Pages

Sunday, 7 March 2021

களப்பிரர்கள் யார் ?

 

களப்பிரர்கள்

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் தமக்குள் இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்த போது வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் களப்பிரர்கள்.

களப்பிரர்ளைப் பற்றி தொல்காப்பியத்தில்

களவரகோமான

என்று கூறப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்து எழுதுவது இல்லை என்பதால் இச்சொற்றொடர் களப்பிரரைக் குறிக்கும் என்பர்.

தென்னிந்திய அரசர்களின் ஒற்றுமையின்மையால் வட இந்தியாவில் இருந்து வந்து தமிழகப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள்.

இவர்கள் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தாலும் இவர்களுடைய ஆட்சியாளர்கள் பற்றிய தகவல் இல்லை.

இவர்களது போர் வெற்றி பற்றிய செய்தி 10ம் நூற்றாண்டு நூலான யாப்பருங்கலத்தில் உள்ளது.

கோமான் களப்பாளன்

கொல்யானை

போமாறு போமாறு போமாறு போம்

என்று கூறப்பட்டுள்ளது.

களப்பிரர் படை செல்லும்போது அப்படையைப் பிணந்திண்ணி கழுகுகள் பின்தொடர்ந்து செல்லும் என்று குறிப்பிடுவர்.

இந்த களப்பிரர்கள் பெரும்பாலும் பாண்டியரை எதிர்த்தே போரிட்டதாக தெரிகிறது.

இதுவரை கிடைத்துள்ள குறிப்புகளில் இவர்கள் பின் மன்னர்களை எதிர்த்து போரிட்ட செய்தி அதிகளவில் கிடைக்கவல்லை.

இதற்குக் காரணம் களப்பிரர் வருகையின் போது தமிழகத்தைப் பாண்டியர் ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.

களப்பிரர் ஆட்சியில் சமண, பௌத்த மதங்கள் ‌இருந்தன.

போதிதர்மர் வாழ்ந்த காலமும் களப்பிரர் காலம் என்பர்.

கொடும்பாளூர் கல்வெட்டு, இருக்குவேல் என்ற அரசன் களப்பிரர்களுக்கு அடங்கி அரசாண்டான் எனக் கூறுகிறது.

களப்பிரர் தமிழ்ப் பாரம்பரியத்தை அழித்தனர்.

களப்பிரர் காலத்தை இரு வகையில் கூறுவர்.

இருண்ட காலம், பொற்காலம்.

களப்பிரர் ஆட்சியில்தான் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் நூல்களைத் தவிர பிற நூல்கள் அனைத்தும் தோன்றியதாகும் கூறுவர்.

காரணம் பிற நூல்கள் பலவும் நீதி நூல்கள்.

நீதி நூல்கள் பலவும் களப்பிரர் காலத்தில் தோன்றியதாக குறிப்புகள் உள்ளன.

குறிப்பாக,

  1. பல்காப்பியம்
  2. சீவக சிந்தாமணி
  3. கார் நாற்பது
  4. திரிகடுகம்
  5. ஏலாதி
  6. களவழி நாற்பது

இப்படி பல நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியுள்ளன.

களப்பிரர் காலத்தில் தான் தமிழ் மொழி பிராமி எழுத்து வடிவத்திலிருந்து வட்டெழுத்து முறைக்கு மாறியது.

செய்யுள்களில்,

  • தாழிசை
  • துறை
  • விருத்தம்

போன்ற செய்யுள் வடிவங்கள் தோன்றின.

களப்பிரர்களின் வீழ்ச்சி

களப்பிரர்களின் கடைசி காலத்தில் பக்தி இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன.

அதாவது, கி.பி. 5–7ம் நூற்றாண்டுகளில் சைவம், வைணவம் எழுச்சி பெற்றன.

கி.பி. 6ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய அரசன் கடுங்கொன் பாண்டு களப்பிரர்களிடமிருந்து தமிழகத்த்தை மீட்டார் என்று கூறப்படுகிறது.

களப்பிரர்கள் தமிழகத்தில் சிற்றரசுகளை நீக்கி, மாபெரும் அரசாட்சியை அறிமுகப்படுத்தினர்.


இந்த பதிவுகளை உருவாக்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு. அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


   தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment