Pages

Saturday, 31 October 2020

கடல் என்ற சொல்லுக்கு இலக்கியம் மற்றும் இலக்கண பெயர்கள்.


'Ocean' என்னும் பெருங்கடல் சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள்:

  1. அகத்தியா
  2. அம்பரம்
  3. அம்புதி
  4. அளக்கர்
  5. கடும்புனல்
  6. கிடங்கர்
  7. சகரநீர்
  8. சாகரம்
  9. தரணிபூரம்
  10. தாரீடம்
  11. நித்தியம்
  12. நீந்து
  13. நேமி
  14. பரப்பு
  15. பராங்கவம்
  16. பாராவாரம்
  17. பெருங்கடல்
  18. பெருநீர்
  19. பேராழி
  20. பேரு
  21. மாக்கடல்
  22. மாதங்கம்
  23. மாதோயம்
  24. மாநீர்
  25. வாரகம்
  26. வாரிதி

  • புறவாழி, வேலாவலையம், வளைநீர் - பெரும்புறக்கடல்-(The outermost ocean surrounding the seventh annular continent)
  • கசம், அழுவம், ஆழி, நீராழி - ஆழ்கடல்
  • வேலாழி (வேல்-பகை) பகை நிறைந்த ஆழ்கடல்

இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் 

திரு. நன்னிச் சோழன் அவர்களுக்கு 

மிக்க நன்றி !!!!!


         தமிழால் இணைவோம் !!!

         அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 30 October 2020

இந்திய நாடு ஏன் தமிழ்நாட்டை அதாவது தமிழ் தேசத்தை கண்டு ஏன் மிரள்கிறது !!!!


இந்த பதிவில் எனது விடையுடன் சேர்த்து இந்தியாவின் பிறமாநில மக்கள் தமிழ்நாட்டின் மீது வைத்து இருந்த பல கருத்துகளை நான் கீழயே இணைத்து இருக்கும் கணணொளியில் பகிர்ந்து இருப்பார்கள், மிகவும் சுவார்ஸமாக இருக்கும் எனது விடையுடன் சேர்த்து தவறாமல், நீங்கள் அந்த காணொளியும் பார்க்கப்போகிறீர்கள் :-

  • தமிழ்நாடு மாநிலம் வரலாற்று சிறப்புக்கு உரியது என்றும் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் என்பதை இந்தியா நன்கு அறியும்.
  • தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரிகமும் உலகில் பழமையானது என்று இந்திய மக்களும், நாடும் அறியும்.
  • இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மொழி எல்லையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று இந்தியா நன்கு அறியும்.
  • அதனால், மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு, போன்ற வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதையும் இந்தியா நன்கு அறியும்.
  • தமிழ்நாடு இல்லையென்றால் இந்தியாவின் ஜிடிபி சரிந்துவிடும் என்பதையும் இந்தியா நன்கு அறியும். காரணம் வேளாண்மை, தானியம் , தேயில்லை, காப்பி, ரப்பர் போன்ற பலவற்றை மற்ற மாநிலம் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமிழ்நாடு என்பதை இந்தியா நன்கு அறியும்.
  • சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி :-தமிழ்நாடு மாநிலம் "Good Governance Index" தரவரிசை படி முதலில் சிறந்து விளங்குவதாக புள்ளிவிவரத்தை அரசு வெளியிட்டது.
  • இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இங்கு பொதுப்போக்குவரத்து, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் சிறந்து விளங்குவதாக மற்ற மாநில மக்களே கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
  • முழுமையாக இந்த காணொளியில் பார்க்கவும்,

ஆக, எனது கருத்து என்னவென்றால் : இந்தியா தமிழ்நாட்டை "எப்படி ஒரு கட்டடம் எழுப்புவதற்கு பல தூண்கள் தேவைப்படுகிறதோ, அதுபோல இந்தியா என்ற நாட்டை கட்டடம் போல எழுபவதற்கு தமிழ்நாடு என்ற தூண் நிச்சயம் இந்தியாவுக்கு தேவை". தமிழ்நாட்டை பல தூண்களை போலத்தான் இந்தியா பார்க்கும், இதுவே உண்மை.



உலக கடவுள் சிவன். உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே பெயர். எகிப்து கடவுளுக்கு கடவுளாக வணங்கும் கடவுள் சிவன் அதாவது ஹோரஸ் !!!

 இப்பொழுது கீழே உள்ளவரை நன்கு கவனியுங்கள். இவர் யார் தெரியுமா?

இவரே சிவன். 

ஹோரஸ் (ரா) - எகிப்தின் பழம்பெரும் கடவுளாக போற்றப்படுபவர். ஆகாயத்தின் கடவுளாக பண்டைய எகிப்து மக்களால் வழிபடப்பட்டவர்.

சரி. இப்பொழுது ஹோரஸின் உருவம் எப்படி விவரிக்கப்படுகிறது?

1. கையில் திரிசூலம் போன்ற போர் கருவியை வைத்திருப்பவர்.

2. மலைவாசி போன்று புலித்தோலை ஆடையாய் தரித்திருப்பவர்.

3. தவம் செய்வதற்காக தனது வலக்கரத்தில் ருத்திராச்ச மாலையை ஒத்த மணியை வைத்திருப்பவர்.

4. தலையின் மேல் பாம்போடு காட்சியளிப்பவர்

எங்கேயோ கேள்விப்பட்டதைப்போல் இல்லை?

மேலும் ஒரு ஆய்வு!

ஹோரஸின் பெயர் வரலாற்றைப் புரட்டினோமானால் இன்னும் பல அருமையான தகவல் கிடைக்கும்.

ஹோரஸ் என்னும் பெயர் ஹோர் என்னும் லத்தீன் மொழிச்சொல்லில் இருந்து மருவியதாகும். அதற்கு "தொலைதூரத்தில் உள்ள ஒருவர்" அதாவது எட்டமுடியாதவர் என்று பொருள். ஆதலால் தொடமுடியாத அளவிற்கு உயரத்தில் உள்ள ஆகாயத்தை குறிக்கும் வண்ணம் ஹோரஸ் விண்ணளவு உயர்ந்த கடவுளாக அறியப்படுகிறார்.

ஈசனும் அடிமுடி காணமுடியாதவர் என்று போற்றப்படுபவர். ஆகாய வடிவில் சிதம்பர நடராசராக காட்சியளிப்பவர்.

சிவனின் பல பெயர்களுள் "ஓரையோன்" என்பதும் ஒன்று. திருவாதிரை ஓரை சிவனின் அம்சமாக கருதப்படுகிறது.

ஹோரஸ் என்ற சொல்லும் ஓரையோன் என்ற பண்டைய தமிழ்ச்சொல்லில் இருந்து மருவியிருக்க வாய்ப்பு உண்டு.

ஓரையோன் →ஓரஸ் →(ஹோ)ரஸ்

எகிப்தில் உள்ள 4500 ஆண்டுகளுக்கும் பழமையான உலக அதிசயங்களில் ஒன்றான மூன்று கிசா பிரமிடுகள் திருவாதிரை ஓரை அமைப்பில் உள்ள மூன்று நட்சத்திரங்களுக்கு முறையே நேர் கோட்டில் பூமியில் கட்டப்பட்டுள்ளதாக 1980ஆம் ஆண்டு நடந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதன் மூலம் எகிப்தின் கிசா பிரமிடுகளுக்கும் திருவாதிரை ஓரைக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்பது ஆராய்ச்சிற்குரிய செய்தியாகும்.

மேற்கூறிய ஆய்வுகளை வைத்து பார்க்கும்பொழுது சிவனே ஹோரஸாக இருக்க வாய்ப்புகள் உள்ளது!

கீழுள்ள சில இணை மற்றும் காணொளிகளில் கூறப்பட்ட ஆய்வின் விளக்கங்களைப் பொருத்து நான் மேலே கூறியுள்ளேன். இன்னும் பல ஆய்வுகளை மேற்கொண்டால் தமிழின் தொன்மையையும் பண்டைய தமிழர் வாழ்ந்த அனைத்து நிலப்பரப்புகளின் உண்மையையும் அறிய இயலும்!

Eye of Horus / Eye of Ra

Egypt REVELATION: Great Pyramid of Giza's ‘correlation to Orion PROVED'




ஊனம் என்றால் என்ன ??? சொல்லின் விளக்கமும் பொருளமும்.

 ஊனம் என்பது தமிழ்ச் சொல்லா?

ஆம் ., முதலில் குறள் ., அப்புறமா விளக்கம் :)

ஊனத்தை வென்றுஅதை உன்குறியீ(டு) என்றாக்கு;

கூன்தானே ஔவைக்(கு) அழகு.

  • துரைக்குறள்

விளக்கம் :

  • ஊனம் = ஊன் + அம் = சார்ந்திருக்கும் ஒன்று

[மூலத் தொழிலாகுபெயர் = ஊன்றுதல் = சார்ந்திருத்தல்

இதன் வினை/கட்டளைச் சொல் =ஊன் = சார்ந்திரு]

  • ஊனன் = ஊன் + அன் = சார்ந்திருப்பவன்

முக்கியக் குறிப்பு ஊனன் என்றால் ’உடற்குறைபாடு உள்ளவன்’என்று பொருள் இல்லை . ( ’’அவனின்’’ படைப்புப் பிழையால் , ’’இவன்’’ஒரு பொருளையோ அல்லது ஒருவரையோ ) சார்ந்திருப்பவன் என்றுதான் பொருளாகும் .. இதை எல்லார்க்கும் முடிந்தவரை எடுத்துச் சொல்வோம்

வாழ்க உறவுகள் !!!.



Sunday, 25 October 2020

எறும்புகளை பற்றிய அறிய தகவல்கள்

 *எறும்புகளை பற்றிய அறிய தகவல்கள்* 




*எறும்பு கடிச்சு பாத்திருப்பீங்க... விவசாயம் செய்றதை பாத்திருக்கீங்களா?* 


தோழர்களே இந்தப் பதிவினை உங்கள் பிள்ளைகளையும் படிக்கச் சொல்லுங்கள். இயற்கைச் செல்வங்களை அழிக்காமல் வாழ்வதற்கு இந்த எரும்பினம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. 


விலங்குகள் சாம்ராஜ்யத்தில் புத்திசாலித்தனத்தைப் பற்றிய பேச்செடுத்தாலே நம் பட்டியலில் முக்கியமாக இடம்பிடிப்பவை குரங்குகளும் மனிதக் குரங்குகளும்தான். ஆனால், அவற்றையும் தாண்டிய அறிவார்ந்த, சமுதாய மனப்பான்மையுடைய உயிரினம் இருக்கிறதென்றால் அவை எறும்புகள்தான். எறும்புகளின் கூட்டுச் சமுதாய வாழ்க்கைமுறை மனித நாகரிகங்களை ஒத்த சிறப்புடையவை. அவற்றின் வாழ்வியல் புத்திசாலித்தனத்தைத் தாண்டிய ஆழமான பல பண்புகளைக் கொண்டது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களிலேயே மனித இனம் மட்டுமே கால்நடைகளை வளர்க்கவும், விவசாயம் செய்யவும் கற்றுக்கொண்ட நாகரிகமடைந்த உயிரினமென்று கூறி நமக்கு நாமே பெருமையடித்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையில்லை. மனிதனைவிடப் பல மடங்கு சிறப்பான விவசாயத்தை, சிறப்பான நகரங்களைக் கட்டமைக்கும் திறனுடைய ஓர் உயிரினம்தான் எறும்பு.


எறும்புகளின் சாம்ராஜ்யங்கள் மனித ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு முழுமையாக வருவதற்குப் பல வருடங்கள் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட ஆய்வுப் பயணங்களில் ஈடுபட்டவர்கள் அவற்றின் அறிவாற்றலைக் கண்டு வியக்கவோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவோ தயங்கவில்லை.  


எறும்புகள் உணவு சேகரிக்கும், தற்காப்புத் தாக்குதல் நடத்தும், தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்ள வேதிம சமிக்ஞைகளை செய்யும், (அதாவது சைகை )சில சமயங்களில் அந்த வேதிமங்களை வெளிப்படுத்தியே எதிரிகளைத் தாக்கவும் செய்யும். ஒளி மற்றும் ஒலியைப் பயன்படுத்திப் பெருவாரியான எறும்புக் கூட்டங்கள் தகவல் பரிமாற்றம் செய்கின்றன. மதச் சடங்குகள், அரசியல் சித்தாந்தங்கள், இசை போன்றவற்றின் மூலம் நாம் வெகுஜன மக்களை எப்படி நெருங்குகிறோமோ அதைப்போலவே ஆய்வாளர்கள் இவற்றின் இத்தகைய தொடர்பு யுக்திகளைப் பார்க்கிறார்கள். உயிரியலாளர் லூவிஸ் தாமஸ் எறும்புகளை, "அவை மனிதர்களுக்குச் சமமான, மனிதர்களைவிட அறிவாற்றல் மிகுந்த ஆனால், நம்மைப்போல் மற்ற உயிரினங்களுக்குச் சங்கடம் விளைவிக்காத உயிரினம்" என்று கூறுகிறார்.


எறும்புகள் பூஞ்சை விவசாயம் செய்கின்றன. அதோடு கால்நடைகளும் வளர்க்கின்றன. அஃபிட்ஸ் (Aphids) எனப்படும் தாவரங்களிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சியெடுக்கும் பூச்சியினத்தைக் கால்நடைகளாக வளர்க்கின்றன. அஃபிட்ஸ் என்ற எறும்புகளைவிடச் சிறிய பூச்சியினங்கள் தாவரங்களிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சியெடுத்துக்கொண்டு தன் உணவுக்குழாயில் தேன்மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கின்றன. இந்தத் தேன்மெழுகு எறும்புகளுக்கு மிகவும் ஆரோக்கியமான புரதச்சத்து மிகுந்த உணவு. அஃபிட்ஸ்களை வளர்த்து, தம் உணர்கொம்புகள் மூலம் அதன் உணவுக்குழாயிலிருந்து அந்தத் தேன்மெழுகை எடுத்து உணவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. நாம் புரதச்சத்துக்காக பால் பொருட்களைப் பயன்படுத்துவதைப் போலவே இவை இந்தத் தேன்மெழுகைப் பயன்படுத்துகின்றன. இவற்றோடு நிற்கவில்லை. எறும்புகள், படை திரட்டிப் போர் புரிகின்றன. தம் கூட்டத்தை எச்சரிக்கவும், எதிரிகளைக் குழப்பவும் வேதிமங்களைத் தெளிக்கின்றன. வேதிமப் போர்முறைகளையும் சில சமயங்களில் கையாளுகின்றன. அடிமைகளைப் பிடித்துவந்து வேலைசெய்ய வைக்கின்றன, குழந்தைத் தொழிலாளிகளைப் பணியமர்த்துகின்றன, ஆச்சர்யப்படும் விதத்திலான தகவல் தொடர்பு முறைகளைக் கையாளுகின்றன. மனிதர்கள் செய்யும் அத்தனையையும் எறும்புகள் பல லட்சம் ஆண்டுகளாகச் செய்துவருகின்றன, ஒன்றைத் தவிர. எறும்புகள் நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாகவில்லை. அது தற்சார்புப் பொருளாதாரம். அதோடு இன்னொன்றையும் எறும்புகள் செய்வதில்லை. எறும்புகள் சினிமா பார்ப்பதில்லை.


கலாசார ரீதியாகத் தம் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குப் பகிர்ந்து செல்லும் மனிதர்களைப்போல் இல்லாமல், மரபணுக்கள் மூலமாகவே அவற்றுக்கு இந்த வாழ்வியல் முறைகள் கடத்தப்படுகின்றன. மனித இனத்தில் அப்படியில்லை, அடிப்படையான சில உள்ளுணர்வுகள் மட்டுமே மரபணு வழியாக வருகின்றன. மற்றவை கலாசாரங்களின் வழியாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதுதான் எறும்புகளிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுகிறது. அவை நம்மைப்போல் நெருப்பைக் கட்டுப்படுத்தக் கற்கவில்லை. நம்மைப்போல் மற்ற அசம்பாவிதங்களையும் அவை நிகழ்த்தவில்லை. எறும்புகளின் பூஞ்சை விவசாயமும் அஃபிட் (Aphid) கால்நடை வளர்ப்பும் நம் விவசாய, கால்நடை வளர்ப்புகளைவிட அதிநுட்பமானதாக இருக்கிறது. மனிதர்கள் விவசாயம் செய்யத்தொடங்கிச் சுமார் ஐயாயிரம் வருடங்களே ஆகின்றன. ஆனால், எறும்புகளின் விவசாயம் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. ஐயாயிரம் ஆண்டுகளிலேயே நாம் பல நவீன முறைகளுக்கு மாறியிருக்கிறோம். பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகச் செய்துவரும் விவசாயம் அதிநுட்பமானதாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்துகொண்டிருக்கும் அவை, சூழலுக்கு எந்தவிதக் கேடும் விளைவிக்காமலே இன்னமும் அதைச் செய்கின்றன. சமீபத்திய ஆய்வுகள் எறும்புகளின் விவசாயம் நுட்பமானதென்று கூறுகின்றன. அவற்றின் விவசாய முறை நவீனமயமாக்கிக் கொண்டேயிருப்பதோடு சுற்றுச்சூழலோடு இயைந்து தகவமைத்து கொள்ளும் விதத்திலும் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் நாம்? நம்முடைய நவீன விவசாய முறைகள்?


எறும்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக விவசாயிகள். மனிதர்கள் சில ஆயிரம் வருடங்களாகத்தானே. அது சரி, அவை ஏன் பூஞ்சைகளை அறுவடை செய்கின்றன? இலைகளில் அடங்கியிருக்கும் செலுலோஸ் (Cellulose) என்ற தாதுப்பொருள் எறும்புகளுக்குச் செரிமானம் ஆகாது. ஆனால், சில பூஞ்சை வகைகளால் அதைச் செய்யமுடியும். அதனால், தம் காலனிகளில் அந்தப் பூஞ்சைகளை வளர்க்கின்றன. எறும்புகள் கூட்டம் கூட்டமாக உணவுதேடிச் செல்லும்போது இலைகளை, சின்னச் சின்ன மரத்துண்டுகளைத் தூக்கிச் செல்வதைப் பார்த்திருப்போம். அதெல்லாமே அவை வளர்க்கும் பூஞ்சைகளுக்கும் கால்நடைகளுக்கும் உணவளிக்கத் தான். அந்தப் பூஞ்சைகள் இலைதழைகளைச் சாப்பிட்டு வளரும். அப்படி வளரும் பூஞ்சைகளை எறும்புகள் உணவாக்கிக் கொள்கின்றன. இந்தப் பூஞ்சைகளை அழிக்கவும் பூச்சிகள் உள்ளன. சில பூச்சிக்கொல்லி வேதிமங்கள் உழைப்பாளர் எறும்புகளிடம் சுரக்கும். அவற்றை அந்தப் பூச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. அதோடு அவற்றின் கழிவுகளைப் பயிர்களுக்கு உரமாக்குகின்றன. 


ஆரம்பத்தில், அவை ஒரேவகையான பூஞ்சையை மட்டும்தான் விளைவிப்பதாக நம்பப்பட்டது. மேரிலாந்தைச் சேர்ந்த உல்ரிச் முல்லர் என்ற ஆய்வாளர் தனது பல வருட ஆய்வின் முடிவில், எறும்புகள் 862 வகையான பூஞ்சைகளை விவசாயம் செய்வதைக் கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் அவை தொடர்ச்சியாகப் புதிய புதிய வகைகளை விவசாயம் செய்யப் பழகிக் கொண்டிருப்பது தெரியவந்தது. ஆச்சர்யங்கள் இதோடு நின்றுவிடவில்லை. எறும்புக் காலனிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பூஞ்சைகளை மரபணுப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். எறும்புகள் தம் பக்கத்துக் காலனிகளோடு தாம் விளைவிக்கும் பூஞ்சைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலமாகவும் கலப்பினங்களை உருவாக்க முயல்வதன் வழியாகவும் தாங்கள் வளர்க்கும் பூஞ்சைகளின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கின்றன.


வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நகர வாழ்வு என்பதே தெரியாது. ஆனால், எறும்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக நகரக் கட்டமைப்புகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பல்லடுக்கு அறைகள், சுரங்கப் பாதைகள் என்று அபரிமிதமான நகரக் கட்டமைப்புகளோடு தொடர்ச்சியாகத் தம்மை மேம்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சென்னை, மும்பை, மெக்சிகோ, டோக்யோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களைக் கண்டு மனிதர்களின் வளர்ச்சியை மார்தட்டிக் கொள்கிறோம். ஹோல்டாப்லர் (Hoelldobler), வில்சன் (Wilson) என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஓர் எறும்பினத்தைப் பற்றிய சுவாரஸ்யமானதொரு தகவலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஃபார்மிகா எஸ்ஸென்சிஸ் (Formica Yessensis) என்ற எறும்பினம் ஆசியா, ஜப்பான் போன்ற பகுதிகளில் வாழ்கின்றது. அவர்கள் ஜப்பானின் ஹொக்காய்டோ (Hokaido) என்ற தீவிலிருக்கும் இஷிகாரி (Ishikari) கடற்கரையில் அதை ஆய்வு செய்தார்கள். அப்போது, மூன்றரை கோடிக்கும் அதிகமான உழைப்பாளி எறும்புகளையும் லட்சக்கணக்கான ராணி எறும்புகளையும் கொண்டதோர் எறும்புக் காலனியைக் கண்டுபிடித்தனர். அது 4,500 குட்டிக் காலனிகளோடு தொடர்புடைய உள்ளுக்குள்ளேயே ஒன்றொக்கொன்று சென்று வருவதற்கேற்ற பாதைகளோடு அமைக்கப்பட்டிருந்தன. இந்த எறும்பு நகரத்தின் மொத்த பரப்பளவு 2.7 சதுர கிலோமீட்டர்கள். இத்தகைய நிரந்தரமான தெளிவான நுட்பமான கட்டமைப்புகளை நம் மூதாதையர்கள்கூடச் செய்திருக்க மாட்டார்கள். 


ஆக்ஸ்போர்டு (Oxford), சஸ்ஸெக்ஸ் (Sussex), ஸூரிச் (Zurich) ஆகிய பல்கலைக்கழகங்கள் பாலைவன எறும்புகளில் செய்த சில ஆய்வுகள் அவற்றின் தகவல் பரிமாற்றத்திலிருக்கும் சுவாரஸ்யங்களைக் கட்டவிழ்த்தன. பாலைவன எறும்பினங்களில் இரைதேடிச் செல்லும் எறும்புக்கூட்டம் தாம் பயணிக்கும் பாதைகளையும் திசைகளையும் தொடர்ச்சியாகத் தம் மூளையில் பதிவேற்றிக் கொண்டேயிருக்கின்றன. அவை, பார்வைக்குப் புலப்படுகிற நிலவியல் அடையாளங்களை மூளையில் குறித்துக் கொள்கின்றன. கட்டமைப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் தங்கள் திசையுணரும் திறனை மேம்படுத்திக் கொள்ளத் தொடர்ந்து முயல்கின்றன. ஆம், மனிதர்கள் மட்டுமில்லை, எறும்புகளும் கற்றல் மற்றும் கற்பித்தலைச் செய்கின்றன. "உன்னை எறும்பு மாதிரி நசுக்கிடுவேன்" என்று எந்த உயிரினத்தைப் பிறரைத் தாழ்த்திப் பேசவதற்கான உதாரணமாக நாம் கையிலெடுக்கிறோமோ அதன் வாழ்வியல் நம்மைவிடப் பன்மடங்கு நுட்பமானதாக நாகரிகமானதாக இருக்கிறது.


நாம் நம் வீடுகளில், சமையலறைகளில் எறும்புக்கொல்லி மருந்துகளைத் தூவி வைக்கிறோம். எறும்புகள் வருவதைப் பிரச்னையாக நினைக்கிறோம். அதைவிட்டுவிட்டு அவற்றைச் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள், இயற்கையை அழிக்காமலே நகரத்தைக் கட்டவும், விவசாயம் செய்யவும், நீடித்த நிலையான வாழ்வியலை மேற்கொள்ளவும் அந்த எறும்புகள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.


இனி உங்கள் சமையலறைகளில் நடக்கும்போது எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் கவனமாக இருங்கள். ஏனென்றால், அங்கு உலகின் தலைசிறந்த நாகரிகத்தைக் கொண்டதோர் உயிரினம் சென்றுகொண்டிருக்கலாம்.

Saturday, 24 October 2020

உலகிற்கு சோழர்களின் பங்களிப்பு என்ன?

 உலகிற்கு சோழர்களின் பங்களிப்பு என்ன?

சோழர்கள்.

சோழர்களின் காலம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்பதில் ஐயம் இல்லை. செப்பேடுகள், கல்வெட்டுகள் மற்றும் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டக் காசுகள், கட்டப்பட்டக் கோயில்கள், பாடப்பட்ட பாடல்கள், மெய்க்கீர்த்திகள் இவைகளின் துணை கொண்டு அவர்களின் வரலாற்றை தொல்பொருள்ஆய்வுத்துறை வல்லுனர்கள், கற்றுஆய்ந்த பெரியோர்கள் பலர் வெளிக் கொணர்ந்துள்ளனர். அவற்றின் துணை கொண்டு பார்க்கும்போது சோழர்களின் அறிவுத் திறம், ஆட்சியமைப்பு முறை, கலைத் திறன், போர்த் திறன் மற்றும் கட்டிடக் கட்டமைப்புத் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

  • உலகில் முதலில் முதலில் வாக்கெடுப்பு நடத்தி தன்தலைவனை தேர்ந்தெடுக்கும் முறை. சான்று : அருள்மொழிச்சோழன் இவ்வாறுதான் பல வாக்குகளை பெற்று அரசன் ஆனார்.
  • உலகில் பலர் தன்னை புகழ்ந்து பல வரலாற்றை மாற்றி எழுதிவந்தகாலத்தில் மெய்க்கீர்த்திகள் என்ற வழிமுறையை உருவாக்கினார்கள் சோழர்கால மன்னர்கள் [அருள்மொழிச்சோழன்].

சோழ நாடு சோறுடைத்து என்று புலவர்களால் பாராட்டுப் பெற்ற நாடு. சோழ நாடு இந்த உலகிற்கு பல் பங்களிப்பை ஆற்றியுள்ளது.

  • சோழர்களின் நீர் மேலாண்மை.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
[அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்
 : 20]

பொழிப்பு : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

அந்த உண்மையைப் புரிந்த சோழ மன்னர்கள், நாட்டின் நீர் வளத்தைப் பெருக்கினர். மக்கள் நலனுக்காக அவர்கள் வெட்டி சென்ற ஏரிகள், கட்டுவித்த அணைகள் ஆகியவைகள் கூட இன்றளவும் நிலைத்து பயனளித்து வருகின்றன.

குறிப்பாக உலகத்தின் முதல் பெரிய அணை கல்லணை என நம்பப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

இப்படியாக நீர்மேலாண்மையில் கரிகால் பெருவளத்தான், ஆதித்தசோழன், அருள்மொழிச்சோழன் மற்றும் அரச அரசேந்திரச்சோழன் ஆகிய மாபெரும் மன்னர்கள் ஆட்சியின்போது நிறைவேறினர்.

  • சோழ நாட்டு கலைகள் .

சோழ நாடு கலைவளம் மிக்க நாடாகத் உருவாகத் தொடங்கியது கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பிறகு. சிற்பக் கலைசெப்புப் படிமக்கலைகட்டடக் கலை எனவும் இசைத்தமிழ்நாடகத்தமிழ் என அனைத்திலும் புகழ்பெற்ற நாடாகத் திகழ்ந்தது. அங்கு சிற்பக் கலைக்கு மட்டும் பஞ்சமா என்ன? காண இங்கு அனைத்துச் சிற்பங்களையும் எடுத்துச் சொல்ல இயலாது. எனவே, எடுத்துக்கொண்ட துர்க்கை அம்மனைப் பற்றிய சிற்பங்கள் சிலவற்றை மட்டும் காண்போம்.

அவை வடிவமைக்கப்பட்ட விதமும்நுணுக்கமான வேலைபாடுகளும் கண்டு, சிற்பியின் திறத்தை வியப்பதா இதற்கு இசைவு தந்து எவ்வாறெல்லாம் உருவாக வேண்டும் என கருதிய சோழ மன்னர்களை நினைத்துப் பெருமிதம் அடைவதா? நீங்களே பாருங்கள், நமது தமிழகத்துச் சோழர் காலச் சிற்பக் கலையை.

புள்ளமங்கை - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்திருவலஞ்சுழி - துர்க்கை

இவ் உலகில் புகழ் பெற்ற நடராசன் சிலை.

இது ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள நடராசன் சிலை.

  • சோழர் காலத்து உலகப்புகழ் பெற்ற கோவில்கள்.

கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மகுடம் வைப்பது போன்ற உன்னத படைப்பாகும்.

இந்த கலைக் கோயிலை போன்று தமிழ்நாட்டில் சோழர்களால் எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில கோயில்களை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்

கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

தில்லை நடராசன் கோயில், சிதம்பரம்

நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராசன் கோயிலுக்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்தக் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு கட்டப்பட்டதாகும். ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்.

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

பெரிய கோயில்தஞ்சாவூர்.

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த அருள்மொழிச் சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

அங்கோர் வாட் கோவில், கம்போடியா

அங்கோர் வாட் என்பது, அங்கோர், கம்போடியா உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் குலோத்துங்கச் சோழரின் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் குளம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில் குளங்களுள் ஒன்றாகும்.

கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்.

சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக திகழும் இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதற்காக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைப் பெற்றிருப்பதற்காகவும் புகழ் பெற்றுள்ளது. இக்கோயில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கம் 4 மீட்டர் உயரமுடையதாகும். கோயிலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் செப்புப் பட்டைகளின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சோழ வம்சம் மற்றும் அவர்களின் அரசு பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள், வேறந்த வரலாற்று நூல்களையும் விட சிறப்பான விளக்கங்களை தருவதாக இருக்கும்.

ஜம்புலிங்கேஸ்வர் கோயில், திருவானைக்காவல்.

திருவானைக்காவலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வர் கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதோடு சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் கோவில் சுவர்களில் இன்றும் காணப்படுகின்றன. இக்கோவில் கட்டப்பட்டு 1,800 ஆண்டுகள் ஆனபோதிலும் பராமரிப்பு பணியினால் இன்றும் நல்ல நிலையில் காணப்படுகிறது. ஜம்புகேஸ்வர் கருவறை அடியில் ஒரு நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் இந்த ஊற்று நீர் ஆதாரத்தை காலி செய்ய முயன்றாலும் அது மறுபடியும் நிரம்பி விடுகிறது!

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்.

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13 - ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

இப்படி உலகப்புகழ் பெற்ற பல கோவில்கள் சோழர்கள் உருவாக்கி உள்ளனர்.

  • சோழர் படை பற்றிய தகவல்.

உலகில் கடல்கடந்து கப்பல் படைகட்டி போர் எடுத்து உலகில் கடல் வழி போர் முறையை அறிமுகம் படித்தினர். சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டதிறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் சோழர் கடற்படை காணப்பட்டது.

அரசர் அல்லது பேரரசர்கள் சோழர் படையின் தலைவர்களாக இருந்தார்கள்.

இப்படியாக சோழர்கள் இந்த உலகத்துக்கு தன் பங்களிப்பை உருவாக்கியுள்ளனர்.