Pages

Monday, 18 January 2021

தமிழர்களின் மொத்த படைகள்


  • கரணப்பல்படை - பல்வகையான படைகளையும் குறிக்குஞ்சொல்.

முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு

  1. அகப் படை - Internal Defensive Force
  2. மறப் படை - Expeditionary Force

- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.


கோட்டைப் போரின் போது பொருதும் படைகள்

  1. உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை.
  2. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை.

என்று அழைக்கபட்டன.


இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:

  1. பயிற்சிப் படை = போர்ப் பயிற்சி கற்ற சேனை.
  2. பயிற்சியிலாப் படை = பயிற்சி பெறாத-உணர்ச்சியுள்ள மைந்தர் கூட்டம்.

இவை மேலும் தாங்கிய ஆய்தங்கள் & கவசத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:

  1. வன்படை - கனமான படை - Heavy army
  2. மென்படை - இலகுவான படை - Light army

அடுத்து கருவிகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:

  1. கருவிபெறு படை = அரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனை.
  2. தற்கருவிப் படை = தத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு பொருதும் சேனை.
  3. ஊர்திப் படை = காவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.
  4. தன்னூர்திப் படை = தத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனை.

பின்னர் எல்லாப்படையும் நால்வகையாக ஒட்டுமொத்தமாகப் பிரித்தனர். இவற்றினை நாற்படைகள் என்று கூறூவார்கள்.

  • காலாட் படை / ஆட்படை
  • தேர்ப்படை / சக்கரப்படை/ சகடப்படை
  • குதிரைப்படை / புரவிப்படை/ மாப்படை/ பரித்தானை
  • யானைப்படை/ கடகப்படை

இவை தவிர, கடற்படையும் இருந்தது இது கடலில் நடைபெறும் சண்டைகளில் ஈடுபடுவதற்காக வைத்திருந்த படையாகும்.


அடுத்து நகர்திறன் அடிப்படையில் இவ்வாறு பிரிக்கப்படும்:

  • தானே செல்வது - காலாட்படை/தானை
    • தானாகச் செல்லும் படையாகிய காலாட்படையினை தானை என்றனர் பண்டைத்தமிழர். இதை தற்காலத்தில் சேனைக்கு ஒத்த சொல்லாக சிலர் கருதுகின்றனர், அது தவறு. சேனை என்பது மொத்தமானது.
    • தேரும் குதிரை மூலம் இயங்குவதால் அதுவும் குதிரையினுள் அடங்கிவிடும்.
    • ஆதாரம்:

'தானை, யானை, குதிரை

நோனார் உட்கும் மூவகைந் நிலையும்

→ (தொல்.பொருள்.புறத். 14:1,2)'

  • பிறவாற் செல்வது - குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

அதன் பின்னர் அவற்றினுள் கீழ்கண்ட சேனைகள் பிரிவுகளாக இருக்கும்:

  1. தடுபடை - மாற்றுப்படை
  2. நிலைப்படை- standing army - எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் படை.
  3. பாசிப்படை - திடீரென்று தாக்கும் சேனை
  4. கூளியர் - கூளிப்படையினரரான இவர்கள் படைகளுக்கெல்லாம் முன்னர் சென்று படை செல்லுவதற்கேற்ற வழியை அமைத்து தந்திருக்கின்றனர்.
  5. செருப்படை - சிறந்த வீரர்களைக் கொண்ட படை
  6. பதிபடை/ ஒளிபடை- மறைந்து தாக்கும் படை
  7. கைக்கொளவர் படை/ கைக்கோளப்படை/முனையெதிர் மோகர் - அரசனை சூழ்ந்து பாதுகாப்பேற்கும் பொறுப்பினைப் பெற்ற படை.
  8. வேளைக்காரர் படை - தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள்
  9. நடப்பு படை - உணவு உடை போன்றவற்றினைக் கவனிக்கும் படை.
  10. தளப்படை காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப்படை. இவர்கள் பின்புல பாதுகாப்பு பிரிவாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் பாவிக்கப்படுவர்.
  11. ஊசிப்படை - தாக்குதல் படை
  12. கோட்டைக்கட்டு - கோட்டையினைப் பாதுகாக்கும் படையணி.
  13. மெய்க்காவலர் படை - மெய்பாதுகாவலர் படை
  14. வேவுப்படை/ ஐந்தாம்படை - எதிரியின் இடத்திற்குச் சென்று செய்தி திரட்டும் படை
  15. வேற்படை /குத்துப்படை - வேல் கொண்டு போரிடும் படை
  16. விற்படை/விற்றானை - வில் கொண்டு போரிடும் படை
  17. வாட்படை /வெட்டுப்படை - வாள் கொண்டு போரிடும் படை.
  18. மற்படை - ஆய்தம் இன்றி போரிடுவோர்.
  19. உரிமைப்படை - மானியம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்து அரசனுக்காகப் போரிடும் சேனை.
  20. அமையப்படை - குறுங்காலத்தில் திரட்டப்படும் படை
  21. தனிப்படை - தலைவனை இன்றித் தாமாகவே இயங்கும் சேனை.
  22. குழுப்படை - மன்னன் அமைத்த தலைவனையுடைய சேனை.
  23. குடிப்படை - கோட்டைக் கதவை எதிரி தாண்டிவிட்டன் என்றால் மக்களும் கம்புதூக்கத்கான் வேண்டும்!
  24. தாணையம் - கோட்டைக்குள் குழுமியிருக்கும் சேனை.
  25. பங்களப்படை - newly enlisted army useless as chaff
  26. கள்ளர் படை- போர் தொடங்குவதற்கு முன்னரே பகைவரின் ஆநிரைகளை கவர்ந்து வருவதற்காக அமைக்கப்பட்ட படை.
  27. அங்கபடை - மெய்க்காவல் படை [இச்சொல் பொற்பனைக் கோட்டையில் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் கல்வெட்டில் இருந்து கிடைக்கப்பெற்றது... எனவே தமிழ்ச்சொல் என்று நினைக்கின்றேன்.]
  28. நிழற்படை/நிழல் - "அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர்" என்பதாகப் முனைவர் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
  29. கரைப்படை - கரையினைப் பாதுகாக்கும் படை
  30. சாவேறு - பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படை மீது ஊடறுத்துச் செல்ல முயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே நோன்பாகக்கொண்ட வீரர்
  31. துறுபடை - நெருக்கமாக ஓரிடத்தில் நிற்கும் படை
  32. புதுப்படை - புதிதாக அமைந்த படை
  33. உடைப்படை - Breaching army - எதிரியின் அரண்களை(தற்காலத்தில்)/ நிரையினை(பண்டைக் காலத்தில்) உடைத்து முன்னேறுவது/உட்செல்லுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படை.

  • வென்படை - வென்ற படை
  • வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை

இது தவிர அறுவகைச் சேனைகள் என்றும் இருந்தது. அவையாவன,

    • கூலிப்படை கூலிக்கு அமர்த்தும் சேனை.
    • நாட்டுப்படை - நாட்டுப்புறத்துள்ள மக்களாலியன்ற படை
    • காட்டுப்படை/ கானப் படை காடுவாழ் மக்களினின்று திரட்டப்பெற்ற படை
    • மூலபலம்/ மூலப்படை/ தொல்படைநீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் படை.
    • துணைப்படை நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை.
    • பகைப்படை - பகைவர் படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை.

இனி படையுறுப்புகள் பற்றிப் பார்ப்போம்:

  1. ஆக்கம், தூசி, நெற்றி (Vanguard) - முன்னணியாகச் செல்லும் படை
  2. தார்/ நிரை - கொடிப்படை
  3. கூழை ( Rearguard) - பின்னணியாகச் செல்லும் படை
  4. கடைக்கூழை, கோடி - கூழையினும் கடைநிலைப் படை
  5. கை, சிறகு ( Wing/ flank) - பக்கவாடு அல்லது நடுவில் செல்லும் படைகள்.
  6. பேரணி (main body or center of an army) - படையின் நடுப்பகுதி
  7. அணி - Columns

இனி படைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்று பார்ப்போம்:

  • அணி → ஒட்டு → ஊகம் → உண்டை

அடுத்து தமிழரின் பண்டைய கப்பற்படையில்(navyஇருந்த படைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்று கொஞ்சம் பார்ப்போம். இவை அரசரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவை ஆகும்.

  1. கண்ணி - இது ஒரு சிறப்பு நோக்கம், தந்திரோபாய கைக்கூட்டம்(battle array) ஆகியவற்றிற்குப் பயன்படும். ஒரு கண்ணியானது எதிரிக் கப்பல்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு எத்தும்(lure), அங்கு பெரிய கடற்படைசார் குழுக்கள் (வழக்கமாக, ஒரு தளம்) பதிக்காக(ambush) காத்திருந்து அவற்றை தாக்கும். ஒரு தடந்தகை/கேந்திர(strategic) களமிறக்கத்தின்(deployment) போது, முக்கிய பிரிவுடன்(fleet) சமரில் ஈடுபடுவதற்கு முன்பு கைக்கூட்டமானது பல முறை எத்தும் வகையில் பயன்படுத்தப்படும். (5 கப்பல்கள்)
  2. சலதளம்/ தளம் - 5 முதன் போர்க்கலங்கள், 3 துணைக் கலங்கள், 2 படையேற்பாட்டுக்(logistics) கலங்கள், 1 அல்லது 2 தனியார் படைக்கப்பல்கள் கொண்ட சிறிய தன்னிறைவு மிக்க நிரந்தர கைக்கூட்டம்(array) தளம் ஆகும். இது வேவு, சுற்றுக்காவல் அல்லது இடைமறிப்பிற்குப் பயன்பட்ட கைக்கூட்டமாகும். பொதுவாக, 2- 3 தளம் வட்டக்கூறில்(sector) இயங்குவதால், இவற்றால் ஒரு பரந்த பகுதியைத் தேட முடிகிறது. ஆனாலும் ஒன்றுக்கொன்று விரைந்து வலுவூட்டும் அளவுக்கு நெருக்கமாகத் தான் இருக்கும்.
  3. மண்டலம் - பல பணிகளுக்காக 48 கப்பல்கள் கொண்டது. இதுவொரு அரை நிரந்தர கைக்கூட்டமாகும். பெரும்பாலும் ஊராண்மை களமிறக்கத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உயர் கடல்களில் இடுக்கி தடூகம்(pincer maneuver) செய்யும் போது தனிப்பட்ட சமர் அலகுகளாக(unit) பயன்படுத்தப்படுகிறது.
  4. கணம் - பல பணிகளுக்காக 100-150 கப்பல்கள் கொண்டது. ஒரு கனம் 2/3 மண்டலங்களைக் கொண்டது. பிரிவைவிடக் கொஞ்சம் சிறியது. இதற்குள்ளே சமர், வேவு, படையேற்பாடு(logistics), வழங்கல் என்று அனைத்துக்குமான கலங்கள் உள்ளடங்கியிருக்கும்
  5. அணி - குறைந்தது 3 கனங்களைக் கொண்டது. பொதுவாக 300-500 கப்பல்கள் கொண்டது. இதுவொரு சிறப்பு ஊராண்மைக் குழுவாகும். இது அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விதப்பான படைத்துறை campaign(இதற்கு நிகரான சொல்லில்லை) மட்டுமே எழுப்பப்படுகிறது..
  6. பிரிவு - இவை தற்கால போர்க்கப்பல்களின் கடற்பிரிவு(naval fleet) போன்று செயற்பட்டன. சோழர்களிடம் 2 - 4 வரையிலான பிரிவுகள் இருந்தது

இவை தவிர ஏனைய வேலைகளை கவனிக்க கீழ்க்கண்ட படைகள் கடற்படையில் இருந்தன:

  • கடற்படையின் துணை படை - சிறிய ஆனால் வல்லமைமிக்க படைகள் பல்வேறு வணிகக் கழகங்களினால் பராமரிக்கப்பட்டன. இக்கழகங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையான காலங்களில் கூலிப்படையாகவும் வலிமையூட்டவும் பயன்படுத்தப்பட்டன.
  • சுங்கு - சுங்கப் படை(customs force)
  • கரைப்பிரிவு - கடலோர பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
  • ஈரூடகப்படை - கடலிலும் தரையிலும் பொருதும் படை.
  • தனியார் படை/ கூலி கடற்படை - உலகளாவிய வணிகத்தின் போட்டிக்களப் பெருக்கத்தினால் ஆழ்கடலில் சிரமங்களில் சிக்கிய வணிக கப்பல்களைக் காப்பாற்றல், வலுப்படுத்தல் உதவி ஆகியவற்றை உரிய காலத்தில் செய்வதில் அரசு சிரமங்களை எதிர்நோக்கியது. இனால் தனியார் கடற்படைகளை உருவாக்க வேண்டியதாயிற்று.
  • காவல் படை - நடுக்கடலில் போக்குவரத்திற்குக் காவல் இருந்து படை
  • முத்துக்குளிப்போர் பிரிவு: இப்பிரிவானது கடலுக்கு அடியில் சென்று எதிரியின் கப்பல்களின் சுக்கான்களை நீருக்கு அடியில் இருந்து சேதப்படுத்தி / அழித்து விடும் வலிமை வாய்ந்தது

இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.நன்னிசோழன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!


              தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment