வர்மக் கலை.
============
வர்மம் – ஆதித் தமிழன் படைத்த
அற்புதமான கலைகளில் ஒன்று...
வர்மம் , ஆதித் தமிழன் படைத்த
அற்புதமான கலைகளில் ஒன்று .
இன்று உலக நாடுகள் எதிரியை
அழிக்க கோடிகளைக் கொட்டி
அணுகுண்டு தயாரித்துக்
கொண்டிருக்கும் வேளையில் ,
இருக்கும் இடத்திலே இருந்து 1000
கிலோமீட்டர் அப்பால் உள்ள
எதிரிகளை எந்த ஆயிதமும் இல்லாமல்
தாக்கக் கூடிய ஆபூர்வக் கலைகள்
படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு
தெரியுமா ? இந்த வர்மம் கலை ஒரு
கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம்
போதாது . அதனால் சுருக்கமாக
சிலவற்றை மட்டும் உங்களுக்கு
தெரிவிக்கிறேன்.
இந்த கலையை உருவாக்கியவர்
சித்தர்களில் தலை சிறந்தவரான
அகத்தியர் .
இது உருவான இடம் பொதிகை
மலை .
” தென் பொதிகை நாதன்
துணையால் பாடி வைத்தேன்
முறை நன்றமே “.என்ற கி .மு வில்
எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி
வரியே இதற்கு சாட்சி !
அகத்தியர் கற்பபித்த வர்மகலைகளில்
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் ஊசி முறை வர்மம்
• அகத்தியர் வசி வர்மம்
• வர்ம ஓடிவு முறிவு
• அகத்தியர் வர்ம கண்ணாடி
• வர்ம வரிசை
• அகத்தியர் மெய் தீண்டாகலை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை .
“ஜடாவர்மன் பாண்டியன் ” என்ற மன்னன்
தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான் .
பின்னர் பாண்டிய இனம்
அழியத்தொடங்கியதும் , இந்த
கலையும் ஆழியத் தொடங்கியது.
இதற்கு பின்னர் வந்த ” சோழர்கள் ”
இதனை கற்றனர் .
பின்னர் , இத கலை இலங்கை , சீனா
போன்ற நாடுகளில் பரவத்
தொடங்கியது .காஞ்சியில் வாழ்ந்த
போதி தர்மர் என்ற துறவி புத்த
மதத்தை பரப்ப சீனா செல்லும் போது
இந்த கலையும் அங்கு பரவியது .
டெண்ஜிக்கு நரநோககு என்ற சீன
வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தால் ” the fighting techniques to train
the body from india ” என்ற பொருளை
தருகின்றது .” ஹீ ஷிஹ” என்ற
அமெரிக்காவுக்கான சீன தூதர் ”
இந்தியா
ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு
அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள்
சீனாவை ஆண்டுள்ளது ” என கூறி
உள்ளார் . 1793 இல் வெள்ளையர்கள்
இந்தியா மீது படை எடுக்கும்
போது , தாங்கள் இந்த கலை
மூலமாக பாதிக்கப் படக்கூடாது
என்பதற்காக தமிழக இளைஞர்களை
இந்த கலை பயில்வதை தடை
செய்தனர் . அன்று ஆரம்பமான இந்த
கலையின் அழிவு , இந்தியா
சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !
இந்த கலையானது அனைவருக்கும்
கற்று தர மாட்டது . இதன் ஆசிரியர்
தன் மாணவனை 12 வருடங்கள்
அவனுடைய பழக்க வழக்கங்களை
கண்காணித்த பிறகே கற்று
தருவார் ! இந்த கலையின் மூலம்
ஒருவர் தாக்கபட்டால் இதற்கென்று
தனியான சிகிச்சை முறை
கையாள வேண்டும் என “ அப்பனே
வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து
கற்று பின் வரிசையுடன் பின் வர்ம
இலக்கு செய்யே “ என்ற வரிகள்
தெரியப்படுத்துகின்றன. இதை எந்த
வயதினரும் கற்கலாம் !
வர்மக் கலைகளின் வகைகள்
• தொடு வர்மம்
• தட்டு வர்மம்
• நோக்கு வர்மம்
• என வகை படுத்தப்பட்டுள்ளது ,
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர்
உடனடியாக இதன் பதிப்பை உணர
மாட்டார் . இதை உணர்வதற்குள்
இவருக்கு சிகிச்சை செய்தாக
வேண்டும். இந்த பாதிப்பானது ஒரு
மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ,
ஒரு மாததிலோ, அல்லது
வருடக்கணக்கில் கூட இருக்கும்!
படுவர்மத்தால் தாக்கப்பட்டால்
சிலமணி நேரத்துக்குள் பதிப்பு
உணரப்படும். இதற்கு சிகிச்சையும்
இந்த காலத்திற்குள் செய்தாக
வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும்
கற்று தரப்படமாட்டாது. இது
மிகவும் மோசமான பிரிவு. ஆசான்
மனது வைத்தால் மட்டுமே இது
நடக்கும். நோக்கு வர்மம் தான்
அனைத்திலும் உச்சமானது
யாரையும் தொடாமல் கண்
பார்வையாலேயே தாக்கி
உயிரிழக்க வைக்க முடியும்!
உதாரனத்திற்கு சென்னையில்
உட்கார்ந்து கொண்டு மதுரையில்
இருப்பவரின் எல்லா நோய்களையும்
குணப்படுத்தாலம் ! ஒரே சமயத்தில்
எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு
பேரை தாக்கும் வல்லமை
கொண்டது இந்த கலை, ஆனால் இது
யாருக்கும் கற்று தர படமாட்டாது.
ஆசான் தன் மாணவன் ஒழுக்கமானவன்
என முடிவு செய்தால் மட்டுமே
இதை கற்காலம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு
புண்ணியம் செய்திருக்க வேண்டும்
என்று தான் என்க்கு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய
விடாமல் பாதுகாப்பது ஓவ்வொரு
தமிழனின் கடமை. இனியாவது
விழித்துக்கொள்வோம் !!
உலகின் புகழ்வாய்ந்த இனங்கள்
அனைத்தும் வீர சாகசங்களால்
மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம்
குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும்
கொற்றம் அமைத்துக்
கோலோச்சியதாக வரலாறு இல்லை.
பகைவரிடமிருந்து தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளும்
உணர்வோடு, உலகின் ஒவ்வோர்
இனமும் வீர விளையாட்டுக்களு
க்கான வியூகங்களை வகுத்துக்
கொண்டன. ஐம்புலன்களையும்
அடக்கி, உடலையும் மனதையும் ஒரு
கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க
வேண்டிய அவசியத்தை உணர்ந்த
மனித இனங்கள், உயிர்காக்கும்
தற்காப்புக் கலைகளையும்
உருவாக்கி, அவற்றைப் பேணிடும்
வகையில் பாசறைகள் அமைத்துப்
பயிற்சிகள் மேற்கொண்டன. இதில்
தமிழினமும் அடங்கும்.
“வாளொடு முன்தோன்றி மூத்தக்
குடி” என்னும் செவ்விய கூற்று,
தமிழ் இனத்தை ஒரு வீரப்
பரம்பரையாகவும், தமிழ் மண்ணை
ஒரு வீரத்தின் விளைநிலமாகவும்
சித்தரிப்பதாகும். தற்காப்புக்
கலையில் தமிழ் இனம்
தழைத்தோங்கியிருக்கிறது
என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே
தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த
முரண்களரி வரிமணல்” என்ற
பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று,
தமிழனின் போர்த்தொழில்
வித்தைகள் பற்றிய குறிப்புக்கள்
தருகின்றது. தொல்காப்பியம்,
பதிற்றுப் பத்து, புறப்பொருள்
வெண்பாமாலை, திருமந்திரம்
ஆகிய நூல்களிலும் தமிழனின்
தற்காப்புக்கலை அங்கங்கள்
விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.
ஆனால், இந்தப் போர்த்தொழில்
வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு,
தமிழினம் அறிந்துவைத்திருந்த
“வர்மம்” என்னும் தர்மம், உலகில்
வேறெந்த இனத்திடமும் காணப்படாத
ஓர் அதிசயக் கலை என்பதை அறியும்
போது, செந்தமிழ்ப் பரம்பரையின்
ஒவ்வோர் உயிரும் செம்மாந்து
நிற்கிறது. சித்தர் பெருமக்களின்
செய்தவத்தால் நமக்குக்
கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை,
யுகம் யுகமாக நம் மூதாதையர்கள்
ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த
உண்மைகளின் தொகுப்பாகும்.
தமிழனுக்குச் சொந்தமான இந்த
அரிய கலையின் அற்புதப்
பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே
பெருமளவில் அறியாதிருப்பதுத
ான் புரியாத புதிராக
இருக்கிறது. இன்னொரு புறம்,
வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத
பழங்கலை என்றெல்லாம் தமிழ்
மக்களே கேலிபேசிக்
கொண்டிருப்பது தாங்கொணாத
வேதனையாக இருக்கிறது.
அந்த வேதனைக்குக் கடுகளவேனும்
விடிவுகாணும் முடிவுதான்
இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.
“வர்மம்” வடமொழியா?
---------------------------------------
தமிழின் வரலாறும் சொல்வளமும்
அறியாத சிலர் “வர்மம்” ஒரு
வடமொழிச் சொல் என்றும் வர்மக்
கலையானது சமஸ்கிருத
நூல்களிலிருந்துதான் தமிழுக்குப்
பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.
மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற
கொள்கையுணர்வு இங்கே நமக்கு
மிகமிகத் தேவைப்படுகிறது.
அத்தோடு, இலக்கண விதிகளையும்
விளக்கங்களையும் ஊடகமாக
வைத்து இதை நாம்
அணுகவேண்டிய அவசியமும்
ஏற்படுகிறது.
தமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று
உண்டு. அச்சொல் நிலைமொழியாக
நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும்.
அந்த நிலைமொழியோடு
வருமொழியாக ஒரு பெயர்ச்
சொல்லை இணைத்தால், அதை
உரிச்சொல் ஆக்கிவிடலாம்
(எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ
வல்லினம்). நிலைமொழி ஒரு
பகுதியாக நிற்க, அதனை
இன்னொரு விகுதியோடு
புணர்ந்திட அனுமதித்தால், அது
பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது,
பகுதி மற்றும் விகுதியின்
இணைப்பால் ஒரு புதிய சொல்
பிறக்கும் என்பது புணரியல் விதி.
இந்த விதியின் அடிப்படையில், “வல்”
என்ற பகுதியோடு “மை” என்ற
(தொழிற்பெயர்) விகுதியை
இணைத்தால் “வன்மை” என்ற
பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை”
என்ற சொல்லுக்கு “வல்லமை”
“வல்லவனாக இருத்தல்” “வலிமை
பொருந்திய செயல்புரிதல்”
என்றெல்லாம் பொருள்விளக்கம்
கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற
சொல்லின் வேறொரு வடிவம்தான்
“வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச்
சொல்லில்கூட “அம்” என்ற ஒரு
தொழிற்பெயர் விகுதிதான்
இணைந்துள்ளது என்பது
கவனிக்கத்தக்கது.
“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச்
சொல்தான் காலப் போக்கில் “வர்மம்”
என மருவியிருக்கிறது என்பது
மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம்
மறுப்பிற்கிடமின்றித்
தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர
ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது
என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக்
களங்களிலே பரவலாகக் காணப்படும்
மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது
‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும்,
‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’
என்று வழங்கப்படுவதும் இதற்கான
சில எடுத்துக்காட்டுக்கள்.
இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’
என்று மருவியிருக்க
வேண்டுமென்பது இலக்கணம்
படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி
விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள்
சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத்
தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு
திகழ்ந்திருப்பதைக் காணுங்கால்,
அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச்
சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால்
விகுதி நிகழ்த்தியிருக்கும்
சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான்
என்பதும் எந்தவொரு
தமிழ்மகனுக்கும் எளிதில்
விளங்கும். வாதத்துக்கெல்லாம்
அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான்.
இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம்
பூசுவதை எப்படிச் சகிப்பது?
சமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள்
இல்லாமல் இல்லை. தமிழனின்
கலைகளையெல்லாம் கபளீகரம்
செய்து தத்தமது மொழிகளில்
புத்தம்புது பெயர் சூட்டிக்
கொள்வதை வழக்கமாகக்
கொண்டிருந்த வடவர் குலம், வர்மக்
கலையையும் விட்டு
வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை
விளக்கி வாக்படேர் என்னும்
சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய
நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா”
என்பதாகும். அந்த நூலின்
தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலு
ம் சரி “வர்மம்” என்ற சொல் எந்த
இடத்திலும் மூலச்சொல்லாக
வழங்கப்படவில்லை யென்பது
குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்”
வடமொழிச் சொல் அல்ல என்பது
தெளிவாகிறது.
இது இவ்வாறிருக்க, தமிழனின்
வர்மக்கலை நூல்களில் வடமொழிச்
சொற்கள் இருக்கிள்றன என்பதையும்
நாம் மறுக்க முடியாது. நட்சத்திர
காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல்,
தட்சிணா வர்மம் போன்றவை
எடுத்துக்காட்டுக்கள். இருப்பினும்,
இவை மிகக் குறைவாகவே உள்ளன.
அதுவும் வடமொழித் தாக்கத்தினால்
வந்து புகுந்துவிட்டவைதான்.
அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள்
நம்வசம் இருந்திருந்தும்,
அச்சொற்களை நம்மவர்கள் கையாள
முடியாத அளவுக்கு வடமொழி
ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது
என்பதைத்தான் இது நமக்கு
உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம்
உலகறிந்த உண்மை. இன்னும்
சொல்லப்போனால் நமது
வர்மநூல்களில் காணப்படுகின்ற
தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில
வடிவமாற்றங்களோடு வடமொழியில்
வாசம் புரிகின்றன என்பதற்கு
ஆதாரங்கள் காட்டலாம்.
பதஞ்சலி முனிவனின்
யோகசாஸ்திரத்தில் காணப்படும்
“சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’
என்பார்கள்) என்பது, நமது
வர்மநூலில் உள்ள “சுழிமுனை”
என்பதன் வடிவமாற்றம் ஆகும்.
‘சுழிமுனை’ என்னும் சொல், நம்
உடலில் உள்ள மிக முக்கியமான
இரண்டு உயிர்நிலை
முடிச்சுகளைக் குறிப்பதாகும்.
“சுழிமுனைகள் இரண்டுண்டு”
என்று நமது தமிழ் வர்மநூல்கள்
குறிப்பிடுகின்றன. அதாவது,
ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச்
சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத்
தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச்
சொல்தான் ‘சுழிமுனை’.
அதைத்தான் வடவர்கள் எடுத்து
வைத்துக்கொண்டு “சூஷ்மனா”
என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட
“சுழியம்” என்ற தொழிற்பெயர்
வடிவம் கொண்டு, இப்போது
பரவலாக இதர இந்திய மொழிகளில்
“சூன்யம்” என்று வழங்கப்பட்டு
வருவதை யார்தான் மறுக்க
முடியும்? இதே “சுழி” எனும்
சொல்தான் “ணநசழ” என்று
வழங்கப்படும் ஆங்கிலச்
சொல்லுக்கும் நதிமூலம் என்பது
சொற்பிறப்பியல் வரலாற்றில்
கிடைக்கும் இன்னொரு சுவையான
தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச்
சொற்கள் பிறமொழிகளுக்கு
இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ
மாற்றங்களுடன் குடிகொண்டிருக்க
ின்றன என்னும் பேருண்மை
நாளுக்கு நாள் ஆதாரங்களுடன்
வலுவடைந்து வருகிறது.
வர்மமும் கிரேக்கமும்!
கிரேக்கமும் திராவிடமும்
பழங்காலத்தில் கடல்வழித்
தொடர்புகளால் நெருக்கமாக
இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த
தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம்
உள்வாங்கிக் கொண்டது என்பது
காலச் சுவடிகளில் காணும் பதிவு.
அப்படி கிரேக்கம் உள்வாங்கிக்
கொண்ட எத்தனையோ தமிழ்ச்
சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”.
“வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில்
“Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy”
என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி
வருகிறது. “வ” என்பதில் இருக்கும்
“ஏ” உச்சரிப்பு, மேனாட்டு
மொழிகளின் புணரியல் இலக்கண
(Declension) மரபுகளின்படி “கு”
ஓசையைத் தழுவுகின்றது
என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டு
க்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என
மாறும் போதும், “Leave” என்ற
நிகழ்காலச் சொல் “Left” என்ற
இறந்தகாலச் சொல்லாக மாறும்
போதும் “V” ஓசையானது “F”
ஓசையாக மாறியிருப்பது காண்க.
அவ்வண்ணமே Varma-வும் Pharma
ஆயிற்று.
தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!
இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற
சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக்
கலையையும் வழங்கியிருக்கிறது
என்பது வரலாற்று அறிஞர்கள்
தெளிந்துரைக்கும் முடிவு.
“தெற்கன் களரி” என்னும் பெயரால்
அறியப்படும் திராவிடர்களின் இந்த
வர்மக் கலைதான் சீனம் வரை
சென்றது என்பதற்குச் சரித்திர
ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு
நாடுகளில் பௌத்தம் பரவிய
வேகத்தில், தமிழனின் வர்மக்
கலையும் கூடவே பயணம் சென்று,
வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி
கண்டுப் பொலிவடைந்தன என்பதைத்
தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே
தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.
தற்காப்புக் கலையைப்
பொறுத்தமட்டில், சீனம்
நெடுங்காலமாகவே சிறந்து
விளங்கியிருக்கிறது. அங்கும்
அடிமுறை ஆசான்மார் பெரும்
அரசியல் ஞானிகளாகக்
கோலோச்சியிருப்பது வரலாற்றில்
பதிவாயிருக்கிறது. தற்காப்புக்
கலையில் சீனம் எந்த அளவுக்குப்
பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும்
கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களி
ல் வசிக்கும் அடிமுறை ஆசான்மார்
தற்காப்புக் கலையைச் “சீனாடி”
என்று குறிப்பிடுவதுண்டு.
சீனாவில் வேரூன்றியிருக்கும்
குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத்
தூரக்கிழக்கு நாடுகளின்
தற்காப்புக்கலைப் பிரிவுகளான
ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ
ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது
தமிழனின் களரிதான் என்பதற்குச்
சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள்
வைத்திருக்கின்றது. இந்தச்
சாட்சியங்கள் யாவும் மூத்த
தமிழ்க்குடியின் புகழை
முரசறைந்து நிற்கும் சத்தியங்கள்
என்பதில் சந்தேகம் இல்லை.
வர்மத்தின் அதிசயங்கள் !!
-------------------------------------------
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ
மருத்துவ உத்திகளிலோ இல்லாத
அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே
சில உண்மைகளைச் சுருக்கமாகக்
கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:
*ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும்
மூன்று அடிமுறை உத்திகளும்
தமிழனின் வர்மக்கலையில்
இருப்பதுபோல் வேறெந்தத்
தற்காப்புக் கலையிலும் இல்லை.
*வெட்டுக் காயங்ளிலிருந்து
பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும்
போடாமலேயே வர்ம நரம்புப்
பிடியால் கட்டுப்படுத்தி
நிறுத்திவிட முடியும்.
*ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை
எந்தவித மருந்தும் இல்லாமலேயே
வர்மக்கலையின் தடவுமுறைகளால்
உடனடியாகச் சரிசெய்துவிட
முடியும்.
*ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய
நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம
அடங்கல் கொண்டு நாலைந்து
நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
*நட்போடு கைகுலுக்குவது
போலவோ, பாசத்தோடு
கட்டியணைப்பது போலவோ
நடித்துக் கொண்டு பகையாளியைப்
பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம்
அறிந்தவனுக்கு முடியும்.
*மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று
மரணப்பிடியில் கிடப்பவனையும்
வர்மக் கலையின் உயிர்நிலை
நாடிகளைப் பயன்படுத்தி உடனே
எழுப்பிவிட முடியும்.
மேற்கூறிய உண்மைகளைச் சிலர்
நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம்.
ஆனால் வர்மக் கலையின்
அரிச்சுவடிகளையேனும் அறிய
நேரிடுபவர்க்கு அங்ஙனம்
மறுக்கவோ நகைக்கவோ இயலாது
என்பது திண்ணம். வர்மத்தின்
அதிசயங்களை அறிவார் மட்டுமே
அறிவார்.
இத்தகைய அறிவியல் வளர்ச்சி
இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே
குறிப்பிட்ட நவீன முறைகளை
விடவும் நேர்த்தியான,
செலவில்லாத ஒரு வைத்திய
முறையாக வர்மக் கலை
விளங்கியிருக்கிறது என்பது
நமக்கு கிடைத்திருக்கும்
நூல்களின் வாயிலாக அறிய
முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த
தகவல்கள் நமக்கு முழுமையாக
கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள்
அழிந்து போயிருக்கலாம், அல்லது
அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே
கருதத் தோன்றுகிறது.
தற்போது நமக்குக்
கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...
ஒடிவு முறிவு சாரி
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம காண்டம்
வர்ம பீரங்கி
வர்ம சூடாமணி
இந்த கலை அழிந்து போனதற்கும்
இந்த கலையின் சிறப்பே கூட ஒரு
காரணமாக இருந்திருக்கக் கூடும்.
ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த
ஒருவன் சகல விதத்திலும் தன் சக
மனிதர்களை விட அசாத்திய
திறமைகளைக் கொண்டவனாகி
விடுகிறான். அப்படிப் பட்டவனால்
எதனையும் ஆக்கவும் முடியும்,
அழிக்கவும் முடியும்.
ஒரு வேளை ஆசாபாசங்களில்
சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள்
கையில் இந்த கலை சிக்கி அவர்கள்
தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த
ஆரம்பித்தால் அது சமூகத்தில்
ஆபத்தான விளைவுகளையும்,
முன்னுதாரணங்களையும்
ஏற்படுத்தி விடும் என்று கருதியே,
சரியான மாணவன் கிடைத்தால்
மட்டுமே கற்றுத் தருகிற
கலையாகிப் போனது. சரியான
மாணவன் கிடைக்காவிட்டால் அந்த
குருவோடு அந்த கலை அழிந்து
போக வேண்டியதுதான்.
பலரும் நினைப்பதைப் போல இந்த
கலையினை எளிதில் கற்றுக்
கொள்ள முடியாது. இதற்கு
பல்வேறு கட்டுப்பாடுகளை
சித்தர்கள் வகுத்திருக்கின்றனர்.
போகர் ஒரு பாடலில் சீடனை
தெரிந்தெடுக்கும் வகையினை
இப்படிச் சொல்கிறார்.
"மறைவில் வைப்பதென்றால் மைந்தா
கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன்
றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல்
தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை
மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம்
காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த
தானால்
அப்பனே நிலையறிந்து நூலை
ஈயே"
- போகர்.
குறைந்தது பன்னிரெண்டு
ஆண்டுகள் ஒருவரின்
நடவடிக்கைகளைக் கண்காணித்து
அவரது தகுதியினை சோதித்து
அறிந்த பின்னரே அவருக்கு இந்த
கலையினை கற்றுக் கொடுக்க
வேண்டுமென கூறுகிறார்.
சரியான மாணவனைக் கண்டறிந்த
உடனும் அவருக்கு இந்தக்
கலையினை போதிக்க முடியாது.
இந்தக் கலையினை ஏற்றுக்
கொள்ளும் உடல் மற்றும் மனப்
பக்குவத்தை பெறுவதற்கான
பயிற்சிகளே முதலில் வழங்கப் படும்.
அவற்றில் தேறினால் மட்டுமே
குருவானவர் வர்மக் கலையினை
மாணவருக்கு அருளுவார்.
இதெல்லாம் இன்றைய அவசர
உலகத்துக்கு சாத்தியமாகுமா?
“வர்ம”மெனும் பொக்கிஷத்தின்
வானளாவிய புகழ்பற்றிச்
செருக்கும் செம்மாப்பும்
பூண்டிருக்கும் தமிழினம், அதன்
ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான
விடைதர இயலாமல் தலைநாணி
நிற்கிறது. ஒப்பற்ற
இக்கலைக்கென்று உலகளாவிய
பொது நூல் ஒன்று நம் கையில்
இல்லை என்பது உண்மையிலேயே
வருத்தம் தருகிறது. வர்மத்தைப்
பற்றி வலுவானதொரு இலக்கண
நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா
வரவேண்டிய உன்னத நிலையைக்
தமிழ் அன்னைக்கு நம் முன்னோர்
தரவில்லையே என்ற துயர்மிகுந்த
ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.
சிவபெருமான்தான் இதன் ஆசிரியன்
என்கிறது “வர்ம காவியம்” என்னும்
நூல். அகத்திய முனிவன்தான் இதன்
ஆசிரியன் என்கின்றன சில பண்டைய
செவிவழிச் செய்திகள். அகத்திய
முனிவன் வர்மசாஸ்திரத்தை
சமஸ்கிருத்தில் மட்டுமே
எழுதியதாக மலையாளக்காரர்கள்
வேறு வாதிடுகின்றனர்.
இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய
கூற்றும் உறுதி செய்யப்படாத
வெறும் யூகங்கள் என்பதால்
இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு
நாம் பெருமை தேடிக் கொள்ளவோ
உலக அரங்கில் பீடுநடை போட்டுப்
பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப்
பேசவோ நம்மால் இயலாமற்
போகிறது.
வள்ளுவனும் வர்ம நூலும்!
----------------------------------------------
வள்ளுவன் காலத்தில்கூட வர்மம்
மாண்புற்று விளங்கியிருக்க
வேண்டும். அதற்கான சான்றுகள்
திருக்குறளிலேயே போதிய
அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்”
என்ற சொல்லைக் கையாளுகின்ற
பெரும்பாலான இடங்களிலெல்லாம்
வள்ளுவன் வர்மத்தையும்
வைத்தியத்தையும் சுட்டிக்
காட்டுவதாகத் தோன்றுகிறது.
“ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும்
“நூலோர் வளிமுதலா எண்ணிய
மூன்று” (குறள்: 941) என்றும்
எழுதுகிற வள்ளுவன், வர்மக்
கலையையும் வர்ம நாடிகளையும்
நேரடியாகவே சுட்டிக்காட்டுக
ிறான் என்பது கூர்ந்து நோக்கத்
தக்கது. நமது வர்மச் சுவடிகளில்
கூட “திறமான நூல் எவர்க்கும்
வெளியிடாதே!” என்றும் “பொருள்
வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல்
தா என்று உன்னை ஏய்ப்பர்!” என்றும்
காணப்படுகின்ற வரிகளில் “நூல்”
என்ற சொல் நேரடியாக வர்மக்
கலையைச் சுட்டிக்காட்டத்தான்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே
வள்ளுவனும் அதே பொருளில்
“நூல்” என்ற சொல்லைக்
கையாண்டிருப்பதில் எந்த வியப்பும்
இல்லை. .வர்மம் - தோற்றமும்,
காலமும்!
சித்த மருத்துவ முறையொன்று
நாள்போக்கில் தற்காப்பு
கலையாகி, பின்னர் எதிரிகளை
கொல்லும் போர்க் கலையாக
மாறியது என்றால் அது வர்மம்
என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை,
வன்மை என்கிற தமிழ் பதத்தில்
மருவுதான் வர்மம்.இதனை மர்மம்
என்றும் சிலர் அழைப்பது
உண்டு.போர்க்கலையில் இந்த
முறையினை “நரம்படி” என்று
அழைக்கின்றனர்.
பஞ்ச பூதங்களின் கலவையான நமது
உடலானது பேசிகள், நரம்புகள்
ஆகியவற்றால் பின்னி பினைக்கப்
பட்டிருக்கிறது.இப்படி இவை
ஒன்றோடு ஒன்றாக பின்னிக்
கிட்க்கும் இடங்களை ”உயிர்
நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு
மனித உடலில் 108 உயிர் நிலைகள்
இருப்பதாகவும், அந்த உயிர்
நிலைகளை முறையாக
கையாளுவதன் மூலம் ஒருவரின்
உடலை வலிமையாக்கவும்,
வலுவிழந்து செயலற்றுப் போகவும்
வைக்கும் மிக் நுட்பமான கலைதான்
வர்மக் கலை.
தமிழர்களின் கலையான வர்மக் கலை
அகத்தியரால் உருவாக்கப்
பட்டது.சித்த மருத்துவம் தவிர
ஆயுர்வேத மருத்துவத்திலும்
வர்மங்கள் பற்றிய நூல்கள்
இருக்கிறது.இத்தகைய
சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை
பற்றி அகத்தியர் பின்வருமாறு
கூறுகிறார்.
"அண்ணலே உலகத்தில் வாழும்
மாந்தர்
காயமுறு விழுதலாலும்
விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய்
துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே
பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு
கியாய மாத்திரை"
- அகத்தியர் -
வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர்
கூறியிருந்தாலும், அகத்தியர்
அருளிய “ஒடிவுமுறிவுசாரி”
என்ற நூலே மிக முக்கியமானதாக
கருதப் படுகிறது. இந்த அரிய நூல்
இன்று மிகச் சிலரிடதேதான்
இருக்கிறது. இன்றைய தேர்ந்த
நரம்பியல் வைத்தியர்களுக்க
ே புரியாத அல்லது தெரியாத பல
நுட்பங்களை ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர்
தனது நூலில் துல்லியமாகவும்,
விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.
============
வர்மம் – ஆதித் தமிழன் படைத்த
அற்புதமான கலைகளில் ஒன்று...
வர்மம் , ஆதித் தமிழன் படைத்த
அற்புதமான கலைகளில் ஒன்று .
இன்று உலக நாடுகள் எதிரியை
அழிக்க கோடிகளைக் கொட்டி
அணுகுண்டு தயாரித்துக்
கொண்டிருக்கும் வேளையில் ,
இருக்கும் இடத்திலே இருந்து 1000
கிலோமீட்டர் அப்பால் உள்ள
எதிரிகளை எந்த ஆயிதமும் இல்லாமல்
தாக்கக் கூடிய ஆபூர்வக் கலைகள்
படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு
தெரியுமா ? இந்த வர்மம் கலை ஒரு
கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம்
போதாது . அதனால் சுருக்கமாக
சிலவற்றை மட்டும் உங்களுக்கு
தெரிவிக்கிறேன்.
இந்த கலையை உருவாக்கியவர்
சித்தர்களில் தலை சிறந்தவரான
அகத்தியர் .
இது உருவான இடம் பொதிகை
மலை .
” தென் பொதிகை நாதன்
துணையால் பாடி வைத்தேன்
முறை நன்றமே “.என்ற கி .மு வில்
எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி
வரியே இதற்கு சாட்சி !
அகத்தியர் கற்பபித்த வர்மகலைகளில்
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் ஊசி முறை வர்மம்
• அகத்தியர் வசி வர்மம்
• வர்ம ஓடிவு முறிவு
• அகத்தியர் வர்ம கண்ணாடி
• வர்ம வரிசை
• அகத்தியர் மெய் தீண்டாகலை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை .
“ஜடாவர்மன் பாண்டியன் ” என்ற மன்னன்
தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான் .
பின்னர் பாண்டிய இனம்
அழியத்தொடங்கியதும் , இந்த
கலையும் ஆழியத் தொடங்கியது.
இதற்கு பின்னர் வந்த ” சோழர்கள் ”
இதனை கற்றனர் .
பின்னர் , இத கலை இலங்கை , சீனா
போன்ற நாடுகளில் பரவத்
தொடங்கியது .காஞ்சியில் வாழ்ந்த
போதி தர்மர் என்ற துறவி புத்த
மதத்தை பரப்ப சீனா செல்லும் போது
இந்த கலையும் அங்கு பரவியது .
டெண்ஜிக்கு நரநோககு என்ற சீன
வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தால் ” the fighting techniques to train
the body from india ” என்ற பொருளை
தருகின்றது .” ஹீ ஷிஹ” என்ற
அமெரிக்காவுக்கான சீன தூதர் ”
இந்தியா
ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு
அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள்
சீனாவை ஆண்டுள்ளது ” என கூறி
உள்ளார் . 1793 இல் வெள்ளையர்கள்
இந்தியா மீது படை எடுக்கும்
போது , தாங்கள் இந்த கலை
மூலமாக பாதிக்கப் படக்கூடாது
என்பதற்காக தமிழக இளைஞர்களை
இந்த கலை பயில்வதை தடை
செய்தனர் . அன்று ஆரம்பமான இந்த
கலையின் அழிவு , இந்தியா
சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !
இந்த கலையானது அனைவருக்கும்
கற்று தர மாட்டது . இதன் ஆசிரியர்
தன் மாணவனை 12 வருடங்கள்
அவனுடைய பழக்க வழக்கங்களை
கண்காணித்த பிறகே கற்று
தருவார் ! இந்த கலையின் மூலம்
ஒருவர் தாக்கபட்டால் இதற்கென்று
தனியான சிகிச்சை முறை
கையாள வேண்டும் என “ அப்பனே
வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து
கற்று பின் வரிசையுடன் பின் வர்ம
இலக்கு செய்யே “ என்ற வரிகள்
தெரியப்படுத்துகின்றன. இதை எந்த
வயதினரும் கற்கலாம் !
வர்மக் கலைகளின் வகைகள்
• தொடு வர்மம்
• தட்டு வர்மம்
• நோக்கு வர்மம்
• என வகை படுத்தப்பட்டுள்ளது ,
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர்
உடனடியாக இதன் பதிப்பை உணர
மாட்டார் . இதை உணர்வதற்குள்
இவருக்கு சிகிச்சை செய்தாக
வேண்டும். இந்த பாதிப்பானது ஒரு
மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ,
ஒரு மாததிலோ, அல்லது
வருடக்கணக்கில் கூட இருக்கும்!
படுவர்மத்தால் தாக்கப்பட்டால்
சிலமணி நேரத்துக்குள் பதிப்பு
உணரப்படும். இதற்கு சிகிச்சையும்
இந்த காலத்திற்குள் செய்தாக
வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும்
கற்று தரப்படமாட்டாது. இது
மிகவும் மோசமான பிரிவு. ஆசான்
மனது வைத்தால் மட்டுமே இது
நடக்கும். நோக்கு வர்மம் தான்
அனைத்திலும் உச்சமானது
யாரையும் தொடாமல் கண்
பார்வையாலேயே தாக்கி
உயிரிழக்க வைக்க முடியும்!
உதாரனத்திற்கு சென்னையில்
உட்கார்ந்து கொண்டு மதுரையில்
இருப்பவரின் எல்லா நோய்களையும்
குணப்படுத்தாலம் ! ஒரே சமயத்தில்
எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு
பேரை தாக்கும் வல்லமை
கொண்டது இந்த கலை, ஆனால் இது
யாருக்கும் கற்று தர படமாட்டாது.
ஆசான் தன் மாணவன் ஒழுக்கமானவன்
என முடிவு செய்தால் மட்டுமே
இதை கற்காலம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு
புண்ணியம் செய்திருக்க வேண்டும்
என்று தான் என்க்கு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய
விடாமல் பாதுகாப்பது ஓவ்வொரு
தமிழனின் கடமை. இனியாவது
விழித்துக்கொள்வோம் !!
உலகின் புகழ்வாய்ந்த இனங்கள்
அனைத்தும் வீர சாகசங்களால்
மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம்
குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும்
கொற்றம் அமைத்துக்
கோலோச்சியதாக வரலாறு இல்லை.
பகைவரிடமிருந்து தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளும்
உணர்வோடு, உலகின் ஒவ்வோர்
இனமும் வீர விளையாட்டுக்களு
க்கான வியூகங்களை வகுத்துக்
கொண்டன. ஐம்புலன்களையும்
அடக்கி, உடலையும் மனதையும் ஒரு
கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க
வேண்டிய அவசியத்தை உணர்ந்த
மனித இனங்கள், உயிர்காக்கும்
தற்காப்புக் கலைகளையும்
உருவாக்கி, அவற்றைப் பேணிடும்
வகையில் பாசறைகள் அமைத்துப்
பயிற்சிகள் மேற்கொண்டன. இதில்
தமிழினமும் அடங்கும்.
“வாளொடு முன்தோன்றி மூத்தக்
குடி” என்னும் செவ்விய கூற்று,
தமிழ் இனத்தை ஒரு வீரப்
பரம்பரையாகவும், தமிழ் மண்ணை
ஒரு வீரத்தின் விளைநிலமாகவும்
சித்தரிப்பதாகும். தற்காப்புக்
கலையில் தமிழ் இனம்
தழைத்தோங்கியிருக்கிறது
என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே
தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த
முரண்களரி வரிமணல்” என்ற
பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று,
தமிழனின் போர்த்தொழில்
வித்தைகள் பற்றிய குறிப்புக்கள்
தருகின்றது. தொல்காப்பியம்,
பதிற்றுப் பத்து, புறப்பொருள்
வெண்பாமாலை, திருமந்திரம்
ஆகிய நூல்களிலும் தமிழனின்
தற்காப்புக்கலை அங்கங்கள்
விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.
ஆனால், இந்தப் போர்த்தொழில்
வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு,
தமிழினம் அறிந்துவைத்திருந்த
“வர்மம்” என்னும் தர்மம், உலகில்
வேறெந்த இனத்திடமும் காணப்படாத
ஓர் அதிசயக் கலை என்பதை அறியும்
போது, செந்தமிழ்ப் பரம்பரையின்
ஒவ்வோர் உயிரும் செம்மாந்து
நிற்கிறது. சித்தர் பெருமக்களின்
செய்தவத்தால் நமக்குக்
கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை,
யுகம் யுகமாக நம் மூதாதையர்கள்
ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த
உண்மைகளின் தொகுப்பாகும்.
தமிழனுக்குச் சொந்தமான இந்த
அரிய கலையின் அற்புதப்
பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே
பெருமளவில் அறியாதிருப்பதுத
ான் புரியாத புதிராக
இருக்கிறது. இன்னொரு புறம்,
வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத
பழங்கலை என்றெல்லாம் தமிழ்
மக்களே கேலிபேசிக்
கொண்டிருப்பது தாங்கொணாத
வேதனையாக இருக்கிறது.
அந்த வேதனைக்குக் கடுகளவேனும்
விடிவுகாணும் முடிவுதான்
இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.
“வர்மம்” வடமொழியா?
---------------------------------------
தமிழின் வரலாறும் சொல்வளமும்
அறியாத சிலர் “வர்மம்” ஒரு
வடமொழிச் சொல் என்றும் வர்மக்
கலையானது சமஸ்கிருத
நூல்களிலிருந்துதான் தமிழுக்குப்
பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.
மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற
கொள்கையுணர்வு இங்கே நமக்கு
மிகமிகத் தேவைப்படுகிறது.
அத்தோடு, இலக்கண விதிகளையும்
விளக்கங்களையும் ஊடகமாக
வைத்து இதை நாம்
அணுகவேண்டிய அவசியமும்
ஏற்படுகிறது.
தமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று
உண்டு. அச்சொல் நிலைமொழியாக
நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும்.
அந்த நிலைமொழியோடு
வருமொழியாக ஒரு பெயர்ச்
சொல்லை இணைத்தால், அதை
உரிச்சொல் ஆக்கிவிடலாம்
(எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ
வல்லினம்). நிலைமொழி ஒரு
பகுதியாக நிற்க, அதனை
இன்னொரு விகுதியோடு
புணர்ந்திட அனுமதித்தால், அது
பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது,
பகுதி மற்றும் விகுதியின்
இணைப்பால் ஒரு புதிய சொல்
பிறக்கும் என்பது புணரியல் விதி.
இந்த விதியின் அடிப்படையில், “வல்”
என்ற பகுதியோடு “மை” என்ற
(தொழிற்பெயர்) விகுதியை
இணைத்தால் “வன்மை” என்ற
பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை”
என்ற சொல்லுக்கு “வல்லமை”
“வல்லவனாக இருத்தல்” “வலிமை
பொருந்திய செயல்புரிதல்”
என்றெல்லாம் பொருள்விளக்கம்
கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற
சொல்லின் வேறொரு வடிவம்தான்
“வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச்
சொல்லில்கூட “அம்” என்ற ஒரு
தொழிற்பெயர் விகுதிதான்
இணைந்துள்ளது என்பது
கவனிக்கத்தக்கது.
“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச்
சொல்தான் காலப் போக்கில் “வர்மம்”
என மருவியிருக்கிறது என்பது
மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம்
மறுப்பிற்கிடமின்றித்
தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர
ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது
என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக்
களங்களிலே பரவலாகக் காணப்படும்
மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது
‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும்,
‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’
என்று வழங்கப்படுவதும் இதற்கான
சில எடுத்துக்காட்டுக்கள்.
இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’
என்று மருவியிருக்க
வேண்டுமென்பது இலக்கணம்
படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி
விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள்
சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத்
தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு
திகழ்ந்திருப்பதைக் காணுங்கால்,
அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச்
சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால்
விகுதி நிகழ்த்தியிருக்கும்
சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான்
என்பதும் எந்தவொரு
தமிழ்மகனுக்கும் எளிதில்
விளங்கும். வாதத்துக்கெல்லாம்
அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான்.
இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம்
பூசுவதை எப்படிச் சகிப்பது?
சமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள்
இல்லாமல் இல்லை. தமிழனின்
கலைகளையெல்லாம் கபளீகரம்
செய்து தத்தமது மொழிகளில்
புத்தம்புது பெயர் சூட்டிக்
கொள்வதை வழக்கமாகக்
கொண்டிருந்த வடவர் குலம், வர்மக்
கலையையும் விட்டு
வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை
விளக்கி வாக்படேர் என்னும்
சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய
நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா”
என்பதாகும். அந்த நூலின்
தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலு
ம் சரி “வர்மம்” என்ற சொல் எந்த
இடத்திலும் மூலச்சொல்லாக
வழங்கப்படவில்லை யென்பது
குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்”
வடமொழிச் சொல் அல்ல என்பது
தெளிவாகிறது.
இது இவ்வாறிருக்க, தமிழனின்
வர்மக்கலை நூல்களில் வடமொழிச்
சொற்கள் இருக்கிள்றன என்பதையும்
நாம் மறுக்க முடியாது. நட்சத்திர
காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல்,
தட்சிணா வர்மம் போன்றவை
எடுத்துக்காட்டுக்கள். இருப்பினும்,
இவை மிகக் குறைவாகவே உள்ளன.
அதுவும் வடமொழித் தாக்கத்தினால்
வந்து புகுந்துவிட்டவைதான்.
அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள்
நம்வசம் இருந்திருந்தும்,
அச்சொற்களை நம்மவர்கள் கையாள
முடியாத அளவுக்கு வடமொழி
ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது
என்பதைத்தான் இது நமக்கு
உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம்
உலகறிந்த உண்மை. இன்னும்
சொல்லப்போனால் நமது
வர்மநூல்களில் காணப்படுகின்ற
தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில
வடிவமாற்றங்களோடு வடமொழியில்
வாசம் புரிகின்றன என்பதற்கு
ஆதாரங்கள் காட்டலாம்.
பதஞ்சலி முனிவனின்
யோகசாஸ்திரத்தில் காணப்படும்
“சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’
என்பார்கள்) என்பது, நமது
வர்மநூலில் உள்ள “சுழிமுனை”
என்பதன் வடிவமாற்றம் ஆகும்.
‘சுழிமுனை’ என்னும் சொல், நம்
உடலில் உள்ள மிக முக்கியமான
இரண்டு உயிர்நிலை
முடிச்சுகளைக் குறிப்பதாகும்.
“சுழிமுனைகள் இரண்டுண்டு”
என்று நமது தமிழ் வர்மநூல்கள்
குறிப்பிடுகின்றன. அதாவது,
ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச்
சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத்
தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச்
சொல்தான் ‘சுழிமுனை’.
அதைத்தான் வடவர்கள் எடுத்து
வைத்துக்கொண்டு “சூஷ்மனா”
என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட
“சுழியம்” என்ற தொழிற்பெயர்
வடிவம் கொண்டு, இப்போது
பரவலாக இதர இந்திய மொழிகளில்
“சூன்யம்” என்று வழங்கப்பட்டு
வருவதை யார்தான் மறுக்க
முடியும்? இதே “சுழி” எனும்
சொல்தான் “ணநசழ” என்று
வழங்கப்படும் ஆங்கிலச்
சொல்லுக்கும் நதிமூலம் என்பது
சொற்பிறப்பியல் வரலாற்றில்
கிடைக்கும் இன்னொரு சுவையான
தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச்
சொற்கள் பிறமொழிகளுக்கு
இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ
மாற்றங்களுடன் குடிகொண்டிருக்க
ின்றன என்னும் பேருண்மை
நாளுக்கு நாள் ஆதாரங்களுடன்
வலுவடைந்து வருகிறது.
வர்மமும் கிரேக்கமும்!
கிரேக்கமும் திராவிடமும்
பழங்காலத்தில் கடல்வழித்
தொடர்புகளால் நெருக்கமாக
இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த
தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம்
உள்வாங்கிக் கொண்டது என்பது
காலச் சுவடிகளில் காணும் பதிவு.
அப்படி கிரேக்கம் உள்வாங்கிக்
கொண்ட எத்தனையோ தமிழ்ச்
சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”.
“வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில்
“Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy”
என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி
வருகிறது. “வ” என்பதில் இருக்கும்
“ஏ” உச்சரிப்பு, மேனாட்டு
மொழிகளின் புணரியல் இலக்கண
(Declension) மரபுகளின்படி “கு”
ஓசையைத் தழுவுகின்றது
என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டு
க்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என
மாறும் போதும், “Leave” என்ற
நிகழ்காலச் சொல் “Left” என்ற
இறந்தகாலச் சொல்லாக மாறும்
போதும் “V” ஓசையானது “F”
ஓசையாக மாறியிருப்பது காண்க.
அவ்வண்ணமே Varma-வும் Pharma
ஆயிற்று.
தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!
இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற
சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக்
கலையையும் வழங்கியிருக்கிறது
என்பது வரலாற்று அறிஞர்கள்
தெளிந்துரைக்கும் முடிவு.
“தெற்கன் களரி” என்னும் பெயரால்
அறியப்படும் திராவிடர்களின் இந்த
வர்மக் கலைதான் சீனம் வரை
சென்றது என்பதற்குச் சரித்திர
ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு
நாடுகளில் பௌத்தம் பரவிய
வேகத்தில், தமிழனின் வர்மக்
கலையும் கூடவே பயணம் சென்று,
வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி
கண்டுப் பொலிவடைந்தன என்பதைத்
தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே
தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.
தற்காப்புக் கலையைப்
பொறுத்தமட்டில், சீனம்
நெடுங்காலமாகவே சிறந்து
விளங்கியிருக்கிறது. அங்கும்
அடிமுறை ஆசான்மார் பெரும்
அரசியல் ஞானிகளாகக்
கோலோச்சியிருப்பது வரலாற்றில்
பதிவாயிருக்கிறது. தற்காப்புக்
கலையில் சீனம் எந்த அளவுக்குப்
பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும்
கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களி
ல் வசிக்கும் அடிமுறை ஆசான்மார்
தற்காப்புக் கலையைச் “சீனாடி”
என்று குறிப்பிடுவதுண்டு.
சீனாவில் வேரூன்றியிருக்கும்
குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத்
தூரக்கிழக்கு நாடுகளின்
தற்காப்புக்கலைப் பிரிவுகளான
ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ
ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது
தமிழனின் களரிதான் என்பதற்குச்
சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள்
வைத்திருக்கின்றது. இந்தச்
சாட்சியங்கள் யாவும் மூத்த
தமிழ்க்குடியின் புகழை
முரசறைந்து நிற்கும் சத்தியங்கள்
என்பதில் சந்தேகம் இல்லை.
வர்மத்தின் அதிசயங்கள் !!
-------------------------------------------
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ
மருத்துவ உத்திகளிலோ இல்லாத
அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே
சில உண்மைகளைச் சுருக்கமாகக்
கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:
*ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும்
மூன்று அடிமுறை உத்திகளும்
தமிழனின் வர்மக்கலையில்
இருப்பதுபோல் வேறெந்தத்
தற்காப்புக் கலையிலும் இல்லை.
*வெட்டுக் காயங்ளிலிருந்து
பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும்
போடாமலேயே வர்ம நரம்புப்
பிடியால் கட்டுப்படுத்தி
நிறுத்திவிட முடியும்.
*ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை
எந்தவித மருந்தும் இல்லாமலேயே
வர்மக்கலையின் தடவுமுறைகளால்
உடனடியாகச் சரிசெய்துவிட
முடியும்.
*ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய
நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம
அடங்கல் கொண்டு நாலைந்து
நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
*நட்போடு கைகுலுக்குவது
போலவோ, பாசத்தோடு
கட்டியணைப்பது போலவோ
நடித்துக் கொண்டு பகையாளியைப்
பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம்
அறிந்தவனுக்கு முடியும்.
*மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று
மரணப்பிடியில் கிடப்பவனையும்
வர்மக் கலையின் உயிர்நிலை
நாடிகளைப் பயன்படுத்தி உடனே
எழுப்பிவிட முடியும்.
மேற்கூறிய உண்மைகளைச் சிலர்
நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம்.
ஆனால் வர்மக் கலையின்
அரிச்சுவடிகளையேனும் அறிய
நேரிடுபவர்க்கு அங்ஙனம்
மறுக்கவோ நகைக்கவோ இயலாது
என்பது திண்ணம். வர்மத்தின்
அதிசயங்களை அறிவார் மட்டுமே
அறிவார்.
இத்தகைய அறிவியல் வளர்ச்சி
இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே
குறிப்பிட்ட நவீன முறைகளை
விடவும் நேர்த்தியான,
செலவில்லாத ஒரு வைத்திய
முறையாக வர்மக் கலை
விளங்கியிருக்கிறது என்பது
நமக்கு கிடைத்திருக்கும்
நூல்களின் வாயிலாக அறிய
முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த
தகவல்கள் நமக்கு முழுமையாக
கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள்
அழிந்து போயிருக்கலாம், அல்லது
அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே
கருதத் தோன்றுகிறது.
தற்போது நமக்குக்
கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...
ஒடிவு முறிவு சாரி
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம காண்டம்
வர்ம பீரங்கி
வர்ம சூடாமணி
இந்த கலை அழிந்து போனதற்கும்
இந்த கலையின் சிறப்பே கூட ஒரு
காரணமாக இருந்திருக்கக் கூடும்.
ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த
ஒருவன் சகல விதத்திலும் தன் சக
மனிதர்களை விட அசாத்திய
திறமைகளைக் கொண்டவனாகி
விடுகிறான். அப்படிப் பட்டவனால்
எதனையும் ஆக்கவும் முடியும்,
அழிக்கவும் முடியும்.
ஒரு வேளை ஆசாபாசங்களில்
சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள்
கையில் இந்த கலை சிக்கி அவர்கள்
தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த
ஆரம்பித்தால் அது சமூகத்தில்
ஆபத்தான விளைவுகளையும்,
முன்னுதாரணங்களையும்
ஏற்படுத்தி விடும் என்று கருதியே,
சரியான மாணவன் கிடைத்தால்
மட்டுமே கற்றுத் தருகிற
கலையாகிப் போனது. சரியான
மாணவன் கிடைக்காவிட்டால் அந்த
குருவோடு அந்த கலை அழிந்து
போக வேண்டியதுதான்.
பலரும் நினைப்பதைப் போல இந்த
கலையினை எளிதில் கற்றுக்
கொள்ள முடியாது. இதற்கு
பல்வேறு கட்டுப்பாடுகளை
சித்தர்கள் வகுத்திருக்கின்றனர்.
போகர் ஒரு பாடலில் சீடனை
தெரிந்தெடுக்கும் வகையினை
இப்படிச் சொல்கிறார்.
"மறைவில் வைப்பதென்றால் மைந்தா
கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன்
றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல்
தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை
மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம்
காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த
தானால்
அப்பனே நிலையறிந்து நூலை
ஈயே"
- போகர்.
குறைந்தது பன்னிரெண்டு
ஆண்டுகள் ஒருவரின்
நடவடிக்கைகளைக் கண்காணித்து
அவரது தகுதியினை சோதித்து
அறிந்த பின்னரே அவருக்கு இந்த
கலையினை கற்றுக் கொடுக்க
வேண்டுமென கூறுகிறார்.
சரியான மாணவனைக் கண்டறிந்த
உடனும் அவருக்கு இந்தக்
கலையினை போதிக்க முடியாது.
இந்தக் கலையினை ஏற்றுக்
கொள்ளும் உடல் மற்றும் மனப்
பக்குவத்தை பெறுவதற்கான
பயிற்சிகளே முதலில் வழங்கப் படும்.
அவற்றில் தேறினால் மட்டுமே
குருவானவர் வர்மக் கலையினை
மாணவருக்கு அருளுவார்.
இதெல்லாம் இன்றைய அவசர
உலகத்துக்கு சாத்தியமாகுமா?
“வர்ம”மெனும் பொக்கிஷத்தின்
வானளாவிய புகழ்பற்றிச்
செருக்கும் செம்மாப்பும்
பூண்டிருக்கும் தமிழினம், அதன்
ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான
விடைதர இயலாமல் தலைநாணி
நிற்கிறது. ஒப்பற்ற
இக்கலைக்கென்று உலகளாவிய
பொது நூல் ஒன்று நம் கையில்
இல்லை என்பது உண்மையிலேயே
வருத்தம் தருகிறது. வர்மத்தைப்
பற்றி வலுவானதொரு இலக்கண
நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா
வரவேண்டிய உன்னத நிலையைக்
தமிழ் அன்னைக்கு நம் முன்னோர்
தரவில்லையே என்ற துயர்மிகுந்த
ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.
சிவபெருமான்தான் இதன் ஆசிரியன்
என்கிறது “வர்ம காவியம்” என்னும்
நூல். அகத்திய முனிவன்தான் இதன்
ஆசிரியன் என்கின்றன சில பண்டைய
செவிவழிச் செய்திகள். அகத்திய
முனிவன் வர்மசாஸ்திரத்தை
சமஸ்கிருத்தில் மட்டுமே
எழுதியதாக மலையாளக்காரர்கள்
வேறு வாதிடுகின்றனர்.
இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய
கூற்றும் உறுதி செய்யப்படாத
வெறும் யூகங்கள் என்பதால்
இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு
நாம் பெருமை தேடிக் கொள்ளவோ
உலக அரங்கில் பீடுநடை போட்டுப்
பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப்
பேசவோ நம்மால் இயலாமற்
போகிறது.
வள்ளுவனும் வர்ம நூலும்!
----------------------------------------------
வள்ளுவன் காலத்தில்கூட வர்மம்
மாண்புற்று விளங்கியிருக்க
வேண்டும். அதற்கான சான்றுகள்
திருக்குறளிலேயே போதிய
அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்”
என்ற சொல்லைக் கையாளுகின்ற
பெரும்பாலான இடங்களிலெல்லாம்
வள்ளுவன் வர்மத்தையும்
வைத்தியத்தையும் சுட்டிக்
காட்டுவதாகத் தோன்றுகிறது.
“ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும்
“நூலோர் வளிமுதலா எண்ணிய
மூன்று” (குறள்: 941) என்றும்
எழுதுகிற வள்ளுவன், வர்மக்
கலையையும் வர்ம நாடிகளையும்
நேரடியாகவே சுட்டிக்காட்டுக
ிறான் என்பது கூர்ந்து நோக்கத்
தக்கது. நமது வர்மச் சுவடிகளில்
கூட “திறமான நூல் எவர்க்கும்
வெளியிடாதே!” என்றும் “பொருள்
வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல்
தா என்று உன்னை ஏய்ப்பர்!” என்றும்
காணப்படுகின்ற வரிகளில் “நூல்”
என்ற சொல் நேரடியாக வர்மக்
கலையைச் சுட்டிக்காட்டத்தான்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே
வள்ளுவனும் அதே பொருளில்
“நூல்” என்ற சொல்லைக்
கையாண்டிருப்பதில் எந்த வியப்பும்
இல்லை. .வர்மம் - தோற்றமும்,
காலமும்!
சித்த மருத்துவ முறையொன்று
நாள்போக்கில் தற்காப்பு
கலையாகி, பின்னர் எதிரிகளை
கொல்லும் போர்க் கலையாக
மாறியது என்றால் அது வர்மம்
என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை,
வன்மை என்கிற தமிழ் பதத்தில்
மருவுதான் வர்மம்.இதனை மர்மம்
என்றும் சிலர் அழைப்பது
உண்டு.போர்க்கலையில் இந்த
முறையினை “நரம்படி” என்று
அழைக்கின்றனர்.
பஞ்ச பூதங்களின் கலவையான நமது
உடலானது பேசிகள், நரம்புகள்
ஆகியவற்றால் பின்னி பினைக்கப்
பட்டிருக்கிறது.இப்படி இவை
ஒன்றோடு ஒன்றாக பின்னிக்
கிட்க்கும் இடங்களை ”உயிர்
நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு
மனித உடலில் 108 உயிர் நிலைகள்
இருப்பதாகவும், அந்த உயிர்
நிலைகளை முறையாக
கையாளுவதன் மூலம் ஒருவரின்
உடலை வலிமையாக்கவும்,
வலுவிழந்து செயலற்றுப் போகவும்
வைக்கும் மிக் நுட்பமான கலைதான்
வர்மக் கலை.
தமிழர்களின் கலையான வர்மக் கலை
அகத்தியரால் உருவாக்கப்
பட்டது.சித்த மருத்துவம் தவிர
ஆயுர்வேத மருத்துவத்திலும்
வர்மங்கள் பற்றிய நூல்கள்
இருக்கிறது.இத்தகைய
சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை
பற்றி அகத்தியர் பின்வருமாறு
கூறுகிறார்.
"அண்ணலே உலகத்தில் வாழும்
மாந்தர்
காயமுறு விழுதலாலும்
விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய்
துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே
பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு
கியாய மாத்திரை"
- அகத்தியர் -
வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர்
கூறியிருந்தாலும், அகத்தியர்
அருளிய “ஒடிவுமுறிவுசாரி”
என்ற நூலே மிக முக்கியமானதாக
கருதப் படுகிறது. இந்த அரிய நூல்
இன்று மிகச் சிலரிடதேதான்
இருக்கிறது. இன்றைய தேர்ந்த
நரம்பியல் வைத்தியர்களுக்க
ே புரியாத அல்லது தெரியாத பல
நுட்பங்களை ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர்
தனது நூலில் துல்லியமாகவும்,
விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment