்பை அளிக்கும்.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

காற்று சுழலி (Windmill turbine) மற்றும் சூரிய தகட்டினை (Solar panel) கொண்டு மின்சாரம் தயாரிக்கும் கருவி



@காணொளி


காற்று சுழலி
(Windmill turbine)
மற்றும்
சூரிய தகட்டினை
(Solar panel)
கொண்டு
மின்சாரம்
தயாரிக்கும்
கருவி,


வாகனங்கள்
🚗🚕🚙🚌
செல்லும் போது
உருவாகும்
காற்றியக்கத்தின்
🌪🌪🌪🌪
மூலமாகவும்
மின்சாரத்தை
🔆🔌💡
உற்பத்தி
செய்கிறது!.....


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Silent Mode சைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி.?



( silent mode )சைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி.?
உங்கள் மொபைலை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம், ஒருவேளை அது உங்கள் மிக அருகாமையிலேயே கூட இருக்கலாம், சைலன்ட் மோடில் இருக்கலாம். கடைசி வாய்ப்பாக தான் உங்கள் கருவி நிஜமாகவே காணாமல் போயிருக்கலாம். இந்த இரண்டு நிகழ்வுகளில் எதுவாக இருப்பினும் சரி, உங்களின் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தாலும் சரி அதை ரிங் செய்ய வைத்து அதன் இருப்பிடத்தை கண்டறிய ஒரு மிக எளிமையான வழி இருக்கிறது. அதை பற்றிய விளக்கப்படங்களுடனான வழிமுறைகளை பற்றிய தொகுப்பே இது.!
வழிமுறை 
#01 கணினியில் ப்ரவுஸரை ஓபன் செய்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
வழிமுறை
 #02 அடுத்து ஆண்ட்ராய்டு கருவியில் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும்.
வழிமுறை
 #03 வழிமுறை #01இங்கு உங்களது அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை உங்களால் திரையில் பார்க்க முடியும்.
வழிமுறை
 #04 அடுத்து திரையில் ரிங், லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும்.
வழிமுறை
 #05 ரிங் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும்.
பின்குறிப்பு : செயல்திறன்மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத மற்றும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்பாடாது என்பது குறிப்பிடத்தக்கது.


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 17 June 2018

அறிவியல் புதிர் அறிவோம் 10




* DNA modification ( மரபணு திருத்தம்)*

DNA வில் ஒருமுறை எழுதி விட்டால் மறுபடியும் எழுத இயலாது இந்த தகவல்கள் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்

💁‍♂💁‍♂ உங்களுக்குள் இருக்கும் தனிதுவமான திறமைகளை கொண்டுவர முடியும்💁‍♂

DNA கள் மட்டுமே மிக முக்கியமான தகவல்களை சுமக்கின்றன உங்கள் முன்னோர்களின் மிக சிறப்பான நல்ல பண்புகளை உங்களுக்குள் கொண்டுவர முடியும்


*உங்களுக்குள் இருக்கும் அனைத்து தீய பண்புகளில் இருந்தும் உங்களை வெளிகொண்டுவரமுடியும்*

உங்கள் மரபுபண்புகளை உங்கள் சந்த்திகளுக்கும் வருவதற்கு DNA காரணமாகும்

*DNA திருத்தம் செய்யும் பொழுது குழந்தை இன்மை பிரச்சினையும் சரிசெய்ய முடியும்*

*இந்த  உலகில் தலை சிறந்த மாமனிதராக மாற இயலும் மரபணு பண்புகளை திருத்தி அமைத்தால்*


அறிவியல் புதிர் அறிவோம் 9

*கேள்வியும் பதிலும்*

🌴 *புலன் கடந்த ஆற்றல்(ESP) என்றால் என்ன?*

🍁நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும்போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

🍁உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

🍁இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

🌴 *அதை எப்படி வளர்த்துக் கொள்வது?*

🍁எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

🍁Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

🌴 *ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?*

🍁நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

🍁ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.

🍁அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

🍁தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

🍁உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

🍁அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

🌴 *ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?*

🍁நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

🍁சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

🍁வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

🍁ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் நேரம் ஆகும்

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. வெங்கடஷ் வரதராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

கூகுள்' நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்!!!



கூகுள்' நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்!!!
கடந்த ஆண்டு கூகுளின் நிறுவனர்களுள் ஒருவரான லாரி பேஜ், தன் ரகசியத் திட்டமான பறக்கும் காரின் மாதிரி ஒன்றை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
'கிட்டி ஹாக்' என்ற அவரது சொந்த நிறுவனம் உருவாக்கிய, 'பிளையர்' விமானம் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.
ஆனால், அதை மேம்படுத்தி அண்மையில் வெள்ளோட்டம் பார்த்த பிளையர் விமானம் பலரையும் கவர்ந்திருக்கிறது.
ஒரு நபருக்கான இந்த விமானம் மின்சார பேட்டரிகளால் இயங்குகிறது. எனவே அதிக சத்தம் போடாது. என்றாலும் அதிக நேரம், அதிக உயரம் பறக்கவும் முடியாது.
காரணம் அவ்வளவு சக்திவாய்ந்த மின்கலன்கள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. தவிர, சிவில் விமான சட்டங்கள் இத்தகைய குட்டி விமானங்களுக்கு அனுமதி அளிக்க தயங்குகின்றன.
இப்போதைக்கு மேம்படுத்தப்பட்ட பிளையரால் 10 அடி உயரத்தில், 20 நிமிடங்கள் வரை தான் பறக்க முடியும்.
பிளையரின் எடை, 114 கிலோ. மின்சார மோட்டார்களால் இயங்கும், 10 விசிறிகளைக் கொண்டு பறக்கும் பிளையருக்கு தற்போது நீர்ப் பரப்பின் மேல் பறக்க மட்டுமே அமெரிக்க அரசு அனுமதித்திருப்பதால், தண்ணீரின் மேல் மிதப்பதற்கு இரு மிதவைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன.
'யூடியூப்' நட்சத்திரமான கேசி நெய்ஸ்டாட் என்பவரை அழைத்து, இரண்டு மணி நேர பயிற்சி தந்து, பிளையரை பறக்கவைத்து விளம்பரம் செய்திருக்கிறது கிட்டி ஹாக்.
இப்போதைக்கு இது மாதிரி விமானம் தான். இது எப்போது விற்பனைக்கு வரும், என்ன விலை என, லாபி பேஜ் அறிவிக்கவில்லை. ஆனாலும், பலர் இந்த விமானத்தை வாங்க, 'புக்கிங்' செய்யத் துவங்கிவிட்டனர்.
தற்போதே உலகெங்கும், 19க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பறக்கும் கார் திட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
விமான ஜாம்பவான்களான போயிங், ஏர்பஸ், வாடகை கார் நிறுவனமான உபேர், சீனாவை சேர்ந்த இ-ஹாங் என்று பிரபலமான நிறுவனங்களோடு கூகுளின் நிறுவனர், சொந்தமாக நடத்தும் கிட்டி ஹாக்கையும் சேர்த்துப் பாருங்கள், பறக்கும் கார் கனவு, அடுத்த சில ஆண்டுகளில் நனவாகி விடும் என, வல்லுனர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

அறிவியல் புதிர் அறிவோம் 8



@படம்


அருமை,
பலருக்கு புதுமை
😇😇😇
✳✳✳✳✳

☸Earth shine பூமி ஒளி  ☸

பிறை கவனித்து இருக்கீங்களா (ஆஹா இன்று உலகமே பிறை கவனிக்கும் நாள் ஆச்சே ) பிறை தெரியும் போது நிலாவை கவனித்து இருக்கீங்களா ...
பிறை ஒரு சின்ன கீற்று போல தெரியும் ஆனால் கூடவே முழு நீலாவும் ஒரு மங்கலான ஒளியில் அவுட் லைன் போல தெரியும் .அதற்க்கு காரணம் என்ன தெரியும் அதுதான் "earth shine " பூமி ஒளி.

நமக்கு "நிலவொளி "தெரியும் அதாவது நிலாவில் சூரிய ஒளி பட்டு கண்ணாடி போல பிரதிபலிக்க பட்டு பூமிக்கு தெரிவது.
ஆனால் பூமி ஒளி தெரியுமா ?
நிலா போலவே சூரிய ஒளி பூமியில் பட்டு அது பிரதிபலித்து நிலாவிலும்  தெரிகிறது. நமக்கு எப்படி இரவு இருட்டை நிலாவின் பிரதிபலிப்பு ஒளி வெளிச்சமாக மாற்றுகிறதோ அப்படியே நிலாவின் இருட்டை பூமியின் பிரதிபலிப்பு ஒளி வெளிச்சமாக மாற்றுகிறது . அதற்க்கு பெயர் தான் "earth shine ."

என்ன ஒன்னு நம்ம நிலா அளவுக்கு இது ஒளி பொருந்தி இல்லாமல் லோ வோல்டேஜ் நேரத்து குண்டு பல்பு வெளிச்சம் போல மங்களா இருக்கும்.
சரி இந்த மங்கலான வெளிச்சத்தை நாம் பார்க்க முடியுமா ?
முடியும் . அதாவது பிறை நேரங்களில் மட்டும்

அதாவது அமாவாசை முடிந்து  பிறைகள் தெரிய தொடங்கும் நேரம் கவனித்து பாருங்கள் நிலாவில் பிறையின் சின்ன ஒளி கீற்று தெரிவது போக மொத்த நிலா ஒரு மங்கலான ஒளியில் பார்க்க முடியும்.  அந்த மங்கலான ஒளி பூமியின் ஒளி பட்டு கொஞ்சம் நிலா சிறிது வெளிச்சமாக ஆவதனால் தான். (மேலும் அறிய earth shine என்று தேடி பாருங்கள்.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

அறிவியல் புதிர் அறிவோம் 7


☸anticrespuscular rays ☸

anticrespuscular கொஞ்சம் சுவாரஷ்யமான சூரிய கதிர்கள் ஆகும். இது என்னனு பார்ப்பதற்கு முன்
"crespuscular rays " என்றால் என்னனு பார்ப்போம்.

மாலை வேளைகளில் மேகங்களில் சூரியன் ஒளிந்து இருக்கும் போது கதிர்கள் அழகாக கோடுகளாக மேகத்தின் உள்ளே இருந்து வருவதை நாம் பார்த்து இருப்போம் அல்லவா.. இதற்க்கு பெயர் தான் 
"crespuscular rays"

இதில் "anticrespuscular rays " என்பது மிக அரிதாக காண கிடைப்பது ..
இது சூரியன் இருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் காண கிடைக்கும்.  வானில் ஆர்ட் போட்டது போல பல கோடுகள் போட்டு பார்க்க இன்னோரு சூரியன் எதிரில் மலைக்கு பின்னால் இருப்பது போல மாய தோற்றத்தை கொடுக்கும். 
சூரிய கதிர்கள் வானில் பாய்ந்து செல்ல அது தூசு ..பனி போன்ற வற்றால் குறியிட்ட படி எதிரொளிப்பதால் இது உண்டாகிறது.
இந்த அபூர்வ காட்சிக்கு பெயர் தான்
"anticrespuscular rays"

   
********

தீ குச்சி கொளுத்தினால் ஏன் காற்றில் உள்ள ஆக்சிஜன் மொத்தமும் பற்றி எரிவது இல்லை ?
காரணம் ஆக்சிஜன் எரியும் வாயுவே இல்லை.
இது எரிபொருளையும் வெப்பத்தையும் கொடுத்தால் தீ பற்ற உதவும் ஒரு ஏஜென்ட் அவ்வளவே.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 15 June 2018

அறிவியல் புதிர் அறிவோம் 6



International space station இல் வேலை செய்யும் விண்வெளி வீரர்கள் பூமியை மணிக்கு 32500 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறார்கள்.

இதனால் அவர்கள் கிட்ட தட்ட ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு முறை சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தை காண்கிறார்கள்.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Thursday, 14 June 2018

அறிவியல் புதிர் அறிவோம் 5



☸ Einstien's elevator ☸

சைன்டிஸ்ட் களுக்கு பொழுது போகலைனா அப்பபோ ஐன்ஸ்டைன் கோட்பாடுகளில் எதையாவது எடுத்து வைத்து கொண்டு சோதித்தது பார்ப்பார்கள்.
அப்படி ஐன்ஸ்டைன் ஜெனரல் ரிலேடிவிட்டி யில் உள்ள ஒரு ஐடியா தான் ஐன்ஸ்டைன் எலவேடர்...

அதாவது ஒரு 100 வது மாடில எலவேடர்குள்ள நீங்க இருக்கீங்க..
 அந்த லிப்ட்  ரோப் அறுந்து போய் அப்படியே கீழ விழுந்துட்டு இருக்கு அதுக்குள் இருக்கிற நீங்களும் தான்...
கீழ வந்து பூமியை தொடர வரைக்கும் நீங்க க்ராவிட்டியை உணர மாட்டீங்க...
உங்களை பொறுத்த வரை 0 க்ராவிட்டி பீல்ட் ல இருப்பிங்க....
இந்த சூழல் ல ஸ்பேஸ்  ல கொண்டு போய் அந்த எலவேடரை வைத்தால் அதுக்கு உள்ளே இருக்கும் நீங்கள் முன்பு உணர்ந்ததை போல அதே 0 க்ராவிட்டியை உணர்வீர்கள்..

அதாவது லிப்ட் ஓபன் பண்ணி பாகர வரைக்கும் நீங்க ஸ்பேஸ் ல மிதக்கறீங்களா இல்ல free fall ஆ... அறுந்த லிப்ட் ல விழுந்துட்டு இருக்கீங்களா னு தெரியாது.
மேலும் உங்கள் அருகில் இருக்கும் நண்பருக்கும் நீங்கள் கையில் வைத்திருக்கும் காபி கோப்பைக்கும் இதே விதி பொருந்தும்..

இதை ஆய்வு மூலமாக உறுதி செய்ய ஒரு குழு முயன்றது...
மொத்த பூமியை ஒரு தொங்கும் லிப்ட் என கற்பனை செய்தது...
சூரியனை சுற்றி ஓடும் ஓடு தளம் தான் இங்கே "ரோப் அறுந்த பயணம் " இப்பொழுது நடக்கும் பாதிப்பை அளக்க மிக மிக துல்லியமான பல அணு கடிகாரத்தை ஒரே நேரத்தில் இயக்கி வைத்தது. இவற்றில் நான்கு hydrogen masers மற்றும் எட்டு caesium fountain clocks.
ஐன்ஸ்டைன் சரி என்றால் இவை அனைதிலும் பாதிப்பு ஒன்றாகவே இருக்க வேண்டும்.

ஆய்வாளர்கள் இவற்றை 14 ஆண்டுகால இடைவெளியில் சோதித்த போது 0.00000022 plus அல்லது minus 0.00000025. அளவே வித்யாசம் காட்டியது.
ஐன்ஸ்டைன் (வழக்கம் போல ) மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றார்.


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

தண்டவாளத்தில் ஓடும் மின்சார ரயிலை போல் சாலையில் ஓடும் மின்சார வண்டிகள்




தண்டவாளத்தில்
ஓடும்
மின்சார ரயிலை
போல்

சாலையில்
ஓடும் மின்சார
வண்டிகள்,.....

(மின்கம்பி தடம் தரையில்
பதிக்கப்பட்டுள்ளது)


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இயங்கு ஏணி என்னும் ஆங்கிலத்தில் lift என்ற இயந்திரம் மின்சாரம் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம்.

இயங்கு ஏணி என்னும் ஆங்கிலத்தில் lift என்ற இயந்திரம் மின்சாரம் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம்.



மின்சார உதவி
இல்லாமல் 
மேல்  தளத்திலிருந்து
கீழ் தளத்திற்கு
நம்முடைய உடல் எடை கொண்டே

பயணிக்கும்
இயந்திரம்!...

பல அடுக்குமாடி
கட்டிடங்களிலும்
பொருத்தலாம்!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..
_

ஜெல்லி மீன் அதிசயம்.

ஜெல்லி மீன் அதிசயம் 



ஒரு கிலோமீட்டர்
முதல் 
மூன்று நான்கு 
கிலோ மீட்டர் 
கடல் ஆழத்தில் 
இருக்கும் 
ஜெல்லி மீன்கள்!..


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 13 June 2018

அறிவியல் விஞ்ஞான இயக்க விதிகள்




@காணொளி


சிந்தனையை தூண்டும்
சில நொடி
அறிவியல்
சோதனைகள்!



சோதனை
 முடிவை
சிறிது நேரம்
சிந்தித்து
விடைகளை
கண்டறிய
முயலவும்!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

அறிவியல் புதிர் அறிவோம் 4



நாம் ஒவொருவரும் space இல் அசுர வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம். எவ்வளவு வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பார்ப்போம்.

☯ பூமி ஒரு வினாடிக்கு கிட்ட தட்ட 29 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி ஓடுகிறது.

☯ சூரியன் கிட்ட தட்ட வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பால் வெளி மண்டலத்தில் ஓடுகிறது.

☯ நம்ம பால் வெளி மண்டலம் கிட்ட தட்ட 600 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியில் பறந்து ஓடு கிறது....

அதாவது இந்த பதிவை படிக்க ஆரம்பிக்கும் போது விண்வெளியில் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து பதிவை படித்து முடிக்கும் போது கிட்ட தட்ட 3000 கிலோ மீட்டர் தாண்டி வந்து விடீர்கள்.


இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Monday, 11 June 2018

அறிவியல் புதிர் அறிவோம் 3


இன்றைய அறிவியல் !!!

ஒரு அணுவின் உட்கருவில் மிக இறுக்கமாக நியூட்ரான் மற்றும் புரோட்டான்கள் இருப்பது நமக்கு தெரியும்.
இவைகளை எலெக்ட்ரான்கள் சுற்றிவருவது நமக்கு தெரியும்.
ஆனால் இதெல்லாம் ஒரு அறையில் வைக்க பட்டுள்ள ஒரு சின்ன பந்துக்கு சமம்.
மொத்த அணுவோ ஒரு அறை அளவு பெரிது.. அதாவது ஒரு அணுவில் 99.999 சதம் வெறும் empty space வெற்று வெளி தான்.

ஒரு அணு எந்தளவு வெற்று வெளியை கொண்டுள்ளது என்றால்....
உலகில் உள்ள மொத்த அணுவில் உள்ள வெளி யை மட்டும் நீக்கி விட்டால்
இந்த உலக உருண்டையை ஒரு தீ பெட்டிக்குள் அடக்கி விட முடியும்.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 9 June 2018

அறிவியல் புதிர் அறிவோம் 2


இன்றைய அறிவியல் !!!!

வானவிலுக்கு வானவில் என பெயர் வைக்காமல்
வான வட்டம் என்றே பெயர் வைத்து இருக்கலாம்..
காரணம் வானவில் வில் வடிவில் தெரிந்தாலும் அதன் வடிவம் முழு வட்டமே...

அதை பூமியிலிருந்து காண்பதால் பாதி வட்டம் தான் கண்ணுக்கு தெரிகிறது...

விமானத்தில் பறந்தபடி வானவில்லை பார்ப்பவர்கள் முழு வட்டத்தை காண்பார்கள்.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

விஞ்ஞானத்திற்கு ஒரு சவாலாக அமையும் பதிவு இது


பல முறை #பரமேச்சுர #விண்ணகரத்திற்கு (வைகுண்ட பெருமாள் தளிக்கு) நண்பர்களை அழைத்து சென்று வந்துள்ளேன் ஆனால் இந்த சிற்பம் இம்முறை தான் கண்ணில் பட்டது.

முதல் பார்வைக்கு சாதாரணமாக யானைகள் தெரிகிறதே என்று சரியாக கவனிக்காமல் விட்டவர் பலர் இருக்கலாம்.

சற்றே உயரத்தில் இருப்பதால்,  உற்று பார்த்தால் தான் தெரியும், அது ஒரு யானைக்கு மற்றொரு யானை பிரசவம் பார்க்கும் காட்சி என்று.

ஒரு பெரிய யானை கருவுற்றிருக்கும்  மற்றொரு யானையை தன் துதிக்கை கொண்டு பயப்படாதே என்றவாரு பற்றி இருக்க. நிறை மாதத்தில் இருக்கும் அந்த யானையின் வயிற்றில் இருந்து ஒரு சிறு யானை பிரசவிப்பதே அந்த காட்சி.

Technology வளர்ந்து இந்த காலத்தில் ஒரு யானையின் பிரசவத்தை பார்ப்பது என்பது மிக அரிதான ஒரு விஷயம், அதிலும் அதை படம் பிடிப்பது என்பதெல்லாம் National Geographyக்கே டஃப் கொடுக்கிற வேலை தான்.

எவ்வளவு கூர்ந்து கவனித்திருந்தால் அந்த காலத்திலேயே நம்ம பய இவ்வளவு தத்ரூபமாக ஒரு பிரசவ காட்சியை இப்படி செதுக்கி இருப்பான்.  அதுவும் கிடைத்த 1 சதுரடியில்.

நம் வாழ்வியலை, நம் கண் முன் சர்வ சாதாரணமாக காண்பித்தது கொண்டிருக்கிறதே நமது முன்னரின் சிற்பக்கலை, என்று இதை கண்டு வியந்தபடி நண்பனிடம் சொல்லிக் கொண்டிருக்க.

"இந்த பெருமாளுக்கு பவர் அதிகமாமே" என்றவாரு கடந்து சென்று மக்களின் குரல், மனதை நிகழ்காலத்திற்கு Time Travel செய்ய  பணித்தது..
      நண்பரின் முகநூல் பதிவு...

Wednesday, 6 June 2018

அறிவியல் புதிர் அறிவோம் 1 .




சின்ன விஷயம் தான் !!!!
ஆனால் இதில் அறிவியல் இருப்பதால் சொல்கிறேன்.

விண்வெளியில் உங்களால்
ஏப்பம் விட முடியாது  !!!!!!

காரணம் !!!! ஏப்பம் என்பது
சாப்பிட்ட உணவில் உள்ள
 திட மற்றும் திரவ பொருளை ஈர்ப்பு விசை கீழ்நோக்கி இழுத்து விட..
வாயு மட்டும் பிரிந்து மேலே தப்பித்து செல்வது.

விண்வெளியில் ஈர்ப்பு இல்லாத காரணத்தால் !!!
வாயுக்கள் திட திரவ பொருளில் இருந்து பிரிவது இல்லை.
இதனால் நீங்கள் முயன்றாலும் விண்வெளியில் ஏப்பம் விட முடியாது..

(உண்மையில் விண்வெளியில் சாப்பாடு எல்லாம் அனுமதி இல்லை அங்க எல்லாம் மாத்திரை மட்டும் தான்  என்பது வேறு விஷயம் )

இந்த பதிவுகளை வழங்கிய !!!!
திரு. பிரபு
அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 2 June 2018

வீடு வாங்குவோர் பத்திரம்.... பத்திரம்

வீடு வாங்குவோர் பத்திரம்.... பத்திரம்
_______________________________________
வீ டு வாங்குவோர் அவற்றின் பத்திரங்களையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். தாய் பத்திரம், கிரைய பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ் எல்லாவற்றின் அசல் பத்திரங்களையும் பாதுகாப்பாக வைக்கவும். இந்த ஆவணங்களின் அசல் பிரதிகளை நகல் எடுத்து வைக்க வேண்டும். இந்த ஆவணங்களை வீட்டில் பாதுகாக்க முடியாவிடில் பேங்க் லாக்கரில் வைக்கலாம். இந்த ஆவணங்களை ஒப்பந்தம் இல்லாத இடத்தில் அடகு வைப்பது, வெளிநபரிடம் கொடுப்பது, யாருடைய கடனுக்கோ கேரண்டி கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது செய்து இந்த ஆவணங்களில் மோசடி செய்ய நாமே வழி ஏற்படுத்தக்கூடாது. விற்பனை குறித்த பத்திரப்பதிவு முடிந்துவிட்டநிலையில் கிடைக்கும் கிரைய பத்திரம் ரொம்ப முக்கியமான ஆவணம். ஒரு வேளை அது தொலைந்து போகும் பட்சத்தில் என்ன செய்வது?
கிரைய பத்திரம் தொலைந்தது உறுதியானபட்சத்தில் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். ஆவணம் தொலைந்த தகவலை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிட வேண்டும். இதற்குபிறகு மாற்று பிரதி ஆவணம் வாங்க சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் கிரைய பத்திரம் காணாமல் போனது குறித்த காவல் துறைக்கு நீங்கள் அளித்த புகார், அந்த ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனும் காவல் துறையின் கடிதம், பத்திரிகையில் இது குறித்து நீங்கள் அளித்த விளம்பரம், இதன் மூலம் எந்த விவரமும் கிடைக்கவில்லை என்பதை உறதி செய்யும் நோட்ரி பப்ளிக் அளித்த சான்றிதழ் ஆவணம், மனையின் சர்வே எண் குறித்த விவரம், கிரைய பத்திரத்தின் நகல் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைகளுக்குப் பின் பிரதி ஆவணம் கிடைக்கும். ஒருவேளை உங்கள் ஒரிஜினல் ஆவணம் கிடைத்துவிட்டால் சார்பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர் தேவையில்லை !!!!


ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர் தேவையில்லை: மீண்டும் ஓட்டுநர் உரிமத்தின் நகல் பெற புதிய வசதி தொடக்கம் - போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு

*************************************************************************
ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை.
வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கள் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.
பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதிய தாக பதிவு செய்ய முடியும். இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் ரூ.2000 வரையில் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளத்தில்..
அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக நகல் (டூப்ளிகெட்) உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in
என்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய வசதியால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலை எளிதாக பெற முடியும். இதற்காக போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆவணம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த வசதி டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?




சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?



சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது
தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார்
கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இப்படி அசல் பத்திரம் காணாமல் போன சொத்துக்களை வாங்குபவர் கவனிக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போம்.
காவல் நிலையத்தில் புகார் செய்தபின், அசல் சொத்துப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் நிலையம் தரும் சான்றிதழ், பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் போன்ற ஆவணங்களை, தங்களின் வழக்கறிஞரிடம் காண்பித்து அவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் அந்தச் சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
புதிதாக பதிவு செய்யும் சொத்து ஆவணத்தில் அடுத்து வரும் வாசகம் கட்டாயம் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். “இந்தச் சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று விற்பவராகிய நான் உறுதி அளிக்கிறேன். பிற்காலத்தில் இந்த சொத்தில் எந்த வில்லங்கம் ஏற்பட்டாலும், விற்பவராகிய நான் முன்னின்று என் செலவில் வில்லங்கத்தை சரிசெய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்”.
அசல் ஆவணம் இல்லாத சொத்தின் மேல், வங்கியில் கடன் வாங்கும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. முன்னர் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் சில வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டக்கூடும். ஏனெனில், முன்பெல்லாம் சொத்தின் ஆவணங்களை கொலாட்ரல் செக்யூரிட்டியாக (Collateral Security) கொடுத்து, வங்கியில் கடன் பெறுவார்கள். ஆனால், பத்திரப் பதிவு அலுவலகத்தில் அவ்வாறு கடனுக்காக கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுப்பதைப் பதிவு செய்யமாட்டார்கள். அதனால் கடன் பெறுவது வில்லங்கச் சான்றிதழில் தெரியாது.
ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் தாங்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல், மேற்கூறியவாறு சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்திலும், பின்பு பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து வழக்கறிஞரிடம் சான்று பெற்று சொத்தினை விற்றுவிடுவார்கள். பிற்காலத்தில் சொத்தை வாங்கியவரும், கடன் கொடுத்த வங்கியும் நீதிமன்றங்களை நாடும். பொதுவாக, கடன் கொடுத்த வங்கிதான் வெற்றி பெறும். ஆனாலும் நீண்ட கால தொல்லைகள் உண்டாகும். வாங்கியவருக்கும் நஷ்டம் ஏற்படும்.
இதுமாதிரியான தவறுகள் நடக்காதிருக்க, தற்போது வங்கியில் ஆவணங்களை வைத்துக் கடன் பெற்றால், Memorandum of Deposit of Title Deeds (MOD) என்ற ஆவணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். இது வில்லங்க சான்றிதழில் தெரியவரும். இந்தமுறை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பொதுவாக, சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அந்த சொத்தின் மதிப்பு, சந்தை (Market) மதிப்பைவிட சற்று குறைவாகவே இருக்கும். மேலும், ஆவணங்களை தொலைத்தவர் கீழ்க்கண்ட முறையை பின்பற்றினால், வாங்குபவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.



     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

பட்டா தொலைந்துவிட்டதா?


பட்டா தொலைந்துவிட்டதா?

************************************
மனை பட்டா காணாமல் போனால் பரிதவிப்புக்கு ஆளாகிவிடுவோம். முன்புபோல வீட்டுக்குப் பத்திரம் மட்டும் போதும் என இருந்துவிட முடியாது. ஏனெனில் இப்போது பட்டாவும் அவசியம் ஆகிவிட்டது. ஒரு நிலம் உங்களுக்குச் சொந்தனமானது என்பதற்குப் பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியம். மேலும் வங்கிக் கடன் விண்ணப்பிக்க பட்டாவின் தேவை இருக்கிறது. பட்டா காணாமல் போனால் மீண்டும் விண்ணப்பித்து டூப்ளிகேட் பட்டா வாங்கிவிட முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன?
# பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்தைத்தான் அணுக வேண்டும். அங்கே முதலில் விண்ணப்பிக்க வேண்டும். நகல் பட்டா கோரும் விண்ணப்பத்தையும், பழைய பட்டா நகல் அல்லது அதில் உள்ள விவரங்களைக் கொடுப்பது நம் பணியைச் சுலபமாக்கும். .
# பட்டாவுக்காக குறிப்பிட்ட தொகையை வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். எந்த வங்கி என்பதை தாசில்தார் அலுவலகத்தில் விசாரித்தால் தெரியும்.
# பட்டாவைப் பெற சில நடைமுறைகள் உள்ளன. தாசில்தாரிடம் டூப்ளிகேட் பட்டா கேட்டு மனு தந்த பிறகு, கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் விசாரணைக்குப் பிறகு மனு மீது ஒப்புதல் பெற வேண்டும்.
# விசாரணையின் அடிப்படையில் பட்டா கிடைக்கும். பட்டாவைப் பெற அதிகபட்சமாக 15 நாட்கள் கால அவகாசம் உண்டு.
# சில சமயங்களில் பட்டா பெற இழுத்தடிக்கும் வேலையும் நடக்கும். அப்போது மேலும் தாமதமாகலாம்.



      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

ஆவணங்கள் தொலைந்தால் இணையத்தில் புகார் தெரிவிக்கலாம்

ஆவணங்கள் தொலைந்தால் இணையத்தில் புகார் தெரிவிக்கலாம்


https://www.facebook.com/trduraikamaraj/posts/1298758950267986

     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

பட்டச் சான்றிதழ் தொலைந்தால் இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை:

பட்டச் சான்றிதழ் தொலைந்தால் இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை: 

பட்டச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், இரண்டாம்படி சான்றிதழை (டூப்ளிக்கேட் சர்ட்டிபிகேட்) பெற காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யத் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டுவர உள்ளது. அதேசமயம், இந்த இரண்டாம் படி சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணத்தை ரூ. 1000 கூடுதலாக உயர்த்தவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, பட்டச் சான்றிதழைத் தொலைத்துவிட்ட மாணவர்கள் இரண்டாம் படி பட்டச் சான்றிதழைப் பெற முதலில், போலீஸில் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். பின்னர், காவல்துறையிடமிருந்து தொலைந்துபோன சான்றிதழை கண்டுபிடிக்க இயலவில்லை என சான்று பெற்று பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 இந்த நடைமுறை காரணமாக, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், காவல் துறையிடம் சான்றிதழைப் பெற கையூட்டு கொடுக்க வேண்டி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், இதற்கும் விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், மாணவர்கள் இரண்டாம் படி சான்றிதழைப் பெற இனி போலீஸாரிடமிருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை என்ற வகையில், புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டணம் பன்மடங்கு உயர்வு: அதேசமயம், இந்த இரண்டாம்படி சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுவரை, படிப்பை முடித்து 5 ஆண்டுகள் வரை ஆனவர்கள், இரண்டாம் படி சான்றிதழைப் பெற ரூ. 2000 கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 3000 என்ற அளவிலும், 11 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 4000, 16 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 5000 , 21 முதல் 25 ஆண்டுகள் முன் படிப்பை முடித்தவர்கள் ரூ. 7,500 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ள புதிய நடைமுறையின்படி 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்பை முடித்தவர்கள் ரூ. 3000 கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோல, 6 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 4000, 11 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 5000, 16 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 8000 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதே நேரம், 21 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்களுக்கான கட்டணம் ரூ. 30,000 என அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இடம்பெயர்தல் சான்றிதழ் இனி தேவையில்லை தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர், முதுநிலை பட்டப்படிப்பை தமிழகத்திலுள்ள வேறு பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு, இடமாறுதல் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே, வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்பில் சேர்க்கை பெற முடியும். இந்த நடைமுறையில் இருந்து தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க, சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழகத்திலுள்ள வேறு பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்துக்கோ மாற்றம் பெறும் மாணவர்கள் இடமாறுதல் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறினர்.


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?



ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும் என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்?
லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்று என்பதுதான் இதில் ஒரே ஆறுதலான விஷயம்.
ஆதார் எண் அல்லது பதிவு எண்(Enrollment number) ஆகியவைதான் முக்கியம். அதனால், இப்போதே உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் எண்ணை பத்திரமாக எங்கேயாவது குறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு வேளை ஆதார் எண் நினைவில் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆதார் வாங்குவதற்காகக் கொடுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் போதும். அவற்றை வைத்து ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம்.
முதலில், ஆதார் இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். www.uidai.gov.in
காணாமல் போன ஆதார் கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட் எடுக்க நினைப்பவர்கள் “Retrieve Lost UID/EID” என்ற லிங்கினை க்ளிக் செய்யவும்.
அந்தப் பக்கத்தில் உங்களுக்கு வேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். ஆதார் வாங்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைத்தான் இங்கேயும் குறிப்பிட வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அடுத்த பகுதியில் குறிப்பிட வேண்டும்.
பொதுவாகவே, ஆதார் எண் தொடர்பான பிராசஸில் OTP உடனே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, 15 நிமிடங்கள் வரை பொறுமையாக இருக்கவும். அதன் பின்னும் OTP வரவில்லையென்றால் மட்டுமே மீண்டும் சப்மிட் கொடுக்கவும்.
OTP-யை சரிபார்க்கும் சிஸ்டம், அந்த எண் சரியாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை அனுப்பி வைக்கும். அந்த எண்ணை வைத்து பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.
பிரின்ட் எடுக்க:
மொபைல் எண்ணுக்கு ஆதார் எண்ணை அனுப்பியிருப்பதாக வரும் செய்திக்கு கீழே, ஆதார் பிரின்ட் எடுக்க உதவும் லின்க் இருக்கும். ”Download Aadhaar" என்ற அந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
அந்தப் பக்கத்தில் ஆதார் எண், பதிவு எண்(Enrollment number),முழுப் பெயர், பின் கோடு, மொபைல் எண் ஆகியவற்றை கொடுக்கவும். மீண்டும் ஒரு OTP மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதையும் என்டர் செய்தால், டவுன்லோடு லிங்க் கிடைக்கும். டவுன்லோடு ஆதார் கார்டு, பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்ட PDF formல் இருக்கும். உங்கள் பின்கோடுதான் அதன் பாஸ்வேர்டு.
மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சிலருக்குத் தவறு என மெஸெஜ் கூட வரலாம். அவர்கள் ”Verify Email/ Mobile Number” என்ற லிங்கில் சென்று அவற்றை சரிப்பார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் கார்டு டூப்ளிகேட் என இதைச் சொன்னாலும், உண்மையில் அது டூப்ளிகேட் அல்ல. ஆதார் எண்தான் முக்கியம். அதை எத்தனை முறை பிரின்ட் எடுத்தாலும் அது ஒரிஜினல்தான்.


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

சட்டம் அறிவோம் !!!!


*சட்டம் தெரியுமா?*

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரை இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC  என்பது Indian Penel Code (இந்திய தண்டனைச் சட்டம்) ஆகும்.
CRPC என்பது குற்ற விசாரணை முறைச் சட்டம் ஆகும்.

மீனவர்கள் ஏன் எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மீன் பிடிக்க செல்கிறார்கள் தெரியுமா ?


மீனவர்கள் ஏன் எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மீன் பிடிக்க செல்கிறார்கள் தெரியுமா ?

பகலில் பூமியின் நில பரப்பு கடலை விட விரைவாக சூடாகிறது எனவே இதற்க்கு மேல் உள்ள காற்று விரைவாக வெப்பம் அடைந்து மேல் நோக்கி செல்கிறது அந்த இடத்தை நிரப்ப கடல் காற்று உள்ளே வருகிறது எனவே பகல் முழுதும் காற்று கடலில் இருந்து பூமி நோக்கி வருகிறது (பகலில் கடற்கறையில் இந்த காற்றை தான் நாம் உணறுகிறோம்)

இரவில் நிலம் குளிர தொடங்க கடல் இப்பொது உள்வாங்கிய வெப்பதை வெளியிடுகிறது காற்று மேலே செல்கிறது அங்கே நிலத்தின் காற்று கடல் நோக்கி வீசுகிறது இது மீனவர்கள் படகை செலுத்த ஏதுவாகிறது.
அடுத்த நாள் காலை மீண்டும் கரை திரும்பும் போதும் காற்று மீனவனுக்கு சாதகமாகவே இருக்கிறது.

மீனவர்கள் இரவில் மீன் பிடிக்க செல்ல காரணம் இது தான்.

இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..