Pages

Thursday, 22 March 2018

உலகின் முதல் அறுவை சிகிச்சை !!! தமிழனின் சிறப்பு !!!

இந்து என்பது மதம் இல்லை. மதவெறிகளை உருவாக்க தவறாக கூறியது இது. உண்மையில் இந்து என்பது இயற்கை தான் கடவுள் என்று பொருள்.
இதை உலக மக்களும் ஏற்ப்பார்கள்.

இந்த உலகிற்க்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’
அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு.
600)சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
மருத்துவமாமேதை.
இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர்.
உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக்
களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித
சமுதாயத்திற்க்கு வழங்கியவர். மயக்க மருந்து
அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின்
தந்தையாகப் போற்றப்படுபவர்.
இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு
விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான
மூட்டு நகர்வகளுக்கும் உண்டான மருத்துவ
முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறுவை
சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார்.
இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான
சிறிய கத்த்டிகள், இரட்டை விளிம்பி கத்திகள்,
வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குடல்
சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும்
பறவைகளின் தாடை எளும்புகளில் இருந்து
வடிவமைக்கப்பட்டவை.இவர் மேலும் பல்வேறு தையல்
முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளார்.
குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு
போன்றவற்றை நூலாக்க் கொண்டு
தைத்திருக்கிறார்.
சுஸ்ருத சம்ஹிதையில், 300 விதமான அறுவை
சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின்,
குறிப்பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று
போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment