Pages

Sunday, 28 October 2018

தமிழில் நமக்கு பலவகையான தகவல்களை உருவாக்கி நூலகம் வடிவில் ஒரே கோப்பு .

https://drive.google.com/file/d/1W6Hdn2TKYYZV2iXm4bFheRikAlhh8GyG/view?usp=drivesdk



இதில் 8600 புத்தகங்கள் உள்ளன. புத்தக தலைப்பின் அருகில் பதிவிறக்கம் என இருக்கும். அதை சொடுக்கினால் புத்தகம் பதிவிறங்கும்.
        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
               தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

பூண்டு நன்மைகள் ருசியாக சமைக்கும் சமையல் வல்லுனர்கள்

பூண்டு 



பூண்டு மருத்துவத்தின் பரிசு.
உணவுகளே மருந்தாக மாறுகிறது.
இன்றை தலைமுறை குழந்தைகள் பூண்டு சாப்பிடுவது இல்லை.
காரணம் இதில் உள்ள காரமான சத்துகள் தான்.
இதை சமையல் வல்லுனர்கள் சமைக்க  பயன்படுத்துவதை போல் !!!
நம்முடைய குழந்தைக்கு சமைத்தால் பூண்டு சுவையாக இருக்கும்.
குழந்தைகளும் இதை நன்கு ருசித்து உண்ணுவார்கள்.
மேலும் இந்த  காணொளியில் உள்ள நன்மைகளை காணுங்கள்.
பயன் பெறுங்கள்.
        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
            வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 25 October 2018

உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??

கேள்வி :

 உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??



பதில் :

வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம்.
உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல. 
அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .
அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism .

உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள் கேட்டது போல வலியை உணராத உயிரிகளாக பிறப்பது உண்டு ஆனால் அந்த குழந்தைகள் அதிக நாள் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வது இல்லை. 
வலி எனும் சர்வைவல் மெக்கானிஸம் உயிர் வாழ மிக முக்கியம் .

உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசரம் என்று மூளை உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் வலி.
உடலில் ஏதாவது ஒரு பகுதி காயமடைந்தால் அந்த பகுதியில் இருந்து சிக்னல் நமது மூளைக்கு செல்கிறது என்பதை நாம் அறிவோம்.
இதில் ஒரு சின்ன ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாம் உணர்வதைப் போல வலி என்கின்ற ஒன்றை அந்த அடிபட்ட பாகம் நமக்கு தருவதில்லை.
அவைகள் இப்படி ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்ற தகவலை மூளைக்கு நரம்புகள் மூலமாக அனுப்பி வைக்கின்றன அவ்வளவு தான். அதை ஆராய்ந்து பார்த்து வலி என்கின்ற உணர்வை நமக்கு கொடுப்பது மூளையின் வேலை தான்.

ஒரே மாதிரியான காயத்திற்கு ஒரே மாதிரியான வலியை மூளை தருவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.
அவைகள் அந்த வலி தொடர்புடைய பழைய வரலாறு புரட்டி பார்க்கின்றன அந்த மனிதனின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
காயம் ஏற்பட்ட சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன இவையெல்லாம் வைத்து அலசி ஆராய்ந்து எவ்வளவு வலியை எப்போது தரவேண்டும் என்று மூளை முடிவு செய்கிறது.
உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் மிக கடுமையாக அடி பட்டாலும் அந்த விளையாட்டு முடியும் வரை அவன் அந்த வலியை உணராமல் இருப்பது பல முறை நடக்கிறது.
அது வரை விளையாடி கொண்டு இருந்தவன் விளையாட்டு முடிந்த பின் காலை ஊன்ற கூட முடியாமல் அவதி படுவதை பார்க்கலாம்.
பலமுறை சுறாவால் கடிபட்டு கையை இழந்தவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.

அடியே பட்டு இருந்தாலும் மூளை தகவலை கொடுக்கவில்லை என்றால் வலியை நாம் உணர மாட்டோம் என்பதை போல இந்த உண்மை தலைகீழாக நடப்பதும் உண்டு .
அதாவது எந்த காயமும் இல்லாத ஓரிடத்தில் காயம் இருப்பதாக மூளை சொல்ல முடியும் சிலநேரம் குழம்பிப்போய் அப்படி சொல்வது உண்டு.
 ஒரு போரில் ராணுவ வீரன் தனது கால் கட்டை விரலில் கடுமையான வலி இருப்பதாக இரவு முழுவதும் கதறிக் கொண்டு இருந்த கதையைச் சொல்வதுண்டு என்ன ஆச்சரியம் என்றால் அவரது முழு காலையே வெட்டி எடுத்து விட்டார்கள் .
ஆனால் அவன் தொடர்ந்து தனது கால் கட்டைவிரலில் கடுமையான வலி இருப்பதாக சொல்லி கொண்டே இருந்தான்.
ஆம் இல்லாத கட்டைவிரலில் வலியை உணர வைக்க கூட மூளையால் முடியும்.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் அதிக வலியை உணர்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.
அதற்கு காரணம் ஆண்களைவிட பெண்கள் அதிக  உணர்வுகளை கொண்டிருப்பது தான்.
நம்மைப் போலவே பாலூட்டி விலங்குகள் வலியை உணரும் போது முகத்தில் உணர்வுகளை காட்டுகின்றன.
ஊர்வன வகுப்பை சேர்ந்தவர்கள் வலியை உணர்ந்தாலும் அவைகளால் உணர்வை காட்ட முடிவதில்லை. ஆனால் வலியை மறக்கடிக்கும் மருந்துகள் நம்மை போலவே அவைகள் உடம்பிலும் வேலை செய்கிறது.

சரி ஒரு கேள்வி ...
எறும்புகள் போன்ற சிறு பூச்சிகள் வலியை உணருமா?
பலவகையான பூச்சிகள் வலியை ஏதும் உணர்வது இல்லை என்பதுதான் உண்மை.
காரணம் வலி சிக்னலை மூளைக்கு அனுப்பும் நரம்பமைப்பு போன்ற கட்டமைப்பு ஏதும் அவைகள் உடலில் இருப்பதில்லை.

வலியின் அளவை அளக்க முடியுமா அதற்கான அளவீடு ஏதும் உண்டா ??
ஆம் உண்டு வலியின் அலகு dol. (வலிக்கான Latin வார்த்தை dolor இல் இருந்து வந்தது )  பல இடங்களில் del என்று குறிப்பிடுவதை பார்க்கலாம்..
இதை எப்படி அளக்கிறார்கள்.??
தொழில்நுட்பம் கொஞ்சம் வளராத காலத்தில் வலியை அளப்பதற்கு கையில் நிஜமாக சூடு வைத்தார்கள் அதன்பின் சிறிது நாட்களுக்கு கையில் அழுத்தத்தை கொடுத்து அளந்து பார்த்தார்கள்.. 
நல்ல வேளையாக இப்பொது எளிய வழியை கண்டுபிடித்து விட்டார்கள். இப்போது அதை எப்படி அளக்கிறார்கள் தெரியுமா ?
வலி நேரத்தில் மூளையை படம் பிடிப்பதன் மூலம்.
அந்த நேரத்தில் மூளை கொண்டிருக்கும் சென்ஸ் கவனிப்பதன் மூலம் அந்த நேரம் உடல் உணரும் வலியின் அளவை கணக்கிட முடியும். .
 (உடல் முழுக்க வலியைக் கொடுக்கும் மூளையில் வலி உணரும் நரம்புகள் இல்லை மூளையை அப்படியே வெட்டி எடுத்தாலும் கூட மனிதனுக்கு துளியும் வலிக்காது )

வலியை உணராத படி இருப்பது நல்ல உடலுக்கு அறிகுறி அல்ல அது ஒரு நோய் அந்த நோயின் பெயர் congenital insensitivity to pain with anhidrosis, அதாவது சுருக்கமாக CIPA .
இந்த நோயாளிகள் துளியும் வலியை உணர்வது இல்லை.

மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னதாக தெரியவில்லை நீங்கள் கேட்டது போல உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??

விடை : 
நாம் நினைப்பதைப் போல வலியில்லாமல் இன்பமாக இருந்து இருக்காது மாறாக வாழ்வதே கடினமாக இருந்திருக்கும் என்பது தான் சுருக்கமான விடை.

சரி நண்பர்களே... உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி ...
வலியை உணராத நோய் இருப்பதைப் பற்றி சொன்னேன் இதற்கு எதிரான ஒரு நோய் ஒன்று உண்டு.
அந்த நோய் இருப்பவர்களை உடலில் மெதுவாகத் தொட்டாலோ சீண்டினாலும் என் தலையைக் கோதினாலோ கூட வலியால் துடிப்பார்கள் அந்த நோயின் பெயர் என்ன தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் விடையை கடைசி கமண்ட் இல் சொல்கிறேன்.

இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 12 October 2018

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது தவறான செய்தி

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது.
இன்றை சமுதாயத்தில் ஏற்பட்ட வதந்தி இது. ஆனால்
பண்டைத் தமிழர்கள் ஆயிரமாயிரம் மூலிகை வேர்களை பற்றி அறிந்தவர்கள்.
மூலிகை மருந்துகளை தயாரித்து அதை நோயாளிகளுக்கு  அளித்து நோய்களை நீக்கினார்கள் ஆதி மருத்துபவர்கள்.
அப்படி இருக்கையில்  எப்படி ஒரு பழமொழியில் ஆயிரம் பேர்களை கொன்றவன் வைத்தியன் ஆக முடியும்.
 இது தவறான மற்றும்
 பொய்யானது என்று  இதுவரை யாரும் அறிந்தது உண்டா ????
இதற்கு உண்மையான ஆதாரம் காண்போம்.
உண்மையில் ஆதி வைத்தியன் மூலிமை வேர்களை வைத்தே அதிகப்படியான மருந்துகளை உருவாக்குகிறார்கள்.
அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
அதன் உண்மையான பொருள் தான் !!!!!


" ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியவன் " என்ற பழமொழியின் பொருள்.
 இது போன்ற தவறாகவும் , முரண்பாடாக கூறிய பழமொழிகளை  புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.
அதுவே பழமொழி ஆகும்.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 10 October 2018

குளிர் ஏற்படும்போது நமது உடல் நடுங்குவது ஏன்?

குளிர் ஏற்படும் போது நமது உடல் நடுங்குவது ஏன்?


 இனி மழை நாட்கள்,  பிறகு அதைத் தொடர்ந்து குளிர் நாட்கள் என சீசன் மாறப்போகிறது. 


மழையோ, குளிரோ எதுவாக இருந்தாலும் நம் உடல் ஓரளவு தான் தாங்கிக் கொள்கிறது. அதிகமானால் நம்மையும் மீறி உடல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது.

 அதிலும்,   குழந்தைகள், முதியவர்கள்,  உடல் நலம் குன்றியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  

இரண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். 


இந்த நடுக்கம் எப்படி, எதனால் ஏற்படுகிறது? பார்ப்போம். 


நம் உடலில்,  மூளையின்,  ஒரு அங்கமாக 'ஹைப்போதலாமஸ்' ஆனது, மூளையின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ளது. 

இந்த ஹைப்போதலாமஸ் - இல் உள்ள உஷ்ண  சீரமைப்பு  மையம் தான்,  நம் உடலின் உஷ்ண நிலையைக் கண்காணிக்கிறது. 

நம் உடலில் முக்கிய அங்கம் வகிக்கும் தண்டுவடமும், சருமமும் தான் உடலின் வெப்ப நிலையைப் பற்றி ஹைப்போதலாமஸுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்களுக்கு, வெப்பமானியை அக்குளில் வைத்தால்,  36.5 டிகிரி செல்சியஸ் என்றும், நாவின் கீழ் வைத்தால் 36.7 டிகிரி செல்சியஸ் இருக்கும் இதன் சராசரிதான் நமது உடலின் வெப்பநிலை (Body temperature )


நம் உடலில் வெப்பம் அதிகமாகி விட்டாலோ, குளிர் அதிகமாகி விட்டாலோ, ஹைப்போதலாமஸிற்குத் தகவல் சென்றடைந்த உடன், சம்பந்தப்பட்ட   நரம்பணுக்கள்  துரிதமாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றன. 

இந்த மாற்றத்தினை அறிந்து கொண்ட உஷ்ண சீரமைப்பு மையமானது, தன் சேவையை உடனே தொடங்கி விடுகிறது. உஷ்ணம் அதிகமானால் அதைக் குறைக்கவும், உஷ்ணம் குறைந்தால் அதை அதிகப்படுத்தவும் செய்கிறது. 


சூடு அதிகமாக இருக்கும்பொழுது , ஹைப்போதலாமஸ் ஆனது நம் தசைகளை இறுக்கவும், விரிவடையவும் ஆணை இடுகிறது. அதனால்,  தசை நார்கள் சுருங்கி விரிவடைந்து, அதிகப்படியான வெப்பத்தை, வியர்வையாக வெளியேற்றி விடுகிறது. 


உடலின் வெப்பநிலை  மிகவும்  குறைந்து விட்டால்,  ஹைப்போதலாமஸ் ஆனது  நடுக்கம் கொடுக்கும்படி,  தசைகளுக்கு ஆணையிடுகிறது. 

 உடனே உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கி விடுகிறது. இந்த நடுக்கத்தின் பொழுது, சருமத்தின் துளைகள் சுருங்கவும் ஆணையைப் பெறுவதால்,  குளிர் நேரத்தில் உஷ்ணத்தினை  வெளியே விடாமல் பாதுகாக்கிறது. 


உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்த நடுக்கம் உண்டாகிறதல்லவா? அப்பொழுது ஸ்வெட்டரும்,  போர்வையும் தரும் வெப்பத்தை நம்மால் பெற முடிகிறது. நமக்கு அதிக உஷ்ணத்தினால் வியர்வை உண்டாவதும், அதிக குளிரினால் நடுக்கம் உண்டாவதும், நம் உடலை சீரான வெப்ப நிலையில் வைப்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாறுதல்களால், நம் அவய அங்கங்களான,  மூளை,  தண்டுவடம்,  இதயம், கல்லீரல்,  கணையம்,  சிறுநீரகம் மற்றும் செரிமான உறுப்புகள் யாவையுமே சீரான வெப்ப நிலையில் ஒழுங்காகச் செயல்படுகின்றன. 


உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் பாலூட்டிகள் , பறவைகள், வெப்ப ரத்தப் பிராணிகள் எனவும், அப்படி வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியாத முதலை, ஆமை,  தவளை போன்றவை குளிர் ரத்தப் பிராணிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 


நம் மூளையானது, ஒரு வினாடிக்கு பல மில்லியன் ஆணைகளை நம் அங்கங்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு அருமையான, அற்புதமான ஒரு அங்கத்தை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறார். நம் உடலை எத்தனை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது? யோசித்துப் பாருங்கள்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

என் பார்வையில் நாம் விட வேண்டிய முதல் தீய குணம்:

என் பார்வையில் நாம் விட வேண்டிய முதல் தீய குணம்: 


நான் தான் என்ற அகம்பாவம்.

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.

எனவே நான் தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.
நம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்! அகம்பாவத்தால் அழிந்தவர்கள்
ஏராளம்! ஏராளம்!

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 9 October 2018

7 என்ற எண்ணில் இவ்வளவு பெருமையா ???


7  என்ற எண்ணில் இவ்வளவு பெருமையா ???

எண் ஏழின் சிறப்புக்கள்:

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரி பூரணம் என பொருள் படும்.

ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.

காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு,
 இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007

2. எழு குன்றுகளின் நகரம் ரோம்.

3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்.

4. மொத்தம் ஏழு பிறவிகள்.

5. ஏழு சொர்க்கம் ( குரான் )

6. ஏழு கடல்கள்.

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில் நிறங்கள் (VIBGYOR).

8. ஏழு வானங்கள்  (Qur'an)

9. ஏழு முனிவர்கள் (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி) 11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு

17. கீழுலகம் ஏழு நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

19. மொத்தம் ஏழு தாதுக்கள்

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு

24. அகப்பொருள் திணைகள் ஏழு

25. புறப்பொருள் திணைகள் ஏழு

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு

27. கடை ஏழு வள்ளல்கள்

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)

29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழு தான்

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான் உள்ளது.

31. ஏழு மலையான் தமிழர்களின் கடவுளான  -  திருப்பதி முருகனை குறிக்கும்.

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு

33. உடலை கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்) .


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..