- கரணப்பல்படை - பல்வகையான படைகளையும் குறிக்குஞ்சொல்.
முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு
- அகப் படை - Internal Defensive Force
- மறப் படை - Expeditionary Force
- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.
கோட்டைப் போரின் போது பொருதும் படைகள்
- உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை.
- நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை.
என்று அழைக்கபட்டன.
இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:
- பயிற்சிப் படை = போர்ப் பயிற்சி கற்ற சேனை.
- பயிற்சியிலாப் படை = பயிற்சி பெறாத-உணர்ச்சியுள்ள மைந்தர் கூட்டம்.
இவை மேலும் தாங்கிய ஆய்தங்கள் & கவசத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:
- வன்படை - கனமான படை - Heavy army
- மென்படை - இலகுவான படை - Light army
அடுத்து கருவிகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:
- கருவிபெறு படை = அரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனை.
- தற்கருவிப் படை = தத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு பொருதும் சேனை.
- ஊர்திப் படை = காவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.
- தன்னூர்திப் படை = தத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.
பின்னர் எல்லாப்படையும் நால்வகையாக ஒட்டுமொத்தமாகப் பிரித்தனர். இவற்றினை நாற்படைகள் என்று கூறூவார்கள்.
- காலாட் படை / ஆட்படை
- தேர்ப்படை / சக்கரப்படை/ சகடப்படை
- குதிரைப்படை / புரவிப்படை/ மாப்படை/ பரித்தானை
- யானைப்படை/ கடகப்படை
இவை தவிர, கடற்படையும் இருந்தது - இது கடலில் நடைபெறும் சண்டைகளில் ஈடுபடுவதற்காக வைத்திருந்த படையாகும்.
அடுத்து நகர்திறன் அடிப்படையில் இவ்வாறு பிரிக்கப்படும்:
- தானே செல்வது - காலாட்படை/தானை
- தானாகச் செல்லும் படையாகிய காலாட்படையினை தானை என்றனர் பண்டைத்தமிழர். இதை தற்காலத்தில் சேனைக்கு ஒத்த சொல்லாக சிலர் கருதுகின்றனர், அது தவறு. சேனை என்பது மொத்தமானது.
- தேரும் குதிரை மூலம் இயங்குவதால் அதுவும் குதிரையினுள் அடங்கிவிடும்.
- ஆதாரம்:
'தானை, யானை, குதிரை
நோனார் உட்கும் மூவகைந் நிலையும்
→ (தொல்.பொருள்.புறத். 14:1,2)'
- பிறவாற் செல்வது - குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை
அதன் பின்னர் அவற்றினுள் கீழ்கண்ட சேனைகள் பிரிவுகளாக இருக்கும்:
- தடுபடை - மாற்றுப்படை
- நிலைப்படை- standing army - எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் படை.
- பாசிப்படை - திடீரென்று தாக்கும் சேனை
- கூளியர் - கூளிப்படையினரரான இவர்கள் படைகளுக்கெல்லாம் முன்னர் சென்று படை செல்லுவதற்கேற்ற வழியை அமைத்து தந்திருக்கின்றனர்.
- செருப்படை - சிறந்த வீரர்களைக் கொண்ட படை
- பதிபடை/ ஒளிபடை- மறைந்து தாக்கும் படை
- கைக்கொளவர் படை/ கைக்கோளப்படை/முனையெதிர் மோகர் - அரசனை சூழ்ந்து பாதுகாப்பேற்கும் பொறுப்பினைப் பெற்ற படை.
- வேளைக்காரர் படை - தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள்
- நடப்பு படை - உணவு உடை போன்றவற்றினைக் கவனிக்கும் படை.
- தளப்படை - காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப்படை. இவர்கள் பின்புல பாதுகாப்பு பிரிவாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் பாவிக்கப்படுவர்.
- ஊசிப்படை - தாக்குதல் படை
- கோட்டைக்கட்டு - கோட்டையினைப் பாதுகாக்கும் படையணி.
- மெய்க்காவலர் படை - மெய்பாதுகாவலர் படை
- வேவுப்படை/ ஐந்தாம்படை - எதிரியின் இடத்திற்குச் சென்று செய்தி திரட்டும் படை
- வேற்படை /குத்துப்படை - வேல் கொண்டு போரிடும் படை
- விற்படை/விற்றானை - வில் கொண்டு போரிடும் படை
- வாட்படை /வெட்டுப்படை - வாள் கொண்டு போரிடும் படை.
- மற்படை - ஆய்தம் இன்றி போரிடுவோர்.
- உரிமைப்படை - மானியம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்து அரசனுக்காகப் போரிடும் சேனை.
- அமையப்படை - குறுங்காலத்தில் திரட்டப்படும் படை
- தனிப்படை - தலைவனை இன்றித் தாமாகவே இயங்கும் சேனை.
- குழுப்படை - மன்னன் அமைத்த தலைவனையுடைய சேனை.
- குடிப்படை - கோட்டைக் கதவை எதிரி தாண்டிவிட்டன் என்றால் மக்களும் கம்புதூக்கத்கான் வேண்டும்!
- தாணையம் - கோட்டைக்குள் குழுமியிருக்கும் சேனை.
- பங்களப்படை - newly enlisted army useless as chaff
- கள்ளர் படை- போர் தொடங்குவதற்கு முன்னரே பகைவரின் ஆநிரைகளை கவர்ந்து வருவதற்காக அமைக்கப்பட்ட படை.
- அங்கபடை - மெய்க்காவல் படை [இச்சொல் பொற்பனைக் கோட்டையில் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் கல்வெட்டில் இருந்து கிடைக்கப்பெற்றது... எனவே தமிழ்ச்சொல் என்று நினைக்கின்றேன்.]
- நிழற்படை/நிழல் - "அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர்" என்பதாகப் முனைவர் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
- கரைப்படை - கரையினைப் பாதுகாக்கும் படை
- சாவேறு - பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படை மீது ஊடறுத்துச் செல்ல முயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே நோன்பாகக்கொண்ட வீரர்
- துறுபடை - நெருக்கமாக ஓரிடத்தில் நிற்கும் படை
- புதுப்படை - புதிதாக அமைந்த படை
- உடைப்படை - Breaching army - எதிரியின் அரண்களை(தற்காலத்தில்)/ நிரையினை(பண்டைக் காலத்தில்) உடைத்து முன்னேறுவது/உட்செல்லுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படை.
- வென்படை - வென்ற படை
- வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை
இது தவிர அறுவகைச் சேனைகள் என்றும் இருந்தது. அவையாவன,
- கூலிப்படை - கூலிக்கு அமர்த்தும் சேனை.
- நாட்டுப்படை - நாட்டுப்புறத்துள்ள மக்களாலியன்ற படை
- காட்டுப்படை/ கானப் படை - காடுவாழ் மக்களினின்று திரட்டப்பெற்ற படை
- மூலபலம்/ மூலப்படை/ தொல்படை- நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் படை.
- துணைப்படை - நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை.
- பகைப்படை - பகைவர் படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை.
இனி படையுறுப்புகள் பற்றிப் பார்ப்போம்:
- ஆக்கம், தூசி, நெற்றி (Vanguard) - முன்னணியாகச் செல்லும் படை
- தார்/ நிரை - கொடிப்படை
- கூழை ( Rearguard) - பின்னணியாகச் செல்லும் படை
- கடைக்கூழை, கோடி - கூழையினும் கடைநிலைப் படை
- கை, சிறகு ( Wing/ flank) - பக்கவாடு அல்லது நடுவில் செல்லும் படைகள்.
- பேரணி (main body or center of an army) - படையின் நடுப்பகுதி
- அணி - Columns
இனி படைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்று பார்ப்போம்:
- அணி → ஒட்டு → ஊகம் → உண்டை
அடுத்து தமிழரின் பண்டைய கப்பற்படையில்(navy) இருந்த படைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்று கொஞ்சம் பார்ப்போம். இவை அரசரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவை ஆகும்.
- கண்ணி - இது ஒரு சிறப்பு நோக்கம், தந்திரோபாய கைக்கூட்டம்(battle array) ஆகியவற்றிற்குப் பயன்படும். ஒரு கண்ணியானது எதிரிக் கப்பல்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு எத்தும்(lure), அங்கு பெரிய கடற்படைசார் குழுக்கள் (வழக்கமாக, ஒரு தளம்) பதிக்காக(ambush) காத்திருந்து அவற்றை தாக்கும். ஒரு தடந்தகை/கேந்திர(strategic) களமிறக்கத்தின்(deployment) போது, முக்கிய பிரிவுடன்(fleet) சமரில் ஈடுபடுவதற்கு முன்பு கைக்கூட்டமானது பல முறை எத்தும் வகையில் பயன்படுத்தப்படும். (5 கப்பல்கள்)
- சலதளம்/ தளம் - 5 முதன் போர்க்கலங்கள், 3 துணைக் கலங்கள், 2 படையேற்பாட்டுக்(logistics) கலங்கள், 1 அல்லது 2 தனியார் படைக்கப்பல்கள் கொண்ட சிறிய தன்னிறைவு மிக்க நிரந்தர கைக்கூட்டம்(array) தளம் ஆகும். இது வேவு, சுற்றுக்காவல் அல்லது இடைமறிப்பிற்குப் பயன்பட்ட கைக்கூட்டமாகும். பொதுவாக, 2- 3 தளம் வட்டக்கூறில்(sector) இயங்குவதால், இவற்றால் ஒரு பரந்த பகுதியைத் தேட முடிகிறது. ஆனாலும் ஒன்றுக்கொன்று விரைந்து வலுவூட்டும் அளவுக்கு நெருக்கமாகத் தான் இருக்கும்.
- மண்டலம் - பல பணிகளுக்காக 48 கப்பல்கள் கொண்டது. இதுவொரு அரை நிரந்தர கைக்கூட்டமாகும். பெரும்பாலும் ஊராண்மை களமிறக்கத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உயர் கடல்களில் இடுக்கி தடூகம்(pincer maneuver) செய்யும் போது தனிப்பட்ட சமர் அலகுகளாக(unit) பயன்படுத்தப்படுகிறது.
- கணம் - பல பணிகளுக்காக 100-150 கப்பல்கள் கொண்டது. ஒரு கனம் 2/3 மண்டலங்களைக் கொண்டது. பிரிவைவிடக் கொஞ்சம் சிறியது. இதற்குள்ளே சமர், வேவு, படையேற்பாடு(logistics), வழங்கல் என்று அனைத்துக்குமான கலங்கள் உள்ளடங்கியிருக்கும்
- அணி - குறைந்தது 3 கனங்களைக் கொண்டது. பொதுவாக 300-500 கப்பல்கள் கொண்டது. இதுவொரு சிறப்பு ஊராண்மைக் குழுவாகும். இது அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விதப்பான படைத்துறை campaign(இதற்கு நிகரான சொல்லில்லை) மட்டுமே எழுப்பப்படுகிறது..
- பிரிவு - இவை தற்கால போர்க்கப்பல்களின் கடற்பிரிவு(naval fleet) போன்று செயற்பட்டன. சோழர்களிடம் 2 - 4 வரையிலான பிரிவுகள் இருந்தது
இவை தவிர ஏனைய வேலைகளை கவனிக்க கீழ்க்கண்ட படைகள் கடற்படையில் இருந்தன:
- கடற்படையின் துணை படை - சிறிய ஆனால் வல்லமைமிக்க படைகள் பல்வேறு வணிகக் கழகங்களினால் பராமரிக்கப்பட்டன. இக்கழகங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையான காலங்களில் கூலிப்படையாகவும் வலிமையூட்டவும் பயன்படுத்தப்பட்டன.
- சுங்கு - சுங்கப் படை(customs force)
- கரைப்பிரிவு - கடலோர பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
- ஈரூடகப்படை - கடலிலும் தரையிலும் பொருதும் படை.
- தனியார் படை/ கூலி கடற்படை - உலகளாவிய வணிகத்தின் போட்டிக்களப் பெருக்கத்தினால் ஆழ்கடலில் சிரமங்களில் சிக்கிய வணிக கப்பல்களைக் காப்பாற்றல், வலுப்படுத்தல் உதவி ஆகியவற்றை உரிய காலத்தில் செய்வதில் அரசு சிரமங்களை எதிர்நோக்கியது. இனால் தனியார் கடற்படைகளை உருவாக்க வேண்டியதாயிற்று.
- காவல் படை - நடுக்கடலில் போக்குவரத்திற்குக் காவல் இருந்து படை
- முத்துக்குளிப்போர் பிரிவு: இப்பிரிவானது கடலுக்கு அடியில் சென்று எதிரியின் கப்பல்களின் சுக்கான்களை நீருக்கு அடியில் இருந்து சேதப்படுத்தி / அழித்து விடும் வலிமை வாய்ந்தது
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.நன்னிசோழன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment