எந்தக் குறிப்பில் அதைப் பற்றிய தகவல் இருக்கிறது? மேலும் எந்த சான்றின் அடிப்படையில் அம்மொழி தமிழ் என அவர் கூறினார்? சங்க காலப் பாடல்களிலோ திருக்குறளிலோ தமிழ் என்ற சொல் வருகிறதா?
தமிழ் என்ற சொல் தமிழில் இன்று கிடைக்கும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றது.
"“தமிழென் கிளவியு மதனோ ரற்றே” : (புள்ளி மயங்கியல் 90).
இங்கு தொல்காப்பியத்தின் காலம் தொடர்பாகச் சில வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. பொதுக் கருத்தாக தொல்காப்பியக் காலம் BCE 500 எனக் கணிக்கப்படுகின்றது.
சங்க இலக்கியங்களிலும் தமிழ் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
"வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே." : (அகம்.31)
இப் பாடலைப் (அகம்.31) பாடியவர் மாமூலனார் எனும் புலவராவார். மாமூலனார் நந்தர்களையும் மெளரியர்களையும் பற்றிப் பாடுவதால், இவர் பொ.ஆ. மு. 320 க்கு {BCE320} முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது . வேறு பல சங்க இலக்கியங்களிலும் கூட `தமிழ்` என்ற சொல் இடம்பெற்றுள்ளது. அவற்றை முனைவர் கண்ணபிரான் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அதனைக் கீழுள்ள படத்தில் காண்க.
இலக்கியச் சான்றுகளைப் பார்த்தோம். இப்போது கல்வெட்டுச் சான்றைப் பார்ப்போம். அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது புவனேசுவரம் (ஒரிசா) அருகே உதயகிரி, அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொது ஆண்டிற்கு முந்திய இரண்டாம் நூற்றாண்டில் (BCE "nd cent) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக் கல்வெட்டின் 11 வது வரியில் கூறப்பட்டுள்ளவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவம் வருமாறு.
#“......And the market-town(?) Pithumda founded by the Ava king he ploughs down with a plough of asses; and (he) thoyoughy breaks up the confederacy of the T(r)amira (Dramira) countries of one hundred and thirteen years ( or 1300 years) , which has been a source of danger to (his) Country (Janapada)......."#
இங்கு காணப்படும் பிராகிருத மொழிச் சொல் “திராமிர சங்காத்தம்” { T(r)amira (Dramira} என்பதாகும். “திராமிர சங்காத்தம்” என்பது தமிழர் கூட்டணி {தமிழ் மூவேந்தர்} என்பதன் பிராகிரதச் சொல் வடிவமாகும் [தமிழை ஆங்கிலத்தில் டமில்=Tamil என அழைப்பது போன்று] .
மேலே வரும் கல்வெட்டு வாக்கியத்தில் ”113” ஆண்டுகளா / 1300ஆண்டுகளா என்ற குழப்பம் அறிஞர்களிடையே உண்டு. 113 ஆண்டுகள் எனக்கொண்டால் , தமிழர் கூட்டணியின் காலம் மேலும் ஒரு நூற்றாண்டு பின்நோக்கிச் செல்லும் {BCE 3rd cent}. மாறாக, 1300 ஆண்டுகள் எனில் , தமிழர் கூட்டணியின் காலம் BCE 15th cent என ஆகும்.
இவை எல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட எழுத்து வடிவிலான இன்று கிடைக்கும் சான்றுகளாகும். பேச்சு வழக்கில் `தமிழ்` என்ற சொல் எப்போது தோன்றியிருக்கும் என நினைக்கின்றீர்கள். அதற்கு கீழுள்ள படங்களில் தமிழ் மொழிக்கான பெயர்க் காரணத்தினை அறிந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களிற்கே விளங்கியிருக்கும் `தமிழ்` என்ற சொல் எப்போது பேச்சு வழக்கில் தோன்றியிருக்கும் என.
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. இளங்கோநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment