Pages

Monday, 12 October 2020

அரோகரா என்றால் என்ன இதன் தமிழ் இலக்கியம்

 அரோகரா என்றால் என்ன பொருள்?

அரன் - என்றால் இறைவன், செம்மை நிறச் சிவன்.

அரன் என்பதன் விளி வடிவமே அரோ.!
சிவனை நோக்கி சிவனே! என விளிப்பது.

( ஒப்பு நோக்குக :
ஐயன் > ஐயோ! ( ஐயய்யோ!) “

(ஐயோ” என்ற சொல்லிற்கு ஏதேனும் பொருள் உண்டா?)

அத்தன் > அத்தோ! > அந்தோ!
அத்தன் > அச்சன் > அச்சோ! ( அச்சச்சோ!)
அம்மை - அம்மோ!)

அரன் > அரோ!
அரோ + அரா > அரோவரா > 
அரோகரா.

ஒத்த திரிபுகள் : ஆ +ஆ > ஆவா > ஆகா.
ஓ + ஓ > ஓவோ > ஓகோ.

அரோகரா - என்றால் இறைவனை விளிக்கும் சொல்லமைப்பு.

துக்கடா : அர் - என்கிற மூலச்சொல் சிவப்பு நிறத்தைக் குறித்ததாகும்.

அர் > அரவிந்தம் (தாமரை மலர்)
அர் > அரத்தம் (செந்நிறக் குருதி)
அர் > அரளி (செவ்வரளி).
அர் > அரத்தை (செம்பரத்தை).
அர் > அரக்கு (செந்நிறப் பிசின்).
அர் > அருணம் (காலைச் செங்கதிரவன்).
அர் > அரணம் (ரணம்)குருதிகசியும்காயம்.
அர் > அரத்தினம் (ரத்தினம்)

No comments:

Post a Comment