பா திறன் அறிந்து பிச்சை இடு; கோ திறன் அறிந்து பெண்ணை கொடு.
தம்மிடம் இரவல் வேண்டி வரும் புலவர், பாணர், பாவலர் ஆகியோருக்கு அவர்களின் பா திறனை அறிந்து அதற்குரிய சன்மானத்தை மன்னன் அளிக்க வேண்டும். நல்ல பாக்களுக்கு நல்ல பரிசுகளும், தரம் குறைந்த பாக்களுக்கு அதற்கேற்ற வகையில் பரிசில் வழங்க வேண்டும். அவ்வாறின்றி அனைவருக்கும் ஒரே அளவு பரிசில் கொடுத்தால் நல்ல புலவர்கள் வருத்தமடைவர்.
ஆகவே தான் பா திறன் அறிந்து பிச்சையிட வேண்டும்.
நாம் நமது மகளை வேற்று நாட்டை சேர்ந்த ஒருவருக்கு மணமுடித்து தருகிறோம் என்றால் அந்த நாட்டின் அரசன் பற்றி நன்கு அறிய வேண்டும். தன் மகளுக்கு அநீதி நேர்ந்தால் நீதி வழங்குவானாக, அந்நிய படையெடுப்பின் போது நாட்டை காக்கும் திறனுடயவனாக, நாட்டில் சட்ட ஒழுங்கை பராமரிக்க தக்கவனாக இருந்தால் தான், தன்னுடைய பெண் புகுந்த வீட்டில் நலமாக வாழ முடியும்.
ஆகவே கோ (அரசன்) திறன் அறிந்து பெண்ணை கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment