தமிழ்நாடு உண்மையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக உள்ளதா?
ஆம்.
ஒரு நாடோ அல்லது மாநிலமோ சிறப்பாக செயல்படுகிறதா என்பதை சில காரணிகளைக் கொண்டு அளவிட முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அது போல கீழ்வரும் நான்கு காரணிகளை வைத்து ஒரு நாட்டை பதம் பார்த்து விடலாம்.
நாட்டிலேயே இரண்டாவது மாநிலம். காரணம் முதலிடம் பிடித்த மகாராட்டிர மாநிலம் பல தொழில் நிறுவனங்களை இங்கு வைத்து கொண்டு தலைமை அலுவலகத்தை மட்டும் அங்கு வைத்து கணக்குகளை தாக்கல் செய்கின்றன. தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகமே முதலிடம்.
கல்வி
கண்ணை மூடிக் கொண்டு கேரளாவிற்கே முதலிடம் என்று கூறுபவர்களுக்கு.
இந்தியாவிலேயே பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்ந்து படிப்பவர்கள் நம் மாநிலத்தில் தான் அதிகம்.
ஆச்சரியப்பட வேண்டிய விவரம் என்னவென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை காட்டிலும் அதிகம்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய அரசின் 2035 ஆம் ஆண்டிற்கான இலக்கே 50 % சதவீதம் தான். ஆனால் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோடியாக விளங்குகிறது.
மருத்துவம்
அதிக மருத்துவ கல்லூரிகளைக் கொண்ட மாநிலம்.(நீட்டான காரணம்)
குழந்தைகள் இறப்பு விகிதத்தை வைத்து நம் நாட்டுடன் ஒப்பிடும்போது 100 % மேம்பட்ட மருத்துவ வசதிகளை கொண்டது.கிராமங்கள் வரை மருத்துவ வசதிகளை செய்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்.
சந்தோஷமான வாழ்க்கை மற்றும் வருமான பாகுபாடு
70 சதவீதத்திற்கு நடுத்தர வர்க்கம் வசிக்கும் மாநிலம். பொருளாதார பாகுபாடு மிக குறைவாக உள்ள மாநிலம்.
இங்கு சந்தோசமாக வாழ்கிறீர்களா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். மேற்கூறிய தரவுகளின் அடிப்படையிலும் என்னுடைய கண்ணோட்டத்திலும் என் தாய்த் தமிழ்நாடு சிறந்த மற்றும் முன்மாதிரியான மாநிலம்.
தரவுகள் அரசு வலை தளத்தில் பெறப்பட்டவை. இவ்வளவு அழகாக விவரித்தவர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள். [1]
ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆளப்போறான் தமிழன் !!!
அடிக்அடிக்குறிப்புகள்.
No comments:
Post a Comment