ஆன்மா பற்றிய இரகசியங்கள்.
ஆன்மாவை அறிந்தால் பிறவியை அறுக்க முடியுமா?
மெய்ஞானம் பெறாவிடில் பிறவியை அறுக்க இயலாது. உடலின் தத்துவங்களை அறிவதன் மூலம் அது சாத்தியமாகும்.
*திருமந்திரம் அதனை தெளிவாக கூறுகிறது.*
*ஆக்குகின்றான் முன்பிரிந்த இருபத்தஞ்சு ஆக்குகின்றான் அவன்ஆதி எம் ஆருயிர் ஆக்குகின்றான் கருக்கோளகையும் இருந்து ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.*
முப்பிறவியில் மரணத்தின்போது பிரிந்து சென்ற
*25 தத்துவங்களையும்* எம் தலைவனாகிய இறைவன் மீண்டும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய உயிரை, உடலை உருவாக்குகின்றான். பெண்ணின் கருப்பையினுள் உருவாகும் கருவில் இருந்து வருவனவற்றை அறிந்து இறைவன் படைக்கிறான்.
25 தத்துவங்கள் ஆவன.....
*பொறிகள் 5 -
மெய்,வாய்,கண்,மூக்கு, செவி*
*புலன்கள் 5-
தோல்,நாக்கு,ஒளி,மோப்பம்,கேட்கும் திறன்.*
*பூதங்கள் 5 -
நிலம்,நீர்,நெருப்பு, காற்று, விசும்பு*
*கர்மேந்திரியங்கள் 5-
வாக்கு,கை,கால்,குதம்,கருவாய்.*
*அந்தகரணங்கள் 4-
மனம், அறிவு,எண்ணம் (அ) நினைவு, முனைப்பு*
*ஆன்மா-1*
மரணத்தின்போது உடலில் இருந்து *ஆன்மா* வெளியேறும்போது அதோடு சேர்ந்து ஏனைய *24 தத்துவங்களும்* வெளியேறிவிடுகின்றன.
கரு உருவாகும்போது முன்னம் பிரிந்த 25 தத்துவங்களும் மீண்டும் அந்த கருவினுள் புகுந்து ஒரு புதிய உயிர் உருவாகிறது.
*அனைத்திற்கும் முதல்வனான எம் உயிருக்கும் உயிரான சிவனே பெண்ணின் கருப்பையினுள் உருவாகும் கருவின் உள்ளே உயிராக அமர்ந்து அதை உருவாக்குகின்றான்.*
இன்றைய நவீன விஞ்ஞானத்தால் மனிதனால் ஒரு கருவை உருவாக்கிட முடியும். ஆனால் அதனுள் ஒரு உயிரை பொருத்துவது என்பது நவீன விஞ்ஞானத்தால் சாத்தியமாகாது.
கருமுட்டையும் விந்தணுவும் சேர்ந்தவுடன் உயிர் உருவாவதில்லை.
அதுவும் உடலில் ஒரு தசைப்பகுதி போலவே இயங்கும். குறிப்பிட்ட நேரத்தில்
*பிராண ஆற்றல் வழியாக மறுபிறவி எடுக்கும் ஆன்மா உள் சென்றதும்* கருவிற்கு உயிர் வந்து வளரத் தொடங்கிவிடும்.
பல பிறவிகளை எடுத்து அதன் நினைவுகளைக் கொண்ட *ஆன்மா* கருவின் அனைத்து பகுதிகளிலும் பரவி நிற்கும்.
பிராண ஆற்றல் வழியாக ஆன்மா நுழைந்து உயிரூட்டாவிடில் கருவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு கரு சிதையும்.
பிராண ஆற்றல் வழியாக செல்லும் ஆன்மா கருவில் என்னென்ன மாற்றங்களை செய்கிறது?
*சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசம், மனம், புத்தி, அகங்காரம் என்ற அருவமாக உள்ள 8ம்,
*10வாயுக்கள், *8விகாரங்கள், 9வாயில்கள்*, என இவை அனைத்தும் கருவில் இருக்கும்.
பிராண ஆற்றல், குண்டலினி சக்தியை இறைவன் சரியான தருணத்தில் தந்தால் மட்டுமே கருவில் ஏனைய அனைத்தும் இயங்கி வளர்ச்சி பெறும்.
மரபணுக்கள் வழியாக மூதாதையரின் சாயல், குணநலன்கள் போன்றவை கருவில் இருக்கும்.
ஆனால் பல பிறவி எடுத்து பல அனுபவங்களை நினைவுகளாக கொண்ட ஆன்மா கருவில் நுழைந்தவுடன் கருவில் ஆன்மாவின் நினைவுகள் பதிந்துவிடுகின்றன. அது கருவின் ஆழ்மனதிலும், சக்தி உடலிலும் பதியும் என்றார் நீலகண்டர்.
அவ்வாறு பதியும் நினைவுகளால் நிகழ்வது என்ன?
உடலை கணனியோடு ஒப்பிட்டு பார்ப்போம்.
உடல் என்பது, கடும்பொருள் (Hardware)
உயிர் என்பது, ஆற்றல் (Power/Electricity)
ஆன்மா என்பது, மென்பொருள்
(Software) ஆகும்.
நன்றாக கவனித்துப் பாருங்கள்,
*குழந்தையின் வாயை தாயின் முலைக்காம்பில் வைத்ததும் தானாக பால் குடிக்கிறதே அதற்கு பால் குடிக்க கற்றுத் தந்தது யார்?*
ஆன்மா என்கிற மென்பொருள் தனது பிறவிகளின் நினைவுகள் வாயிலாக குழந்தையை இயக்கி தானாக பால் குடிக்க வைக்கிறது. அதுமட்டுமல்ல குழந்தையின் அனைத்து செயல்களுக்கும் அந்த ஆன்ம நினைவுகளே காரணமாகும்.
இந்த மானிட பிறப்பே, பிறபு அறுத்தலுக்காக மட்டுமே.
🔥ஓம் சிவாயனம🔥
No comments:
Post a Comment