Pages

Wednesday, 14 October 2020

இராஜ இராஜசோழனின் சிறப்பு பாகம் 1

 ராஜ ராஜ சோழன் தீவிர சைவ மதப் பற்றாளர். எனினும் அது அவற்கு மற்ற மதங்களின் மீது இருந்த மரியாதையைக் குறைக்கவில்லை. பல்வேறு மதங்களுக்கு அவர் கொடையளித்துள்ளார்.

பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்பட்டுள்ள சூடாமணி விகாரம் உண்மையானது.

சூடாமணி விகாரம், கடார ( கெடா, இந்தோனேசியா ) மன்னன் மார விஜயதுங்கவர்மனால், அவரின் தந்தை சூடாமணிவர்மன் பெயரால் கட்டப்பட்டது.

( 1867 இல் பிரிட்டிஷாரால் இது இடிக்கப்பட்டது )

அவ்விகாரத்திற்கு ஆனைமங்கலம் எனும் ஊரை, ராஜ ராஜ சோழன் கொடையளித்தான்.

இவ்விவரம் லெய்டன் செப்புத்தகட்டில் உள்ளது ( தற்சமயம் இது நெதர்லாந்து நாட்டில் லெய்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது )

நமக்கு ஆண்டு இருபத்தொன்றாவது நாள் தொண்ணூறு இரண்டு நாள்

தஞ்சாவூர் புறம்பட்டி மாளிகை ராஜாச்ரயனில் தெற்கில் மண்டபத்து நாம் இருக்க

கிதாரத்து அறையன் சூளாமணிப்பன்மன்

சத்திரிய சிகாமணி வளநாட்டுப்பட்டணக்குற்றட்டு

நாகப்பட்டணத்து எடுப்பிக்கின்ற சூளாமணிப்பன்ம விகாரத்து பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்கு

சத்திரிய சிகாமணி வளநாட்டுப்பட்டணக்குற்றட்டு ஆனைமங்கலம் ...

....

கதாரத்து அறையன் சத்திரிய சிகாமணி வளநாட்டுப்பட்டணக்குற்றட்டு நாகப்பட்டணத்து எடுப்பிக்கின்ற சூளாமணிப்பன்ம விகாரத்து இருப்பதாக ஆண்டு இருபத்தொன்றாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாக வரியில் இட்டு குடுக்கவும் என்று நாம் சொல்ல

தமிழர்கள் எப்போதும் பிற நம்பிக்கைகளையும் பிற மதத்தினரையும் மதித்தனர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment