Pages

Friday, 11 May 2018

இலெமுரியா என்னும் குமரிக்கண்டம் !!!

இலெமுரியா என்னும் குமரிக்கண்டம் !!!

உலகில் முதல் முதலாக உருவான மனித இனம் தமிழ் மக்களே !!!! 


மனிதனும் !!!
தமிழும் பிறந்த குமரிக் கண்டம் !!!!
மறக்கப்பட்ட உண்மைகள் !!

குமரி கண்டத்தை ஆங்கில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இலெமுரியா என்று அழைக்கிறார்கள்.

தமிழர்கள் !!!!


நாகரீகத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள். உலகிலேயே ஓர் மொழியை இனம் என்றும் கூறும் கூற்றுடைய மொழி தமிழ்.

தமிழர்கள் ஓர் பிரிவினர்கள் அல்ல, மனித இனத்தின் ஆணி வேர்.
மொழிக்கு மட்டுமின்றி
வாழ்வியலுக்கும் , இலக்கணம் வகுத்து வாழ்ந்தவன் தமிழன்.

தமிழ் மொழியை பேச மறந்து வரும் தமிழர்களே.
எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்?

“ கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.

ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன் தான்.
இதற்கு காரணம் எம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாதது தான்.

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலகம்



" குமரிக்கண்டம் “  இங்கு தான் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்துள்ளனர்.
ஆனால் இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது குமரிக்கண்டம்.

குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாக கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கூறப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும்.


இன்றோ அதை எல்லாம் மறந்து மீண்டும் நாணம், வெட்கம், என அனைத்தையும் அறுத்தெறிந்து மீண்டும் அம்மணமாய் திரிய மேற்கத்தியத்தை கட்டி அழுதுக்கொண்டு இருக்கிறோம். தமிழன் மட்டும் அல்ல மனிதர்கள் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய !!!!

தமிழனத்தின் எழுச்சியைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.....














கி.மு   14 பில்லியன்



பெரும்  வெடியில் உலகம் தோன்றியது.



கி.மு.  2.5 பில்லியன்


நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் உலகில் மனித இனம் தோன்றியது.
தென் குமரி என்னும் இலெமூரியா என்ற கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
அவர்கள் தான் தமிழ் மக்கள்.


" நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கி கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!!!

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா,
தென் ஆப்ரிக்க,
இலங்கை,
மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு நாடுகளும் , தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்".


ஏழ்தெங்க நாடு,
ஏழ்மதுரை நாடு,
ஏழ்முன்பலைநாடு,
ஏழ்பின்பலைநாடு,
ஏழ்குன்ற நாடு,
ஏழ்குனக்கரை நாடு,
ஏழ்குரும்பனை நாடு


என இங்கு நாற்பது ஒன்பது  ( 49 ) நாடுகள் இருந்துள்ளது !!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!

குமரிக்கொடு,
மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!!!!!

தென்மதுரை,
கபாடபுரம்,
முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நாடுகள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் !!!!
சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் தான்.
ஆனால் தமிழர்களின் பழமை வாய்ந்த கண்டம் மிகவும் முந்தையது தான்.
கி.மு 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது இந்த கண்டம்.






கி.மு. 360000


முதன் முதலாக !!!
இப்பொழுது உள்ள சீனாவில்  யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தவர்
தமிழர்கள்.




கி.மு. 300000


யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்
தமிழர்கள்.

மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும்ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்இலெமூரியாக் கண்டம். மேரு மலைஇலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில் இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.




கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.


கி.மு. 75000


கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.


கி.மு. 50000


உலகின் முதல் மொழியாக நம் தாய் மொழி 'உலக தமிழ் செம்மொழி' தமிழ் மொழியின் தோற்றம் ஏற்பட்ட காலகட்டம்.


கி.மு. 50000 - 35000


சின்னமனூர் செப்பேடுகளிலும் !!!தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30,000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 2000 அடி வரை இருக்கிறது.


மேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் ‘குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

சித்தர்கள் சில பேர் குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. முன்று சங்கம் வைத்து தமிழை வளர்த்து வந்தனர் எம் முதாதையர்கள். இந்த 3 சங்கமும் இருந்த கண்டம்தான் குமரிகண்டம்.

சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாக கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள்.


தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு கொண்ட கண்டம்.

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் போன்றன இன்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்ற காரணமான கண்டமாக விளங்கியுள்ளது குமரிக்கண்டம்.

தமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.

தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, நாலடியார், திருக்குறள் இது போன்ற அரும்பெரும் பொக்கிஷங்கள் தோற்றம் பெற்றகாலம்.




கி.மு. 35000 - 20000


ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் எல்லாம் தமிழ் மொழியிலிருந்து பிரிந்த காலகட்டம்.



கி.மு. 20000 - 10000


இந்தோ ஐரோப்பிய மொழிகள் எனப்படும் ஒளியர் கிளைமொழிகள் தமிழ் மொழியிலிருந்து பிரிந்த காலகட்டம்.



கி.மு. 10527


பாண்டிய மன்னன் காய்கினவழுதி முதல் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த காலகட்டம் இது. 4449 புலவர்கள் கூடி, முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இங்கு தான் இயற்றினார்.

கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் வாழ்ந்துள்ளார். இங்கு மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றியுள்ளதாக எழுதியுள்ளனர்.

ஆதி  மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்கு உட்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.




கி.மு.10000


கடைசி பனிக்காலம் முற்றுப்பெற்றது. இந்த காலகட்டத்தில், உலக மக்சுள் தொகை 4 மில்லியன்ஆகவும்.. குமரிக்கணடம் தமிழர் மக்கள்  தொகை 1,00,000 ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது.




கி.மு. 6087


மனிதர்கள் மற்றும் தமிழினம் தோன்றிய தாய் மடியான இலெமுரியா எனப்படும் குமரிக் கண்டம், கடல் கொந்தளிப்பில் மூழ்கி அழிந்தது.



கி.மு. 6000 - 3000


கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன், இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.



கி.மு. 5000


உலக மக்கள் தொகை 5 மில்லியன். முகஞ்சதாரோ, ஹரப்பா அடங்கிய சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கிய காலகட்டம் இது தான்.



கி.மு. 4000


சிந்து சமவெளியை சேர்ந்த மக்கள் தொகை 10 லட்சமாக உயந்தது. மற்றும் கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம் ஆனா காலகட்டம்.
சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

அரபிக் கடலுக்கு தெற்கில்,
இலட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப்பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாக குறிப்பிடுகின்றது.

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் !!!குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16,008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.

இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார் எனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் கூறப்படுகின்றது.

ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது. திருவிளையாடல் புராணத்தின்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் ராமன், ராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.

அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடந்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

 தமிழின் முதல் சங்கம் 


இந்த கடலடியில் உள்ள
" தென் மதுரையில் "
கி.மு 4440 இல்
 4449 புலவர்கள்களுடன் ,
சிவன்,
முருகர்,
அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,
" பரிபாடல்,  முதுநாரை,  முடுகுருக்கு,
கலரியவிரை,  பேரதிகாரம்"
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .

இரண்டாம் தமிழ்ச் சங்கம் 

" கபாடபுரம்" 
நகரத்தில்
 கி.மு 3700 இல் 3700புலவர்கள்களுடன் !!!

அகத்தியம்,
தொல்காப்பியம்,
பூதபுராணம்,
மாபுராணம் 
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . 
இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.






கி.மு.3200


சிந்து சமவெளியினர், 27 விண்மீன்களை பற்றிய இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைப்பாட்டைக் கண்டரிந்தினர்.




கி.மு. - 3113


அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பமான காலகட்டம் இது.



கி.மு. - 3102


சிந்து சமவெளிக் தமிழர்களின் 'கலியாண்டு' ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைக்கத் தொடங்கிய காலகட்டமும் இதுதான்.



கி.மு. - 3100 - 3000


ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.


கி.மு - 2600


எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.


கி.மு. - 2387


இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. மற்றும் ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.


கி.மு. - 2000 - 1000


காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம்.




கி.மு. - 1915


திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் கூடி நடந்ததாக கருதப்படும் காலகட்டம் இது.

கி.மு. - 1900


வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் 


இன்றைய மதுரையில்
கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் பல நூல்களையும் , பாடல்களை இயற்றப்பட்டது.


கி.மு. 1500


முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது.
இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450


உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.



கி.மு. - 1316


மகாபாரதத்தை வியாசர் எழுதிய காலகட்டம் இது தான் என்று கருதப்படுகிறது.


கி. மு. 1250


மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200


ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.




கி.மு. 1000


உலக மக்கள் தொகை 50 மில்லியனாக உயர்ந்தது..



அது மட்டும் இல்லை. இந்த தொழில்நுட்ப உலகில் நாம் எல்லாம் உடனடி தீர்வை நாடி இரசாயண மருந்துக்களை பயன்படுத்தி பின்னர் பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடுகின்றது.

ஆனால் அன்று தமிழன் மருத்துவங்களை பயன்படுத்திய விதம் வேறு...? எப்படி கண்டு பிடித்தான் மூலிகைகளை வைத்து தொற்றுநோய் கூட நொடியில் மறைக்க செய்யும் மருந்துகளை..?

இவற்றுக்கு எல்லாம் இன்று கூட விஞ்ஞானம் விடை தேடுகின்றது... எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் இன்றி எப்படி அதை தமிழன் கண்டு பிடித்தான்.


பலவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவன்தான் தமிழன். தமிழன் தன் அதீத பகுத்தறிவின் ஊடாக தான் வாழ்ந்த நிலங்களை கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை, என ஐந்து திணைகளாகவும், தமிழ் இலக்கியங்களை அகம் , புறம் எனவும் தமிழரின் கலைகளை இயல், இசை, நாடகம் என்றும் எழுத்துக்களை கூட உயிர், மெய், உயிர் மெய் எனவும் வகுத்தான்.

மொழி அறிவியலை தமிழன் இத்தகைய அளவு கையாண்டதை போல யாரும் கையாலவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

இத்தனை சிறப்புகளையும் கொண்ட "குமரிக்கண்டம்“ இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் ஒவ்வொரு தமிழனும் தொடர்பு இல்லாதவன் போல சிதைந்து கிடக்கின்றான்.

ஏன் வரலாற்றை தெரிந்து கொள்ள வில்லை.
 இனியாவது தலை நிமிர்ந்து நில் தமிழனென்று சொல்.
யாருக்கும் இல்லாத தனிப் பெருமை தமிழனுக்கு உண்டு.
இதை காக்க வேண்டிய கட்டாயம் தனி மனிதனுக்கு உண்டு.

கி. மு. 950


அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.


வடமொழி என்னும் இந்தி மொழி மற்றும் சமஸ்கிருத மொழி !!!!
முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழியாக உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900


இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850  


இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி வடமொழி என்னும் இந்தி , சமஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கியது தமிழ் மொழியே !!!!!

 (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின.
வட புலத்தில் பிராமி தமிழ் எனவும் தென் புலத்தில் தமிழ் எனவும் பெயர் பெற்றன.
பிராமி தமிழுக்கும்,  தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒன்று தான்.
பேசியில் பரிமாணம் பெற்றது.

வடமொழி பிராமி தமிழ் , தென்மொழி தமிழாகவும் பெயர் பெற்றன. (சமஸ்கிருதம் வடமொழி அல்ல. தூய்மையான தமிழ் மொழியே !!!!
மந்திரம் , சாஸ்திரம் ,வேதம் , ஆகிய சமஸ்கிருத வார்த்தை அனைத்து தமிழ் மொழியில் இருந்தே உருவானது.

சமஸ்கிருதம் தமிழ் மொழியை சார்ந்து உள்ளது.
தமிழில் இருந்து பிரிந்து செல்ல காரணம் அது போதுமான இலக்கண வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

தமிழ் மொழி நூல்கள் பல ஆயிரம் இருந்தது.
அதில் முக்கியமான நூல்கள்.
தொல்காப்பியம் - பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன.
 சங்க காலத்தில்
நற்றினை,
குறுந்தொகை,
அகநானூறு,
புறநானூறு,
 கலித்தொகை,
பதிற்றுப்பத்து,
 பரிபாடல்,
பத்துபாட்டு,
எட்டுத்தொகை,
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை,
மருதக்காஞ்சி,
முல்லைப்பட்டு,
குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை,
நெடுநல்வாடை,
முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல்,
பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
சீவகசிந்தாமணி,
வளையாபதி,
குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும் !!!!!

முதுமொழி காஞ்சி,
களவழி நாற்பது,
 கார்நாற்பது,
நாலடியார் ,
திரிகடுகம்,
நான்மணிக்கடிகை,
சிறுபஞ்ச மூலம்,
ஏலாதி,
ஆசாரக்கோவை,
 நானூறு,
இன்னா நாற்பது,
இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.


கி. மு. 776


கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750


தமிழ் மொழியில் உருவான
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

 பிராகிருதம் அல்லது பாகதம்
 (பாளி: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது.

எனவே  பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல.
 ஒரு மொழி குடும்பத்தை குறிக்கின்றது.
அது தமிழ் மொழியே !!!!
தமிழ் சங்கதத்தையும் பாகத மொழிகளையும் , வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர்.

இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது.

 பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், அந்தணர்கள் அதை வடமொழிக்கு  புறம்பாகவே கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தன.
புத்தரின் தாய் மொழி இதுவே !!!!
ஆனால் புத்தருக்கு தமிழ் மொழி நன்றாக தெரியும் என்பது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.


கி. மு. 700


சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543


கெளதம புத்தர் காலம், தற்போதைய நேபாளம் நாட்டில் பிறந்தார்.

கி. மு. 600


லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.


கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் .
இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.


கி.மு. 599 - 527


மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி.மு. 560


பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி.மு. 551 - 478


கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி.மு. 500


கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய தமிழ் மக்கள் தொகை 50 மில்லியன்.


கி.மு. 478


இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி.மு. 450


ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி.மு. 428 - 348


சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி.மு. 400


கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி.மு. 350 - 328


உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி.மு. 328 - 270


மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி.மு. 326


அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி.மு. 305


சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி.மு. 302


சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி.மு. 300


சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி.மு. 300


கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273 - 232


மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270 - 245


சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251


புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245 - 220


சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221


புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200


கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220 - 180


குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200


முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.


தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125 - 87


ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87 - 62


செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62 - 42


யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42 - 25


பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31


உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25 - 9


இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9 - 1


கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4


ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி.  1 - 20


சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.


குமரிகண்டம் இலக்கியத்தில் மட்டும் அல்ல, சிற்பம் செதுக்கல்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தன. பார்க்கும் திசைகளில் எல்லாம் சிற்பங்கள் கட்டடங்கள் என குவிக்கப்பட்டிருந்தன.இதற்கு எடுத்துக் காட்டாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கூறலாம்.

இந்த அளவு சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கோவில்களை இன்று பார்த்தாலும் தொழில்நுட்பம் தோற்று விடும் என்பது உறுதி.


இதற்கு எடுத்துக் காட்டாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கூறலாம்.

அது மட்டும் அல்ல இவ்வாறான கட்டடங்களை அமைக்க 200 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்பது உண்மையே...

இதனை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு சிறப்பு அம்சங்கள் பல உண்டு.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப்பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை இராஜ இராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் இராஜ இராஜன். எதிரியும் மயங்கும் உன்னத கலை அம்சத்தை கொண்டுள்ளது.

வரலாற்று இலக்கிய குறிப்பு !!!

குமரிக்கண்டம் என்னும்  கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இந்தியாவை போல பல மடங்கு பெரிய கண்டங்களாக விளங்கியது குமரிக்கண்டம் ( இலெமுரியா கண்டம் ).

 இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.

தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில் தான்  தமிழர்கள் முதன் முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்.

ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல் கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்கு உட்பட்டது
 என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.

பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:


  1.    சிலப்பதிகாரத்தில் “பஃறுளியாறும்”, “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்” “கொடுங்கடல் கொண்டது” பற்றிக் கூறுகின்றது.

2.   அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

3.  பாண்டியனை வாழ்த்தும் பொழுது
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)

4.  “தொடியோள் பௌவம்” என்னும்          சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் “தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே

 எழுநூற்றுக் காவத வாறும்,
இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ்குணகாரை நாடும்,
ஏழ்பின்பாலை நாடும்,
ஏழ்குன்றநாடும்,
ஏழ்குணகாரை நாடும்,
ஏழ்குறும்பனை நாடும்
என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”

5.  இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்.

6.  தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
“குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி” (புறம் 6:67)

7.  “மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட” (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

8.  இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

தமிழ் உலகின் பழமையான மொழியும் !!
தமிழர்கள் தான் முதலில் தோன்றிய மனித இனம்.


அந்த காலத்தில் அதாவது கி.முவிற்கு முன்பே தமிழகத்தில் கட்டப்பட்டு இருக்கும் சில கோவில்களுக்கு செல்லும் போது அந்த கோவில்களின் தூண்களில் சில வித்தியாசமான உயிரினங்களின் வடிவங்கள் அதாவது சிங்கம் மற்றும் யானைகள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இவ்விரண்டுமே சிங்கமோ அல்லது யானைகளோ இல்லை அவைகள் யாழிகள் எனப்படும் அந்த காலத்தில் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் ஆகும்.










வித்தியாசமான உருவங்களும் இருக்கும். தற்போது அந்த உருவங்களை ஏலியன்ஸ் என்றும் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஏலியன்ஸ் உடன் தொடர்பு இருந்திருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். குமரிக்கண்டம் இருப்பதை நீரூபிக்க அறிவியல் விஞ்ஞான ஆதாரம் இருந்தும் அது பற்றிய தகவல்களை மறைக்கிறது. குமரிக்கண்டம் இல்லை என்று மறுக்கவும் எந்தவொரு ஆதாரமும் இல்லை.
இதற்கு பிறகு வரும் கால கட்டத்தில் நாம் தான் குமரிக்கண்டத்தில் மிஞ்சிய பகுதியான  இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சி மேற்கொண்டு குமரிக்கண்டத்தின் வரலாறு வெளிவர வேண்டும்.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு !!!தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு , எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் .

இந்திய அரசு வெளிக் கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் !!!!!

உலகை ஆண்ட தமிழர்கள் இன்று !!!!
அனைவராலும் அழிக்க நினைப்பதும் , அழிப்பதும் தவறு அல்லவா !!!!!
உலகின் முதன் முதலாக தோன்றிய இனம் தமிழ் மக்களே.
இயற்கையின் அழிவில் அழிந்த குமரி கண்டம் என்கிற இன்றைய இலெமுரியா கண்டம்.
அழிவின் விளிம்பில் இருப்பது கொடூரம் அல்லவா !!!!!
ஈன்ற தந்தையை அழிக்க எண்ணும் உலக மக்கள் !!!!

               தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                       தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும்.
                  வலியே  " வலிமை "
              - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment