Pages

Saturday, 24 October 2020

இந்தியத் தமிழ் பேச்சு வழக்குகளில் பேசுவோருக்கும் ஈழத்தமிழ் அல்லது இலங்கை தமிழ் பேசுவோருக்கும் இடையிலான வேறுபாடு

 இந்திய தமிழுக்கும் இலங்கைத்தமிழுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?


இந்திய தமிழுக்கும், ஈழத்து தமிழுக்கும் முற்காலத்தில் இருந்து வேறுபாடுகள் காண்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.

ஈழத்தின் தமிழ் பிராமி எழுத்துகள்.

மேலே குறிப்பிட்ட படங்கள் யாவும் இலங்கையில் இருந்து அகழாய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வரலாற்றுச் சான்றுகள். இன்னும் நிறைய தொகுப்புகள் உண்டு நான் பிறகு ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது தருகிறேன்.

இப்பொழுது வினாக்குறிய விடையை தருவதற்கு முயற்சிக்கிறேன்.

ஈழத்தமிழின் வட்டார வழக்கு.

  1. யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
  2. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
  3. புலம்பெயர்ப் பேச்சுத் தமிழ்
  4. முகலாயர்ப் பேச்சுத் தமிழ்
  5. மலைநாட்டுப் பேச்சுத் தமிழ்

இவ்வாறான வட்டார வழக்கில் இலங்கை தமிழில் என அழைப்பார்கள்.

தமிழ்நாட்டிலும் மற்றும் இந்தியவில் உள்ள பிறமாநிலங்களில் பேசப்படும் தமிழை இந்திய தமிழ் என்று அழைப்பார்கள்.

இந்திய தமிழின் வட்டார வழக்கு.

  1. திருநெல்வேலித் தமிழ்
  2. அரிசபம் பேச்சுத்தமிழ்.
  3. கொங்குத் தமிழ்.
  4. செட்டிநாட்டுத் தமிழ்.
  5. சென்னைத் தமிழ்.
  6. நாஞ்சில் தமிழ்.
  7. மணிப்பிரவாளம்.
  8. மலேசியத்தமிழ்.
  9. ஜீனூன் தமிழ்.
  10. பெங்களூர் தமிழ்.

என பல வட்டார வழக்குத்தமிழ்களை இந்தியத் தமிழ் அழைப்பார்கள்.

தமிழ் பேச்சு வழக்குகள் செந்தமிழிலிருந்து [கி.மு. 300 - கி.மு. 700] ஒலிவடுவ மாற்றம் மற்றும் ஒலி மாற்றம் கொண்டு என அறியப்படுகிறது.

இந்தியத்தமிழும் மற்றும் இலங்கைத்தமிழுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன இவை சிலவற்றை நான் கீழே தந்துள்ளேன்.

இலங்கைப் பேச்சு வழக்குகள் தமிழ்நாட்டு பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டும் பொதுவான தன்மையினையும் கொண்டு காணப்படுகின்றன.

  • இந்தியாவில் பாவனையில் இல்லாத பல சொற்களையும் இலக்கண வடிவங்களையும் இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் கொண்டுள்ளன. அத்துடன் பல சொற்களை சிறிய மாற்றத்துடன் பயன்படுத்தப்படுகின்றன.
  • இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் கிராந்த மற்றும் மேற்கத்தைய மொழிகளில் தாக்கத்திலிருந்து சற்று குறைந்து காணப்படுகின்றன, ஆனால் இந்திய தமிழில் கிராந்த மற்றும் மேற்கத்தைய மொழிகளின் தாக்கத்தை பெரும் அளவு ஏற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்திய தமிழில் [சரி] என்றால் [ஆம்] என்று சொல்லுவார்கள் ஆனால் இலங்கையில் [சரி] என்றால் [ஓம்] என்று சொல்லுவார்கள். இது இலங்கைத்தமிழின் சிறப்புக்களில் ஒன்று.
  • இலங்கைத்தமிழில் பழமையானதும் மிகப் பண்டையதும் புராதன தமிழுக்கு நெருக்கமானதுமாக கூறப்படுகிறது. இது தொல்காப்பியர் கால புராதன தமிழின் பண்புகளைக் தக்க வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இலங்கைத்தமிழில் சங்க இலக்கியங்களான [திருக்குறள், குறுந்தொகை] ஆகியவற்றில் பாவிக்கப்பட்ட பல வடிவங்களை தொடர்ந்து ஈழத்தமிழில் பாவனையில் உள்ளது. இந்தியத்தமிழில் இலக்கியத்தமிழில் இருந்து பெரும்மளவு மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் பல சங்ககாலத் தமிழ்ச்சொற்களை இன்று பல வட்டார வழக்குத்தமிழ்கள் காப்பற்றி வருகிறன. மலேசிய மற்றும் சிங்கப்பூர் தமிழ் தற்பொழுது தனது பழய நிலைக்கு திரும்புகிறன.
  • இலங்கைத்தமிழ் இந்தியா தமிழுடன் ஒருவருக்கு ஒருவர் புரியக்கூடியவிதத்தில் இல்லை. ஆனாலும் அவை இரட்டைநடை வழக்கைப் பகிர்கின்றன. ஒருகாலத்தில் இந்திய தமிழ் பேசுவோரால் மலையாளமென பலமுறை பிழையாக விளங்கிக் கொள்ளப்படுவது இலங்கைத்தமிழ்.
  • யாழ்ப்பாணத்தவர் “” கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே “” கரமும், “” கரமும் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும், வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது. [தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதே உச்சரிப்புத்தான் உச்சரிக்கப்படுகிறது].
  1. யாழ்ப்பாணத்தவர் பேசும்போது  கர -  கர,  கர -  கர, மற்றும்  கர - கர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
  2.  கர மெய் இரட்டித்து வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு வடதமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து அமைவதில்லை. வடதமிழகத்தில் ற்றற்றி .... என்பன t-rat-ri என உச்சரிக்கப்படும்போது, தென்தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல யாழ்ப்பாணத்தில் t-tat-ti என உச்சரிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.
  • பொதுவாக, எல்லா நாட்டு மக்களின் பேச்சு மொழி, எழுத்து மொழிக்கு சற்றே வேறுபடும். அது போலவே, பேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் பொதுவாக காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் சொற்களை எழுத்தோசை யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம். தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும்.

எடுத்துக்காட்டாக

  1. ன்ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா. என்றும், மரம் என்பதை மர. என்றும் உச்சரிப்பதைக் காணலாம். நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான்மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.
  2. கர, கரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ் நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே கர,கரங்களாக உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, இடம்எடம் எனவும், குடம்கொடம் எனவும் ஆவதைப் பார்க்கலாம். இந்த உச்சரிப்புத் திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.

எனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பல சொற்களில்  கரம்,  கரமாகத் திரிபு அடைவதுண்டு.

ஒன்று என்பது ஒண்டு என்றும், வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்று, பன்றி, தின்று என்பவை முறையே கண்டு, பண்டி, திண்டு என வழங்குவதை உற்று நோக்கலாம்.

  • இலங்கையில் பயன் பாட்டில் உள்ள சில சொற்கள்.

பேச்சுத் தமிழ் (பொருள்)

  1. ஆம்பிளை (ஆண்)
  2. இளந்தாரி (இளைஞன்)
  3. ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
  4. கதிரை (நாற்காலி)
  5. கமம் (விவசாயம்/வயல்)
  6. கமக்காரன் (விவசாயி)
  7. காசு (பணம்)
  8. காணி (நிலம்)
  9. கொடி (பட்டம்)
  10. சடங்கு (விவாகம்)
  11. திகதி (தேதி)
  12. பலசரக்கு (மளிகை)
  13. பெட்டை (சிறுமி)
  14. பெடியன் (சிறுவன்)
  15. பேந்து/பிறகு (பின்பு)
  16. பொம்பிளை (பெண்)
  17. முடக்கு (பாதைத் திருப்பம்)
  18. வளவு (வீட்டு நிலம்)
  19. வெள்ளாமை (வேளாண்மை)
  20. கதை (பேசு)
  21. பறை (பேசு)
  22. பாவி (பயன்படுத்து)
  23. பேசு (ஏசு)
  24. விளங்கு (புரிந்துகொள்)
  25. வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
  26. ஆறுதலா (மெதுவாக)
  27. கெதியா (விரைவாக)
  28. தேத்தண்ணி (தேநீர்)
  29. புதினம் - செய்தி
  30. கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்.
  31. சத்தி - கக்குதல் [வாந்தி].
  32. தலையிடி - தலைவலி.
  33. அரியண்டம் - சிக்கல்.
  34. தேசிக்காய் - எலுமிச்சை.
  35. மச்சம் - இறைச்சி வகைகள்.
  36. துவாய் - துண்டு.
  37. நொடி - விடுகதை.
  38. பொழுதுபட - மாலை.
  39. அவா - அவர்கள்.
  40. கெலில் - ஆசை.
  41. கெதியா - விரைவாக, சீக்கிரமாக.
  42. ஆறுதலா - மெதுவாக.
  43. நித்திரை - தூக்கம்.
  44. கிட - படு.
  45. இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்.
  46. வந்தவ - வந்திருக்கின்றனர்.
  47. சீவிக்கலாம் - வாழலாம்.
  48. கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்.
  49. கண்டுட்டன் - பார்த்துட்டேன்.
  50. தமையன் - அண்ணன்.
  51. நாரி - முதுகு.
  52. திறமா - நன்றாக.
  53. காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு.
  54. காணும் - போதும்.
  55. காணாது - பத்தாது.

வினைசொற்கள் கையாளும் முறை இலங்கையில்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன.

  1. மரியாதை மிகு பேச்சு வகை,
  2. இடைநிலை பேச்சு வகை,
  3. இயல்பான பேச்சு வகை,
  4. மரியாதை அற்ற பேச்சு.

வகை என வகைபடுதுகின்றனர் மொழி வல்லுனர்கள்.

மரியாதை மிகு பேச்சு என்பது .

  • [வாருங்கள் அல்லது வாங்கோ][சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ] என்று பன்மையாக பேசப்படும் வகையாகும்.
  • சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், [வாங்கோ, சொல்லுங்கோ] போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது.

இடைநிலை பேச்சு வகை என்பது

  • [வாரும், சொல்லும்] என பேசப்படும் வகையாகும்.

இயல்பாக பேச்சு வகை

  • [வா, போ, இரு] போன்று பேசப்படும் வகையாகும்.

மரியாதை அற்ற பேச்சு என்பது

  • [வாடா, சொல்லடா] என மரியாதையற்ற பயன்பாடாகும். இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோ, இளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோ, குழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும்.
  • "இடை நிலை பேச்சு வகை" யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த இடைநிலை பேச்சு வகை, தமிழ்நாட்டு பழைய வரலாற்றுத் திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே உருவாகியுள்ளது. இந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும், சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. [நீர், உமது, உமக்கு]எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும், [இரும்", "வாரும்", "சொல்லும்", "கேளும்", "கதையும்", "என்ன சொன்னீர்?] என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.

இலங்கையில் உள்ள உறவு முறைகளின் பெயர்கள்.

  • தந்தையின் உடன் பிறந்தாளை, [அத்தை] என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும்[மாமி] என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம்.
  • பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை [அம்மான்] என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை [மாமா] என்றும் குறிப்பிட்டனர். இன்று [அம்மான்] என்ற சொல் கைவிடப்பட்டு, [மாமா] என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.
  • மனைவி கணவனை [இஞ்சாருங்கோ], அல்லது [இஞ்சாருங்கோப்பா] என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது [இஞ்சாருமப்பா] என்றுமோ அழைத்து வந்தனர்.
  • அக்காவின் கணவரை [அத்தான்] அல்லது [மைத்துனர்] என்றும், தங்கையின் கணவரை [மச்சான்] என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை [மச்சாள்] என்றும் அழைத்தனர்.
  • [அண்ணி] என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் அண்ணி என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.

பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள்.

  • ஈழத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் [புருசன், பெண்சாதி] அல்லது [என்னவள், என்னவன்]
  • தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும்.
  • தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, [அப்பு, ஆச்சி ] என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை [ஐயா] என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது.
  • அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, [பெத்தப்பு, பெத்தாச்சி,அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி] என்றார்கள். இன்று அவர்கள் [அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா], சில வீடுகளில் [தாத்தா, பாட்டி] எனவும் என அழைக்கப்படுகிறார்கள்.
  • இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, [பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா] என்றும் அழைக்கப்பட்டு இன்று, [பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா] அல்லது [சித்தி] என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.
  • பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, [பிள்ளை] என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண் பிள்ளையை [ஆம்பிளைப் பிள்ளை] என்றும், பெண் பிள்ளையைப் [பொம்பிளைப் பிள்ளை] என்றும் அழைக்கப்படும்.
  • உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை [மகன்] என்றும், பெண் பிள்ளையை [மகள்] என்றுமே வழங்குவர். பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் [தம்பி] என்றும், பெண்பிள்ளையை [தங்கச்சி], அல்லது [பிள்ளை] என்றும் அழைப்பது வழக்கம்.

பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள்.

  • [அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி] மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, [பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி] போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, [பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா] என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, [மறவன் அண்ணா, மதியக்கா] என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

மேலே நான் குறிப்பிட பல உறவு முறைகள் இந்தியத் தமிழில் வேறுமாதிரி இருக்கும் என்பது என்கருத்து. எனக்கு வெளிப்படையாக அனைத்து இந்திய உறவுமுறைக்கான சொற்கள் தெரியவில்லை என்பதனால் நான் குறிப்பிடவில்லை.

இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்து விட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ் சொற்களில் இருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வேறுபாடுகள் சில.

சான்றாக இந்த சொற்றொடர் .[பேச்சு மொழி]

1. நான் கடைக்குப் போனேன். - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

கடைக்குப் போனேன் நான். [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

3. நீ மகிழியிடம் பேசினாயா? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]

4நீ மகிழியிடம் கதைச்சியா? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]

இப்படியாக பல வேறுபாடுகள் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது.

மற்றும் மேல் உள்ள கட்டுரையில் ஈழத்தமிழை பற்றி தகவல்கள் தான் நிறைய இருக்கும் காரணம் நான் ஒரு ஈழத்தமிழன். எனக்கு இந்திய பேச்சுத்தமிழ் பற்றி தகவல்கள் தமிழ்த் திரைப்படங்களை பார்த்துதான் ஒர் அளவு தெரியும். மற்றும் படி எனக்கு வேறு துய்ப்பும் [அனுபவம்] இல்லை. இதை எண்ணி நான் வருந்துகிறேன்.

இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment