Pages

Saturday, 24 October 2020

உலகிற்கு சோழர்களின் பங்களிப்பு என்ன?

 உலகிற்கு சோழர்களின் பங்களிப்பு என்ன?

சோழர்கள்.

சோழர்களின் காலம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்பதில் ஐயம் இல்லை. செப்பேடுகள், கல்வெட்டுகள் மற்றும் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டக் காசுகள், கட்டப்பட்டக் கோயில்கள், பாடப்பட்ட பாடல்கள், மெய்க்கீர்த்திகள் இவைகளின் துணை கொண்டு அவர்களின் வரலாற்றை தொல்பொருள்ஆய்வுத்துறை வல்லுனர்கள், கற்றுஆய்ந்த பெரியோர்கள் பலர் வெளிக் கொணர்ந்துள்ளனர். அவற்றின் துணை கொண்டு பார்க்கும்போது சோழர்களின் அறிவுத் திறம், ஆட்சியமைப்பு முறை, கலைத் திறன், போர்த் திறன் மற்றும் கட்டிடக் கட்டமைப்புத் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

  • உலகில் முதலில் முதலில் வாக்கெடுப்பு நடத்தி தன்தலைவனை தேர்ந்தெடுக்கும் முறை. சான்று : அருள்மொழிச்சோழன் இவ்வாறுதான் பல வாக்குகளை பெற்று அரசன் ஆனார்.
  • உலகில் பலர் தன்னை புகழ்ந்து பல வரலாற்றை மாற்றி எழுதிவந்தகாலத்தில் மெய்க்கீர்த்திகள் என்ற வழிமுறையை உருவாக்கினார்கள் சோழர்கால மன்னர்கள் [அருள்மொழிச்சோழன்].

சோழ நாடு சோறுடைத்து என்று புலவர்களால் பாராட்டுப் பெற்ற நாடு. சோழ நாடு இந்த உலகிற்கு பல் பங்களிப்பை ஆற்றியுள்ளது.

  • சோழர்களின் நீர் மேலாண்மை.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
[அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்
 : 20]

பொழிப்பு : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

அந்த உண்மையைப் புரிந்த சோழ மன்னர்கள், நாட்டின் நீர் வளத்தைப் பெருக்கினர். மக்கள் நலனுக்காக அவர்கள் வெட்டி சென்ற ஏரிகள், கட்டுவித்த அணைகள் ஆகியவைகள் கூட இன்றளவும் நிலைத்து பயனளித்து வருகின்றன.

குறிப்பாக உலகத்தின் முதல் பெரிய அணை கல்லணை என நம்பப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

இப்படியாக நீர்மேலாண்மையில் கரிகால் பெருவளத்தான், ஆதித்தசோழன், அருள்மொழிச்சோழன் மற்றும் அரச அரசேந்திரச்சோழன் ஆகிய மாபெரும் மன்னர்கள் ஆட்சியின்போது நிறைவேறினர்.

  • சோழ நாட்டு கலைகள் .

சோழ நாடு கலைவளம் மிக்க நாடாகத் உருவாகத் தொடங்கியது கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பிறகு. சிற்பக் கலைசெப்புப் படிமக்கலைகட்டடக் கலை எனவும் இசைத்தமிழ்நாடகத்தமிழ் என அனைத்திலும் புகழ்பெற்ற நாடாகத் திகழ்ந்தது. அங்கு சிற்பக் கலைக்கு மட்டும் பஞ்சமா என்ன? காண இங்கு அனைத்துச் சிற்பங்களையும் எடுத்துச் சொல்ல இயலாது. எனவே, எடுத்துக்கொண்ட துர்க்கை அம்மனைப் பற்றிய சிற்பங்கள் சிலவற்றை மட்டும் காண்போம்.

அவை வடிவமைக்கப்பட்ட விதமும்நுணுக்கமான வேலைபாடுகளும் கண்டு, சிற்பியின் திறத்தை வியப்பதா இதற்கு இசைவு தந்து எவ்வாறெல்லாம் உருவாக வேண்டும் என கருதிய சோழ மன்னர்களை நினைத்துப் பெருமிதம் அடைவதா? நீங்களே பாருங்கள், நமது தமிழகத்துச் சோழர் காலச் சிற்பக் கலையை.

புள்ளமங்கை - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்திருவலஞ்சுழி - துர்க்கை

இவ் உலகில் புகழ் பெற்ற நடராசன் சிலை.

இது ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள நடராசன் சிலை.

  • சோழர் காலத்து உலகப்புகழ் பெற்ற கோவில்கள்.

கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மகுடம் வைப்பது போன்ற உன்னத படைப்பாகும்.

இந்த கலைக் கோயிலை போன்று தமிழ்நாட்டில் சோழர்களால் எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில கோயில்களை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்

கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

தில்லை நடராசன் கோயில், சிதம்பரம்

நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராசன் கோயிலுக்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்தக் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு கட்டப்பட்டதாகும். ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்.

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

பெரிய கோயில்தஞ்சாவூர்.

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த அருள்மொழிச் சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

அங்கோர் வாட் கோவில், கம்போடியா

அங்கோர் வாட் என்பது, அங்கோர், கம்போடியா உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் குலோத்துங்கச் சோழரின் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் குளம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில் குளங்களுள் ஒன்றாகும்.

கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்.

சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக திகழும் இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதற்காக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைப் பெற்றிருப்பதற்காகவும் புகழ் பெற்றுள்ளது. இக்கோயில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கம் 4 மீட்டர் உயரமுடையதாகும். கோயிலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் செப்புப் பட்டைகளின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சோழ வம்சம் மற்றும் அவர்களின் அரசு பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள், வேறந்த வரலாற்று நூல்களையும் விட சிறப்பான விளக்கங்களை தருவதாக இருக்கும்.

ஜம்புலிங்கேஸ்வர் கோயில், திருவானைக்காவல்.

திருவானைக்காவலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வர் கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதோடு சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் கோவில் சுவர்களில் இன்றும் காணப்படுகின்றன. இக்கோவில் கட்டப்பட்டு 1,800 ஆண்டுகள் ஆனபோதிலும் பராமரிப்பு பணியினால் இன்றும் நல்ல நிலையில் காணப்படுகிறது. ஜம்புகேஸ்வர் கருவறை அடியில் ஒரு நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் இந்த ஊற்று நீர் ஆதாரத்தை காலி செய்ய முயன்றாலும் அது மறுபடியும் நிரம்பி விடுகிறது!

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்.

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13 - ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

இப்படி உலகப்புகழ் பெற்ற பல கோவில்கள் சோழர்கள் உருவாக்கி உள்ளனர்.

  • சோழர் படை பற்றிய தகவல்.

உலகில் கடல்கடந்து கப்பல் படைகட்டி போர் எடுத்து உலகில் கடல் வழி போர் முறையை அறிமுகம் படித்தினர். சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டதிறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் சோழர் கடற்படை காணப்பட்டது.

அரசர் அல்லது பேரரசர்கள் சோழர் படையின் தலைவர்களாக இருந்தார்கள்.

இப்படியாக சோழர்கள் இந்த உலகத்துக்கு தன் பங்களிப்பை உருவாக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment