Pages

Sunday, 17 January 2021

தமிழ் தொன்மை பாகம் 3

வரலாற்று ஆதாரங்களாக கல்வெட்டு, அகழ்வராய்ச்சியையும் இலக்கியங்களையும் மேற்கோள் காட்டுவதுதான் அறிஞர்கள் வழக்கம். அந்த வகையில் தமிழ் குறைந்தது 10 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதை இலக்கியச் சான்றுகள் வாயிலாக விளக்கலாம்.

சிவன் (இறையனார்) தன்னையே பாட்டுடைத் தலைவனாக வைத்து எழுதிய நூல்தான் இறையனார் அகப்பொருள் எனப்பட்டது. இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரனார், மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழில் இருந்ததையும் அவற்றின் காலத்தையும் பின்வருமாறு வரையறுக்கிறார்

முதற்சங்கம் - 4440 ஆண்டுகள்
இடைச்சங்கம் - 3700 ஆண்டுகள்
கடைச்சங்கம் - 1850 ஆண்டுகள்

மூன்று சங்கங்களின் காலமாக மொத்தமாக 9900 ஆண்டுகள் எனக் கூறுகிறார்.

  1. சங்கங்களில் எழுதிய நூல்களையும், அவற்றின் ஆசிரியர்களையும் சங்கம் அமைத்து போற்றிய மன்னர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். காலத்தின் கணிப்புகளில் கொஞ்சம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் இவை கற்பனையென முற்றிலும் புறந்தள்ள முடியாது. இடைச்சங்கத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட தொல்காப்பியம் இன்று நம்மிடம் இருக்கிறது. கடைச்சங்கத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட குறுந்தொகை, நற்றிணை இன்னும் பல நூல்கள் இன்று நம்மிடம் உள்ளன. அப்படியெனில் அவர் சொன்னவற்றில் பாதி உண்மை உள்ளது.
  2. நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. சான்றுகள் இல்லை என்பதாலேயே இலக்கியக் குறிப்புகள் பொய் என்று வாதிடுவது அறிவுக்கு ஒவ்வாது..

    கடந்த 10000 ஆண்டுகளில் கடல் மட்டம் மெல்ல மெல்ல குறிப்பிடும் அளவுக்கு ஏறி இறங்கியுள்ளது என்பது அறிவியல் கணிப்பு
    (இணைப்பை நோக்கவும்: 
    Meltwater pulse 1A - Wikipedia).
  1. கடல் நீர்மட்டம் ஒரு 100 அடிக்கு கீழ் சென்றாலே பூமி நிலப்பரப்பில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். இது இந்தியாவின் மேற்கு கரையினில் 200 கிலோ மீட்டர் அளவுக்கு நிலத்தை வெளிக்கொணரும். அவ்வாறாயின் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிலவழிப் பாலம் இருந்திருக்கும். அப்பொழுது தமிழகத்தின் நிலப்பரப்பு இப்பொழுது இருப்பதை விட ஐந்து மடங்கு பெரிதாக இருந்திருக்கும்.
  2. தற்பொழுது கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் தரை மட்டத்திலிருந்து வெறும் மூன்றரை மீட்டர்களுக்குள் கிடைக்கப்பட்டவையாகும்.
    கடல் மட்டம் மூன்று முறை பத்து அடிக்குள் சிறிது ஏறி இறங்கியுள்ளது எனக் கொண்டால் மூன்று சங்கங்கள் என்ற இலக்கிய கூற்றும், தமிழின் தொன்மையும் உண்மையாகும்.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. ஆதித்ய  இளம்பிறையன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment