Pages

Tuesday, 16 February 2021

சூரியன் உட்பட எல்லா கோள்களும் , உருண்டையாகவே இருக்க காரணம் என்ன ?


முதலில் கோள்கள் உருவான போது அவை பல்வேறு வடிவங்களில் தான் இருந்துள்ளன.

கட்டம், சதுரம், என பல வடிவங்களில் இருந்துள்ளன.

இப்படி உருவாகும் கோள்கள் அனைத்திலும், அவற்றின் நடுவே உள்ள மையத்தை நோக்கி இழுக்கக்கூடிய மைய நோக்கு விசை ஒன்று உருவாகிறது.

இந்த விசையால் தான் முதலில் கோள்கள் பல வடிவங்களில் உருவானாலும் இறுதியில் தற்போது உள்ளவாறு கோள வடிவத்துக்கு மாறியுள்ளன.

நாளையே சூரியனில் ஏதேனும் பிளவு ஏற்பட்டு, அதிலிருந்து ஏதேனும் கோள்கள் புதிதாக தூக்கி வீசப்பட்டு சூரியனை குறிப்பிட்ட திசையில் அது சுற்ற ஆரம்பித்தால் அதுவும் காலப்போக்கில் அதனுள் ஏற்படும் இந்த மைய நோக்கு விசையால் கோள வடிவத்துக்குத்தான் மாறும்.

இந்த காரணத்தால்தான் கோள்கள் அனைத்தும் உருண்டை வடிவிலேயே இருக்கின்றன.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.அருண் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!


                 தமிழால் இணைவோம் !!!
                   அறிவால் உயர்வோம் !!!
                           தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "
                  - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment