Pages

Wednesday, 30 December 2020

பூந்தமல்லி - பூவிருந்தவல்லி மருவிய பெயரும் , பொருளும்.

 பூந்தமல்லி - பூவிருந்தவல்லி எது சரி?

பூந்தமல்லி, பூவிருந்தவல்லி இரண்டும் வெவ்வேறு பொருள் குறிப்பன ஆகும்.

பூந்தண்மலி - என்ற பழந்தமிழ்ப் பெயரே தற்காலத்தில் பூந்தமல்லி என வழங்கப்படுகிறது.

  • பூ = மலர்கள்.
  • தண் = குளிர்ந்த,
  • மலி = மிகுந்த / நிறைந்த /அதிக அளவு.

குளிர்ந்த மலர்கள் மலிந்து மிகுந்த இடம் என்பதே பூந்தண்மலி... என்ற காரணப் பெயர் நமக்கு உணர்த்துகிறது. (இன்றைக்கும் மலர்கள் நிரம்பிய ஏரிகளும், குளங்களும் நிறைந்த ஊர்தான் பூந்தண் மலி) .

பூந்தண்மலி என்ற இவ்வூரை 'புலியூா்க் கோட்டத்து பூந்தண்மலி” என்றே முதலாம் பராந்தகன் காலக் (கி.பி.907−954) கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும், இங்கு அமைந்துள்ள பள்ளிவாசல்
ஒன்றின் அடித்தளம் கற்களில் “
புலியூா்க் கோட்டத்துப் பூந்தண் மலி நெடுஞ் செழிய விண்ணகா் ” என்று பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம். (விண்ணகா் என்பது இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளைக் குறிப்பதாகும்).

இப்பள்ளி வாசல் சுமாா் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோல்கொண்டா சுல்தானால் கட்டப்பட்டது.

இத்தலத்தில் திருக்கச்சி நம்பிகள் நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் பூக்கள் கொண்டு சென்றதால் புஷ்பமங்கலம் என்றும் பூ இருந்தவல்லி என்றும் பெயர் பெற்றது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தாயார் பெயர் பூவிருந்தவல்லி. பூவில் இருந்து தோன்றியவள் என்பதால் இந்தப் பெயர் வந்தது. ஆக அழகான, இயற்கையான பெயர் கொண்ட பூந்தண்மலி அல்லது பூவிருந்தவல்லி என்று பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது.



இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment