Pages

Sunday, 26 August 2018

மகாபாரதம் மர்மம் !!!! மகாபாரதம் போர் நடக்க காரணமாக இருந்தது பீஷ்மரா அல்ல சகுனியா!

மகாபாரதம் போர் நடக்க காரணமாக இருந்தது பீஷ்மரா அல்ல சகுனியா!




மகாபாரத போருக்கு காரணமாய் இருந்தது சகுனிதான் என்று நாம் நினைத்து கொண்டிருக்குகிறோம். ஆனால் உண்மையில் மகாபாரத போருக்கு முழு காரணமும் பீஷ்மர்தான். மகாபாரத போர் ஒரு சங்கிலித்தொடராய் பல சம்பவங்களின் நீட்சியாய் நடந்தது. இந்த வினையை முதலில் விதைத்தது பிதாமகர் பீஷ்மர்தான். குரு வம்சத்தை காப்பேன் என சபதமெடுத்த பீஷ்மர் இறுதியில் அதன் அழிவுக்கு அவரே காரணமாய் அமைந்தார்.



பீஷ்மரின் சபதம்

தன் தந்தைக்கு அவர் விரும்பிய மீனவ பெண்ணான சத்தியவதியை மணம் முடித்து வைக்க தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பேன் என்று சபதம் பூண்டார். மேலும் குருவம்சத்தை காக்க அதன் அரியணையில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சபதம் எடுத்தார்.



சகுனி

மகாபாரத போருக்கு முழுமுதற் காரணமென கூறப்படும் சகுனியை அவ்வாறு மாற்றியதே பீஷ்மர்தான் என்பது கசப்பான உண்மை. அதற்கு காரணம் அவர் அஸ்தினாபுரத்தின் அரியணையின் மேல் வைத்திருந்த விசுவாசம். கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்க காந்தார நாட்டு மன்னன் சுபாலனின் மகள் காந்தாரியை பெண் கேட்டு சென்றார் பீஷ்மர். கண் தெரியாத மாப்பிளைக்கு பெண் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும் பீஷ்மர் மேல் உள்ள பயத்தால் காந்தாரியை கட்டயாப்படுத்தி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்.


சகுனியின் சிறைவாசம்

சகுனி அவரின் தந்தை மற்றும் சகோதரர்களை கொல்ல நினைத்த பீஷ்மரை ஒரு வம்சத்தையே அழிப்பது அரியணைக்கு நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கூறியதால் அவர்களை சிறையில் தள்ளி தினமும் ஒரு கவளம் சாப்பிடும் ஒரு குடுவை நீரும் கொடுக்கும்படி உத்தரவிட்டார். அந்த உணவிற்காக அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் தங்களுக்கு நேர்ந்த அவமானத்திற்காக பழிவாங்க நினைத்த சுபாலன் அந்த உணவை சகுனிக்கு மட்டும் கொடுத்து உயிர்வாழ செய்தார். ஏனெனில் அஸ்தினாபுரத்தை அழிக்க, குறிப்பாக பீஷ்மரை அழிக்க சகுனியின் புத்திசாலிதனத்தால் மட்டும்தான் முடியும் என்று நம்பினார்.




சூதாட்டம்

பீஷ்மர் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று சூதாட்ட மண்டபத்தில் திரௌபதியை காக்காமல் போனதுதான். எந்த தர்மமும் ஒரு பெண்ணுக்கு அதர்மம் நடக்கும்போது அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் பீஷ்மர் சூத்தின் போது தன் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு திரௌபதியை கௌரவர்களிடம் இருந்து பாதுகாக்காமல் விட்டுவிட்டார். இதுதான் பின்னாளில் குருவம்சத்தையே அழித்தது. அஸ்தினாபுர அரியணையை காப்பேன் என அவர் எடுத்த சபதம்தான் அதன் அழிவிற்கு காரணமானது.


பீஷ்மரின் முடிவு

தான் மேற்கொண்ட சபதத்தால் தன் வம்ச விருட்ஷங்கள் தன் கண் முன்னே சாய்வதை கண்டார் பீஷ்மர். இறுதியில் தன் பேரன்கள் கையாலேயே அம்புபடுக்கையில் வீழ்த்தப்பட்டார். போர் முடிந்து 54 நாட்களுக்கு பிறகு அவர் உயிர் உலகை விட்டு பிரிந்தது. ஒருவன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் தர்மத்தை கடைபிடிப்பவனாக இருந்தாலும் தான் கொண்ட தர்மத்திற்காக பிற உயிர்களை துன்புறுத்துபவன் நிலை என்னவாகும் என்பதற்கு பீஷ்மரே சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment