Pages

Tuesday, 29 December 2020

மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றி தகவல்கள்.


பரிணாம வளர்ச்சியில் வல்லவர் சார்லஸ் டார்வின்.

  • சார்லஸ்டார்வின் தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.
  • 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள்தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர்.
  • தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22 வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு நீண்ட பயணம் மேற்கொண்டார்.
  • டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.
  • மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.
  • ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.
  • மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்.
  • பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.
  • டார்வின் முன்வைத்த கருத்தின் மீது எழுந்த விவாதங்கள் பரிணாமக் கருத்தாக்கத்தை ஏற்பதற்கு விரைவுபடுத்தியது.
  • இவரின் இக்கொள்கைகள் மதவாதிகளின் போதனைக்கு எதிராக அமைந்தது, அதனாலேயே முதலில் அதை எதிர்க்க தொடக்கினர்.
  • அறிவியலாளர்கள் கூட இக்கொள்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது இக்கொள்கையை நாத்திக வாதிகளும் தேவைப்படும் பொது கம்முனிச வாதிகளும் கையில் எடுத்து கொள்கின்றனர்.

ஓர் உயிரின் மாற்றம் என்பது மரபணுவில் (Gene) ஏற்படும் மாற்றமே,

  • பரிணாமத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, ஓன்று நுண் பரிணாமம் (Micro Evolution), மற்றொன்று பாரிய கூர்ப்பு (Macro Evolution),
  • இதில் முதல் வகையான Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும். அதற்கான காரணிகளாவண: Mutation, மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.

மாறுந்தன்மை (Mutation):

  • இதில் மாருந்தன்மை (mutation) என்பதே அதிகமாக நிகழகூடிய ஓன்று, வேதிபொருள்களின் தாக்கம், கதிர்களின் தாக்கம் மற்றும் Virus களின் தாக்கம் போன்ற காரணங்களால் மரபில் (DNA வில்) ஏற்படும் சிறு மாற்றங்களே இந்த mutation என்பதற்கு உதாரணம். இவைகள் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று.

மரபணு திருத்தம் செய்தல் (DNA Repair):

  • இது போன்ற மாற்றங்களை சரி செய்வே உடலில் DNA repair என்ற ஒரு வளர்சிதை மாற்ற வேதிவினை (Metabolishm) நடைபெறும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனம்பெருக்குவதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகிறன. சில நேரங்களில் இந்த வேதி வினையின் திறன் குறையும் பொது தான், மனிதனிடம் இந்த Micro Evolution மாற்றங்கள் நடைபெறும்.
  • பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதற்கு ஒரு ஆணி தரமான ஒரு விசயமே, இந்த DNA Repair என்பது தான், ஒவ்வொரு மனிதன் உடலிலும் அது போல அணைத்து விதமான விலங்குகள் உடலிலும் இந்த DNA Repair என்ற வளர்சிதை மாற்ற வேதிவினைநடைபெறுகிறது, இதனுடைய வேலை விலங்குகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களை அதாவது மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே.
  • இதை புரியும் படி சொல்ல வேண்டுமானால், மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல் படுகிறதோ, அதையே ஒரு உதாரணமாக சொல்லலாம். இது மனிதனை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது, அதனுடைய திறன் குறைகயில்தான் மனிதனுக்கு நோய்கள் வருகின்றன. அதே போல தான் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே இந்த வகையான வேதி வினையின் வேலை. உதாரணமாக RAD54 என்ற ஒரு புரதம் இந்த வேலைகளை செய்கிறது.
  • இதில் இரண்டாம் வகையான Macro Evolution, அப்படியெனில் ஒரு உயிரினம் முழுவதுமாக மற்றொரு உயிரினமாக மாறுவது, இது உடனே ஏற்படுவது இல்லை, இந்த மாற்றத்திற்கு லட்ச கணக்கான வருடம் தேவை படும் என்பது அவர்களின் கருத்து, இப்படி ஒரு பரிணாமம் இதுவரையில் எங்கும் எப்போதும் நடந்தது இல்லை, அதற்கான ஆதாரங்களோ படிமங்களோ இது வரையில் இல்லை.
  • ஆக உயிரினத்தின் உடலில் உள்ள மாற்றங்களை சரி செய்ய உடலிலேயே ஒரு அமைப்பு இருந்து அதை ஒரு வேலையாக செய்து கொண்டுருக்கின்றது, ஒரு உயிரின் சிறு மாற்றத்திற்கே வேலை இல்லாத பொழுது, ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுகிறது என்பது மிகுந்த வேடிக்கையான ஒன்று.
  • நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அறிவியல் வேறு தற்பொழுது உள்ள அறிவியல் வேறு, ஏனெனில் டார்வினுக்கு DNA பற்றியும், மரபியல் பற்றியும் நன்கு அறிவதற்கு வாய்ப்பு இல்லை, அன்றைய தினம் இருந்த விஞ்ஞானம் அப்படி.
  • இதில் முக்கியமாக பதிய பட வேண்டிய கருத்து எது எனில் தற்பொழுது வரை இக்கொள்கை நிரூபிக்க பட்டதா என்றால் ‘இல்லை’ என்பதே உண்மை.

நன்றி.

No comments:

Post a Comment