Pages

Friday, 16 October 2020

எதிர்கால திராவிட நாடு

 ஒருவேளை திராவிட நாடு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

திராவிட நாடு என்ற சொல் முதலில் உருப்பெற்றது ஆங்கிலேயர் ஆட்சியின்போது இருந்த மதராஸ் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உருவானபோதுதான். வடநாட்டவர்களின் மொழித்தினிப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து சென்னை மாகாண மக்களை காக்கும் பொருட்டு பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார். அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலத்தின் பகுதிகளும் உள்ளடங்கியிருந்தன.

படம் : விக்கிப்பீடியாவிலிருந்து

பெரியார், ஊ.பு.அ. சௌந்தரபாண்டியன், முத்தையா, சாமியப்பன் ஆகியோர் 1942-ல் கிரிப்ஸ் குழுவிடம் திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் திராவிடர்களை வடநாட்டவர்களோடு இழுத்துக் கோர்த்துவிட்டுவிட்டுப் போனதால் விடுதலை நாளை துக்கநாளாக அனுசரிக்க வேண்டும் என்றார் பெரியார். ஆனால் பேரறிஞர் அண்ணாவிற்கு இதில் கருத்து வேறுபாடு இருந்தது. பின் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் நோக்கில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தோறறுவித்த பின்னும் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக திராவிட நாடு அடைவது முன்னணியில் இருந்தது.

படம் : கூகுள்.

1962 ல் இந்தியா சீனாவுடனான போரில் ஈடுபட்டதால் தற்காலிகமாக திராவிட நாடு கோரிக்கையை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். பின் 1963ல் மத்திய அரசு நாட்டின் பிரிவினைக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்யும் வகையில் அரசியல் சட்டத்தில் 16-வது திருத்தத்தைக் கொண்டுவந்ததால் மாநில சுயாட்சிக்கு குரலெழுப்பத் தொடங்கினார். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, “ கோரிக்கைதான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” என்றார் அண்ணா.

ஆம் இன்றைக்கும் திராவிட நாட்டு க்கான காரணங்கள் முன்பைவிட வலுவாகவே இருக்கின்றன.

  • நம் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்பதை கல்வியில் பின் தங்கிய மாநிலங்களைச் சேர்ந்த வடநாட்டவர் ஏன் முடிவு செய்ய வேண்டும்?சமூக அநீதியான நீட் போன்ற தேர்வுகள் திணிக்கப்படுகின்றன.
  • நமக்கு சம்மந்தமில்லாத ஒரு மொழி நம் மீது தொடர்ந்து திணிக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் செயல்பாடுகள் ஹிந்தியை உயர்த்தியும் மற்ற மொழிகளை தாழ்த்தும் விதமாகவுமே உள்ளது. நாம் பணியாளர் தேர்வுகளை நம் மொழியில் எழுதமுடியவில்லை. ஆனால் ஹிந்திக் காரர்கள் தங்கள் சொந்த மொழியில் எழுதுகிறார்கள். மத்திய அரசு திட்டங்களுக்குப் பெயர் வைப்பது வரையில் ஹிந்தியே முன்னிலைப்படுத்தப்படுகிறது. நம்மூர் இரயில் நிலையங்களில், வங்கிகளில் நமக்கு தொடர்பில்லாத மொழியே ஆதிக்கம் செலுத்துகிறது.
  • பொருளாதார ரீதியாக இந்தியாவின் ஒட்டுமொத்த வரிவருவாயில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களின் பங்களிப்பு மட்டுமே சராசரியாக 30%. ஆனால் இம்மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது 18 % மட்டுமே. சில நேரங்களில் இது 15% க்கும் கீழேயும் போகிறது. அதாவது சரிபாதிதான் திரும்ப வருகிறது. ஆனால் வரிவருவாயில் அதிகம் பங்களிக்காத உ.பி, பிஹார் போன்ற வட மாநிலங்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. கேட்டால் மக்கள் தொகையை கணக்கு காட்டுகிறார்கள். அவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாதற்கு நாம் தண்டம் கட்ட வேண்டுமா? நாம் பொருளாதர ரீதியாக சுரண்டப்படுகிறோம்.

படம் : யுடியூபிலிருந்து.

  • பண்பாட்டு அடிப்படையிலும் நாம் வேறுபட்டவர்கள். வட இந்தியாவில் மதம்தான் முதன்மை. அவர்கள் மதக்கண்ணாடி அனிந்துகொண்டுதான் எதையும் அனுகுவார்கள். நாம் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டவர்கள். வட இந்தியாவிலும் தலைநகர் டெல்லியிலும் தேவையற்ற மதக்கலவரங்களால் நாட்டின் இதர பகுதிகளில் வாழும் மக்களும் மறைமுகமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப் படுகிறார்கள். இக்கலவரங்களுக்கும் நமக்கும் சம்மந்தமேயில்லை. ஆனால் அதன் விளைவுகள் நம்மை பாதிக்கின்றன.

படம் : கூகுளிலிருந்து.

சரி கேள்வியில் இருப்பதுபோல் திராவிட நாடு அமைந்தால் எவ்வாறு இருக்கும்?

அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுனர்கள் தமிழ்நாடு கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களை மனித வளத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதைவிட மனித வளத்தில் வளர்ந்த ஸ்காண்டிநேவியன் நாடுகளுன் ஒப்பிட வேண்டும் என்பார்கள். ஏனென்றால் தென்னிந்திய மாநிலங்கள் அந்தளவிற்கு வளர்ச்சியடைந்தவை. இவ்வாண்டு வெளியிடப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மதிப்பெண் பட்டியலை பார்த்தால் நன்கு விளங்கிவிடும். இணைப்பு : https://niti.gov.in/sdg-india-index-dashboard-2019-20

படங்கள் : கூகுளிலிருந்து.

திராவிட நாடு அமைந்திருந்தால், அது

  • முழுமையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமை பெற்ற மாநிலங்களின் கூட்டமைப்பாக உருவாகியிருக்கும்.
  • மொழித்திணிப்பில்லாத நாடாக, நமக்கான அரசாங்கம் நமது மொழியில் இயங்குவதை கண்டுகளிக்கக்கூடிய நாடுகளுள் ஒன்றாக உருவாகியிருக்கும்.
  • மதக்கலவரங்கள் அற்ற அமைதியான மக்களாட்சி நாடாக உருவாகியிருக்கும்.
  • சமூக நீதியிலும் அதன் மூலம் மனித வளத்திலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகியிருக்கும்.
  • ஆசியாவில் முக்கியமான பொருளாதார சக்திமிக்க நாடாக உருவாகியிருக்கும்.
  • உலகின் சிறந்த பண்பாட்டைக் கொண்ட நாடுகளுள் ஒன்றாக விளங்கும்.

படம் : கூகுள் படங்களிலிருந்து

  • முக்கியமாக மஹாபாரத காலத்திலேயே விமானம் கண்டுபிடித்தார்கள், புள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினார்கள் என்று உளரிக்கொண்டிருக்கும் முட்டாள்கள் இல்லாத அறிவியலில் முன்னேறிய நாடாக உருவாகியிருக்கும்.

நன்றி!

உசாத்துணைகள்:

No comments:

Post a Comment