இதற்கு காரணம், உடலில் சுரக்கும் ஹார்மோன் (உயிர் வேதிபொருள்);குறிப்பாக, ’மெலடோனின்’என்ற ஹார்மோன்.
மெலடோனின், (எல்லா விலங்குகளின்) மூளையில் இருக்கும் பினியல் சுரப்பியில் (pineal gland) சுரக்கும் ஹார்மோன் ஆகும்.
இது சர்காடியன் ரிதம் எனும் உயிரியல் செயல்முறைகளான முறையான தூக்கம், இரத்த அழுத்தம், பருவகால இனப்பெருக்கம், உள்ளிட்ட எல்லா செயல்களிலும் பங்குகொள்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மெலடோனின் ஹார்மோனே தூக்கத்தை வரவழைக்கிறது.சாயங்காலத்திலிருந்து இரவு நேரத்திற்கு செல்ல செல்ல, உடலில் மெலடோனின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.இதன் காரணமாகவே, நாம் தூக்கத்தை உணருகிறோம்.
நள்ளிரவில் மெலடோனின் அளவு உச்சத்தை அடைவதால், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம்.இதே போன்று, காலைப் பொழுது வரவர, உடலில் மெலடோனின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக, நாம் தூக்கம் கலைந்து விழிக்கிறோம்.
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).
No comments:
Post a Comment