திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:–
அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
ஆதி பகவன் – 1
யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083
பித்ருக்கள் (இறந்தோர்)
தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
பிரம்மா – உலகு இயற்றியான் 1062
இந்திரன் – 25
கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103
லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
மூதேவி – மாமுகடி 617, 936
பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258
யாராவது இனி திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று கூறினால் இங்கு கூறப்பட்டுள்ள குறள்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளச் சொல்லுவோம்.
சனாதன தர்மத்தை குறை கூறும் சிலருக்கு இந்த பதிவு ஒரு உதவிய இருக்கும் என்று நம்புகிறேன்..
தமிழ் மேலே நம்பிக்கை, தமிழ் பற்று, தமிழன் என்ற உணர்வு இருந்தால் படித்து புரிந்துகொள்ளவும் அதன் பிறகும் குறை கூறினால் நீங்க தமிழனா என்ற கேள்விக்கு ஆளாக படுவீர்கள்.....
தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை;
தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை.
இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்;
தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.
இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.
இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.
பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.
விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்
விநாயகர் : ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
சிவன்:
சிவன் முதுமுதல்வன் (புறம் 166)
சிவன் முதுமுதல்வன் (புறம் 166)
தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)
பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்
(பரிபாடல் திரட்டு 1: 72-78)
உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
திருமால்:
மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே (பரிபாடல் 3)
லட்சுமி:
இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)
அவ்வித்து செய்யவள் (குறள் 167)
பிரம்மா :
பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி (திருமுருகாற்றுப்படை 164-165)
பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி (திருமுருகாற்றுப்படை 164-165)
முருகன்:
முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4) ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
இராமன்:
இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை (புறநானூறு 358 :18,19)
இப்போது சொல்லுங்க
இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.
இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.
இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும்.
ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.
தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?
தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?
தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)
No comments:
Post a Comment