Pages

Tuesday, 29 December 2020

திருக்குறளுக்கு நிகரான வேறு நூல் வேற்று மொழிகளில் எதுவும் இருக்கிறதா?

 

  • திருக்குறளுக்கு இணையான நூல் என உலகில் எதுவும் இல்லை.
  • வேண்டுமென்றால் விதிவிலக்காக நாலடியாரைப் பரிந்துரைக்கலாம்.
  • நாலடியாரும் திருக்குறளுக்கு ஓரளவு பொருந்தும் வகையில் கருத்துக்கள் உள்ளன.
  • எனினும் திருக்குறளுக்கு நாலடியார் இணை என்றால் அதற்கு வாய்ப்பில்லை.
  • உதாரணத்துக்கு கூறினால், பிற நூல்களின் கருத்துக்களுக்கும் திருக்குறளின் கருத்துகளுக்கும் கண்களுக்கு எட்டாத தொலைவு எனில் நாலடியாருக்கு மட்டும் கண்ணுக்கு மட்டும் எட்டிய தொலைவு. அவ்வளவுதான்.
  • நான் ஏன் நாலடியாரை ஓரளவுக்கு திருக்குறளுடன் ஒப்பிடுகிறேன் என்றால் திருக்குறள் கூறும் அதே கருத்துகளை நாலடியார் கூறினாலும் திருக்குறள் அளவுக்கு சுருக்கமாகவும் மிக நுட்பமாகவும் உணர்த்தும் அளவுக்கு சமண முனிவர்கள் அதை இயற்றவில்லை.
  • சமண முனிவர்கள் பலரின் கருத்துக்களின் இணைவே நாலடியார்.
  • திருக்குறள் ஒரே ஒருவரது தெளிவான கருத்தை உடையது.
  • அப்படிப் பார்த்தால் திருக்குறளுக்கு இணையாக நூல் உலகில் எதுவுமே இல்லை.


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் 

திரு. அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!



       தமிழால் இணைவோம் !!!

         அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment