தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இச்சட்டத்தின் மூலம் இந்திய மக்கள் பொது அதிகார அமைப்பிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற முடியும்.
- பொது அதிகார அமைப்பின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் உரிய பொறுப்பை ஏற்படுத்தவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- இது 12.10.2005ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு தொடர்பான நடவடிக்கைகளை சாதாரண கடைக்கோடி இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.
- இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. ஆனால் கடந்த 6–8–2019ல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் மூலம் அந்த யூனியன் பிரதேசமும் இதனுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- இதற்கு முன் ஜம்மு காஷ்மீருக்கு என தனி தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது. ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதால் அதன் சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.
- இச்சட்டத்தில் கூறப்பட்ட பொது அதிகார அமைப்பு என்பது நிர்வாகம், நீதித்துறை & சட்டமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இதில் அரசால் நிர்வகிக்கப்படும் / நிதியுதவி வழங்கப்படும் நிறுவனங்களும் இச்சட்டத்தின் வரையறைக்குள் அடங்கும். (95% நிதியுதவி)
- பொது அதிகார அமைப்புகள் தங்களிடம் உள்ள தகவல்களை வரிசைப்படுத்தி கணினிமயமாக்கப்படும்.
- தகவல் கோர மனுதாரர் எக்காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
- இச்சட்டப்படி ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
- தகவல் கோரி பெறப்பட்ட மனுவுக்கு 30 நாட்களுக்குள் அத்துறை சார்ந்தோர் தகவல் அளிக்க வேண்டும்.
- ஒருவேளை தகவல் தனது துறை சார்ந்ததாக இல்லாதபோது அம்மனுவை 5 நாட்களுக்குள் உரிய துறைக்கு அனுப்ப வேண்டும்.
- 3 வது நபர் தகவல் தொடர்பானவற்றுக்கு உரிய காரணங்களுடன் 15 நாட்கள் கால அவகாசம் பெறலாம்.
- இச்சட்டப்படி ஒருசில தகவல்களை வழங்க முடியாது
- நாட்டின் இறையாண்மை & ஒற்றுமையை பாதிப்பது தொடர்பான தகவல்கள்
- பொருளாதாரம் & அறிவியல் தொடர்பான தகவல்கள்
- உரிய நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல்கள்
- 3வது நபரின் வணிக ரகசியம், அறிவு சார்ந்த தகவல்கள்
- பாராளுமன்ற, சட்டமன்றத்தின் சிறப்புரிமைகளை பாதிக்கும் தகவல்கள்
- பிற நாடுகளிடமிருந்து பாதுகாப்பாக பெறப்பட்ட தகவல்கள்.
- சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பிடமுள்ள தகவல்
- குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை பாதிக்கும் வகையான தகவல்கள், இவற்றை வழங்க முடியாது.
- அமைச்சரவை குழுவின் முடிவுகளை செயல்படுத்தாத வரை தகவல் வழங்க முடியாது.
- தமிழக அரசுத் துறையிலிருந்து தகவல் பெற ரூ.10 உம், நகல் கட்டணமாக ரூ.2 / பக்கமும் செலுத்த வேண்டும்.
- வங்கி வரைவோலையாகவும், நீதிமன்ற இரசீது செலுத்தலாம்.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் இல்லை.
- இத்தகவல்கள் கீழ்க்கண்ட வடிவுகளில் இருக்கலாம்.
- பதிவேடுகள்
- ஆவணங்கள்
- குறிப்பாணைகள்
- மின்னஞ்சல்கள்
- கருத்துக்கள்
- அறிவுரைகள்
- சுற்றறிக்கை
- செய்தி வெளியீடு
- ஆணை
- ஒப்பந்தம்
- முடிவுகள்
- மாதிரிகள்
- உருமாதிரிகள்
- மின்னணு வடிவிலுள்ள தகவல்கள் பொது அதிகார அமைப்பிடம் உள்ள 3வது நபர் குறித்த தகவல்கள்.
- பதிவேடு - கோப்புகள், ஆவணங்கள், கையால் எழுதப்பட்ட தாள்கள், குறுங்கோப்புகள், குறும்படங்கள், ஃபேக்ஸ் (Fax), வரைபடங்கள் இன்ன பிற.
No comments:
Post a Comment