Pages

Friday, 19 February 2021

Advocate black day Feb 19 , வழக்கறிஞரின் கருப்பு நாள் சொல்லப்படும் பிப்ரவரி 19 பற்றி முழு விளக்கம்.

 

Advocate black day Feb 19 , வழக்கறிஞரின் கருப்பு நாள் சொல்லப்படும் பிப்ரவரி 19 பற்றி முழு விளக்கம்.
  • கடந்த 2009ல் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • இந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அப்போது உயர்நீதிமன்றம் வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வழக்குரைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.
  • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், வழக்குரைஞர்களை கைது செய்ய முயன்ற போது கலவரம் ஏற்பட்டது.
  • கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் போது போலீஸார் நடத்திய தடியடியில் வழக்குரைஞர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
  • மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் கார்களின் கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன.
  • இந்த தாக்குதலைக் கண்டித்து ஆண்டு தோறும் பிப்ரவரி 19-ஆம் தேதியை வழக்குரைஞர்கள் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப் 19 அன்று கறுப்பு தினம் அனுசரித்து வருகின்றனர் அதற்கு காரணம்,

2009 ம் ஆண்டு பிப் 19 அன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாக்கத்திற்குள்ளேயே மிகக்கடுமையாக போலீஸாரால் தாக்கப்பட்டனர் அந்த சம்பவத்தில் நூறுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதி திரு ஆறுமுக பெருமாள் ஆதித்தனும் படுகாயமடைந்தனர்.

பத்திரிக்கைகள் நடந்த உண்மையான செய்தியை வெளியிடாமல் ஏதோ காவல் துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் தன்னிச்சையாக நடந்த மோதல் என்பதை போல செய்திகள் வெளியிட்டன.

ஆனால் அதன் பின்னணியில் அந்த தாக்குதல் நடவடிக்கை திட்டமிட்டு ஆளும் திமுக அரசினால் காவல்துறையை ஏவி சம்பவங்களை ஜோடித்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவிக்கிறது,

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் நடந்து வந்த சமயம், ஈழத்தில் இன அழிப்பு நடந்து வருவதை பற்றிய விவரம் புரிந்த தமிழ் ஆர்வளர்கள் மத்திய மாநில அரசுகளின் தமிழர் விரோத போக்கிற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்தனர், அதில் வழக்கறிஞர்களின் பங்கு அளப்பெரியது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்தும் நீதிமன்ற புறக்கணிப்பு மூலம் ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டு வந்தனர்.

2009 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி கு.முத்துகுமார் என்கிற இளைஞர், இவர் ஒரு பத்திரிக்கையாளர் சாஸ்திரி பவனில் தனக்கு தானே தீயிட்டு தனது உயிரையே அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஈழ தமிழ் மக்களுக்கு உதவ உயிர்கொடையாக கொடுத்தார்

"இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். ஒன்றிய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களைத் திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று தனது மரண வாக்குமூலத்தில் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.

அவரது உடலை ஊர்வலமாக எடுத்த செல்லவும் தடை விதிருந்தார் கருணாநிதி, மக்கள் எழுச்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக காதல் தோல்வியில் இறந்தார் முத்துக்குமார் என்று செய்திகளை வெளியிட வைத்தார், ஈழம் என்கிற வார்த்தையையே தடை செய்து வைத்திருந்தார் கருணாநிதி.

மாணவர் போராட்டம் வலுவடையாமல் இருக்க பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அனைவரையும் ஊருக்கு அனுப்பி வைத்தார், மானாட மயிலாட பார்த்து பொழுதை ஊரில் கழியுங்கள் என்று அனுப்பி வைத்தார்.

வழக்கறிஞர்கள் தந்து வரும் குடைச்சலை தான் எப்படி சமாளிப்பது என்று சிந்தித்திருக்கும் வேளையில் ஒரு மாத தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு முடிந்து பிப் 19, 2009 வியாழக்கிழமை அன்று அனைவரும் நீதிமன்றத்தில் தங்கள் பணிகளை தொடங்கி இருந்தனர்,

அப்போது சுப்பிரமணியன் சுவாமி வேறு ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் அவர் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் பேசி வந்த காரணத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது தமிழர்களை இழிவு படுத்தும்படி கொச்சையான வார்த்தையை பேசி திட்டியிருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் அவரை தாக்கவும் முற்பட்டதாக தெரிகிறது…

அதில் ஒரு சாரர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்தில் கொச்சையாக பேசிய சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளனர் இந்த நிகழ்வுகள் சென்று கொண்டிருந்த போதே வழக்கறிஞர்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

வாகனங்கள் கொளுத்தப்பட்டன துணை காவல் நிலையமும் கொளுத்தப்பட்டன காவல் படையினரும் அதிவிரைவு படையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களின் மண்டையை பதம் பார்த்தனர் இதில் நீதிபதி ஆதித்தனும் படுகாயமடைந்தார்.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் கிடப்பில் தான் இருக்கிறது, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை நடத்த சொன்ன நான்கு அதிகாரிகளின் பெயர் சென்னை ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட யார் பெயரும் குற்ற பத்திரிக்கையில் இடம் பெறவில்லை அந்தளவிற்கு வழக்கறிஞர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாக பார்த்தனர். கருணாநிதி CBI க்கு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்கள் நடத்தும் ஈழம் தொடர்பான போராட்டத்தை கொச்சை படுத்த திசை திருப்ப கருணாநிதி அரசு காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி நடத்திய நாடகம் இது என விமர்சித்தார் பாமக தலைவர் இராமதாஸ்.

ஜெயலலிதாவும் வைகோவும் சட்டம் ஒழுங்கை காக்க தவறியதால் பதவி விலக சொல்லி திமுக வை வலியுறுத்தினர்.

நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்யன்:

அது முதல் பிப் 19 அன்றைய நாளை நீதித்துறையின் மீது காவல்துறையை வைத்து நடத்திய அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அந்த நாளை கறுப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகிறார்கள்.

கு முத்துக்குமார் பற்றி … ஈழத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக ..

உன் உள்ளத்தில் பற்றிய தீயை நீ தீர்க்கமாக வீரத்துடன் சொல்லிவிட்டாய் சந்தர்ப்பவாதிகளிடம் சிக்கிய நாங்கள் கோழைகள் தான்! மன்னித்துவிடு!

இந்த கேள்வியிலாவது உன் ஈகத்தை மக்களுக்கு சொல்லலாம் என்று தான் படங்களை பதிவிட்டுள்ளேன், இதை எம் மக்களுக்கு சொல்லவும் உரிமையில்லை காரணம் பிண அரசியல் செய்கிறோம் என்பார்கள் கயவர்கள், உன் ஈகத்தை காதல் தோல்வி என்று கொச்சைப் படுத்தியவர்கள்! ஈரமில்லாதவர்கள்!

கு முத்துக்குமார்:



இந்த பதிவுகளை வழங்கிய தோழர்கள்
 திரு. அருண் அவர்களுக்கும் , திரு.அரசேந்திரன் அவர்களுக்கும்
  மிக்க நன்றி !!! 

     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment