பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரங்களைக் குறிக்கும். இது நெய்தல் நிலம் தொடர்புடைய பண்டைய சொல்.
நாகப்பட்டினம்,விசாகப்பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் , பூம்புகார்பட்டினம் , முசிறிப்பட்டினம் ,மதராசபட்டினம் அனைத்தும் பண்டைய புகழ்பெற்ற நகரங்களாம்.
(பட்டினப் பாலை - தமிழ் விக்கிப்பீடியா).
பட்டினம், பட்டி, பட்டு, பேடு, பேட்டை - அனைத்தும் பள் - என்ற மூலம் தந்தவை.
சரி...பட்டணம் எப்படி வந்தது?
அண் - என்ற அடிச்சொல் அடுத்திருத்தலைக் குறிக்கும்
அண் > அண்முதல். அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
பட்டு + அணம் = பட்டணம்.
பல பட்டி/பட்டுகளுக்கு அண்மையாக இருப்பது பட்டணம் ஆனது. இது பிற்காலத்தில் உருவான இடப்பெயராகும்.
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment