Pages

Monday, 12 October 2020

பாண்டியர்களின் மீன் கொடி எதைக் குறிக்கிறது?

 சோழர்களின் புலிக்கொடி வீரத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், பாண்டியர்களின் மீன் கொடி எதைக் குறிக்கிறது?

பரதவர்கள் என்று அழைக்கப்படும் பாண்டியர்கள் என்பவர்கள் கடலோடிகள், மீனவர்கள்,

உலகின் முதல் இராச்சியத்தை குமரி கண்டத்தில் அமைத்து ஆட்சி செலுத்தியவர்கள், சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள், முதன் முதலில் சந்திரமான நாட்காட்டியை கண்டுபிடித்து அதை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள், அதனாலேயே அவர்களை சந்திர வம்சத்தவர்கள் என்று அழைத்தனர்.

பாண்டிய மன்னனாக விளங்கிய இறையனார் சிவன் அதை உணர்த்தவே தலையில் பிறை சூடி காணப்படுகிறார்.

வலிமைமிக்க கடலோடிகள் என்பதை உணர்த்தவே கடலுக்கு அரசனான மீனை தங்கள் சின்னமாக வைத்தனர். வலிமையானது மற்றும் துள்ளும் ஆற்றல் கொண்டது மீன்.

பரதவர்கள் ஆண்ட கடல் சூழ்ந்த இந்த பாண்டிய நாட்டு நிலப்பரப்பை தான் பாரதம் என்றும் அழைத்தனர்.

திண் திமில் பரதர், புன் தலை இரும்பரதவர் , பெருங்கடல் பரதவர், பழந்திமில் கொன்ற பரதவர்,

வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர், ’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்தபயங்கொழு மாநகர்” ( மனையறம் படுத்த காதை) ’’அரச குமாரரும் பரவ குமாரரும்”(இந்திர விழா ஊர் எடுத்த காதை)

"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்

கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",

(சூடாமணி நிகண்டு சூத்திரம்77) என பரதவர் வீரத்தையும் வலிமையையும் சங்க இலக்கியங்கள் பகர்கின்றன.

புலி வீரம், யுக்தி, போர்குணம் என்றால்.. மீன் சின்னத்தை வலிமை, துள்ளும் ஆற்றல் என்று எடுத்துக்கொள்ளலாம்!

ஈசன் தந்த மிகப் பழமையான சந்திரமான நாட்காட்டியை அரபு நாடுகள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றன. விவசாயம் செய்த தமிழர்கள் அதிலிருந்து மாறி பருவ காலங்களை குறிக்கும் முருகன் வகுத்து தந்த சூரியமான நாட்காட்டியை பயன்படுத்த துவங்கினர்.

பட உதவி : கூகுள்

No comments:

Post a Comment