Pages

Saturday, 31 March 2018

மின்சார விலாங்கு மீன் எவ்விதம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது???

மின்சார விலாங்கு மீன் எவ்விதம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது???

அற்புதமான காணொளி !!!!

அறிவியலின் தேடல் தொடரும் !!!!!
                " வலியே வலிமை "
             -ஐய்யனார் (வால்வரின்)

Tuesday, 27 March 2018

இஸ்ரேல் தொழில்நுட்பம் , முன்னேற்றங்கள்!

இஸ்ரேல் தொழில்நுட்பம் , முன்னேற்றங்கள்!



@காணொளி!!!


1. கடல்நீரை குடிநீராக்குவதில் முன்னோடி!


2. போக்குவரத்து நெரிசலை குறைத்தல்,


3. தீவிரவாதிகளை அடையாளம் காண மனநிலையை கண்டறிய உதவும் சாதனம்,



4. மார்பக புற்றுநோய்
உள்ளிட்ட புற்றுநோய்  கட்டிகளை எந்தவித பாதிப்புமின்றி  15நிமிடத்திற்குள் உறைய வைத்து அழித்தல்,





5. முடக்குவாதத்தையே முடக்கி போட்டுவிட்டு மீண்டு எழ உதவும்  இயந்திரம்,



6. விழிச்சவால் உடையோரும் காட்சிகளை அடையாளம் கண்டு
பார்வை தன்மையை  உணரவைத்தல்,




7. செரிமான பாதை வரை சென்று உடலியக்கத்தை கண்காணிக்கும்
புகைபடக்கருவி (CAMERA),



8. பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வாகனத்திற்கும்
கண் போன்ற
உணரிகள் (Sensors) பொருத்துதல்,



9. பாதுகாப்பு துறையின் தொழில்நுட்ப முன்னோடி,



10. நாம் பயன்படுத்தும்  அலைபேசியில் இஸ்ரேலிய விஞ்ஞானிகளின்  பங்கு,
என தற்போதைய  தொழில்நுட்ப முன்னோடிகளாய்
திகழும் இஸ்ரேல்!


அறிவியலின் தேடல் தொடரும்.
               " வலியே வலிமை "
            -ஐய்யனார் (வால்வரின்)


சூரிய சக்தியில் இயங்கும் தொடர்வண்டி

சூரிய தகடுகளை ஏந்திகொண்டு புறப்பட்டது. சூரியமின் சக்தியில் இயங்கும் தொடர்வண்டி.

கீழே உள்ள காணொளியை காணுங்கள்.
அறிவியலின் தேடல் தொடரும்.
         "வலியே வலிமை "
         -ஐய்யனார் (வால்வரின்)

திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்

திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:–


அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)

தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258

யாராவது இனி திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று கூறினால் இங்கு கூறப்பட்டுள்ள குறள்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளச் சொல்லுவோம்.

சனாதன தர்மத்தை குறை கூறும் சிலருக்கு இந்த பதிவு ஒரு உதவிய இருக்கும் என்று நம்புகிறேன்..

தமிழ் மேலே நம்பிக்கை, தமிழ் பற்று, தமிழன் என்ற உணர்வு இருந்தால் படித்து புரிந்துகொள்ளவும் அதன் பிறகும் குறை கூறினால் நீங்க தமிழனா என்ற கேள்விக்கு ஆளாக படுவீர்கள்.....

தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; 

தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. 

இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; 
தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.
இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.

பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்
விநாயகர் : ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)

சிவன்:
சிவன் முதுமுதல்வன் (புறம் 166) 

தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)
பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்
(பரிபாடல் திரட்டு 1: 72-78)
உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)

திருமால்:

மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே (பரிபாடல் 3)

லட்சுமி:

இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)
அவ்வித்து செய்யவள் (குறள் 167)

பிரம்மா :
பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி (திருமுருகாற்றுப்படை 164-165)

முருகன்:

முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4) ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)

இராமன்:

இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை (புறநானூறு 358 :18,19)


இப்போது சொல்லுங்க
இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும்.
ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.
தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?
தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.  

  அறிவியலின் தேடல் தொடரும்.
             " வலியே வலிமை "
                   -ஐய்யனார் (வால்வரின்)

இந்து தோன்றியது தமிழ்நாட்டில் தான் .

இந்து தோன்றியது தமிழ்நாட்டில் !!!!
அதாவது குமரிக்கண்டத்திலே உருவானது இது.
இந்து என்பது மதம் இல்லை. இந்து என்பது இயற்கை தான் கடவுள் என்று விளக்கம் தர்ம்ம்.
சமஸ்கிருத மொழியில் கூறுவது இதை தான். சனாதன தர்மம் !!!!

ஓம் நமசிவாய !!!
இந்து மதம் யாரையும் ஏமாற்றுவது இல்லை .... தவறு செய்தால் தண்டனை உண்டு என போதிப்பது இந்து மதம் மட்டுமே ... இங்கு பாவ மன்னிப்பு கிடையாது ... " கன்பெஷன் " என்ற ஏமாற்றுவேலைக்கு இந்து மதத்தில் இடமில்லை ... அவனவன் செய்த தவறுகளுக்கு ஏற்ப அவனவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே ..

இதற்கான ஆதாரம். !!!!

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் சிலைகள்
இருப்பது தமிழ்நாட்டில்.

2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.

4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.

5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.

6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.

7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.

9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.

10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..

அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.

குறிஞ்சி➡முருகன்

முல்லை➡திருமால்

மருதம் ➡ இந்திரன்

நெய்தல்➡வருண்ன்

பாலை➡கொற்றவை

தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி ஆகும்.




Monday, 26 March 2018

விண்வெளியில் !!! வைர மழை !!!

விண்வெளியில் !!! வைர மழை !!!

உலகில் வைரத்தைப் போல !!! பிரபஞ்சம் வைரம்.

கீழே உள்ள காணொளியை காணுங்கள். 

Sunday, 25 March 2018

அறிவியல் தகவல்களும் அறியாத செய்திகளும்.


1. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது?

பாதரசம்

விளக்கம்::
நீர்ம நிலையில் உள்ள உலோகம் பாதரசம் மட்டுமே. பாதரசம், இதளியம் அல்லது இதள் (mercury) என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இதன் வேதியியல் குறியீடு Hg. இது திரவ நிலையில் காணப்படும்.

 இரசத்தின் அணுவெண் 80. இதளியம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது.

 இது பளுமானி, அழுத்தமானி, வெப்பநிலைமானி ஆகியவற்றில் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி கொல்லிகள், இலத்திரனியல் உபகரணங்கள், மின்குமிழ்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இதளியம் பயன்படுத்தப்படுகிறது. பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன.

 எனினும் இதளியம் விசத்தன்மை மிக்கது.

2. எலும்பு !!! 
 X - கதிர்கள் செல்ல முடியாத ஊடகம் கீழ்கண்டவைகளில் எது?

எலும்பு

விளக்கம்::
எக்சு கதிர்கள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் .

இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சி என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.வலிமையான X-கதிர்களால் பொருட்களை ஊடுருவ முடியும். இப்பண்பே மருத்துவத் துறையில் X-கதிர்ப் படங்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

 விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையின் போதும் இத்தொழிற்பாடே பயன்படுத்தப்படுகின்றது.எனினும் எக்ஸ் கதிர்கள் எலும்புகளை ஊடுருவிச் செல்லாது. அதனால் தான் இவைகள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன.



3 . கீழ்க்கண்டவற்றுள் ஜெட் விமான வேகத்தைக் குறிக்கும் அலகு எது?

 

மாக் நம்பர்

விளக்கம்::
ஜெட் விமான வேகத்தைக் குறிக்கும் அலகிற்கு மாக் நம்பர் என்று பெயர். மாக் நம்பர் என்பது ஒலியின் வேகத்துக்கும். விமானத்தின் வேகத்துக்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.


4. இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இடம் எங்கு உள்ளது?



நாசிக்

விளக்கம்::
இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக்கில் அச்சடிக்கப் படுகிறது. 


5.  உலகளவில் பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டு முன்னிலையில் இருக்கும் இரு நாடுகள் எவை?


ஜப்பான், அமெரிக்கா

விளக்கம்::
உலகளவில் பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் இரு நாடுகள் ஜப்பானும், அமெரிக்காவும் தான். 


6. உலக அளவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் எவை?


ரஷ்யா, சீனா

விளக்கம்::
உலகளவில் சிமெண்ட் உற்பத்தியில் இன்றைய தினம் வரையில் முன்னணியில் உள்ள இரு நாடுகள் என்று பார்த்தால் அது ரஷ்யாவும், சீனாவும் தான்.


7. "இரு வகை பார்வை மூக்குக் கண்ணாடியை (Bifocal Lens)"
கண்டுபிடித்தவர் யார்?



பெஞ்சமின் பிராங்க்ளின்

விளக்கம்:
Bifocals கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடி இருகுவியக் கண்ணாடி எனப்படுகிறது. இதன் இரு வில்லைகளிலும் மேலேயுள்ள பகுதியின் குவியத் தூரம் (fical length) ஒரு அளவாகவும், கீழேயுள்ள பகுதியின் குவியத் தூரம் வேறோர் அளவாகவும் அமைந்திருக்கும். இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது.

8. வாஸ்கோடகாமாவின் கல்லறை எங்கு உள்ளது?


கொச்சி

விளக்கம்:
வாஸ்கோடகாமாவின் கல்லறை கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ளது.


9. முதன் முதலில் டைப் ரைட்டரைக் கண்டு பிடித்தவர் யார்?


மிட்டர் ஹோபர்

விளக்கம்:
முதன் முதலில் டைப் ரைட்டரைக் கண்டு பிடித்தவர் மிட்டர் ஹோபர். இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்.


10. கொம்புள்ள கோள் என்று எதற்குப் பெயர்?


வெள்ளி கிரகம்

விளக்கம்:
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.


11. இரட்டைப் பிறவி எனக் கூறும் வண்ணம், ஒரே உருவ, எடை கொண்ட கோள்கள் எவை?


பூமி, வெள்ளி

விளக்கம்:
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும்.
வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது.


12. திடீர் திடீரென தோன்றி மறையும் நட்சத்திரங்களுக்கு என்ன பெயர்?


நோவா

விளக்கம்:
திடீர் திடீரென தோன்றி மறையும் நட்சத்திரங்களுக்கு நோவா என்று பெயர். விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும்.

13.  புயல் மணிக்கு எத்தனை மைல் வேகத்தில் வீசும்?

40 மைல் வேகம்

விளக்கம்:
குறைந்த வளியமுக்கப் பிரதேசத்தை நடுவில் கொண்ட அயனமண்டலத்தில் ( வெப்பமண்டலத்தில்) உருவாகும் ஒரு சூறாவளி வகையே வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது பொதுவாக வெப்பம் கூடிய அயனமண்டச் சமுத்திரங்களில் தோன்றும். இது இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும் முகில்களால் ஆக்கப்பட்டிருக்கும். வெப்பமண்டலம் அல்லது அயனமண்டலம் என்பது இச் சூறாவளி தோன்றும் புவியியற் பிரதேசத்தைக் குறிக்கும். இது தோன்றும் இடத்தையும் அதன் காற்றுப் பலத்தையும் கொண்டு அதனைப் பலவகையில் வேறுபடுத்தலாம்.

14.  சிங்கம் எவ்வளவு தூரம் தாண்டும்?

12 மீட்டர்

விளக்கம்:
சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. அழிந்து வரும் விலங்குகளான இவைகள் சாதாரணமாக 12 மீட்டர் தாண்டக் கூடியது.

15.  "உயிரினங்களின் தோற்றம்" என்னும் நூலை எழுதியவர் யார்?


சார்லஸ் டார்வின்

விளக்கம்:
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.


16.  உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுவது எது?


பாக்டீரியா

விளக்கம்:
பாக்டீரியா தான் உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுகிறது. இதன் வயது நாலரை கோடி ஆண்டுகள் ஆகும். பாக்டீரியா என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய  பா'க்டீரியொன் என்பதில் இருந்து வந்தது. பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள் போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன.


கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?


கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும், சிங்கமும், காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே, கடவுளின் முன் கூடி வாழும் போது, ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது.



நான் அடிக்கடி சந்திக்கின்ற கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் என்னிடம் கேட்கும் கேள்வி – நாம் வணங்குகின்ற கடவுளருடன் விலங்குகளும் இருப்பது குறித்தானது. பல அறிவொளி மிக்க கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் இந்து மதத்தின் மேன்மையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அவர்களது மதங்களைவிட ஆழமான தத்துவ அலசல்கள், நெடிய ஆன்மீகப் பாரம்பரியம், மிக உன்னதமான மகான்களையும் ஞானிகளையும் தொடர்ந்து இந்து சமுதாயம் உலகிற்கு அளித்து வருவது ஆகியவற்றை அறிந்திருப்பதால் அவர்களிடையே இந்து மதம் பற்றிய மிக உயர்ந்த கருத்தும், மதிப்பும் இருக்கிறது. ஆனால், அத்துடன் நமது வழிபாட்டு முறைகளில் சிலவற்றைப் பற்றிய சந்தேகங்களும், குழப்பங்களும் அவர்கள் மனதில் இருக்கின்றன. அதில் முக்கியமான சந்தேகம் நமது தெய்வங்களுடனும், தெய்வங்களாகவும் விலங்குருவங்கள் இருப்பது குறித்தது.
இன்னொரு வகையினரும் உண்டு. அவர்களுக்கு இந்த ஆழமான பார்வை கிடையாது, தமது முன்னோர்களின் ஞானம் (ஆம், அவர்களின் முன்னோர்களும் இந்துக்கள்தானே) பற்றிய ஆபிரகாமிய விஷக்கருத்துக்கள் அவர்களின் நெஞ்சினில் இருப்பதால் பார்க்கும் பொறுமையும் கிடையாது. அவர்களுக்குத் தமது மதம்தான் மிகவும் அறிவார்ந்த மதம், அதுதான் கடவுளால் நேரடியாக வழங்கப்பட்டது; மற்ற மதங்கள் எல்லாம் மூடநம்பிக்கை.
இந்த மாக்கள் தமது மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளைப் பகுத்தறிவு என்றும், இந்து மதக் கருத்துக்கள், தத்துவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் தவறு, மூடநம்பிக்கை என்றும் புரிந்துகொண்டு அதைப் பரப்பியும் வருகிறார்கள்.

வெளிநாட்டு கிறிஸ்துவ அன்பர் ஒருமுறை எங்கள் வீட்டில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் உருவப் படத்தைப் பார்த்துவிட்டு “இதன் அர்த்தம் என்ன? ஏன் பாம்பின்மீது படுத்திருக்கிற கடவுள் உருவத்தை வணங்குகிறீர்கள்?” என்றார். அவரது தொனியை முதலில் நான் கேலி எனத் தவறாகப் புரிந்துகொண்டு, “நீங்கள் ஏன் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப்பட்ட மரத்தில் ரத்தம் ஒழுகும் நிலையில், ஆணியடிக்கப்பட்ட உருவத்தை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். நண்பர் சிறிது மனம் புண்பட்டு விழித்தார்.

பின்பு அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளக்க ஆரம்பித்தேன். “ஒவ்வொரு மதமும் தனக்கெனக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் இயேசு என்ற கிறிஸ்துவர்களின் தெய்வம், கிறிஸ்துவர்களுக்கு இயேசுவின் தியாகத்தை நினைவு படுத்துவதைப் போலவே இந்துக்களான நாங்களும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், கிறிஸ்துவர்கள் தங்களது முதுகைப் பார்க்காமல் மற்றவர்களின் கடவுள் உருவங்கள், வழிபாடு ஆகியவற்றின் உட்பொருளை உணராமல், ஆழமாக உற்று நோக்காமல் உடனடியாக இந்துக்களைக் கேலி செய்யத் துவங்கிவிடுகிறார்கள்” என்றேன்.
நல்ல மனிதரான அந்த கிறிஸ்துவ நண்பர் உடனடியாக தாம் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் ஒரு அக்னாஸ்டிக் (agnostic – கடவுள் இல்லை, இருக்கிறார் என்ற எந்த முடிவுக்கும் வரமுடியாதவர்) என்றுரைத்தார். அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை. இன்று மேலைநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் சரித்திர ஆய்வின் மூலமும், பகுத்தறிவின் வளர்ச்சியினாலும், நேரடி அனுபவத்தின் மூலமும் கிறிஸ்துவத்தை விட்டு அணியணியாய் வெளியேறிவருகிறார்கள். அங்கே மதபோதகர்களாக இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற பிரதேசங்களிலிருந்து மதம் மாறிய கிறிஸ்துவர்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலமை மோசமாக இருக்கிறது. நமது நாட்டிலோ, சரியான புரிதல் இல்லாமையின் காரணமாகவும், சமூகப்-பொருளாதார காரணங்களினாலும் ஏழைபாழைகள், சரியாக சிந்திக்க தெரியாதவர்கள் பலர் கிறிஸ்துவத்தின்பால் செல்கின்றார்கள்.
“பரவாயில்லை நண்பரே நீங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளக் கேட்பது எனக்கு புரிகிறது” என்று சொல்லிவிட்டு, நேர்வழியாம் இந்து மதத்தின் சில தத்துவங்களையும், வழிபாட்டு முறைகளையும் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:
மனிதனும் இயற்கையும்:

1. ஆபிரகாமிய மதங்கள் பூரணமாக இருக்கின்ற இயல்பான – ஒன்றுகொன்று தொடர்புடைய ஜீவராசிகளின் தன்மைகளைக் குலைத்து, அவற்றில் மனிதனை (குறிப்பாக, ஆண்மகனை) படைப்பின் உச்சமாகக் கருதி முக்கியத்துவம் தருகின்றன. இது தனிநபர் மனதிலும், அந்தச் சமுதாயங்களிலும், உலகிலும், ஆன்மீகப் பரவெளியிலும் நிலவும் சமச்சீர்த் தன்மையினை குலைத்து நம்மை மிருக நிலைக்குத் தள்ளி, வன்முறையையும், ஆதிக்க வெறியையும், சீர்குலைக்கப்பட்ட ஆன்மீக கருத்துக்களையும் தனிநபர்களின் மனதிலும், அந்த சமுதாயங்களிலும், உலகிலும், ஆன்மீக பரவெளியிலும் நிலவச் செய்துவிடுகிறது. இந்த நிலையையே அரக்கர்களின் வியாபகமென்று இந்துப் புராணங்களும், நாட்டார் கதையாடல்களும் தொன்றுதொட்டுச் சொல்லி அந்த நிலையிலிருந்து பலமுறை மனிதகுலம் மீண்ட கதைகளைச் சொல்கின்றன.
2. இந்த அரக்கத்தனம் மூன்று வகைகளில் செயல்படுகிறது. முதலாவது இது மனிதகுலத்தைத் தொடர்புடைய வாழ்வாதாரச் சூழலில் இருந்து பிரிக்கிறது, இரண்டாவதாக மனிதகுலத்தை ஆண் தனி, பெண் தனி என்று பிரிக்கிறது, மூன்றாவதாக ஆண்வர்க்கத்தில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து அவர்கள் விசேஷமானவர்கள், மற்றவர்களின் மீது தனது ஆளுமையை நிர்ப்பந்திக்கக் கடவுளால் ஏவப்பட்டவர்கள் என்று மூளைச்சலவை செய்கிறது. இந்த மூளைச்சலவையினால் உந்தப்பட்டவர்கள் மற்ற சமுதாயங்களை அழித்திடவும், மனிதர்களின் ஜீவாதாரச் சூழலை அழித்திடவும் உகந்த அரக்க குணமுடையவர்களாக – சிந்திக்காமல் வெறும் மூடநம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டவர்களாக மாற்றப்படுகின்றனர்.

3. இன்று உலகில் நாம் காணும் சமச்சீர்மையின்மைக்கும், சுற்றுச் சூழல் மாசுபடல், வாழ்வாதாரங்கள் குலைதல் ஆகியவற்றுக்கும் இதுவே காரணம்.
4. பெண் தன்மையை அடக்கி அழிப்பது என்பது ஆபிரகாமியக் கருத்தியலின் அடிப்படை என்பது இன்று உலகில் சிந்திக்கும் நல்லோர் அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொள்வது. ஆதாமை சொர்க்கத்திலிருந்து நரக-பூமிக்கு தள்ளிய ஏவாள் (Eve) கதையாடல்கள் போன்றவற்றின் மூலமாக புனிதப்பெண்மையை(Sacred Feminine) தாழ்த்தி மனிதர்களைக் கீழே தள்ளும் சாத்தானின் கைப்பாவையாகப் பெண்மையைச் சித்தரிப்பதிலிருந்து இது துவங்குகிறது. விவிலியத்தின்படி ஏவாள் தனியாகப் படைக்கப்பட்டவளும் அல்ல. ஆதாமின் விலா எலும்பை எடுத்துச் செய்யப்பட்டவள் என்பதால் ஆண்மகனைப் போல முழுமை பெற்றவளாகவும் கருதப்படுவதில்லை.
சாத்தானாக அப்போது கிறிஸ்துவம் சித்தரித்த பால் (Baal) கடவுளின் உருவகமான நாகம் இந்த பழையஏற்பாட்டு (Old Testament Bible) ஆசிரியர்களால் போதிக்கப்பட்டது. இந்த பால் கடவுளிடமிருந்து அக்கடவுளின் இணையான பெண் கடவுளைப் பிரித்து பெண்மையினை சாத்தானுக்கு துணைபோவதாக ஆதாம் – ஏவாள் கதையினை உருவாக்கி, பெண் தன்மையினை நசுக்கி அது இல்லாத நிலையில் அரக்கத்தனமடையும் ஆண் தன்மையினை மட்டும் கொண்டவராகத் தத்தம் கடவுளரை உருவகித்து ஆபிரகாமிய மதங்கள் தூக்கிப் பிடித்து ஏக இறைவனாகப் பிரச்சாரம் செய்து பலரது மதியினை பேதலிக்கச் செய்தன.
5. இந்தக் கட்டுக்கதையை கேள்வியேதும் இல்லாமல் யூதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் போன்ற மார்க்கங்களை உண்மை என நம்பி ஏற்பவர்கள், தொடர்ந்து பெண்மையைத் தாழ்வானதாகவும், ஆதிக்க ஆண்மையை உத்தம குணமாகவும், கடவுளின் பிரதிபலிப்பாகவும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை கேள்வி கேட்பவர்கள் apostates, heretics என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டார்கள், லட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
6. டா வின்சி கோட் என்ற பிரபல நாவலில் இவை மிகவும் அழகாக விளக்கப்படுகின்றன. எப்படி பெண்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எரிக்கப்பட்டார்கள் என்பதை அந்நூல் விவரிக்கின்றது. மூலிகை வைத்தியர்கள், விலங்குகள் மீது பரிவோடு இருந்தவர்கள், வான்வெளி நிபுணர்கள் என்று எல்லோரும் சூனியக்காரர்ர்களாக, சைத்தானின் கையாட்களாக கருதப்பட்டதை அந்நூல் விவரிக்கின்றது. நூலைப் படிக்கின்ற போது, எப்பேர்ப்பட்ட மனச்சிதைவை இந்த ஆபிரகாமிய மதங்கள் மனித குலத்திடையே தோற்றுவித்திருக்கின்றன என்ற ஆயாசம் நமக்கு ஏற்படுகிறது.
7. ஆனால் இன்று இதுபோன்ற நூல்கள் வருவது, பெருமளவில் வரவேற்பு பெறுவது மேலைநாட்டு ஆபிரகாமியக் கருத்தியல் என்ற இருள் சூழந்த காலகட்டத்தைவிட்டு அறிவும், அன்பும், அமைதியும் விளங்கும் அற்புதக் காலத்திற்குள் நுழைவதற்கு மனிதகுலம் தயாராகிவிட்டதை காட்டுகிறது. இந்துமதத்தின் மேன்மைமிகு கருத்துக்களை உலகம் தன்னகத்தே பெற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டதை இது காட்டுகிறது.

மனிதனும் இயற்கையும் ஆபிரகாமிய மதங்களும். 

                


Canaanite Goddess (Astarte-Ashtoreth, Companion of Baal)
gold plaque from Lachish. 13th century BCE
(Israel Museum, Jerusalem)
1. இஸ்ரவேலர்களுடைய மண்ணின் கடவுளாக ஜெஹோவா அல்லது யெஹ்வா என்ற யூத-ஆண் கடவுளையும், பிற இனத்தவர்களின் கடவுள் மற்றும் கடவுள்களாக பால், பாலிம் (பாலிம் என்றால் பல கடவுள்கள் – இவை பாலின் வெவ்வேறு தோற்றங்கள், இந்து மதத்தில் கடவுள் பல உருவங்களில் வழிபடப்படுவது போன்று), அஷெரா போன்ற பெண் தெய்வங்கள் மற்றும் இத்தெய்வங்களுடன் அதுவரை சம்பந்தப்பட்டிருந்த இயற்கைக் குறியீடுகள், விலங்குகள் ஆகிய எல்லாமே நிராகரிக்கப்பட்டவையாக இஸ்ரேலில் இருந்த யெஹ்வா – ஜெஹோவா கடவுளின் ஆதரவாளர்களால் சித்தரிக்கப்பட்டன. இதற்கும் அடிமை மனோபாவத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் தொடர்புண்டு. தாழ்வு மனப்பான்மையிலிருந்து பிறப்பவையே ஆபிரகாமியக் கருத்தியல்கள் என்றுகூடச் சொல்லலாம், எனவேதான் இதே மனநிலையில் செயல்படுவோரை விரைந்து ஈர்த்துக்கொள்கிறது – இதை இன்றும் நாம் காணவும் முடிகிறது.
2. இந்த மூடத்தனம் பரவிய கதைபற்றி விரிவான ஆராய்ச்சிகள் தற்போது மேலைநாடுகளில் நடத்தப்பட்டு வருவதால் இவற்றின் ஊடே நான் அதிகம் செல்லவிரும்பவில்லை.
3. சுருக்கமாகச் சொல்வதானால், இயற்கையை, இயற்கையான வாழ்க்கையை, இயல்பான ஆன்மீகத்தை, நாட்டார் வழக்குகளை எல்லாம் சாத்தானாக விவரிக்கும் போக்கு ஆபிரகாமிய மதங்களால் உலகில் பரப்பப்பட்டது. சாத்தானுடன் தொடர்புடையதாக மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பெண்கள் சித்தரிக்கப் பட்டனர். இதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பு இஸ்ரேலில் நிலவிய சமூகச் சூழலே காரணம், இதற்குப் பின்னால் எவ்வித ஆன்மீகக் காரணங்களும் கிடையாது. இன்றும் ஆபிரகாமிய மதங்களில் பெண் மெஸைய்யாக்கள், நபிகள், போப், கலீபாக்கள், அமீர்கள் கிடையாது. இது குறித்து கேள்வி கேட்பதே குற்றம் என்ற அளவுக்குப் பெண்ணியம் குறித்த வெறுப்பைக் கொண்டிருக்கின்றன இந்த மதங்கள். ‘இத்தனை நபிகளுக்கு இடையில் ஏன் இல்லை பெண் நபி?’ என்ற கேள்வியை எழுப்பியதற்காக ஹெச்.ஜி. ரசூல் என்ற தமிழ் எழுத்தாளரை முஸ்லீம் சமூகத்திலிருந்து வெளியேற்றுகிற அளவுக்கு மோசமான மனநிலையை இந்தச் சமூகங்கள் கொண்டிருக்கின்றன.
மனிதனும் இயற்கையும் இந்து மதமும்

1. மனிதன் இயற்கையின் அங்கம். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது இந்து மதத்தின் அடிப்படையான கொள்கை. (இதை இன்று ecosystem என்ற பெயரால் ஏதோ புதுக் கண்டுபிடிப்புப் போல மேலைநாடுகள் கூறுகின்றன.) இதனாலேயே இந்து மதம் பரவிய இடங்களில் எல்லாம் இயற்கை மனிதர்களுக்கு எல்லா வளங்களும் தந்து, மங்களமான சூழலை உருவாக்கியது. இந்த சூழல் ஆபிரகாமியத் தாக்குதலால் இன்று குலைந்துபோய் வன்முறையும், அமைதியின்மையும் நிலவும் சூழலாக உருவாகியுள்ளது.
2. ரமண மகரிஷியிடம் ஒருவர் விலங்குகள் தாழ்வானவை என்ற கருத்தில் பேசியபோது அவர் அந்த கருத்தை கண்டித்திருக்கிறார். விலங்குகள், மனிதர்கள், மரங்கள், செடிகொடிகள், ஆறுகள், கடல், மழை என்று எல்லாமே புனிதமான ஒரு சுழற்சியின் அங்கங்கள் என்பது நம் கொள்கை. மனிதர்களுக்கு முக்தி இருப்பதுபோல, விலங்குகளுக்கும் உண்டு என்பதை ரமண மகரிஷி குறிப்பிடுகிறார்.

3. எனவே எப்படிப் பெண் கடவுள்கள், பெண் நபிகள், பெண் மெஸையாக்கள் ஆபிரகாமிய மதங்களில் இல்லையோ – அப்படி இருப்பது வித்தியாசமான விஷயமாக, அசாதாரணமாக, கடவுளுக்கு விரோதமானதாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோன்று விலங்குகள் கடவுள் தன்மையுடன் இருப்பதும் இந்த ஆபிரகாமிய மதங்களால் விரோதமாகப் பார்க்கப்படுகின்றன. இந்த மதங்களின் வன்முறைக்கு பயந்து இதை யாரும் சுட்டிக்காட்டாததால், இது உலகில் எல்லா இடங்களிலும் – இந்த மதங்களிலிருந்து வெளியேறிவிட்ட சீரிய சிந்தனையாளர்களால் கூட வித்தியாசமாய் பார்க்கப்படும் விஷயமாகிவிட்டது.
4. கடவுள் ஒரு தூதரை தேர்ந்தெடுத்து அவர்மூலம் மனித குலத்திற்குச் செய்திகளை அளிக்க முடியும், அவர் மூலம் எப்படி வாழ்வது என்று போதிக்க முடியும் என்றால், அதே கடவுள் விலங்கு உருவத்தில் வந்து போதிக்க, வழிகாட்டவும் முடியும் என்பதை ஏனோ இவர்களால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. மூளைச்சலவைதான் இதற்கு காரணம்.
கடவுளருடன் இருக்கும் விலங்குகள் எதைக் குறிக்கின்றன?

முதல் பகுதியில் நான் எழுதியிருப்பது போன்று பலசமயங்களில் இந்துக் கடவுள்களுடன் இருக்கும் விலங்குகள் ஆழமான பல விஷயங்களைக் குறிக்கும் குறியீடுகளாகும். உதாரணத்திற்குச் சில:
நாகம்

1. இந்து மத ஞானியர் தமது ஆழமான ஆன்மீகப் பார்வையின் மூலம் ஆதார சக்தியொன்றைக் கண்டுணர்ந்தார்கள். இந்தச் சக்தி நமது அகவெளியின் ஆழத்தில் அடிப்படையாக இருக்கிறது. இது பல்வேறு விதங்களில் நம்மிடையே வெளிப்படுகின்றது – சிந்தனையில் சீர்மையைத் தருவதாக, அமானுஷ்ய சக்திகளாக, பாலியல் சக்தியாக, அன்றாட வாழ்வின் திறமைகளாக, ஆன்மீக சக்தியாக – இப்படிப் பல விதங்களில் வெளிப்படும் இந்தச் சக்தியை விவரிக்கும்போது சுருண்ட நிலையில் இருப்பதை அகவெளியின் ஆழத்தில் இருக்கும் சக்தியாக விவரிக்கின்றனர். விழிப்படைந்த நிலையில் இருப்பதை வெவ்வேறு குறியீடுகள் மூலம் விவரிக்கின்றனர். வஜ்ராயுதமாக (மின்னலைப் போன்ற சக்தி), படமெடுத்த நாகமாக என்றெல்லாம் இதை விவரித்தனர் நமது முன்னோர்கள்.
2. இதுகுறித்துச் சொல்லும் விவேகானந்தர், வாழ்வில் திறமைகளை வெளிப்படுத்தும் எவராயினும் – எழுத்தாளர், ஓவியர், கவிஞர், தத்தமது துறைகளில் வல்லுனர்களாக விளங்குபவர்கள் என்று அனைவரிடத்திலும் இந்தச் சக்தி விழிப்படைந்து இருக்கிறது என்கிறார்.



3. இந்தச் சக்தியை விழிப்படையாத நிலையில் சுருண்டிருக்கும் சுழலாகவும் (குண்டலம் – சுருண்டிருப்பது – பெண் தன்மையைக் குறிக்கும் விதமாய்க் குண்டலினி, சுருண்டிருக்கும் பெண் நாகம் என்ற பெயரிட்டு யோக மார்க்கத்தில் அழைக்கின்றனர்), விழிப்படைந்த நிலையில் ஊர்ந்து எழும் நாகமாகவும், மின்னலைப் போன்று விரைந்து செல்லும் இடியாகவும் இன்னும் பலவிதங்களிலும் குறியீடுகளாக, விவரித்து இந்து ஞானியர் மட்டுமல்ல, உலகெங்கும் இருந்த விழிப்படைந்த சான்றோர் இதே குறியீடுகளைப் பயன்படுத்தினர். உதாரணமாக ஆபிரகாமியத் தாக்குதலால் அழிந்துபோன பண்டைய எகிப்து நாட்டில் எழுந்த நாகம், விழிப்புணர்வையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் குறித்தது.


(மேலே கண்ட ஓவியம் இடம் பெற்றிருக்கும் தளம்: http://www.plim.org/2Luciferian.htm Luciferian Worship: It’s beginning in Serpent, Dragon, and Sun Worship. இந்த தளத்தில் மேலை நாட்டினர் தமது புரிதலை மிகவும் அழகாக விளக்கியுள்ளனர். உலகமே இன்று விழிப்படைந்து இந்து மதத்தைப் புரிந்து ஏற்க ஆரம்பித்துள்ளதற்கு அறிகுறி இதுபோன்ற கட்டுரைகள்)
(எகிப்தின் ரா கடவுள் தலையில் இருக்கும் நாகம்)




(எகிப்திய ஓவியங்கள், ஆன்மீக அனுபவ விவரணைகளில் நாகம்)


4. இந்து மதத்தில் கடவுளுடன் இருக்கும் நாகங்கள் இந்தச் சக்தியையே குறிக்கின்றன. சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பாக, விஷ்ணு யோகநித்திரையில் படுத்திருக்கும் படமெடுத்த நாகமாக, அம்மன் தலையில் இருக்கும் நாகமாக எல்லாம் வெவ்வேறு நிலையில் இந்தச் சக்தி குறியீடுகளாகக் காண்பிக்கப்படுகிறது. இது தியானத்தின்போது மனதை அமைதிப்படுத்தவும் (உதாரணமாக கடல், வானம், பனிப்பிரதேசம் போன்றவை மனதை அமைதிப்படுத்த தியானத்தில் பயன்படுத்தப் படுகின்றன), அதற்கு அடுத்த கட்டமாக நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை உருவகிக்கவும், அச்சக்தியுள் இருக்கும் உணர்வு நிலையை பாவனை செய்யவும் (சுருண்ட நாகத்திற்கு நடுவே இருக்கும் சிவலிங்கம், பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், கயிலாயத்தில் பனியிடை தியானிக்கும் சிவன் போன்றவை) தியான சாதனங்களாக இந்தக் குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன.
கடவுளரின் வாகனங்களாக விலங்குகள்

1. அது போலவே வாகனங்கள் தியான நிலையில் ஏற்படும் பல தளங்களையும், அதில் மனம் பிரயாணிப்பதையும் குறிப்பிட பயன்படுத்தப் படுகின்றது.
2. முருகனின் மயில் வாகனம், விஷ்ணுவின் கருடன் போன்ற குறியீடுகள் இதையே குறிக்கின்றன. ஆத்மா விடுதலை பெறுவதையும் சில சமயங்களில் பறவைகள் குறிக்கின்றன.
3. இதுபோன்ற குறியீடுகளை ஏன் என்றே தெரியாமல் ஆபிரகாமிய மதங்களும் பயன்படுத்துவதை உற்று நோக்குவோர் உணரமுடியும். உதாரணமாகப் புறாவாக விரைந்து பறக்கும் பரிசுத்த ஆவி (Holy Ghost) கிறிஸ்துவத்தில் உள்ளது. இது பெண் தன்மையினைக் குறிக்கும் அதே சக்தியின் வடிவம்தான். கிறிஸ்துவத்துக்கு முன்பு பரவியிருந்த மதங்களை அழித்துவிட்டுக் கிறிஸ்துவம் பரவினாலும், அப்போதிருந்த இந்த குறியீடுகள் ஆதரவாளர்களை சேர்க்கவென்று கிறிஸ்துவர்களால் சேர்க்கப்பட்டு பின்னாளில் மதத்தில் சேர்ந்து கொண்டுவிட்டது.



(விழிப்படைந்த ஆத்மா பறப்பதை குறிக்கும் எகிப்திய ஓவியம்)



(கிறிஸ்துவம்: புறா வடிவில் சித்தரிக்கப்படும் பரிசுத்த ஆவி)

4.அது போன்றே புராக் என்ற வாகனத்தில் இஸ்லாத்தின் இறைத்தூதர் விண்மண்டலப் பயணத்தை மேற்கொண்டதாக அறியாத அரபி மக்களிடையே ஒரு கதை உண்டு. இதெல்லாம், அறியாவிட்டாலும் ஆபிரகாமிய மதங்களில் சிக்குண்டோரும் எதோ ஒருவிதத்தில் இந்தக் குறியீடுகளை அறிந்துள்ளதையும், தம்மையும் அறியாமலேயே தெளிவில்லாத நிலையில் அவற்றைப் பின்பற்றுவதையும் குறிக்கிறது.


(இஸ்லாம்: நபிகள் அகவெளியில் புராக் வாகனத்தில் பிரவேசிப்பதைக் குறிக்கும் ஓவியம்)


6. எனவே விலங்குகளின் குறியீடுகள், விலங்குகளின் விவரணைகள் எல்லா மதங்களிலும் இருந்தாலும், இந்து மதத்தில் மட்டுமே அது விரிவான ஆராய்சியின் விளைவாகவும், புரிதலோடும், ஆன்மீகப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான நிலையிலும் விவரிக்கப்படுகிறது, வழிபாட்டின் பகுதியாக இருக்கிறது.
இதெல்லாம் புரியாமல் வணங்குகிறோமே?

1. “இதெல்லாம் எத்தனை இந்துக்களுக்கு புரியும்?” என்ற கேள்வி உடனடியாக படிப்பவர்களின் மனதில் எழலாம். இதெல்லாம் அறிவுநிலையில் புரியாவிட்டாலும், யாரும் போதிக்காவிட்டாலும் உணர்வு நிலையில் இவை தியானத்திலும், ஆன்மீக அனுபவங்களிலும் பேருதவி புரிகின்றன.
2. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர். டெம்பிள் க்ராண்டின்(Temple Grandin) என்றொரு பேராசிரியர் எழுதி மிகவும் பிரபலமான நூலின் தலைப்பு, ‘விலங்குகள் நம்மை மனிதர்களாக்குகின்றன’ (Animals make us Human) என்பதாகும். அவர் விலங்குகள் எப்படி நுண்ணுணர்வு கொண்டிருக்கின்றன என்பதையும் அவற்றுடன் பழகும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் விவரிக்கின்றார்.
3. விலங்குகளுடன் பழகும்போது நம்முள் இருக்கும் மானுடம் விழிப்படைவதைப் போல, குழந்தைகளுடன் இருக்கும்போது நம்முள் இருக்கும் கனிவான மனம் வெளிப்படுவதைப் போல, விலங்குகள் – பறவைகள் – இயற்கை ஆகியவற்றுடன் கடவுளை வணங்கும்போது, தியானம் செய்யும்போது நமது மனதின் மென்மையான, இனிமையான, நற்குணங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிகள் வெளிப்பட்டு ஆன்மீக மறுமலர்ச்சியை நம்முள் அது ஏற்படுத்துகின்றது. ஆன்மீக சாதகர்கள் கடவுளை பெண்ணாக, விலங்குடன் கூடிய உருவமாக வழிபடும்போது அவர்களின் மனதில் இருக்கும் இருண்ட பகுதிகள் ஒளிபெறுவதால், ஆன்மீக ரீதியாக கிடுகிடுவென முன்னேற முடிகிறது.
4. உலகிலேயே வன்முறை என்பது மிகக் குறைந்த அளவில் நிகழ்த்தப்பட்டது இந்து மதத்தால் மட்டுமே. அமைதியை போதித்த புத்த மதத்தவர்கள் கூட வரலாறு நெடுகப் பெரும் படுகொலைகளை செய்துள்ளனர், ஆபிரகாமிய மதங்களை பற்றி நான் இங்கே அதிகம் சொல்ல வேண்டியதில்லை – அனைவருக்கும் தெரியும் அவை பரவிய இடங்களில் எல்லாம் நிகழ்த்திய வன்முறைகள்.
5. இந்த இந்து மதத்தின் மென்மை விபத்தாக நிகழ்ந்தது அல்ல. இதற்குப் பின்னால் நமது ஞானிகளின் தரிசனங்களில் கிட்டிய மத வழிபாட்டு முறை காரணமாக இருக்கிறது. அவற்றுள் ஒரு பகுதியே விலங்குகளையும், இயற்கையையும் வழிபாட்டின் அங்கமாக ஆக்கியது.
6. மேலே கண்டவற்றை விளக்கியவுடன் நண்பர், ‘ஓ இத்துணை ஆழமான விஷயங்கள் இந்து மதத்தில் இருக்கின்றனவா’ என்று சொல்லிவிட்டு அவரது பூர்வீக ஸ்காண்டிநேவிய வழிபாடுகளிலும் இது போன்றவை இருந்ததாகவும் ஆபிரகாமிய வன்முறை நெறிக்கு அவர்கள் ஆட்பட்ட காலகட்டத்தில் அவை மறைந்ததையும் நினைவுகூர்ந்து, இந்த வன்முறை நெறிகளுக்கு அடிபணியாமல் ஆயிரமாண்டுகளாக அசையாத உறுதியுடன் இருந்து தொன்மையான ஞானத்தை இந்த நவீன காலத்தில் எடுத்துக் கூறும் இந்து மதத்தைப் புகழ்ந்து, “இந்து மதம் அழியாமல் விளங்குவதால் தான் இதெல்லாம் எங்களுக்கு இப்போது புரிகிறது. அழிந்திருந்தால் விளக்கிச் சொல்வதற்குக் கூட ஆளில்லாமல், இந்த ஆபிரகாமிய மனமயக்கம் சொல்வதே உண்மை என்று நம்பும் நிலைக்கு மனித குலம் தள்ளப் பட்டிருக்கும்” என்றார்.


தமிழனின் கணிதமும் கணிப்பும்

தமிழனின் கணிதமும் , கணிப்பும் !!!!

🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.
🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் இலெமுரியாகண்டம் ....
மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!
தமிழன்டா..........
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
கண்டிப்பாக படித்து பகிரவும் ....
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

அகத்தியர் பிறப்பும் !!!! அவரின் சிறப்பும் !!!!


                 திரு.அகத்தியர் .

உலகில் முதன் முதலில் தோன்றிய மனித இனம் " குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் ". இவை உலகமே அறிந்தவை.
இன்றை வெளிநாட்டு அறிவியல் வல்லுனர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இலெமுரியா கண்டம் என்று அழைக்கிறார்கள்.
இப்பெயர் வந்து 1000 ஆண்டு தான் ஆகிறது.
ஆனால் குமரிக்கண்டம் 20000 ஆண்டுக்கு முன்பே எழுதிய தொல்காப்பியம் , அகநானூறு , புறநானூறு போன்ற நூல்களில் குமரிக்கண்டத்தின் பெருமைகளையும் ,சிறப்புகளையும் ஓலைசுவடிகளில் எழுதியுள்ளனர்கள்.

உலகில் முதன் முதலில் தோன்றிய முதல் மனிதர் அகத்தியர்.
இவர் இறைவனாகிய சிவபெருமானின் அருளில் தோன்றியவர். ஆங்கிலத்தில்
one thousand crore  ஆயிரம் கோடி
1,000,00,00,000  ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர்.

அகத்தியர் தான் சித்தமருத்துவத்தையின் தந்தை !!!!
இவரின் சித்தமருத்துவம் சீனர்களும், தாய்லாந்து , சிங்கப்பூர் , மலேசிய , இந்தியா , தமிழ் நாடு போன்ற நாட்டு மக்களும் பயன்படுத்துவது
 இன்றும் பிரபலமானது தான்.
இவர் தான் தமிழ் மொழியின் தந்தை.
தமிழ் மொழி எழுத்துகளை உருவாக்கியவர் இவர் தான்.
கடவுளின் மொழி பூலோகத்திற்கு பரப்பியது இவரே !!!!

மனிதன் பிறப்பிற்கு முன்பே தமிழ் பிறந்து இருக்கும் என்று இன்றைய வெளிநாட்டு அறிஞர்களும் , ஆய்வாளர்கள் கூறிகிறார்கள்.
இதை அன்றைய காலத்து புலவர்கள் ஆகிய திருவள்ளுவர் காலத்திலும் இந்த கேள்விகள் எழுப்பியதாம். ஆனால் இதற்கான பதிலை , இவருக்கு முந்தைய காலகட்டத்தில் அகத்தியர் முனிவரிடம்  சாமானிய மனிதர்கள் தமிழ் எப்படி உலகிற்கு வந்தது என்று கேட்டுக்கிறார்கள். 
அதற்கு அனைவருக்கும் கூறிய ஒரு பதில் தமிழ் கடவுளின் மொழி என்றும் , 
மனிதர்கள் பிறப்பிற்கு முன்னே தமிழ் பிறந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இவர் யுகத்திற்கு முன்பே வாழ்ந்தவர்.
யுகத்தை கணித்தவரும் இவர் தான்.
அகத்தியர் என்னும் மாமுனிவர்
இவர் அனைத்து யுகத்திலும் வாழ்ந்து இருக்கிறார்.
இதற்கான ஆதாரம் .

யுகம் என்பது இந்துக்களின் கால கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. யுகங்கள் ஐந்து வகைப்படும். அவை:

* கிருத யுகம்.
*திரேதா யுகம்.
*துவாபர யுகம்.
*கலியுகம்.
*சத்திய யுகம்.

கிருத யுகம் - அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 5 அடி உயரமும்,840 வருடமும் வாழலாம்.
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 616 வருடமும் வாழலாம்.
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், 300 வருடமும் வாழலாம்.
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 வருடம் வாழலாம்.

இன்று நாம் வாழ்வது கலியுகத்தில் !!!!!
இன்னும் ஒரு யகம் இருக்கிறது. அது தான்  " சத்திய யுகம் ".

சத்திய யுகம்- இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைகுணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.இதன்காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்றுகுவித்து மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்று கூறப்படுகின்றது.

இந்த 5 யுகத்திலும் அகத்தியர் வாழ்வது இயற்கை அதிசயம்.
இவர் இந்த யுகங்களை கடக்க ஒரு பானையை பயன்படுத்துகிறார் என்பது ஒரு புதிர்களாக விளங்குகிறது.
இன்று வரை கண்டறியபடாத Time machine என்னும் கால இயந்திரம் தான் அகத்தியரின் பானை !!!!
இதை உருவாக்க
இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தில் இயற்பியல் வல்லுனர்களும் குழப்பம் காணும் ஒரு மர்ம்மாகவே இருக்கிறது.
காலத்தை கடக்கும் இயந்திரம் போல எவ்வாறு அந்த பானையை பயன்படுத்துகிறார் என்பது இன்றை காலம் வரை கேள்வி குறியாக உள்ளது.
இன்றுவரை பொதிகை மலையில் இறுதியாக இருந்த அகத்தியர் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விட்டார் என்பது தகவல் தவிர !!!
மரணித்து விட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
இவர் இன்றும் நம்முடைய யுகத்திலும் வாழ்கிறார்.


பகுப்பு முறை !!!!

இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,

பெரும் பிரிவு தொகு
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.

கல்பங்கள் தொகு
வாமதேவ கல்பம்
ஸ்வேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருஷ்ண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரஸ்வத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தத்புருஷ கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராஹ கல்பம்
வைராஜ கல்பம்
கெளரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்
தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் மூல
பதினெண் சித்தர்கள்  48
வகை கடவுள்களுடனும், 48
வகை வழிபடு நிலையினர்களுடனும், 48
வகை சித்தர்களுடனும் இந்த
பூமிக்கு ஒரு சிவராத்திரி அன்று வந்து இறங்கினர்.
இம் மண்ணுலகில் பயிரினங்களும்
உயிரினங்களும் தோன்றி பின்
மனிதர்களும் தோன்றினார்கள்.
இந்த இடம் தான் குமரிக்கண்டம்.
இதை தான் என்று இலெமுரியா கண்டம் என்று அழைக்கிறோம்.

நிலப்பகுதியின் எல்லைகளுக் கேற்ப
உருவான நாட்டு பிரிவுகளால் 1000 க்கும்
மேற்ப்பட்ட நாடுகளில் வசித்து வந்தனர்.
இத்தகைய பெரும் கண்டத்தில் தமிழன் ஆண்டான் என்பது சரித்திரத்தின் தமிழனுக்கு ஒரு புகழாக விளங்க வழிவகுத்து உள்ளது வரலாறு.

இந்து என்பது மதம் அல்ல !!! இந்து என்பதின் பொருள் இயற்கையை கடவுள் என்பதாகும்.
சனாதன தர்மமாகிய ஹிந்து சமய முறை இது.
இன்றைய மனிதர் மதவெறிகளை உண்டாக்கவே இதை மதமாக சித்தரிக்கப்பட்டள்ளது.
அன்றைய மதங்கள் அனைத்தும் அதை ஏற்றுக்கொள்ளப்பட்டள்ளது.
இந்துவில் இருந்தே புத்தம் , யூதம் , கிறிஸ்துவம் ,இஸ்லாம் , ஆகிய மதங்கள் உருவாகி உள்ளது.


குமரிக்கண்டத்தில் உள்ள  இந்து ஆற்றின் வாயிலாக தான் பெரும் வர்த்தக சந்தைகள் நடைபெறும் என்பதால் தான் இதை இந்து நாடு என்றார்கள் !!!!
காலப்போக்கில் இந்து நாடு என்பது இந்திய நாடாக வழக்கிற்கு மாறியது.

இந்த குமரிக்கண்டம் என்னும் இலெமுரியா கண்டத்தில் தென்
இமயமலையின் அடிவாரத்தில் தென்
இந்து ஆறு, தென் யமுனை ஆறு, தென்
கங்கை ஆறு என்ற மூன்று ஆறுகளும்
கூடிய முக்கூடல் பகுதியில் மருத மரக்
காடுகள் நிறைந்த பகுதியில்
அமைக்கப்பட்ட மாநகர்தான் "மருதை".
இது மிகவும் குளிர்ச்சியுடைய நகரமாக
இருந்ததால் " ஆலவாய்த் திருநகர் "
(பனிக்கட்டி மிகுந்த மலையின் அருகில்
இருக்கும் மாநகர்) என்றும்
அழைக்கப்பட்டது.
இதேபோல் பருளி ஆற்றங்கரையில் "தொன்
மருதை " என்ற நகரும்,
குமரி ஆற்றங்கரையில் "தென் மருதை "
என்ற நகரும், வைகை ஆற்றங்கரையில்
"மருதை" என்ற நகரும் உருவாக்கப்பட்டன.

இங்கிருந்துதான் முத்தமிழும், சித்தர்
நெறி என்னும் சீவ நெறியாம்
இந்து மதமும்
மக்களுக்கு அருளப்பட்டன..

இம்மண்ணுக்கு வந்திட்ட பதினெண்
சித்தர் குழுவின் தலைவரான
ஆதி சிவனார் (அனாதி சிவனார் என்பவர் சிவபெருமானின் தீவிர அடியேன். அனாதி சிவனார்
முத்தமிழையும், இந்து மதத்தையும்,
இந்து வேதத்தையும் இந்த
மண்ணுலகுக்கு அருளி இந்துமத
ஆண்டு என்ற
காலக்கணக்கை ஆண்டு கணக்காக
தோற்றுவித்தார்.
இந்துமத ஆண்டு கணக்கு...(ஆண்டு
களில்)
 * முதல் யுகமான " கீரன் உகம் " என்னும்
  கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்.

* இரண்டாம் யுகமான " தீரன் உகம் " என்னும் திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்.

* மூன்றாம் யுகமான  " தூரன் உகம் " என்னும் துவாபர யுகம் - 864,000 வருடங்கள்

*நான்காம் யுகமான " கலியன் உகம் " என்னும் கலியுகம் - 432,000 வருடங்கள்.
[ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]

இதில் தற்போது 2018 வரை கலியன் உகம் 5119
ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆக
இதுவரை 38,93,194
ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சிவனார்
அவர்களின் தலைமையில் மூலப்
பதினெண் சித்தர்களால் முத்தமிழும்,
இந்து வேதமும், இந்து மதமும் இந்த
மண்ணுலகுக்கு அருளப்பட்டன.
ஆக....

இந்த இந்து வேதமும், இந்து மதமும்
அருளுலகின் அருளாட்சி மொழியாம் அமுத
தமிழில்தான்
அருளப்பட்டது அன்றி சமசுகிருதத்தில்
அல்ல என்பது உண்மை.

நம்மிடம் இருக்கும் அனைத்து விதமான
அருள் நிலைகளையும், நலன்களையும்,
வளங்களையும் நாம் சமசுகிருததிற்கு
விட்டுக்
கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தாய் ,தந்தை என்னும் தமிழ் மொழியில் இருந்தே சமசுகிருதம் முதல் இன்றைய
உலகில் உள்ள 196 நாடுகளில் இருக்கின்ற 7,102 மொழிகளும் தமிழ் மொழியின் குழந்தைகளே !!!!!
அன்று குமரிக்கண்டத்தில்
உள்ள  1000 நாடுகளின் தாய் மொழியே தமிழ் தான் அதிசயம்.
இன்றை நாடுகளின் எண்ணிக்கையில் தமிழ் இன்றுவரை நீடிப்பது என்பது வியக்கத்தக்க உண்மையாக  கருதப்படுகிறது.
உலகை ஆண்டாக தமிழின் மொழி என்னும் கடவுளை இன்றை சமூகம் அவமானமாக கருதுவது துயரத்தை ஆழ்த்திகிறது.
வணங்கவும் , மதிக்காவிட்டாலும் சரி !!!
ஆனால் தயவுசெய்து அவமதித்து விட்டாதீர்கள்.
முத்தமிழ் கடல் என்றால் சமசுகிருதம், ஆங்கிலம், சீனம்  போன்ற அனைத்து மொழிகளும்
ஒரு அலை மட்டுமே என்பதை மறவாவீர்.

      அறிவியலின் தேடலும் மேலும் தொடரவும்.

தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

                 " வலியே வலிமை "
             -ஐய்யனார்(வால்வரின்)

Saturday, 24 March 2018

கரிகாலனின் கல்லணை !!!


கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.




கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.


இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2][3][4] தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை] மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.[5]

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.

கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.

முதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூடத்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது. காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லணை வண்டல் மண் அணையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. கி.பி.1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆனால் வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாக காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதுவும்தான். அதன் அருகே வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தது.

ஆங்கிலேயப் பொறியாளர்கள் மூலத்திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர். பல தசாப்தங்களாக வண்டல் மண் பிரச்சினையுடன் போராடினர். ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் எழுதுகிறார் (Baird Smith, 1856); "கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மண்ணுடன் ஒரு இடைவிடாத போராட்டம் இருந்தது. ஆற்றின் பல பகுதிகளில் இருந்து ஆட்களை வைத்து தூர் வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. எனினும் எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. ஆற்றின் படுகை தொடர்ந்து ஏற்றம் கண்டது."

நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த கல்லணையை 1776-ல் செய்யப்பட்ட ஒரு பதிவில் இருந்து உய்த்துணர இயலும். இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது. அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது - கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது - சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை....

வர்மக் கலை

வர்மக் கலை.
============
வர்மம் – ஆதித் தமிழன் படைத்த
அற்புதமான கலைகளில் ஒன்று...
வர்மம் , ஆதித் தமிழன் படைத்த
அற்புதமான கலைகளில் ஒன்று .
இன்று உலக நாடுகள் எதிரியை
அழிக்க கோடிகளைக் கொட்டி
அணுகுண்டு தயாரித்துக்
கொண்டிருக்கும் வேளையில் ,
இருக்கும் இடத்திலே இருந்து 1000
கிலோமீட்டர் அப்பால் உள்ள
எதிரிகளை எந்த ஆயிதமும் இல்லாமல்
தாக்கக் கூடிய ஆபூர்வக் கலைகள்
படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு
தெரியுமா ? இந்த வர்மம் கலை ஒரு
கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம்
போதாது . அதனால் சுருக்கமாக
சிலவற்றை மட்டும் உங்களுக்கு
தெரிவிக்கிறேன்.
இந்த கலையை உருவாக்கியவர்
சித்தர்களில் தலை சிறந்தவரான
அகத்தியர் .
இது உருவான இடம் பொதிகை
மலை .
” தென் பொதிகை நாதன்
துணையால் பாடி வைத்தேன்
முறை நன்றமே “.என்ற கி .மு வில்
எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி
வரியே இதற்கு சாட்சி !
அகத்தியர் கற்பபித்த வர்மகலைகளில்
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் ஊசி முறை வர்மம்
• அகத்தியர் வசி வர்மம்
• வர்ம ஓடிவு முறிவு
• அகத்தியர் வர்ம கண்ணாடி
• வர்ம வரிசை
• அகத்தியர் மெய் தீண்டாகலை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை .
“ஜடாவர்மன் பாண்டியன் ” என்ற மன்னன்
தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான் .
பின்னர் பாண்டிய இனம்
அழியத்தொடங்கியதும் , இந்த
கலையும் ஆழியத் தொடங்கியது.
இதற்கு பின்னர் வந்த ” சோழர்கள் ”
இதனை கற்றனர் .

பின்னர் , இத கலை இலங்கை , சீனா
போன்ற நாடுகளில் பரவத்
தொடங்கியது .காஞ்சியில் வாழ்ந்த
போதி தர்மர் என்ற துறவி புத்த
மதத்தை பரப்ப சீனா செல்லும் போது
இந்த கலையும் அங்கு பரவியது .
டெண்ஜிக்கு நரநோககு என்ற சீன
வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தால் ” the fighting techniques to train
the body from india ” என்ற பொருளை
தருகின்றது .” ஹீ ஷிஹ” என்ற
அமெரிக்காவுக்கான சீன தூதர் ”
இந்தியா
ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு
அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள்
சீனாவை ஆண்டுள்ளது ” என கூறி
உள்ளார் . 1793 இல் வெள்ளையர்கள்
இந்தியா மீது படை எடுக்கும்
போது , தாங்கள் இந்த கலை
மூலமாக பாதிக்கப் படக்கூடாது
என்பதற்காக தமிழக இளைஞர்களை
இந்த கலை பயில்வதை தடை
செய்தனர் . அன்று ஆரம்பமான இந்த
கலையின் அழிவு , இந்தியா
சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !
இந்த கலையானது அனைவருக்கும்
கற்று தர மாட்டது . இதன் ஆசிரியர்
தன் மாணவனை 12 வருடங்கள்
அவனுடைய பழக்க வழக்கங்களை
கண்காணித்த பிறகே கற்று
தருவார் ! இந்த கலையின் மூலம்
ஒருவர் தாக்கபட்டால் இதற்கென்று
தனியான சிகிச்சை முறை
கையாள வேண்டும் என “ அப்பனே
வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து
கற்று பின் வரிசையுடன் பின் வர்ம
இலக்கு செய்யே “ என்ற வரிகள்
தெரியப்படுத்துகின்றன. இதை எந்த
வயதினரும் கற்கலாம் !

வர்மக் கலைகளின் வகைகள்
• தொடு வர்மம்
• தட்டு வர்மம்
• நோக்கு வர்மம்
• என வகை படுத்தப்பட்டுள்ளது ,
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர்
உடனடியாக இதன் பதிப்பை உணர
மாட்டார் . இதை உணர்வதற்குள்
இவருக்கு சிகிச்சை செய்தாக
வேண்டும். இந்த பாதிப்பானது ஒரு
மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ,
ஒரு மாததிலோ, அல்லது
வருடக்கணக்கில் கூட இருக்கும்!
படுவர்மத்தால் தாக்கப்பட்டால்
சிலமணி நேரத்துக்குள் பதிப்பு
உணரப்படும். இதற்கு சிகிச்சையும்
இந்த காலத்திற்குள் செய்தாக
வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும்
கற்று தரப்படமாட்டாது. இது
மிகவும் மோசமான பிரிவு. ஆசான்
மனது வைத்தால் மட்டுமே இது
நடக்கும். நோக்கு வர்மம் தான்
அனைத்திலும் உச்சமானது
யாரையும் தொடாமல் கண்
பார்வையாலேயே தாக்கி
உயிரிழக்க வைக்க முடியும்!

உதாரனத்திற்கு சென்னையில்
உட்கார்ந்து கொண்டு மதுரையில்
இருப்பவரின் எல்லா நோய்களையும்
குணப்படுத்தாலம் ! ஒரே சமயத்தில்
எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு
பேரை தாக்கும் வல்லமை
கொண்டது இந்த கலை, ஆனால் இது
யாருக்கும் கற்று தர படமாட்டாது.
ஆசான் தன் மாணவன் ஒழுக்கமானவன்
என முடிவு செய்தால் மட்டுமே
இதை கற்காலம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு
புண்ணியம் செய்திருக்க வேண்டும்
என்று தான் என்க்கு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய
விடாமல் பாதுகாப்பது ஓவ்வொரு
தமிழனின் கடமை. இனியாவது
விழித்துக்கொள்வோம் !!

உலகின் புகழ்வாய்ந்த இனங்கள்
அனைத்தும் வீர சாகசங்களால்
மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம்
குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும்
கொற்றம் அமைத்துக்
கோலோச்சியதாக வரலாறு இல்லை.
பகைவரிடமிருந்து தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளும்
உணர்வோடு, உலகின் ஒவ்வோர்
இனமும் வீர விளையாட்டுக்களு
க்கான வியூகங்களை வகுத்துக்
கொண்டன. ஐம்புலன்களையும்
அடக்கி, உடலையும் மனதையும் ஒரு
கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க
வேண்டிய அவசியத்தை உணர்ந்த
மனித இனங்கள், உயிர்காக்கும்
தற்காப்புக் கலைகளையும்
உருவாக்கி, அவற்றைப் பேணிடும்
வகையில் பாசறைகள் அமைத்துப்
பயிற்சிகள் மேற்கொண்டன. இதில்
தமிழினமும் அடங்கும்.

“வாளொடு முன்தோன்றி மூத்தக்
குடி” என்னும் செவ்விய கூற்று,
தமிழ் இனத்தை ஒரு வீரப்
பரம்பரையாகவும், தமிழ் மண்ணை
ஒரு வீரத்தின் விளைநிலமாகவும்
சித்தரிப்பதாகும். தற்காப்புக்
கலையில் தமிழ் இனம்
தழைத்தோங்கியிருக்கிறது
என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே
தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த
முரண்களரி வரிமணல்” என்ற
பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று,
தமிழனின் போர்த்தொழில்
வித்தைகள் பற்றிய குறிப்புக்கள்
தருகின்றது. தொல்காப்பியம்,
பதிற்றுப் பத்து, புறப்பொருள்
வெண்பாமாலை, திருமந்திரம்
ஆகிய நூல்களிலும் தமிழனின்
தற்காப்புக்கலை அங்கங்கள்
விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தப் போர்த்தொழில்
வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு,
தமிழினம் அறிந்துவைத்திருந்த
“வர்மம்” என்னும் தர்மம், உலகில்
வேறெந்த இனத்திடமும் காணப்படாத
ஓர் அதிசயக் கலை என்பதை அறியும்
போது, செந்தமிழ்ப் பரம்பரையின்
ஒவ்வோர் உயிரும் செம்மாந்து
நிற்கிறது. சித்தர் பெருமக்களின்
செய்தவத்தால் நமக்குக்
கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை,
யுகம் யுகமாக நம் மூதாதையர்கள்
ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த
உண்மைகளின் தொகுப்பாகும்.
தமிழனுக்குச் சொந்தமான இந்த
அரிய கலையின் அற்புதப்
பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே
பெருமளவில் அறியாதிருப்பதுத
ான் புரியாத புதிராக
இருக்கிறது. இன்னொரு புறம்,
வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத
பழங்கலை என்றெல்லாம் தமிழ்
மக்களே கேலிபேசிக்
கொண்டிருப்பது தாங்கொணாத
வேதனையாக இருக்கிறது.

அந்த வேதனைக்குக் கடுகளவேனும்
விடிவுகாணும் முடிவுதான்
இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.
“வர்மம்” வடமொழியா?
---------------------------------------
தமிழின் வரலாறும் சொல்வளமும்
அறியாத சிலர் “வர்மம்” ஒரு
வடமொழிச் சொல் என்றும் வர்மக்
கலையானது சமஸ்கிருத
நூல்களிலிருந்துதான் தமிழுக்குப்
பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.
மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற
கொள்கையுணர்வு இங்கே நமக்கு
மிகமிகத் தேவைப்படுகிறது.
அத்தோடு, இலக்கண விதிகளையும்
விளக்கங்களையும் ஊடகமாக
வைத்து இதை நாம்
அணுகவேண்டிய அவசியமும்
ஏற்படுகிறது.

தமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று
உண்டு. அச்சொல் நிலைமொழியாக
நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும்.
அந்த நிலைமொழியோடு
வருமொழியாக ஒரு பெயர்ச்
சொல்லை இணைத்தால், அதை
உரிச்சொல் ஆக்கிவிடலாம்
(எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ
வல்லினம்). நிலைமொழி ஒரு
பகுதியாக நிற்க, அதனை
இன்னொரு விகுதியோடு
புணர்ந்திட அனுமதித்தால், அது
பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது,
பகுதி மற்றும் விகுதியின்
இணைப்பால் ஒரு புதிய சொல்
பிறக்கும் என்பது புணரியல் விதி.
இந்த விதியின் அடிப்படையில், “வல்”
என்ற பகுதியோடு “மை” என்ற
(தொழிற்பெயர்) விகுதியை
இணைத்தால் “வன்மை” என்ற
பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை”
என்ற சொல்லுக்கு “வல்லமை”
“வல்லவனாக இருத்தல்” “வலிமை
பொருந்திய செயல்புரிதல்”
என்றெல்லாம் பொருள்விளக்கம்
கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற
சொல்லின் வேறொரு வடிவம்தான்
“வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச்
சொல்லில்கூட “அம்” என்ற ஒரு
தொழிற்பெயர் விகுதிதான்
இணைந்துள்ளது என்பது
கவனிக்கத்தக்கது.

“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச்
சொல்தான் காலப் போக்கில் “வர்மம்”
என மருவியிருக்கிறது என்பது
மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம்
மறுப்பிற்கிடமின்றித்
தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர
ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது
என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக்
களங்களிலே பரவலாகக் காணப்படும்
மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது
‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும்,
‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’
என்று வழங்கப்படுவதும் இதற்கான
சில எடுத்துக்காட்டுக்கள்.
இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’
என்று மருவியிருக்க
வேண்டுமென்பது இலக்கணம்
படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி
விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள்
சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத்
தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு
திகழ்ந்திருப்பதைக் காணுங்கால்,
அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச்
சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால்
விகுதி நிகழ்த்தியிருக்கும்
சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான்
என்பதும் எந்தவொரு
தமிழ்மகனுக்கும் எளிதில்
விளங்கும். வாதத்துக்கெல்லாம்
அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான்.
இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம்
பூசுவதை எப்படிச் சகிப்பது?
சமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள்
இல்லாமல் இல்லை. தமிழனின்
கலைகளையெல்லாம் கபளீகரம்
செய்து தத்தமது மொழிகளில்
புத்தம்புது பெயர் சூட்டிக்
கொள்வதை வழக்கமாகக்
கொண்டிருந்த வடவர் குலம், வர்மக்
கலையையும் விட்டு
வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை
விளக்கி வாக்படேர் என்னும்
சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய
நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா”
என்பதாகும். அந்த நூலின்
தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலு
ம் சரி “வர்மம்” என்ற சொல் எந்த
இடத்திலும் மூலச்சொல்லாக
வழங்கப்படவில்லை யென்பது
குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்”
வடமொழிச் சொல் அல்ல என்பது
தெளிவாகிறது.

இது இவ்வாறிருக்க, தமிழனின்
வர்மக்கலை நூல்களில் வடமொழிச்
சொற்கள் இருக்கிள்றன என்பதையும்
நாம் மறுக்க முடியாது. நட்சத்திர
காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல்,
தட்சிணா வர்மம் போன்றவை
எடுத்துக்காட்டுக்கள். இருப்பினும்,
இவை மிகக் குறைவாகவே உள்ளன.
அதுவும் வடமொழித் தாக்கத்தினால்
வந்து புகுந்துவிட்டவைதான்.
அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள்
நம்வசம் இருந்திருந்தும்,
அச்சொற்களை நம்மவர்கள் கையாள
முடியாத அளவுக்கு வடமொழி
ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது
என்பதைத்தான் இது நமக்கு
உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம்
உலகறிந்த உண்மை. இன்னும்
சொல்லப்போனால் நமது
வர்மநூல்களில் காணப்படுகின்ற
தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில
வடிவமாற்றங்களோடு வடமொழியில்
வாசம் புரிகின்றன என்பதற்கு
ஆதாரங்கள் காட்டலாம்.

பதஞ்சலி முனிவனின்
யோகசாஸ்திரத்தில் காணப்படும்
“சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’
என்பார்கள்) என்பது, நமது
வர்மநூலில் உள்ள “சுழிமுனை”
என்பதன் வடிவமாற்றம் ஆகும்.
‘சுழிமுனை’ என்னும் சொல், நம்
உடலில் உள்ள மிக முக்கியமான
இரண்டு உயிர்நிலை
முடிச்சுகளைக் குறிப்பதாகும்.
“சுழிமுனைகள் இரண்டுண்டு”
என்று நமது தமிழ் வர்மநூல்கள்
குறிப்பிடுகின்றன. அதாவது,
ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச்
சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத்
தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச்
சொல்தான் ‘சுழிமுனை’.
அதைத்தான் வடவர்கள் எடுத்து
வைத்துக்கொண்டு “சூஷ்மனா”
என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட
“சுழியம்” என்ற தொழிற்பெயர்
வடிவம் கொண்டு, இப்போது
பரவலாக இதர இந்திய மொழிகளில்
“சூன்யம்” என்று வழங்கப்பட்டு
வருவதை யார்தான் மறுக்க
முடியும்? இதே “சுழி” எனும்
சொல்தான் “ணநசழ” என்று
வழங்கப்படும் ஆங்கிலச்
சொல்லுக்கும் நதிமூலம் என்பது
சொற்பிறப்பியல் வரலாற்றில்
கிடைக்கும் இன்னொரு சுவையான
தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச்
சொற்கள் பிறமொழிகளுக்கு
இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ
மாற்றங்களுடன் குடிகொண்டிருக்க
ின்றன என்னும் பேருண்மை
நாளுக்கு நாள் ஆதாரங்களுடன்
வலுவடைந்து வருகிறது.
வர்மமும் கிரேக்கமும்!
கிரேக்கமும் திராவிடமும்
பழங்காலத்தில் கடல்வழித்
தொடர்புகளால் நெருக்கமாக
இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த
தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம்
உள்வாங்கிக் கொண்டது என்பது
காலச் சுவடிகளில் காணும் பதிவு.
அப்படி கிரேக்கம் உள்வாங்கிக்
கொண்ட எத்தனையோ தமிழ்ச்
சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”.
“வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில்
“Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy”
என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி
வருகிறது. “வ” என்பதில் இருக்கும்
“ஏ” உச்சரிப்பு, மேனாட்டு
மொழிகளின் புணரியல் இலக்கண
(Declension) மரபுகளின்படி “கு”
ஓசையைத் தழுவுகின்றது
என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டு
க்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என
மாறும் போதும், “Leave” என்ற
நிகழ்காலச் சொல் “Left” என்ற
இறந்தகாலச் சொல்லாக மாறும்
போதும் “V” ஓசையானது “F”
ஓசையாக மாறியிருப்பது காண்க.
அவ்வண்ணமே Varma-வும் Pharma
ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!
இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற
சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக்
கலையையும் வழங்கியிருக்கிறது
என்பது வரலாற்று அறிஞர்கள்
தெளிந்துரைக்கும் முடிவு.
“தெற்கன் களரி” என்னும் பெயரால்
அறியப்படும் திராவிடர்களின் இந்த
வர்மக் கலைதான் சீனம் வரை
சென்றது என்பதற்குச் சரித்திர
ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு
நாடுகளில் பௌத்தம் பரவிய
வேகத்தில், தமிழனின் வர்மக்
கலையும் கூடவே பயணம் சென்று,
வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி
கண்டுப் பொலிவடைந்தன என்பதைத்
தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே
தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.
தற்காப்புக் கலையைப்
பொறுத்தமட்டில், சீனம்
நெடுங்காலமாகவே சிறந்து
விளங்கியிருக்கிறது. அங்கும்
அடிமுறை ஆசான்மார் பெரும்
அரசியல் ஞானிகளாகக்
கோலோச்சியிருப்பது வரலாற்றில்
பதிவாயிருக்கிறது. தற்காப்புக்
கலையில் சீனம் எந்த அளவுக்குப்
பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும்
கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களி
ல் வசிக்கும் அடிமுறை ஆசான்மார்
தற்காப்புக் கலையைச் “சீனாடி”
என்று குறிப்பிடுவதுண்டு.
சீனாவில் வேரூன்றியிருக்கும்
குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத்
தூரக்கிழக்கு நாடுகளின்
தற்காப்புக்கலைப் பிரிவுகளான
ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ
ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது
தமிழனின் களரிதான் என்பதற்குச்
சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள்
வைத்திருக்கின்றது. இந்தச்
சாட்சியங்கள் யாவும் மூத்த
தமிழ்க்குடியின் புகழை
முரசறைந்து நிற்கும் சத்தியங்கள்
என்பதில் சந்தேகம் இல்லை.
வர்மத்தின் அதிசயங்கள் !!
-------------------------------------------
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ
மருத்துவ உத்திகளிலோ இல்லாத
அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே
சில உண்மைகளைச் சுருக்கமாகக்
கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:
*ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும்
மூன்று அடிமுறை உத்திகளும்
தமிழனின் வர்மக்கலையில்
இருப்பதுபோல் வேறெந்தத்
தற்காப்புக் கலையிலும் இல்லை.
*வெட்டுக் காயங்ளிலிருந்து
பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும்
போடாமலேயே வர்ம நரம்புப்
பிடியால் கட்டுப்படுத்தி
நிறுத்திவிட முடியும்.
*ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை
எந்தவித மருந்தும் இல்லாமலேயே
வர்மக்கலையின் தடவுமுறைகளால்
உடனடியாகச் சரிசெய்துவிட
முடியும்.

*ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய
நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம
அடங்கல் கொண்டு நாலைந்து
நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
*நட்போடு கைகுலுக்குவது
போலவோ, பாசத்தோடு
கட்டியணைப்பது போலவோ
நடித்துக் கொண்டு பகையாளியைப்
பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம்
அறிந்தவனுக்கு முடியும்.
*மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று
மரணப்பிடியில் கிடப்பவனையும்
வர்மக் கலையின் உயிர்நிலை
நாடிகளைப் பயன்படுத்தி உடனே
எழுப்பிவிட முடியும்.
மேற்கூறிய உண்மைகளைச் சிலர்
நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம்.
ஆனால் வர்மக் கலையின்
அரிச்சுவடிகளையேனும் அறிய
நேரிடுபவர்க்கு அங்ஙனம்
மறுக்கவோ நகைக்கவோ இயலாது
என்பது திண்ணம். வர்மத்தின்
அதிசயங்களை அறிவார் மட்டுமே
அறிவார்.
இத்தகைய அறிவியல் வளர்ச்சி
இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே
குறிப்பிட்ட நவீன முறைகளை
விடவும் நேர்த்தியான,
செலவில்லாத ஒரு வைத்திய
முறையாக வர்மக் கலை
விளங்கியிருக்கிறது என்பது
நமக்கு கிடைத்திருக்கும்
நூல்களின் வாயிலாக அறிய
முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த
தகவல்கள் நமக்கு முழுமையாக
கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள்
அழிந்து போயிருக்கலாம், அல்லது
அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே
கருதத் தோன்றுகிறது.
தற்போது நமக்குக்
கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...
ஒடிவு முறிவு சாரி
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம காண்டம்
வர்ம பீரங்கி
வர்ம சூடாமணி
இந்த கலை அழிந்து போனதற்கும்
இந்த கலையின் சிறப்பே கூட ஒரு
காரணமாக இருந்திருக்கக் கூடும்.
ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த
ஒருவன் சகல விதத்திலும் தன் சக
மனிதர்களை விட அசாத்திய
திறமைகளைக் கொண்டவனாகி
விடுகிறான். அப்படிப் பட்டவனால்
எதனையும் ஆக்கவும் முடியும்,
அழிக்கவும் முடியும்.
ஒரு வேளை ஆசாபாசங்களில்
சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள்
கையில் இந்த கலை சிக்கி அவர்கள்
தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த
ஆரம்பித்தால் அது சமூகத்தில்
ஆபத்தான விளைவுகளையும்,
முன்னுதாரணங்களையும்
ஏற்படுத்தி விடும் என்று கருதியே,
சரியான மாணவன் கிடைத்தால்
மட்டுமே கற்றுத் தருகிற
கலையாகிப் போனது. சரியான
மாணவன் கிடைக்காவிட்டால் அந்த
குருவோடு அந்த கலை அழிந்து
போக வேண்டியதுதான்.
பலரும் நினைப்பதைப் போல இந்த
கலையினை எளிதில் கற்றுக்
கொள்ள முடியாது. இதற்கு
பல்வேறு கட்டுப்பாடுகளை
சித்தர்கள் வகுத்திருக்கின்றனர்.
போகர் ஒரு பாடலில் சீடனை
தெரிந்தெடுக்கும் வகையினை
இப்படிச் சொல்கிறார்.
"மறைவில் வைப்பதென்றால் மைந்தா
கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன்
றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல்
தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை
மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம்
காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த
தானால்
அப்பனே நிலையறிந்து நூலை
ஈயே"
- போகர்.
குறைந்தது பன்னிரெண்டு
ஆண்டுகள் ஒருவரின்
நடவடிக்கைகளைக் கண்காணித்து
அவரது தகுதியினை சோதித்து
அறிந்த பின்னரே அவருக்கு இந்த
கலையினை கற்றுக் கொடுக்க
வேண்டுமென கூறுகிறார்.
சரியான மாணவனைக் கண்டறிந்த
உடனும் அவருக்கு இந்தக்
கலையினை போதிக்க முடியாது.
இந்தக் கலையினை ஏற்றுக்
கொள்ளும் உடல் மற்றும் மனப்
பக்குவத்தை பெறுவதற்கான
பயிற்சிகளே முதலில் வழங்கப் படும்.
அவற்றில் தேறினால் மட்டுமே
குருவானவர் வர்மக் கலையினை
மாணவருக்கு அருளுவார்.
இதெல்லாம் இன்றைய அவசர
உலகத்துக்கு சாத்தியமாகுமா?
“வர்ம”மெனும் பொக்கிஷத்தின்
வானளாவிய புகழ்பற்றிச்
செருக்கும் செம்மாப்பும்
பூண்டிருக்கும் தமிழினம், அதன்
ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான
விடைதர இயலாமல் தலைநாணி
நிற்கிறது. ஒப்பற்ற
இக்கலைக்கென்று உலகளாவிய
பொது நூல் ஒன்று நம் கையில்
இல்லை என்பது உண்மையிலேயே
வருத்தம் தருகிறது. வர்மத்தைப்
பற்றி வலுவானதொரு இலக்கண
நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா
வரவேண்டிய உன்னத நிலையைக்
தமிழ் அன்னைக்கு நம் முன்னோர்
தரவில்லையே என்ற துயர்மிகுந்த
ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.


சிவபெருமான்தான் இதன் ஆசிரியன்
என்கிறது “வர்ம காவியம்” என்னும்
நூல். அகத்திய முனிவன்தான் இதன்
ஆசிரியன் என்கின்றன சில பண்டைய
செவிவழிச் செய்திகள். அகத்திய
முனிவன் வர்மசாஸ்திரத்தை
சமஸ்கிருத்தில் மட்டுமே
எழுதியதாக மலையாளக்காரர்கள்
வேறு வாதிடுகின்றனர்.
இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய
கூற்றும் உறுதி செய்யப்படாத
வெறும் யூகங்கள் என்பதால்
இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு
நாம் பெருமை தேடிக் கொள்ளவோ
உலக அரங்கில் பீடுநடை போட்டுப்
பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப்
பேசவோ நம்மால் இயலாமற்
போகிறது.
வள்ளுவனும் வர்ம நூலும்!
----------------------------------------------
வள்ளுவன் காலத்தில்கூட வர்மம்
மாண்புற்று விளங்கியிருக்க
வேண்டும். அதற்கான சான்றுகள்
திருக்குறளிலேயே போதிய
அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்”
என்ற சொல்லைக் கையாளுகின்ற
பெரும்பாலான இடங்களிலெல்லாம்
வள்ளுவன் வர்மத்தையும்
வைத்தியத்தையும் சுட்டிக்
காட்டுவதாகத் தோன்றுகிறது.
“ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும்
“நூலோர் வளிமுதலா எண்ணிய
மூன்று” (குறள்: 941) என்றும்
எழுதுகிற வள்ளுவன், வர்மக்
கலையையும் வர்ம நாடிகளையும்
நேரடியாகவே சுட்டிக்காட்டுக
ிறான் என்பது கூர்ந்து நோக்கத்
தக்கது. நமது வர்மச் சுவடிகளில்
கூட “திறமான நூல் எவர்க்கும்
வெளியிடாதே!” என்றும் “பொருள்
வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல்
தா என்று உன்னை ஏய்ப்பர்!” என்றும்
காணப்படுகின்ற வரிகளில் “நூல்”
என்ற சொல் நேரடியாக வர்மக்
கலையைச் சுட்டிக்காட்டத்தான்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே
வள்ளுவனும் அதே பொருளில்
“நூல்” என்ற சொல்லைக்
கையாண்டிருப்பதில் எந்த வியப்பும்
இல்லை. .வர்மம் - தோற்றமும்,
காலமும்!
சித்த மருத்துவ முறையொன்று
நாள்போக்கில் தற்காப்பு
கலையாகி, பின்னர் எதிரிகளை
கொல்லும் போர்க் கலையாக
மாறியது என்றால் அது வர்மம்
என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை,
வன்மை என்கிற தமிழ் பதத்தில்
மருவுதான் வர்மம்.இதனை மர்மம்
என்றும் சிலர் அழைப்பது
உண்டு.போர்க்கலையில் இந்த
முறையினை “நரம்படி” என்று
அழைக்கின்றனர்.
பஞ்ச பூதங்களின் கலவையான நமது
உடலானது பேசிகள், நரம்புகள்
ஆகியவற்றால் பின்னி பினைக்கப்
பட்டிருக்கிறது.இப்படி இவை
ஒன்றோடு ஒன்றாக பின்னிக்
கிட்க்கும் இடங்களை ”உயிர்
நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு
மனித உடலில் 108 உயிர் நிலைகள்
இருப்பதாகவும், அந்த உயிர்
நிலைகளை முறையாக
கையாளுவதன் மூலம் ஒருவரின்
உடலை வலிமையாக்கவும்,
வலுவிழந்து செயலற்றுப் போகவும்
வைக்கும் மிக் நுட்பமான கலைதான்
வர்மக் கலை.
தமிழர்களின் கலையான வர்மக் கலை
அகத்தியரால் உருவாக்கப்
பட்டது.சித்த மருத்துவம் தவிர
ஆயுர்வேத மருத்துவத்திலும்
வர்மங்கள் பற்றிய நூல்கள்
இருக்கிறது.இத்தகைய
சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை
பற்றி அகத்தியர் பின்வருமாறு
கூறுகிறார்.
"அண்ணலே உலகத்தில் வாழும்
மாந்தர்
காயமுறு விழுதலாலும்
விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய்
துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே
பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு
கியாய மாத்திரை"
- அகத்தியர் -
வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர்
கூறியிருந்தாலும், அகத்தியர்
அருளிய “ஒடிவுமுறிவுசாரி”
என்ற நூலே மிக முக்கியமானதாக
கருதப் படுகிறது. இந்த அரிய நூல்
இன்று மிகச் சிலரிடதேதான்
இருக்கிறது. இன்றைய தேர்ந்த
நரம்பியல் வைத்தியர்களுக்க
ே புரியாத அல்லது தெரியாத பல
நுட்பங்களை ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர்
தனது நூலில் துல்லியமாகவும்,
விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.