2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் (மற்றும் பல) எப்படி பாதுகாக்கப்பட்டு நம் கைகளுக்கு வந்தது?
ஓலைச்சுவடியில் எழுதும் முறையை, மிகச்சரியாக யார் கண்டறிந்தார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
பெரும்பாலானவை, கட்டிடக்கலை, கணிதம், வானியல், சோதிடம் மற்றும் மருத்துவம் பற்றின ஓலைச்சுவடிகள். ஒவ்வொரு முறையும், ஓலைச்சுவடிகள் ஏதேனும் பாதிப்பிற்கு உள்ளாகும்போதோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையோ மற்றொரு புதிய ஓலைச்சுவடிக்கு அதன் தகவல்கள் மாற்றப்பட்டு வந்துள்ளன.
அதாவது, திருக்குறள், திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தால், அந்த ஆதிச்சுவடி தற்போது நமக்கு கிடைப்பது அரிது. அஃது, கி.மு 1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பின், இப்போது, குறைந்தபட்சம் 9 தலைமுறைகளில் ஓலை மாற்றி எழுதப்பட்ட, அண்மைய சுவடிகளையே நம்மால் காண இயலும். ஏனெனில், சரியாக பாதுகாக்கப்பட்டிருந்தால், ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம், சராசரியாக, 200-லிருந்து 300 ஆண்டுகள் வரையே.
இலங்கையில் இருக்கும் அநுராதபுரத்தில், 1100 வருட பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் கண்டிபிடிக்கப்பட்டன.
மு. வரதராசனின் ‘தமிழ் இலக்கியம்’ நூலில் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு,
பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
புராணங்கள், தலபுராணங்கள்
மேற்கூறிய அனைத்து இலக்கியங்களும், மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகளும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டிருந்தன. தமிழின் பெருமைகளை கூற வேண்டும் என்றால், அந்த பெருமைகளை திறமையாக காத்துக்கொடுத்த பெருமையும் ஓலைச்சுவடிகளையே சாரும்.
விரிவாகப் படிக்க இங்கே இறங்கவும்: ஓலைச்சுவடி - வரலாறு - அடையாளம்
சுவடிகளைப் படியெடுக்க, அதாவது மூல நூலில் உள்ளவற்றை உள்ளது உள்ளபடி, வேறொருவரால் புதிய சுவடிகள் கொண்டு எழுதித்தர பலர் இருந்தனர்.
No comments:
Post a Comment