Pages

Friday, 25 September 2020

தமிழ்மொழியின்சிறப்பு பாகம் 3


* உலகில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்

* திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி விடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.

* திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்

* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

* தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.

* தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.

* இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.

* முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்

* திராவிட மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

* தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

* தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். அவை 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும், தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும், சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும், மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும், சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள். பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும், கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும், நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும். கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும், திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும். சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும், இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும், இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும், ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.

* தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.

* தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு

பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.

* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப்

பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

* தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவ திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள்,

இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.

* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.

* நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

* "தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

* "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை ""இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

* "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:

""போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!

""அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?

""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை! - இவ்வாறு தமிழின் சிறப்புகளை அடிக்கிக் கொண்டே பேகலாம்.

#மூன்றுசங்கங்கள்

* மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.

* சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.

* மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.

* முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.

* முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.

* இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.

* இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.

* புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.

* அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.

* அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.

* சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.

* முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.

* மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.

#முதற்சங்கம்

* முதற்சங்கம் இருந்த இடம் தெனமதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.

* முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.

* முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.

* முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.

#இடைச்சங்கம்

* இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ாண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.

* இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.

* கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.

* கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.

* சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்.

#இறையானர்களவியல்உரை

* நூலின் பெயர் அகப்பொருள் அல்லது களவியல் ஆகும். இதனை இயற்றியவர் இறையனார் அல்லது சிவன். இதற்கு உரை எழுதியவர் நக்கீரர்.

* உரைச் சிறப்பின் காரணமாக இந்நூலே இறையனார் களவியல் உரை என்று வழங்கப்படுகிறது.

* தமிழில் தோன்றிய உரையாசிரியர் நக்கீரர். களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே சிறந்தது என்பவர்.

#சங்கஇலக்கியச்செய்திகள்

* வாத்யாயனார் இயற்றிய நூல் காமசூத்திரம். காமசூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் அதிவீரராம பாண்டியன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் கொக்கோகம்.

* திணை இல்க்கியம் என்று அழைக்கப்படுவது சங்க இலக்கியம்.

* சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் குற்றுகள் ஆகும். புறப்பாடல்கள் அனாத்தும் புலவர் கூற்றுகள் ஆகும்.

* எட்டுத்தொகை நூல்கள் என்பவை நற்றினை, குறுந்தொகை, ஒங்குறுனூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியன.

* எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் ஐந்து, புற நூல்கள் இரண்டு. அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).

* எட்டுத் தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறநானூறு.

* அகநானூறு அகம் என்றும், அகப்பாட்டு என்றும், நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.

* புறநானூறு புறம் என்றும், புறப்பாட்டு என்றும், புறம்பு நானூறு என்றும் குறிப்பிடப்படுகிறது.

#நற்றிணை

* இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றினையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.

* நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.

* தொண்டி என்பது சேர நாட்டுத் துறைமுகம், கொற்கை என்பது பாண்டிய நாட்டுத் துறைமுகம், மாந்தை என்பது சேர நாட்டுக் கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள்

நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.

#குறுந்தொகை

* குறுந்தொகை இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

* குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியதாகும்.

#குறுந்தொகையின்மூலம் #அறியப்படும்செய்திகள்:

* நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன். அதியமானின் தலைநகரம் தகடூர்(தர்மபுரி).

* கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி. பரம்பு மலை தலைவன் பாரி.

* திருக்கோவிலூரையும், முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையாமான் திருமுடிக்காரி.

* கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.

* கரிகாலனின் மகள் ஆதிமந்தி.

* யாய் என்றால் என் தாய் என்று பொருள், ஞாய் என்றால் உன் தாய் என்று பொருள், தாய் என்றால் அவன் தாய் என்று பொருள்.

* எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள், நுந்தை என்றால் உம் தந்தை என்று பொருள், தந்தை என்றால் அவர்கள் தந்தை என்று பொருள்.

* அவ்வை என்றால் எம் அக்காள் என்று பொருள், நூவ்வை என்றால் உம் அக்காள் என்று பொருள், தவ்வை அவர்கள் அக்கா என்று பொருள்.

* கொற்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார். (குறுந்தொகை)

#ஐங்குறுநூறு

* இது ஒரு அகநூல். 500 பாடல்கள் கொண்டது. திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளின் கீழ் அமையப் பெற்றது. பாடிய புலவர்கள் ஐவர்.

* ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர்கிழார். தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

* ஐங்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.

* சங்க கால மக்கள் பகல் 12 மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும் செய்தியை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.

* ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்ற செய்தியையும், பெண்களுக்கு இடக்கண் துடித்தால் மல்லது என்ற செய்தியையும் இந்நூலில்ருந்து அறிய முடிகிறது.

#பதிற்றுப்பத்து

* சேர அரசர்கள் 10 பேர் பற்றஇ 10 புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடிய தொகையே பதிற்றுப்பத்து.

* முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 80 பாடல்களே கிடைத்துள்ளன. முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.

பதிற்றுப்பத்தின் மூலம் அறியப்படும் செய்திகள்

* கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள் ஆவர்.

* அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும் உண்டு.

* கிடுகு என்றால் கேடயம் என்று பொருள் சேர நாட்டின் துறைமுகம் தொண்டி.

#பரிபாடல்

* பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகைகலில் ஒன்று. எனவே பாவகையால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் ஆகும்.

* எட்டுத் தொகை நூல்களிலேயே அகத்திற்கும், புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.

* பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.

* தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.

* எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்.

* எட்டுத் தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு 1. பரிபாடல் 2. கலித்தொகை

* பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல். பரிபாடல் என்ற நூல் 70 பாடல்களைக் கொண்டதாக உள்ளது.

* பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.

* பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.

#பரிபாடல்மூலம்அறியப்படும்செய்திகள்

* அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும். தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.

* நெய்தல், குழலை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.

* உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்.

#கலித்தொகை

* இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை. மொத்தம் 150 பாடல்கள் கொண்டது.

* கலித்தொகை ஐந்திணை நூலாகும். இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.

* கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.

* ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்பது ஒரு வீர விளையாட்டு.

* பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை ஆகும்.

* நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று

குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.

#அகநானூறு

* இது ஒரு அக நூல் ஆகும். ஆசிரியப்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.

* அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திர சன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆவார்.

* அகநானூறு களிற்றியானை நிறை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

* அகநானூறு நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.

* குடவோலை முறைச் தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு.

* சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் குறிப்பிடும் அக நூல் அகநானூறு.

#புறநானூறு

* இதுவொரு புற நூல். அகவற்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.

* புறநானூற்றைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

* புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம் என வேறு பெயர்களைக் கொண்டு புறநானூறு வழஹ்கப்படுகிறது.

* அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றியும் பாடும் நூல் புறநானூறு ஆகும்.

* சேரன் போந்தை (பனை) மலரையும், சோழன் அத்தி மலரையும், பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது.

* சேரன் வில் கொடியையும், சோழன் புலிக்கொடியையும், பாண்டியன் மீன் கொடியையும் கொண்டிருந்தனர் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.

* சேரனின் தலைநகரம் வஞ்சி என்றும், சோவனின் தலைநகரம் உறையூர் அல்லது உறந்தை, தஞ்சாவூர் (தஞ்சை) என்றும், பாண்டியனின் தலைநகர் மதுரை என்றும், பல்லவரின் தலைநகர் காஞ்சி என்றும் இது குறிப்பிடுகிறது.

* பாரதப்போரில் சோறு படைத்தவர் உதியஞ்சேரல் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.

* பாரிக்கு உரிய மலை பரம்பு மலை, பேகனுக்கு உரியது பழனிமலை, ஓரிக்கு உரியது கொல்லிமலை, ஆய்க்கு உரியது பொதிகை மலை, அதியனுக்கு உரியது தகடூர், நன்னனுக்கு உரியது நவிரமலை போன்ற செய்திகளையும் புறநானூறு குறிப்பிடுகிறது.

* கபிலரை ஆதரித்தவன் பாரி, ஒளவையாரை ஆதரித்தவன் அதியமான், பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன், மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன், பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன் போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.

* அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார். கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் எயிற்றியனார். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர் கிழார் ஆகிய செய்திகளையும் புறநானூறு மூலம் அறியலாம்.

* யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற வரிகள் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.

தமிழர் என்பதையும் , தமிழ் மொழியையும் மறவாது இணையத்தில் இணைந்திருங்கள் வாழ்க செந்தமிழ் வாழ்க தமிழ் வளர்த்த செம்மல்கள்.

எண்ணற்ற சிறப்பு தமிழுக்கு உண்டு.

தொன்மையான மொழி.

மிக சிறந்த கலை இலக்கியங்கள் , ஆன்மிக இலக்கியங்கள் நிறைந்தது.

திருக்குறள் ஒன்று போதும் - அதில் இல்லாத கருத்துக்களே இல்லை. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை கருத்துக்கள் நிறைந்தது.

உலகப்பொதுமறை என பெருமை பெற்றது.

  1. தமிழ் என்பது த வல்லினத்தையும்,மி எனும் மெல்லினத்தையும்,ழ் எனும் இடையினத்தையும் பெற்றுவரும் சாெல் என்பதே தனிச்சிறப்பாகும்.

தமிழ் மொழி சிறப்பு பாகம் 2

தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
                                                                                      - ஞா.தேவநேயப் பாவாணர்

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்

‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
"என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் "

"எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்"
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
"இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்"
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.


தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"
பாரதிதாசன்,
"தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்"

என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன்" என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
                                                                      - பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

தமிழ் மொழியின் சிறப்புகள்...

 தமிழ் மொழியின் சிறப்புகள்... 


தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும் உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான். 

தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். 

தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும். 

உதாரணமாக கடவுள் (கட+ உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல. நீ ஆசைகளை , பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும். 

எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை. கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர். வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது. இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில் பாருங்கள். உங்களுக்கே புரியும். 

இது சிறிய அளவின் பிரிவுகள் . 

1/102400 – கீழ்முந்திரி 
1/2150400 – இம்மி 
1/23654400 – மும்மி 
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001 
1/1490227200 – குணம் 
1/7451136000 – பந்தம் 
1/44706816000 – பாகம் 
1/312947712000 – விந்தம் 
1/5320111104000 – நாகவிந்தம் 
1/74481555456000 – சிந்தை 
1/489631109120000 – கதிர்முனை 
1/9585244364800000 – குரல்வளைப்படி 
1/575114661888000000 – வெள்ளம் 
1/57511466188800000000 – நுண்மணல் 
1/2323824530227200000000 – தேர்த்துகள் 

இந்த இம்மியளவும் அசையாது என்று நம் பேச்சு வழக்கில் பேசும் சொல். 

தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு . (இணைப்பு கீழே உள்ளது) 

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு . 

உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும்உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும் முடியாது . 

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் . 

உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது . 

தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு (ப்+உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே சொல் தான். LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும். 

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்). தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள்எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை. உச்சரித்து பாருங்கள். அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள். 

டாக்டர் கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள், திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள். கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார். முக்கியமாக இந்த “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக “எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது. இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும். 3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள். சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா வளர்ந்தது. 

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ் 

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ் 

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ் 

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ் 

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ் 

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ் 

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு) 

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது 

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது) 

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது. 

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்) 

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்) 

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ் 

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ் 

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ் 

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ் 

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ் 

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது 

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்) 

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ் 

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ் 

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது 

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ் 

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ் 

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது 

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ் 

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ் 

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை) 

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ் 

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது 

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது 

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது 

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது 

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா) 

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ் 

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்) 

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ். 

தாய் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம் 
தாலாட்டுப் பாடிய எங்கள் தாய் மொழியே 
வாய்மொழி பேசியே வளர்த்தவள் தாய் 
வாழ்வெல்லாம் தமிழ் உணர்த்தியவள் தாய்! 

வள்ளுவர் இளங்கோ கம்பரென 
வாழ்ந்தவர் காவியம் படைத்த மொழி 
துள்ளிடும் இசை நயம் நிறைந்த மொழி 
தூய நல் இலக்கணம் அமைந்த மொழி! 

ஆண்டாள் ஒளவையார் பெண்புலவர் 
அன்புடன் பேணிய எம்மொழியே 
அணையா விளக்காய் அகிலமெல்லாம் 
அலங்கரிக்கும் தமிழே செம்மொழியே! 

நாவையே அசைத்துப் பேச வைக்கும் 
நம் தமிழ் மொழியே செந்தமிழே 
பாவையே எங்கள் தென்மொழியே 
பாடுவோம் வாழிய செம்மொழியே!..

Wednesday, 23 September 2020

அறிவியல் செய்தி 1

அறிவியல் செய்தி 1

# அமீபாவில் கணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்

# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்

# புவி நாட்டம் உடையது – வேர்

# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்

# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை

# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.

# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா

# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்

# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்

# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு

# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ

# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி

# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்

# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்

# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை

# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்

# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்

# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்

# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்

# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்

# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்

# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்

# ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.

# முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5

# -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0

# 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40

# எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்

# π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா

# வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி

# சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு

# ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்

# முக்கோணத்தின் வகைகள் – 6

# பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.

# நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.

# வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்

# அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2

# 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.

# 1000 கி.கி என்பது – 1 டன்

# தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.

# ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்

# 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்

# 4/7-ன் சமான பின்னம் – 16/28

# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.

# 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.

# மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000

# ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52

# நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.

# S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்

# கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600

# ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.

# வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு

# ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்

# கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்

# நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்

# மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு

# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி

# இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா

# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு

# இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு

# வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்

# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்

# எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15

# மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்

# சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை

# மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்

# கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.

# பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா

# பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்

# இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்

# இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்

# இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி

# இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு

# தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி

# இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்

# இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா

# மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை

#  இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது? – சிவப்பு அணு

#  இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது? – ஹிமோகுளோபின்

#  வாயுக்களை கடத்த உதவுவது எது? – ஹிமோகுளோபின்

#  உட்கரு உள்ள ரத்த அணு எது? – வெள்ளை அணு

#  ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? – 5,000 முதல் 10,000 வரை

#  நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது? – வெள்ளை அணு

#  ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? – தட்டை அணுக்கள்

#  ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு? – 1,50,000 முதல் 3,00,000 வரை

#  உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது? – ரத்தம்

#  ரத்தம் ஒரு__________ கரைசல் – தாங்கல் கரைசல்

#  உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது? – ரத்தம்

#  ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்? – வில்லியம் ஹார்வி

#  வெள்ளை அணுக்களின் வாழ் நாள் – 4 வாரங்கள்

#  1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? – பன்னாட்டு அலகு முறை (SI – System International)

#  SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? – ஏழு

#  SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? – இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)

#  நீளத்தின் அலகு என்ன? – மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்)

#  நிறையின் அலகு என்ன? – கி.கிராம்

#  காலம் / நேரத்த்தின் அலகு என்ன? – வினாடி

#  மின்னோட்டதின் அலகு என்ன? – ஆம்பியர்

#  வெப்பநிலையின் அலகு என்ன? – கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)

#  விசையின் அலகு என்ன? – நியுட்டன்

#  வேலையின் அலகு என்ன?- ஜுல்

#  பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது? – மோல்

#  ஒளிச்செறிவின் அலகு என்ன? – கேண்டிலா

#  தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்)

#  திண்மக் கோணத்தின் அலகு என்ன? – ஸ்டிரேடியன்

#  துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)

#  வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ

#  வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் – சுழிப்பிழை எனப்படும்

#  வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – நேர் பிழை

#  வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – எதிர் பிழை

#  பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி

#  மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி

#  ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் – சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்

#  ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு

#  இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? – 10 மி. கிராம்

#  இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் – நிலைப்புள்ளி எனப்படும்

#  திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ

#  ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் – நிறை எனப்படும்

#  ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? – கலிலியோ

#  மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது? – செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை

#  மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?- தானியக்களஞ்சியம்

#  செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? – தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன்

#  உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல்

#  செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் – செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்

#  செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ஹீக்

#  செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு

#  உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரெளன்

#  குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? – உட்கரு.


Tuesday, 15 September 2020

திராவிடம் என்பது என்ன ???? திராவிடம் என்ற சொல்லின் பொருள் என்ன ??? திராவிடம் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதா ??? என்ற அனைத்து வினாவிற்கு ஒரே பதில்.



 திரு என்றால் இறை.

இந்நிலம் திருவிடம்!

திராவிடம் அல்ல!!

ஒரு சொற்பொழிவில் வள்ளலார் சன்மார்க்க

பெரியவர் ஒருவர் விளக்கினார்.

எண்ணற்ற ஞானிகளும் சித்தர்களும் நிரம்பியது

தென்னாடு எனும் தமிழ் நிலப்பகுதி.

திரு என்றால் இறை.

திரு நிறைந்த இடமாக விளங்கியதால் இப்பகுதி

திருவிடம் என்று அழைக்கப்பெற்றது. பின் அது

திராவிடமாக மருவியது. ஆனால் இன்று பலர்

திராவிடம் என்றால் இறை மறுப்பு கொள்கை

என்று தங்களை அடையாளப்படுத்தி

வருகின்றனர். மொழியறிவு எவ்வளவு அவசியம்

என்று கற்றவர்கள் உணர்தல் வேண்டும்.


Thursday, 10 September 2020

விரதம் என்றால் என்ன ??? அதில் உள்ள உண்மை என்ன

 விரதம்



உறுப்புக்களின் செயலை

தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி

கிடைக்குமா...?

எப்படி ?

* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய்

காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம்

செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை

நானும் காணமாட்டேன் என தனது கண்களை

கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த

வைராகியமான முடிவு அவளின் சக்தியை

நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும்

சக்தியாக அமைந்துவிட்டது.

* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம்

சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு

வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக

மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின்

அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை

குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர

சொல்லுகிறார்.

* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ

கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த

சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என

கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை

கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர்

புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன்

தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என

கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை

இடுப்பில் தொடை வரை அணிந்து

காந்தாரியின் முன் செல்லுகிறான்

துரியோதனன். கண்களை திறந்து தனது

சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன்

இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை

கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய

விளையாட்டை புரிந்துகொண்டாள்.

* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும்,

துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும்

பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்

இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில்

தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான்.

காரணம் காந்தாரி வழங்கிய சக்தி

தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்

வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின்

கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய

முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு

உணர்த்தும்.

* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம்

உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும்

வீணாக்கும் சக்தியின் அளவையும்

புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில்

உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம்

பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு

உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே

செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை

செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என

இரு செயல்களை தவிர்ப்பதை அனேக

விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

* ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும்

தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள்

சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்

காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால்

நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு

ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது

ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக

காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான்

செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம்

தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன்

செய்யமுடியும். மேலும் அடுத்த

சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம்

மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள்

இருந்தாலும், அனைத்து முறையிலும் சில

சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது.

அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது

விரதம் இருத்தல் என்பதாகும்.

* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல்

இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது

அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம்

இருத்தல் என விளக்கலாம்.

* பஞ்சபூதங்களின் வடிவமான நமது

ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை

செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில்

அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா

என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு

நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில்

மேம்படலாம்.

* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும்

பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது

பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என

காண்போம்.

கண் - நெருப்பு

வாய் - நீர்

காது - ஆகாயம்

மூக்கு - மண்

தொடு உணர்வு - காற்று

* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு

நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும்

பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல்

சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்

வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு

உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச்

செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே

சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம்

அடையும்.

* காது மற்றும் மூக்கு பகுதிகளின்

செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும்

இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்

தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும்

வாழமுடியாது. அதை போலவே இந்த இரு

அவயங்களின் செயல்களை நாம்மால்

செயற்கையாக நிறுத்த முடியாது.

* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக

நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா

எப்படி?

* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய

திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன்

(குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு

நன்மையை ஏற்படுத்தும். அன்றைய

கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை

மேலும் வலுசேர்க்கும்.

* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை

உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம்

உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ

அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு

குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன்

உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை

இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா

காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது

சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்

பயன்படுத்தினார். தற்சமயம் அது

அரசியலாகிவிட்டது.

* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய

ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்

மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு

நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை

கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை

மூலம் அறியலாம.

** நமது உடலின் சக்தியை அதிகமாக

செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை

காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு

செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள்.

உண்ணாமல் இருந்தால் மயங்கி

விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம்

பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன்

உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல்

தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள்

உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை

கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.

உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும்

அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு.

அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும்

தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம்

ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும்

முக்கியமான பயன் மனது தனது செயலை

மிகவும் குறைவாக செய்து தன்னில்

அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில்

ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.

பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு

வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது

மற்றொரு வகை. நமது உடலின் தன்மை

வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க

வேண்டும்.

* சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம்

உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும்

விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று

முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக

குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும்

சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு

அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக

உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை

பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத

தினங்கள்தான்.

** யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க

கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்

• வியாதியினால் மருந்து உண்பவர்கள்

• கர்ப்பிணிகள்

• பிரம்மச்சாரிகள்

• சன்யாசிகள்

* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு

இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும்

சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும்

பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும்

சாஸ்திரத்தில் உண்டு.

* மெளனவிரதம் இருப்பது வாய் எனும்

உறுப்பின் மற்றொரு விரதமாகும்.

மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது

தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும்

இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும்

தடையில்லை. உலகின் சிறந்த மொழி

மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த

வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில்

இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக

அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால்

உங்கள் உள்ளுணர்வு மிகவும்

கூர்மையானதாக மாறி உங்களை

விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர்

காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை

ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்

விரதத்திற்கு இது எதிரான செயல்.

மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை

ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை

மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.

அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை

முழுமையாக உணரமுடியும்

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர்

உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி

மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள்

நமக்கு நன்மை செய்கின்றன.

விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க,

கண்ட கத்துக்கள் ஆடாதிருக்க,

ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ

ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை

ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே

அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற

மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற

வைராக்கியம்..

அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்

என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது

கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய

ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள்

ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி,

ஞானத்தை தேடி புறப்படுகிறது.வ

றுமையால்உணவு இல்லை, சூழ்நிலை

காரணமாக உணவில்லை என்ற நிலை வரும்

போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம்

கண்முன் பாலும், பழமும், இனிப்பும்,

சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும்

குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி

பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான

விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பா

டு பற்றி டாக்டர்களே நமக்கு

அறிவுறுத்துகிறார்கள்.

நமது வயிறு 15 நாட்களுக்கு

ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும்.

அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி,

வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை

வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு

சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை

சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது.

ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம்

முன்னோர்கள் வகுத்தனர்!


Monday, 7 September 2020

உலகில் முதன் முதலாக ஒரு புதிய நீதி !!!! நீதி அரசானக நீதிபதி.




 இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான

வழக்கொன்றை சந்தித்தது.........

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு

திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.

எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாய் (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்

இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்

ருபாய் (5 டாலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.

காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."

என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோா்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.

முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்......