பல முறை #பரமேச்சுர #விண்ணகரத்திற்கு (வைகுண்ட பெருமாள் தளிக்கு) நண்பர்களை அழைத்து சென்று வந்துள்ளேன் ஆனால் இந்த சிற்பம் இம்முறை தான் கண்ணில் பட்டது.
முதல் பார்வைக்கு சாதாரணமாக யானைகள் தெரிகிறதே என்று சரியாக கவனிக்காமல் விட்டவர் பலர் இருக்கலாம்.
சற்றே உயரத்தில் இருப்பதால், உற்று பார்த்தால் தான் தெரியும், அது ஒரு யானைக்கு மற்றொரு யானை பிரசவம் பார்க்கும் காட்சி என்று.
ஒரு பெரிய யானை கருவுற்றிருக்கும் மற்றொரு யானையை தன் துதிக்கை கொண்டு பயப்படாதே என்றவாரு பற்றி இருக்க. நிறை மாதத்தில் இருக்கும் அந்த யானையின் வயிற்றில் இருந்து ஒரு சிறு யானை பிரசவிப்பதே அந்த காட்சி.
Technology வளர்ந்து இந்த காலத்தில் ஒரு யானையின் பிரசவத்தை பார்ப்பது என்பது மிக அரிதான ஒரு விஷயம், அதிலும் அதை படம் பிடிப்பது என்பதெல்லாம் National Geographyக்கே டஃப் கொடுக்கிற வேலை தான்.
எவ்வளவு கூர்ந்து கவனித்திருந்தால் அந்த காலத்திலேயே நம்ம பய இவ்வளவு தத்ரூபமாக ஒரு பிரசவ காட்சியை இப்படி செதுக்கி இருப்பான். அதுவும் கிடைத்த 1 சதுரடியில்.
நம் வாழ்வியலை, நம் கண் முன் சர்வ சாதாரணமாக காண்பித்தது கொண்டிருக்கிறதே நமது முன்னரின் சிற்பக்கலை, என்று இதை கண்டு வியந்தபடி நண்பனிடம் சொல்லிக் கொண்டிருக்க.
"இந்த பெருமாளுக்கு பவர் அதிகமாமே" என்றவாரு கடந்து சென்று மக்களின் குரல், மனதை நிகழ்காலத்திற்கு Time Travel செய்ய பணித்தது..
நண்பரின் முகநூல் பதிவு...
No comments:
Post a Comment