Pages

Wednesday, 2 December 2020

சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வதாக சொல்லப்படும் முதலை

 

சைவ உணவு மட்டும் உண்டு வாழ்கிறது என்று சொல்லப்படும் முதலையின் பெயர் பாபியா.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் என்னும் ஊரில உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவில் ஏரி நடுவில் அமைந்துள்ளது. அந்த ஏரியில் வாழும் முதலை தான் சைவம் மட்டுமே சாப்பிட்டு வாழ்வதாக சொல்லப்படுகிறது.

இந்த முதலை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த முதலை ரொம்ப சாதுவாம்.ஏரியில் உள்ள மீன்களை கூட சாபிடாதாம்.

இந்த முதலை கோவிலில் பூஜை ஆரம்பித்து மணி சத்தம் கேட்டதும் கோவில் அருகில் வந்து விடுமாம் பக்தகள் சுவாமிக்கு அபிஷேகம் செய்த பிரசாதத்தை தந்தால் பவ்வியமாக சாப்பிட்டுவிட்டு சென்று விடுமாம்.

அதற்கு ஏற்றாற் போல் அந்த முதலையும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் பிரசாதத்தை பவ்யமாக சாப்பிடுகிறது. .இந்த முதலைக்கு நீங்கள் அசைவ உணவு கொடுத்தால் சாப்பிடாதாம்.

சில தினங்களுக்கு முன் இந்த முதலை கோவிலுக்குள் நுழைய அதை கண்டு சிலர் அச்சம் அடைய கோவில் பூசாரி ஏரிக்கு போ என்று சொன்னதும் பவ்வியமாக ஏரிக்கு போய்விட்டதாம்.இந்த செய்தி மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்னொரு சுவாரசிய தகவல் சொல்லப்படுகிறது ஒரு முதலை இறந்தால் இன்னொரு முதலை அந்த இடத்திற்கு வந்துவிடுமாம்.

இந்த பதிவுகளை வழங்கிய திரு.பிரவின் விவேகானந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!




No comments:

Post a Comment